Jump to content

தியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத்தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலுக்கே இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வேண்டுகோளை அடுத்து, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகள் ஏற்பாடு செய்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் கடந்த சனிக்கிழமை (26-09-20) சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் நடைபெற்றது.

தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்தானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரின் முயற்சியையும், அவரது அழைப்பை ஏற்று பங்குபற்றிய அனைத்து 10 தேசிய கட்சித் தலைவர்களினதும் உணர்வுபூர்வமான பங்களிப்பை கொச்சைப்படுத்தியுள்ளதுடன், தமிழ் மக்களின் உணர்வலைகளை தொடர்ந்தும் புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.

தமிழரசுக் கட்சியில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் சுமந்திரன், ‘தமிழ் மக்களுக்கு திலீபனின் நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பெரிதாக இல்லை” எனக்கூறியமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

தமிழ் மக்களின் மீது கடுமையான அடக்கு முறையை ஏவி கோவில்களில் பூசை செய்வதையே கூட தடுத்துள்ள நிலையிலும், மக்கள் உண்ணாவிரதத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதையும் வெற்றிகரமாக சாதித்துள்ளனர்.

இந்நிலையில்,அஹிம்சை வழியில் போராடிய அஹிம்சாவாதியை நினைவு கூர்வது தமிழ் மக்களின் தார்மீக உரிமையும் கடமையும் என்பது தெளிவாக புலப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது தமிழ் தலைவர்கள் ஒன்றிணைவதில் அவதானம் தேவை என அறிக்கை வெளியிட்ட சுமந்திரன் தமிழ் தலைமைகளின் ஒற்றுமையை விரும்புகிறாரா?. இல்லையா? அல்லது தமிழர்கள் பலமடைவது சுமந்திரனின் இருப்பில் ஏதாவது பின்னடைவு ஏற்படும் என கருதுகிறாரா?

சுமந்திரன் யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்படுகின்றார்?சுமந்திரன் வடக்கு மக்களின் பிரதிநிதியா அல்லது தென்னிலங்கை மக்களின் பிரதிநிதியா?

தியாகி திலீபனின் நினைவு நாட்களை உணர்வுபூர்வமாக அனுசரிக்கும் புனித வாரத்தில் அதனைக் கொச்சைப்படுத்தும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ள கருத்தானது இந்த காலப் பகுதியில் வெளியிடப்பட்டிருப்பது மிகவும் வேதனைகுரிய விடயம்.

திலீபனின் நினைவு நாட்களில், திலீபன் தொடர்பில் ஆறுதலான வார்த்தைகளை கூறாவிட்டாலும், சிங்கள ஆட்சியாளர்களே உச்சரிக்காத வார்த்தையான நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற பெரிய உணர்வு மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் கூறுவதை எவராலும் ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.

அரச அடக்கு முறைக்கு எதிராக தமிழ் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்திரனிற்கு இருக்கின்றது.

எனினும் மக்களாகவே முன் வந்து தமது ஜனநாயக உரிமையை நிலை நிறுத்திய நடவடிக்கையை கொச்சைப்படுத்தியது என்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமாகும்.

தமிழ் தேசியக் கருத்துக்களை உச்சரிக்கும் தகுதி சுமந்திரனுக்கு இல்லை அல்லது அவரது தென்னிலங்கை அரசியல் உறவுகளிற்கு இடைஞ்சலாக இருக்கும் எனக் கருதினால், அவர் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி தென்னிலங்கை அரசியலுடன் ஒன்றிணைந்து செயற்படுவது சாலச் சிறந்தது எனவும் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/257181?ref=home-top-trending

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

சிங்கள ஆட்சியாளர்களே உச்சரிக்காத வார்த்தையான நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற பெரிய உணர்வு மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் கூறுவதை எவராலும் ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.

தமிழ்த் தேசியம் என்னும் சாயத்தைப் பூசிக்கொண்டு திரியும்   அரசாங்கத்தின் ஊதுகுழல் சுமந்திரன் அப்படிப் பேசினாற்தான், சிங்கள மக்களின் பாராட்டையும், அரசின் வெகுமதியையும் பெறமுடியும். அதே நேரம் அரசுக்கெதிரான செல்லத்தட்டும் அப்பப்ப தட்டி, தான் ஒரு தமிழ்த்  தேசியவாதியெனக் காட்டி, தனக்கென ஒரு ஏமாளிக்கூட்டத்தை உருவாக்கி வாக்கு மோசடி செய்ய முடியும். தன் இனத்தை அழிப்பவனுக்கு, இப்படி தன் மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி விளக்கமளித்து முண்டுகொடுப்பதன்மூலம்  தனது சந்ததியையும் அழிவுக்கு உட்படுத்துகிறார் என்பதை தெரியாமலே செய்கிறார்.  "நாங்கள் கொழும்பு வாசிகள்" என்று நினைக்கலாம். காலகாலமாய் கொழும்பையே பிறப்பிடமாகக் கொண்டவர்களே விரட்டியடிக்கப்பட்ட வரலாறுகளையும் சுமந்திரன் அறிந்து வைத்திருப்பது அவருக்கு நல்லது. 

Link to comment
Share on other sites

Quote

தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலுக்கே

தல,
மூலத்தை தரலாம் தானே. அல்லாவிட்டால்  சுமந்திரன் டக்லஸ்சை பாராளமன்றத்தில் திட்ட, அவர் புகழ்த்தார் என்ற மாதிரி இருக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான ஆதாரம் இல்லாமல் இதற்கு கருத்துக் கூற முடியாது. ஏற்கனவே பல தடவை சூடு கண்டாயிற்று 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பத்திரிகைப் பேட்டியில், முள்ளி வாய்க்கால் அழிவிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும்,  தூண்டியதாகவும், போனவருடம் நீதிமன்றம் நினைவேந்தல் செய்ய அனுமதி அளித்தது என்றும், தானே நீதிமன்றத்தில் முன்னிலையாகி அனுமதியைப் பெற்றதாகவும், இந்த முறை தன்னை யாரும் நீதிமன்றம் செல்ல நாடவில்லை என்றும், போனவருடம் கொடுக்கப்பட்ட தீர்ப்பை நீதிபதிக்கு  நினைவுபடுத்தியிருந்தாலே அனுமதியைப் பெற்றிருக்கலாம் என பேட்டி அளித்திருந்தாராம் பொறுப்புள்ள தமிழ் மக்களின் பேச்சாளர். தனது  முக நூலிலும் பகிர்ந்திருந்தாராம். இது நான் அறிந்த செய்தி.

Link to comment
Share on other sites

வடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் -எம்.ஏ சுமந்திரன் MP

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றம் அனுமதி மறுத்த பின் சம்பந்தப்பட்டவர்கள் தன்னை நாடி வந்தார்கள் என்றும், ஆனால் காலம் கடந்து விட்டது, அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்றாராம். தானே ஆஜர் ஆகி இருந்தாலும் அனுமதி கிடைக்காது என்று ஒதுங்கி இருந்து விட்டு, பின்னர் தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக அப்படிக் கூறி இருக்கலாம். அஷ்ரபின் மறைவு  நினைவுக்கு போன அவருக்கு, நம் இனத்தின் விடியலுக்காய் தன்னை உருக்கி இறந்த ஒருவரை நினைவு கூர மறந்து போய்விட்டதா? அல்லது நினைவு கூர விரும்பவில்லைலையா?   நீதிமன்றம் அனுமதி  மறுத்தபோது போது, யாரும் தேடி வரட்டும் என்று காத்திருக்கும்  ஒருவர் நம் இனத்தின் சார்பாய் தானாக பேசுவாரா?   வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் சாதாரண வக்கீலாகவே அவரை நான் காண்கிறேன்.

Link to comment
Share on other sites

6 minutes ago, satan said:

நீதிமன்றம் அனுமதி மறுத்த பின் சம்பந்தப்பட்டவர்கள் தன்னை நாடி வந்தார்கள் என்றும், ஆனால் காலம் கடந்து விட்டது, அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்றாராம். தானே ஆஜர் ஆகி இருந்தாலும் அனுமதி கிடைக்காது என்று ஒதுங்கி இருந்து விட்டு, பின்னர் தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக அப்படிக் கூறி இருக்கலாம். அஷ்ரபின் மறைவு  நினைவுக்கு போன அவருக்கு, நம் இனத்தின் விடியலுக்காய் தன்னை உருக்கி இறந்த ஒருவரை நினைவு கூர மறந்து போய்விட்டதா? அல்லது நினைவு கூர விரும்பவில்லைலையா?   நீதிமன்றம் அனுமதி  மறுத்தபோது போது, யாரும் தேடி வரட்டும் என்று காத்திருக்கும்  ஒருவர் நம் இனத்தின் சார்பாய் தானாக பேசுவாரா?   வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் சாதாரண வக்கீலாகவே அவரை நான் காண்கிறேன்.

முகம் அடிபட விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்தது ஹர்த்தாலைப்பற்றியது, தவராசா கூறுவது தியாகி திலீபனின் நினைவு கூரல், 
நீதிமன்ற அனுமதி மறுப்பு பற்றியது.

2 hours ago, பெருமாள் said:

திலீபனின் நினைவு நாட்களில், திலீபன் தொடர்பில் ஆறுதலான வார்த்தைகளை கூறாவிட்டாலும், சிங்கள ஆட்சியாளர்களே உச்சரிக்காத வார்த்தையான நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற பெரிய உணர்வு மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் கூறுவதை எவராலும் ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.

 

Link to comment
Share on other sites

Quote

நீங்கள் இணைத்தது ஹர்த்தாலைப்பற்றியது, தவராசா கூறுவது தியாகி திலீபனின் நினைவு கூரல், 
நீதிமன்ற அனுமதி மறுப்பு பற்றியது.

தயவு செய்து சுமந்திரன்  சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கியதாக கூறப்படும் நேர்காணலை இணையுங்கள்.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

Link to comment
Share on other sites

தமிழர்களின் உணா்வுகளை கொச்சைப்படுத்துவது தமிழினத்திற்கு செய்யும் துரோகம்! சுமந்திரனின் கருத்துக்கு கே.வி தவராசா கண்டனம் .

அரச அடக்கு முறைக்கு எதிராக நம் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் திரு.சுமந்திரனிற்கு இருந்த போதிலும் மக்களாகவே முன் வந்து தமது ஜனநாயக உரிமையை நிலை நாட்டியதை கொச்சைப்படுத்தியது தமிழினத்திற்கு செய்யும் துரோகமாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத்தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய கே.வி.தவராசா தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தொிவித்ததாவது,

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வேண்டுகோளையடுத்து “தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் (26-09-2020) நடாத்தியது .

தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு அந்த அளவிற்கு மக்களிடையே காணப்படவில்லை என திரு.சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியமையானது தமிழரசுக் கட்சியின் தலைவரின் முயற்சியையும் அவரது அழைப்பை ஏற்று பங்குபற்றிய அனைத்து 10 தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்களினதும் உணர்வு பூர்வமான பங்களிப்பை கொச்சைப்படுத்தியதாக அமைவதோடு தமிழ் மக்களின் உணர்வலைகளை தொடர்ந்தும் புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.

தமிழ் அரசுக் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்து கொண்டு ‘தமிழ் மக்களுக்கு திலீபனின் நினைவேந்தலை செய்யவேண்டும் என்ற உணர்வு அந்த அளவிற்கு இல்லை’ என்று திரு. சுமந்திரன் கூறியமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். தமிழ் மக்களின் மேல் கடுமையான அடக்கு முறையை பாவித்து கோவில்களில் பூசை செய்வதையே தடுத்துள்ள நிலையிலும் மக்கள் உண்ணாவிரதத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பிலும் வெற்றிகரமாக சாதித்துள்ளனர். இந்நிலையில் அஹிம்சை வழியில் போராடிய அஹிம்சாவாதியை நினைவு கூர்வது தமிழ் மக்களின் தார்மீக கடமை என்பது தெளிவாக தெரிகிறது.

என தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

https://newuthayan.com/தமிழர்களின்-உணா்வுகளை-கொ/

Link to comment
Share on other sites

தவராசாவுக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்ற கதிரை கிடைப்பதற்கு சுமந்திரன் தடையாக இருந்ததனால் சுமந்திரனை அரசியலில் இருந்து ஒதுக்க தான் முயற்சிப்பதாக தவராசாவே எழுதி எங்கேயோ படித்த நினைவு - யாராவது இதை படித்த ஞாபகம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

தயவு செய்து சுமந்திரன்  சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கியதாக கூறப்படும் நேர்காணலை இணையுங்கள்.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

உங்க ஆள் நேரத்துக்கு ஒன்று கதைப்பவர் உங்கள் ஸ்ரைலில் சொல்கிறம்  தேடி பார்த்து எடுத்து கொள்ளுங்க .

கனடாவில் இருந்து வந்த 21 கோடி எங்கு என்று கணக்கு கேட்ட ஆட்களை கேஸ் போட்டு வெருட்டும் ஆள் இப்படி சொல்லாத ஒன்றை தமிழ் ஊடகங்கள் வெளியிட்டன என்றால் அவருக்கு அல்வா கிடைத்தது போல் கிளம்பிடுவார் கேஸ் போட 😁

3 hours ago, கற்பகதரு said:

தவராசாவுக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்ற கதிரை கிடைப்பதற்கு சுமந்திரன் தடையாக இருந்ததனால் சுமந்திரனை அரசியலில் இருந்து ஒதுக்க தான் முயற்சிப்பதாக தவராசாவே எழுதி எங்கேயோ படித்த நினைவு - யாராவது இதை படித்த ஞாபகம்?

இங்கு தீபனை சுமத்திரன் தன் எழும்புநக்கி அரசியலுக்கு அவதூறு செய்தமையே திரி இதுக்குள் தவராசா என்ன செய்தார் என்பதல்ல முக்கியம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, zuma said:

முகம் அடிபட விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.

அதனால் தான் மீசையை வழித்து விட்டு சுமத்திரன் திரிகிறார் ஆக்கும் .

சிங்களவரே திலீபனை தவறாக சொல்லவில்லை இவருக்கு ஏன் இந்த வேண்டா வேலை வசந்த புறத்தில் கக்கூசு கட்டுவதுடன்  வாயை  வைத்துக்கொண்டு இருக்க சொல்லுங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நினைவேந்தலும் ஒரு அமைப்பு ஒழுங்கு செய்தால் தான் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் ....மகாத்மா காந்திக்கே அப்படி தான் எதாவது அமைப்பு தான் ஒழுங்கு செய்யும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

தவராசாவுக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்ற கதிரை கிடைப்பதற்கு சுமந்திரன் தடையாக இருந்ததனால் சுமந்திரனை அரசியலில் இருந்து ஒதுக்க தான் முயற்சிப்பதாக தவராசாவே எழுதி எங்கேயோ படித்த நினைவு - யாராவது இதை படித்த ஞாபகம்?

முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு அடுத்து, தவராசாவை  தனக்கு சவாலாக சுமந்திரன் நினைக்கிறார். அப்படி தவராசா சுமந்திரன் மேல் இல்லாத ஒரு குற்றச்சாட்டை சுமத்த முடியாது. அவரும் ஒரு சட்டத்தரணி.  ஒரே நேரத்தில் பலவாறு பேசி எஜமானரை குளிர்விப்பதும், மக்களை குழப்புவதும் குழப்பிகளின், சுயநலவாதிகளின் தந்திரம். தம்மை மக்கள்  அடையாளம் கண்டுபிடிக்காதபடி இப்படி மாற்றி, மழுப்பி பேட்டியளிப்பார்கள். இது சுமந்திரனுக்கு ஒன்றும் புதிதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

சுமந்திரனுக்கு காவடி ஆடியவர்களை 
மீண்டும் வேறொரு திரியில் காணலாம் 
மீண்டும் சிந்திப்போம்  சொறி சந்திப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயல்; கே.வி.தவராசா கடும் கண்டனம்

 

“தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என திரு.சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரின் முயற்சியையும் அவரது அழைப்பை ஏற்று பங்குபற்றிய அனைத்து 10 தேசிய கட்சித் தலைவர்களினதும் உணர்வு பூர்வமான பங்களிப்பை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் தமிழ் மக்களின் உணர்வலைகளை தொடர்ந்தும் புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது” தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வேண்டுகோளை அடுத்து, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகள் ஏற்பாடு செய்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் நடைபெற்றது.

தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என திரு.சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்தானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரின் முயற்சியையும் அவரது அழைப்பை ஏற்று பங்குபற்றிய அனைத்து 10 தேசிய கட்சித் தலைவர்களினதும் உணர்வு பூர்வமான பங்களிப்பை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் தமிழ் மக்களின் உணர்வலைகளை தொடர்ந்தும் புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.

தமிழரசுக் கட்சியில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் சுமந்திரன், ‘தமிழ் மக்களுக்கு திலீபனின் நினைவேந்தலை செய்யவேண்டும் என்ற உணர்வு பெரிதாக இல்லை” எனக்கூறியமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். தமிழ் மக்களின் மீது கடுமையான அடக்கு முறையை ஏவி கோவில்களில் பூசை செய்வதையே கூட தடுத்துள்ள நிலையிலும் மக்கள் உண்ணாவிரதத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதையும் வெற்றிகரமாக சாதித்துள்ளனர்.

இந்நிலையில் அஹிம்சை வழியில் போராடிய அஹிம்சாவாதியை நினைவு கூர்வது தமிழ் மக்களின் தார்மீக உரிமையும் கடமையும் என்பது தெளிவாக புலப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது தமிழ் தலைவர்கள் ஒன்றிணைவதில் அவதானம் தேவை என அறிக்கை வெளியிட்ட சுமந்திரன் தமிழ் தலைமைகளின் ஒற்றுமையை விரும்புகிறாரா?. இல்லையா? அல்லது தமிழர்கள் பலமடைவது சுமந்திரனின் இருப்பில் ஏதாவது பின்னடைவு ஏற்படும் என கருதுகிறாரா?. சுமந்திரன் யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்படுகின்றார்?. சுமந்திரன் வடக்கு மக்களின் பிரதிநிதியா அல்லது தென்னிலங்கை மக்களின் பிரதிநிதியா?

தியாகி திலீபனின் நினைவு நாட்களை உணர்வு பூர்வமாக அனுசரிக்கும் புனித வாரத்தில் அதனைக் கொச்சைப்படுத்தும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ள கருத்தானது இந்த காலப் பகுதியில் வெளியிடப்பட்டிருப்பது மிகவும் வேதனைகுரிய விடயம்.

திலீபனின் நினைவு நாட்களில், திலீபன் தொடர்பில் ஆறுதலான வார்த்தைகளை கூறவிட்டாலும் சிங்கள ஆட்சியாளர்களே உச்சரிக்காத வார்த்தையான நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற பெரிய உணர்வு மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் கூறுவதை எவராலும் ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.

அரச அடக்கு முறைக்கு எதிராக தமிழ் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்திரனிற்கு இருக்கின்றது. எனினும் மக்களாகவே முன் வந்து தமது ஜனநாயக உரிமையை நிலை நிறுத்திய நடவடிக்கையை கொச்சைப்படுத்தியது என்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமாகும்.

தமிழ் தேசியக் கருத்துக்களை உச்சரிக்கும் தகுதி சுமந்திரனுக்கு இல்லை அல்லது அவரது தென்னிலங்கை அரசியல் உறவுகளிற்கு இடைஞ்சலாக இருக்கும் எனக் கருதினால், அவர் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி தென்னிலங்கை அரசியலுடன் ஒன்றிணைந்து செயற்படுவது சாலச் சிறந்தது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத்தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.ilakku.org/தியாகி-திலீபனை-கொச்சைப்ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, zuma said:

தயவு செய்து சுமந்திரன்  சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கியதாக கூறப்படும் நேர்காணலை இணையுங்கள்.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

 

3 hours ago, குமாரசாமி said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 

சிலருக்கு நாக்கில் சனி.

சுமந்திரனுக்கு நாக்கே சனி.

இது மமதையால் விளையும் பேச்சு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது "உசார் ரீம்" ஒருவர் கேட்கும் போது பல உணர்வுகளை ஏற்படுத்தும். "அந்த அளவுக்கு இருப்பதாக தெரியவில்லை!" என்று ஒப்பீட்டு ரீதியில் பேசுகிறார். வழக்கம் போல இது உசார் ரீமின் பிரச்சினை, சும் எப்போதும் போல தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இது "உசார் ரீம்" ஒருவர் கேட்கும் போது பல உணர்வுகளை ஏற்படுத்தும். "அந்த அளவுக்கு இருப்பதாக தெரியவில்லை!" என்று ஒப்பீட்டு ரீதியில் பேசுகிறார். வழக்கம் போல இது உசார் ரீமின் பிரச்சினை, சும் எப்போதும் போல தான்!

 முதலாவது வக்காலத்து.😎

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

 

அண்ணை மிச்சம் எங்கை, சும்மா வெட்டி, ஒட்டி கயிறு திரிக்கின்ற விளையாட்டு வேண்டாம் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.