Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு துறைமுக நகரம்... இலங்கையில் உருவானது சீனாவின் சுயாட்சி தேசம்- இந்தியா என்ன செய்யும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும் தமிழீழமும்

கொழும்பு: இலங்கையில் கொழும்பு துறைமுகநகரம் என்ற பெயரில் சீனாவின் சுயாட்சி பிரதேசம் உருவாக இலங்கை நாடாளுமன்றமும் ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிகப் பெரும் அச்சுறுத்தலை சீனா மூலம் ஏற்படுத்தி இருக்கிறது என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இலங்கை ஒரு தனித்தீவாக இருந்த போதும் இதனை முன்வைத்துதான் பல்லாயிரம் ஆண்டுகாலமாக தெற்காசியாவின் அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை யார் வசம் இருக்கிறதோ அந்த நாடுதான் தெற்காசியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டது என்பது புவிசார் அரசியல் கோட்பாடு.

இதனடிப்படையில்தான் காலந்தோறும் இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கம் நீடித்த ஒன்றாக இருந்தது. மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி இந்த விவகாரத்தில் தெள்ளத் தெளிவான நிலைப்பாடுடன், இலங்கையில் வேறு எந்த ஒரு அன்னிய நாடு காலடி கூட வைக்கவிடாமல் வெளியுறவுக் கொள்கையை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்த இறுக்கம் தளர்ந்து போனது

அணிசேரா கொள்கையில் தளர்வு

1990களுக்குப் பிந்தைய தாராள பொருளாதார மயமாக்கல் கோட்பாடு வியாபித்து இந்தியாவையும் ஆட்டிப் படைக்க இந்தியாவின் திடமான வெளியுறவு கோட்பாடுகள் ஊசலாட்டத்துக்குள் தள்ளப்பட்டன. ஒருகாலத்தில் அணிசேரா கொள்கை பேசிய இந்தியா, மெல்ல மெல்ல அமெரிக்கா சார்பு நிலையை நோக்கிப் போனது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த அண்டை தேசங்களையும் தம் பிடியில் வைத்திருந்த இந்தியா அதன் வல்லாண்மையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது.

தமிழீழமும் தமிழரும்

இந்தியாவின் பிடி நழுவிய இடங்களில் எல்லாம் மெல்ல மெல்ல சீனா தனது இருப்பை விஸ்தீரனப்படுத்தியது. இதன் உச்சம்தான் இப்போது இலங்கையில் ஒரு சுயாட்சி பெற்ற நகரையே சீனாவினால் பெற முடிந்திருக்கிறது. இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்கள், இலங்கையின் அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளை கோரியபோது அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். அதன்விளைவாக தனித் தமிழீழம் எனும் தேசத்துக்காக ஆயுதப் போராட்டம் நடத்திய போது அழித்தொழிக்கப்பட்டார்கள் தமிழர்கள்.

சீனாவுக்கு ஒரு சுயாட்சி பிராந்தியம்

ஆனால் இலங்கைக்கு எந்தவித தொடர்புமே இல்லாத நாடுபிடி வேட்கையில் நுழைந்த சீனாவுக்கு சுயாட்சி தேசமாக ஒரு நகரையே தங்க தாம்பாளத்தில் தாரைவார்த்து கொடுத்திருக்கிறது சிங்களம். இதற்கான ஒப்புதலை இலங்கை நாடாளுமன்றமும் வழங்கிவிட்டது. கடந்த 20 ஆண்டுகால இந்திய மத்திய அரசுகள் வெளியுறவுக் கொள்கையில் எப்படி கோட்டை விட்டிருக்கிறது என்பதற்கு இந்த சீனாவின் சுயாட்சி நகரமே நல்ல எடுத்துக்காட்டு. இந்த சுயாட்சி நகரத்துக்குள் சீனா, ஆங்கிலம், சிங்களம்தான் மொழிகளாம். இங்கே தமிழுக்கு இடம் இல்லை. என்னதான் இலங்கைக்கு சொந்தமானதாக கொழும்பு நகரம் இருந்தாலும் கொழும்பு துறைமுக நகரம் என்பது சீனாவுக்கு சொந்தமாகிவிட்டது.

இந்திய பாதுகாப்புக்கு பேராபத்து

துறைமுக நகர பணிகள், வேலைவாய்ப்பு என்ற பெயரால் சீனர்கள் தங்குடையின்றி குடியேறலாம். ஏற்கனவே மன்னார் வளைகுடாவில் மிக பிரம்மாண்ட காற்றாலை அமைக்க சீனாவுக்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளது. இதனால் இந்தியாவின் தலைப்பகுதி தொடங்கும் வங்கக் கடல் பிராந்தியத்தை மிக எளிதாகவே வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது சீனா. இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு லடாக், டோக்லாம், அருணாச்சல பிரதேசங்களை விட மிக மிக மோசமான அச்சுறுத்தல் உள்ள பிரதேசமாக வங்க கடல் உருவெடுத்திருக்கிறது.

இந்தியாவும் தமிழீழமும்

இலங்கையில் தமிழீழம் உருவானால் இந்தியாவுக்குதான் பாதுகாப்பு என்கிற யதார்த்த உண்மையை இந்திரா காந்தி உணர்ந்திருந்தார். அதனால் தமிழீழம் உருவாக அவர் அத்தனை விதமான உதவிகளையும் செய்தார். ஆனால் பின்னாளில் இலங்கையில் தனி ஈழம் உருவானால் இந்திய இறையாண்மைக்கு பேராபத்து என்று உண்மைக்கு மாறாக அதிகாரவர்க்கத்தினர் குறுக்குசால் ஓட்டினர். அதனால் தமிழீழம் கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளும் 2 லட்சம் தமிழர்களும் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

இந்திய வெளியுறவு கொள்கை

இப்போது எந்த ஆயுதப் போராட்டமும் இல்லாமலேயே இலங்கைக்குள் சீனா ஒரு தேசத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தனி ஈழம், இந்தியாவுக்கு பேராபத்து எனில் தனி சீனா சுயாட்சி தேசம் இந்தியாவுக்கு நன்மையா செய்யப் போகிறது? இனியேனும் இலங்கை விவகாரத்திலும் ஈழத் தமிழரின் நியாயமான யதார்த்தமான கோரிக்கைகள் தொடர்பிலும் இந்திய வெளியுறவு சக்திகள் அதீதமான உண்மையாக அக்கறை செலுத்துவது என்பதுதான் நமது தேசத்தின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய ஒரு யுக்தியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

 https://tamil.oneindia.com/news/colombo/china-gets-overseas-colony-in-sri-lanka/articlecontent-pf551523-421655.html

 

 

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கமே பிழை எனும் போது கட்டுரை மட்டும் எப்படி சரியானதாக இருக்கும்..😂

அணில் ஏறவிட்ட நாய் என்ன செய்யும்..? 

 

🤣🤣🤣🤣🤣🤣

சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதென்பது இதுதானோ ?

முள்ளை விதைத்தால் கொள்ளா அறுக்க முடியும்...?

சீனாவின் அடுத்த அபிவிருத்தித் திட்டம் காங்கேயன்துறைமுகத்தில் தொடங்கவுள்ளதாக ஒரு தகவல்....😀

enjoy.. 🤣🤣🤣🤣

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரைக்கான பதில் கடலில் மேதகு படம் பொறித்த மேலாடையில் சிங்கள படையை கதற விட்ட சகோதரனின் செயலில் உள்ளது.

அண்ணன் தமிழ்நாட்டில் ஆட்சி பீடம் ஏறியதும் சிங்களர்களையும், சீனர்களையும் ஒருசேர கதற விடுவார். பொறுத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

தலையங்கமே பிழை எனும் போது கட்டுரை மட்டும் எப்படி சரியானதாக இருக்கும்..😂

அணில் ஏறவிட்ட நாய் என்ன செய்யும்..? 

 

🤣🤣🤣🤣🤣🤣

சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதென்பது இதுதானோ ?

முள்ளை விதைத்தால் கொள்ளா அறுக்க முடியும்...?

சீனாவின் அடுத்த அபிவிருத்தித் திட்டம் காங்கேயன்துறைமுகத்தில் தொடங்கவுள்ளதாக ஒரு தகவல்....😀

enjoy.. 🤣🤣🤣🤣

 

tenor.gif?t=AAXACZCfG3kKtObNOASu9g&itemid=17710543&fbclid=IwAR3YoxFHPSRp4DW7F9T_aQsZIG6lYWcRV8KKke4U9QgimrVlg4RZpAwqxSs

அணில்... ஏற, விட்ட நாய்.... இப்படித்தான் இருக்கும்.
இது, இந்திய  "கோளை"  தந்திரத்தின்... தோல்வி. 😡

ஈழத் தமிழரின் சாபம்... ஹிந்திய  அரசை, சும்மா விடாது. 😎

தமிழகம்... தப்பிக்க, வேண்டும் என பிரார்த்திப்போம். 🙏 🙏 🙏

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

tenor.gif?t=AAXACZCfG3kKtObNOASu9g&itemid=17710543&fbclid=IwAR3YoxFHPSRp4DW7F9T_aQsZIG6lYWcRV8KKke4U9QgimrVlg4RZpAwqxSs

அணில்... ஏற, விட்ட நாய்.... இப்படித்தான் இருக்கும்.
இது, இந்திய  "கோளை"  தந்திரத்தின்... தோல்வி. 😡

ஈழத் தமிழரின் சாபம்... ஹிந்திய  அரசை, சும்மா விடாது. 😎

தமிழகம்... தப்பிக்க, வேண்டும் என பிரார்த்திப்போம். 🙏 🙏 🙏

வேஸ்டியில் பற்றிய தீ உடலை மட்டும் தீண்டாதா?

இந்தியாவுக்கு சீனர்களால் ஆபத்து என்றால் அது தமிழகத்தையும் சேர்த்துத்தான்.

இப்படியான தேச விரோத பேச்சு பேசிய பலரை அண்ணன் கட்சியில் இருந்து தூக்கி அடித்துள்ளார்.

இந்திய ஒன்றியத்துள் நாம் தமிழ் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் நிலை நிறுத்துவோம். அது உலகின் அனைத்து தமிழர்களுக்குமான அரணாக, அரசாக அமையும்.

ஆனால் இந்தியாவை எதிரிகள் வெளியில் இருந்து நெருங்கினால் அவர்களின் முதல் எதிர்கள் தமிழர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் பாஜகவால் வழிநடத்தபடும் மத்திய அரசாங்கங்கள் மீதான வன்மத்தை இந்திய பெருந்தேசத்தின் மீது சுமத்துவது முறையல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழகன் said:

வேஸ்டியில் பற்றிய தீ உடலை மட்டும் தீண்டாதா?

இந்தியாவுக்கு சீனர்களால் ஆபத்து என்றால் அது தமிழகத்தையும் சேர்த்துத்தான்.

இப்படியான தேச விரோத பேச்சு பேசிய பலரை அண்ணன் கட்சியில் இருந்து தூக்கி அடித்துள்ளார்.

இந்திய ஒன்றியத்துள் நாம் தமிழ் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் நிலை நிறுத்துவோம். அது உலகின் அனைத்து தமிழர்களுக்குமான அரணாக, அரசாக அமையும்.

ஆனால் இந்தியாவை எதிரிகள் வெளியில் இருந்து நெருங்கினால் அவர்களின் முதல் எதிர்கள் தமிழர்கள்தான்.

தமிழகனே... நான், எழுதிய கருத்தை முழுமையாக உள்  வாங்கினீர்களா? 

ஆம்,  என்றால்....  கீழே உள்ள பதிலை வாசிக்கவும்.

வேட்டியே..  இல்லாமல் இருக்கும்,  உங்களுக்கு கோவணம் ஏன்?

இல்லை... என்றால்...

உங்களிடம் இருந்து...  மேல் பட்ட  கேள்வி வந்திருக்க சந்தர்ப்பம் இருந்திருக்காது. :)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழகன் said:

இந்த கட்டுரைக்கான பதில் கடலில் மேதகு படம் பொறித்த மேலாடையில் சிங்கள படையை கதற விட்ட சகோதரனின் செயலில் உள்ளது.

அண்ணன் தமிழ்நாட்டில் ஆட்சி பீடம் ஏறியதும் சிங்களர்களையும், சீனர்களையும் ஒருசேர கதற விடுவார். பொறுத்திருங்கள்.

நீங்கள் அண்ணன் அண்ணன் என அடிக்கடி நக்கல் அடிப்பது எங்களுக்கு புரிகிறது. மேலும் உங்கள் நக்கல் நையாண்டிகளை செய்ய நிறைய இடங்கள் உள்ளன. அங்கு வைத்துக் கொ(ல்)ள்ளுங்கள்.😡

 அது சரி நீங்கள் ஆயுத பயிற்சி எடுத்து விட்டீர்களா? உங்களையும் களத்தில் இறக்க உள்ளோம்.😆

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210522-230222.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நீங்கள் அண்ணன் அண்ணன் என அடிக்கடி நக்கல் அடிப்பது எங்களுக்கு புரிகிறது. மேலும் உங்கள் நக்கல் நையாண்டிகளை செய்ய நிறைய இடங்கள் உள்ளன. அங்கு வைத்துக் கொ(ல்)ள்ளுங்கள்.😡

 அது சரி நீங்கள் ஆயுத பயிற்சி எடுத்து விட்டீர்களா? உங்களையும் களத்தில் இறக்க உள்ளோம்.😆

நான் அண்ணனை நக்கல் அடித்தேனா? இங்கே பலர் என் மீது உள்நோக்கத்தோடு அபாண்டம் சொல்லி வருகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா?

எமது இனத்தின் கடைசி நம்பிக்கை அண்ணன் என்று நம்பி களமாடுபவன் நான்.

உங்களை போன்று இன்னோர் அரசியல்வாதியாக அன்றி, ஒரு காலம் தந்த கொடையாக அண்ணனை நேசிப்பவன் நான்.

அண்ணணை ஆயுத பயிற்சி என்பதன் மூலம் நக்கல் அடிப்பது நீங்கள் அல்லவா?

அண்ணன் ஒரு போதும் ஆட்சியை ஆயுத புரட்சி மூலம் கைபற்றுவதாக சொல்லியதில்லை. தேர்தல் மூலம் ஆட்சி மாற்றத்தை அல்ல அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வந்தவர்கள் நாங்கள்.

நாங்கள் கட்டிடத்துக்கு வெள்ளை அடிக்க அல்ல, கட்டிடத்தை உடைத்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வந்தவர்கள். 

நாம் தமிழர், நாமே தமிழர்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழகன் said:

1) வேஸ்டியில் பற்றிய தீ உடலை மட்டும் தீண்டாதா?

2) இந்தியாவுக்கு சீனர்களால் ஆபத்து என்றால் அது தமிழகத்தையும் சேர்த்துத்தான்.

3)இப்படியான தேச விரோத பேச்சு பேசிய பலரை அண்ணன் கட்சியில் இருந்து தூக்கி அடித்துள்ளார்.

4) இந்திய ஒன்றியத்துள் நாம் தமிழ் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் நிலை நிறுத்துவோம். அது உலகின் அனைத்து தமிழர்களுக்குமான அரணாக, அரசாக அமையும்.

5) ஆனால் இந்தியாவை எதிரிகள் வெளியில் இருந்து நெருங்கினால் அவர்களின் முதல் எதிர்கள் தமிழர்கள்தான்.

1) நிச்சயம் பற்றும்

2)தமிழகம் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் வரையில் இந்த ஆபத்து சீனர்களால் மட்டுமல்ல பாக்ஸ்தான், பங்களாதேஸ், மியன்மார், பூட்டான் மற்றும் சிறி லங்காவினால் கூட ஆபத்துத்தான். 

3) இந்தியாவின் அரசியலமைப்புக்கு எதிரான கருத்துக்களை கூறும்போது அவர்சார்ந்த கட்சியினருக்கும்/அமைப்பிற்கும் பிரச்சனைதான்.

4) வாழ்த்துக்கள் (புது விளக்குமாறு (அல்லது துடைப்பம்) நன்றாகச் சுத்தம் செய்யும்) 

5) தமிழர்கள் எப்போதும் அடிமைகளே. அவர்களுக்கு சுய சிந்தனை மிகக் குறைவு/அறவே இல்லை.

😀

4 hours ago, தமிழகன் said:

காங்கிரஸ் பாஜகவால் வழிநடத்தபடும் மத்திய அரசாங்கங்கள் மீதான வன்மத்தை இந்திய பெருந்தேசத்தின் மீது சுமத்துவது முறையல்ல.

இந்தியப் பெருந்தேசம்(இதுதான் பிரச்சனையே) பாரதீய ஜனதா அல்லது காங்கிரசால் மட்டுமே வழிநடாத்தப் படுகிறது.  ஆகையால் பழி பாவங்கள் இந்திய தேசத்தின் மீதே விழும். 

  • கருத்துக்கள உறவுகள்

//இலங்கை ஒரு தனித்தீவாக இருந்த போதும் இதனை முன்வைத்துதான் பல்லாயிரம் ஆண்டுகாலமாக தெற்காசியாவின் அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை யார் வசம் இருக்கிறதோ அந்த நாடுதான் தெற்காசியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டது என்பது புவிசார் அரசியல் கோட்பாடு.//

 

இது என்னடா புது உருட்டா இருக்கு... நான் இந்த கோட்பாடு பற்றி எந்த புத்தகத்திலும் செய்தியிலும் இப்படி வாசித்ததில்லை.. எந்த வெளிநாட்டு அரசியல் தலைவர் பேசியும் கேட்டதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு ஆண்மையற்ற நாடு என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. புலிகள் இருந்தவரை சீனாவோ ,அமெரிக்காவோ.தலை வைத்த்தும் படுக்கவில்லை. அதற்காக அவர்கள் புலிகளை விட பலம் குறைந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை.எல்லை மீறினால் புலிகள் அதற்கு இடங்கொடுக்க மாட்டார்கள். உயிரைக் கொடுத்து எதிர்ப்பார்கள். தேவையில்லாமல் சிக்கலை உருவாக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான். புலிகள் இருந்தவரை அவர்கள் இந்திய மத்திய அரசை எதிரியாகப் பார்த்தாலும். புலிகள் தமிழ் தேசத்தைப் பாதுகாத்த படியால் இந்தியாவும் பாதுகாப்பாக இருந்தது. இந்தியா புலிகளை அழித்து சீனாவுக்கு வாசலலைத் திறந்து விட்டீருக்கிறது. இந்தியாவுக்கு இப்பொழுது பெரும் ஆபத்து காத்திருக்கிறது. யானை தன்தலையில் தானே மண் அள்ளிப் போட்ட கதைதான் இந்தியாவுக்கு. இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. தமிழர் தேசததை அங்கீகரித்தால் இந்தியா தப்பலாம். கெடுகுடி சொற் கேளாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழகன் said:
4 hours ago, nunavilan said:

நீங்கள் அண்ணன் அண்ணன் என அடிக்கடி நக்கல் அடிப்பது எங்களுக்கு புரிகிறது. மேலும் உங்கள் நக்கல் நையாண்டிகளை செய்ய நிறைய இடங்கள் உள்ளன. அங்கு வைத்துக் கொ(ல்)ள்ளுங்கள்.😡

நான் அண்ணனை நக்கல் அடித்தேனா? இங்கே பலர் என் மீது உள்நோக்கத்தோடு அபாண்டம் சொல்லி வருகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா?

நுணாவிலானுக்கும்  தமிழகனுக்கும் இடையே சீமான் மீதான உரிமை பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டதா 😂 ஒருவர் மீது அளவுக்கதிகமாக அன்பு செலுத்தினால் இப்படி தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

நுணாவிலானுக்கும்  தமிழகனுக்கும் இடையே சீமான் மீதான உரிமை பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டதா 😂 ஒருவர் மீது அளவுக்கதிகமாக அன்பு செலுத்தினால் இப்படி தான்.

உங்களுக்கு அந்த பிரச்சனை இல்லை. நன்றி கடவுளே. ஜால்ராக்களுக்கு உரிமை பிரச்சனை ஏது??😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இந்தியா ஒரு ஆண்மையற்ற நாடு என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. புலிகள் இருந்தவரை சீனாவோ ,அமெரிக்காவோ.தலை வைத்த்தும் படுக்கவில்லை. அதற்காக அவர்கள் புலிகளை விட பலம் குறைந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை.எல்லை மீறினால் புலிகள் அதற்கு இடங்கொடுக்க மாட்டார்கள். உயிரைக் கொடுத்து எதிர்ப்பார்கள். தேவையில்லாமல் சிக்கலை உருவாக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான். புலிகள் இருந்தவரை அவர்கள் இந்திய மத்திய அரசை எதிரியாகப் பார்த்தாலும். புலிகள் தமிழ் தேசத்தைப் பாதுகாத்த படியால் இந்தியாவும் பாதுகாப்பாக இருந்தது. இந்தியா புலிகளை அழித்து சீனாவுக்கு வாசலலைத் திறந்து விட்டீருக்கிறது. இந்தியாவுக்கு இப்பொழுது பெரும் ஆபத்து காத்திருக்கிறது. யானை தன்தலையில் தானே மண் அள்ளிப் போட்ட கதைதான் இந்தியாவுக்கு. இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. தமிழர் தேசததை அங்கீகரித்தால் இந்தியா தப்பலாம். கெடுகுடி சொற் கேளாது.

மிக சரியாக சொன்னீர்கள் உறவே,

இந்தியா அல்ல இந்திய ஆளும் வர்க்கம் ஆண்மையற்றது. அண்ணனை போல் ஆண்மை மிக்கவர்கள் ஆட்சி பீடம் ஏறும் போது இது மாற்றம் காணும். 

அந்த நிலை ஏற்பட உழைப்பாலும், பொருளாதாரத்தாலும் அண்ணனை கட்டி எழுப்புவது நம் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

1) நிச்சயம் பற்றும்

2)தமிழகம் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் வரையில் இந்த ஆபத்து சீனர்களால் மட்டுமல்ல பாக்ஸ்தான், பங்களாதேஸ், மியன்மார், பூட்டான் மற்றும் சிறி லங்காவினால் கூட ஆபத்துத்தான். 

3) இந்தியாவின் அரசியலமைப்புக்கு எதிரான கருத்துக்களை கூறும்போது அவர்சார்ந்த கட்சியினருக்கும்/அமைப்பிற்கும் பிரச்சனைதான்.

4) வாழ்த்துக்கள் (புது விளக்குமாறு (அல்லது துடைப்பம்) நன்றாகச் சுத்தம் செய்யும்) 

5) தமிழர்கள் எப்போதும் அடிமைகளே. அவர்களுக்கு சுய சிந்தனை மிகக் குறைவு/அறவே இல்லை.

😀

இந்தியப் பெருந்தேசம்(இதுதான் பிரச்சனையே) பாரதீய ஜனதா அல்லது காங்கிரசால் மட்டுமே வழிநடாத்தப் படுகிறது.  ஆகையால் பழி பாவங்கள் இந்திய தேசத்தின் மீதே விழும். 

இந்தியாவை தமிழர் நலன் பேணும் பேரரசாக மாற்றும் தலைமை தமிழ்நாட்டில் அமையும் போது சரிவரும்.

உங்கள் 5ம் கருத்தில் அறவே உடன்பாடில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நுணாவிலானுக்கும்  தமிழகனுக்கும் இடையே சீமான் மீதான உரிமை பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டதா 😂 ஒருவர் மீது அளவுக்கதிகமாக அன்பு செலுத்தினால் இப்படி தான்.

நான் அண்ணனுக்கு உரிமை கோரவில்லை. அவர் இந்த இனத்தின் பொக்கிசம். மேதகுவின் அவதாரம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2021 at 10:35, Ahasthiyan said:

இந்தியாவும் தமிழீழமும்

கொழும்பு: இலங்கையில் கொழும்பு துறைமுகநகரம் என்ற பெயரில் சீனாவின் சுயாட்சி பிரதேசம் உருவாக இலங்கை நாடாளுமன்றமும் ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிகப் பெரும் அச்சுறுத்தலை சீனா மூலம் ஏற்படுத்தி இருக்கிறது என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இலங்கை ஒரு தனித்தீவாக இருந்த போதும் இதனை முன்வைத்துதான் பல்லாயிரம் ஆண்டுகாலமாக தெற்காசியாவின் அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை யார் வசம் இருக்கிறதோ அந்த நாடுதான் தெற்காசியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டது என்பது புவிசார் அரசியல் கோட்பாடு.

இதனடிப்படையில்தான் காலந்தோறும் இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கம் நீடித்த ஒன்றாக இருந்தது. மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி இந்த விவகாரத்தில் தெள்ளத் தெளிவான நிலைப்பாடுடன், இலங்கையில் வேறு எந்த ஒரு அன்னிய நாடு காலடி கூட வைக்கவிடாமல் வெளியுறவுக் கொள்கையை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்த இறுக்கம் தளர்ந்து போனது

அணிசேரா கொள்கையில் தளர்வு

1990களுக்குப் பிந்தைய தாராள பொருளாதார மயமாக்கல் கோட்பாடு வியாபித்து இந்தியாவையும் ஆட்டிப் படைக்க இந்தியாவின் திடமான வெளியுறவு கோட்பாடுகள் ஊசலாட்டத்துக்குள் தள்ளப்பட்டன. ஒருகாலத்தில் அணிசேரா கொள்கை பேசிய இந்தியா, மெல்ல மெல்ல அமெரிக்கா சார்பு நிலையை நோக்கிப் போனது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த அண்டை தேசங்களையும் தம் பிடியில் வைத்திருந்த இந்தியா அதன் வல்லாண்மையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது.

தமிழீழமும் தமிழரும்

இந்தியாவின் பிடி நழுவிய இடங்களில் எல்லாம் மெல்ல மெல்ல சீனா தனது இருப்பை விஸ்தீரனப்படுத்தியது. இதன் உச்சம்தான் இப்போது இலங்கையில் ஒரு சுயாட்சி பெற்ற நகரையே சீனாவினால் பெற முடிந்திருக்கிறது. இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்கள், இலங்கையின் அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளை கோரியபோது அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். அதன்விளைவாக தனித் தமிழீழம் எனும் தேசத்துக்காக ஆயுதப் போராட்டம் நடத்திய போது அழித்தொழிக்கப்பட்டார்கள் தமிழர்கள்.

சீனாவுக்கு ஒரு சுயாட்சி பிராந்தியம்

ஆனால் இலங்கைக்கு எந்தவித தொடர்புமே இல்லாத நாடுபிடி வேட்கையில் நுழைந்த சீனாவுக்கு சுயாட்சி தேசமாக ஒரு நகரையே தங்க தாம்பாளத்தில் தாரைவார்த்து கொடுத்திருக்கிறது சிங்களம். இதற்கான ஒப்புதலை இலங்கை நாடாளுமன்றமும் வழங்கிவிட்டது. கடந்த 20 ஆண்டுகால இந்திய மத்திய அரசுகள் வெளியுறவுக் கொள்கையில் எப்படி கோட்டை விட்டிருக்கிறது என்பதற்கு இந்த சீனாவின் சுயாட்சி நகரமே நல்ல எடுத்துக்காட்டு. இந்த சுயாட்சி நகரத்துக்குள் சீனா, ஆங்கிலம், சிங்களம்தான் மொழிகளாம். இங்கே தமிழுக்கு இடம் இல்லை. என்னதான் இலங்கைக்கு சொந்தமானதாக கொழும்பு நகரம் இருந்தாலும் கொழும்பு துறைமுக நகரம் என்பது சீனாவுக்கு சொந்தமாகிவிட்டது.

இந்திய பாதுகாப்புக்கு பேராபத்து

துறைமுக நகர பணிகள், வேலைவாய்ப்பு என்ற பெயரால் சீனர்கள் தங்குடையின்றி குடியேறலாம். ஏற்கனவே மன்னார் வளைகுடாவில் மிக பிரம்மாண்ட காற்றாலை அமைக்க சீனாவுக்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளது. இதனால் இந்தியாவின் தலைப்பகுதி தொடங்கும் வங்கக் கடல் பிராந்தியத்தை மிக எளிதாகவே வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது சீனா. இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு லடாக், டோக்லாம், அருணாச்சல பிரதேசங்களை விட மிக மிக மோசமான அச்சுறுத்தல் உள்ள பிரதேசமாக வங்க கடல் உருவெடுத்திருக்கிறது.

இந்தியாவும் தமிழீழமும்

இலங்கையில் தமிழீழம் உருவானால் இந்தியாவுக்குதான் பாதுகாப்பு என்கிற யதார்த்த உண்மையை இந்திரா காந்தி உணர்ந்திருந்தார். அதனால் தமிழீழம் உருவாக அவர் அத்தனை விதமான உதவிகளையும் செய்தார். ஆனால் பின்னாளில் இலங்கையில் தனி ஈழம் உருவானால் இந்திய இறையாண்மைக்கு பேராபத்து என்று உண்மைக்கு மாறாக அதிகாரவர்க்கத்தினர் குறுக்குசால் ஓட்டினர். அதனால் தமிழீழம் கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளும் 2 லட்சம் தமிழர்களும் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

இந்திய வெளியுறவு கொள்கை

இப்போது எந்த ஆயுதப் போராட்டமும் இல்லாமலேயே இலங்கைக்குள் சீனா ஒரு தேசத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தனி ஈழம், இந்தியாவுக்கு பேராபத்து எனில் தனி சீனா சுயாட்சி தேசம் இந்தியாவுக்கு நன்மையா செய்யப் போகிறது? இனியேனும் இலங்கை விவகாரத்திலும் ஈழத் தமிழரின் நியாயமான யதார்த்தமான கோரிக்கைகள் தொடர்பிலும் இந்திய வெளியுறவு சக்திகள் அதீதமான உண்மையாக அக்கறை செலுத்துவது என்பதுதான் நமது தேசத்தின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய ஒரு யுக்தியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

 https://tamil.oneindia.com/news/colombo/china-gets-overseas-colony-in-sri-lanka/articlecontent-pf551523-421655.html

 

 

சுத்தம்.

என்றைக்கு இலங்கையில் நடப்பதை தட்ஸ்தமிழ் வாசித்து அறியும் நிலைக்கு நாம் போய்விட்டோமோ அப்போதே கதை கந்தல் 🤣 என்றுதான் அர்த்தம்.

இந்த கட்டுரையும், இங்கே கருத்து (?) எழுதியவர்களுக்கும் துறைமுக நகரம் பற்றி அதன் சட்ட அமைவு பற்றி ஒரு பருக்கை அளவுக்கு கூட அறிவில்லை என்பது வெள்ளிடைமலை.

கீழே Centre for Policy Alternatives இன் கட்டுரையை இணைத்துள்ளேன். உள்ளே ஒரு slide show வும் உள்ளது. இது உச்ச நீதி மன்றம் தனது கருத்தை பாராளுமன்றுக்கு அனுப்ப முன்னான நிலை, அதன் பின் சில மாற்றங்களுடன் சட்ட மூலம் நிறைவேறியுள்ளது.

https://www.cpalanka.org/cpa-commentary-on-the-port-city-bill/

பிகு: இதை மொழி பெயர்த்து எழுதலாம் என்றே இருந்தேன். பிறகு யாராவது வந்து மொழி பெயர்ப்பில் பிழை, க்கன்னாவுக்கு குத்து போடவில்லை என egg இல் hair புடுங்குவார்கள் என்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

ஆங்கிலத்தில் உள்ளது வாசித்து அறியவும் - முடியாவிட்டாலும் காரியமில்லை இருக்கவே இருக்கிறது யாழ் களம், வாட்சப், யூடியூப் எல்லா குப்பையையும் வெட்டி ஒட்டி - நமக்கு துளியும் விளங்காத விடயங்கள் பற்றி எல்லாம் கதா பிரசங்கம் நடத்தலாம் 🤣

நிர்வாகம்

இந்த செய்தி ஏன் தமிழக செய்தியில் இருக்கிறது ?

ஊர்புதினத்துக்கு மாற்றுங்கள்.

அல்லது சீன செய்திகள் என ஒரு புது அலகை திறவுங்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2021 at 14:37, goshan_che said:

சுத்தம்.

என்றைக்கு இலங்கையில் நடப்பதை தட்ஸ்தமிழ் வாசித்து அறியும் நிலைக்கு நாம் போய்விட்டோமோ அப்போதே கதை கந்தல் 🤣 என்றுதான் அர்த்தம்.

இந்த கட்டுரையும், இங்கே கருத்து (?) எழுதியவர்களுக்கும் துறைமுக நகரம் பற்றி அதன் சட்ட அமைவு பற்றி ஒரு பருக்கை அளவுக்கு கூட அறிவில்லை என்பது வெள்ளிடைமலை.

கீழே Centre for Policy Alternatives இன் கட்டுரையை இணைத்துள்ளேன். உள்ளே ஒரு slide show வும் உள்ளது. இது உச்ச நீதி மன்றம் தனது கருத்தை பாராளுமன்றுக்கு அனுப்ப முன்னான நிலை, அதன் பின் சில மாற்றங்களுடன் சட்ட மூலம் நிறைவேறியுள்ளது.

https://www.cpalanka.org/cpa-commentary-on-the-port-city-bill/

பிகு: இதை மொழி பெயர்த்து எழுதலாம் என்றே இருந்தேன். பிறகு யாராவது வந்து மொழி பெயர்ப்பில் பிழை, க்கன்னாவுக்கு குத்து போடவில்லை என egg இல் hair புடுங்குவார்கள் என்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

ஆங்கிலத்தில் உள்ளது வாசித்து அறியவும் - முடியாவிட்டாலும் காரியமில்லை இருக்கவே இருக்கிறது யாழ் களம், வாட்சப், யூடியூப் எல்லா குப்பையையும் வெட்டி ஒட்டி - நமக்கு துளியும் விளங்காத விடயங்கள் பற்றி எல்லாம் கதா பிரசங்கம் நடத்தலாம் 🤣

நிர்வாகம்

இந்த செய்தி ஏன் தமிழக செய்தியில் இருக்கிறது ?

ஊர்புதினத்துக்கு மாற்றுங்கள்.

அல்லது சீன செய்திகள் என ஒரு புது அலகை திறவுங்கள்🤣

சரியையா,

அதில என்ன இருக்கெண்டு சுருகமாகச் சொல்லுங்கோவன். புண்ணியமாப் போகும்.

(என்ர நிலைப்பாடு; இந்தியா என்கின்ற நாடு துண்டு துண்டாக உடைய  வேண்டும். அம்புட்டுதே. 😡)

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

சரியையா,

அதில என்ன இருக்கெண்டு சுருகமாகச் சொல்லுங்கோவன். புண்ணியமாப் போகும்.

(என்ர நிலைப்பாடு; இந்தியா என்கின்ற நாடு துண்டு துண்டாக உடைய  வேண்டும். அம்புட்டுதே. 😡)

எனது முதலாவது பதிவில் கருத்தாளர் சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் எழுதுகிறார்கள் என காட்டமாக பொத்தாம் பொதுவாக கூறியது எனது பிழை. ஒரு சிலரின் “கருத்தை” பார்த்து ஏற்பட்ட கடுப்பில் அப்படி கூறியது என் தவறுதான்.

பொதுவாக சொல்வதானால் இந்த துறைமுக நகரம் சீனாவின் சிறப்பு நிர்வாக அலகல்ல. 

இதை ஹொங்காங் போன்றவற்றோடு ஒப்பிடவே முடியாது. அப்படி இருக்க இதை சீனாவின் சுயாட்சி தேசம் என கட்டுரை வரைவது எவ்வளவு அபத்தமானது?

ஆனால் எஞ்சிய இலங்கையை காட்டிலும் இந்த பகுதி வேறு வகையில், நிர்வகிக்க பட போகிறது - இந்த நிர்வாக ஏற்பாட்டில் சில சரத்துகள் யாப்பை மீறுவதா இல்லையா -அப்படியாயின் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என இலங்கை உச்ச நீதி மன்றம் இலங்கை பாராளுமன்றத்துக்கு பரிந்துரைத்து. அந்த பரிந்துரைத்த மாற்றங்களை ஏற்று, சட்டமூலம் நிறைவேறியுள்ளது.

இந்த சட்ட மூலம் இலங்கையின் இறையாண்மையை பாதிக்கிறதா? தியரிப்படி இல்லை. ஏன்? ஏனென்றால் இந்த நிர்வாக ஏற்பாட்டை தரும் சட்ட மூலத்தை சட்டமாக்குவது இலங்கை பாராளுமன்றம் - அதே போல் இதை சட்டம் இல்லாமலும் அதனால் நாளைகே ஆக்க முடியும். ஆகவே இறையாணமை, தியரிபடி இலங்கை மக்களிடம் - அவர்கள் பாராளுமன்றிலிம் ஜனாதிபதியுடனும்தான் இன்னும் இருக்கிறது.

👆🏼இது தியரி.

ஆனால் ரியாலிட்டி என்ன? இலங்கை தன் இறையாணமையை தமிழரை தவிர வேறு எல்லாரிடனும் பகிர்ந்து வெகு காலம் ஆகி விட்டது. இதில் அதிக ஆழுமை இப்போதே சீனாதான். இனி அது இன்னும் கூடும்.

ஜெருசலேம், ரோம் போன்ற பழைய நகரங்களில் குவாட்டர் என மக்கள் வாழும் பகுதிகளை பிரிப்பார்கள். Armenian quarter, Latin quarter, Jewish quarter இப்படியாக. இதை போல இது ஒரு Chinese quarter. இங்கே மட்டற்ற சுதந்திரத்தில் சீன நிறுவனங்கள் வளரும், சீன மக்கள் வாழ்வர். Free Trade Zone போல வரி இதர சலுகைகள் இருக்கும். 

ஆனால் இது சீனாவின் சுயாட்சி பிரதேசம் இல்லை. 

 

இந்தியா சிதற வேண்டும் என்பதுதான் என் ஆசையும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இந்தியா சிதற வேண்டும் என்பதுதான் என் ஆசையும்.

எம்மிடையே எந்த  முரண்பாடுகள் 

உரசல்கள்

இருந்தாலும் இந்த விடயத்தில் மட்டும் ஒற்றுமை  இருந்தால் போதும்😍

  • கருத்துக்கள உறவுகள்

https://www.colombotelegraph.com/index.php/colombo-port-city-economic-commission-an-authority-without-any-real-authority/
 

இந்த கட்டுரையின் படி முதல் சட்டமூலத்தில் இருந்த பல சரத்துகளை உச்ச நீதிமன்றம் மாற்றியதால் இப்போ இந்த துறைமுக நகர அதிகார சபை ஒரு அதிகாரம் அற்ற சபையாக மாறி விட்டது என்கிறார் பத்தியாளர்.

இவர் ராசபட்ச விசுவாசியாக அறியபட்டவர் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

எனது முதலாவது பதிவில் கருத்தாளர் சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் எழுதுகிறார்கள் என காட்டமாக பொத்தாம் பொதுவாக கூறியது எனது பிழை. ஒரு சிலரின் “கருத்தை” பார்த்து ஏற்பட்ட கடுப்பில் அப்படி கூறியது என் தவறுதான்.

பொதுவாக சொல்வதானால் இந்த துறைமுக நகரம் சீனாவின் சிறப்பு நிர்வாக அலகல்ல. 

இதை ஹொங்காங் போன்றவற்றோடு ஒப்பிடவே முடியாது. அப்படி இருக்க இதை சீனாவின் சுயாட்சி தேசம் என கட்டுரை வரைவது எவ்வளவு அபத்தமானது?

ஆனால் எஞ்சிய இலங்கையை காட்டிலும் இந்த பகுதி வேறு வகையில், நிர்வகிக்க பட போகிறது - இந்த நிர்வாக ஏற்பாட்டில் சில சரத்துகள் யாப்பை மீறுவதா இல்லையா -அப்படியாயின் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என இலங்கை உச்ச நீதி மன்றம் இலங்கை பாராளுமன்றத்துக்கு பரிந்துரைத்து. அந்த பரிந்துரைத்த மாற்றங்களை ஏற்று, சட்டமூலம் நிறைவேறியுள்ளது.

இந்த சட்ட மூலம் இலங்கையின் இறையாண்மையை பாதிக்கிறதா? தியரிப்படி இல்லை. ஏன்? ஏனென்றால் இந்த நிர்வாக ஏற்பாட்டை தரும் சட்ட மூலத்தை சட்டமாக்குவது இலங்கை பாராளுமன்றம் - அதே போல் இதை சட்டம் இல்லாமலும் அதனால் நாளைகே ஆக்க முடியும். ஆகவே இறையாணமை, தியரிபடி இலங்கை மக்களிடம் - அவர்கள் பாராளுமன்றிலிம் ஜனாதிபதியுடனும்தான் இன்னும் இருக்கிறது.

👆🏼இது தியரி.

ஆனால் ரியாலிட்டி என்ன? இலங்கை தன் இறையாணமையை தமிழரை தவிர வேறு எல்லாரிடனும் பகிர்ந்து வெகு காலம் ஆகி விட்டது. இதில் அதிக ஆழுமை இப்போதே சீனாதான். இனி அது இன்னும் கூடும்.

ஜெருசலேம், ரோம் போன்ற பழைய நகரங்களில் குவாட்டர் என மக்கள் வாழும் பகுதிகளை பிரிப்பார்கள். Armenian quarter, Latin quarter, Jewish quarter இப்படியாக. இதை போல இது ஒரு Chinese quarter. இங்கே மட்டற்ற சுதந்திரத்தில் சீன நிறுவனங்கள் வளரும், சீன மக்கள் வாழ்வர். Free Trade Zone போல வரி இதர சலுகைகள் இருக்கும். 

ஆனால் இது சீனாவின் சுயாட்சி பிரதேசம் இல்லை. 

 

இந்தியா சிதற வேண்டும் என்பதுதான் என் ஆசையும்.

இலங்கை பாராளுமன்றம் என்ன சட்டம் இயற்றுகிறது 
இந்திய லோக்சபா என்ன சொல்கிறது என்பது சீனாவுக்கு ஒரு பொருட்டே இல்லை 

இவைகளுக்கு எதிராக எதுவும் சீனா செய்ததுமில்லை செய்யபோவதும் இல்லை 
எந்த நாட்டுடனும் சீனா நேரடியான யுத்தத்தை செய்வதில்லை ... இனியொரு 20-30 வருடங்களுக்கு 
அவர்கள் செய்யவும் மாட்டார்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன். 

அவர்களுடைய யுத்தம் சத்தமில்லாத பொருளாதார (நேர்த்தியான திட்டமிட்ட) யுத்தம் 
தந்திரோபாயம் ஆடுற மாட்டை ஆடி கறப்பது பாடுற மாட்டை பாடி கறப்பது 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ராம் மேடை மேடையாக சீனாவுக்கு எதிராக 
பேச சொல்லியும் எப்படி பேசுவது என்றும் ஒருவேளை சீனாவே சொல்லி கொடுத்தும் இருக்கலாம் 
அவர் என்ன பேசுகிறார் என்பது அவர்களுக்கு பொருட்டு இல்லை உடன்படிக்கைகளில் 
ஒரு எள்ளும் தவறாது இருந்தால் போதும் 

இப்போது இலங்கை உள்நாட்டு மக்களின் உணர்வுகளை சீனா உன்னிப்பாக கவனித்து வரும் 
வெகுவிரைவில்  கோத்த பயலை சீனாவுக்கு எதிராக பேச சொல்லி சொல்லி கொடுக்கும் 
சீனா அத்து மீறி ஆடினால் முள்ளிவாய்க்கால் போல போர்ட் சிற்றியையும் புடுங்கி எறிந்துவிடுவேன் 
என்று ஒரு கூட்டத்தில் பேசினால் ....... பெரும்பாண்மை இனவெறி சிங்களவர்களுக்கு மனம் குளிர அதுவே போதும். போர்ட் சிற்றியை புடுங்கி ஏறிய எவ்வளவு பணம் வேண்டும் எங்கிருந்து வரும் போன்ற கேள்விகள் அவர்களுக்கு வர  போவதில்லை.  

சீன இளம் பெண்களுக்கு சிங்களம் சொல்லி கொடுத்து கொழும்பில் கொண்டுவந்து இறக்கி இருக்கிறார்கள் 
இனவெறி சிங்களவர்கள் தமது மொழி சீனாவரை பரவி இருக்கிறது என்றும் சிங்கள மொழியே உலகில் தலை சிறந்த  மொழி என்றும் (அதுவே தமிழ் கொப்பி) ஆர்ப்பரித்து கொள்கிறார்கள்.
அப்ப அப்ப இப்படியான குளிர்ச்சியான ட்ரீட்மெண்ட் மூலம் உள்நாட்டு சூட்டை அடக்கி கொள்வார்கள் 

இலங்கை நில  கடற்பரப்பு இலங்கை பாராளுமன்ற + சட்டசபை அதிகாரத்துக்கு உட்பட்ட ஒன்றுதானே? 
புதிதாக போர்ட் சிற்றிக்கு ஒரு சட்ட மூலம் அமுலாகிறது என்பதே ... மாறுபட்ட ஒன்றுதானே?
இப்போதைக்கு இந்த சின்ன சின்ன மாறுதல்கள்தான் எதிர்காலத்தில் மீண்டும் மீள பெற முடியாத 
இடத்தில் கொண்டுபோய் நிறுத்தும் ... அது எந்த இடம் என்பது இப்போதே சீனாவுக்கு தெரியும் 
சிங்கள இனவெறியர்களுக்கு தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

மருதர்,

சீனாவின் அணுமுறை பற்றி நீங்கள் எழுதிய முற்பாதியில் தவறில்லை.

ஆனால் 👇இதில் உடன்பாடில்லை.

43 minutes ago, Maruthankerny said:

வெகுவிரைவில்  கோத்த பயலை சீனாவுக்கு எதிராக பேச சொல்லி சொல்லி கொடுக்கும் 
சீனா அத்து மீறி ஆடினால் முள்ளிவாய்க்கால் போல போர்ட் சிற்றியையும் புடுங்கி எறிந்துவிடுவேன் 
என்று ஒரு கூட்டத்தில் பேசினால் ....... பெரும்பாண்மை இனவெறி சிங்களவர்களுக்கு மனம் குளிர அதுவே போதும். போர்ட் சிற்றியை புடுங்கி ஏறிய எவ்வளவு பணம் வேண்டும் எங்கிருந்து வரும் போன்ற கேள்விகள் அவர்களுக்கு வர  போவதில்லை.  

சீனா இலங்கையில் பெளத்தம், மொழி, நிலம், மனித உரிமை எதிலும் தலையிடாது. இப்போதே மஹாநாயக்கர்களை வாங்கியாகி விட்டது. முழு சிங்கள-பெளத்த இயந்திரத்தினதும் நண்பனாக தன்னை ஆக்கி கொண்டும் விட்டது. இனி தொடர்ந்து இந்திய/தமிழ்/போர்குற்ற விசாரணைகளை காட்டியபடி பெரும்பான்மையை தன் கட்டுக்குள் வைத்துகொள்ளும்.

இது இப்படியே தொடரும் வரை இதை எதிர்கவேண்டிய தேவை எந்த இலங்கை அரசியல்வாதிக்கும் இல்லை.

சீனா இலங்கையில் பெறுவது நிலத்தை, வளத்தை, அதிகாரத்தை அல்ல - தமது ஆளுமையை.

இதனால்தான் இன்னொரு திரியில் இஸ்ரேல்-அமெரிக்க உறை காட்டினேன். இஸ்ரேலில் யாரும் தாம் அமரிகாவால் ஆளப்படுவதாக உணர்வதில்லை ஆனால் உலகில் அமெரிக்க ஆதிக்கம் அதிகம் உள்ள நாடு அதுதான். 

அப்படித்தான் சீனாவுக்கு இலங்கை அமைய போகிறது.

துறைமுக நகரம் இல்லை முழு நாட்டிலும் சீனா அரசு விரும்பியதை செய்யும் நிலை வருகிறது. ஆனால் இது பெளத்த சிங்களத்துக்கு பொருட்டில்லை.

ஏற்கனவே பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் செய்ததை விட கொஞ்சம் அதிகம் சீனாவுக்கு குனிய போகிறார்கள்.

ஆனால் சீன பெளத்தத்தில் கை வைக்காதவரை, தமிழருக்கு பரிந்து பேசாதவரை, இந்தியா உள்ளே வராதவரை - அவர்களுக்கு இந்த ஏற்பாட்டில் எந்த குறையும் இல்லை.

56 minutes ago, Maruthankerny said:

இனவெறி சிங்களவர்கள் தமது மொழி சீனாவரை பரவி இருக்கிறது என்றும் சிங்கள மொழியே உலகில் தலை சிறந்த  மொழி என்றும் (அதுவே தமிழ் கொப்பி) ஆர்ப்பரித்து கொள்கிறார்கள்.
அப்ப அப்ப இப்படியான குளிர்ச்சியான ட்ரீட்மெண்ட் மூலம் உள்நாட்டு சூட்டை அடக்கி கொள்வார்கள் 

இந்த வெறியை இன்னும் ஊட்டி. ஆஹா என்னே அழகான மொழி. சீனத்தை போல செழித்த மொழி என நல்லா ஐஸ் பெட்டி கணக்கில் வைக்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.