Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ள வாக்கு என்று சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் இன்னும் வீடியோவை முழுமையாய் பார்க்கவில்லை....பார்த்திட்டு வந்து எழுதுறன் 

அவர், எப்படியும்....  பொய்யும், புரட்டும், சுத்து மாத்தும் தான் சொல்லுவார்.
அதை... மினக்கெட்டு கேக்கிறதை  விட... 
வேறை.. அலுவலை, நாங்கள் பார்க்கலாம். :grin:

  • Replies 123
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

கற்பிதன் ,1)  நடுச்சாமம் வோட் எண்ணும் அறைக்கு ஏன் சும்மும் ,அவரது வாலும் போனார்கள்?...போனவர்கள் உள்ளேயிருந்து என்ன செய்தார்கள்?
சிறிதரனும் கள்ள வோட் போட்டு தான் முன்னுக்கு வந்தவர்...ஆனால் 2) அவர் ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்கை தன்னுடைய வாக்கு என்று சொல்லி மாத்தி உரிமை கோரவில்லை...அத்தோடு 3) தான் கள்ள வாக்கு போட்டனான் என்று ஒத்து கொண்டு விட்டார்.
சும் அப்படியில்லை ...இந்த தேர்தலில் மக்கள் வோட் போடா விட்டால் தான் இனி மேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லி விட்டு 4) வெட்கமேயில்லாமல்  ஒரு பெண்ணுக்கு விழுந்த வாக்குகளை மாத்தி தேர்தலில் வென்று இருக்கிறார் .
நான் படித்தவன் ,ஜெண்டில்மேன் என்று சொல்லும் ஒருவருக்கு இது தேவையா ?
அங்கு வோட் போட்ட மக்களிலும் பிழை இருக்கு ..விருப்பு வாக்கில் ஒன்றை மட்டும் போட்டுட்டு மிச்சத்தை போடாமல் விட்டால் உத்து தான் நடக்கும் ...அவர்களும் யாருக்கும் போடுவது என்று தெரியாமல் போடாமல் விட்டு இருப்பார்கள் ...அதையே 5) இந்த கள்ளன்கள் யூஸ் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
யார் என்ன சொன்னாலும் 6)இப்படிப்பட்ட கட்சியில் இருந்து கொண்டு கள்ள வோட் போட்டு வென்றது அவமானத்திலும் அவமானம்

 

 

1)  ஏன் போனார் என்று சுமந்திரன்தான் கூறவேண்டும். போன நேரம்தான் உங்கள் பிரச்சனையா ?  நள்ளிரவில் போகாமல் முன்னிரவில் போயிருந்தால் உங்களுக்குப் பிரச்சனை இல்லையா 😀

2) பெண்ணுக்கு விழுந்த வாக்கு என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள். யூகம்தானே 😀

3) சிறீதரன் கூறியவாறு சுமந்திரனும் ""நான் வாக்கு மோசடியிலீடுபட்டேன்"" என்று கூறினால் எல்லாம் சரியாகும் என்பதா உங்கள் வாதம். அல்லது தண்டிக்கப்பட வேண்டுமா 🤔

4) ஆணுக்கு விழுந்த வாக்குகளை மோசடி செய்யலாமா ☹️.  என்ன கூற விரும்புகிறீர்கள் பெண் என்பதனூடாக 🤔

5) இப்படி வாய்க்கு வந்தபடி கூறுவது அழகல்ல அம்மணி ☹️

6) முடிவே செய்துவிட்டீர்கள், சுமந்திரன் வாக்கு மோசடியிலீடுபட்டார் என்று. 😀

Okay , 

நீங்கள் கூறியபடி அவர் வாக்கு மோசடியில் ஈடுபட்டார் என்றே வைத்துக்கொள்வோமே. இந்த வாக்கு மோசடியையே தடுக்கவியலாத மற்றய வேட்பாளர்கள் அரசியலில் என்னதான் சாதிக்கப்போகிறார்கள் என்று நான் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும் ☹️ 

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத இந்த வேட்பாளர்கள் நாடாளுமன்றம் சென்று எங்களுக்கு என்ன வெட்டிக் கிழிக்கப்போகிறார்கள் ☹️

எனவே இந்த வேட்பாளர்கள் தாங்கள் கையாலாகாதவர்கள் என்று இந்த விடயத்திலேயே காட்டிவிட்டார்கள். இவர்கள்  நாடாளுமன்றம் போகாதிருப்பதே மேல் என்று கூறுகிறேன் நான். 😎

இதற்கு நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள் அம்மணி 🤔

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13/8/2020 at 07:57, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாராவது துணிவிருந்தால் ஊடகங்கள் முன் அதை சொல்லட்டும். அதன் பின்னர் என்ன நடக்கிறதென பார்ப்போம் என எச்சரித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

போற இடம் வாற இடமெல்லாம் ஆமிக்கு பின்னாலையும் முன்னாலையும் திரியிறவர் மற்றவனைப்பார்த்து சொல்லுறார் "துணிவிருந்தால்"

Bild

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

1)  ஏன் போனார் என்று சுமந்திரன்தான் கூறவேண்டும். போன நேரம்தான் உங்கள் பிரச்சனையா ?  நள்ளிரவில் போகாமல் முன்னிரவில் போயிருந்தால் உங்களுக்குப் பிரச்சனை இல்லையா 😀

2) பெண்ணுக்கு விழுந்த வாக்கு என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள். யூகம்தானே 😀

3) சிறீதரன் கூறியவாறு சுமந்திரனும் ""நான் வாக்கு மோசடியிலீடுபட்டேன்"" என்று கூறினால் எல்லாம் சரியாகும் என்பதா உங்கள் வாதம். அல்லது தண்டிக்கப்பட வேண்டுமா 🤔

4) ஆணுக்கு விழுந்த வாக்குகளை மோசடி செய்யலாமா ☹️.  என்ன கூற விரும்புகிறீர்கள் பெண் என்பதனூடாக 🤔

5) இப்படி வாய்க்கு வந்தபடி கூறுவது அழகல்ல அம்மணி ☹️

6) முடிவே செய்துவிட்டீர்கள், சுமந்திரன் வாக்கு மோசடியிலீடுபட்டார் என்று. 😀

Okay , 

நீங்கள் கூறியபடி அவர் வாக்கு மோசடியில் ஈடுபட்டார் என்றே வைத்துக்கொள்வோமே. இந்த வாக்கு மோசடியையே தடுக்கவியலாத மற்றய வேட்பாளர்கள் அரசியலில் என்னதான் சாதிக்கப்போகிறார்கள் என்று நான் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும் ☹️ 

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத இந்த வேட்பாளர்கள் நாடாளுமன்றம் சென்று எங்களுக்கு என்ன வெட்டிக் கிழிக்கப்போகிறார்கள் ☹️

எனவே இந்த வேட்பாளர்கள் தாங்கள் கையாலாகாதவர்கள் என்று இந்த விடயத்திலேயே காட்டிவிட்டார்கள். இவர்கள்  நாடாளுமன்றம் போகாதிருப்பதே மேல் என்று கூறுகிறேன் நான். 😎

இதற்கு நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள் அம்மணி 🤔

 

 

கப்பிதான்  முடியல!! நானும் உங்களை கொஞ்சம் தரமான கருத்தாளர் என்று நினைத்திருந்தேன்!! மட்டம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள வாக்கு...... யாருன்னு,  கேட்டா....   🎼  
சின்னக் குழந்தையும்... சொல்லும்...   🥁

அவ்வளவு,  உலகப்  பெற்ற ஆள்....  இவர் தான்.  :grin:  🤣

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தக் காசில்... தனக்கே.. சூனியம் வைத்த , சுமந்திரன். :grin:

கள்ள  வாக்கு விடயத்தை,  சுமந்திரன்
பேசாமல் விட்டிருக்கலாம். சனமும்  மறந்து போய்... இருக்கும். :)

அதை... விட்டுட்டு,  நடவடிக்கை எடுக்கப் படும் என்றவுடன்...
சனம் எல்லாம்...  சுமந்திரனை, " கும்மி"  எடுத்ததில், வியப்பு இல்லை. 🤣

தன்னுடைய... வாயை,  குடுத்து.. வாங்கிக் கட்டியது  சுமந்திரன் மட்டுமே.
பாதிப்பு... எமக்கு இல்லை.  அவருக்குத்தான்...
 😎

டிஸ்கி:  சுமந்திரன், அடுத்த தேர்தலிலாவது.... மாட்டுப் பட்டு நாறாமல்...
நேர்மையாக.. நின்று,  வெல்ல  வேண்டும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

கப்பிதான்  முடியல!

!1) நானும் உங்களை கொஞ்சம் தரமான கருத்தாளர் என்று நினைத்திருந்தேன்!!

2) மட்டம்!!!

1) நன்றி எ.தமிழா

2) நீங்கள் யூகத்தின் அடிப்படையில் கருத்துரைக்கிறீர்கள். நானோ, யூகதின் அடிப்படையில் கருத்துரைப்பது சரியான அணுகுமுறையல்ல என்கிறேன். விமரிசனங்கள் தரம் தாழ்தவையாக இருக்கக் கூடாது என்பது என் கருத்து. 

தெளிவாகக் கவனியுங்கள். எந்த இடத்திலும் சுமந்திரன் சுத்தமானவர் என்றோ தவறு விடாதவரென்றோ நான் கூறவில்லை. சுமந்திரனின் கருத்துக்கள் சரியானவை என்று கூட வாதிடவில்லை. சிறீதரன் வாக்கு மோசடியிலீடுபட்டார் என்பதையிட்டுக்கூட நான் எதுவுமே கூறவில்லை. 

ஆனால் சுமந்திரன் விடயத்தில் காட்டப்படும் அதீத வெறுப்பிற்கு அவரின் தேசியம் தொடர்பான கருத்துக்கள் மட்டுமே காரணமல்ல என்று உறுதியாக நம்புகிறேன். 

உங்களுக்கு நான் வெளிப்படையாகக் கூறும் விடயம் இதுதான். 

1) தமிழர்களுக்கு பேரம் பேசும் உறுதியான தலைமை இருக்கக் கூடாது என்பதில் நிஜ  எதிரி கண்ணும் கருத்துமாக உள்ளான். அதில் தொடர்ச்சியான வெற்றியும் காண்கிறான்.

2) ஆளுமை உள்ள தலைமை எங்களுக்கு இருக்கக்கூடாது என்பது அவர்களின் தீர்மானம். 

3) பலவீனமான, திரும்பவும் எழுச்சி கொள்ள முடியாத சிறு சிறு குழுக்களாக தமிழர்களைப்  பிரித்து எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எங்களை ஒற்றுமையாக பலம்மிக்க சக்கியாக வர விடாமல் சிதறடிப்பது அவன் நோக்கம்.

4) இதற்காக சாதி சமயம் பிரதேசவாதங்களால் எங்களை சிதறடிக்கிறான்

5) எங்களை சிதறடித்து அழிப்பதற்கு மிகப்பெரிய நிகழ்ச்சி நிரலின்படி காரியங்கள் கனகச்சிதமாக நடைபெறுகின்றன. இதனை நான் பல தடவைகளில் பகிரங்கமாகவே கூறியுள்ளேன். பலவற்றை வெளியே பகிரங்கமாகக் கூற முடியாது.

6) எங்கள் ஊடகங்களில் மிகப்பெரும்பான்மையானவை அவனால் வழிநடாத்தப்பெறுகிறது. 

7) நீங்களெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் சுமந்திரன் சார்ந்துள்ள சமயம் என்பது சைவர்களுக்கெதிரானதென்று. ஆனால் அவர் சார்ந்துள்ள சமயம் Mainstream கிறீத்துவத்திற்கும் ( Catholic, CSI...) எதிரானதுதான். ஆனால் எங்களுக்கிடையே வளர்த்துவிடப்படும் சமய வெறுப்பிற்கு யார் தேசியத்திற்கு ஆதரவான கிறீத்துவர்கள் யார் எதிரான கிறீத்துவர்கள் என்கின்ற வேறுபாடு தெரியாது. பலியாகுவோர் இருபகுதியினருமே. இந்த இடத்தில்தான் நான் இங்கே ஆவேசமாக முன்வைக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையே யூகம்தான் என்று நிறுவ முற்படுவதனூடாக எல்லோரையும் சரியான பக்கத்திற்கு சிந்திக்கத் தூண்டுகிறேன். வாதிட்டு வெற்றிபெறுவதல்ல என் நோக்கம். 

கீழ்வரும் கேள்விக்கு பதில் தாருங்கள்.

கிறீத்துவன் என்கின்ற அடிப்படையில் சுமந்திரனுக்கெதிரான வெறுப்பூட்டிய பிரச்சாரம் நடைபெறுவதாக நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.  நாளை எனக்கெதிராக இந்த வெறுப்பு திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது ? 

ஏற்கனவே பகிரங்கமாக கிறீத்துவர்களுக்கெதிரான பரப்புரைகள் நடப்பதை நாம் எல்லோருமே பார்க்கிறோம். 

இந்த நிலை நாளை நிச்சயம் உச்சமடையும். அப்போது எனது நிலை என்ன ? எனக்குள்ள தெரிவுகள் என்ன ? 

எனது அச்சத்தைப் போக்குவீர்களா 🤔

 

 

 

33 minutes ago, Kapithan said:

 

 

 

கிறீத்துவன் என்கின்ற அடிப்படையில் சுமந்திரனுக்கெதிரான வெறுப்பூட்டிய பிரச்சாரம் நடைபெறுவதாக நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.  நாளை எனக்கெதிராக இந்த வெறுப்பு திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது ? 

ஏற்கனவே பகிரங்கமாக கிறீத்துவர்களுக்கெதிரான பரப்புரைகள் நடப்பதை நாம் எல்லோருமே பார்க்கிறோம். 

இந்த நிலை நாளை நிச்சயம் உச்சமடையும். அப்போது எனது நிலை என்ன ? எனக்குள்ள தெரிவுகள் என்ன ? 

எனது அச்சத்தைப் போக்குவீர்களா 🤔

 

 

 

இதைத்தான் நான் மறைமுகமாக எழுதி இருந்தேன். இல்லாவிடடாள் மதவாதி இனவாதி என்று கூச்சல் போட்டிருப்பார்கள். இப்போது நீங்கள் நேரடியாகவே எழுதிய பின்னல் மறைப்பதில் பிரயோசனம் இல்லை.

இவர்கள் என்னதான் நல்லவர்கள்போல , தமிழ் தேசியவாதிகள்போல எழுதினாலும், அவர்கள் உள்ளத்தில் சாதிவாதம் , மதவாதம் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

இங்கு இவர்கள் சுமந்திரனுக்கு எதிராக எழுதுவது நூற்றுக்கு நூறு வீதம் இந்த காரணத்துக்காகத்தான். உண்மையான மனச்சாட்சி இருக்குமாக இருந்தால் இவர்களுக்கு மறுக்க முடியாது. இது இவர்களது ரத்தத்தில் ஊறியது.

நாய் வாலை எவ்வளவுதான் முயட்சித்தாலும் நிமிர்த்த முடியாது.

கள்ள வாக்கைப்பற்றி கூறும் போது சுமந்திரனை பற்றி இங்கு அதிகம் பேசப்படுகிறது. சுமந்திரன் கள்ளவாக்கினால் வென்றாரா இல்லையா என்றது பற்றி எனக்கு தெரியாது. அதில் அக்கறையும் இல்லை  ஏனென்றால் அவர் முறையாக வென்றிருந்தாலும் அவரின் அரசியலில் எனக்கு உடன்பாடு  இல்லை. இனியாவது அவர் தன்னை மாற்றிகொள்வாரோ எனக்கு தெரியாது. 

 இதை விட கள்ளவாக்கினால் வென்ற ஒருவரால் தமிழ் மக்கள் அனைவரும் இன்று நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றனர் என்றால் அது 1977 தேர்தலை சொல்ல‍லாம். ஏனென்றால் வட்டுக்கோட்டை தீர்மானமான  தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு என்று  தமிழர் விடுதலை கூட்டணி 1977 பாராளுமன்ற தேர்தலை பிரகடனப்படுத்தியது. அதில்  ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான கள்ள வாக்குகள் போடப்பட்டன. கையில் பூசப்பட்ட மையை எப்படி அழிப்பது என்பது 1977 தேர்தலில் விடுதலை கூட்டணி ஆதரவாளரிடையே அன்று மிகவும் பிரபலம். ஒவ்வொரு ஊரிலும் இருந்த கூட்டணியின் முகவர்கள் விரல் மை அழிக்கும்  remover உடன் திரிந்தார்கள். 

ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் இருந்த மாற்று கட்சி முகவர் அச்சுறுத்தப்பட்டு கள்ள வாக்குக்கள் போடப்பட்டன.  சி. எக்ஸ் மாட்டினதும்  அருளம்பலத்தினதும் பல வாக்குசாவடி முகவர்கள் பல இடங்களில் தாக்கபட்டனர்.  மேற்கண்ட தகவல்களில்  சந்தேகம் இருந்தால் 1977 தேர்தல் நேரம் அங்கு இருந்த உங்களுக்கு தெரிந்த நபர்களின் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள்.

ஆகவே கள்ளவாக்கினால் வென்று அந்த மக்களையே அழித்த முதலாவது நபர் தமிழீழம் என்ற நபரே.   இந்த உண்மை பலருக்கு கசக்க தான் செய்யும்.  எனக்கும் அது கசக்கவே செய்கிறது. 

Edited by tulpen

2 hours ago, tulpen said:

கள்ள வாக்கைப்பற்றி கூறும் போது சுமந்திரனை பற்றி இங்கு அதிகம் பேசப்படுகிறது. சுமந்திரன் கள்ளவாக்கினால் வென்றாரா இல்லையா என்றது பற்றி எனக்கு தெரியாது. அதில் அக்கறையும் இல்லை  ஏனென்றால் அவர் முறையாக வென்றிருந்தாலும் அவரின் அரசியலில் எனக்கு உடன்பாடு  இல்லை. இனியாவது அவர் தன்னை மாற்றிகொள்வாரோ எனக்கு தெரியாது. 

 இதை விட கள்ளவாக்கினால் வென்ற ஒருவரால் தமிழ் மக்கள் அனைவரும் இன்று நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றனர் என்றால் அது 1977 தேர்தலை சொல்ல‍லாம். ஏனென்றால் வட்டுக்கோட்டை தீர்மானமான  தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு என்று  தமிழர் விடுதலை கூட்டணி 1977 பாராளுமன்ற தேர்தலை பிரகடனப்படுத்தியது. அதில்  ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான கள்ள வாக்குகள் போடப்பட்டன. கையில் பூசப்பட்ட மையை எப்படி அழிப்பது என்பது 1977 தேர்தலில் விடுதலை கூட்டணி ஆதரவாளரிடையே அன்று மிகவும் பிரபலம். ஒவ்வொரு ஊரிலும் இருந்த கூட்டணியின் முகவர்கள் விரல் மை அழிக்கும்  remover உடன் திரிந்தார்கள். 

ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் இருந்த மாற்று கட்சி முகவர் அச்சுறுத்தப்பட்டு கள்ள வாக்குக்கள் போடப்பட்டன.  சி. எக்ஸ் மாட்டினதும்  அருளம்பலத்தினதும் பல வாக்குசாவடி முகவர்கள் பல இடங்களில் தாக்கபட்டனர்.  மேற்கண்ட தகவல்களில்  சந்தேகம் இருந்தால் 1977 தேர்தல் நேரம் அங்கு இருந்த உங்களுக்கு தெரிந்த நபர்களின் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள்.

ஆகவே கள்ளவாக்கினால் வென்று அந்த மக்களையே அழித்த முதலாவது நபர் தமிழீழம் என்ற நபரே.   இந்த உண்மை பலருக்கு கசக்க தான் செய்யும்.  எனக்கும் அது கசக்கவே செய்கிறது. 

சரியான கருத்துப்பதிவு. இதை எத்தனை பேர்கள் ஏட்பார்களோ தெரியவில்லை. சிலருக்கு உண்மைக்கும் தேசியம் பேசுவதட்கும் வித்தியாசம் விளங்குவதில்லை. உண்மை சுடும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

1)  ஏன் போனார் என்று சுமந்திரன்தான் கூறவேண்டும். போன நேரம்தான் உங்கள் பிரச்சனையா ?  நள்ளிரவில் போகாமல் முன்னிரவில் போயிருந்தால் உங்களுக்குப் பிரச்சனை இல்லையா 😀

2) பெண்ணுக்கு விழுந்த வாக்கு என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள். யூகம்தானே 😀

3) சிறீதரன் கூறியவாறு சுமந்திரனும் ""நான் வாக்கு மோசடியிலீடுபட்டேன்"" என்று கூறினால் எல்லாம் சரியாகும் என்பதா உங்கள் வாதம். அல்லது தண்டிக்கப்பட வேண்டுமா 🤔

4) ஆணுக்கு விழுந்த வாக்குகளை மோசடி செய்யலாமா ☹️.  என்ன கூற விரும்புகிறீர்கள் பெண் என்பதனூடாக 🤔

5) இப்படி வாய்க்கு வந்தபடி கூறுவது அழகல்ல அம்மணி ☹️

6) முடிவே செய்துவிட்டீர்கள், சுமந்திரன் வாக்கு மோசடியிலீடுபட்டார் என்று. 😀

Okay , 

நீங்கள் கூறியபடி அவர் வாக்கு மோசடியில் ஈடுபட்டார் என்றே வைத்துக்கொள்வோமே. இந்த வாக்கு மோசடியையே தடுக்கவியலாத மற்றய வேட்பாளர்கள் அரசியலில் என்னதான் சாதிக்கப்போகிறார்கள் என்று நான் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும் ☹️ 

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத இந்த வேட்பாளர்கள் நாடாளுமன்றம் சென்று எங்களுக்கு என்ன வெட்டிக் கிழிக்கப்போகிறார்கள் ☹️

எனவே இந்த வேட்பாளர்கள் தாங்கள் கையாலாகாதவர்கள் என்று இந்த விடயத்திலேயே காட்டிவிட்டார்கள். இவர்கள்  நாடாளுமன்றம் போகாதிருப்பதே மேல் என்று கூறுகிறேன் நான். 😎

இதற்கு நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள் அம்மணி 🤔

 

 

1) முன்னிரவில் போயிருந்தால் மோசடியில் ஈடுபட்டு இருக்கேலாது.
2) இல்லை ...உண்மை 
3) சிறிதரன் கூறியது இந்த தேர்தல் நடப்பதற்கு முன்னர்... இருவருமே தண்டிக்க பட வேண்டும்.
4)  அந்த பெண் சிவனே என்று தானும் ,தனது  குடும்பமும் என்று இருந்தவர் ...அனுதாப வோட் எடுப்பதற்காக அவரை பயன்படுத்தி போட்டு அவருக்கு விழுந்த வோட்டை தங்களுக்கு மாத்தி எடுப்பது கேடு கெட்ட சீப்பான அரசியல் 😭
5) அவர் ஏன் அந்த அறைக்கு தன் அடியாளோடு போனார் என்று தெரிந்தும் அவருக்கு வக்காலத்து வாங்குவது எந்த விதத்தில் நியாயம் ஐயா?
6) 99% முடிவு செய்து விட்டேன்....மிகுதி 1 வீதம் அவர் ஏன் அந்த அறைக்கு ,அந்த நேரத்தில் போனார் என்று காரணம் சொன்னால் பரிசீலிக்கப்படும்.

அவர்கள் கிழிப்பது/கிழிக்காதது இருக்கட்டும் ...இவர் பார்லிமென்ட் போய் என்னத்தை இதுவரை கிழித்தார் ? அல்லது கிழிக்க போறார்?
இப்படி ஜெண்டில்மேன் வேசம் போடுவதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் 
 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

1) நன்றி எ.தமிழா

2) நீங்கள் யூகத்தின் அடிப்படையில் கருத்துரைக்கிறீர்கள். நானோ, யூகதின் அடிப்படையில் கருத்துரைப்பது சரியான அணுகுமுறையல்ல என்கிறேன். விமரிசனங்கள் தரம் தாழ்தவையாக இருக்கக் கூடாது என்பது என் கருத்து. 

தெளிவாகக் கவனியுங்கள். எந்த இடத்திலும் சுமந்திரன் சுத்தமானவர் என்றோ தவறு விடாதவரென்றோ நான் கூறவில்லை. சுமந்திரனின் கருத்துக்கள் சரியானவை என்று கூட வாதிடவில்லை. சிறீதரன் வாக்கு மோசடியிலீடுபட்டார் என்பதையிட்டுக்கூட நான் எதுவுமே கூறவில்லை. 

ஆனால் சுமந்திரன் விடயத்தில் காட்டப்படும் அதீத வெறுப்பிற்கு அவரின் தேசியம் தொடர்பான கருத்துக்கள் மட்டுமே காரணமல்ல என்று உறுதியாக நம்புகிறேன். 

உங்களுக்கு நான் வெளிப்படையாகக் கூறும் விடயம் இதுதான். 

1) தமிழர்களுக்கு பேரம் பேசும் உறுதியான தலைமை இருக்கக் கூடாது என்பதில் நிஜ  எதிரி கண்ணும் கருத்துமாக உள்ளான். அதில் தொடர்ச்சியான வெற்றியும் காண்கிறான்.

2) ஆளுமை உள்ள தலைமை எங்களுக்கு இருக்கக்கூடாது என்பது அவர்களின் தீர்மானம். 

3) பலவீனமான, திரும்பவும் எழுச்சி கொள்ள முடியாத சிறு சிறு குழுக்களாக தமிழர்களைப்  பிரித்து எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எங்களை ஒற்றுமையாக பலம்மிக்க சக்கியாக வர விடாமல் சிதறடிப்பது அவன் நோக்கம்.

4) இதற்காக சாதி சமயம் பிரதேசவாதங்களால் எங்களை சிதறடிக்கிறான்

5) எங்களை சிதறடித்து அழிப்பதற்கு மிகப்பெரிய நிகழ்ச்சி நிரலின்படி காரியங்கள் கனகச்சிதமாக நடைபெறுகின்றன. இதனை நான் பல தடவைகளில் பகிரங்கமாகவே கூறியுள்ளேன். பலவற்றை வெளியே பகிரங்கமாகக் கூற முடியாது.

6) எங்கள் ஊடகங்களில் மிகப்பெரும்பான்மையானவை அவனால் வழிநடாத்தப்பெறுகிறது. 

7) நீங்களெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் சுமந்திரன் சார்ந்துள்ள சமயம் என்பது சைவர்களுக்கெதிரானதென்று. ஆனால் அவர் சார்ந்துள்ள சமயம் Mainstream கிறீத்துவத்திற்கும் ( Catholic, CSI...) எதிரானதுதான். ஆனால் எங்களுக்கிடையே வளர்த்துவிடப்படும் சமய வெறுப்பிற்கு யார் தேசியத்திற்கு ஆதரவான கிறீத்துவர்கள் யார் எதிரான கிறீத்துவர்கள் என்கின்ற வேறுபாடு தெரியாது. பலியாகுவோர் இருபகுதியினருமே. இந்த இடத்தில்தான் நான் இங்கே ஆவேசமாக முன்வைக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையே யூகம்தான் என்று நிறுவ முற்படுவதனூடாக எல்லோரையும் சரியான பக்கத்திற்கு சிந்திக்கத் தூண்டுகிறேன். வாதிட்டு வெற்றிபெறுவதல்ல என் நோக்கம். 

கீழ்வரும் கேள்விக்கு பதில் தாருங்கள்.

கிறீத்துவன் என்கின்ற அடிப்படையில் சுமந்திரனுக்கெதிரான வெறுப்பூட்டிய பிரச்சாரம் நடைபெறுவதாக நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.  நாளை எனக்கெதிராக இந்த வெறுப்பு திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது ? 

ஏற்கனவே பகிரங்கமாக கிறீத்துவர்களுக்கெதிரான பரப்புரைகள் நடப்பதை நாம் எல்லோருமே பார்க்கிறோம். 

இந்த நிலை நாளை நிச்சயம் உச்சமடையும். அப்போது எனது நிலை என்ன ? எனக்குள்ள தெரிவுகள் என்ன ? 

எனது அச்சத்தைப் போக்குவீர்களா 🤔

 

 

 

எதற்கெடுத்தாலும்  மதத்தை கொண்டு வந்து புகுத்துவது உங்களைப் போன்றவர்கள் தான்.
என்னது கிறிஸ்தவர்களுக்கு எதிரான பரப்புரையா ?....ஆதாரம் இருக்கா காட்டுங்கள் பார்ப்போம்.
சும்  கிறிஸ்தவர் என்பதே பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்காது ...மக்களுக்கு தெரிய வந்ததிற்கு காரணம் அவரது மனைவி கிறிஸ்தவ சபையினுடாக மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்ட படியால் தான் 
தமிழர்களுக்காய் பேசக் கூடிய ஆளுமை உள்ள தலைவர் சுமத்திரன் என்று பல இடங்களில் எழுதுகிறீர்கள் .
நானும் எத்தனையோ இடங்களில் கேட்டு விட்டேன் ...உங்களிடம் பதில் இல்லை ...உண்மையில் அறிவதற்கு தான் கேட்கிறேன்.
இவர் எங்கேயாவது ஒரு இடத்தில் தமிழருக்காக கதைத்து இருக்கிறாரா? 
அவர்களது உரிமைகளை பெற்று கொடுக்க முயற்சி செய்து இருக்கிறாரா ?


 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

சரியான கருத்துப்பதிவு. இதை எத்தனை பேர்கள் ஏட்பார்களோ தெரியவில்லை.

நடந்தது உண்மை என்ன என்று அவர்களுக்கே தெரியும் அவர்கள் அந்த கால பகுதிகளில் இலங்கையில் இருந்திருக்காவிட்டாலும் உறவினர்கள் சொல்ல உண்மையை அறிந்திருப்பார்கள் ஆனால் புலுடா கதைகள் பேசி மகிழ்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில் சுமந்திரன் வென்று பாராளுமன்றம் போனார். கஜேந்திரன் தோற்றும் பாராளுமன்றம் போனார்! 

இவைதான் வரலாறு.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தமிழர்ளுக்காய் பேசக் கூடிய ஆளுமை உள்ள தலைவர் சுமத்திரன் என்று பல இடங்களில் எழுதுகிறீர்கள் .
நானும் எத்தனையோ இடங்களில் கேட்டு விட்டேன் ...உங்களிடம் பதில் இல்லை ...உண்மையில் அறிவதற்கு தான் கேட்கிறேன்.
இவர் எங்கேயாவது ஒரு இடத்தில் தமிழருக்காக கதைத்து இருக்கிறாரா? 
அவர்களது உரிமைகளை பெற்று கொடுக்க முயற்சி செய்து இருக்கிறாரா ?

எனக்கும் இந்த கேள்விகள் உண்டு..

தனக்கு எதிராக இத்தனை புகார்கள் வந்தும் அவர் நிதானம் தவறாமல் இருந்தமையால் ஆளுமைமிக்கவர் எனக்கூறலாமா?

சரி, முன்பு ரணிலை நம்பி ஏமாந்தவர் என்றால்.. இனியாவது தன்னை மக்கள் இன்னமும் வெறுக்காது இருக்கும்படி நடந்துகொள்ளமுயல்வாரா?

எங்களுடைய நிஜ எதிரியை எதிர்கொள்ளவேண்டுமானால், எல்லோருடைய நோக்கமும் ஒன்றாகவும், சில விட்டுக்கொடுப்புகளும் இருந்தால்தான் ஒரு அணியில் பயணிக்கலாம். ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் நையாண்டி செய்வதிலேயே காலத்தை வீண் செய்கிறோம்( நான் உட்பட). இவ்வளவு நடந்தும் நாங்கள் இன்னமும் முதிர்ச்சியடையவில்லை என்றே நினைக்கதோன்றுகிறது...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எதற்கெடுத்தாலும்  மதத்தை கொண்டு வந்து புகுத்துவது உங்களைப் போன்றவர்கள் தான்.
என்னது கிறிஸ்தவர்களுக்கு எதிரான பரப்புரையா ?....ஆதாரம் இருக்கா காட்டுங்கள் பார்ப்போம்.
சும்  கிறிஸ்தவர் என்பதே பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்காது ...மக்களுக்கு தெரிய வந்ததிற்கு காரணம் அவரது மனைவி கிறிஸ்தவ சபையினுடாக மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்ட படியால் தான் 
தமிழர்களுக்காய் பேசக் கூடிய ஆளுமை உள்ள தலைவர் சுமத்திரன் என்று பல இடங்களில் எழுதுகிறீர்கள் .
நானும் எத்தனையோ இடங்களில் கேட்டு விட்டேன் ...உங்களிடம் பதில் இல்லை ...உண்மையில் அறிவதற்கு தான் கேட்கிறேன்.
இவர் எங்கேயாவது ஒரு இடத்தில் தமிழருக்காக கதைத்து இருக்கிறாரா? 
அவர்களது உரிமைகளை பெற்று கொடுக்க முயற்சி செய்து இருக்கிறாரா ?
 

நான் ஆதாரங்களுடன் கருத்துக்களை முன் வைக்கிறேன். எனக்குள்ள  பயத்தை போக்குங்கள் என்கிறேன். நீங்களோ மதத்தைப் புகுத்துகிறீர்கள் என்கிறீர்கள் ☹️.

இங்குள்ள பலருக்கு உண்மை நிலவரம் தெரியும். ஆனால் கருத்தெழுதமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மனச்சாட்சியுள்ள மனிதர்கள். மனச்சாட்சியும் துணிவும் உள்ள நேர்மையானவர்கள் துணிந்து கருத்துரைப்பார்கள். வாதிடுவார்கள். 🙂

எனக்குப் பயமாக இருக்கிறது என்று கூறுகிறேன். நீங்கள் எப்படி இல்லை என்று கூறமுடியும் ☹️

நாங்கள் தெளிவாகச் சிந்திது தமிழர் நலன் சார்ந்து சிந்திக்காவிட்டால் அழிவு நிச்சயம். இதனை யாராலும் தடுக்க முடியாது. 😢

3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கும் இந்த கேள்விகள் உண்டு..

தனக்கு எதிராக இத்தனை புகார்கள் வந்தும் அவர் நிதானம் தவறாமல் இருந்தமையால் ஆளுமைமிக்கவர் எனக்கூறலாமா?

சரி, முன்பு ரணிலை நம்பி ஏமாந்தவர் என்றால்.. இனியாவது தன்னை மக்கள் இன்னமும் வெறுக்காது இருக்கும்படி நடந்துகொள்ளமுயல்வாரா?

எங்களுடைய நிஜ எதிரியை எதிர்கொள்ளவேண்டுமானால், எல்லோருடைய நோக்கமும் ஒன்றாகவும், சில விட்டுக்கொடுப்புகளும் இருந்தால்தான் ஒரு அணியில் பயணிக்கலாம். ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் நையாண்டி செய்வதிலேயே காலத்தை வீண் செய்கிறோம்( நான் உட்பட). இவ்வளவு நடந்தும் நாங்கள் இன்னமும் முதிர்ச்சியடையவில்லை என்றே நினைக்கதோன்றுகிறது...

தற்போதைய சூழலில் எங்களில் உள்ள ஆழுமை உள்ளவர்களில் சுமந்திரனும் ஒருவர். கஜேந்திரகுமார் போன்றவர்கள் தங்களை நிரூபிக்கவேண்டும். அதற்குச் சில காலம் எடுக்கலாம்.

ஆனால் நேர்மைக்குத்தான் பஞ்சம். 😤

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

1) முன்னிரவில் போயிருந்தால் மோசடியில் ஈடுபட்டு இருக்கேலாது.
2) இல்லை ...உண்மை 
3) சிறிதரன் கூறியது இந்த தேர்தல் நடப்பதற்கு முன்னர்... இருவருமே தண்டிக்க பட வேண்டும்.
4)  அந்த பெண் சிவனே என்று தானும் ,தனது  குடும்பமும் என்று இருந்தவர் ...அனுதாப வோட் எடுப்பதற்காக அவரை பயன்படுத்தி போட்டு அவருக்கு விழுந்த வோட்டை தங்களுக்கு மாத்தி எடுப்பது கேடு கெட்ட சீப்பான அரசியல் 😭
5) அவர் ஏன் அந்த அறைக்கு தன் அடியாளோடு போனார் என்று தெரிந்தும் அவருக்கு வக்காலத்து வாங்குவது எந்த விதத்தில் நியாயம் ஐயா?
6) 99% முடிவு செய்து விட்டேன்....மிகுதி 1 வீதம் அவர் ஏன் அந்த அறைக்கு ,அந்த நேரத்தில் போனார் என்று காரணம் சொன்னால் பரிசீலிக்கப்படும்.

அவர்கள் கிழிப்பது/கிழிக்காதது இருக்கட்டும் ...இவர் பார்லிமென்ட் போய் என்னத்தை இதுவரை கிழித்தார் ? அல்லது கிழிக்க போறார்?
இப்படி ஜெண்டில்மேன் வேசம் போடுவதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் 
 

நீங்கள் வீட்டில் கடைசிப் பிள்ளையா என்று ஒரு முறை கேட்டிருந்தேன். எனது யூகம் மிகச் சரி என நிரூபித்துவிட்டீர்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

தற்போதைய சூழலில் எங்களில் உள்ள ஆளுமை உள்ளவர்களில் சுமந்திரனும் ஒருவர். கஜேந்திரகுமார் போன்றவர்கள் தங்களை நிரூபிக்கவேண்டும். அதற்குச் சில காலம் எடுக்கலாம்.

ஆனால் நேர்மைக்குத்தான் பஞ்சம்

உண்மைதான்.. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இவர் எங்கேயாவது ஒரு இடத்தில் தமிழருக்காக கதைத்து இருக்கிறாரா? 
அவர்களது உரிமைகளை பெற்று கொடுக்க முயற்சி செய்து இருக்கிறாரா ?

இதுவரை இந்த மூவரையும் கேள்விகள் கேட்டால் ஒரு பதிலும் அவர்கள் எழுதுவதும் இல்லை அதை பற்றி கவலைப்படுவதும் கிடையாது தாங்கள்  சொல்லவந்த புளுகுகளை மட்டும் அவுட்டு விட்டுக்கொண்டு இருக்கிறார்கள் .

நான் நினைக்கிறன் உங்களுக்கும் தெரியாமல் யாழ் களத்தை  சுமத்திரன் அடியாள்கள் வாங்கி போட்டினம் போல் உள்ளது 😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Kapithan said:

நீங்கள் வீட்டில் கடைசிப் பிள்ளையா என்று ஒரு முறை கேட்டிருந்தேன். எனது யூகம் மிகச் சரி என நிரூபித்துவிட்டீர்கள் 😀

அட்ரா....அட்ரா......அட்ரா :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2020 at 06:16, ஈழப்பிரியன் said:

வழமையில் இது சிங்களப் பகுதிலே தலைவலி.
இம்முறை எமக்கு.

 எங்களுக்கு சிங்களத் தரகரினால் வந்த வினை.

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல் மதவாத சாயம் கிளப்பப்படுகிறது. சில கத்தோலிக்க குருவானவர்களே சுமந்திரனிடம் கேள்விகள் கேட்டாயிற்று. பிச்சைக்காரன் புண்போல ஒவ்வொன்றை தூக்கிக்கொன்டு வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

வழமைபோல் மதவாத சாயம் கிளப்பப்படுகிறது. சில கத்தோலிக்க குருவானவர்களே சுமந்திரனிடம் கேள்விகள் கேட்டாயிற்று. பிச்சைக்காரன் புண்போல ஒவ்வொன்றை தூக்கிக்கொன்டு வருவார்கள்.

கொஞ்சமாவது சிந்திக்கப் பழகுங்கள் சாத்தான். எனக்கு ஏற்பட்டுள்ள பயத்தைக் கூறியுள்ளேன். முடிந்தால் தெளிவுபடுத்துங்கள். 🙂

சுமந்திரனிடம் கேட்பதற்கு என்னிடமும் கேள்வ்கள் உள்ளன. உங்களிடமும் கேள்விகள் நிறையவே உள்ளன. 

அதற்காக நிறுவன மயப்படுத்தப்பட்ட எதிர்ப்பை சுமந்திரனுக்கெதிராக மேற்கொள்ளும்போது அதன் பின்னணியை அடையாளம் காணவேண்டிய தேவையை தட்டிக்கழிக்க முடியாது. 

உங்களுக்கு சிந்திக்கத் தெரியாஇட்டால் பிரச்சனையில்லை. ஆனால் கேள்வியே பிழை என்று தட்டிவிட்டுப் போக முடியாது ☹️

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது எழுத்துக்களில் பயம் தெரியவில்லை.  தாயக  கிறிஸ்தவர்களுக்கே அந்தப் பயம் இல்லாமல் கேள்வியும், விளக்கமும் கோருகிறார்கள் சுமந்திரனிடம். வாக்குப்போட்டவர்களும் அப்படி சிந்தித்து போடவில்லை யாருக்கும்.   நீங்கள் தான் தேவையில்லாமல் மதப்பிரச்சனையை உருவாக்கி விடுவீர்களா என்று பயமாக உள்ளது.  இங்குள்ள பிரச்சனை வாக்கு மோசடி பற்றியதும், சம்பந்தப்பட்ட்டவரின் கடந்தகால நிகழ்கால தவறான செயற்பாடுபற்றியதாகும். இங்கு யாரும் மதத்தைப்பற்றி கவலைப்படவில்லை. பிரச்சனையை திசை திருப்பி பிரிவினையை உருவாக்காதீர்கள். மக்கள் களைத்து விட்டார்கள் அவர்களை வாழ விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுமந்திரனால்; தேர்தலில் வாக்கு எண்ணும்போது ஏற்படுத்தப்பட்ட மோசடி தொடர்பாகப் பொதுவெளியில் கருத்துரைக்கும் மற்றும் உரையாடும் மக்களையும் ஊடகங்களையும்  அச்சுறுத்தி ஒரு சனநாயகப் படுகொலையை மேற்கொண்டுள்ளார். பொதுவெளியில் ஒருவர் தான் தவறுசெய்யாதவரெனில் அதனை ஆதாரபூர்வமதாக நிரூபிக்க முனையவேண்டுமேயன்றி கருத்துக்கூறுவோரை அச்சுறுத்துதல் சரியானதா? விமர்சனங்களையும்; குற்றச்சாட்டுகளையும் முதலில் மக்கள் வைக்கவில்லை என்பதைக் கருத்திலே கொள்ள வேண்டாமா? கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களில் ஒருவரான சித்தார்த்தனே குற்றம்சாட்டும்போது மக்கள் எப்படி நம்புவார்கள்? அப்படியென்றால் ஏன் சுமந்திரன் சித்தார்த்தனைக் கேட்கவில்லை அல்லது வழக்குப்போடவில்லை. அவரால் உண்மை தெரிந்த அந்தக்களத்தில் நின்ற ஒருவருக்கு எதிராக வழக்குப்போட முடியாதென்பதாலா?திட்டமிட்டு வாக்குமாற்றற் பித்தலாட்டத்தைச் செய்துவிட்டு மக்களை அச்சுறுத்துவது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. அப்படிச் செய்யவில்லையென்றால் அதை அங்கிருந்தோரைக் கொண்டே தெளிவுபடுத்தி நிரூபிக்க வேண்டும். 
அவர் தேர்தல் மோசடியில் ஈடுபட்டார் எனப்பெரும்பாலான மக்கள் நம்புககிறார்கள். அப்படியிருக்கும்போது இதனுள் மதத்தை இழுத்தவருவதை யாழ் களம் அனுமதிக்காதிருப்பதே நல்லது.

அரசியல்வாதிகளுக்கு அரசியல் விளையாட்டு. பாதுகாப்பும் சம்பளமும் கிம்பளமுமான வாழ்வு. பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவி மக்களே என்பதை இன்றும் புரியாதவர்களாக உள்ளோம் என்பது வெட்கத்திற்குரியது. யாழ்க கள நிர்வாகம் இந்தத்திரிக்குச் சற்றும்பொருத்தமற்ற மதம் சார்ந்து குறிப்புகளையும் கருத்துகளையும் அனுமதிக்கக் கூடதெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

குறிப்பு: தந்தை செல்வா ஒரு வேதக்காரர் ஆனால் அவரைத் தமிழினம் இன்று மனம்கொள்கிறது. ஏனென்றால் அவர் தமிழரது உரிமைகளுக்காகப் போராடியதோடு, கொள்கைக்கா நாடாளுமன்ற உறுப்புரிமையைத் துறந்து கொள்கைக்காக மக்களால் அமோக வெற்றிபெறச் செய்யப்பட்டவர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.