Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனக்கு வருத்தம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி புதுபுது adventure களை செய்து, உங்கள் வீட்டுக்காரரையும், பிள்ளைகளையும் எப்போதும் ஒரு பரபரப்பில் வைத்திருப்பதால், உங்களால் வீட்டில் நல்லா பொழுதுபோகும் போலுள்ளது. 😛

பல முனைகளிலிருந்து கேள்விகளும், பதில்களும் வருவதும் அதற்கு நீங்களும் சீரியஸாக பதில் சொல்வதையும் பார்க்கும்போது "பசங்க" படத்தில் வரும் இந்தக் காட்சி ஞாபகத்திற்கு வருகிறது..!

மீண்டு வந்தீர்கள், (உங்களை கிண்டலடித்தாலும்) யாழ்களமும் கலகலப்பாகிவிட்டது. 🤪

Stay blessed..

 

சிரிச்சு முடியலை அண்ணா. மூத்த மகள் அடிக்கடி சொல்வாள் அம்மா graw up என்று. வீட்டில் பொழுதுபோக நிறைய இருக்கு. நன்றி அண்ணா 😀

  • Replies 110
  • Views 14.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

அப்படியென்றால் சித்த வைத்தியம் பொய்யா? சித்தர்கள் பல்வெறு பிணிதீர்க்கும் ரகசியங்களை விட்டு சென்றுள்ளார்களே? பலவ‌யேதிபர்கள் தங்கபஸ்பம், குங்முமபூ, செம்பருத்திபூ போன்றவவை  சாப்பிட்டு இன்றும் நிமிர்ந்து ஆரோக்கியமாக நிற்கின்றார்களே?

கொழும்பான், இது நீங்கள் யாரைக் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது:

 சித்த மருத்துவர்கள் பிணி தீர்க்கும் இரகசியங்கள் தங்கள் வைத்தியத்தில் இருப்பதாகச் சொல்வார்கள்.

ஆங்கில மருத்துவர்களும் (அவர்கள் பக்கம் நிற்கும் என் போன்றவர்களும்) உரிய மருத்துவ/ விஞ்ஞானப் பொறிமுறை மூலம் பரிசோதிக்கப் படாத சித்த மூலிகைகள் நம்பிக்கையான மருந்துகளாக முடியாத என்பது மட்டுமல்ல, நஞ்சாகவும் கூடும் என்பார்கள்.

சில பாரம்பரிய  உணவுப் பொருட்களை பலன் தருமென்று எடுத்துக் கொள்வதில் மருத்துவ பயன் இல்லாவிட்டாலும் ஆபத்தில்லை! ஆனால் முன் பின் தெரியாதவர்களால் சந்தைப் படுத்தப் படும் கலவைகளை தவிர்க்க வேண்டுமென்றே சுமேயின் அனுபவம் சொல்கிறது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

அப்படியென்றால் சித்த வைத்தியம் பொய்யா? சித்தர்கள் பல்வெறு பிணிதீர்க்கும் ரகசியங்களை விட்டு சென்றுள்ளார்களே? பலவ‌யேதிபர்கள் தங்கபஸ்பம், குங்முமபூ, செம்பருத்திபூ போன்றவவை  சாப்பிட்டு இன்றும் நிமிர்ந்து ஆரோக்கியமாக நிற்கின்றார்களே?

 

9 hours ago, நந்தன் said:

கறுப்பன் குசும்புக்காரன். அக்காவ போட்டுத்தள்ள முடிவெடுத்திட்டான். 

உதுக்கெல்லாம் அசரமாட்டம் நாங்கள்

😀🤣😎

8 hours ago, puthalvan said:

வைத்தியர் ஒருநாளும் உங்களிடம் கடன் கேட்க வரமாட்டார். 

பாவம் மனுஷன். குற்றவாளியை கண்டவுடன் தண்டனையை நிறைவேற்றிப்போட்டுது! 🤣

நோயிலிருந்து மீண்டது சந்தோசம். அதுவும் இந்த கொரோன காலத்தில்.

 

வரவுக்கு நன்றி புதல்வா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி , உங்க‌ளை காண‌ வில்லை திரியிலும் தேடினேன் , உடம்பை க‌வ‌ண‌மாக‌ பார்த்து கொள்ளுங்கோ , 

நன்றி பையா

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2020 at 10:15, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழில் உங்களைத் தேடீனம் என்று ஒரு உறவு மெசெஞ்சரில் செய்தி அனுப்பத்தான் வந்து பார்த்தால் யார் என்று புரிந்தது.

யாழில் அன்பானவர்கள் பலர் தேடினார்கள். நானும் ஒரு கோல் எடுத்துப் பார்ப்போம் (சாத்திரியின் புண்ணியத்தில நம்பர் இருக்குத்தானே😁) என்று நினைத்தேன். எதுக்கும் கோல் எடுக்கமுதல் முகப்புத்தகத்தை செக் பண்ணுவம் என்று பார்த்தால் “என்னைப் பிடித்த பீடை தொலைந்தது” என்று சந்தோசமாக சுவரில் இருந்தது. ஏன் சந்தோசத்தைக் கெடுப்பான் என்று ஃபோன் பண்ணவில்லை!!!

ஆனால் சில நிமிடங்களில் நிழலி கதைத்திருந்தார் என்று அவர் போட்ட பதிவில்  தெரிந்தது😃

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டு மீண்டும் யாழுக்கு வந்தீங்க பாருங்க.. அங்க தான் இருக்கு உங்கள் மனத்தைரியம். மன உறுதியும் நல்ல மருந்தாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

வாட்சப் , முகநூல் போன்றவற்றில் வரும் தகவல்களை ஆதாரமாக வைத்துக்  கதைப்பவர்களுடன் நான் பொதுவாக முரண்படுவந்துண்டு.
நீங்கள் உரிய நேரத்தில் மருத்துவமனை சென்று மேலும் பாதிப்படையாமல் தப்பியதில் மகிழ்ச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2020 at 19:41, கிருபன் said:

யாழில் அன்பானவர்கள் பலர் தேடினார்கள். நானும் ஒரு கோல் எடுத்துப் பார்ப்போம் (சாத்திரியின் புண்ணியத்தில நம்பர் இருக்குத்தானே😁) என்று நினைத்தேன். எதுக்கும் கோல் எடுக்கமுதல் முகப்புத்தகத்தை செக் பண்ணுவம் என்று பார்த்தால் “என்னைப் பிடித்த பீடை தொலைந்தது” என்று சந்தோசமாக சுவரில் இருந்தது. ஏன் சந்தோசத்தைக் கெடுப்பான் என்று ஃபோன் பண்ணவில்லை!!!

நன்றி நன்றி 😀

23 hours ago, nedukkalapoovan said:

மீண்டு மீண்டும் யாழுக்கு வந்தீங்க பாருங்க.. அங்க தான் இருக்கு உங்கள் மனத்தைரியம். மன உறுதியும் நல்ல மருந்தாகும். 

அது நிறையவே இருக்கு. அல்லது உங்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டு யாழில் தொடர்ந்து இருக்கமுடியுமா??😂

21 hours ago, Sabesh said:

வாட்சப் , முகநூல் போன்றவற்றில் வரும் தகவல்களை ஆதாரமாக வைத்துக்  கதைப்பவர்களுடன் நான் பொதுவாக முரண்படுவந்துண்டு.
நீங்கள் உரிய நேரத்தில் மருத்துவமனை சென்று மேலும் பாதிப்படையாமல் தப்பியதில் மகிழ்ச்சி

நன்றி சபேஷ்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎-‎11‎-‎2020 at 10:15, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மஞ்சள் காமாளை என்று சொல்லியபிறகு மூன்று நாளின் பின் கட்டில் இல்லை என்று கூறி என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ஆனாலும் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை கூப்பிட்டு இரத்தம் எடுத்தார்கள். மூன்றுவாரங்களாக ஒரே பத்தியச் சாப்பாடுதான். புதிய வேலை வீட்டிலிருந்து 10 நிமிடப்பயணம். எதற்கு வீட்டிலேயே சும்மா இருக்கவேண்டும். அதுபோக வேறு யாரையும் வேலைக்கு எடுத்தால் வேறு வேலை தேடவேண்டும் என எண்ணியபடி வைத்தியரிடம் வேலை செய்யலாமா என்று கேட்க, கடினமான வேலை இல்லை என்றால் செய்யலாம். அதுவும் இரண்டு நாட்கள் தான் என்கிறீர்கள் என்கிறார்.

அன்று மாலை வீட்டில் இருக்கும்போது தொலைபேசி இலக்கம் மறைத்தபடி( No Caller ID ) ஓர் போன் வருகிறது. நான் போனை எடுக்கவில்லை. பின்னர் புதிய இலக்கத்துடன் ஒரு அழைப்பு. யார் என்று பார்த்தால் யாழ்கள உறவு. என்ன அக்கா. இலக்கம் தெரிந்தால்த்தான் எடுப்பியளோ என்று கேட்கிறார். வேலைக்குப் போன அன்று கொஞ்சம் சனம் அதிகம். தொடர்ந்துதொலைபேசி அழைப்புக்களால் வந்த டென்ஷன் என்று இருக்க ஒரு போன் வருகிறது இலக்கம் மறைத்தபடி. எடுக்காமல் விடுவோம் என்று நினைக்க அடுத்தநாள் தமிழ்ப்பள்ளி. அது தொடர்பாகவும் சிலர் இப்படி இலக்கத்தை மறைத்து போன் செய்வது. எனவே எடுப்போம் என்று எண்ணி எடுத்தால் ஒரு பெண் குரல். நீங்கள் நிவேதாவோ என்று கேட்டதாகத்தான் நினைவு. ஏனெனில் அந்த போனை எடுத்த உடனேயே எனக்கு ஒரு கஸ்டமர் வந்துகொண்டிருக்கிறார். தொடர்ந்து போன் கதைக்காக கூடாது. எனவே அவசரமாக நீங்கள் யார் கதைக்கிறீர்கள்? "என்னைத் தெரியேல்லையோ " என்று கேட்க சினம் வருகிறது. இலக்கம் இல்லாமல் எடுத்ததுமல்லாமல் என்னைத்தெரியுதோ என்றால் ..... "நான் வேலையில நிக்கிறன். ஆர் கதைக்கிறீங்கள் எண்டு சொல்லுங்கோ பிறகு எடுக்கிறன்" என்று சொல்ல போன் கட் ஆகிட்டுது. ஆராய் இருக்கும் என்று மண்டையைப் போட்டு உடைச்சும் விளங்கவே இல்லை. யாழில் உங்களைத் தேடீனம் என்று ஒரு உறவு மெசெஞ்சரில் செய்தி அனுப்பத்தான் வந்து பார்த்தால் யார் என்று புரிந்தது.

மருத்துவமனை எனக்குத் தந்த மருத்துவ அறிக்கையில் "இவரின் நோய்க்குக் காரணம் இவர் அருந்திய மூலிகைத் தேநீர். இவர் தன்னைத் தானே நோயாளி ஆக்கிக்கொண்டார்" என்று இருக்க மனிசன் முதல் வேலையா நான் அரைச்சு வச்சிருந்த அத்தனை மூலிகைப் பொடிகளையும் குப்பையில் கொட்டிவிட்டார். எனக்கு வைத்தியர்கள் தந்த அறிக்கையில் நம்பிக்கை இல்லாமல் தலைமை வைத்தியரை தொடர்புகொள்கிறேன். மருந்து என்றால் எல்லாமே அளவுடன் இருக்க வேண்டும். எல்லாம் எல்லோருக்கும் ஏற்புடையதாகி விடாது. மூலிகை வைத்தியமும் இப்பிடி இப்பிடிச் செய்யவேண்டும் என்று இருக்க ஆளாளுக்கு You Tube இல் போடுவதைப் பாத்து நீங்களே வைத்தியம் செய்ய வெளிக்கிட்டால் தேவையில்லாத பிரச்சனைகள் தான் வரும் என்கிறார்.

அது யாரது எனக்கு முதல் நம்பர் மறைத்து தொலைபேசி எடுத்தவர் 🙂 பெருமாளோ 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

அது யாரது எனக்கு முதல் நம்பர் மறைத்து தொலைபேசி எடுத்தவர் 🙂 பெருமாளோ 😂

எப்பவும் பார் சந்தேகம்....😀

சுமோ யார் என்டு எழுதியிருக்கிறாவே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, MEERA said:

எப்பவும் பார் சந்தேகம்....😀

அது கூடவே பிறந்தது. 😎

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

எப்பவும் பார் சந்தேகம்....😀

சுமோ யார் என்டு எழுதியிருக்கிறாவே

அட சீ நீங்களே அது ஏன் நம்பர் மறைத்து அடித்தனீங்கள் 🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

அது யாரது எனக்கு முதல் நம்பர் மறைத்து தொலைபேசி எடுத்தவர் 🙂 பெருமாளோ 😂

ஒரு பத்து நிமிட நடைதான் அவவின் வீடு  ஏன் போன் எடுப்பான் அவவின் வீட்டுக்கு பக்கத்தில் நிறைய தமிழ் சனம்  போனை விட செய்தி வேகமா  வந்திடும் அனுமதியில்லாமல் இங்கு அவ இல்லாத நேரம் கதைக்க கூடாது என்று இருந்துவிட்டேன் . யாழ் நெருங்கிய உறவு அதே கதையை சொன்னபோது அப்படியா என்று கேட்டு விட்டு அமைதியாக இருக்கவேண்டி இருந்தது .  எப்படியும் சுகமாகி வந்து கதை  எழுதுவா என்ற நம்பிக்கை இருந்தது அதனால் அலட்டிக்கொள்ளவில்லை .

இவவின்  வீட்டுக்கு பக்கத்து மைதானத்தில்  காலை 5.30மணியளவில் இருந்து தமிழ் சனம்  கூட்டம் கூட்டமா நடைபயிற்சி போட்டிக்கு செய்யுதுகள் சிலதுகள் 35ஆயிரம் காலடி கவனிக்க பெண்கள்  சன்டே போன்ற நாட்களில்  கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கு மேலான  நடை நடந்து  உடம்பை கவனிக்குதுகள் இவ  என்னடா என்றால் பாலுமகேந்திரா நினைப்பில் அந்த கிரவுண்டை காலையிலும் மாலையிலும் விழுந்து விழுந்து  போனில் போட்டொ எடுத்து முகநூலில் போடுவதுடன் சரி பிறகு  வருத்தம் வராமல் என்ன செய்யிம் ?

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

ஒரு பத்து நிமிட நடைதான் அவவின் வீடு  ஏன் போன் எடுப்பான் அவவின் வீட்டுக்கு பக்கத்தில் நிறைய தமிழ் சனம்  போனை விட செய்தி வேகமா  வந்திடும் அனுமதியில்லாமல் இங்கு அவ இல்லாத நேரம் கதைக்க கூடாது என்று இருந்துவிட்டேன் . யாழ் நெருங்கிய உறவு அதே கதையை சொன்னபோது அப்படியா என்று கேட்டு விட்டு அமைதியாக இருக்கவேண்டி இருந்தது .  எப்படியும் சுகமாகி வந்து கதை  எழுதுவா என்ற நம்பிக்கை இருந்தது அதனால் அலட்டிக்கொள்ளவில்லை .

இவவின்  வீட்டுக்கு பக்கத்து மைதானத்தில்  காலை 5.30மணியளவில் இருந்து தமிழ் சனம்  கூட்டம் கூட்டமா நடைபயிற்சி போட்டிக்கு செய்யுதுகள் சிலதுகள் 35ஆயிரம் காலடி கவனிக்க பெண்கள்  சன்டே போன்ற நாட்களில்  கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கு மேலான  நடை நடந்து  உடம்பை கவனிக்குதுகள் இவ  என்னடா என்றால் பாலுமகேந்திரா நினைப்பில் அந்த கிரவுண்டை காலையிலும் மாலையிலும் விழுந்து விழுந்து  போனில் போட்டொ எடுத்து முகநூலில் போடுவதுடன் சரி பிறகு  வருத்தம் வராமல் என்ன செய்யிம் ?

 

பெருமாள்   ச்....சா .........!   👏

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

ஒரு பத்து நிமிட நடைதான் அவவின் வீடு  ஏன் போன் எடுப்பான் அவவின் வீட்டுக்கு பக்கத்தில் நிறைய தமிழ் சனம்  போனை விட செய்தி வேகமா  வந்திடும் அனுமதியில்லாமல் இங்கு அவ இல்லாத நேரம் கதைக்க கூடாது என்று இருந்துவிட்டேன் . யாழ் நெருங்கிய உறவு அதே கதையை சொன்னபோது அப்படியா என்று கேட்டு விட்டு அமைதியாக இருக்கவேண்டி இருந்தது .  எப்படியும் சுகமாகி வந்து கதை  எழுதுவா என்ற நம்பிக்கை இருந்தது அதனால் அலட்டிக்கொள்ளவில்லை .

இவவின்  வீட்டுக்கு பக்கத்து மைதானத்தில்  காலை 5.30மணியளவில் இருந்து தமிழ் சனம்  கூட்டம் கூட்டமா நடைபயிற்சி போட்டிக்கு செய்யுதுகள் சிலதுகள் 35ஆயிரம் காலடி கவனிக்க பெண்கள்  சன்டே போன்ற நாட்களில்  கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கு மேலான  நடை நடந்து  உடம்பை கவனிக்குதுகள் இவ  என்னடா என்றால் பாலுமகேந்திரா நினைப்பில் அந்த கிரவுண்டை காலையிலும் மாலையிலும் விழுந்து விழுந்து  போனில் போட்டொ எடுத்து முகநூலில் போடுவதுடன் சரி பிறகு  வருத்தம் வராமல் என்ன செய்யிம் ?

 

உண்மையாகவே  அவவுக்கு பக்கத்திலையா இருக்கிறீங்கள் ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்திருக்கலாம்😄 ...அது சரி நீங்கள் ஒவ்வொரு நாளும் நடக்க இந்த பாக்குக்கு போற நீங்களோ :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, ரதி said:

உண்மையாகவே  அவவுக்கு பக்கத்திலையா இருக்கிறீங்கள் ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்திருக்கலாம்😄 ...அது சரி நீங்கள் ஒவ்வொரு நாளும் நடக்க இந்த பாக்குக்கு போற நீங்களோ :unsure:

 தங்கச்சி!  தூண்டில் போட்ட போது எடுத்த படம். 😎

Angling Direct plans to reel in fishing rival Chapmans | Business | The  Times

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

உண்மையாகவே  அவவுக்கு பக்கத்திலையா இருக்கிறீங்கள் ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்திருக்கலாம்😄 ...அது சரி நீங்கள் ஒவ்வொரு நாளும் நடக்க இந்த பாக்குக்கு போற நீங்களோ :unsure:

பார்த்திருக்கலாம் இந்த கொரனோ நேரம்  தேவையில்லாமல் யாரையும் அனாவசியமாய் பீதியடைய வைக்க கூடாதல்லவா ?

நாம ஊரிலும் சரி இங்கும் சரி மிதிவண்டிதான் நடப்பதை விட நல்லது   சமீபத்தில் மவுண்டன் பைக் 21கியர் உள்ளது கையகப்படுத்தியது பெருமையான விடயமாக நினைக்கிறேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

அது யாரது எனக்கு முதல் நம்பர் மறைத்து தொலைபேசி எடுத்தவர் 🙂 பெருமாளோ 😂

பெருமாள் நேரில் கண்டாலே தெரியாதது போல் போகும் ஆள். எனக்கு ஏன் போன் செய்யப்போறார் ????🤣

16 hours ago, பெருமாள் said:

ஒரு பத்து நிமிட நடைதான் அவவின் வீடு  ஏன் போன் எடுப்பான் அவவின் வீட்டுக்கு பக்கத்தில் நிறைய தமிழ் சனம்  போனை விட செய்தி வேகமா  வந்திடும் அனுமதியில்லாமல் இங்கு அவ இல்லாத நேரம் கதைக்க கூடாது என்று இருந்துவிட்டேன் . யாழ் நெருங்கிய உறவு அதே கதையை சொன்னபோது அப்படியா என்று கேட்டு விட்டு அமைதியாக இருக்கவேண்டி இருந்தது .  எப்படியும் சுகமாகி வந்து கதை  எழுதுவா என்ற நம்பிக்கை இருந்தது அதனால் அலட்டிக்கொள்ளவில்லை .

இவவின்  வீட்டுக்கு பக்கத்து மைதானத்தில்  காலை 5.30மணியளவில் இருந்து தமிழ் சனம்  கூட்டம் கூட்டமா நடைபயிற்சி போட்டிக்கு செய்யுதுகள் சிலதுகள் 35ஆயிரம் காலடி கவனிக்க பெண்கள்  சன்டே போன்ற நாட்களில்  கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கு மேலான  நடை நடந்து  உடம்பை கவனிக்குதுகள் இவ  என்னடா என்றால் பாலுமகேந்திரா நினைப்பில் அந்த கிரவுண்டை காலையிலும் மாலையிலும் விழுந்து விழுந்து  போனில் போட்டொ எடுத்து முகநூலில் போடுவதுடன் சரி பிறகு  வருத்தம் வராமல் என்ன செய்யிம் ?

 

நாங்கள் எல்லாம் தினமும் விடியக்காலமை நடந்ததாலதான் இப்படியாவது இருக்கின்றம். நீஙகள் நான் போடுற படத்திலதான் நடக்கிறவையைப் பாக்கிறியள் எண்டு தெரியுது.

😂😀

செக்கில் பூட்டின மாடு கூட ஐந்து மணிநேரம் தொடர்ந்து நடக்காது. இதில ஐந்து மணிநேரம் நடக்கிறதா ........ ஆரோ உங்களூர்க் காரர் கதை விட்டிருக்கினம் உங்களுக்குத் பெருமாள் 😃

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெருமாள் நேரில் கண்டாலே தெரியாதது போல் போகும் ஆள். எனக்கு ஏன் போன் செய்யப்போறார் ????🤣

பெருமாளுடன் கதைக்கிறேன் என்று வேறு யாருடனோ கதைத்துவிட்டு இங்கு அதற்கென ஒரு திரியும் துறந்து தலையில் போட்ட குட்டு இன்னும் நோ  மாறவில்லை கொரனோ  முடியட்டும் ஒன்றுகூடல் வைத்தால் போச்சு .

 

19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் எல்லாம் தினமும் விடியக்காலமை நடந்ததாலதான் இப்படியாவது இருக்கின்றம். நீஙகள் நான் போடுற படத்திலதான் நடக்கிறவையைப் பாக்கிறியள் எண்டு தெரியுது.

விடிகாலையில்  சைக்கிளில் கோப்பிக்கடை போக அந்த கிரவுண்டை கடப்பது உண்டு நிறைய சனம் அதுவும் இந்த கொரனோவுக்கு பிறகு எங்கள்  சனம்  கூட்டம் கூட்டமாய்  கதைத்தபடி  நடப்பதை பார்த்துள்ளேன் அதில் நீங்கள்  நடப்பது எனக்கு தெரியாது .

 

19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

செக்கில் பூட்டின மாடு கூட ஐந்து மணிநேரம் தொடர்ந்து நடக்காது. இதில ஐந்து மணிநேரம் நடக்கிறதா ........ ஆரோ உங்களூர்க் காரர் கதை விட்டிருக்கினம் உங்களுக்குத் பெருமாள்

நானும் நம்ப வில்லை Calorie Counter Watches களின் ஸ்கிரீன் சொட் வாட்சப்பில் அனுப்பி இருந்தார்கள் இப்படியான கலோரி அளவிடும் கடிகாரம்கள் ஆப்ஸ் களை கிராக் பண்ணும் அளவுக்கு நம்ம சனம்  வளரவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna Herbal Tea😂😂😂

Funny animals running GIF - Find on GIFER

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎-‎11‎-‎2020 at 14:40, பெருமாள் said:

பெருமாளுடன் கதைக்கிறேன் என்று வேறு யாருடனோ கதைத்துவிட்டு இங்கு அதற்கென ஒரு திரியும் துறந்து தலையில் போட்ட குட்டு இன்னும் நோ  மாறவில்லை கொரனோ  முடியட்டும் ஒன்றுகூடல் வைத்தால் போச்சு .

பக்கத்தில் இருக்கிறவக்கு உங்கள யாரென்று தெரியாதா 😄
 

விடிகாலையில்  சைக்கிளில் கோப்பிக்கடை போக அந்த கிரவுண்டை கடப்பது உண்டு நிறைய சனம் அதுவும் இந்த கொரனோவுக்கு பிறகு எங்கள்  சனம்  கூட்டம் கூட்டமாய்  கதைத்தபடி  நடப்பதை பார்த்துள்ளேன் அதில் நீங்கள்  நடப்பது எனக்கு தெரியாது .

வீட்டில கோப்பி போட்டு தாறேல்லையோ ?
 

 

நானும் நம்ப வில்லை Calorie Counter Watches களின் ஸ்கிரீன் சொட் வாட்சப்பில் அனுப்பி இருந்தார்கள் இப்படியான கலோரி அளவிடும் கடிகாரம்கள் ஆப்ஸ் களை கிராக் பண்ணும் அளவுக்கு நம்ம சனம்  வளரவில்லை .

ஒரு மணிக்கூட்டைமாறி,மாறி  4,5 பேர் கட்டிக் கொண்டு நடப்பினமாக்கும் 
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு வாழ்க்கை பலரையும் மாத்தி உள்ளது தலைநிறைய பிரச்சனைகளுடன் எந்த நேரமும் ஓடிக்கொண்டு இருப்பவர்களால் பக்கத்தில் கடவுள் போனால் கூட கண்டுபிடிக்க முடியாது இவ்வளவுக்கும் நிவே அக்கா வீட்டில் வந்து புத்தகம் ஒன்றை பெற்று சென்றுள்ளா.

அதிகாலையில் எழுந்து கோப்பியோ தேநீரோ எப்பவாவது அமைதியாக  ரஸித்து குடித்து இருக்கிறீர்களா இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் ?  சாராயக்கடை பப்  போல் எனக்கு அந்த கோப்பி கடை .கொரனோ வந்த பின் அநேகமா வீட்டில்தான் .

14 hours ago, ரதி said:

ஒரு மணிக்கூட்டைமாறி,மாறி  4,5 பேர் கட்டிக் கொண்டு நடப்பினமாக்கும் 

உங்களுக்கு படிப்பித்த ஆசிரியரை யார் என்று சொல்லுங்க விழுந்து கும்பிடனும் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

வெளிநாட்டு வாழ்க்கை பலரையும் மாத்தி உள்ளது தலைநிறைய பிரச்சனைகளுடன் எந்த நேரமும் ஓடிக்கொண்டு இருப்பவர்களால் பக்கத்தில் கடவுள் போனால் கூட கண்டுபிடிக்க முடியாது இவ்வளவுக்கும் நிவே அக்கா வீட்டில் வந்து புத்தகம் ஒன்றை பெற்று சென்றுள்ளா.

அதிகாலையில் எழுந்து கோப்பியோ தேநீரோ எப்பவாவது அமைதியாக  ரஸித்து குடித்து இருக்கிறீர்களா இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் ?  சாராயக்கடை பப்  போல் எனக்கு அந்த கோப்பி கடை .கொரனோ வந்த பின் அநேகமா வீட்டில்தான் .

உங்களுக்கு படிப்பித்த ஆசிரியரை யார் என்று சொல்லுங்க விழுந்து கும்பிடனும் .

கோப்பிக் கடையில் போய் மினக்கெடுவதை அதிகாலையில் நேரத்திற்கு எழும்பினால் எமக்கு விருப்பமான தேனீரையோ,கோப்பியையே ரசித்து குடிக்கலாம் ...அதை விடுவம் கடையில் போய் குடிப்பது உங்களுக்கு சந்தோசம் என்றால் அதை ஏன் கெடுப்பான்tw_lol: 
 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2020 at 15:34, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன வருத்தம் என்று அறுதியிட்டுச் சொல்லவில்லைத்தான் என்னினும் என் வைத்தியர் கான்சர் என்று கூறியது மீண்டும் நினைவில் வந்து தொலைக்குது. எத்தினை பேருக்குத் திட்டியிருப்பன். சண்டைபிடிச்சிருப்பன். இப்பிடி அற்ப ஆயுளில் போகத்தானோ என்று மனம் எண்ண, எல்லாம் அனுபவிச்சிட்டாய் தானே என்று மனச்சாட்சி கேட்குது. எனக்குத் 80,90 வயதுவரை இருக்கிற ஆசை என்றுமே இருந்ததில்லை. ஆனால் இன்னும் ஒரு 10 ஆண்டுகளாவது வருத்த துன்பம் இல்லாமல் இருக்கவிட்டிருக்கலாம்தானே அந்தக் கடவுள் எண்டு மனம் திட்டுது. எதுக்கும் வீட்டை போனபிறகு டயரியில என்ன என்ன ஆசை இன்னும் தீராமல் இருக்கு எண்டு லிஸ்ட் போட்டால்த்தான் தெரியும். கீமோ செய்யாமல் எங்காவது முக்கியமாய் பார்க்கவேண்டிய இடத்துக்கு மனிசனையும் கூட்டிக்கொண்டுபோய் வந்தால் என்ன என்ற எண்ணம் எழுந்ததுமே கோதாரிவிழுந்த கொரோனாவால ஒரு இடமும் போக ஏலாது என்ற நினைப்பு வர அப்பத்தான் இதுக்குள்ள அந்தக் கொரோனா தொற்றினால் என் நிலை இன்னும் மோசமாகும் என்ற நினைப்புடன் என் பையைத் திறக்க மகள் உள்ளே வைத்திருந்த சிறிய Hand sanitizer கண்ணில் பட எடுத்து கைகளில் பூசிக்கொள்கிறேன்.

மேலும் இரண்டு மணிநேரம் போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு இருக்க நேரம் எப்படிப் போனது என்று தெரியவில்லை. எனக்கு ஸ்கானிங்க் இருக்கு என்று ஒருவர் வந்து அழைத்துப் போகிறார். அங்கும் அரை மணிநேரக் காத்திருப்பின்பின் உள்ளே என்னை அழைத்தவர் தன்னை வைத்தியர் மார்க் என்று அறிமுகம் செய்கிறார். ஒரு ஐந்து நிமிடங்கள் என் வயிற்றைக் கருவி மூலம் ஸ்கான் செய்துவிட்டு, நான் நினைக்கிறேன் உன் பித்தப் பையில்தான் எதோ பிரச்சனை இருக்கிறது என்கிறார். "அதில் கான்சரோ என்கிறேன்". "எனக்கு வடிவாகத் தெரியவில்லை. இதற்கென்று இருக்கும் வைத்தியர்கள் தான் சொல்ல வேண்டும்" என்றபடி அவரென்னை வெளியே அனுப்புகிறார். திரும்ப வைத்தியர்கள் என்னை அழைப்பார்கள் என்று எண்ணியபடி ஒரு மணிநேரம் காத்திருக்கிறேன். அது பலரும் வந்து போகும் இடமாக இருப்பதனால் அடிக்கடி கதவைத் திறக்க குளிர்கிறது. இரண்டு மணி நேரம் போனபின் ஒரு தாதி வந்து வேறு ஒரு பகுதிக்கு அழைத்துப் போய் அமரவைக்கிறார். மேலும் ஒரு மணி நேரத்தில் உள்ளே அழைக்க ஒரு வெளிநாட்டுக்கார வைத்தியர் இருக்கிறார்.

"வணக்கம் எப்படி இருக்கிறாய்"

" சரியான தண்ணீர்த் தாகம்"

" இப்ப தலை சுற்றலில்லையா"

" இல்லை. எனக்கு என்ன நோய்"

" உனக்கு liver இல் தான் பிரச்சனை"

"அதிலா கான்சர்"

" உனக்கு கான்சர் இல்லை. ஆனால் உன் ஈரல் சரியாகப் பாதிக்கப் பட்டிருக்கு"

" எனது வைத்தியர் சிறுநீர்ப் பையில் கான்சர் என்கிறாரே"

"உன் வைத்தியர் உன்னிடம் அப்படிச் சொல்லியிருந்தால் அது தவறு. ஒன்றை நிட்சயம் செய்யும் முன்னர் எப்படி அவர் ஒருவரிடம் அப்படிக் கூறலாம்"

" இப்பதான் எனக்கு நின்மதியாக இருக்கு"

" நீ அல்ககோல் குடிப்பாயா"

" இல்லை "

எப்பவாவது மனிசன் குடிக்கும்போது ஒருவாய் சுவைத்துப் பார்த்ததையம் சுவையான இனிப்பான வைன்களை ஒரு கொங்சம் குடித்ததை கூறுவதா விடுவதா என்று மனம் பதைத்து பின் வேண்டாம் என்று முடிவெடுக்கிறது.

" சிகரெட் பிடிக்கிறனியா"

" எங்கள் குடும்பத்திலேயே யாரும் அதைத் தொட்டுப் பார்ப்பதில்லை"

" கணவர் குழந்தைகளுடன் தானே வாழ்கிறாய்"

" ஓமோம் மூன்று குழந்தைகள்"

" வேலை செய்கிறாயா"

" ஒரு ஆண்டின்பின் கடந்த வாரம் தான் வேலை கிடைத்தது"

" கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதே. உன் கணவருடன் மட்டும் தானே உறவு கொள்கிறாய் "

" ஓம் ஏன் அப்பிடி ஒரு கேள்வி கேட்கிறாய் "

" ஏனென்றால் தொடர்ந்து குடிப்பவர்கள், புகை பிடிப்பவர்கள், பல ஆண்களுடன் உறவில் ஈடுபடுபவர்கள் இவர்களுக்குத்தான் கலீரலில் இப்படி தாக்கமேற்படும்"

" நான் இதற்குள் அடங்கவில்லையே. எப்படி எனக்கு இதுவந்திருக்கும் "

" இன்னும் ஒன்றும் உண்டு. அது நீ உண்ணும் உணவு. நீ வழக்கமாக என்ன உணவுகளை உண்கிறாய் "

" காலையில் ஓட்ஸ், சிறுதானியக் கஞ்சி அல்லது பாண். மதியம் சோறு கறிவகைகள். இரவு இடியப்பம், பிட்டு ...."

"என்ன குளிசைகள் பாவிக்கிறாய்"

"பிரஷர் தான் ஒரு மாதத்துக்கு முன் சரியான உச்சத்துக்குப் போய் ஐந்து நாட்கள் இங்குதான் இருந்தேன்"

" எத்தனை குளிசை எடுக்கிறாய் தினமும் "

"கடந்த வாரம் வரை ஒரு நாளைக்கு இரண்டு எடுக்கிறேன்"

" உன் கணவனுடன் உனக்குப் பிரச்சனையா"

" என் கணவர் பாவம் நல்லவர். என் நண்பர்கள் சிலருடன் தான் பிரச்சனை. கடனாகக் கொடுத்த பணத்தையும் திரும்பத் தராமல் தொலைபேசி இணைப்பையும்   துண்டித்து விட்டதனால் ஒரே டென்ஷன். அதனால் ஈரல் பாதித்திருக்குமா"

"இல்லை இல்லை. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. நல்ல காலம் இப்ப நீ மருத்துவமனைக்கு வந்தது. இன்னும் காலம் தாழ்த்தியிருந்தால் லிவர் இன்னும் பாதிப்படைந்திருக்கும்"

"முதல் ஸ்கான் செய்த வைத்தியர் ஏன் பித்தப்பையில் பிரச்சனை என்கிறார்"

அவர் சந்தேகப்பட்டார். மற்றப்படி நாம் இரண்டு வைத்தியர்கள் சேர்ந்து பார்த்தபின் தான் உனக்கு மஞ்சள்  காமாளை நோய் இருப்பது தெரிந்தது"

"மஞ்சள் காமாளையா"

"ஓம் நீ காலையில் என்ன குடிப்பாய்"

"கோப்பி குடிப்பேன்"

" வேறு என்ன என்ன உண்பாய் குடிப்பாய் என்று கூறு"

"ஒரு தடவை மட்டும் தான் கோப்பி. அதன்பின் வெறும் தேநீர் பலதடவை குடிப்பேன். பழங்கள் நிறைய உண்பேன். ஆனால் முன்னர் வெறும் வயிற்றில் முளை கட்டிய வெந்தையம் உண்பேன். இப்ப ஒரு மாத காலமாக வெறும்  வயிற்றில் இன்னொரு மூலிகைத் தேநீர் அருந்திவிட்டு அதன் பின்னர் வெந்தயம் உண்டு காலை உணவும் எடுத்துக் கொள்ளுவேன்"

"மூலிகைத் தேனீரா? என்ன மூலிகை"

"அதுவா பொறு எனக்குப் பெயர் பாடம் இல்லை"

எனது வாற்சப் குழுமத்தில் போய்த் தேடியெடுத்து அந்த you tube வீடியோவில் இருந்த பெயர்களைக் கூறுகிறேன்.

" வேப்பிலைப் பொடி - Neem leaf Powder, வெள்ளை மிளகு - White Pepper , கார்போக அரிசி- Babchi seeds , பறங்கிப்பட்டைச் சூரணம் - China Root Powder "

" இதை யார் உனக்குப் பரிந்துரை செய்தது"

" யாரும் எனக்குச் செய்யவில்லை. You Tube இல் பார்த்துவிட்டு நானாக இலங்கையிலிருந்து எடுப்பித்து அரைத்துப் பவுடராக்கிக் குடிக்கிறேன்"

" எந்தளவு குடித்தாய்"

" இரு மேசைக்கரண்டியளவு சுடுநீரில் போட்டு அவித்துக்குடித்தேன்"

"உன் வைத்தியரிடம் கலந்தாலோசிக்கவில்லையா"

" மூலிகைகள் உடலுக்கு நல்லதுதானே. அதனால் வைத்தியரிடம் கேட்கவில்லை"

" நான் நினைக்கிறேன் இந்த மூலிகைத்தேநீர் தான் உன் ஈரலைப் பாதிப்படையச்செய்திருக்கிறது. உன் வீட்டிலிருந்து  அதில் கொஞ்சம் எடுத்து வரச் சொல்கிறாயா "   

" அதற்கென்ன. இப்பவே கொண்டுவரச் சொல்கிறேன் " 

" இன்று நீ இங்குதான் தங்கவேண்டும். நாளை இன்னொரு ஸ்கான் இருக்கு"

"சரி இனி நான் ஏதாவது குடிக்கலாம் தானே"

"ஓம். வெளியே போய் இரு. உன்னை அழைத்துப் போவார்கள்.    

பவுடருக்கை china வேற இருக்கு. இவங்கள் வேறு காரணத்தால வருத்தம் வந்தாலும் இப்ப சைனாக் காரனைச் சாட்டப் போறாங்களே என்ற யோசனையோடு அமர்ந்திருக்க தாதி என்னை அழைத்துச்சென்று முன்பு இருத்திய கட்டிலடியில் கொண்டு சென்று விட்டுவிட்டு உனக்கு கோப்பியா? தேனீரா? என்கிறாள். தேநீரைத் தெரிவு செய்ததும் இன்னொரு உணவு பரிமாறும் பெண் ஒரு பெட்டியில் விதவிதமான sandwich ஐ கொண்டு மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு என்னிடம் வருகிறாள். என்னிடம் வரும்போது இரண்டே இரண்டுதான் எஞ்சிஇருக்கு. ஒன்று Tuna sandwich. மற்றையது சீஸ் மற்றும் பிக்கிள் வைத்தது என்று சொல்ல இரண்டாவதைத்தெரிவு செய்கிறேன். சாதாரணமாகவே வெளியே எங்கேயும் நான் sandwich உண்பதே இல்லை. tuna வைத்தது உண்டு லண்டனிலும் பாரிஸில் கார்டினோரிலும் ஏற்பட்ட ஒவ்வாமையின் பின் நான் உண்பதே இல்லை. இன்று வேறு வழியின்றி அதன் பெட்டியைப் பிரித்தால் சில்லிட்டுப் போய் இருக்கிறது அது.

 

 வரும் இன்னும்

 

வணக்கம் அக்கா !
சென்ற கிழமை வாசித்தபோது ஒரே சிரிப்பு 
பின்பு வேலையில் போயிருந்து உங்களைப்பற்றி நிறைய யோசித்தேன் 
இப்படி வெளிப்படையாக எழுதுவத்துக்கு  மிகுந்த முதிர்ச்சி வேண்டும் என்று எண்ணுகிறேன் 
தந்தை சாகும்போது எனது மனைவியை நான் இழுத்துக்கொண்டு இருந்தேன் என்று 
காந்தி தனது சுயசரிசையில் எழுதி இருப்பார் ......காந்தி நிலைக்கு நாங்கள் வளர்ந்தால் 
ஏன் எங்கள் பெயரை நாமே கெடுக்கவேண்டும் என்றுதான் யோசிப்போம் 
ஏன் யாருக்கும் தெரியாததை தானே எழுதி கொள்கிறார்கள் என்று யோசிப்பதுண்டு 
அப்படியொரு பக்குவம் உங்களிடமும் காணக்கூடியதாக இருக்கிறது. 

இவற்றை உண்மையில் பதிவு செய்யவேண்டும் 
முகநூலில் இருக்கும் எமக்கு படிப்பித்த சில ஆசிரியர்களே 
இவ்வாறான மொக்கு பதிவுகளை பகிருவதை பார்க்கும்போது 
எரிச்சல் வரும் மரியாதை காரணமாக எதையும் சுட்டி காட்ட முடிவதில்லை. 

வானவியல் பற்றி 
உடலைப்பற்றி 
மருத்துவம் பற்றி   
அறம்சார்ந்து வாழ்வை வாழ்தல் பற்றி  

எந்த கருவிகளும் அற்ற காலத்திலேயே எமது மூதையார் அக்கு வேறு ஆணிவேராக 
தமது வாழ்வை அர்ப்பணித்து எவ்வளவோ எழுதிவைத்தும் இருக்கும் எல்லாவற்றையும் 
தூக்கி எறிந்துவிட்டு ... உலகிலேயே இல்லாத ஒரு மதம் இந்துமதம் .. அதை பிடித்து தொங்கிக்கொண்டு 
இவ்வாறான கேடு கேட்ட்துகளையே சொந்த அறிவை பூட்டி வைத்துவிட்டு காவி திரிகிறார்கள் 
இதனால் ஒரு சமூகமே அழிந்துபோகிறது அறிவற்று போகிறது 
இதனால் வரும் அழிவுகளை நாங்கள் எழுதினால் பெரிதாக எடுபாடாது 
அதை நம்பி பட்டு தெளிந்தவர்கள் எழுதினால் ஓரளவு என்றாலும் சிந்திப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் வருத்தம்  தான், இந்த திரி இவ்ளோஓஓஒ ஓஓஒ ஓஓஒ ஓஓஒ ஓஓஒ நீளத்துக்கு இழுக்கணுமான்னு..! 🤔😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.