Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விசுகு said:

உங்களது கதைக்கு  எந்தளவு ஆதாரம்  கிடையாதோ

அதேபோல் மறுக்கவும்  எம்மிடமும்  ஆதாரம்  கிடையாது

திருடராக  பார்த்து திருந்தாவிட்டால்????

(-ஆதாரம்  தெரிந்தவர்களும் மௌனிகளாக இச்செய்தியை  இணைத்தவர்  உட்பட)

உங்களுக்கோர் ஆதாரம் தருகிறேன் முடிந்தால் verification செய்துகொள்ளுங்கள்.

அண்மையில் எனது நண்பர், தமிழர் ஒருவரின் திருமணத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் காட்டினார்.  அதில் இலங்கை சனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அத் திருமணத்திற்கு பிரதம அதிதிகளாக வந்திருந்தனர். கனடாவிலுள்ள M...S நகைக்கடை / பணப் பரிமாற்ற நிறுவனத்தின் அதிபரின் மகளின் திருமணம். அவரின் நிறுவனம் ஊடாகப் பெருந்தொகைப் பணம் விடுதலைப் போராட்டத்திற்கு அனுப்பப்பட்டு வந்தது. அவர் கேபி யின் நெருங்கிய தொடர்பிலிருந்தவர். மிகுதியை உங்கள் கற்பனைத் திறனுக்கே விட்டுவிடுகிறேன். ஜமாயுங்கள்.....😀

  • Replies 102
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

உங்களுக்கோர் ஆதாரம் தருகிறேன் முடிந்தால் verification செய்துகொள்ளுங்கள்.

அண்மையில் எனது நண்பர், தமிழர் ஒருவரின் திருமணத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் காட்டினார்.  அதில் இலங்கை சனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அத் திருமணத்திற்கு பிரதம அதிதிகளாக வந்திருந்தனர். கனடாவிலுள்ள M...S நகைக்கடை / பணப் பரிமாற்ற நிறுவனத்தின் அதிபரின் மகளின் திருமணம். அவரின் நிறுவனம் ஊடாகப் பெருந்தொகைப் பணம் விடுதலைப் போராட்டத்திற்கு அனுப்பப்பட்டு வந்தது. அவர் கேபி யின் நெருங்கிய தொடர்பிலிருந்தவர். மிகுதியை உங்கள் கற்பனைத் திறனுக்கே விட்டுவிடுகிறேன். ஜமாயுங்கள்.....😀

KP 2000 ஆண்டளவில் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2009 வரை புலிகள் KP யின் நெருங்கிய தொடர்பிலிருந்தவரை தொடர்ந்து உபயோகப்படுத்தியிருப்பார்களா அல்லது அவரின் கொடுக்கல் வாங்கல்களை கணக்கு முடித்திருப்பார்களா?

மிகுதியை உங்கள் கற்பனைத் திறனுக்கே விட்டுவிடுகிறேன். ஜமாயுங்கள்.....😀

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

உங்களுக்கோர் ஆதாரம் தருகிறேன் முடிந்தால் verification செய்துகொள்ளுங்கள்.

அண்மையில் எனது நண்பர், தமிழர் ஒருவரின் திருமணத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் காட்டினார்.  அதில் இலங்கை சனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அத் திருமணத்திற்கு பிரதம அதிதிகளாக வந்திருந்தனர். கனடாவிலுள்ள M...S நகைக்கடை / பணப் பரிமாற்ற நிறுவனத்தின் அதிபரின் மகளின் திருமணம். அவரின் நிறுவனம் ஊடாகப் பெருந்தொகைப் பணம் விடுதலைப் போராட்டத்திற்கு அனுப்பப்பட்டு வந்தது. அவர் கேபி யின் நெருங்கிய தொடர்பிலிருந்தவர். மிகுதியை உங்கள் கற்பனைத் திறனுக்கே விட்டுவிடுகிறேன். ஜமாயுங்கள்.....😀

இன்றைய நிலையில் திருமணங்கள் மற்றும்  புகைப்படங்களை  வைத்து எதையும்  சாதிக்கவோ

முடிவுக்கு வரவோ முடியாது  சகோ

அதுக்குத்தா◌ான் எழுதினேன்

திருடராக  பார்த்து திருந்தாவிட்டால்??? என்று

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

விடுதலைப்போராட்டம் தோற்றுப்போய் இன்றய அவலநிலை உருவானதற்கு  உண்மையான காரணத்தை வெளிப்படையாக ஆராய ஆவல் இல்லாததால்  யார் மீதாவது பழியை போட வேண்டும் என்பதில் தால் பலரும் குறியாக உள்ளார்கள். 

இது புதிதல்லவே? தானாக அழியும் வாழத்தக்கதற்ற உயிரினங்கள், நிறுவனங்கள், அமைப்புகள், மக்கள் குழுமங்கள், இனங்கள் அனைத்துக்கும் பொதுவான குணாம்சங்களில் ஒன்று, தங்கள் தோல்விக்கான காரணங்களை தங்களால் கட்டுப்படுத்த முடியாத சக்திகளில் அடையாளம் காண்பது. இப்படி அடையாளம் காண்பதனால் இவை பல ஆண்டுகளாகவும் தலைமுறைகளாகவும் தம்மை திருத்திக் கொள்வதில்லை. ஆகவே, இறுதியில் இவற்றின் பலவீனங்கள் அதிகரிக்க, எதிரிகள் இவற்றை கபளீகரம் செய்து அழித்து விடுகிறார்கள், சேர, சோழ, பாண்டியரும் ஈழத்தமிழரும் ஓரே இனம் - ஒரே குணம் - ஒரே விதமான காரணத்தால் அழிவு.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கற்பகதரு said:

இது புதிதல்லவே? தானாக அழியும் வாழத்தக்கதற்ற உயிரினங்கள், நிறுவனங்கள், அமைப்புகள், மக்கள் குழுமங்கள், இனங்கள் அனைத்துக்கும் பொதுவான குணாம்சங்களில் ஒன்று, தங்கள் தோல்விக்கான காரணங்களை தங்களால் கட்டுப்படுத்த முடியாத சக்திகளில் அடையாளம் காண்பது. இப்படி அடையாளம் காண்பதனால் இவை பல ஆண்டுகளாகவும் தலைமுறைகளாகவும் தம்மை திருத்திக் கொள்வதில்லை. ஆகவே, இறுதியில் இவற்றின் பலவீனங்கள் அதிகரிக்க, எதிரிகள் இவற்றை கபளீகரம் செய்து அழித்து விடுகிறார்கள், சேர, சோழ, பாண்டியரும் ஈழத்தமிழரும் ஓரே இனம் - ஒரே குணம் - ஒரே விதமான காரணத்தால் அழிவு.

சரி

அழிந்த ஒன்றைப்பற்றி  கதைத்து  என்ன  பலன்??

அப்படி கதைத்துக்கொண்டே  இருப்பது  எவ்வளவு வாழத்தகுந்த குணாதிசயம்??

உண்மையில் தற்பொழுது இருக்கும் அமைப்புகள், மக்கள்  குழுமங்களை  காப்பாற்ற அல்லது  சீரமைக்க நீங்கள்  வைத்த, வைக்கும் தீர்வுகள்  என்ன??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

சரி

அழிந்த ஒன்றைப்பற்றி  கதைத்து  என்ன  பலன்??

அப்படி கதைத்துக்கொண்டே  இருப்பது  எவ்வளவு வாழத்தகுந்த குணாதிசயம்??

உண்மையில் தற்பொழுது இருக்கும் அமைப்புகள், மக்கள்  குழுமங்களை  காப்பாற்ற அல்லது  சீரமைக்க நீங்கள்  வைத்த, வைக்கும் தீர்வுகள்  என்ன??

1. இந்திய “றோ” விற்கு தெரிந்தோ, தெரியாமலோ ஆதரவளிக்கும் அமைப்புகளை அடையாளம் காணுங்கள்.

2. பொது எதிரி “றோ” விற்கு எதிராக அனைவரும் ஒன்றிணையுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

1. இந்திய “றோ” விற்கு தெரிந்தோ, தெரியாமலோ ஆதரவளிக்கும் அமைப்புகளை அடையாளம் காணுங்கள்.

2. பொது எதிரி “றோ” விற்கு எதிராக அனைவரும் ஒன்றிணையுங்கள்.

ஏற்கனவே  இதை  அறிந்து  உணர்ந்து செயற்பட்டததாலேயே ஒரு  அமைப்பு  மிக  மிக  பயங்கரமாக

மிக மிக  அதிக விலை  கொடுத்:து அழிக்கப்பட்டது

இதை  கண்ணால் கண்ட  தலைமுறை  நாம்.

மீண்டும் அதே வழியை பிரேரித்தல் எப்படி  அதே  இனம்,  அமைப்பு  வாழ  உதவும்????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

ஏற்கனவே  இதை  அறிந்து  உணர்ந்து செயற்பட்டததாலேயே ஒரு  அமைப்பு  மிக  மிக  பயங்கரமாக

மிக மிக  அதிக விலை  கொடுத்:து அழிக்கப்பட்டது

இதை  கண்ணால் கண்ட  தலைமுறை  நாம்.

மீண்டும் அதே வழியை பிரேரித்தல் எப்படி  அதே  இனம்,  அமைப்பு  வாழ  உதவும்????

வாழ ? வாழ்வோமென்ற நம்பிக்கை இன்னமும் எஞ்சியிருக்கிறதா ? 

நாம் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டதாய் உணர்கிறேன். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

வாழ ? வாழ்வோமென்ற நம்பிக்கை இன்னமும் எஞ்சியிருக்கிறதா ? 

நாம் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டதாய் உணர்கிறேன். ☹️

இல்லை  ராசாக்கள்

நாம்  விதைத்தவை  அவ்வளவு எளிதானவையல்ல

ஒரு நாள் முளைக்கும்

அதுவரை  காலத்துக்காக  காத்திருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்போதும் உயிரோடு இருக்கிறாரா? அதாவது சுயமாக இயங்கும் நிலையில் அல்லது கருத்துச்சொல்லும் நிலையில் இருக்கிறாரா? 

அப்படி இருக்கமாட்டார் ஆகவே அவருக்கு என்ன பிரச்சனையோ, பூச்சி புழுக்கள்கூட தங்கள் இருப்பைக்காப்பாற்ற உயிர்ப்புடன் போராடுகின்றன. 

காலப்போக்கில் இவர் ஒரு மனநோயாளியாகி வாயில நுழையாத நோய் வந்து இருக்கும் இடம் தெரியாது (இப்பமட்டும் என்னவாழுதாம்) காணாமல் போய்விடுவார்.

அதிவரை ஒருவாய் சோத்துக்கு ஏதாவது சொல்லவேண்டிய கட்டாயம். அல்லது களிதின்னவேண்டிவரும்.

தவிர, அவருக்கே தெரியும் தன்னுடைய வாய்ஸ்சுக்கு எவ்வளவு மதிப்பு. அவருக்குப் படி அளப்பது அரசனேதவிர கத்தரிக்காய் இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

1. இந்திய “றோ” விற்கு தெரிந்தோ, தெரியாமலோ ஆதரவளிக்கும் அமைப்புகளை அடையாளம் காணுங்கள்.

2. பொது எதிரி “றோ” விற்கு எதிராக அனைவரும் ஒன்றிணையுங்கள்.

 

2 hours ago, விசுகு said:

ஏற்கனவே  இதை  அறிந்து  உணர்ந்து செயற்பட்டததாலேயே ஒரு  அமைப்பு  மிக  மிக  பயங்கரமாக

மிக மிக  அதிக விலை  கொடுத்:து அழிக்கப்பட்டது

இதை  கண்ணால் கண்ட  தலைமுறை  நாம்.

மீண்டும் அதே வழியை பிரேரித்தல் எப்படி  அதே  இனம்,  அமைப்பு  வாழ  உதவும்????

 இங்கு பிரேரிக்கப்படுவது, நோக்கம். நோக்கம் சரியாக இருந்தது, ஆனால் அதை அடைய தெரிந்து கொண்ட வழி அழிவுக்கு வழி வகுத்தது. 

2 hours ago, விசுகு said:

சரி

அழிந்த ஒன்றைப்பற்றி  கதைத்து  என்ன  பலன்??

அப்படி கதைத்துக்கொண்டே  இருப்பது  எவ்வளவு வாழத்தகுந்த குணாதிசயம்??

உண்மையில் தற்பொழுது இருக்கும் அமைப்புகள், மக்கள்  குழுமங்களை  காப்பாற்ற அல்லது  சீரமைக்க நீங்கள்  வைத்த, வைக்கும் தீர்வுகள்  என்ன??

எங்கே தவறுகள் நடந்தன என்று கண்டு அவற்றை களைந்து முன்னேறுவோம்.

1. பிரேமதாசவிடம் ஆயுதம் வாங்கி பொது எதிரியை அடித்து விரட்டி, இடைக்கால நிருவாகம் அமைத்த சாணக்கியம் மீண்டும் வேண்டும்.

2. 2005ல் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து பொது எதிரிக்கு சிம்மசொப்பனமான சக்திவாய்ந்த ராஜபக்‌ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்த பின், அவரின் இடைக்கால நிருவாக அமைப்புக்கான அழைப்பை புறக்கணித்தது போன்ற தவறை மீண்டும் செய்யாது இருப்போம்.

1970களில் இருந்து இன்றுவரை பொது எதிரி “றோ” வின் ஆயுதம் “தமிழ் தேசியம்”. அந்த ஆயுதத்தின் ஆழ ஊடுருவும் கூர் முனைகள் தமிழ்நாட்டின் “தமிழ் தேசிய” ஆதரவாளர்கள். இவர்களை தெளிவாக அடையாளம் காண்போம், ஒதுக்கி விடுவோம். பெரும் அழிவுக்கு காரணமான முன்னைய தவறுகளை களைந்து முன்னேறுவோம். இன்று விரும்பாமலே பொது எதிரியின் தேவைகளுக்காக இயங்கும் அமைப்பாக சி. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் தேசிய முண்ணணி அமைந்திருப்பதை அடையாளம் காண்போம். மக்களுக்கும் அடையாளம் காட்டுவோம்.

பொது எதிரியினால் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுடன் கூட்டு சேர்ந்து பொது எதிரியை எதிர்கொள்வோம்.

Edited by கற்பகதரு

2 hours ago, விசுகு said:

ஏற்கனவே  இதை  அறிந்து  உணர்ந்து செயற்பட்டததாலேயே ஒரு  அமைப்பு  மிக  மிக  பயங்கரமாக

மிக மிக  அதிக விலை  கொடுத்:து அழிக்கப்பட்டது

இதை  கண்ணால் கண்ட  தலைமுறை  நாம்.

மீண்டும் அதே வழியை பிரேரித்தல் எப்படி  அதே  இனம்,  அமைப்பு  வாழ  உதவும்????

ரோ என்பது தவறு .......தென் இந்தியாவின் தமிழ் பேசாத திராவிட இனம் ஒன்று இந்தியாவின் அரசியல் இராணுவ கட்ட்மைப்பை பயன்படுத்தி அழித்தது என்பது தான் உண்மை. நீங்கள் சர்வதேச அமைப்புக்களின் அலுவலர்களின் பேட்டிகளை அவதானியுங்கள் பலர் கூறிய பொதுவான கருத்து புலிகளை அழிக்க வேண்டும் என்பது ஒரு சில நாடுகள் எடுத்த முடிவல்ல; ஒரு சில தனி மனிதர்கள் எடுத்த முடிவு குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல்வாதி/கள். அவர்/ளின் வெறுப்புண்ர்வு கிட்சத்தட்ட 700 வருட வரலாற்றீன்கொண்டது.  இந்தியாவும் ரோவும் அழித்தது என்பதை விட ஒரு சில தனிப்பட்ட மனிதர் அழித்தார் என்பது தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Dash said:

ரோ என்பது தவறு .......தென் இந்தியாவின் தமிழ் பேசாத திராவிட இனம் ஒன்று இந்தியாவின் அரசியல் இராணுவ கட்ட்மைப்பை பயன்படுத்தி அழித்தது என்பது தான் உண்மை. நீங்கள் சர்வதேச அமைப்புக்களின் அலுவலர்களின் பேட்டிகளை அவதானியுங்கள் பலர் கூறிய பொதுவான கருத்து புலிகளை அழிக்க வேண்டும் என்பது ஒரு சில நாடுகள் எடுத்த முடிவல்ல; ஒரு சில தனி மனிதர்கள் எடுத்த முடிவு குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல்வாதி/கள். அவர்/ளின் வெறுப்புண்ர்வு கிட்சத்தட்ட 700 வருட வரலாற்றீன்கொண்டது.  இந்தியாவும் ரோவும் அழித்தது என்பதை விட ஒரு சில தனிப்பட்ட மனிதர் அழித்தார் என்பது தான் உண்மை.

101 % உண்மை தோழர்.. அவயளிடம் கதைத்தால் முகலாயர் படை எடுப்பில் இருந்து உங்களை காப்பாற்ற வந்தோம்  .. டேரா போட்டோம் என சீனை  போடுவர் ..😢

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

101 % உண்மை தோழர்.. அவயளிடம் கதைத்தால் முகலாயர் படை எடுப்பில் இருந்து உங்களை காப்பாற்ற வந்தோம்  .. டேரா போட்டோம் என சீனை  போடுவர் ..😢

அதேனே இப்ப காப்பாற்றியாச்சே வந்த வழியே நடையை கட்ட வேண்டியது தானே.

அதே போல் ஆங்கிலேயர் ஆட்சி வராவிட்டிருந்தால் தமிழ் நாட்டில் தமிழ் இருந்திருக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி நேர்காணல் Page Tamil க்கு வழங்கப்பட்டது அல்ல. மாறாக கொழும்பில் இருந்து வெளிவரும் Sunday Times குழுமத்தின் Financial Times க்கு வழங்கப்பட்ட நேர்காணல் ஆகும். அதன் இணைப்பு கீழே போட்டு விடுகின்றேன்.

Attempts to revamp LTTE futile under GR government: KP

http://www.ft.lk/opinion/Attempts-to-revamp-LTTE-futile-under-GR-government-KP/14-703851

15 hours ago, Dash said:

ரோ என்பது தவறு .......தென் இந்தியாவின் தமிழ் பேசாத திராவிட இனம் ஒன்று இந்தியாவின் அரசியல் இராணுவ கட்ட்மைப்பை பயன்படுத்தி அழித்தது என்பது தான் உண்மை. நீங்கள் சர்வதேச அமைப்புக்களின் அலுவலர்களின் பேட்டிகளை அவதானியுங்கள் பலர் கூறிய பொதுவான கருத்து புலிகளை அழிக்க வேண்டும் என்பது ஒரு சில நாடுகள் எடுத்த முடிவல்ல; ஒரு சில தனி மனிதர்கள் எடுத்த முடிவு குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல்வாதி/கள். அவர்/ளின் வெறுப்புண்ர்வு கிட்சத்தட்ட 700 வருட வரலாற்றீன்கொண்டது.  இந்தியாவும் ரோவும் அழித்தது என்பதை விட ஒரு சில தனிப்பட்ட மனிதர் அழித்தார் என்பது தான் உண்மை.

தனிநபர்களால் அழிக்கக் கூடிய அளவுக்கு மிகவும்  பலவீனமான போராட்டம் புலிகளால் நடத்தப் பட்டது என்று  கூற  வருகின்றீர்களா? 

புலிகளின் இராணுவக்கட்டமைப்பு என்பது மிக பலமாகவே திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்பது பொதுவாகவே அனைவருக்கும் தெரிந்த உண்மை. சாதாரண கெரில்லா தாக்குதலில் ஆரம்பித்து  ஒரு நிலப்பரப்பை நிர்வகிக்கும் அளவுக்கு பலமாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இதனை தக்க வைக்க உலக நாடுகளின் ஆதரவு, அங்கீகாரம் தேவை என்பது யதார்ததம். அதனைப் புரிந்து கொள்ளாமல் நடந்தமை தான் அவர்களின் அழிவுக்கு காரணம். 

2002 இன் பின்னர் சமாதான காலத்தில் பலம் வாய்ந்த நாடுகளோடு உறவினை வளர்தது அதன் மூலம் அவர்களின் ஒத்துழைப்புடன் அரசியல் கட்டமைப்பை உருவாக்கி  தமது இலக்கை உடனடியாக அடைய முடியாமல் போனாலும்  இலக்கை நெருங்க கூடிய அடித்தளத்தை இடக்கூடிய வல்லமை விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. அதை அவர்கள் செய்யாமல் விட்டது  தமிழரின் துரதிஷரமே. எதிர்காலத்தில் தமிழர் சார்பாக போராட்டம் நடத்துவோர் புலிகளின் அந்த முக்கிய தவறினை சிந்தித்தல் அவசியம். 

40 வருடமாக போராட்டத்துடன் நின்று எனது வாழ்வை இழந்தது தான் கண்ட மிச்சம் என்ற கேபியின் கூற்று என்ற கூற்று உணமையில் சிந்திக்கவேண்டிய வேதனையான கூற்று. 

 

Edited by tulpen

Just now, tulpen said:

தனிநபர்களால் அழிக்கக் கூடிய அளவுக்கு மிகவும்  பலவீனமான போராட்டம் புலிகளால் நடத்தப் பட்டது என்று  கூற  வருகின்றீர்களா? 

நிச்சயமாக; புலிகள் பலவீனமாக இருக்கவில்லை ஆனால் இந்தியாவின் அரசியலை கட்டுப்படுத்த கூடிய சக்தி       நான் குறிப்ப்ட்ட தன் நபர்களுக்கு இருந்தது. போரை 2009 ம் ஆண்டு காங்கிரஸ் அரசு தடுக்க முயன்று இருந்தால் கோபாலபுரத்தில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கிட்டியிராது.

40 வருடமாக போராட்டத்துடன் நின்று எனது வாழ்வை இழந்தது தான் கண்ட மிச்சம் என்ற கேபியின் கூற்று என்ற கூற்று உணமையில் சிந்திக்கவேண்டிய வேதனையான கூற்று. 

கோத்தபாயவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு பேட்டி கொடுத்தவரின் வார்த்தைகளை நீங்கள் நம்புவது வேடிக்கையாக உள்ளது. அதைவிட இவர் உண்மையில் இவர் இப்படி பேட்டி வழங்கினாரா என்பதே சந்தேகம். Pagetamil கோத்தா ஆதரவு இணையம் இவர்களே கேள்வியும் எழுதி பதிலையும் எழுதி  பிரசுரித்திருப்பார்கள்.

அதே போல் 41 வருடம் வீண் என்றால் அதற்கான முக்கிய காரணம் தம்மை நம்பிய போராட்டத்துக்கு துரோகம் செய்து விட்டு இவர் காட்டிக்கொடுத்தமை என்பதை மறந்து விட்டாரா?

 

Just now, tulpen said:

 

 

  • தொடங்கியவர்
21 minutes ago, tulpen said:

புலிகளின் இராணுவக்கட்டமைப்பு என்பது மிக பலமாகவே திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்பது பொதுவாகவே அனைவருக்கும் தெரிந்த உண்மை.

இதில் சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

புலிகளின் இராணுவ வல்லமை தான் புலிகளின் பலமும் பலவீனமும். மரபுவழி இராணுவமாக கட்டமைக்கப்பட்ட படையணிகள் கெரில்லாத்தன்மையை இழந்தது மிகவும் துரதிஷ்டமே. மனோ மாஸ்ரர் சொன்னது போல என்றைக்கு நாங்கள் காடுகளை இழந்தோமோ அப்பவே நிலப்பரப்பை தக்க வைக்கும் திறனையும் இழந்து விட்டோம்.

இராணுவம் அக்கராயனையும் புதுக்காட்டுச்சந்தியையும் கைப்பற்றி நின்றவேளையே புலிகளின் படையணிகள் கிளிநொச்சி நகர்ப்பகுதியில் நகர் சார் கெரில்லா தாக்குதலுக்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தன. அது மிகவும் தாமதமான பயிற்சி.

பெரும்பாலும் ஓயாத அலைகளுக்கு பின்னர் புலிகளின் முண்ணனி தாக்குதல் அணிகள் மண் அரண்களையும் ஆட்டிலறி சூட்டாதரவையுமே நம்பி இருந்தன.

விடுதலைப்புலிகளின் அரசியல் துறையோ தாக்குதல் வெற்றிகளை இராணுவ வல்லமையை மட்டுமே வைத்து அரசியல் செய்துகொண்டிருந்தன. அவை மக்கள் மத்தியில் இராணுவ வல்லமை பற்றிய ஒரு மாயையே உருவாக்கி இருந்தன. அது கடைநிலை புலிகள் வரை பரவியிருந்தமை துரதிஷ்டமே. அது அவர்களுக்கு கடைசிவரை கள யதார்த்தத்தை உணர்த்தவில்லை. அது யதார்த்ததில் இருந்து வெகு தூரம் பயணித்து இருந்தது.

மிதிவெடிக்கு பயன்படுத்த மின்சார தூண்களில் இருந்த கம்பிகளை எடுத்து துருவி (spring) சுருளாக பயன்படுத்தி கொண்டிருந்தவேளையும், மக்கள் எண்ணற்ற   விமான எதிர்ப்பு ஏவுகணைகளை புலிகள் இறுதியுத்தத்துக்காக வைத்திருப்பதாக நம்பினார்கள்.

ஏழு கடல் மைல் வேகத்தை தாண்டாத, புகையை வெளியேற்ற புகைபோக்கி வெளித்தெரியும் நீர்மூழ்கியை 3 பரீட்சாத்த ஓட்டத்துக்கு பின்னர் பயன்படுத்தமுடியாமல் இருந்தவேளைகூட மக்கள் புலிகளிடம் எண்ணற்ற நீர்மூழ்கியுடன் புலிகளின் படையணி தயாராக இருப்பதாக நம்பினார்கள். 

இவையும் தோல்விக்கான காரணங்களில் சில.

 

39 minutes ago, பகலவன் said:

இதில் சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

புலிகளின் இராணுவ வல்லமை தான் புலிகளின் பலமும் பலவீனமும். மரபுவழி இராணுவமாக கட்டமைக்கப்பட்ட படையணிகள் கெரில்லாத்தன்மையை இழந்தது மிகவும் துரதிஷ்டமே. மனோ மாஸ்ரர் சொன்னது போல என்றைக்கு நாங்கள் காடுகளை இழந்தோமோ அப்பவே நிலப்பரப்பை தக்க வைக்கும் திறனையும் இழந்து விட்டோம்.

இராணுவம் அக்கராயனையும் புதுக்காட்டுச்சந்தியையும் கைப்பற்றி நின்றவேளையே புலிகளின் படையணிகள் கிளிநொச்சி நகர்ப்பகுதியில் நகர் சார் கெரில்லா தாக்குதலுக்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தன. அது மிகவும் தாமதமான பயிற்சி.

பெரும்பாலும் ஓயாத அலைகளுக்கு பின்னர் புலிகளின் முண்ணனி தாக்குதல் அணிகள் மண் அரண்களையும் ஆட்டிலறி சூட்டாதரவையுமே நம்பி இருந்தன.

விடுதலைப்புலிகளின் அரசியல் துறையோ தாக்குதல் வெற்றிகளை இராணுவ வல்லமையை மட்டுமே வைத்து அரசியல் செய்துகொண்டிருந்தன. அவை மக்கள் மத்தியில் இராணுவ வல்லமை பற்றிய ஒரு மாயையே உருவாக்கி இருந்தன. அது கடைநிலை புலிகள் வரை பரவியிருந்தமை துரதிஷ்டமே. அது அவர்களுக்கு கடைசிவரை கள யதார்த்தத்தை உணர்த்தவில்லை. அது யதார்த்ததில் இருந்து வெகு தூரம் பயணித்து இருந்தது.

மிதிவெடிக்கு பயன்படுத்த மின்சார தூண்களில் இருந்த கம்பிகளை எடுத்து துருவி (spring) சுருளாக பயன்படுத்தி கொண்டிருந்தவேளையும், மக்கள் எண்ணற்ற   விமான எதிர்ப்பு ஏவுகணைகளை புலிகள் இறுதியுத்தத்துக்காக வைத்திருப்பதாக நம்பினார்கள்.

ஏழு கடல் மைல் வேகத்தை தாண்டாத, புகையை வெளியேற்ற புகைபோக்கி வெளித்தெரியும் நீர்மூழ்கியை 3 பரீட்சாத்த ஓட்டத்துக்கு பின்னர் பயன்படுத்தமுடியாமல் இருந்தவேளைகூட மக்கள் புலிகளிடம் எண்ணற்ற நீர்மூழ்கியுடன் புலிகளின் படையணி தயாராக இருப்பதாக நம்பினார்கள். 

இவையும் தோல்விக்கான காரணங்களில் சில.

 

இங்கே நீங்கள் புலிகளின் தோல்விக்கான காரணி எதையும் குறிப்பிடவில்லை. மக்கள் என்ன நம்பினார்கள் என்பதை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளீர்கள். புலிகளுக்கும் புலிகளின் தலைமைக்குமா தமது நிலை என்ன என்பதை அறியாமல் இருந்தனர்.

புலிகளிடம் எப்பொழுதுமே தெளிவான பார்வை இருந்தது ஆனால் துர்பாக்கிய விதமாக 2004இல் காங்கிரஸ் அரசும் அதனுடன் போராட்டத்தின் எதிரிகளான சில தனி மனிதர்களும் இந்தியாவின் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக மாறினர். பின்னர் மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் தமிழர் அல்லத கருணாநிதியும் 2006இல் முதல்வராக இந்த இரண்டு குழுவும் சேர்ந்து எமது போராட்டத்துக்கு முடிவுரை எழுதின. இவர்களது சொல்லுக்கு அமேரிக்காவும் பிரித்தானியாவும் அடிபணிய  புலிகள் உலகத்தில் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தனியாக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 எனக்கு பெயர் ஞாபகம் இல்லை  ஆனால் ஒரு ஜ நா அதிகாரி குறிப்பிட்டிருந்தார் ஜரோப்பிய ஒன்றியத்தில் புலிகளை தடை செய்யும் முடிவு பாராளுமன்றத்தில் எடுக்கப்படவில்லை Brussels நகரின் கோப்பி கடைகளில் எடுக்கப்பட்டது என்று. இதிலுருந்து புரிய வேணும் எந்தளவுக்கு சில தனி மனிதர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு புலிக்ளின் அழிவில் பங்காற்றியது என்று

Edited by Dash

  • தொடங்கியவர்

நான் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் சிலவற்றை சுட்டிக்காட்ட்வே விரும்பினேன்.

மரபுவழியில் இருந்து மாற்றமடையாமை.

இராணுவத்தின் ஆழ ஊடுறுவும் படையணிகள் காடுகளை கையாண்ட அளவுக்கு புலிகள் அதனை பயன்படுத்தவில்லை.

பெரும்பாலான புலிகளின் முகாம்கள் மக்கள் மத்தியிலேயே இருந்தன. (பயிற்சி முகாம்கள் தவிர்த்து) அது ஆழ ஊடுருவும் படையணிகளுக்கு வாய்ப்பாக அமைந்தன.

மக்களை முழுமையாக அரசியல்படுத்த அரசியல்துறை தவறிவிட்டது. 80,90 களில் சாதாரண வட்ட/கோட்ட பொறுப்பாளர்களுக்கு மக்களின் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு கூட பெயர்கள் தெரிந்திருந்தன. ஆனால் 2000 களில் மக்களின் வீடுகளில் இருந்த மாவீர்களின் பெயர்கள் கூட தெரியாமல் தான் அரசியல் பொறுப்பாளர்கள் இருந்தார்கள். மக்களில் இருந்து அந்நியப்பட்ட அரசியலே செய்திருந்தார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2020 at 11:35, Dash said:

இவர் ஏன் விலை போனார்...? இவர் விலை போனது 30 வருட போராட்டத்தையே அழித்து விட்டதே ...!!!!

இவர் விலை போனதனால்த்தான் எம் போராட்டம் அழிந்ததா ?????

1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவர் விலை போனதனால்த்தான் எம் போராட்டம் அழிந்ததா ?????

இவரும் ஒரு காரணம்.கோத்தாவுடன் என்ன செய்கிறார்; ஏன் புலிகளல் இவர் நீக்கபட்டார். 

58 minutes ago, பகலவன் said:

இதில் சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

புலிகளின் இராணுவ வல்லமை தான் புலிகளின் பலமும் பலவீனமும். மரபுவழி இராணுவமாக கட்டமைக்கப்பட்ட படையணிகள் கெரில்லாத்தன்மையை இழந்தது மிகவும் துரதிஷ்டமே. மனோ மாஸ்ரர் சொன்னது போல என்றைக்கு நாங்கள் காடுகளை இழந்தோமோ அப்பவே நிலப்பரப்பை தக்க வைக்கும் திறனையும் இழந்து விட்டோம்.

இராணுவம் அக்கராயனையும் புதுக்காட்டுச்சந்தியையும் கைப்பற்றி நின்றவேளையே புலிகளின் படையணிகள் கிளிநொச்சி நகர்ப்பகுதியில் நகர் சார் கெரில்லா தாக்குதலுக்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தன. அது மிகவும் தாமதமான பயிற்சி.

பெரும்பாலும் ஓயாத அலைகளுக்கு பின்னர் புலிகளின் முண்ணனி தாக்குதல் அணிகள் மண் அரண்களையும் ஆட்டிலறி சூட்டாதரவையுமே நம்பி இருந்தன.

விடுதலைப்புலிகளின் அரசியல் துறையோ தாக்குதல் வெற்றிகளை இராணுவ வல்லமையை மட்டுமே வைத்து அரசியல் செய்துகொண்டிருந்தன. அவை மக்கள் மத்தியில் இராணுவ வல்லமை பற்றிய ஒரு மாயையே உருவாக்கி இருந்தன. அது கடைநிலை புலிகள் வரை பரவியிருந்தமை துரதிஷ்டமே. அது அவர்களுக்கு கடைசிவரை கள யதார்த்தத்தை உணர்த்தவில்லை. அது யதார்த்ததில் இருந்து வெகு தூரம் பயணித்து இருந்தது.

மிதிவெடிக்கு பயன்படுத்த மின்சார தூண்களில் இருந்த கம்பிகளை எடுத்து துருவி (spring) சுருளாக பயன்படுத்தி கொண்டிருந்தவேளையும், மக்கள் எண்ணற்ற   விமான எதிர்ப்பு ஏவுகணைகளை புலிகள் இறுதியுத்தத்துக்காக வைத்திருப்பதாக நம்பினார்கள்.

ஏழு கடல் மைல் வேகத்தை தாண்டாத, புகையை வெளியேற்ற புகைபோக்கி வெளித்தெரியும் நீர்மூழ்கியை 3 பரீட்சாத்த ஓட்டத்துக்கு பின்னர் பயன்படுத்தமுடியாமல் இருந்தவேளைகூட மக்கள் புலிகளிடம் எண்ணற்ற நீர்மூழ்கியுடன் புலிகளின் படையணி தயாராக இருப்பதாக நம்பினார்கள். 

இவையும் தோல்விக்கான காரணங்களில் சில.

 

பகலவன், நான் ஒரு பொதுமகனாக எனது பார்வையில்  கருத்துகளை தெரிவித்திருந்தேன்.  போராளிகளில் ஒருவராக உங்கள் பார்வையில் பல தகவல்கள் உண்மைகள் இருக்கும்.   தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. 

என்ன தான் இராணுவ பலம் இருந்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அதை பாதுகாக்கவும் தொடர்ந்து எமது இலக்கை நோக்கி செல்லவும் உலகில் ஒரு சில பலம் வாய்ந்த நாடுகளின் குறைந்த பட்ச ஆதரவாவது வேண்டும் என்பது விடுதலை புலிகளின் அரசியல் பிரிவுக்கு தெரியாமல் போனது எப்படி?   இந்த  கேள்வி என் மனதில் இப்போதும் உள்ள கேள்வி.  பலமாக தம்மால் கட்டி எழுப்பப்பட்ட போராட்டத்தை ஜதார்த்த‍த்தை உலக அரசியலை மனதில் நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் அடைந்தால் மகா தேவே இல்லையேல் மரண தேவி என்ற கண்ணோட்டத்தில் புலிகள் செயற்பட்டதற்கு என்ன காரணம்? 

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அமைப்பில் இருந்து விலத்தும் முடிவை பிரபாகரன் தன்னிச்சையாக எடுக்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக வரை கே.பி.யின் முழுமையான கட்டமைப்பில்தான் வெளிநாட்டு செயற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இதனை பொறுக்க முடியாமல் பேச்சுவார்த்தை காலகட்டத்தில் வெளிநாடுகளுக்கு வருகை தந்த பேச்சுவார்த்தைக் குழுவில் நன்றாக நினைவில் வைத்து இருங்கள் தமிழ்ச்செல்வனோடு தனியாக அரசியல்துறை சார்ந்தவர்கள் மட்டும் பயணிக்கவில்லை. அவர்களோடு நிதித்துறை, காவல்துறை, அனைத்துலக தொடர்பகம் உள்ளிட்ட இயக்க கட்டமைப்பை சேர்ந்த அனைத்து போராளிகளும் வருகை தந்து தமது ஆதிக்கத்தினை செலுத்த முற்பட்ட போது, அக்கால கட்டத்தில் கே.பி.யின் கட்டமைப்பில் இயங்கிய பெரும்பாலான பொறுப்பாளர்கள் ஒத்துழைக்க மறுத்து விட்டனர். 

இத்தகவல் நான் இட்டுக்கட்டு கூறியதாக நீங்கள் எவரும் கூறலாம். ஆனால், அக்கால கட்டத்தில் பணியாற்றிய பொறுப்பாளர்களிடம் கேட்டுப் பார்த்தால் அனைத்தையும் கூறுவார்கள்.

மீண்டும், மீண்டும் இந்த பதிவில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இங்கே கே.பி.க்கு ஆதரவாக நான் எழுதுவதாக நீங்கள் கருதினால் அது எனது தப்பு அல்ல. பேட்டி நிர்ப்பந்தத்தால் வழங்கப்பட்டது என்பது மட்டும் அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

அவர் எவ்வாறான சூழ்நிலையில் வாழ்கின்றார் என்று அடுத்த தடவை ஊர் செல்லும் போது கண்டு கொள்ளுங்கள். 

'அன்பு' ஆண்கள், 'பாரதி' பெண்கள், 'செஞ்சோலை' ஆண் மற்றும் பெண் சிறுவர் இல்லங்களை இயக்கம் எவ்வாறு நடத்தியதோ அந்த கட்டமைப்பில் மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றார்.

சுமார் 300-க்கு அதிகமான சிறுவர்களை பராமரிப்பது என்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதனை நாம் ஒவ்வொருவரும் ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தற்போதைய கொரொனா கால கட்டத்தில் புலம்பெயர் தமிழர்களின் பண வரவு குறைந்த நிலையில் மிகவும் சிரமமான முறையில் சிறுவர்களை பராமரித்து வருகின்றனர்.

அரசாங்கம் பணம் கொடுக்கும் என்று எல்லாம் இங்கே மிகவும் கொச்சையாக பதிவிடாதீர்கள். அரசாங்கத்திடம் அவர் பணம் பெற்று பிள்ளைகளை அவர் பராமரிப்பதனை முற்றாக தவிரத்து வருகின்றார்.

நிர்ப்பந்ததால் வழங்கப்பட்ட பேட்டியை வைத்து இங்கே தத்தமது நேரத்தினை வீணடிப்பதாகவே எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2020 at 18:59, கிருபன் said:

2009 மே 18 க்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மொத்தமாகவும், சில்லறயாகவும் கூறுபோட்டு பிரித்து ஆளாளுக்கு லாபம் பார்த்தவர்கள் பலர். ஒன்றும் இல்லாமல் அல்லாடும் போராளிகளும் பலர். உயிரோடு இருக்கும் போராளிகளை சிங்களப்படைகள் ஒருபக்கம் ஒடுக்க, மற்றைய பக்கத்தில் அரசியல் கட்சிகளும், புலம்பெயர் அமைப்புக்களும் அவர்களை தமது உள்நோக்கத்திற்காக பாவிக்கின்றார்கள்.

இந்த புலம்பெயர் அமைப்புக்களின் உச்சியில் இருப்பவர் கோத்தபாயவாக இருக்கக்கூடும்

இப்படி ஊடுருவி மாஸ்ட்டர் ஸ்ட்ரோக் வைக்கும் கோத்தாவுக்கே 
வாயில் அவல்கொடுத்து அரசியலமைப்பை மாற்றி  தமிழர்களுக்கு தீர்வு கொண்டுவரப்போகிறார்கள் சம்சும்பிகா 
எமது அரசியலறிவு என்பது இன்டர்நேஷனல் லெவல் அண்ணை  அதனால் தானோ என்னவோ தலையில் புரைக்கேறும் அளவுக்கு பருப்பு திண்டுகொண்டே இருக்கிறோம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.