Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரும், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டு,  வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின், வருடாந்திர பெருந்திருவிழா  தற்போது  நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம்  நடைபெற்ற தேர்த்திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் சுகாதார  நடைமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். மேலும்  50 பக்தர்கள் மாத்திரமே  ஆலயத்தில் ஒரே நேரத்தில்  வழிபாடுகளை மேற்கொள்ள  அனுமதிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1212964

  • கருத்துக்கள உறவுகள்

சனம் கொரோனா பரவும் நேரத்தில் இப்படி கூட்டமாக போனால் பின்விளைவுகள் வரும்தானே.

 

IMG_5338-1024x683.jpgIMG_5339-1024x683.jpgIMG_5341-1024x683.jpgIMG_5342-1024x683.jpgIMG_5343-1024x683.jpg
  • கருத்துக்கள உறவுகள்

காட்டாச்சி நடக்கும்போது மக்களுக்குள்ள ஒரே நம்பிக்கை கடவுள்தான். 

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழினத்தை அழித்து வரும் சிங்கள அரசுக்கு, கொரோனாவினால் வரும் அழிவைக் கருதாது, இப்படியான விழாக்களில் கூடி அழிந்தாலும் இலாபம்தானே.🤔

  • கருத்துக்கள உறவுகள்

மீரா

எங்கிருந்தாலும் ஓடி வரவும்.. 😂

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் பாதிரியாருக்கெதிராக கொதித்தெழுந்தவர்களுக்கு, தாம் செய்வது என்னவென்று புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

மீரா

எங்கிருந்தாலும் ஓடி வரவும்.. 😂

அன்பே சிவம். ஓம் நமச்சிவாய...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

சுவிஸ் பாதிரியாருக்கெதிராக கொதித்தெழுந்தவர்களுக்கு, தாம் செய்வது என்னவென்று புரியவில்லை.

ஆனால் இப்பவும் தேவாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமைகளில் இதே போல ஆராதனை நடக்கிறது உயிர்த்த ஞாயிறு ஆராதனை மட்டும் அல்லாமல் எல்லா இடங்களிலும் மக்கள் மனிதனை விட தெய்வத்தை நம்புகிறார்கள் இருப்பவர்களுக்கு இருக்கு இல்லாதவர்களுக்கு இல்லை இதில் மக்களை கூட்டமாக கூட வேண்டாமென பொது சுகாதார பரிசோதக்ர் அறிவித்தாலும் மக்கள் திருந்துவதாக இல்லை 
சித்திரை விடுமுறைக்கு கடற்கரை, நீர்நிலைகள், இன்னும் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சனம் கூட்டமாகவே இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

அன்பே சிவம். ஓம் நமச்சிவாய...

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், வைத்தியசாலை வாசலில் வைத்து கொறோனா நோயாளிகளை பூசை/மந்திரம் சொல்லும்படி கூறியது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

😂

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் இப்பவும் தேவாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமைகளில் இதே போல ஆராதனை நடக்கிறது உயிர்த்த ஞாயிறு ஆராதனை மட்டும் அல்லாமல் எல்லா இடங்களிலும் மக்கள் மனிதனை விட தெய்வத்தை நம்புகிறார்கள் இருப்பவர்களுக்கு இருக்கு இல்லாதவர்களுக்கு இல்லை இதில் மக்களை கூட்டமாக கூட வேண்டாமென பொது சுகாதார பரிசோதக்ர் அறிவித்தாலும் மக்கள் திருந்துவதாக இல்லை 
சித்திரை விடுமுறைக்கு கடற்கரை, நீர்நிலைகள், இன்னும் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சனம் கூட்டமாகவே இருக்கிறது 

இது முற்றிலும் உண்மை.

🤥

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2021 at 07:24, கிருபன் said:

சனம் கொரோனா பரவும் நேரத்தில் இப்படி கூட்டமாக போனால் பின்விளைவுகள் வரும்தானே.

கொரோனா அல்லது நெரிசல்

கும்பமேளா திருவிழா, சுவிஸ் போதகரின் மத கூட்டம், யாழ்பாண வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள்திருவிழா,  இஸ்ரேலில் மத வழிப்பாட்டு திருவிழா இப்படி மததிருவிழாக்களே பிரச்சனையானது தான். இஸ்ரேலில் மத திருவிழாவில் 44 பேர் கொல்லபட்டனர்.

https://www.bbc.com/news/world-middle-east-56938657

 

இந்தியாவில் ஏற்பட்ட பெரும்பாலான மரணங்கள் இந்திய வைரஸ் மூலமானவை அல்ல. இன்றைய இந்த நிலைக்கு இந்தியாவில் கோயில் விழாக்களே காரணமாகக் கூறப்படுகிறது.

https://fr.news.yahoo.com/inde-pourquoi-variant-indien-nest-085558252.html

கண்ணுக்குத் தெரியாத கிருமியிலிருந்துகூட மக்களைக் கடவுள் காப்பாற்ற மாட்டாரென்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, இணையவன் said:

கண்ணுக்குத் தெரியாத கிருமியிலிருந்துகூட மக்களைக் கடவுள் காப்பாற்ற மாட்டாரென்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். நான் உருவாக காரணமானவர்கள் என் பெற்றோர்கள். என் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் என்னை பெற்றவர்களை சாடுவேயேனால் அது தவறு.

11 minutes ago, குமாரசாமி said:

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். நான் உருவாக காரணமானவர்கள் என் பெற்றோர்கள். என் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் என்னை பெற்றவர்களை சாடுவேயேனால் அது தவறு.

வைரசை உருவாக்கியவர்கள் இவர்களா ?

inde-public.jpg

1 hour ago, குமாரசாமி said:

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். நான் உருவாக காரணமானவர்கள் என் பெற்றோர்கள். என் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் என்னை பெற்றவர்களை சாடுவேயேனால் அது தவறு.

சரியான கருத்து குமாரசாமி. 

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். இல்லாத கடவுளை வேண்டுவதாலோ, ஒரு பொம்மையை தானே உருவாக்கி  அதற்கு கடவுள் என்று பெயர்வைத்து அதனிடம் வேண்டுவதால் எந்த பயனும் ஏற்படாது. இது மனித வாழ்வில்  எல்லா விடயங்களுக்கும் பொருந்தும். ஒருவன் தான் செய்த தவறுக்கு அடுத்தவனை குற்றம் சாட்டி முழுப்பழியையும் அவன் மீது போடுவதால் அவனது பிரச்சனைகள் தீரப்போவதில்லை. 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். நான் உருவாக காரணமானவர்கள் என் பெற்றோர்கள். என் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் என்னை பெற்றவர்களை சாடுவேயேனால் அது தவறு.

நீங்கள் உருவாக காரணம் உங்கள் பெற்றோர்கள் என்றீர்கள். ஆகவே, உங்கள் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் அவர்கள் தானே அதற்கு காரணம்? 

  1. அம்பானி குடும்பம் போல பெரும் பணத்தை உங்களுக்காக உழைத்துவிட்டு உங்களை அவர்கள் உருவாக்கி இருந்தால் உங்கள் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் குறைவாக இருந்திருக்கும்.
  2. உங்களை அதீத புத்திசாதுரியத்துடன் உருவாக்கி இருந்தால் சி. வி. இராமன் போல நோபல் பரிசு பெற்றிருப்பீர்கள்.
  3. ஓக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகத்துக்கு அவர்கள் உங்களை அனுப்பி இருந்தால் கொரோனாவை தீர்த்துக்கட்டியிருப்பீர்கள்.
  4. இப்படியெல்லாம் அவர்கள் செய்யாத காரணத்தால் தானே இப்படி அந்நிய நாட்டில் இருந்து கொண்டு ஊரில் விட்டுவிட்டு வந்த மண்வெட்டியை நினைத்து யாழ் களத்தில் கண்கலங்கும் நிலை உருவானது?
     

 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2021 at 04:44, தமிழ் சிறி said:

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரும், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டு,  வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின், வருடாந்திர பெருந்திருவிழா  தற்போது  நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம்  நடைபெற்ற தேர்த்திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் சுகாதார  நடைமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். மேலும்  50 பக்தர்கள் மாத்திரமே  ஆலயத்தில் ஒரே நேரத்தில்  வழிபாடுகளை மேற்கொள்ள  அனுமதிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1212964

திருவிழா நடக்கும்போது போலீஸ் என்ன செய்து கொண்டு இருந்ததாம் ?

மக்கள் விழா வைத்தால் போவார்கள்தானே திருவிழாவுக்கு அனுமதி யார் கொடுத்தார்கள் வடமராட்சியில் இவ்வளவு பேருக்குத்தான் அனுமதி அதுவும் மாஸ்க் கட்டாயம் என்று சில கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். நான் உருவாக காரணமானவர்கள் என் பெற்றோர்கள். என் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் என்னை பெற்றவர்களை சாடுவேயேனால் அது தவறு.

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். இது சத்தியமான உண்மை. இந்த உண்மையயைச் சத்குருவும் சற்றுப் புரியும்படியாகவே சொல்கிறார். வேண்டுமானால் அவர் சொல்வதையும் செவிசாய்க்கவோ அன்றிச் சாடவோ எமக்குப் பூரண உரிமையும் உண்டு.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, இணையவன் said:

வைரசை உருவாக்கியவர்கள் இவர்களா ?

inde-public.jpg

இல்லை.... இவர்கள் வைரசை உருவாக்கவில்லை.
வியாபாரிகள் உருவாக்கினார்கள். நம்புவீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, tulpen said:

சரியான கருத்து குமாரசாமி. 

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். இல்லாத கடவுளை வேண்டுவதாலோ, ஒரு பொம்மையை தானே உருவாக்கி  அதற்கு கடவுள் என்று பெயர்வைத்து அதனிடம் வேண்டுவதால் எந்த பயனும் ஏற்படாது. இது மனித வாழ்வில்  எல்லா விடயங்களுக்கும் பொருந்தும். ஒருவன் தான் செய்த தவறுக்கு அடுத்தவனை குற்றம் சாட்டி முழுப்பழியையும் அவன் மீது போடுவதால் அவனது பிரச்சனைகள் தீரப்போவதில்லை. 

 

என்னையும் ஒரு மனிதனாக நினைத்து எனது கருத்தை மேற்கோள் காட்டி கருத்திட்டமைக்கு நன்றி.

இருப்பினும் உங்கள் கருத்துடன்  உடன்பட என் மனம் மறுக்கின்றது.

கடவுள் வழிபாடு என்பதை விட இயற்கை வழிபாடு என்பதுதான் ஆதிகால மனிதத்தில் இருந்தது.அது இன்றும் இருக்கின்றது.இயற்கையை அவமதிப்பதன் பலன்களை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். உருவ வழிபாடு உங்களை போன்ற நவநாகரீக மக்களால் உருவாக்கப்பட்டது. தேடி வாசியுங்கள் தெரியும் புதினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, கற்பகதரு said:

நீங்கள் உருவாக காரணம் உங்கள் பெற்றோர்கள் என்றீர்கள். ஆகவே, உங்கள் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் வந்தால் அவர்கள் தானே அதற்கு காரணம்? 

  1. அம்பானி குடும்பம் போல பெரும் பணத்தை உங்களுக்காக உழைத்துவிட்டு உங்களை அவர்கள் உருவாக்கி இருந்தால் உங்கள் வாழ்வில் குறைகள்,கஷ்டங்கள் குறைவாக இருந்திருக்கும்.
  2. உங்களை அதீத புத்திசாதுரியத்துடன் உருவாக்கி இருந்தால் சி. வி. இராமன் போல நோபல் பரிசு பெற்றிருப்பீர்கள்.
  3. ஓக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகத்துக்கு அவர்கள் உங்களை அனுப்பி இருந்தால் கொரோனாவை தீர்த்துக்கட்டியிருப்பீர்கள்.
  4. இப்படியெல்லாம் அவர்கள் செய்யாத காரணத்தால் தானே இப்படி அந்நிய நாட்டில் இருந்து கொண்டு ஊரில் விட்டுவிட்டு வந்த மண்வெட்டியை நினைத்து யாழ் களத்தில் கண்கலங்கும் நிலை உருவானது?

நீங்கள் சொல்லுறது அத்தனையும் சரியானதே. தொடருங்கள் உங்கள் பணியை....

வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Paanch said:

மனிதனால் உருவாக்கப்பட்டதற்கு மனிதன் மட்டுமே தீர்வு தர வேண்டும். இது சத்தியமான உண்மை. இந்த உண்மையயைச் சத்குருவும் சற்றுப் புரியும்படியாகவே சொல்கிறார். வேண்டுமானால் அவர் சொல்வதையும் செவிசாய்க்கவோ அன்றிச் சாடவோ எமக்குப் பூரண உரிமையும் உண்டு.

பல வைத்தியர்களும் இனி கடவுள் விட்ட வழி என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இயற்கை வழிபாடு

இயற்கை கவனமுடன் பாதுகாக்கபட வேண்டியது.  வழிபாட்டுக்கு உரியது இல்லை.

12 hours ago, விளங்க நினைப்பவன் said:

இயற்கை கவனமுடன் பாதுகாக்கபட வேண்டியது.  வழிபாட்டுக்கு உரியது இல்லை.

👍 சரியாக சொன்னீர்கள். இந்த உலகில் வழிபாட்டுக்குரியது எதுவும் இல்லை. பாதுகாக்கப்படவேண்டியதும், respect பண்ணப்படவேண்டியதும் தான் உலகில் உண்டு.  Respect பண்ணப்பட வேண்டிய மனிதரிடையே வெறுப்பை விதைப்பவர்கள் தான் கண்டதையும் வழிபட ஊக்குவிக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சாருங்கோ தேசிய‌ வெசாக் கொண்டாட்டம்  தீவில் இருக்கோ?ஞான ஒளி பெறுவதிலும் தேசியம்  இருக்கு கண்டியளோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.