Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.வி.விக்னேஸ்வரனால் என்ன செய்ய முடியும்? சம்பந்தன் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்?”

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில் மேலும் தெரிவித்ததாவது,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் யாரையும் நாம் விலக்கவில்லை. சிலர் விலகினார்கள். அதற்கான காரணத்தை அவர்கள் இதுவரை கூறவில்லை.

விக்னேஸ்வரனை நானே அரசியலுக்குக் கொண்டு வந்தேன். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், தற்போது அவர் என்ன செய்கின்றார்?

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து அவரால் என்ன செய்ய முடியும்? கூட்டமைப்பை விமர்சிப்பவர்களினால் தமிழ் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை.

அவர்கள் ஏன் கூட்டமைப்பில் இருந்து விலகினார்கள் என்று அவர்களுடன்தான் கேட்க வேண்டும். நாம் யாரையும் விலக்கவில்லை. அவர்களை விலகவும் சொல்லவில்லை. விலகியமைக்கான காரணம் ஒருவரும் கூறவில்லை” - என்றார்.

https://www.tamilwin.com/politics/01/249382?ref=home-top-trending

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பெருமாள் said:

விக்னேஸ்வரனை நானே அரசியலுக்குக் கொண்டு வந்தேன். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

ஏன் கொண்டுவந்தீர்கள்? உங்கள்   சரிவை தடுத்து நிறுத்துவகற்காக கொண்டுவந்தீர்கள். காரியம் முடிய ஒதுக்கினீர்கள். உண்மையை ஒத்துக்கொள்ளுங்கோ அப்பு.

 

54 minutes ago, பெருமாள் said:

நாம் யாரையும் விலக்கவில்லை. அவர்களை விலகவும் சொல்லவில்லை. விலகியமைக்கான காரணம் ஒருவரும் கூறவில்லை” - என்றார்.

உள்வீட்டில் என்ன நடந்தது என்று தெரியாத தலைவர், காரணம் அறிந்து பிரச்சனையை தீர்க்க தெரியாத தலைவர். சர்வதேசத்திடம் பேரம் பேசி இனப்பிரச்சனை தீர்க்கப்போறாராமில.

 

59 minutes ago, பெருமாள் said:

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்?”

தான் என்ன செய்யப்போகிறேன் என்று அவர் மக்களுக்கு விளக்குவார். விளங்கியவர்கள் தங்கள் முடிவை தெரிவிப்பார்கள். நீங்கள் ஏன் இப்போ பதட்டப்பட்டு தேர்தலும் அதுவுமாய் போய்ப் படுக்கப்போறியள்.  

10 hours ago, பெருமாள் said:

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்?”

தமிழர்ற்ற நீதிக்கான வேட்கையை நேர்மையுடன் முன்னெடுப்பதில் கூத்தமைப்பின் அத்தனை கையாலாகாத ஒட்டுமொத்த கோஷ்டியைவிட விக்கினேஸ்வரன் தனியொருவரே ஒரு மில்லியன் தரம் சிறப்பானவர்.

  • கருத்துக்கள உறவுகள்

  கூட்டமைப்பை விமர்சித்தவர்கள் தான் கட்சியை விட்டு விலக்கப்பட்டார்கள். இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை மக்கள் அறிவர்.
தேர்தல் நேரம் கூட்டமைப்பினரின் அறிக்கைகள் மயிர்க்கூச்செறிய வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

  கூட்டமைப்பை விமர்சித்தவர்கள் தான் கட்சியை விட்டு விலக்கப்பட்டார்கள். இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை மக்கள் அறிவர்.
தேர்தல் நேரம் கூட்டமைப்பினரின் அறிக்கைகள் மயிர்க்கூச்செறிய வைக்கிறது.

கடைசி காலத்தில் கூட இவர்களுக்கு ஞானம் பிறக்கவில்லையே😟

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Gowin said:

விக்கினேஸ்வரன் தனியொருவரே ஒரு மில்லியன் தரம் சிறப்பானவர்.

இரு தரம் இல்லை மூன்று தரம் இல்லை ஒரு மில்லியன் தரம்😂ஆகவே அது கற்பனை விக்கினேஸ்வரன் செயலற்றவர் என்பதை காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் யாரையும் நாம் விலக்கவில்லை. சிலர் விலகினார்கள். அதற்கான காரணத்தை அவர்கள் இதுவரை கூறவில்லை.

 

https://www.tamilwin.com/politics/01/249382?ref=home-top-trending

அனந்தி அவர்களை யார் விலத்தியது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, பெருமாள் said:

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்?”

 ஐயா சம்பந்தன் அவர்களே! தாங்கள் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு  செய்தவற்றை பட்டியலிட்டு கூற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

அவர்கள் ஏன் கூட்டமைப்பில் இருந்து விலகினார்கள் என்று அவர்களுடன்தான் கேட்க வேண்டும். நாம் யாரையும் விலக்கவில்லை. அவர்களை விலகவும் சொல்லவில்லை. விலகியமைக்கான காரணம் ஒருவரும் கூறவில்லை” - என்றார்.

சுமந்திரனுக்கு நாக்கில் சனி என்பதால் ஐயா சம்பந்தன் எழும்பி வந்திட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

 ஐயா சம்பந்தன் அவர்களே! தாங்கள் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு  செய்தவற்றை பட்டியலிட்டு கூற முடியுமா?

பட்டியலிட ஏதாவது இருந்தால் இட்டிருக்க மாட்டாரா? இல்லாதபடியால் விக்கினேஸ்வரனை வம்புக்கிழுக்கிறார். கைகொடுத்து தூக்கிவிட்டவரை மறந்து, பயம் வந்திட்டுது. காரணம் வெல்ல வைத்தவர் இவராயிர்றே. பயம் இருக்கத்தானே செய்யும். ஒருவன் நீந்தி சாதனைப்படைக்கும்போது, நீந்தத் தெரியாதவன் கரையில் நின்றுகொண்டு: நான்தான் அவனுக்கு கடலை காட்டினேன், கடலில் இறக்கிவிட்டேன் என்று கூப்பாடு போட்டானாம். அந்த நிலையில் இருக்கிறார் சம்பந்தன். விக்கியரை விரட்டியவரால் சுமந்திரனை அசைக்க முடியவில்லை. அப்படி முயற்சித்தார் என்றால் இவர் இல்லாமல் ஆக்கப்படுவார். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

 ஐயா சம்பந்தன் அவர்களே! தாங்கள் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு  செய்தவற்றை பட்டியலிட்டு கூற முடியுமா?

ஐயா வைச்சுக் கொண்டா வஞ்சகம் செய்கிறார்?

On 25/6/2020 at 05:02, பெருமாள் said:

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்?”

 

விக்கினேஸ்வரனிடம் கேள்வி கேட்க முண்டு கொடுப்பு அரசியலே கதியா இருக்கும் சொதப்பல் சம்பந்தனிடம் எந்தவொரு அடிப்படைத் தகுதியும் இல்லை!

 

15 hours ago, விளங்க நினைப்பவன் said:

இரு தரம் இல்லை மூன்று தரம் இல்லை ஒரு மில்லியன் தரம்😂ஆகவே அது கற்பனை விக்கினேஸ்வரன் செயலற்றவர் என்பதை காட்டுகிறது.

அவரவர் அவரவர் அறிவுக்கேற்ப புரிதல் இருக்கும் என்கிறதுக்கு நல்ல எடுத்துக்காட்டு!

On 25/6/2020 at 05:02, பெருமாள் said:

சி.வி.விக்னேஸ்வரனால் என்ன செய்ய முடியும்? சம்பந்தன் கேள்வி

தொடரும் திட்டமிட்ட இனவழிப்புகளை முடிந்தளவு ஆவணப்படுத்தி சர்வதேசத்திடம் கொடுத்த விக்கினேஸ்வரனை பாத்து தொடரும் திட்டமிட்ட இனவழிப்புகளுக்கு ஓடியோடி துணை நின்ற சம்பந்தன் கேட்கும் கேள்வி. 

சம்பந்தன் வாழ்நாளில உப்பு போட்டு சாப்பிடவில்லை போல இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2020 at 14:17, உடையார் said:

கடைசி காலத்தில் கூட இவர்களுக்கு ஞானம் பிறக்கவில்லையே

கோமணம் கட்டவே அரைஞான் இல்லாமல் ஓடித்திரிபவரிடம் ஞானம் எப்படிப் பிறக்கும்....🤔 

  • கருத்துக்கள உறவுகள்

மல்லாகத்தில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில் தனது திட்டத்தை விளக்கியுள்ளார். அவருக்கே வாக்களியுங்கள். சுமந்திரனும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். இவர்கள் இருவரும் மும்மொழி பாண்டித்தியமும் சட்ட அறிவும் உள்ளவர்கள். சாத்தியமான இரண்டு வெவ்வேறான பாதைகளில் முயற்சிக்கிறார்கள். ஒரே பாதையில் முயற்சிப்பதிலும் பார்க்க  பல்வேறு  பாதைகளில்  முயற்சிக்கும் போது  வெற்றிக்கான சாத்தியம் அதிகம் என்பதை நிகழ்தகவு பற்றிய அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். இவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதை தவிர்ப்பது இந்த வெற்றிக்கான சாத்தியப்பாட்டுக்கு முக்கியமனது. முன்னர் போல ஒரு பாதை மட்டுமே எங்கள் வழி என்று அடம்பிடித்து, மாற்றுப் பாதைகளிகள் தீர்வு தேடுபவர்களை அழித்தொழிக்க முயற்சித்தால் தலைவர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு வரும். வெற்றிக்கான சாத்தியம் மீண்டும் பூச்சியத்தை அணுகும். ஆகவே இருவரும் மாற்றுப்பாதைகளை மதித்து மற்றவர்களையும் முயற்சிக்க விடவேண்டும். இந்த கனடா காசை சட்டவிரோதமாக இலங்கை கொண்டுவர விக்னேஸ்வரன் மறுத்ததில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு சுமந்திரன் அந்த கோபத்தை இனியாவது மக்களுக்காக மறந்துவிட வேண்டும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.