Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா: சமாளிக்கும் தமிழகம்... மருத்துவக் கட்டமைப்பில் `தமிழ்நாடு மாடல்’ - ஓர் அலசல்

Featured Replies

8 hours ago, குமாரசாமி said:

ஈழ போராட்டத்திற்கான ஆயுதங்கள் எப்படி வழிமறிக்கப்பட்டனவோ அது போல்தான் புலம்பெயர் மக்களின் நிதிகளும் முடக்கப்பட்டது.

அந்த நிதியை திருடியவர்கள் வேறு யாரும் அல்ல தமிழ் தேசியவாதிகளே. ஊழல் செய்வதில் தமிழ் தேசியவாதிகளும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இது உதாரணம். 

தென்னாசியா முழுவதும் உள்ள பொதுத்துறை ஊழல்களில் தமிழர்கள் விதிவிக்கானவர்கள் அல்ல தமிழ் தேசியவாதிகள் என்றால் அப்பழுகற்றவர்கள் அல்ல என்பதற்காகவே குறிப்பிட்டேன்.  

Edited by tulpen

  • Replies 130
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அந்த நிதியை திருடியவர்கள் வேறு யாரும் அல்ல தமிழ் தேசியவாதிகளே. ஊழல் செய்வதில் தமிழ் தேசியவாதிகளும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இது உதாரணம். 

தென்னாசியா முழுவதும் உள்ள பொதுத்துறை ஊழல்களில் தமிழர்கள் விதிவிக்கானவர்கள் அல்ல தமிழ் தேசியவாதிகள் என்றால் அப்பழுகற்றவர்கள் அல்ல என்பதற்காகவே குறிப்பிட்டேன்.  

இதுவரை இருந்த திமுக அதிமுக அரசுகள் ஊழல் செய்தன என்பது தான் இங்கு வாதம்.

இதற்குள் எதுக்கு தமிழ் தேசியத்தை அல்லது புலம்பெயர் அமைப்புகளை பார்த்து குரைக்கப்படுகிறது??

அதேநேரம் மிக மிக அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் ஊழல் லஞ்சம் அற்று புலிகளால் செய்யப்பட்ட ஆட்சி பற்றி நீங்கள் ஒருபோதும் மனச்சாட்சியுடன் பதிவிட்டதில்லை.

 

5 minutes ago, விசுகு said:

இதுவரை இருந்த திமுக அதிமுக அரசுகள் ஊழல் செய்தன என்பது தான் இங்கு வாதம்.

இதற்குள் எதுக்கு தமிழ் தேசியத்தை அல்லது புலம்பெயர் அமைப்புகளை பார்த்து குரைக்கப்படுகிறது??

அதேநேரம் மிக மிக அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் ஊழல் லஞ்சம் அற்று புலிகளால் செய்யப்பட்ட ஆட்சி பற்றி நீங்கள் ஒருபோதும் மனச்சாட்சியுடன் பதிவிட்டதில்லை.

 

தமிழ் தேசியவாதிகள் ஊழல் அற்ற நேர்மையாளர்கள் என்று வாதிடப்படும் கருத்துக்களுக்கு கொடுக்கப்பட்ட பதில் தான் அது. கருணாவின் பிரிவு   ஏற்பட்டிருக்காவிட்டால் கருணாவும் உங்கள் பார்வையில் நேர்மையும் அர்பணிப்பும் மிக்க  தியாகிதான். அங்கு நடந்த ஊழலும் வெளியே தெரியவராமல் மறைக்கப்பட்டிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

நான் 2000 ஆண்டுவரை தவறாமல் இந்தியா ருடே (தமிழ்) வாங்கிப்படிப்பதுண்டு. காசு கொடுத்து வாங்கியதால் எல்லா எழுத்துக்களையும் வாசிப்பேன். ஆனால் 2000 க்குப் பின்னர் தமிழக அரசியலில் ஈடுபாடு குறைந்துவிட்டது. இப்போது முக்கிய தலைவர்களைத் தவிர மற்றவர்களின் பெயரே தெரியாது. தெரியவேண்டிய தேவையும் இல்லை!

எங்கே நிறுவியிருந்தார்கள்? யார் peer review செய்தது?🤥

கிர்பன் நீங்கள் இந்தியா ருடேயை கிண்டல் செய்கிறீர்களா, இல்லை உண்மையாக கூறுகிறீகளா? உண்மையாக எழுதுகிறீர்கள் என்றால் என்னைப்பொறுத்தவரை இப்போதுள்ள சமூக ஊடகங்களின் மூத்த அண்ணன் இந்தியா ருடே என்பது என் கருத்து, இந்திய இராணுவத்தினால் நடத்தப்பட்ட  வல்வைப்படுகொலையை நேரடியாக வந்து செய்தி சேகரித்து சென்ற இந்திய ருடே இந்திய இராணுவ படுகொலையை மூடி மறைத்து இந்திய இராணுவத்திற்கு வெள்ளை அடிக்கும் முய்ற்சியில் ஈடுபட்டது, அது ஒன்றும் மோசமான குற்றமல்ல மேற்கு நாடுகளிலும் ஊடகத்துறையிலுள்ளவர்களும் இதே மாதிரி கொள்கைகளை கடைப்பிடிக்கிறார்கள்,  அவுஸ்திரேலியாவில் வானொலி துறையில் தற்போது பிரபலமாகவுள்ள பென் போட்டம் 2009 ஆண்டில் அனைத்து செய்திகளையும் அப்படியே வெளியிடுவது ஊடகத்தர்மம் அல்ல என்று கூற்யிருந்தார், தமது அரசுக்கு எதோ ஒரு புள்ளியில் தொந்தரவு கொடுக்கும் செய்திகளை ஊடகவியலாளர்கள் தவிர்ப்பதுண்டு, 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

கிர்பன் நீங்கள் இந்தியா ருடேயை கிண்டல் செய்கிறீர்களா, இல்லை உண்மையாக கூறுகிறீகளா? உண்மையாக எழுதுகிறீர்கள் என்றால் என்னைப்பொறுத்தவரை இப்போதுள்ள சமூக ஊடகங்களின் மூத்த அண்ணன் இந்தியா ருடே என்பது என் கருத்து, இந்திய இராணுவத்தினால் நடத்தப்பட்ட  வல்வைப்படுகொலையை நேரடியாக வந்து செய்தி சேகரித்து சென்ற இந்திய ருடே இந்திய இராணுவ படுகொலையை மூடி மறைத்து இந்திய இராணுவத்திற்கு வெள்ளை அடிக்கும் முய்ற்சியில் ஈடுபட்டது, அது ஒன்றும் மோசமான குற்றமல்ல மேற்கு நாடுகளிலும் ஊடகத்துறையிலுள்ளவர்களும் இதே மாதிரி கொள்கைகளை கடைப்பிடிக்கிறார்கள்,  அவுஸ்திரேலியாவில் வானொலி துறையில் தற்போது பிரபலமாகவுள்ள பென் போட்டம் 2009 ஆண்டில் அனைத்து செய்திகளையும் அப்படியே வெளியிடுவது ஊடகத்தர்மம் அல்ல என்று கூற்யிருந்தார், தமது அரசுக்கு எதோ ஒரு புள்ளியில் தொந்தரவு கொடுக்கும் செய்திகளை ஊடகவியலாளர்கள் தவிர்ப்பதுண்டு, 

இந்தியா ருடே இந்து போன்ற பார்ப்பன ஊடகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர்கள் இந்திய அமைதிப்படைக்கு வெள்ளையடித்ததும் உண்மைதான். வாஸந்தி எப்படியான கொள்கையுடன் வேலை செய்தவர் என்றும் தெரியும். எனினும் இந்திய அரசியலை அறிய இணையம் பெரிதாக வளராத அந்தக் காலத்தில் இந்தியா ருடே உதவியது. ஆனால் வரும் எல்லாவற்றையும் நம்பும் அளவிற்கும் நானும் இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, tulpen said:

தமிழ் தேசியவாதிகள் ஊழல் அற்ற நேர்மையாளர்கள் என்று வாதிடப்படும் கருத்துக்களுக்கு கொடுக்கப்பட்ட பதில் தான் அது. கருணாவின் பிரிவு   ஏற்பட்டிருக்காவிட்டால் கருணாவும் உங்கள் பார்வையில் நேர்மையும் அர்பணிப்பும் மிக்க  தியாகிதான். அங்கு நடந்த ஊழலும் வெளியே தெரியவராமல் மறைக்கப்பட்டிருக்கும். 

ஆட்டுக்குள் மாடு?

திமுக களை திருத்த முயல்வது கடினம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

பச்சைத் தமிழனால் மட்டுமே அதை முன்னேற்ற முடியும் என்று சொல்வது எல்லாம் பிழையா?

உந்த பச்சைத்தமிழன் சமூகவிரோதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்று சொன்னீர்களே அவர்கள் பற்றிய தகவல்களை தாருங்கள் என்று நீதிமன்றம் கேட்டதற்கு, நான் லூசுத்தனத்தில் வாய்க்கு வந்ததெல்லாம் உளறிவிட்டேன் என்று ஒத்துக்கொள்ளும் கணக்காக பதில் எழுதிவிட்டு முழுசி முழுசி மண்டையை பிறாண்டிக்கொண்டிருக்கிறார் 
இதற்குள் ஆட்சி செய்து வேறு  முன்னேற்றப்போறார். இவரையெலாம் ஒரு ஆளாக கணக்கிலெடுத்திருக்கிறீங்கோ பாருங்கோ செல்லி வேலையில்லை  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

கேரளத்தில்
திராவிடக் கட்சிகளின் ஆட்சியோ...🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

அதெப்படி கூற முடியும். ஈழத்திற்காக போரிட்ட ஈழ போராட்ட இயக்கங்ளுக்குள்ளேயே மக்களின் பணத்தை ஊழல் பேர்வளிகள் இருக்கும் போது கருணாநிதி அப்பழுகற்றவர் என்று எப்படி கூற முடியும். 

வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு நாலு கொட்டை  பாக்கு என்று பதில் சொல்வது போல் நழுவுவது இப்படி சொல்வது கேவலமாய் இல்லை ?

மீண்டும் கேட்கிறேன் இப்பவாவது விளங்குகின்றதா என்று பார்ப்பம் சத்தமாகவே கேட்க்கிறேன்  " உங்கள் கருத்துப்படி கருணாநிதி  அப்பழுக்கற்றவர் அப்படித்தானே "?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

திறமையுள்ளவர்களை வைத்து அரசை நடாத்துபவர்கள்தான் நாட்டை முன்னேற்றமுடியும். இதுகூட திராவிடக் கட்சிகள் பார்பனியத்துக்குத்தான் எதிர், பார்ப்பனர்களுக்கு எதிரானதல்ல என்று காட்டுகின்றது. ஆனால் வந்தேறிகளை விரட்டும் ஆட்சி வந்தால் கூண்டோடு கலைத்து எல்லா பதவிகளிலும் தூய தமிழர்கள் வருவார்கள். பிராமணர்கள், தெலுங்கர்கள் எல்லாம் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு வடக்கே போகவேண்டியதுதான்!😂

அப்போ பார்ப்பனர்கள் தான் திறமையாளர்கள்(பார்ப்பன சிந்தனை) என்று சொல்லவாறீங்களா? திறமையான தமிழன் சகாயத்தை படுத்திய பாட்டை பார்த்தோம் தானே.
நீங்கள் குறிப்பிடுபவர்கள் யாராவது வந்தேறிகளை விரட்டுவோம் என்று கூறிய ஆதாரங்களை தாங்கோ. இது பொய்யான பிரச்சாரம் திமுகவினர் கூறுவது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 

நாங்கள் செத்துக்கொண்டிருந்தோம்  பக்கத்திலை இருந்த கருணாநிதி விழாகொண்டாடினார் அப்போ நாதியற்று கிடந்தோம் ஏன்யா இப்படி கொண்டாடிக்கொண்டு இருக்கிறாயே இது தகுமா என்று ? அதற்கு அந்த தமிழக  வந்தேறி சொல்கிறார் உங்க சங்ககாலத்தில் ஒரு வீட்டில் போர் வீரன் மரணித்த  செத்தவீடு என்றால் மறு  வீதியில் மணமக்கள் திருமணம் காண்பது வழமையான ஒன்று என்று சொல்லியது மறக்கவில்லை .

நென்சுக்குள் இப்பவும் நினைக்க குத்துகிறது .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

அப்போ பார்ப்பனர்கள் தான் திறமையாளர்கள்(பார்ப்பன சிந்தனை) என்று சொல்லவாறீங்களா?

அப்படி நான் சொல்லவில்லையே. திறமை எங்கிருந்தாலும் அவற்றினை அரசுகள் பாவிக்கவேண்டும். திறமையுள்ளவர் பிரமாணராக இருந்தால் பார்ப்பனியத்திற்கு எதிர் என்பதற்காக ஒதுக்கவேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, tulpen said:

கிருபன் நீங்கள் புத்தகங்களில் வரலாறு படிப்பதால்  whats up, you tube ல் வரலாறு அறிபவர்களை விட துல்லியமாக பல விடயங்களை  தெரிந்து வைத்துள்ளீர்கள். 

புத்தகங்களை எழுதுவோரும் மனிதர்களே! வட்சப் யுரியூப்பில் வருவதும் மனித சிந்தனையில் இருந்தே. தகவல்களை சரியா என நாங்கள் தான் சிந்திக்க வேண்டும். யுனெஸ்கோ பார்வையில் பெரியார் என்றும் ஒரு புத்தகம் வந்திருக்கு அண்ணை.

25 minutes ago, பெருமாள் said:

வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு நாலு கொட்டை  பாக்கு என்று பதில் சொல்வது போல் நழுவுவது இப்படி சொல்வது கேவலமாய் இல்லை ?

மீண்டும் கேட்கிறேன் இப்பவாவது விளங்குகின்றதா என்று பார்ப்பம் சத்தமாகவே கேட்க்கிறேன்  " உங்கள் கருத்துப்படி கருணாநிதி  அப்பழுக்கற்றவர் அப்படித்தானே "?

இந்த உலகத்தில் எவரும் அப்பழுகற்றவர் இல்லை. Nobody is perfect. அதிலும் அரசியல்வாதிகள் இன்னும் ஒரு படி மேல். அவர்களில் அப்பழுகற்றவர்களை காண்பது அரிது.  வகையில் கருணாநிதியோ சீமானோ அப்பழுக்கற்றவர்கள்  இல்லை. ஆனால்  ஈழப்போராட்டத்தின் அழிவுக்கும் கருணாநிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈழப்போராட்டத்தை அவர் நடத்தவும் இல்லை. எந்த போராட்ட முடிவுகளில் Guide பண்ணவும்  இல்லை. 

போராட்டத்தை  எந்த இடத்தில் நிறுத்துவது என்று தெரியாமல் தொடர்ந்து, தொடர்ந்து  தப்புக்கணக்கு போட்டு  மக்கள் அழிவை பற்றி எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் வரட்டு பிடிவாதத்துடன் இறுதி முடிவுகளை எடுத்தவர்களே ஈழப்போராட்ட அழிவுக்கு முழுப்பொறுப்பு கூறவேண்டும்.  

25 minutes ago, பெருமாள் said:

நாங்கள் செத்துக்கொண்டிருந்தோம்  பக்கத்திலை இருந்த கருணாநிதி விழாகொண்டாடினார் அப்போ நாதியற்று கிடந்தோம் ஏன்யா இப்படி கொண்டாடிக்கொண்டு இருக்கிறாயே இது தகுமா என்று ? அதற்கு அந்த தமிழக  வந்தேறி சொல்கிறார் உங்க சங்ககாலத்தில் ஒரு வீட்டில் போர் வீரன் மரணித்த  செத்தவீடு என்றால் மறு  வீதியில் மணமக்கள் திருமணம் காண்பது வழமையான ஒன்று என்று சொல்லியது மறக்கவில்லை .

நென்சுக்குள் இப்பவும் நினைக்க குத்துகிறது .

கருணாநிதி  தமிழ்நாட்டில் வந்தேறி அல்ல. ஆனால் பெருமாளும் துல்பனும் தமிழ்நாட்டிற்கு எந்த தொடர்பும் அற்ற அந்தியர்களே. அந்தமண்ணிற்கு அறவே தொடர்பற்ற அந்நியர்கள் அந்த மண்ணின் மக்களை வந்தேறி என்று திட்டுவது இனவெறியின் உச்சக்கட்டம் என்பது சாதாரணமாக சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கு புரியும்.  இனவெறியர்கள் தம்மை தமிழ் தேசியவாதிகள் என்று கூறுவது தமிழ் தேசியத்திற்கே அவமானம். நல்ல வேளை தாயகத்தில் உங்களை போல சிந்திப்பவர்கள் மிக குறைந்த தொகையினரே என்பது ஆறுதல். 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, tulpen said:

இந்த உலகத்தில் எவரும் அப்பழுகற்றவர் இல்லை. Nobody is perfect. அதிலும் அரசியல்வாதிகள் இன்னும் ஒரு படி மேல். அவர்களில் அப்பழுகற்றவர்களை காண்பது அரிது.  வகையில் கருணாநிதியோ சீமானோ அப்பழுக்கற்றவர்கள்  இல்லை. ஆனால்  ஈழப்போராட்டத்தின் அழிவுக்கும் கருணாநிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈழப்போராட்டத்தை அவர் நடத்தவும் இல்லை. எந்த போராட்ட முடிவுகளில் Guide பண்ணவும்  இல்லை. 

போராட்டத்தை  எந்த இடத்தில் நிறுத்துவது என்று தெரியாமல் தொடர்ந்து, தொடர்ந்து  தப்புக்கணக்கு போட்டு  மக்கள் அழிவை பற்றி எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் வரட்டு பிடிவாதத்துடன் இறுதி முடிவுகளை எடுத்தவர்களே ஈழப்போராட்ட அழிவுக்கு முழுப்பொறுப்பு கூறவேண்டும்.  

கருணாநிதி  தமிழ்நாட்டில் வந்தேறி அல்ல. ஆனால் பெருமாளும் துல்பனும் தமிழ்நாட்டிற்கு எந்த தொடர்பும் அற்ற அந்தியர்களே. அந்தமண்ணிற்கு அறவே தொடர்பற்ற அந்நியர்கள் அந்த மண்ணின் மக்களை வந்தேறி என்று திட்டுவது இனவெறியின் உச்சக்கட்டம் என்பது சாதாரணமாக சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கு புரியும்.  இனவெறியர்கள் தம்மை தமிழ் தேசியவாதிகள் என்று கூறுவது தமிழ் தேசியத்திற்கே அவமானம். நல்ல வேளை தாயகத்தில் உங்களை போல சிந்திப்பவர்கள் மிக குறைந்த தொகையினரே என்பது ஆறுதல். 

என்னை இனவெறியன் என்று சொன்னாலும் நான் கவலைப்பட போவதில்லை தமிழ் இனவெறியானாகவே இருந்துவிட்டு போகிறேன் நடிகர் ராகவா லாரன்ஸ் என்பவர் சீமான் தமிழர்களுக்காக பேசுவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இனி பேசினால் கடும் விளைவுகள் வரும் என்று மிரட்டுகிறார். இப்படியெல்லாம் பிழைப்புக்கு வந்த கூத்தாடியின்  மாநிலத்தில் உங்களால் எதிர்வினை புரியமுடியுமா ?

என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை? தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த நடிகர்கள் தமிழனை ஆள நினைப்பது மட்டுமன்றி தமிழனை மிரட்டவும் ஆரம்பித்து விட்டார்களே? சீமானித்தவிர அங்கு ..........................

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடத்தின் பித்தலாட்டம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, tulpen said:

சொந்த ஈழ தமிழர்க்களிடன் தமிழ் தேசியம் பேசி பணத்தை திருடிய கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கி கொண்டு அடுத்த நாட்டு ஊழல்  பற்றி பேசுபவர்களுக்கு உண்மையை சுட்டி காட்டவேண்டி வந்த‍து.  அவ்வளவு தான். 

பணத்தை திருடிய கூட்டம் என குற்றம் சுமத்தும் தாங்கள் ஆதாரங்களை இணைக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பணத்தை திருடிய கூட்டம் என குற்றம் சுமத்தும் தாங்கள் ஆதாரங்களை இணைக்கவும்.

சகட்டு மேனிக்கு அடித்து விடுவது .

3 hours ago, tulpen said:

கருணாநிதி  தமிழ்நாட்டில் வந்தேறி அல்ல.

நிரூபிக்கவும் .

3 hours ago, tulpen said:

போராட்டத்தை  எந்த இடத்தில் நிறுத்துவது என்று தெரியாமல் தொடர்ந்து, தொடர்ந்து  தப்புக்கணக்கு போட்டு  மக்கள் அழிவை பற்றி எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் வரட்டு பிடிவாதத்துடன் இறுதி முடிவுகளை எடுத்தவர்களே ஈழப்போராட்ட அழிவுக்கு முழுப்பொறுப்பு கூறவேண்டும்.  

நீங்கள்  சொல்வதுதானே  எந்த இடத்தில்  நிறுத்தியிருந்தால் அழிவு  தடுக்கப்பட்டு இருக்கும் என்று .

3 hours ago, tulpen said:

ஈழப்போராட்டத்தின் அழிவுக்கும் கருணாநிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈழப்போராட்டத்தை அவர் நடத்தவும் இல்லை.

அறிவிக்கப்படாத திமுகவின் பேச்சாளர் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, tulpen said:

கருணாநிதி  தமிழ்நாட்டில் வந்தேறி அல்ல. ஆனால் பெருமாளும் துல்பனும் தமிழ்நாட்டிற்கு எந்த தொடர்பும் அற்ற அந்தியர்களே. அந்தமண்ணிற்கு அறவே தொடர்பற்ற அந்நியர்கள் அந்த மண்ணின் மக்களை வந்தேறி என்று திட்டுவது இனவெறியின் உச்சக்கட்டம் என்பது சாதாரணமாக சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கு புரியும்.  இனவெறியர்கள் தம்மை தமிழ் தேசியவாதிகள் என்று கூறுவது தமிழ் தேசியத்திற்கே அவமானம். நல்ல வேளை தாயகத்தில் உங்களை போல சிந்திப்பவர்கள் மிக குறைந்த தொகையினரே என்பது ஆறுதல். 

ஒம்...ஆனால் சொந்த மண்ணில் இனக்கலவரங்கள் மூலம் சிங்களம் தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடி, தமிழ் பெண்களை பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தி கொலை செய்து,தமிழர் தாம் பிறந்து வளர்ந்த இடங்களை விட்டு துரத்தியடித்தமை,சொந்த நாட்டுக்குள்ளேயே சிங்களம் எங்களை அகதியாக்கியமை பற்றி ஏதாவது சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

மீண்டும் கேட்கிறேன் இப்பவாவது விளங்குகின்றதா என்று பார்ப்பம் சத்தமாகவே கேட்க்கிறேன்  " உங்கள் கருத்துப்படி கருணாநிதி  அப்பழுக்கற்றவர் அப்படித்தானே "?

மேல் உள்ள கேள்விக்கு பதில் அளிக்க  முடியாமல் மற்றைய கருத்துக்களை வைப்பது யாழில் கூடிப்போய் விட்ட்து அதாவது புலியை  பேர் சொல்லாமல் வரிக்கு வரி திட்டுவதுதான் கடமையாக கொண்டுள்ளார் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, tulpen said:

சொந்த ஈழ தமிழர்க்களிடன் தமிழ் தேசியம் பேசி பணத்தை திருடிய கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கி கொண்டு அடுத்த நாட்டு ஊழல்  பற்றி பேசுபவர்களுக்கு உண்மையை சுட்டி காட்டவேண்டி வந்த‍து.  அவ்வளவு தான். 

நானும் அடுத்த நாட்டு அரசியல் பேசமாட்டேன். எப்போது தெரியுமா?
எனது மண்ணில் காந்தி சிலையும், நேரு சிலையும்,இந்திரா காந்தி சிலையும் அகற்றப்படும் வரை....இவர்களின் சுயசரிதையை பாலர் வகுப்பு புத்தகங்களில் வரலாறு எனும் போர்வையில் படிக்கும் வரை..

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

சகட்டு மேனிக்கு அடித்து விடுவது .

நிரூபிக்கவும் .

நீங்கள்  சொல்வதுதானே  எந்த இடத்தில்  நிறுத்தியிருந்தால் அழிவு  தடுக்கப்பட்டு இருக்கும் என்று .

அறிவிக்கப்படாத திமுகவின் பேச்சாளர் போல் உள்ளது .

அவர் பாவம்

அவருக்கு ஏதோ தீராத பிரச்சினைகள் போலிருக்கிறது

இங்கே வந்து எம்முடன் வாய்ச்சண்டை போட வசதியாக இருப்பதால் அடிக்கடி உராய்ந்து கொள்கிறார் 

ஏதோ இதுக்காவது நாம் உதவியாக இருக்கிறோமே

 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2021 at 22:05, பெருமாள் said:

இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் இனி சந்திக்குமோ என்பது சந்தேக

ஜேரமனியில் Helmut kohl 16ஆண்டுகள்ஆட்ச்சி செய்தவர் இவரும் நல்ல தலைவர்😎👍

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

இவர்கள் ஒருவரும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிங்கப்பூருடனோ அல்லது மலேசியாவுடனோ ஒப்பிட மாட்டார்கள். 

சின்னக் கோட்டிற்குப் பதிலாக கொஞ்சம் பெரிய கோடு அம்புட்டுதே.. 

நீங்கள் சீமான் டென்மார்க் மாதிரி மாற்றுவேன் சிங்கப்பூர் மாதிரி மாற்றுவேன் என்று புழுகுவதை அப்படியே நம்பிவிடுகிறீர்களே 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.