Jump to content

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.WHDQ-512910944.jpg.9b18759bfc7a96b9d3ff42cfd2efff2f.jpg

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!

சர்க்கரை வியாதியில்லை
சருமத்தில் தொந்தல் இல்லை
பக்கத்தில் வாதமில்லை
பாழ்பட்ட கொழுப்புமில்லை.

கண்கள் விழிக்கூர்மை
காதுரெண்டும் பழுதில்லை
பற்கள் எல்லாம் பத்திரமாய்
பயமற்ற நெஞ்சுரமாய்

கைத்தடி இல்லாமல்
கால் எழுந்து நடைபயிலும்
அப்புவென்று சொன்னால்
ஆச்சரியப் படுவீர்கள்

கிட்டப் போய் ஒருநாள்
கேட்டேன் அவர் வயதை
தொண்நூறு தாண்டி
தொடப் போறேன் நூறென்றார்.

அந்தக் காலத்து..
அதிசிறந்த உணவென்றார்
வரகரிசி சாமையுடன்
வாய்க்கினிய தினைச்சோறு
குரக்கன் மா றொட்டி-மீன்
கூழ் எங்கள் அமிர்தம்

பகல் முழுதும் உடல் உளைப்பு
பனாட்டொடியல் பழம்கஞ்சி
தூதுவளைச் சம்பல்
தும்பங்காய்ப் பிரட்டல்
கொவ்வை,குறிஞ்சா,முசிட்டை
கொடிக் கொழுந்து பிரண்டை
புற்றடிக் காளான்
பொன்னான வீணாலை-என்
ஆச்சி விளைவிக்கும்
அன்பான உணவென்றார்.

இந்தக்காலத்தில்..
எம் உணவை நாம் மறந்து
வெளிநாட்டு உணவுதேடி
விரும்பி அலைகின்றோம்

பீசா,வேர்கர்,கெபாக்,ட்றாகோ
சூசீ,மைக்,கேஎவ்சிக் கோழியென
விருந்தோடு விஷமும் 
விலைகொடுத்து உண்பதற்க்கு.

-பசுவூர்க்கோபி-

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு ஆச்சி என்று சொன்னாலே ஆச்சரியம் தான் எப்போதும்.......சிறப்பான கவிதை பசுவூர்க்கோபி.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக நினைவுகளை மீட்டும் அழகான கவிதை ./ எல்லாம் மாறிவிட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் என்றுதான் நாங்கள் அவரை கூப்பிடுவோம். சிறுவர்களிடமும் சிரித்து விளையாடுவார் பழைய கதைகள் சொல்லி, அந்த தள்ளாத வயதிலும் கம்பீரமாக தோலில் கலப்பை வைத்துக்கொண்டு வயலுக்கு போய் உழுதுண்டு வாழ்ந்தார். ஒரு நாள் கூட நோய் வாய்ப்பட்டு படுத்ததை பார்க்கவில்லை. உடல் உழைப்பும் இயற்கையுடன் ஒன்றிய சாப்பாடே காரணம். அந்த அப்பு ஆச்சியின் வாழ்கைக்கு. 

அவருக்கு என தினம் ஒரு பனை கள்ளு எப்பவும் இறக்கி வைத்துவிட்டுதான், அடுத்த பனைக்கு போவார்கள். அவர் வீட்டுக்கு போன புழுக்கெடியல், பினாட்டு, பனங்கட்டி,...எப்பவுமிருக்கும் அவரிடம், ... அது ஒரு காலம்.  வாழ்ந்தால் அவரைபோல் சந்தோஷமாக இயற்கையுடன் வாழவேண்டும்

நன்றி பசுவூர்கோபி பகிர்வுக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

உடையார் என்றுதான் நாங்கள் அவரை கூப்பிடுவோம். சிறுவர்களிடமும் சிரித்து விளையாடுவார் பழைய கதைகள் சொல்லி, அந்த தள்ளாத வயதிலும் கம்பீரமாக தோலில் கலப்பை வைத்துக்கொண்டு வயலுக்கு போய் உழுதுண்டு வாழ்ந்தார். ஒரு நாள் கூட நோய் வாய்ப்பட்டு படுத்ததை பார்க்கவில்லை. உடல் உழைப்பும் இயற்கையுடன் ஒன்றிய சாப்பாடே காரணம். அந்த அப்பு ஆச்சியின் வாழ்கைக்கு. 

அவருக்கு என தினம் ஒரு பனை கள்ளு எப்பவும் இறக்கி வைத்துவிட்டுதான், அடுத்த பனைக்கு போவார்கள். அவர் வீட்டுக்கு போன புழுக்கெடியல், பினாட்டு, பனங்கட்டி,...எப்பவுமிருக்கும் அவரிடம், ... அது ஒரு காலம்.  வாழ்ந்தால் அவரைபோல் சந்தோஷமாக இயற்கையுடன் வாழவேண்டும்

நன்றி பசுவூர்கோபி பகிர்வுக்கு

 

இட்  இஸ்  நாட்  டூ லேட்  உடையார்......என்ன ஒரு 30 வருடத்துக்கு பிறகு என்னுடைய வீட்டுக்கு வாருங்கள், நானும் அப்படித்தான் வாழுறன்.முன்பே சொல்லிவிட்டு வந்தால் லாச்சப்பலில் புழுக்கொடியல், பினாட்டு, பனங்கட்டி எல்லாம் வாங்கி வைக்க வசதியாய் இருக்கும்.......!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

இட்  இஸ்  நாட்  டூ லேட்  உடையார்......என்ன ஒரு 30 வருடத்துக்கு பிறகு என்னுடைய வீட்டுக்கு வாருங்கள், நானும் அப்படித்தான் வாழுறன்.முன்பே சொல்லிவிட்டு வந்தால் லாச்சப்பலில் புழுக்கொடியல், பினாட்டு, பனங்கட்டி எல்லாம் வாங்கி வைக்க வசதியாய் இருக்கும்.......!   😎

வந்தப்போச்சு, இப்படியொரு அன்பு அழைப்பை மறுக்கு முடியுமா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 22:08, suvy said:

அப்பு ஆச்சி என்று சொன்னாலே ஆச்சரியம் தான் எப்போதும்.......சிறப்பான கவிதை பசுவூர்க்கோபி.....!  👍

நெஞ்சார்ந்த நன்றிகள் என்னை மென்மேலும் வளர்க்கும் உங்கள் பாராட்டுக்கள் 

On 2/7/2020 at 01:05, நிலாமதி said:

தாயக நினைவுகளை மீட்டும் அழகான கவிதை ./ எல்லாம் மாறிவிட்டது

நன்றிகள் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2020 at 02:21, உடையார் said:

உடையார் என்றுதான் நாங்கள் அவரை கூப்பிடுவோம். சிறுவர்களிடமும் சிரித்து விளையாடுவார் பழைய கதைகள் சொல்லி, அந்த தள்ளாத வயதிலும் கம்பீரமாக தோலில் கலப்பை வைத்துக்கொண்டு வயலுக்கு போய் உழுதுண்டு வாழ்ந்தார். ஒரு நாள் கூட நோய் வாய்ப்பட்டு படுத்ததை பார்க்கவில்லை. உடல் உழைப்பும் இயற்கையுடன் ஒன்றிய சாப்பாடே காரணம். அந்த அப்பு ஆச்சியின் வாழ்கைக்கு. 

அவருக்கு என தினம் ஒரு பனை கள்ளு எப்பவும் இறக்கி வைத்துவிட்டுதான், அடுத்த பனைக்கு போவார்கள். அவர் வீட்டுக்கு போன புழுக்கெடியல், பினாட்டு, பனங்கட்டி,...எப்பவுமிருக்கும் அவரிடம், ... அது ஒரு காலம்.  வாழ்ந்தால் அவரைபோல் சந்தோஷமாக இயற்கையுடன் வாழவேண்டும்

நன்றி பசுவூர்கோபி பகிர்வுக்கு

 

அருமை உங்களின் அந்தக்காலத்தின் நினைவுகள் எனது கவிதையுடன் சேர்ந்து இனிக்கிறது. உளமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு, ஆச்சிமார் நவநாகரீக வேகமான உலகத்தில் வாழாமல் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனாலும் எல்லாருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடவில்லை. திடகாத்திரமானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்தார்கள் என்பதும் உண்மை.

புலம்பெயர் நாடுகளில் இருந்தாலும் தரமான மரக்கறிகள், இறைச்சி வகைகள், சிறுதானியங்கள் உண்டு உடல்நலத்தைக் காக்கலாம். Processed food ஐ தவிர்த்தால் நல்லது.

 

Link to comment
Share on other sites

30 minutes ago, கிருபன் said:

அப்பு, ஆச்சிமார் நவநாகரீக வேகமான உலகத்தில் வாழாமல் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனாலும் எல்லாருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடவில்லை. திடகாத்திரமானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்தார்கள் என்பதும் உண்மை.

புலம்பெயர் நாடுகளில் இருந்தாலும் தரமான மரக்கறிகள், இறைச்சி வகைகள், சிறுதானியங்கள் உண்டு உடல்நலத்தைக் காக்கலாம். Processed food ஐ தவிர்த்தால் நல்லது.

 

நீங்கள் சொன்னது தான் ஜதார்ததம். ஆனால் கவிதைக்கு பொய் அழகு . எனவே கவிதை எழுதும் போது பல  பொய்கள் கலந்து எழுதுவது கவிஞரின் கவித்திறமை.  அதில் உள்ள இலக்கிய நயத்தை மட்டும் ரசிக்கவேண்டியது ரசிப்பவர் திறமை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அப்பு, ஆச்சிமார் நவநாகரீக வேகமான உலகத்தில் வாழாமல் இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனாலும் எல்லாருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடவில்லை. திடகாத்திரமானவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்தார்கள் என்பதும் உண்மை.

புலம்பெயர் நாடுகளில் இருந்தாலும் தரமான மரக்கறிகள், இறைச்சி வகைகள், சிறுதானியங்கள் உண்டு உடல்நலத்தைக் காக்கலாம். Processed food ஐ தவிர்த்தால் நல்லது.

 

நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, tulpen said:

நீங்கள் சொன்னது தான் ஜதார்ததம். ஆனால் கவிதைக்கு பொய் அழகு . எனவே கவிதை எழுதும் போது பல  பொய்கள் கலந்து எழுதுவது கவிஞரின் கவித்திறமை.  அதில் உள்ள இலக்கிய நயத்தை மட்டும் ரசிக்கவேண்டியது ரசிப்பவர் திறமை.  

கவிதைக்கு பொய் அழகு..   

நன்றிகள்tulpen 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் தும்பைக்காய் பற்றி அறிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாயினி said:

இன்று தான் தும்பைக்காய் பற்றி அறிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் நன்றிகள் யாயினி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 13:02, பசுவூர்க்கோபி said:

இந்தக்காலத்தில்..
எம் உணவை நாம் மறந்து
வெளிநாட்டு உணவுதேடி
விரும்பி அலைகின்றோம்

பீசா,வேர்கர்,கெபாக்,ட்றாகோ
சூசீ,மைக்,கேஎவ்சிக் கோழியென
விருந்தோடு விஷமும் 
விலைகொடுத்து உண்பதற்க்கு.

-பசுவூர்க்கோபி-

 

மிகவும் அருமையான கவிதை. நல்ல வசன நடை. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று . மேலும் எழுதுங்கள், எம்முடன் பகிருங்கள். வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாக்கில் கடிக்காமல்  பிரண்டை துவையல் செய்யும்முறை யாருக்கும் தெரியுமா ?

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

மிகவும் அருமையான கவிதை. நல்ல வசன நடை. எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று . மேலும் எழுதுங்கள், எம்முடன் பகிருங்கள். வாழ்த்துக்கள் 

உங்கள் ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் nilmini கட்டாயம் தொடருவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராம வாழக்கை எப்பவும் அழகு தான் உடல் உள ரீதியாக.சந்தரப்ப வசத்தாலோ அல்லது விரும்பியோ நகர வாழ்க்கைக்கு மாறியவர்கள் கிராமத்தை கொஞ்சம் குறைத்து தாங்கள் திருப்த்திப்பட்டுக் கொள்வார்கள்.இரு கோட்டுத் தத்துவம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சுவைப்பிரியன் அண்னா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2020 at 17:22, பெருமாள் said:

நாக்கில் கடிக்காமல்  பிரண்டை துவையல் செய்யும்முறை யாருக்கும் தெரியுமா ?

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

எண்ணெயில் பொரித்து நாரை உரித்துவிட்டுச் செய்தால் கடிக்காது. அல்லது அடுப்பு நெருப்பில் வாட்டிவிட்டுச் செய்தாலும் கடிக்காதாம். நான் அப்படிச் செய்து பார்த்ததில்லை. வதக்கிவிட்டுச் செய்தேன் கடிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எண்ணெயில் பொரித்து நாரை உரித்துவிட்டுச் செய்தால் கடிக்காது. அல்லது அடுப்பு நெருப்பில் வாட்டிவிட்டுச் செய்தாலும் கடிக்காதாம். நான் அப்படிச் செய்து பார்த்ததில்லை. வதக்கிவிட்டுச் செய்தேன் கடிக்கவில்லை.

இங்கு ஒரு வயதானவர் கேட்டு தெரிந்தவர்கள் மூலம் எடுத்து குடுக்க எனக்கும் ஒரு கொஞ்சம் தந்து அனுப்ப மனுசிக்கு பிலிம் காட்டப்போய் குசினிக்குள் நானே குத்து மதிப்பில் சமையல் போட  கடைசியில் வாயெல்லாம் கடியுடன் cetirizinee hydro எடுத்துத்தான் நிண்டது வாழ்க்கையில் இனி இந்த விளையாட்டு வேண்டாம். .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இங்கு ஒரு வயதானவர் கேட்டு தெரிந்தவர்கள் மூலம் எடுத்து குடுக்க எனக்கும் ஒரு கொஞ்சம் தந்து அனுப்ப மனுசிக்கு பிலிம் காட்டப்போய் குசினிக்குள் நானே குத்து மதிப்பில் சமையல் போட  கடைசியில் வாயெல்லாம் கடியுடன் cetirizinee hydro எடுத்துத்தான் நிண்டது வாழ்க்கையில் இனி இந்த விளையாட்டு வேண்டாம். .

சில தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் 😂

உங்கள் கவிதையும் படங்களும் நன்றாய்த்தான் இருக்கு  பசுவூர் கோபி. வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் கிடைக்காத எம் நாட்டுப் பொருட்களுக்கு  அலைகிறோம். அங்குள்ளவர்களோ பக்கத்தில் இருப்பதைக்கூடப் பயன்படுத்துவதில்லை.

Link to comment
Share on other sites

On 1/7/2020 at 19:02, பசுவூர்க்கோபி said:

large.WHDQ-512910944.jpg.9b18759bfc7a96b9d3ff42cfd2efff2f.jpg

அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..!

சர்க்கரை வியாதியில்லை
சருமத்தில் தொந்தல் இல்லை
பக்கத்தில் வாதமில்லை
பாழ்பட்ட கொழுப்புமில்லை.

கண்கள் விழிக்கூர்மை
காதுரெண்டும் பழுதில்லை
பற்கள் எல்லாம் பத்திரமாய்
பயமற்ற நெஞ்சுரமாய்

கைத்தடி இல்லாமல்
கால் எழுந்து நடைபயிலும்
அப்புவென்று சொன்னால்
ஆச்சரியப் படுவீர்கள்

கிட்டப் போய் ஒருநாள்
கேட்டேன் அவர் வயதை
தொண்நூறு தாண்டி
தொடப் போறேன் நூறென்றார்.

அந்தக் காலத்து..
அதிசிறந்த உணவென்றார்
வரகரிசி சாமையுடன்
வாய்க்கினிய தினைச்சோறு
குரக்கன் மா றொட்டி-மீன்
கூழ் எங்கள் அமிர்தம்

பகல் முழுதும் உடல் உளைப்பு
பனாட்டொடியல் பழம்கஞ்சி
தூதுவளைச் சம்பல்
தும்பங்காய்ப் பிரட்டல்
கொவ்வை,குறிஞ்சா,முசிட்டை
கொடிக் கொழுந்து பிரண்டை
புற்றடிக் காளான்
பொன்னான வீணாலை-என்
ஆச்சி விளைவிக்கும்
அன்பான உணவென்றார்.

இந்தக்காலத்தில்..
எம் உணவை நாம் மறந்து
வெளிநாட்டு உணவுதேடி
விரும்பி அலைகின்றோம்

பீசா,வேர்கர்,கெபாக்,ட்றாகோ
சூசீ,மைக்,கேஎவ்சிக் கோழியென
விருந்தோடு விஷமும் 
விலைகொடுத்து உண்பதற்க்கு.

-பசுவூர்க்கோபி-

large.0-02-0a-be3cb92008ec10486bccbad4b0e192da10c6377be6ecaebc5ce622756ee3bf41_1c6d9e9589a1a2.jpg.88fc204ba34ce79aa078ad8c42541ed4.jpg

எங்கள் பழைய காலத்து உணவுகளில் இருந்த இயற்கையான சத்துக்களும் அவற்றின் மருத்துவ குணாதிசயங்களும் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல ?  அருமையான கவிதையும் பொருளும் !
தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள் தோழி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சில தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் 😂

உங்கள் கவிதையும் படங்களும் நன்றாய்த்தான் இருக்கு  பசுவூர் கோபி. வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் கிடைக்காத எம் நாட்டுப் பொருட்களுக்கு  அலைகிறோம். அங்குள்ளவர்களோ பக்கத்தில் இருப்பதைக்கூடப் பயன்படுத்துவதில்லை.

உண்மையாகச் சொன்னீர்கள்.

பாராட்டுக்கு நன்றிகள் சுமேரியர்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சரத்குமாருக்கு… ஒரு கட்டத்தில் தமிழக முதல்வராக வர வேண்டும் என்ற ஆசையும் ஒரு ஓரத்தில் இருந்தது என்றால் பாருங்கோவன். 😂
    • டெல்லியில் aam ஆத்மி  கடும் பின்னடைவு  7 தொகுதிகளிலும் பா ஜ க  முன்னிலை.  தமிழ்நாடு மாநிலத்தில் 9 தொகுதிகளில்  காங்கிரஸ்  முன்னணியில் 
    • வாரணாசியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய பிரதமர் மோடி முன்னிலையில் 
    • முள்ளிவாய்க்கால் நிலம் - துரைராஜா ஜெயராஜா June 4, 2024   தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது, ஆறுவதற்கான சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதையும், அதனை அடுத்தடுத்த சந்ததியினரும் நினைவுகொள்ளவேண்டும் என்பதையும் பங்கேற்பாளர்கள் உணர்த்தியிருந்தார்கள். இன்னொருவிதத்தில் சொல்வதானால், முள்ளிவாய்க்கால் மண்ணும், அது தகிப்போடு வைத்திருக்கும் நினைவுகளும் அழுதரற்றுவதற்கானவை அல்ல, தமிழ் தேசிய எழுச்சிக்கானவை என்பதை வெளிப்படுத்தின.  இவ்வாறானதொரு கற்பித்தலை செய்திருக்கும் நினைவேந்தலைக் குழப்புவதற்கு இலங்கை அரசு பல வேலைகளை முன்னெடுத்தது. அதில் முதன்மையானது, நினைவேந்தல் விடயத்தில் வடக்கு, கிழக்கு எனத் தனித்தனியாகக் கையாண்டமை. கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், தமிழ் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களும் மிகுந்த விசுவாசத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் கிழக்கில் கட்டுப்படுத்திக்கொடுத்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியவர்களை, ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். நினைவேந்துவோரை களத்தில் இறங்கி அச்சுறுத்தினர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குசெய்த நினைவேந்தல் நிகழ்வைக் காலால் தட்டிவிட்டுக் குழப்பியடித்தனர். ஆனால் வடக்கில் இந்த அடக்குமுறையை மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் இராணுவமும், இராணுவப் புலனாய்வாளர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகினர். இறுதி நாள் நினைவேந்தலில் கூட வடக்கு, உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சீருடையணித்த பொலிஸாரையோ, இராணுவத்தினரையோ காணமுடியவில்லை. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கிழக்குப் பக்கமாகவோ,இலங்கைத் தீவுக்குள் வடக்குத் தவிர்த்து தமிழர்கள் வாழும் ஏனைய பிராந்தியங்களுக்குள்ளோ பரவவிடாது தடுத்துவிட்டனர். நினைவேந்தல் விடயத்தில் வடக்கை தனியாகவும், கிழக்கை தனியாகவும் கையாளத்தொடங்கியிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் ஒரு தேசமாகத் தமிழர்கள் நினைவேந்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கக்கூடும்.  இம்முறை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் அம்னெஸ்டி இன்டர்நெனல் அமைப்பின் செயலாளர் நாயகம் கலந்துகொண்டார். நினைவேந்தல் நிகழ்வுக்கு முதல்நாள் மாலையே முல்லைத்தீவிற்கு வருகைதந்திருந்த அம்மணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். “சிறீலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போது என்ன உணர்கிறீர்கள்” என்றவகையறாக் கேள்விகளை சந்தித்த அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மறுநாள் அதாவது நினைவேந்தல் அன்று, வட்டுவாகல் பாலத்தில் இறங்கி நடந்தார். நினைவேந்தல் மையத்திற்கு வருகைதந்து, இனப்படுகொலையானவர்ககளுக்கு மலர்வணக்கம் செலுத்தினார். அவரைக் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், தம் சகோதரியைப் போல அழைத்துவந்தனர். ஊடகங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அம்மணியைக் கட்டியணைத்து அழுவார்கள், தம் வலியைச் சொல்வார்கள், அந்நேரம் ஏதாவது ஒளிப்படங்கள் எடுக்கலாம் எனக் காத்திருந்தன. ஆனால் அவ்வாறான எவ்வித “அசம்பாவிதங்களும்” ஏற்படாதபடிக்கு, 17ஆம் திகதி காலையே முல்லைத்தீவுக்கு வருகைதந்துவிட்ட தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் “கவனித்துக்கொண்டார்கள்”. அம்மணியின் வருகையை அமைதியாக வழிநடத்தினர்.  நினைவேந்தல் மையத்திற்கு வெளியே வந்த அம்மணி, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். எந்தப் பதிலிலும் இனப்படுகொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை. தப்பித்தவறிகூட அந்த வார்த்தை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார். அவ்விடத்தில் அவர் அளித்த பதில்கள் மிக நுணுக்கமானவை.  இம்முறை நினைவேந்தலில், ஏ.பி, ஏ.எவ்.பி, கெட்டிஇமேஜஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் கலந்துகொண்டிருந்தன. முள்ளிவாய்க்காலில் சிதறிக் கிடக்கும் போரின் எச்சங்கள் தொடக்கம், இடிந்து கிடக்கு கட்டடஙகள் வரையில் அனைத்தையும் ஒளிப்படம் எடுத்தன. நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் வடித்த ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டன. எவ்விடத்திலும், எந்தக் கெமராவும், தமிழினப்படுகொலை என்ற பாதகையைக்கூட ஒளிப்படமெடுக்கவில்லை. தமது ஊடகச் செய்தி அறிக்கைகளில் அந்த வார்த்தையையோ, அந்த வார்த்தையை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களையோ வெளியிடவில்லை. “தமது ஊடகம் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை” என வெளிப்படையாகவே சொன்னார் ஒரு வெள்ளைக்கார ஊடகர். இதன்காரணத்தினாலேயே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலில் வாசிக்கப்பட்ட அறிக்கையை எந்த சர்வதேச ஊடகங்களும் வெளியிடவுமில்லை.  இம்முறை நினைவேந்தல் ஏற்பாடுகளில் மதம் சார்ந்த சில சலசலப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டன. அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியாவிட்டால், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்பினை அது ஏற்படுத்தும். நினைவேந்தலுக்கு மூன்று நாட்கள் மீதமாக இருக்கும்போது, நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தாது, அதனை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவதற்கு நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழு தயாராகவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மதவாத சக்திகள் நினைவேந்தல் நிகழ்வொழுங்குகளுக்குள் தலையிடுவதைத் தடுக்க முடியும்.  இம்முறை நினைவேந்தலில் அவதானிக்கப்பட்ட மிகமுக்கியமான விடயங்களில் ஒன்று, நினைவேந்தல் இடம்பெறும் காணி சம்பந்தமானது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் வளாகமானது, அரசுக்கு சொந்தமானது. அந்தக் காணியைக் கரைச்சி பிரதேச சபையின் கீழ் கொண்டுவந்து, நினைவேந்தல் மையமாகப் பிரகடனம் செய்வதற்கான பணிகள், வட மாகாண சபை இயங்கும் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளும், நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழுவும் அதிக கவனமெடுக்காமை காரணமாக, எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவி்ல்லை. தற்போது, பிரதேச சபைகள் செயலற்றிருக்கின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மையம் நிலஅளவைத் திணைக்களத்தின் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. எந்த அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வெளியிடவில்லை. எனவே குறித்த நினைவேந்தல் மையத்தினை அரசு தன் நிலம் என வர்த்தமானி அறிவிப்புச் செய்து, அபகரித்துக்கொள்ள அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் குறியீடாக இன்றும்எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக் கட்டடம் மாத்திரமே. பதுங்குகுழியின் எச்சங்கள், துப்பாக்கி ரவை பதிந்த சுவர்கள், போராளிகளின் ஆடைகள், பொதுமக்களின் பாவனைப்பொருட்கள் என அந்தச் சூழலில் இனப்படுகொலையை நினைவுபடுத்துகின்ற பல விடயங்கள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி மாவீரர் மண்டபமாகவும் அந்தச் சந்தைக் கட்டடத்தொகுதி செயற்பட்டிருக்கின்றது. எனவேதான் அதனையாவது இனப்படுகொலையின் நினைவாக அப்படியே பேணிப்பாதுகாப்பதும், ஆவணப்படுத்துவதும் அவசியமானதாகும். ஆனால் அந்தக் கட்டடத்தை இடித்துப் புதிய சந்தைத்தொகுதியொன்றை அவ்விடத்தில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.  முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், வலையன்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகள் இறுதிப்போர் காலத்தில் முக்கியமான இடங்களாக இருந்தன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும், இனப்படுகொலையான தமிழர்களின் புதைகுழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும் போர்க்காலத்தை நினைவுபடுத்துகின்ற பொருட்கள் சிதறிக்கிடந்தன. இறுதியா உணவு உண்ட உணவுப் பாத்திரம் தொடக்கம், பதுங்குகுழிக்கு பயன்படுத்திய உடுபுடவைகள் வரைக்கும் அந்நிலமெங்கும் சிதறிக்கிடந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் அகற்றப்பட்டிருக்கின்றன. தெற்கிலிருந்து வருகைதரும் இரும்பு வியாபாரிகளுக்கு அப்பொருட்களை உள்ளூர் மக்கள் வியாபாரம் செய்துவிட்டனர். காணிகளைத் துப்பரவு செய்கிறோம் என்கிற பெயரில், அங்கு கிடந்த துணிகள் உள்ளிட்ட பொருட்களை எரித்துவிட்டனர். தன் வரலாற்றைச் சரியாகப் பேணவும், ஆவணப்படுத்தவும் தெரியாத இனமாகத் தமிழர்கள் இருக்கின்றமையும், இது குறித்த விழிப்புணர்வு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கின்றமையுமே இதற்குப் பிரதான காரணமாகும். உலகம் முழுவதும் இனப்படுகொலைக்குள்ளான இனங்கள் இதுபோன்ற விடயங்களை பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. மிகப்பெரிய இனப்படுகொலையின் பின்னர் இஸ்ரேலியர்கள் தமக்கான நாட்டைக் கட்டமைத்துக்கொண்டாலும், தம் மீது ஜேர்மனியர்கள் நடத்திய இனப்படுகொலையை நினைவுபடுத்தும் ஆவணங்களை, ஆவணக்காப்பகங்களில் இன்றும் வைத்திருக்கின்றனர். உலகப் போர்க்காலத்தில் அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் அந்தப் பாதிப்பின் எச்சங்களை இன்றும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர். உலகம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட யுகத்தில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலைக்குள்ளான இனமொன்று, அதற்கான ஆவணங்களைத் தவறவிட்டிருப்பது எவ்வளவு துயரமானது? அடுத்து வட்டுவாகல் பாலம். இறுதிப் போரின் நாட்களை நினைவுகூறும் எவராலும் வட்டுவாகல் பாலத்தைத் தவிர்க்க முடியாது. பாலத்தைக் கடந்த பலர் இன்று உயிரோடில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டு விட்டனர். பாலத்தில் இறுமருங்கிலும் இராணுவத்தால் சுடப்பட்ட நிலையில் இறந்து மிதந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இவ்வளவு பெறுமதிமிகு நினைவுகளைக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலம் மிக விரைவில் மீளப் புனருத்தானம் செய்யப்படப்போகின்றது. அந்த பாலத்தை நீக்குவிட்டுப் புதிய பாலமொன்றை அமைத்துத் தரும்படி உள்ளூர் மக்களே அரசைக் கோரியிருக்கின்றனர்.  இப்படியாக தமிழ் இனப்படுகொலையின் பௌதீக சாட்சியங்களாக இருக்கின்ற பல விடயங்களும் விரைவாகவே அழிக்கப்பட்டு வருகின்றன. அனேகமாகத் தமிழினப் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் செய்யும் மேற்குறித்த எந்த நினைவேந்தல் எச்சங்களும் முள்ளிவாய்க்காலில் இருக்கப்போவதில்லை.  சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும், தமிழர்களும் முள்ளிவாய்க்கால் எனப்படும் தமிழினப் படுகொலையின் குறியீட்டு நிலத்தை எப்படி மாற்றிவருகின்றனர் என்பதற்கான சில விடயங்கள்தான் இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நிலம் அமைதியாகக் கிடந்து எதிர்கொள்ளும் சவால்கள், சதிகள் பலநூறு.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-நிலம்/
    • வணக்கம் பாஞ் அண்ணா  உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.