Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

1) இந்தியாவும் றோவும் தமிழருக்கு எதிரானவர்கள் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுவிட்டது,

2) அதற்கு கணிசமான பங்கு புலிகளே,

3) 1989 அளவில் இந்திய இராணுவத்தை வெளியேற்ற பிரேமதாசா முயன்ற வேளை றோ அமைப்பு ஒரு பதில் நடவடிக்கையில் இறங்கியது, தமிழ் தேசிய இராணுவம் என்னும் பெயரில் தமிழ் இளையோரை வலுக்கட்டாயமாக ஒட்டுக்குழுக்களின் உதவியுடன் திரட்டி ஆயுத பயிற்சி ஆயுதம் போன்றவற்றை வழங்கியதுடன் அப்போதிருந்த வடகிழக்கு மாகாணசபையின் மூலமாக தமிழீழ பிரகடனம் செய்வதுடன் அதற்கெதிராக சிங்கள இராணுவம் இராணுவ நடவடிக்கை எடுத்தவுடன் அதனை காரணம் காட்டி அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற பெயரில் இந்திய இராணுவத்தை மீண்டும் கொண்டுவர இருந்தது ,

4) தமீழ பிரகடனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சிலநாடுகளையும் இந்தியா தயார் படுத்திருந்த்தாக செய்தி வந்திருந்த்தது ஆனால்

5) அதனை குழப்பியது விடுதலைப்புலிகள், தமிழ் தேசிய இராணுவத்தின் மீது சிங்கள இராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டாம் நாம் அதனைக்கையாளுகின்றோம் என்று அந்த திட்டத்தை சீர் குலைத்து விட்டார்கள்,

5) தமிழ் மக்கள் மனதில் இந்திய எதிர்ப்புணர்வினை தொடர்ந்து பேணுவது சிங்களத்திற்குதான் நன்மை தமிழர்களுக்கல்ல என்பதே எனது எண்ணம்.

6) இலங்கை என்றும் இந்திய நலனுக்கு எதிரானநாடு என்பது இந்தியாவிற்கும் தெரியும்

இதனால் ஒருமித்த இலங்கை தேசம் உண்மையான இந்திய நலன் இல்லை.

1) மாயை  ? 😧

2) தமிழர் எல்லோரும் முட்டாள்கள் என்கிறீர்கள் 😂😂

3) ஒருமுறை பட்ட அனுபவம் போதும் ஐயா, போதும் ☹️

4) ஆங்.. அப்படியா 🤔 கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. 😀

5) ஓஓ... புலிகள் குழப்பியிராவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்கிறீர்கள் 😂(எங்கேயிருந்தையாபொங்களுக்கு இந்த யோசனையெல்லாம் வருகிறது 😁)

5) இந்திய ஆதரவு உணர்வு இருந்தபோது என்ன செய்ததாம் 🤔 

6) தெரிந்து என்ன செய்வதாய் உத்தேசமாம் 😂

 

உங்களுக்கான எனது கேள்வி ;

நீங்கள் என்ன அந்தாட்டிக்காவிலா Antarctica வசிக்கிறீர்கள். 😂😂

 

  • Replies 102
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கற்பகதரு said:

ரஞ்சித்,

உங்களுக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையின் அடிப்படை பின்னணி பற்றி தெரியாதா? இது பற்றி விடுதலைப்புலிகள் ஏனைய அமைப்புகளை தடை செய்தபோது மக்களுக்கு சந்தி சந்தியாக நடத்திய கூட்டங்களூடாகவும், அதன்பின்னர் பல்கலைக்கழக சமுகம் பல ஆய்வுகள், வெளியீடுகள், ஆக்கங்களூடாகவும், பின்னர் ஊடகவியலாளர்கள் பல ஆண்டுகளாகவும் நிறைய எழுதி இருக்கிறார்கள்.

இலங்கை பற்றிய இந்திய வெளியுறவு கொள்கை பற்றிய தெளிவில் விடுதலைப்புலிகளுக்கும், பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்த காலங்களில் இருந்த - இருக்கும் சிறிலங்கா அரசுக்கும் மிகச்சிறந்த ஒற்றுமையை காணலாம். இந்த ஒற்றுமைதான் பிரேமதாச காலத்தில் இந்தியாவுக்கு எதிரான அரசியல் - ஆயுதப்போராட்ட ஒற்றுமையாக வளர்ந்தது.

ஆகவே, இலங்கை பற்றிய இந்திய வெளியுறவு கொள்கை என்ன?

பிரித்தானியர் வெளியேறிய நாள் முதலாய் இன்றுவரை இலங்கை, இந்திய வெளியுறவு கொள்கையை ஏற்றுக்கவண்டு, இந்திய வழிகாட்டலில் செயற்பட மறுக்கிறது. இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நேரு காலத்தில் இதற்கு இரண்டு வகையான தீர்வுகளை வகுத்திருக்கிறார்கள். ஒன்று சரிவராவிட்டால் மற்றது நடைமுறையில் இருக்கும். 

அந்த இந்திய தீர்வுகள் எவை?

1. இலங்கையை இந்தியாவின் சிறப்பு யூனியன் பிரதேசமாக (அந்தமான் தீவுகள் போல) இணைத்துக் கொள்வது.

2. அது சாத்தியமாகுமட்டும், இலங்கையை குழப்பமான, பாதுகாப்பில்லாத, பொருளாதார உறுதியற்ற நாடாக வைத்திருப்பது.

இந்தியப்படையை இலங்கைக்கு அனுப்பியது முதலாவது முறைக்கான முயற்சி. இயக்கங்களை உருவாக்கி ஆயுதங்கள் வழங்கிய நோக்கமும் அதுவே. அந்த நோக்கத்தை பிரேமதாசவுடன் சேர்ந்து முறியடித்தவர்கள் விடுதலைப்புலிகள். ஆகவே விடுதலைப்புலிகள் இருக்கும்வரை, அவர்களின் தலைவராக பிரபாகரன் இருக்கும்வரை, தீர்வு 1 சாத்தியமில்லை. அதனாலேயே விடுதலைப்புலிகள் அழிக்கப்ட்டார்கள்.

எமது மக்களுக்கு விடுதலைப்புலிகளும் அறிவார்ந்த சமுகமும் 1985லிருந்தே இதை நன்கு விளக்கி இப்படி நடக்கும் என்று எதிர்வு கூறியிருந்தார்கள்.

இன்றுவரை தீர்வு 1 சாத்தியமில்லாததால், தீர்வு 2 நடைமுறையில் உள்ளது.

 

 

அறிவார்ந்த சமூகமா ? எங்களுக்கா? எங்கே எங்கே... 😁😁

சும்மா போகிறபோக்கில் புலிகள் மீது பழியைப் போட்டுவிட்டு போகிறீர்கள். 

இந்தப் போராட்டத்தை so called அறிவார்ந்த சமூகமே நாசமாக்கியது. அதற்கு நற்சான்றுப் பத்திரம் வேறு 😏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

1) மாயை  ? 😧

2) தமிழர் எல்லோரும் முட்டாள்கள் என்கிறீர்கள் 😂😂

3) ஒருமுறை பட்ட அனுபவம் போதும் ஐயா, போதும் ☹️

4) ஆங்.. அப்படியா 🤔 கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. 😀

5) ஓஓ... புலிகள் குழப்பியிராவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்கிறீர்கள் 😂(எங்கேயிருந்தையாபொங்களுக்கு இந்த யோசனையெல்லாம் வருகிறது 😁)

5) இந்திய ஆதரவு உணர்வு இருந்தபோது என்ன செய்ததாம் 🤔 

6) தெரிந்து என்ன செய்வதாய் உத்தேசமாம் 😂

 

உங்களுக்கான எனது கேள்வி ;

நீங்கள் என்ன அந்தாட்டிக்காவிலா Antarctica வசிக்கிறீர்கள். 😂😂

 

அந்த நேரத்தில் போராளிகள் மட்டத்தில் இது தொடர்பான கொள்கை விளக்கம் திரு யோகி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது ( முதலாவது தமிழீழரசு நிறுவப்படின் புலிகளின்நிலைப்பாடு , தற்காலிகமாக அமைப்பு கலைக்கப்பட்டு நிலமை அவதானிக்கப்படும் இரண்டாவது ஈரோஸ் அமைப்பு பற்றி விவாதிக்கப்பட்டதாம் அது முக்கியமற்ற விடயம்), ஆனால் இப்படி நடந்ததா என்பதுகூட எனக்குத்தெரியாது, நீங்கள்தான் கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அந்த நேரத்தில் போராளிகள் மட்டத்தில் இது தொடர்பான கொள்கை விளக்கம் திரு யோகி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது ( முதலாவது தமிழீழரசு நிறுவப்படின் புலிகளின்நிலைப்பாடு , தற்காலிகமாக அமைப்பு கலைக்கப்பட்டு நிலமை அவதானிக்கப்படும் இரண்டாவது ஈரோஸ் அமைப்பு பற்றி விவாதிக்கப்பட்டதாம் அது முக்கியமற்ற விடயம்), ஆனால் இப்படி நடந்ததா என்பதுகூட எனக்குத்தெரியாது, நீங்கள்தான் கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும்.

உங்கள்எழுத்தில் தொக்கி நிற்பது இந்டியா தமிழரின் நண்பன் என்பதும் தமிழர் இந்தியாவை நம்பலாம் என்பதுமே. 

இந்தியாவை நம்பலாமா இல்லையா என்பதற்கு எமது பட்டறிவே போதும் என்பது எனது நிலைப்பாடு. இல்லாதுவிடின் திரும்பவும் ஒன்றல்ல பல முள்ளிவாய்க்காலைச் சந்திக்க நேரிடும் என்கிறேன் நான். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

உங்கள்எழுத்தில் தொக்கி நிற்பது இந்டியா தமிழரின் நண்பன் என்பதும் தமிழர் இந்தியாவை நம்பலாம் என்பதுமே. 

இந்தியாவை நம்பலாமா இல்லையா என்பதற்கு எமது பட்டறிவே போதும் என்பது எனது நிலைப்பாடு. இல்லாதுவிடின் திரும்பவும் ஒன்றல்ல பல முள்ளிவாய்க்காலைச் சந்திக்க நேரிடும் என்கிறேன் நான். ☹️

இல்லை, தொடர்ந்தும் தமிழரையும் இந்தியாவையும் எதிரணியில் பேணுவது எதிரிகளின் தந்திரம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2020 at 11:41, ரஞ்சித் said:

இது கேட்பதற்குச் சற்றுக் கடிணமாக இருந்தாலும் உண்மை அதுதான்.

சில அமைப்புக்களில் பலர் இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரமும், நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் அதிகாரமும் ஒரு சிலரிடமே இருக்கிறது. அதிலும் அரசியல்ப் பலமும் சேர்ந்துவிட்டால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்று அல்லது இருவரே அத்தனை முடிவுகளையும் எடுக்கும் நிலையேற்படுகிறது. 

இதுதான் எமக்கெதிராகவும் நடந்தது. 2005 இல் இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா பதவியேற்றதுமுதல் , அவரது காங்கிரஸ் ஆதரவு வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை ஆகிய இரு துறைகளிலும் இருந்த இரு முக்கிய அதிகாரிகள் சோனியா சார்பாக இலங்கைப் போரினை நடத்தும் பொறுப்பினை எடுக்கின்றனர். அவர்கள்தான் சிவஷங்கர் மேனனும் எம் கே நாராயணனும். இவர்களுக்கு மேலதிகமாக பிரணாப் முகர்ஜி மற்றும் விஜய் சிங் ஆகியோரும் பின்னாட்களில் சேர்கின்றனர். ஆக, இந்த மூவரடங்கிய இந்தியக் குழுவே இலங்கையில் அமைக்கப்பட்ட கொத்தாபய, லலித் வீரதுங்க, பசில் ராஜபக்ஷ ஆகிய மூவர் அடங்கிய போரணிக் குழுவுடன் சேர்ந்து செயற்படுகிறது. எதுவித நீதி மற்றும் நிர்வாகத் தலையீடுகள் இன்றி, போர்க்களத்தின் அன்றாடம் நடக்கும் விடயங்களுக்கான தீர்வுகளை, புதிய நகர்வுகளைத் தீர்மானிக்கும் சக்தி இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு போர் தங்குதடையின்றி நடைபெற்று அவர்களின் இலக்கான எவ்விலை கொடுத்தாவது புலிகளை அழித்தல் எனும் மிகப்பெரும் அழித்தொழிப்பு யுத்தத்தை வெறும்  6 நபர்களே செய்துமுடிக்கின்றனர். 

ட்ரொய்க்கா எனும் இக்குழு பற்றி பல இந்திய பாதுகாப்புச் சஞ்சிகைகள் பலமுறை புகழ்ந்து எழுதியிருக்கின்றன. இலங்கையில் பரீட்சிக்கப்பட்ட இந்த தங்கு தடையற்ற, சுதந்திரமான  தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கொண்ட இக்குழுவைப் பின்பற்றி பல நாடுகளில் நடைபெறும் கிளர்ச்சிகளும் அடக்கப்படமுடியும் என்றும் இவை கிலாகிக்கின்றன. 

ஆகவே, புலிகள் கொண்டுநடத்திய தமிழ் மக்களுக்கான சுதந்திர விடுதலைப் போராட்டத்தினை இரு அரசியல்த் தலைவர்களும், 6 அதிகாரிகளுமே முற்றாக அழித்துமுடித்தார்கள் என்பதே உண்மை. 

எவ்வளவு எளிமையாக எமது போராட்டத்தின் முடிவை சொல்லியிருக்கிறார் 😂😂

மக்களை அழிப்பதினூடாக போராட்டத்தை அழிக்கலாம் என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்தான். உ+ம் JVP யின் அழிப்பு. எமது போராட்டத்தினை இத்தனை காலமும் அழியாது காத்தவை சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களும் பொறுப்புக் கூறலுமே. 

எப்போது அந்தச் சட்டங்களால் தம்மை நெருங்க முடியாது என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களோ அந்த நிமிடத்திலிருந்து போராட்டத்தினை அழிக்கும் வேலைகள் அசுர வேகத்தில் ஆரம்பமாகின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் அழித்து முடிக்கவில்லையென்றால் மனிதாபிமானத்தின் பெயரால் பிற நாடுகள் தலையிடும் ஆபத்து நெருங்கும்.  அவ்வாறு அழிக்கும்போது அரசுகள் முதலில்  அழிப்பது மக்களைத்தான் இறுதியில் போராளிகளும் அழிந்து போராட்டமும் முடிவுக்கு வருகிறது. 

மேலே நீங்கள் கூறிய இருவர்+ஆறு அதிகாரிகள் என்பது அழிப்பிற்கு ஏதுவான சூழலை(Guarding/protecting the leadership)  ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வேண்டுமானால் பொருந்தலாமே தவிர போராட்டத்தை அவர்கள் அழிக்கவில்லை. 

எந்த ஒரு அரசாங்கமும் ஆயுத/ அரசியல் போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய முடியாமலிருப்பதற்கு தடையாய் இருப்பது சர்வதேச சட்டங்களும் அதனோடிணைந்த தண்டனைகளுமே. இலங்கை அரசிற்கு எப்போது பயம் விலகியதோ அப்போதே எமது மக்களின் அழிவு உறுதி செய்யப்பட்டுவிட்டது. 😕

அழிப்பிற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததன் பயனை தற்போது இந்தியா அனுபவிக்கிறது. அனுபவி ராஜா அனுபவி 😂

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, vasee said:

இல்லை, தொடர்ந்தும் தமிழரையும் இந்தியாவையும் எதிரணியில் பேணுவது எதிரிகளின் தந்திரம். 

எதிரணியின் தந்திரமாகவே இருக்கட்டும். தமிழர் நாம் இந்தியாவை நம்புவதற்கு என்ன தேவை இருக்கிறது அல்லது நம்புவதற்குரிய  தகுதி இந்தியாவிற்கு இருக்கிறதா ? 

எங்கள் அனுபவம் என்ன சொல்கிறது 🤥

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2020 at 12:01, கற்பகதரு said:

ஆகவே, இலங்கை பற்றிய இந்திய வெளியுறவு கொள்கை என்ன?

பிரித்தானியர் வெளியேறிய நாள் முதலாய் இன்றுவரை இலங்கை, இந்திய வெளியுறவு கொள்கையை ஏற்றுக்கவண்டு, இந்திய வழிகாட்டலில் செயற்பட மறுக்கிறது. இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நேரு காலத்தில் இதற்கு இரண்டு வகையான தீர்வுகளை வகுத்திருக்கிறார்கள். ஒன்று சரிவராவிட்டால் மற்றது நடைமுறையில் இருக்கும். 

அந்த இந்திய தீர்வுகள் எவை?

1. இலங்கையை இந்தியாவின் சிறப்பு யூனியன் பிரதேசமாக (அந்தமான் தீவுகள் போல) இணைத்துக் கொள்வது.

2. அது சாத்தியமாகுமட்டும், இலங்கையை குழப்பமான, பாதுகாப்பில்லாத, பொருளாதார உறுதியற்ற நாடாக வைத்திருப்பது.

இந்தியப்படையை இலங்கைக்கு அனுப்பியது முதலாவது முறைக்கான முயற்சி. இயக்கங்களை உருவாக்கி ஆயுதங்கள் வழங்கிய நோக்கமும் அதுவே. அந்த நோக்கத்தை பிரேமதாசவுடன் சேர்ந்து முறியடித்தவர்கள் விடுதலைப்புலிகள். ஆகவே விடுதலைப்புலிகள் இருக்கும்வரை, அவர்களின் தலைவராக பிரபாகரன் இருக்கும்வரை, தீர்வு 1 சாத்தியமில்லை. அதனாலேயே விடுதலைப்புலிகள் அழிக்கப்ட்டார்கள்.

 

19 hours ago, vasee said:

இந்தியாவும் றோவும் தமிழருக்கு எதிரானவர்கள் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுவிட்டது, அதற்கு கணிசமான பங்கு புலிகளே,


உண்மை. நான் மேலே எழுதியுள்ளதும் அதுவே.

19 hours ago, vasee said:

இலங்கை என்றும் இந்திய நலனுக்கு எதிரானநாடு என்பது இந்தியாவிற்கும் தெரியும் இதனால் ஒருமித்த இலங்கை தேசம் உண்மையான இந்திய நலன் இல்லை.

இங்கே தான் உங்கள் கருத்தில் முரண்பாடு உள்ளது. இலங்கை பிளவுபட்டாலும், சிறிலங்கா என்ற நாடு இருக்கும் வரை அது என்றும் இந்திய நலனுக்கு எதிரானநாடு என்பது இந்தியாவிற்கும் தெரியும். ஆகவே, இலங்கை தீவில் இரண்டு நாடுகள் இந்திய பிரச்சினைக்கு  தீர்வு என்று இந்தியா கருதவில்லை. அப்படி இந்தியா ஏற்றுக்கொண்டிருந்தால், விடுதலைப்புலிகளை விட உற்ற நண்பன் இந்தியாவுக்கு வேறு யாருமில்லை. இன்று தமிழீழமும் இந்தியாவும், அமெரிக்காவும் இசுரேலும் போல இணைபிரியாமல் இருந்திருக்க முடிந்திருக்கும். 

இந்திய பிரச்சினைக்கு தீர்வு நான் ஏற்கனவே மேலே எழுதியதுதான்:

அந்த இந்திய தீர்வுகள் எவை?

1. இலங்கையை இந்தியாவின் சிறப்பு யூனியன் பிரதேசமாக (அந்தமான் தீவுகள் போல) இணைத்துக் கொள்வது.

2. அது சாத்தியமாகுமட்டும், இலங்கையை குழப்பமான, பாதுகாப்பில்லாத, பொருளாதார உறுதியற்ற நாடாக வைத்திருப்பது.

4 hours ago, vasee said:

தொடர்ந்தும் தமிழரையும் இந்தியாவையும் எதிரணியில் பேணுவது எதிரிகளின் தந்திரம். 

இதுவும் உண்மையல்ல. தன்னை அழிக்க முயலும் இந்தியாவுக்காக தமிழர்கள் உள்ளிருந்தே சதிவேலை செய்வதை சிறிலங்கா அரசு அறவே வெறுக்கிறது. இதை தமிழர்கள் கைவிடுவார்கள் என்று உறுதியாக தெரிந்தால், தமிழர்களுடன்  வாழ சிங்களவர்கள் முடிந்ததெல்லாம் செய்வார்கள். அவர்களின் உண்மையான பெரும் எதிரி இந்தியா என்பதில் சிங்களவருக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

 


உண்மை. நான் மேலே எழுதியுள்ளதும் அதுவே.

1) இங்கே தான் உங்கள் கருத்தில் முரண்பாடு உள்ளது. இலங்கை பிளவுபட்டாலும், சிறிலங்கா என்ற நாடு இருக்கும் வரை அது என்றும் இந்திய நலனுக்கு எதிரானநாடு என்பது இந்தியாவிற்கும் தெரியும். ஆகவே, இலங்கை தீவில் இரண்டு நாடுகள் இந்திய பிரச்சினைக்கு  தீர்வு என்று இந்தியா கருதவில்லை. அப்படி இந்தியா ஏற்றுக்கொண்டிருந்தால், விடுதலைப்புலிகளை விட உற்ற நண்பன் இந்தியாவுக்கு வேறு யாருமில்லை. இன்று தமிழீழமும் இந்தியாவும், அமெரிக்காவும் இசுரேலும் போல இணைபிரியாமல் இருந்திருக்க முடிந்திருக்கும். 

இந்திய பிரச்சினைக்கு தீர்வு நான் ஏற்கனவே மேலே எழுதியதுதான்:

அந்த இந்திய தீர்வுகள் எவை?

2] 1. இலங்கையை இந்தியாவின் சிறப்பு யூனியன் பிரதேசமாக (அந்தமான் தீவுகள் போல) இணைத்துக் கொள்வது.

2. அது சாத்தியமாகுமட்டும், இலங்கையை குழப்பமான, பாதுகாப்பில்லாத, பொருளாதார உறுதியற்ற நாடாக வைத்திருப்பது.

இதுவும் உண்மையல்ல. தன்னை அழிக்க முயலும் இந்தியாவுக்காக தமிழர்கள் உள்ளிருந்தே சதிவேலை செய்வதை சிறிலங்கா அரசு அறவே வெறுக்கிறது. இதை தமிழர்கள் கைவிடுவார்கள் என்று உறுதியாக தெரிந்தால், தமிழர்களுடன்  வாழ சிங்களவர்கள் முடிந்ததெல்லாம் செய்வார்கள். அவர்களின் உண்மையான பெரும் எதிரி இந்தியா என்பதில் சிங்களவருக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.

1) இப்பொழுது தமிழருட்பட முழு இலங்கையருமே இந்தியாவிற்கு எதிரானவர்களாக மாற்றியதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வெற்றியாகக் கொள்ள முடியும் 😀

2] ஆக , இலங்கையில் நிரந்தர அமைதி திரும்ப வேண்டுமானால் இந்தியா என்கின்ற நாடு இருக்கக் கூடாது என்கிறீர்கள். அல்லது இந்தியா இருக்கும்வரையில் இலங்கையில் அமைதி சாத்தியமில்லை என்கிறீர்கள். 

நீங்கள் கூறுவதை சரி பிழை கூறுவதற்குமப்பால்,   வடக்கு கிழக்கில் இருக்கும் இந்திய அரசியற் தலைவர்களின் சிலைகளை அகற்றுவதுதான் முதலில் செய்ய வேண்டியது, 😀

Edited by Kapithan

எமது வாழ்ககைக்கு தேவையானதை இயல்பாக சிந்திப்பதே தற்போதைய தேவை. எமது அரசியற் தலைவர்களும் ஆயுதம் தூக்கிய போராளிகளும் அதை செய்திருந்தாலே இன்றைய நிலையை விட் எவ்வளவோ மேம்பட்ட நிலையில் நாம் இருந்திருப்போம். 

அதை விடுத்து யார் யாரையெல்லாம் எதிரியாக்கலாம் என்று சிந்தித்து, கற்பனைக்கதைகளை உருவாக்கி புதிய எதிரிகளை உருவாக்கும் அரசியலைச் மேலும் எமது மக்களை தனிமைப்படுத்தி சிதைக்கவே உதவும். 

ஆகவே மக்கள் தேர்தல் களத்தில்  ஓரளவுக்காவது மக்கள் பிரச்சனைகளில் அக்கறை மிகுந்த அதேவேளை நேர்மையாக செயற்படக்கூடியவர்களை இனங்கண்டு வாக்களிக்க வேண்டும். தமிழர் சமுதாயமும் ஏனைய சமுதாயங்களுக்கு இணையாக சமூக  கல்வி பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவேண்டும். உசுப்பறுபவர்களது கதைகளை கேட்டு அழிவுகளை சந்தித்தது போதும். 

  

  • கருத்துக்கள உறவுகள்

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பக்கத்து நாடு இந்தியா என்று இன்னும் சிலர் நம்புகிறார்களே 😟

கொரோனா பிரச்சனையில் தனது நாட்டு தொழிளாளர்களையே பொலிசை கொண்டு அடித்து விரட்டி ஆயிரகணக்கான கிலோ மீட்டர் நடக்க வைத்த நாடு.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

எவ்வளவு எளிமையாக எமது போராட்டத்தின் முடிவை சொல்லியிருக்கிறார் 😂😂

நீங்கள் எள்ளி நகையாடும் விதமாக எனது கருத்து அமைந்திருந்ததற்காக வருந்துகிறேன். அது எனது நோக்கமல்ல.

வெளியுலக அழுத்தங்கள் இருப்பதனாலேயே படுகொலைகளை ஆக்கிரமிப்பு அரசுகளும் சக்திகளும் செய்யத்தயங்குகின்றன என்பது ஓரளவிற்குச் சரியாயினும், சரித்திரத்தில் பல பாரிய படுகொலைகளும் இனவழிப்புக்களும் எவரது அழுத்தங்களையும் பொருட்படுத்தாதே அரங்கேறியிருக்கின்றன என்பது நீங்கள் அறியாதது அல்லவே. ஆர்மீனியா மீதான துருக்கியின் இனவழிப்பும், யூதர்கள் மீதான நாசிகளின் இனவழிப்பும், பொஸ்னிய முஸ்லீம்கள் மீதான சேர்பியர்களின் இனவழிப்பும், டுட்ஸிகள் மீதான ஹூட்டூக்களின் இனவழிப்பும் சர்வதேச அழுத்தங்களுப் பயந்திருந்தால் நடைபெற்றிருக்கமாட்டாது. 

சரி, எங்கள் விடயத்திற்கு வரலாம். இரு அரசியல்த் தலைவர்களும் ஆறு அதிகாரிகளுமே இந்த இனவழிப்பு யுத்தத்தின் முக்கிய சூத்திரதாரிகள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உங்களின் கருத்திலிருந்து தெளிவாகிறது. ஏனென்றால், சர்வதேச அழுத்தங்களும், சட்டங்களும் இருந்தமையினாலேயே இனவழிப்பு தயக்கத்துடன் நடத்தப்பட்டதாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் உண்மையில், வெளியுலக அழுத்தங்களை முறியடித்து, புலிகள் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்படவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இந்தியா இருந்ததை அன்று போரினை நடத்திய இந்திய அதிகாரிகளில் ஒருவரான சிவ்ஷங்கர் மேனன் வெளிப்படையாக எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அமெரிக்க மற்றும் நோர்வே தலைமையில் யுத்தநிறுத்தம் ஒன்றிற்கு சிங்கள அரசை நிர்ப்பந்தித்து, புலிகளின் தலைவர்களையும் மக்களையும் காப்பாற்ற மேற்குநாடுகள் எடுத்த முயற்சியினை தாம் ஆரம்பத்திலேயே தடுத்துவிட்டதாக மேனன் மேலும் கூறியிருக்கிறார். புலிகளின் தலைவர்கள் காப்பாற்றப்பட்டு, அவர்களது சுதந்திரப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெறுவதற்கும் அல்லது போர்நிறுத்தம் ஒன்றின்மூலம் ஆரம்பிக்கப்படக்கூடிய சமாதானத் தீர்வொன்றிற்குமான நடவடிக்கைகள் ஆகியவை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சாதகமாகப் பார்க்கப்படவில்லையென்றும் அவர் கூறுகிறார். புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு, போராட்டம் எவ்விலை கொடுத்தாவது முடித்துவைக்கப்படவேண்டும் என்பதும் தமிழகத் தலைவர்கள் அனைவரினதும் வேண்டுகோளாக இருந்ததாகவும், புலிகளின் வெற்றியென்பது, தமிழகத் தலைவர்களின் இருப்பிற்கான அச்சுருத்தலாக அன்று பார்க்கப்படதாகவும் கூறியிருக்கிறார். மத்திய காங்கிரஸ் அரசின் விருப்போடு, தமிழகத் தலைவர்களின் வேண்டுகோளும் சுமூகமாக இணைந்ததினாலேயே இந்த யுத்தம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு இலக்கினை அடைந்ததாகக் கூறியிருக்கிறார்.

சர்வதேச அழுத்தங்கள் என்பதெல்லாம் பேச்சிற்கு வேண்டுமென்றால் நன்றாகவிருக்கும். ஆனால் , யதார்த்தத்தில் அவற்றிற்குப் பெறுமதியில்லை. ஒரு பிராந்திய வல்லரசினால் உலக வல்லரசையும், ஐக்கிய நாடுகள் சபையினையும்   தூரத்தில் வைத்தே ஒரு இனக்கொலையினை நடத்த முடிந்ததென்றால், இந்தச் சர்வதேச அழுத்தம் என்பதெல்லாம் வெறும் பேச்சிற்காகப் பாவிக்கப்பட்டும் அழகான வார்த்தைகளேயன்றி வேறில்லை.

நீங்கள் புலிகள் அழிக்கப்பட்டதற்கும், போராட்டம் கொடூரமாக முடித்துவைக்கப்பட்டதற்கும், அப்பாவிகளின் ஒன்றரை லட்சம்பேர் கொல்லப்பட்டதற்கும் காரணங்களை வெளியே தேடுகிறீர்கள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றுதான். அது இந்தியா, இந்தியா, இந்தியா !!!!!
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் எள்ளி நகையாடும் விதமாக எனது கருத்து அமைந்திருந்ததற்காக வருந்துகிறேன். அது எனது நோக்கமல்ல.

1) வெளியுலக அழுத்தங்கள் இருப்பதனாலேயே படுகொலைகளை ஆக்கிரமிப்பு அரசுகளும் சக்திகளும் செய்யத்தயங்குகின்றன என்பது ஓரளவிற்குச் சரியாயினும், சரித்திரத்தில் பல பாரிய படுகொலைகளும் இனவழிப்புக்களும் எவரது அழுத்தங்களையும் பொருட்படுத்தாதே அரங்கேறியிருக்கின்றன என்பது நீங்கள் அறியாதது அல்லவே. ஆர்மீனியா மீதான துருக்கியின் இனவழிப்பும், யூதர்கள் மீதான நாசிகளின் இனவழிப்பும், பொஸ்னிய முஸ்லீம்கள் மீதான சேர்பியர்களின் இனவழிப்பும், டுட்ஸிகள் மீதான ஹூட்டூக்களின் இனவழிப்பும் சர்வதேச அழுத்தங்களுப் பயந்திருந்தால் நடைபெற்றிருக்கமாட்டாது. 

சரி, எங்கள் விடயத்திற்கு வரலாம்.

2) இரு அரசியல்த் தலைவர்களும் ஆறு அதிகாரிகளுமே இந்த இனவழிப்பு யுத்தத்தின் முக்கிய சூத்திரதாரிகள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உங்களின் கருத்திலிருந்து தெளிவாகிறது. ஏனென்றால், சர்வதேச அழுத்தங்களும், சட்டங்களும் இருந்தமையினாலேயே இனவழிப்பு தயக்கத்துடன் நடத்தப்பட்டதாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் உண்மையில், வெளியுலக அழுத்தங்களை முறியடித்து, புலிகள் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்படவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இந்தியா இருந்ததை அன்று போரினை நடத்திய இந்திய அதிகாரிகளில் ஒருவரான சிவ்ஷங்கர் மேனன் வெளிப்படையாக எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அமெரிக்க மற்றும் நோர்வே தலைமையில் யுத்தநிறுத்தம் ஒன்றிற்கு சிங்கள அரசை நிர்ப்பந்தித்து, புலிகளின் தலைவர்களையும் மக்களையும் காப்பாற்ற மேற்குநாடுகள் எடுத்த முயற்சியினை தாம் ஆரம்பத்திலேயே தடுத்துவிட்டதாக மேனன் மேலும் கூறியிருக்கிறார்.

3) புலிகளின் தலைவர்கள் காப்பாற்றப்பட்டு, அவர்களது சுதந்திரப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெறுவதற்கும் அல்லது போர்நிறுத்தம் ஒன்றின்மூலம் ஆரம்பிக்கப்படக்கூடிய சமாதானத் தீர்வொன்றிற்குமான நடவடிக்கைகள் ஆகியவை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சாதகமாகப் பார்க்கப்படவில்லையென்றும் அவர் கூறுகிறார். புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு, போராட்டம் எவ்விலை கொடுத்தாவது முடித்துவைக்கப்படவேண்டும் என்பதும் தமிழகத் தலைவர்கள் அனைவரினதும் வேண்டுகோளாக இருந்ததாகவும், புலிகளின் வெற்றியென்பது, தமிழகத் தலைவர்களின் இருப்பிற்கான அச்சுருத்தலாக அன்று பார்க்கப்படதாகவும் கூறியிருக்கிறார். மத்திய காங்கிரஸ் அரசின் விருப்போடு, தமிழகத் தலைவர்களின் வேண்டுகோளும் சுமூகமாக இணைந்ததினாலேயே இந்த யுத்தம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு இலக்கினை அடைந்ததாகக் கூறியிருக்கிறார்.

4) சர்வதேச அழுத்தங்கள் என்பதெல்லாம் பேச்சிற்கு வேண்டுமென்றால் நன்றாகவிருக்கும். ஆனால் , யதார்த்தத்தில் அவற்றிற்குப் பெறுமதியில்லை. ஒரு பிராந்திய வல்லரசினால் உலக வல்லரசையும், ஐக்கிய நாடுகள் சபையினையும்   தூரத்தில் வைத்தே ஒரு இனக்கொலையினை நடத்த முடிந்ததென்றால், இந்தச் சர்வதேச அழுத்தம் என்பதெல்லாம் வெறும் பேச்சிற்காகப் பாவிக்கப்பட்டும் அழகான வார்த்தைகளேயன்றி வேறில்லை.

5) நீங்கள் புலிகள் அழிக்கப்பட்டதற்கும், போராட்டம் கொடூரமாக முடித்துவைக்கப்பட்டதற்கும், அப்பாவிகளின் ஒன்றரை லட்சம்பேர் கொல்லப்பட்டதற்கும் காரணங்களை வெளியே தேடுகிறீர்கள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றுதான். அது இந்தியா, இந்தியா, இந்தியா !!!!!
 

வருந்தாதீர்கள் ரஞ்சித், எள்ளி நகையாடவில்லை. எப்போதுமே சிறிய எள்ளலுடன் எழுதுவது எனது வழமை. அதனூடாக பிறரை புண்படுத்துவதல்ல என் நோக்கம். 👍

1) நீங்கள் குறிப்பிட்ட இன அழிப்புக்கள் நடைபெற்ற காலத்தில் சர்வதேச சட்டங்கள் எந்த அளவிற்கு நிறுவனமயப்படுத்தப்பட்டன என்பதனையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்

2) இரு அரசியல்த் தலைவர்களும் ஆறு அதிகாரிகளுமே இந்த இனவழிப்பு யுத்தத்தின் முக்கிய சூத்திரதாரிகள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் அவர்களுக்குக் கொடுத்த அழுத்தம்/முக்கியத்துவம் அதீதம் என்கிறேன். 

3) சிவசங்கர் மேனன் கூறியவற்றில் ஓரளவு உண்மை இருப்பதாகக் கொண்டாலும் அவரது எழுத்துக்களை மிகுந்த அவதானத்துடன் நோக்க வேண்டும். ஏனென்றால் அவர்களைப்போன்றோர் கூறுவதை எப்போதுமே வேதவாக்காக கொள்ளவேண்டியதில்லை

4) நீங்கள் கூறுவதிலுள்ள கோபத்தின் வெளிப்பாட்டையும் எங்கள் கையாலாகாத்தனத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்

5) புலிகள் அழிக்கப்பட்டதற்கும், போராட்டம் கொடூரமாக முடித்துவைக்கப்பட்டதற்கும், அப்பாவிகள் ஒன்றரை லட்சம்பேர் கொல்லப்பட்டதற்கும் காரணம் இந்தியா, இந்தியா, இந்தியா !!!!! (😡)

இதில் உங்களைவிட நான் தெளிவாக உள்ளேன்.

2 hours ago, ரஞ்சித் said:
11 minutes ago, Kapithan said:

 

5) புலிகள் அழிக்கப்பட்டதற்கும், போராட்டம் கொடூரமாக முடித்துவைக்கப்பட்டதற்கும், அப்பாவிகள் ஒன்றரை லட்சம்பேர் கொல்லப்பட்டதற்கும் காரணம் இந்தியா, இந்தியா, இந்தியா !!!!! (😡)

இதில் உங்களைவிட நான் தெளிவாக உள்ளேன்.

நீங்கள் புலிகள் அழிக்கப்பட்டதற்கும், போராட்டம் கொடூரமாக முடித்துவைக்கப்பட்டதற்கும், அப்பாவிகளின் ஒன்றரை லட்சம்பேர் கொல்லப்பட்டதற்கும் காரணங்களை வெளியே தேடுகிறீர்கள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றுதான். அது இந்தியா, இந்தியா, இந்தியா !!!!!
 

ரஞ்சித், கபிதன் உங்கள் இருவரதும் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.  இந்தியா ஆரம்பத்தில் இருந்தே எமது விடுதலைக்கு எதிரான சிந்தனையையே கொண்டிருந்த‍து.  அதனை நான் நூற்றுக்கு நூறு வீதம் ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால் இதனை இந்தியா மறைத்து வைத்திருக்கவில்லை. 1985 ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தையிலேயே  காண்பித்துவிட்டது. அதன் பின்னர் 1987 ் ல் மிக உறுதியாக தெரிவித்து விட்ட நிலையில் எமது தரப்பில் அதன் பின்னர்  அதற்கு மாற்றான ராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படாமை எமது மாபெரும் தவறல்லவா. அதைவிடுத்து இந்தியாவை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி எமது காலத்தை போக்குவதில் என்ன நியாயம் உண்டு? 

 1987 ல் இருந்து 2009 வரை கிட்டத்தட்ட 22 வருடங்கள். இக்காலப்பகுதி எமக்கு புதிய உறவுகளை ஏற்படுத்தி இந்திய எதிர்ப்பை சமாளிக்க இருந்தும் அதை பயன்படுத்தாத‍து எமது தரப்பின் தவறல்லவா? ஏதோ கடைசிவரை இந்தியா எமக்கு ஆதரவளிப்பதாக கூறி இறுதி கணத்தில் ஏமாற்றியது போலவே  எம்மவர் கருத்து உள்ளது.   எமது இலக்குகளை அடைவதற்கு இந்த கால உலக சூழ்நிலை தடையாக இருக்கிறது என்றால்  இலக்குகளை மாற்றி அதை நோக்கிய அத்திவாரத்தை போடுவதை இலக்காக கொண்டிருக்கலாம் அல்லவா? 

என்னை பொறுத்தவரை போராட்டத்தை நடத்திய விடுதலை புலிகளின் அர்பணிப்பு , வீரம் ஆகியவற்றை மதித்து அவர்களின் ஈக வரலாற்றை பேணிப்பாதுகப்பதுடன் அவர்கள் செய்த தவறுகளையும் அதனால் ஈழப்போராட்டடதிற்கு ஏற்பட்ட பின்னடைவுகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றையும் ஆவணப்படுத்துவதே நாம் வாழாத காலத்தில் எதிர்கால சந்த‍தியாவது அத்தவறுகளை மேற்கொள்ளாது தடுக்கு முடியும். அதை விடுத்து எதிர்கால சந்த‍திக்கு எமது காலத்து தவறுகளை மறைத்து தனியே துரோகிகளால் மட்டும் அழிந்தோம் என்ற பிழையான தகவலை வரலாறாக காட்டினால் அது அவர்களும் அதே தவறை செய்யவே வழிவகுக்கும். 

Those who do not learn history are doomed to repeat it.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

 

என்னை பொறுத்தவரை போராட்டத்தை நடத்திய விடுதலை புலிகளின் அர்பணிப்பு , வீரம் ஆகியவற்றை மதித்து அவர்களின் ஈக வரலாற்றை பேணிப்பாதுகப்பதுடன் அவர்கள் செய்த தவறுகளையும் அதனால் ஈழப்போராட்டடதிற்கு ஏற்பட்ட பின்னடைவுகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றையும் ஆவணப்படுத்துவதே நாம் வாழாத காலத்தில் எதிர்கால சந்த‍தியாவது அத்தவறுகளை மேற்கொள்ளாது தடுக்கு முடியும். அதை விடுத்து எதிர்கால சந்த‍திக்கு எமது காலத்து தவறுகளை மறைத்து தனியே துரோகிகளால் மட்டும் அழிந்தோம் என்ற பிழையான தகவலை வரலாறாக காட்டினால் அது அவர்களும் அதே தவறை செய்யவே வழிவகுக்கும். 

 

11 வருடங்களாக வாயை  மட்டுமே  மென்றது  போதாதா  சகோ???

  • கருத்துக்கள உறவுகள்

Tulpen னின் பயனுள்ள அறிவுரை.
ஆனால் இங்கு பலரின் நோக்கமும் தங்கள் கனவு உலகத்தை மாயையை ஈழத்தில் எப்படியாவது திணித்துவிடுவதில் தான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

Tulpen னின் பயனுள்ள அறிவுரை.
ஆனால் இங்கு பலரின் நோக்கமும் தங்கள் கனவு உலகத்தை மாயையை ஈழத்தில் எப்படியாவது திணித்துவிடுவதில் தான் உள்ளது.

எனது பணிவான வேண்டுகோள்,

தயவுசெய்துTulpenனின் விமரிசனத்தில் உள்ள positive ஆன  சிந்தனை ஓட்டத்தை,   கடுமையான விமரிசனங்கள் எழுதுவதை தவிர்ப்பதனூடு மேலும் தொடரலாம் என நம்புகிறேன். 👍

  • தொடங்கியவர்
On 4/8/2020 at 19:38, tulpen said:

1987 ல் இருந்து 2009 வரை கிட்டத்தட்ட 22 வருடங்கள். இக்காலப்பகுதி எமக்கு புதிய உறவுகளை ஏற்படுத்தி இந்திய எதிர்ப்பை சமாளிக்க இருந்தும் அதை பயன்படுத்தாத‍து எமது தரப்பின் தவறல்லவா?

மேற்கு மற்றும் தென் அமெரிக்க சீன உறவுகள்

நாங்கள் மேற்குலகிலும் மேற்குலகு சார் நாடுகளிலும் தான் பரவி வாழ்கிறோம். அந்த நாடுகளில் பொது அமைப்புகளை நிறுவி எமது போராட்ட நியாயத்தன்மையை எடுத்துரைக்க தவறிவிட்டோம்.

சீனாவின் பீஜிங்கிலும், ஆர்ஜென்டீனா, பிரேசில் நாடுகளில் தமிழ் சங்கங்களை நிறுவி, நிகழ்வுகளுக்கு உள்ளூர் அரசியல்வாதிகளை அழைத்து எங்கள் நியாயத்தன்மையை, சிங்கள அரசின் வன்முறையை எடுத்துக்கூறி ஒரு வலயமைப்பை உருவாக்கவேண்டும்.

அவர்கள் தான் நாட்டை ஆளும் அரசியல்வாதிகளாக உருவாகுவார்கள்.

தமிழர் வாழாத நாடுகளில் எங்கள் பிரச்சனைகளை எடுத்து செல்லவேண்டும்.

உலக வல்லாதிக்கத்தின் இருபக்கமும் நாங்கள் இருக்கவேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பகலவன் said:

மேற்கு மற்றும் தென் அமெரிக்க சீன உறவுகள்

நாங்கள் மேற்குலகிலும் மேற்குலகு சார் நாடுகளிலும் தான் பரவி வாழ்கிறோம். அந்த நாடுகளில் பொது அமைப்புகளை நிறுவி எமது போராட்ட நியாயத்தன்மையை எடுத்துரைக்க தவறிவிட்டோம்.

சீனாவின் பீஜிங்கிலும், ஆர்ஜென்டீனா, பிரேசில் நாடுகளில் தமிழ் சங்கங்களை நிறுவி, நிகழ்வுகளுக்கு உள்ளூர் அரசியல்வாதிகளை அழைத்து எங்கள் நியாயத்தன்மையை, சிங்கள அரசின் வன்முறையை எடுத்துக்கூறி ஒரு வலயமைப்பை உருவாக்கவேண்டும்.

அவர்கள் தான் நாட்டை ஆளும் அரசியல்வாதிகளாக உருவாகுவார்கள்.

தமிழர் வாழாத நாடுகளில் எங்கள் பிரச்சனைகளை எடுத்து செல்லவேண்டும்.

உலக வல்லாதிக்கத்தின் இருபக்கமும் நாங்கள் இருக்கவேண்டும்.

 

தனியே மேற்கு எங்களுக்க்குப் போதுமானதல்ல. கிழக்கிலும் எங்கள் பார்வையைத் திருப்ப வேண்டும். அதனூடாக எங்கள் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கலாம் 

இந்தியா தேவையே இல்லை. பலமாக இருப்பவர்களின் கால்களில் இந்தியன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடப்பான். 😏(தமிழ்நாடு இதற்குள் வரா) பலமானவர்களானால் இந்தியா பின்னே வரும். வாலாட்டியபடி 😜

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகலவன் said:

உலக வல்லாதிக்கத்தின் இருபக்கமும் நாங்கள் இருக்கவேண்டும்.

 

இதை சிங்களவர்கள் மிகவும் சரியாக பயன் னடத்தியுள்ளார்கள்.

இதைத்தான் சுடலை ஞானம் என்பார்களோ ?

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2020 at 17:30, Kapithan said:

ஏன் உங்களுக்கு விருப்பம் இல்லையா 😂 அல்லது இதிலும் கிழக்குடன் வடக்கும் கூடவே வருகிறது என்று கவலையோ 😂

இல்லப்பா வடக்கில் உள்ளவர்கள் செய்தால் அது துரோகம் என்று சொல்லுவாங்களோ?? என நினச்சன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லப்பா வடக்கில் உள்ளவர்கள் செய்தால் அது துரோகம் என்று சொல்லுவாங்களோ?? என நினச்சன் 

அதிக நாட்களுக்குப்பின்னர் யாழிற்கு விஜயம், தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டதுபோல 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

அதிக நாட்களுக்குப்பின்னர் யாழிற்கு விஜயம், தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டதுபோல 😂

ம்ம் முதல் முறையாக அம்பாறைக்கு வந்து வாக்கு கேட்ட கர்ணா அம்மானுடைய கட்சிக்கும் , மட்டக்களப்பில் பிள்ளையான் கட்சிக்கும் சின்ன உறுதுணை அவ்வளவுதாம் மக்கள் அம்பாறையில் கூட்டமைப்பை ஒதுக்கியுள்ளார்கள் அதே போல மட்டக்களப்பிலும் பிள்ளையான் , மொட்டில் அமல் ( வியாழேந்திடனும் 

இன்னும் வச்சி செய்ய இருக்கிறம் கூட்டமைப்பை 😜

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் முதல் முறையாக அம்பாறைக்கு வந்து வாக்கு கேட்ட கர்ணா அம்மானுடைய கட்சிக்கும் , மட்டக்களப்பில் பிள்ளையான் கட்சிக்கும் சின்ன உறுதுணை அவ்வளவுதாம் மக்கள் அம்பாறையில் கூட்டமைப்பை ஒதுக்கியுள்ளார்கள் அதே போல மட்டக்களப்பிலும் பிள்ளையான் , மொட்டில் அமல் ( வியாழேந்திடனும் 

இன்னும் வச்சி செய்ய இருக்கிறம் கூட்டமைப்பை 😜

தாராளமாகச் செய்யலாம். ஒருவரும் குறுக்கே வரப்போவதில்லை. 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.