Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவால் புலிகள் தோற்கவில்லை! – பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

தமிழரசுக்கட்சி,தமிழர்விடுதலைக்கூட்டணி கூத்தமைப்பு ஆக்களுக்கு பரம்பரை பரம்பரையாய் முதுகு சொறிஞ்சு விட்ட கூட்டங்கள் லேசிலை விட்டுட்டு வரமாட்டினம்.அவையள் என்ன சொன்னாலும் இவையளுக்கு வேதவாக்காய்த்தான் தெரியும். 😎

அதே

அத்துடன்

அப்புகாத்துமார்

அறிவுக்கூட்டம்  என்ற பட்டத்துடன்  சொன்னால் இவர்களுக்கு?????

 

  • Replies 138
  • Views 13.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக இருக்கின்றதே. சமஸ்டிதான் கூட்டமைப்பு நாடும் தீர்வு என்று. சுமந்திரன் ஐயா கூட 15 ஆசனத்துடன் பலமாகப் பாராளுமன்றம் போனால் எதுவும் சாத்தியப்படலாம் என்று!

கூத்தமைப்பின் Capacity  மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் கேட்கிறேன்

கூத்தமைப்பு எத்தனை ஆசனம் எடுத்தாலும் ஒண்டும் புடுங்கமுடியாது
அம்பிகா இல்ல எந்த கொம்பிகா வந்தாலும் பருப்பு தான் என்னோடு பந்தயம் கட்ட தயாரா ...?  

 

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சாமானியன் said:

போகும் போகும் , தொல்பொருள் கந்தாயம் வந்து எல்லைகளை உங்கட நடுவீட்டுக்குள்ளால போடும் வரை , பின்னர் அம்மான் அமைதிப் படுத்தப் படுவார் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் ஒரு இரட்சகர் அம்மானின் வந்து சேருவார் இனப்பிரச்சனைக்கு  இலகுவான தீர்வு இதை விட வேறென்ன …..

அதெல்லாம் அங்கிருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ...நீங்கள் அவுசில் இருந்து என்ன தான் செய்ய முடியும் 🙂

14 hours ago, கற்பகதரு said:

காத்தன்குடியில் பேரிச்சை பழம் விளைகிறதாமே? சாப்பிட்டு பார்க்கவில்லையா? அழகான அரபுலகம் உருவாக வாழ்த்துகள். 😄

ஊடகங்களில் காட்டப்படுவது மாதிரி அங்கு அப்படி பெரிதாய் பேரீச்சை மரங்கள் இருப்பது மாதிரியோ அது காய்த்து குலுங்குகின்ற மாதிரித் தெரியவில்லை 😀

  • கருத்துக்கள உறவுகள்
On ‎26‎-‎07‎-‎2020 at 11:57, Kapithan said:

அக்கோய்,

கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் சகல பிரச்சனைக்கும் வடக்கன்கள்தான் காரணமா ? 😂😂

தனிப்பட்ட ரீதியிலான (குடும்ப) தோல்விகளும் வடக்கன்கள்தான் காரணம் என்பீர்கள் போல...😏

சுயனலத்திற்காக,  யாருடனும் சமரசம் செய்துகொள்வதற்கு ஆயத்தமான மன நிலை தொடர்  தோல்விகளைத்  தருகிறது. தோல்வியை ஏற்றுக்கொள்ள ஆயத்தமில்லாதபோது அதனை  யார்மேலாவது பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறது. 

கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் சுயநலத்திற்காக விற்றுதின்னுங்கள். தின்று முடித்தவுடன் பழியை யார் மீதாவது போட்டுத் தப்பிக்கப் பருங்கள் 😏

 

ஜயோ,திரும்பவும் பூச்சியத்தில் இருந்தா?...என்ன எழுதுகின்றோம் என தெரியாமல் எழுதுபவர்களுக்கும்,விதண்டாவாதற்கு எழுதுபவர்களுக்கும் எழுதி பலனில்லை 

 

On ‎26‎-‎07‎-‎2020 at 12:33, உடையார் said:

ஒற்றுமையாக இருந்தால் நல்ல விடிவு இருவருக்கும் 

ஓம் எங்கே அந்த விடிவை காட்டுங்கோ பாப்பம்?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

கிருபன் ஐயா, சுத்துமாத்திரன் தான் சொல்கிறார் தமது ஆதரவு தளத்தில் எள்ளளவும் மாற்றமில்லை என்று, அதேநேரம் சென்ற தேர்தலில் 16 ஆசனம் (16 ஆசனங்களுடன் பாராளுமன்றம் போய் ஒன்றும் புடுங்க வில்லை.) பிறகேன் மக்களிடம் கெஞ்ச வேண்டும் 15 ஆவது தாங்கோ என்டு?

சுமந்திரன் தினக்குரல் பேட்டியில் தெளிவான பதில் கொடுத்திருந்தாரே. ரணிலுக்கும் மைத்திரிக்கும் லடாய் வந்து ஆட்சி மாறியதால் அரசியல் யாப்பு மாற்றம் நடக்கவில்லை என்று. அந்த ஆட்சி மாற்றம் நடக்காமல் இருந்திருந்தால் புதிய யாப்பின்படி தேர்தல் நடந்திருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தமிழரசுக்கட்சி,தமிழர்விடுதலைக்கூட்டணி கூத்தமைப்பு ஆக்களுக்கு பரம்பரை பரம்பரையாய் முதுகு சொறிஞ்சு விட்ட கூட்டங்கள் லேசிலை விட்டுட்டு வரமாட்டினம்.அவையள் என்ன சொன்னாலும் இவையளுக்கு வேதவாக்காய்த்தான் தெரியும். 😎

அவர்கள் கொம்பு சீவி விட்டுத்தானே 30 வருடம் விடுதலைக்கான யுத்தம் நடந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வேதவாக்காக எடுக்காமல் விட்டிருந்தால் 87இல் அதிகாரப் பரவலாக்கத்தோடு கிடைத்த மாகாணசபையோடு முடித்திருக்கலாம். இப்ப அதுவும் இல்லை. அழிவுதான் மிஞ்சியது. ஆனால் வெளிநாடுகளில் புத்தியாக 80/90 களில் வந்தவர்கள் தேசியத்தை எள்ளளவும் விட்டுக்கொடுக்காமல் இருக்கின்றோம்😎

 

9 hours ago, விசுகு said:

அதே

அத்துடன்

அப்புகாத்துமார்

அறிவுக்கூட்டம்  என்ற பட்டத்துடன்  சொன்னால் இவர்களுக்கு?????

 

அப்புக்காத்துமார் அறிவுக்கூட்டம் என்பதால்தானே பணமும், அதிகாரமும், அரசியல் தலைமையும் அவர்களிடம் இருக்கின்றது. 

கூட்டமைப்பு, மக்கள் முன்னணி, மக்கள் கூட்டணி என்று எல்லாக் கட்சிகளிலும் யார் கடைவிரித்திருக்கின்றார்கள்?

4 hours ago, அக்னியஷ்த்ரா said:

அம்பிகா இல்ல எந்த கொம்பிகா வந்தாலும் பருப்பு தான் என்னோடு பந்தயம் கட்ட தயாரா ...?  

இதுக்கெல்லாம் பந்தயம் எதற்கு? எல்லோருக்கும் பருப்பு எப்பவும் கிடைத்துக்கொண்டிருக்கின்றதுதானே!

போனஸ் ஆசனம் கிடைக்கும் அளவுக்கு கூட்டமைக்கு வாக்குகள் கிடைத்தால் அம்பிகா அம்மையார் பாராளுமன்றம் போக வாய்ப்பு இருக்கு. இதைத்தான் நான் சொல்கின்றேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

உதாரனத்துக்கு நான் அல்லது வேறு யாராவது ஒரு கட்ச்சி தொடங்கி நான் அல்லது யாராவது பதவிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவரை வெளி நாட்டுக்கு அதுவும் பெரிய நாட்டுக்கு அனுப்புவேன் என்றால் நான் அல்லது நாம் தான் எதிர்க் கட்ச்சி.அது தான் அங்கு இருக்கும் நிலைமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

ஓம் எங்கே அந்த விடிவை காட்டுங்கோ பாப்பம்?

முதலில் ஒற்றுமையாக இருந்து காட்ட சொல்லுங்கள் விடிவு தானா வரும்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

அதெல்லாம் அங்கிருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ...நீங்கள் அவுசில் இருந்து என்ன தான் செய்ய முடியும் 🙂

 

அதென்ன அப்பிடி கேட்டிட்டீங்கள் , தேம்ஸ் நதிக்கரையோரம் இருந்து செய்யக் கூடியது மாதிரி ஏதாவது செய்யலாம் என்பது தான் யோசனை ...வேறென்ன செய்யக் கிடக்கு 😀

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஜயோ,திரும்பவும் பூச்சியத்தில் இருந்தா?...என்ன எழுதுகின்றோம் என தெரியாமல் எழுதுபவர்களுக்கும்,விதண்டாவாதற்கு எழுதுபவர்களுக்கும் எழுதி பலனில்லை 

அக்கா,

சில விடயங்களை கூறும்போது முதலில் ஆற அமர இருந்து கேளுங்கள். பின்னர் யோசியுங்கள் இந்தாள் என்ன சொல்ல வருகிறார் என்று. அப்போது புரியும் ஆயிரம் அர்த்தங்கள். 

நீங்கள் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக யாருடனும் சமரசம் செய்ய ஆயத்தமாக உள்ளபோது, இறுதியில் எஞ்சுவது ஒன்றுமேயில்லை. 

அப்போதும் உங்கள் தொடர் தோல்விகளுக்கு  வடபகுதியினர்தான் காரணம் என்று கூறுவீர்கள். ஏனென்றால் நீங்கள் அந்த நேரத்திலும் தப்பிக்க பழிபோட யாராவது தேவையல்லவா 😀

எனது கூற்று உங்கள் கருத்துக்களுக்கு மட்டுமே. ஏனென்றால் தென் தமிழீழத்தின் குரலாக உங்களை நான் காணவில்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இதுக்கெல்லாம் பந்தயம் எதற்கு? எல்லோருக்கும் பருப்பு எப்பவும் கிடைத்துக்கொண்டிருக்கின்றதுதானே!

அப்புறம் எதுக்கண்ணை கூத்தமைப்பு என்ற பழைய மாவையே திருப்ப திரும்ப அரைப்பான், 
ஒருமாற்றத்துக்கு புது மாவை அரைப்போமே 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

உதாரனத்துக்கு நான் அல்லது வேறு யாராவது ஒரு கட்ச்சி தொடங்கி நான் அல்லது யாராவது பதவிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவரை வெளி நாட்டுக்கு அதுவும் பெரிய நாட்டுக்கு அனுப்புவேன் என்றால் நான் அல்லது நாம் தான் எதிர்க் கட்ச்சி.அது தான் அங்கு இருக்கும் நிலைமை.

எழுத்தில பையனை வென்றாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

அப்புறம் எதுக்கண்ணை கூத்தமைப்பு என்ற பழைய மாவையே திருப்ப திரும்ப அரைப்பான், 
ஒருமாற்றத்துக்கு புது மாவை அரைப்போமே 

அதனால்தான் அம்பிகா அம்மையார் பாராளுமன்றம் போவது நல்லது என்று நினைக்கின்றேன். கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் சம்பந்தர் திருமலையில் தோற்கவேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.

நேற்றைய தமிழ் மிரர் பேட்டியில் சுமந்திரன் தான் யாழ் மாவட்டத்தில் தோற்றால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் போகாமல் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்று மீண்டும் உறுதியாகச் சொல்லியுள்ளார். அவருக்கு மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் போகச் செய்தால், மக்களின் முடிவை நாம் ஏற்கத்தானே வேண்டும்.

 

எனக்கு கூட்டமைப்பின் மீதோ, அல்லது மக்கள் முன்னணி, மக்கள் கூட்டணி மீதோ துளியும் நம்பிக்கையுமில்லை. இவர்கள் எவரையும் ஆதரிக்கவும் இல்லை. தமிழ் சிவில் சமூகம், தேசியத்தை முன்னிறுத்தும் கருத்தியலாளர்கள், ஆய்வாளர்கள் எல்லோரும் தமிழ் கட்சிகளை ஒரு குடையின்கீழ் கொண்டுவரத் தவறிவிட்டார்கள். இந்தத் தேர்தலில் பிரிந்து வாக்குக்கேட்கச் செல்லும் இக்கட்சிகளுக்கு உள்ள மக்களின் ஆதரவு என்ன என்பதைத்தான் இந்தத் தேர்தல் சொல்லப்போகின்றது. மற்றும்படி அரசியல் மாற்றம் எல்லாம் மகிந்தவும், கோத்தபாயவும் நினைத்தபடிதான் நடக்கும். அது மாகாண சபைகளைக் கலைப்பதாகக் கூடவும் இருக்கலாம்!

Just now, கிருபன் said:

அதனால்தான் அம்பிகா அம்மையார் பாராளுமன்றம் போவது நல்லது என்று நினைக்கின்றேன். கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் சம்பந்தர் திருமலையில் தோற்கவேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.

நேற்றைய தமிழ் மிரர் பேட்டியில் சுமந்திரன் தான் யாழ் மாவட்டத்தில் தோற்றால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் போகாமல் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்று மீண்டும் உறுதியாகச் சொல்லியுள்ளார். அவருக்கு மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் போகச் செய்தால், மக்களின் முடிவை நாம் ஏற்கத்தானே வேண்டும்.

 

எனக்கு கூட்டமைப்பின் மீதோ, அல்லது மக்கள் முன்னணி, மக்கள் கூட்டணி மீதோ துளியும் நம்பிக்கையுமில்லை. இவர்கள் எவரையும் ஆதரிக்கவும் இல்லை. தமிழ் சிவில் சமூகம், தேசியத்தை முன்னிறுத்தும் கருத்தியலாளர்கள், ஆய்வாளர்கள் எல்லோரும் தமிழ் கட்சிகளை ஒரு குடையின்கீழ் கொண்டுவரத் தவறிவிட்டார்கள். இந்தத் தேர்தலில் பிரிந்து வாக்குக்கேட்கச் செல்லும் இக்கட்சிகளுக்கு உள்ள மக்களின் ஆதரவு என்ன என்பதைத்தான் இந்தத் தேர்தல் சொல்லப்போகின்றது. மற்றும்படி அரசியல் மாற்றம் எல்லாம் மகிந்தவும், கோத்தபாயவும் நினைத்தபடிதான் நடக்கும். அது மாகாண சபைகளைக் கலைப்பதாகக் கூடவும் இருக்கலாம்!

உங்கள் கருத்து சம்பந்தன் தோற்க வேண்டுமென்பதாக இருந்தாலும் அதட்கு மாற்று வழி என்ன? அநேகமான எந்த தமிழ் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். சம்பந்தனின் கட்சியே தோற்கடிக்கப்பட வேண்டுமோ அல்லது அவரது கட்சியில் வேறு யாரவது தெரிவு செய்யப்படுவதை எதிர்பார்க்கிறீர்களா?

திருகோணமலை , அம்பாறை  போன்ற இடங்கள் தமிழ் மக்களுக்கு இப்போது ஒரு சோதனைக்களமாக மாறிக்கொண்டிருக்கின்றது. தமிழர்களின் பிரிவினை காரணமாக பிரதிநிதித்துவத்தை இழக்கும் நிலை காணப்படுகின்றது. எனவே இந்த விடயத்தில் இம்முறை தமிழர்கள் தோட்கும் நிலைதான் காணப்படுகின்றது.

இம்முறை தெரிவு செய்யப்படும் அரசு மிகவும் தீவிர போக்குடையதாக இருப்பதால் நிறைய பிரச்சினைகள் உருவாக்க வாய்ப்பு உள்ளது. தமிழ் அரசியல் வாதிகள் இருக்கிறதான மாகாண சபையை பாதுகாத்தாலே அது பெரிய காரியம்தான். 

சுமந்திரன் இத்துடன் அரசியலில் இருந்து வெளியேறும் சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கின்றது. இருந்தாலும் மக்களின் தீர்ப்புக்கு காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

சுமந்திரன் தினக்குரல் பேட்டியில் தெளிவான பதில் கொடுத்திருந்தாரே. ரணிலுக்கும் மைத்திரிக்கும் லடாய் வந்து ஆட்சி மாறியதால் அரசியல் யாப்பு மாற்றம் நடக்கவில்லை என்று. அந்த ஆட்சி மாற்றம் நடக்காமல் இருந்திருந்தால் புதிய யாப்பின்படி தேர்தல் நடந்திருக்கும்!

இதே சுத்துமாந்திரன் தான் தமது வாக்கு வங்கியில் எள்ளளவும் குறைவில்லை என்று கூறி உள்ளளார். 

உங்களுடன் ஓர் சவால். 2015 தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற அதே வாக்குகளை  2020 இலும் பெறுகிறதா என்று?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

இதே சுத்துமாந்திரன் தான் தமது வாக்கு வங்கியில் எள்ளளவும் குறைவில்லை என்று கூறி உள்ளளார். 

உங்களுடன் ஓர் சவால். 2015 தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற அதே வாக்குகளை  2020 இலும் பெறுகிறதா என்று?

இந்த சவாலை நீங்கள் சுமந்திரனுடன்தான் வைக்கவேண்டும்.😁

என்னுடைய கணிப்பை இன்னோர் திரியில் கூட்டமைப்பு 10 ஆசனம் மட்டும்தான் எடுக்கும் என்று சொல்லியிருந்தேன். அதுவே 1/3  வாக்குகள் வீழ்ச்சி என்ற அடிப்படையில்தான்! அதற்கு மேல் சவால்விடும் அளவிற்கு எனக்கு மேல்வீடு பழுதில்லை😜

இது கணிப்பு மட்டுமே:

யாழ் - 4

வன்னி - 3

திருமலை - 0

மட்டு  - 2

திகாமடுல்ல - 0

தேசியப்பட்டியல் - 1

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

இந்த சவாலை நீங்கள் சுமந்திரனுடன்தான் வைக்கவேண்டும்.😁

என்னுடைய கணிப்பை இன்னோர் திரியில் கூட்டமைப்பு 10 ஆசனம் மட்டும்தான் எடுக்கும் என்று சொல்லியிருந்தேன். அதுவே 1/3  வாக்குகள் வீழ்ச்சி என்ற அடிப்படையில்தான்! அதற்கு மேல் சவால்விடும் அளவிற்கு எனக்கு மேல்வீடு பழுதில்லை😜

இது கணிப்பு மட்டுமே:

யாழ் - 4

வன்னி - 3

திருமலை - 0

மட்டு  - 2

திகாமடுல்ல - 0

தேசியப்பட்டியல் - 1

இது தான் முடிவு என்றால் கூட்டமைப்பிலிருந்து

தேசியக்கட்சிகளுக்கு பலர்  தாவுவர்

அதையும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Robinson cruso said:

உங்கள் கருத்து சம்பந்தன் தோற்க வேண்டுமென்பதாக இருந்தாலும் அதட்கு மாற்று வழி என்ன? அநேகமான எந்த தமிழ் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். சம்பந்தனின் கட்சியே தோற்கடிக்கப்பட வேண்டுமோ அல்லது அவரது கட்சியில் வேறு யாரவது தெரிவு செய்யப்படுவதை எதிர்பார்க்கிறீர்களா?

 

சம்பந்தன் உட்பட, கூட்டமைப்பில் எவர் மீதும் நம்பிக்கையில்லை. எனவே கூட்டமைப்பு தோற்று புதிய தலைமுறையைச் சேர்ந்த, தேசியத்தை வடக்கு பருத்தித்துறையில் இருந்து, அம்பாறை திருக்கோவில், பொத்துவில், மன்னாரில் முள்ளிக்குளம், புத்தளம் உடப்பு வரை வலுப்படுத்தக்கூடியவர்கள் அரசியல் தலைமைக்கு வரவேண்டும்.

மக்கள் முன்னணி, மக்கள் கூட்டணி, கூட்டமைப்பு எல்லாம் ஒரே அணியில் நிற்கவேண்டும்.  அப்படியான வளர்ந்துவரும் தலைவர்களை எனக்கு  அடையாளம் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சம்பந்தன் உட்பட, கூட்டமைப்பில் எவர் மீதும் நம்பிக்கையில்லை. எனவே கூட்டமைப்பு தோற்று புதிய தலைமுறையைச் சேர்ந்த, தேசியத்தை வடக்கு பருத்தித்துறையில் இருந்து, அம்பாறை திருக்கோவில், பொத்துவில், மன்னாரில் முள்ளிக்குளம், புத்தளம் உடப்பு வரை வலுப்படுத்தக்கூடியவர்கள் அரசியல் தலைமைக்கு வரவேண்டும்.

மக்கள் முன்னணி, மக்கள் கூட்டணி, கூட்டமைப்பு எல்லாம் ஒரே அணியில் நிற்கவேண்டும்.  அப்படியான வளர்ந்துவரும் தலைவர்களை எனக்கு  அடையாளம் தெரியவில்லை.

இதையே பல வருடங்களாக பல இடங்களிலும் எழுதி சொல்லி வருகிறேன். எந்த அமைப்பு அல்லது முன்னைநாள் என்பது கூட அவசியமற்றது. இன்று மக்களுடன் இணைந்து வேலை செய்யும் எவராயினும் அவர்களே வரணும். 

13 hours ago, Robinson cruso said:

உங்கள் கருத்து சம்பந்தன் தோற்க வேண்டுமென்பதாக இருந்தாலும் அதட்கு மாற்று வழி என்ன? அநேகமான எந்த தமிழ் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். சம்பந்தனின் கட்சியே தோற்கடிக்கப்பட வேண்டுமோ அல்லது அவரது கட்சியில் வேறு யாரவது தெரிவு செய்யப்படுவதை எதிர்பார்க்கிறீர்களா?

திருகோணமலை , அம்பாறை  போன்ற இடங்கள் தமிழ் மக்களுக்கு இப்போது ஒரு சோதனைக்களமாக மாறிக்கொண்டிருக்கின்றது. தமிழர்களின் பிரிவினை காரணமாக பிரதிநிதித்துவத்தை இழக்கும் நிலை காணப்படுகின்றது. எனவே இந்த விடயத்தில் இம்முறை தமிழர்கள் தோட்கும் நிலைதான் காணப்படுகின்றது.

இம்முறை தெரிவு செய்யப்படும் அரசு மிகவும் தீவிர போக்குடையதாக இருப்பதால் நிறைய பிரச்சினைகள் உருவாக்க வாய்ப்பு உள்ளது. தமிழ் அரசியல் வாதிகள் இருக்கிறதான மாகாண சபையை பாதுகாத்தாலே அது பெரிய காரியம்தான். 

சுமந்திரன் இத்துடன் அரசியலில் இருந்து வெளியேறும் சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கின்றது. இருந்தாலும் மக்களின் தீர்ப்புக்கு காத்திருப்போம்.

விரைவில் நான் நினைக்கிறன் 2025இல் தேர்தல் வரும் போது வன்னியிலும் பிரதிநிதிதுவம் கேள்விக்குறியாகா வாய்ப்பு உண்டு. தற்போதைய நிலையில் 4 மேல் வருவது கடினம் சில வேளை அதுவும் இல்லாமல் போக வாய்ப்பு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, உடையார் said:

முதலில் ஒற்றுமையாக இருந்து காட்ட சொல்லுங்கள் விடிவு தானா வரும்

புலிகள் ,முஸ்லீம்களோடு சேர்த்து கூடிக் குலாவி ஒற்றுமையாய்  இருந்தமையால் தான் இப்ப  இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிட்டினம்...சும்மா எழுத வேண்டும் என்பதற்காய் வந்து எழுத வேண்டாம் உடையார்.
 

16 hours ago, Kapithan said:

அக்கா,

சில விடயங்களை கூறும்போது முதலில் ஆற அமர இருந்து கேளுங்கள். பின்னர் யோசியுங்கள் இந்தாள் என்ன சொல்ல வருகிறார் என்று. அப்போது புரியும் ஆயிரம் அர்த்தங்கள். 

நீங்கள் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக யாருடனும் சமரசம் செய்ய ஆயத்தமாக உள்ளபோது, இறுதியில் எஞ்சுவது ஒன்றுமேயில்லை. 

அப்போதும் உங்கள் தொடர் தோல்விகளுக்கு  வடபகுதியினர்தான் காரணம் என்று கூறுவீர்கள். ஏனென்றால் நீங்கள் அந்த நேரத்திலும் தப்பிக்க பழிபோட யாராவது தேவையல்லவா 😀

எனது கூற்று உங்கள் கருத்துக்களுக்கு மட்டுமே. ஏனென்றால் தென் தமிழீழத்தின் குரலாக உங்களை நான் காணவில்லை. 🙂

மற்றவர்களுக்கு அட்வைஸ் பண்ண முதல் நீங்கள் கடை பிடியுங்கள்...நான் ஒன்றும் உங்களை மாதிரி கனவு கண்டு விட்டு நடந்ததை எழுதவில்லை ... கடந்த காலத்தில் நடந்தது , நிகழ்காலத்தில் அங்கு நடந்து கொண்டு இருப்பதை தான் எழுதினேன்....தனிப்பட்ட நலனுக்காய் மக்களை பகடைக்காயாய் பயன்படுத்துவது சும்மும் ,அவரது வால்களும் ...உங்களால் முடிந்தால் வடக்கை முதலில் காப்பாற்றுங்கள் ...அதன் பிறகு கிழக்கை மீட்க வரலாம்.
வெளிநாட்டில் இருந்து கொண்டு காசை கொடுத்து விட்டு புலிகளை வழி நடத்தி அழித்த மாதிரி அங்கிருக்கும் மிச்ச தமிழரையும் அழிக்கும் நோக்கமாகும்.
எதுவாயிருந்தாலும் யார் வரோணும் என்று தீர்மானிப்பது அங்குள்ள மக்கள் ...கருணா வந்தால் சந்தோசம் ...வராட்டில் எனக்கு அது பற்றி கவலையில்லை.
நீங்கள் எழுத ஒன்றும் இல்லாமல் சுப்பற்ற கொல்லைக்குள்ள நிற்பதால் இந்த திரியில் இது என் கடைசி பதில் உங்களுக்கு.


 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எந்த கட்ச்சிக்கும் அல்லது வேட்ப்பாளரையும் கை நீட்டி இவருக்கு போடுங்கோ என்டு சொல்ல முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

புலிகள் ,முஸ்லீம்களோடு சேர்த்து கூடிக் குலாவி ஒற்றுமையாய்  இருந்தமையால் தான் இப்ப  இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிட்டினம்...சும்மா எழுத வேண்டும் என்பதற்காய் வந்து எழுத வேண்டாம் உடையார்.

சோனி சோனி என்று விட்டு அவர்களிடமே அடைக்கலமானவர் தானே இன்றைய கிழக்கின் விடிவெள்ளி???

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

சோனி சோனி என்று விட்டு அவர்களிடமே அடைக்கலமானவர் தானே இன்றைய கிழக்கின் விடிவெள்ளி???

அவர் எங்கே அடைக்கலமானார் முஸ்லீம்களிடம்?...மெளலானா அவரது பள்ளி நண்பர் .அவர் மட்டும் தான் உதவி செய்தவர் ...தனிப்பட நிறைய தமிழர்களோடு ஒற்றுமையாய் இருக்கினம் . ஆனால் சமூகமாய் பார்க்கும் போது அவர்கள் தங்கள் நலனை மட்டும் முன் நிறுத்தி தமிழரை எப்பவுமே விரோதியாய்த் தான் பார்ப்பார்கள் ...தமிழர்களும் அப்படி நடந்தால் தான் தப்பி பிழைக்கலாம் . இல்லாட்டில் அழிந்து போக வேண்டியது தான்   
 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:

அவர் எங்கே அடைக்கலமானார் முஸ்லீம்களிடம்?...மெளலானா அவரது பள்ளி நண்பர் .அவர் மட்டும் தான் உதவி செய்தவர் ...தனிப்பட நிறைய தமிழர்களோடு ஒற்றுமையாய் இருக்கினம் . ஆனால் சமூகமாய் பார்க்கும் போது அவர்கள் தங்கள் நலனை மட்டும் முன் நிறுத்தி தமிழரை எப்பவுமே விரோதியாய்த் தான் பார்ப்பார்கள் ...தமிழர்களும் அப்படி நடந்தால் தான் தப்பி பிழைக்கலாம் . இல்லாட்டில் அழிந்து போக வேண்டியது தான்   
 

அவர்களிடமே அடைக்கலமாகிவிட்டு அவர்களுக்கு இவரைக் கண்டால் பயம்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.