Jump to content

ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல்

திருட்டு என்பது சிலருக்கு ஒரு மன வியாதி. ஒரு சிறிய பொருளாயினும், அதனை திருடிக்கொண்டு சேர்ப்பது ஒரு திரில். அந்த திரிலுக்காகவே தமது கல்வி, வேலை அனைத்தையுமே இழந்து நாசமாகும் பலரையும் காண்போம்.

இதனை மருத்துவ உலகு அங்கீகரித்தாலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சரி விசயத்துக்கு வருவோம். ஒரு பிபிசி நிகழ்ச்சி பார்த்தேன். பாலியல் பலாத்கார வழக்கு.

ஒரு பெண். அவரது வீட்டில் ஒரு சிறிய பிரச்சனை. அதனை திருத்த ஆள் வேண்டும். சூப்பர்மார்கெட் நோட்டீஸ் போர்ட்டில் ஒரு விளம்பரம். அந்த வகை வேலைகளை சிறப்பாக செய்யும் ஒருவர் குறித்து தொலைபேசி இலக்கத்துடன் இருந்தது. பேசினார். தனது பெயர் மக்தி  அஹமத் என்றும் தான் ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவர் என்றும், ஒரு பரீட்சைக்கு தயாராவதால், சம்பளம் இல்லாத லீவு எடுத்து உள்ளதாகவும், இது தனது பொழுது பொக்கு என்பதால், கைச்செலவுக்காக செய்வதாகவும் சொன்னார்.

அவரது பேச்சு, மனேர்ஸ் அவர் உண்மையிலேயே படித்தவர் என்பதை சொல்ல, வீட்டு முகவரியும் கொடுத்தார் அவர். வந்தவர் சிறப்பாக அந்த பிரச்சனையை தீர்த்துக் கொடுத்தார்.

அதே வேளை அந்த இளம் பெண் தனியே இருப்பதனையும் உறுதி செய்து கொண்டார். போகும் போது, நாளை இந்த பக்கம் வருவேன், இதனை மீண்டும் செக் பண்ணி, எல்லாம் ஓகேயா என்று பார்க்கிறேன், நீ இருப்பாயா என்று கேட்க, அவரும், ஆமாம் இருப்பேன். எங்கேயும் போகமாட்டேன், என்றார் வரப்போகும் பெரும் வில்லங்கத்தினை உணராமல்.

அடுத்த நாள் வந்தார். செக் பண்ணினார். பாத்ரூம் போகலாமா என்றார். மேலே இருக்கிறது என்றார் பெண். போனார். வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருப்பார் போலும்.

இதைப் பார்த்தீர்களா, பெண்ணை மேலே அழைத்தார். பெண்ணும் சென்றார்.

24 மணி நேரம், பெண்ணை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, பல முறை பாலியல் வக்கிரம் செய்தார். வெளியேறினார்.

பெண் பித்து பிடித்தவர் போல இருத்திருக்கிறார். பல மணி நேரத்துக்கு பின்னரே, போலீசாரை அழைத்து இருக்கிறார்.

****

அந்த பெண்ணின் நிலையினை உணர்ந்த போலீசார், ஆன் எனும் போலீஸ்காரியை விசாரணைக்கு பொறுப்பாக அமர்த்தினார்கள்.

ஆனுக்கு முன் பெரிய சவால். இரண்டு முக்கிய விடயம் மட்டுமே அவரிடம் இருந்தன.

மக்தி என்னும் பெயர், முகத்தில் வலது பக்கத்தில் ஒரு மரு.  போன் இயங்கவில்லை. நோட்டீஸ் போர்ட்டில் போட்ட போது, cctv இருக்கவில்லை அல்லது இயங்கவில்லை. ஆகவே அங்கேயும் சிக்கவில்லை.

வேறு யாருக்கும் இவர் சேவை செய்தாரா என்று கேட்பதில் பலன் இல்லை. ஆகவே என்ன செய்வது. அவர் ஒரு டாக்டர் என்று பொய் சொல்லி இருக்கலாம். அவர்கள் இப்படி கீழ்த்தரமான கிரிமினல் வேலைகளை செய்வார்களா என்ன என்று நினைத்திருந்தார்.

வீட்டில் இருந்து டீவியை பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்தார். செய்தியில், இங்கிலாந்தின் பொது மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒரு கேள்விக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பொறி ஒன்று தட்டியது. மறுநாள் அவர்களது அலுவலகத்தினை அழைத்தார். மக்தி அஹமத் என்ற பெயரில் உள்ள சகல டாக்டர் பெயர் லிஸ்ட் வேண்டுமே. 

வந்தது.

மருத்துவ கவுன்சில், பதிவு இருந்தால் மட்டுமே வேலை செய்ய முடியும். பதிவுக்கு படங்கள் கொடுக்க வேண்டும்.

படம் என்றால், முகத்தில் அந்த மரு இருக்குமே.... 

இருந்தது ஒருவருக்கு.....

மீண்டும் அழைத்தார், அந்த நபர் எங்கே வேலை செய்கிறார் என்று சொல்ல முடியுமா?

சில கண நேர மௌனம். நூறாண்டுகள் செல்வது போல தவித்தார் ஆன்.

மன்னிக்க வேண்டும், ஆபிசர் ஆன்,  திருட்டு ஒன்று காரணமாக, அவர் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இனி அவர் வேலை செய்ய முடியாதே. 

'எப்போது நடந்தது அது'.....  'ஐந்து வருடமாகிறது'.

சாண், ஏற முலம் சறுக்கியது. அடுத்து என்ன..... காபி மெசின் பக்கம் போனார். அழுத்தினார். எடுக்காமலே யோசனையில் இருந்தார். பின்னால் வந்தார் இன்னோரு அதிகாரி.

என்ன, ஆன் கப்பினை  எடுக்காமலே யோசனையிலே இருக்கிறாய் என்றார் அவர்.

விசயத்தினை சொன்னார்.

****

அட இதுவா விசயம்.

இப்ப, ஆள் விசயம், கைவிரல், எல்லாமே நம்ம போலீஸ் டேட்டாபேஸில் இருக்குமே....

அட.... ஆமால்ல... காபி கப்பினை வீசி விட்டு விரைந்தார்.

அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்தார்.... பல படங்களை வைத்தார், மரு உள்ள படங்கள். அதில் மக்தி படமும் இருந்தது.

24 மணிநேரம் மிக அண்மையாக இருந்த ஒருவர், மறக்க முடியுமா?

இவன்தான் என்று கை காட்டினார்.

சரி நெருங்கியாகி விட்டது, ஆள் எங்கே என்று தேடுவது.

மண்டையை போட்டு உடைத்தார். போன் நம்பர்.... கம்பெனிக்கு அடித்தார்... அது PAY AS YOU GO: இலக்கம். முகவரி இராது.

 

*****

அவரது பழைய வேலை இடத்துக்கு சென்று, நண்பர்கள் இருப்பார்களா என்று விசாரித்தால், அனைவரும் ஒதுங்கிக் கொள்கிறார்கள். 

அவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. 6 வாரத்தில் வந்து இருந்தார். கிரிமினல் ரெகார்ட் காரணமாக இவர் வீடுகள் எடுத்து இருக்க முடியாது. ஆகவே யாராவது நண்பர்கள் உதவி இருக்க வேண்டும்.

மிக கடுமையான தேடல்களின் பின்னர், இவர் தங்கி இருந்த முகவரி கிடைத்தது.

போனார். ஆள் இல்லை. இரண்டு வருடத்துக்கு முன்னரே போய் விட்டாரே. 

ம்ம்ம்.. நன்றி சொல்லி, கிளம்பிய போது... ஒரு நிமிடம்... தனக்கு வரக்கூடிய கடிதங்களை தனக்கு forward பண்ணுமாறு ஒரு முகவரி தந்து போனார்.

அந்த முகவரிக்கு சென்றார் ஆன். அது பெட் & பிரெக்பாஸ்ட் அமைப்பு. 

ஆமாம், இந்த படத்தில் உள்ள நபர் இங்கே இருந்தார். பணம் தர முடியாததால், போனவாரம் அனுப்பி வைத்தோம். ஒரு காரில் கிளம்பி சென்றார், எங்கே போனார் என்று தெரியவில்லை.

cctv பார்த்து, கார் இலக்கம் பிடித்து, காரை பிடித்து.... ட்ரைவரை கண்டு பிடித்து.....

.... கேட்டால் தனது நண்பர் ஒருவரின் மூடப்பட்ட ரெஸ்டாரண்ட் ஒன்றின் மேல்தளத்தில் தங்கி இருக்கிறார் என்று தகவல் கிடைத்தது.

போலீசார் சென்றபோது, நல்ல உறக்கத்தில் இருந்தார் டாக்டர் மக்தி அஹமது MBBS. 

கட்டிலில் என்று நினைப்பீர்கள். இல்லை. 

அவரது கல்விக்கும் பொருத்தம் இல்லாத ஒரு கேவலமான நிலையில், ஒரு அழுக்கான இடத்தில், ஒரு மேசையின் கீழ், ஸ்லீப்பிங் பை ஒன்றினுள் குறுக்கியபடியே படுத்திருந்தார். 

பத்து வருட தண்டனை வழங்கப்பட்டு உள்ளே இருக்கிறார். 

இளமையில் திரில் காரணமாக திருடியது, தனது வாழ்வினையே நாசமாக்கியது என்று சொல்லி அழுதார்.  திருட்டு விடயமாக சிக்கியபின்னர், தனது மனைவி, பிள்ளையுடன் தன்னை விட்டு நீங்கி, விவாகரத்து செய்து விட்டதாகவும் அழுதார் அவர்.

எல்லாம் இழந்த பின்னர், இனி என்ன வாழ்வு என்று விரக்தி கொண்டே, மேலும் தவறுகள் இழைத்ததாகவும் சொன்னார் அவர்.

ஒரு டாக்டர். மிகச்சிறப்பான பல்கலைக்கழக கல்வி. பிரயோசனம் இல்லாமல் போய் விட்டதே.

****

இதனை எழுதும் போது, தமிழ் சிறியர் சொன்ன ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. மைதானத்தில் ஒரு பேனையினை கண்டு எடுத்துக் கொண்டு வீடு போயிருக்கிறார். அதனை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு வருமாறு இரவு நேரத்தில் தந்தை திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்.

****

சிறு, சிறு திருட்டுகளை சிரித்து ஊக்குவிக்க கூடாது. உடனேயே அதனை கண்டித்து திருத்த வேண்டும், இல்லாவிடில் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதே இந்த கதை சொல்லும் கருத்து.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல்

திருட்டு என்பது சிலருக்கு ஒரு மன வியாதி. ஒரு சிறிய பொருளாயினும், அதனை திருடிக்கொண்டு சேர்ப்பது ஒரு திரில். அந்த திரிலுக்காகவே தமது கல்வி, வேலை அனைத்தையுமே இழந்து நாசமாகும் பலரையும் காண்போம்.

இதனை மருத்துவ உலகு அங்கீகரித்தாலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சரி விசயத்துக்கு வருவோம். ஒரு பிபிசி நிகழ்ச்சி பார்த்தேன். பாலியல் பலாத்கார வழக்கு.

ஒரு பெண். அவரது வீட்டில் ஒரு சிறிய பிரச்சனை. அதனை திருத்த ஆள் வேண்டும். சூப்பர்மார்கெட் நோட்டீஸ் போர்ட்டில் ஒரு விளம்பரம். அந்த வகை வேலைகளை சிறப்பாக செய்யும் ஒருவர் குறித்து தொலைபேசி இலக்கத்துடன் இருந்தது. பேசினார். தனது பெயர் மக்தி  அஹமத் என்றும் தான் ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவர் என்றும், ஒரு பரீட்சைக்கு தயாராவதால், சம்பளம் இல்லாத லீவு எடுத்து உள்ளதாகவும், இது தனது பொழுது பொக்கு என்பதால், கைச்செலவுக்காக செய்வதாகவும் சொன்னார்.

அவரது பேச்சு, மனேர்ஸ் அவர் உண்மையிலேயே படித்தவர் என்பதை சொல்ல, வீட்டு முகவரியும் கொடுத்தார் அவர். வந்தவர் சிறப்பாக அந்த பிரச்சனையை தீர்த்துக் கொடுத்தார்.

அதே வேளை அந்த இளம் பெண் தனியே இருப்பதனையும் உறுதி செய்து கொண்டார். போகும் போது, நாளை இந்த பக்கம் வருவேன், இதனை மீண்டும் செக் பண்ணி, எல்லாம் ஓகேயா என்று பார்க்கிறேன், நீ இருப்பாயா என்று கேட்க, அவரும், ஆமாம் இருப்பேன். எங்கேயும் போகமாட்டேன், என்றார் வரப்போகும் பெரும் வில்லங்கத்தினை உணராமல்.

அடுத்த நாள் வந்தார். செக் பண்ணினார். பாத்ரூம் போகலாமா என்றார். மேலே இருக்கிறது என்றார் பெண். போனார். வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருப்பார் போலும்.

இதைப் பார்த்தீர்களா, பெண்ணை மேலே அழைத்தார். பெண்ணும் சென்றார்.

24 மணி நேரம், பெண்ணை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, பல முறை பாலியல் வக்கிரம் செய்தார். வெளியேறினார்.

பெண் பித்து பிடித்தவர் போல இருத்திருக்கிறார். பல மணி நேரத்துக்கு பின்னரே, போலீசாரை அழைத்து இருக்கிறார்.

****

அந்த பெண்ணின் நிலையினை உணர்ந்த போலீசார், ஆன் எனும் போலீஸ்காரியை விசாரணைக்கு பொறுப்பாக அமர்த்தினார்கள்.

ஆனுக்கு முன் பெரிய சவால். இரண்டு முக்கிய விடயம் மட்டுமே அவரிடம் இருந்தன.

மக்தி என்னும் பெயர், முகத்தில் வலது பக்கத்தில் ஒரு மரு.  போன் இயங்கவில்லை. நோட்டீஸ் போர்ட்டில் போட்ட போது, cctv இருக்கவில்லை அல்லது இயங்கவில்லை. ஆகவே அங்கேயும் சிக்கவில்லை.

வேறு யாருக்கும் இவர் சேவை செய்தாரா என்று கேட்பதில் பலன் இல்லை. ஆகவே என்ன செய்வது. அவர் ஒரு டாக்டர் என்று பொய் சொல்லி இருக்கலாம். அவர்கள் இப்படி கீழ்த்தரமான கிரிமினல் வேலைகளை செய்வார்களா என்ன என்று நினைத்திருந்தார்.

வீட்டில் இருந்து டீவியை பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்தார். செய்தியில், இங்கிலாந்தின் பொது மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒரு கேள்விக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பொறி ஒன்று தட்டியது. மறுநாள் அவர்களது அலுவலகத்தினை அழைத்தார். மக்தி அஹமத் என்ற பெயரில் உள்ள சகல டாக்டர் பெயர் லிஸ்ட் வேண்டுமே. 

வந்தது.

மருத்துவ கவுன்சில், பதிவு இருந்தால் மட்டுமே வேலை செய்ய முடியும். பதிவுக்கு படங்கள் கொடுக்க வேண்டும்.

படம் என்றால், முகத்தில் அந்த மரு இருக்குமே.... 

இருந்தது ஒருவருக்கு.....

மீண்டும் அழைத்தார், அந்த நபர் எங்கே வேலை செய்கிறார் என்று சொல்ல முடியுமா?

சில கண நேர மௌனம். நூறாண்டுகள் செல்வது போல தவித்தார் ஆன்.

மன்னிக்க வேண்டும், ஆபிசர் ஆன்,  திருட்டு ஒன்று காரணமாக, அவர் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இனி அவர் வேலை செய்ய முடியாதே. 

'எப்போது நடந்தது அது'.....  'ஐந்து வருடமாகிறது'.

சாண், ஏற முலம் சறுக்கியது. அடுத்து என்ன..... காபி மெசின் பக்கம் போனார். அழுத்தினார். எடுக்காமலே யோசனையில் இருந்தார். பின்னால் வந்தார் இன்னோரு அதிகாரி.

என்ன, ஆன் கப்பினை  எடுக்காமலே யோசனையிலே இருக்கிறாய் என்றார் அவர்.

விசயத்தினை சொன்னார்.

****

அட இதுவா விசயம்.

இப்ப, ஆள் விசயம், கைவிரல், எல்லாமே நம்ம போலீஸ் டேட்டாபேஸில் இருக்குமே....

அட.... ஆமால்ல... காபி கப்பினை வீசி விட்டு விரைந்தார்.

அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்தார்.... பல படங்களை வைத்தார், மரு உள்ள படங்கள். அதில் மக்தி படமும் இருந்தது.

24 மணிநேரம் மிக அண்மையாக இருந்த ஒருவர், மறக்க முடியுமா?

இவன்தான் என்று கை காட்டினார்.

சரி நெருங்கியாகி விட்டது, ஆள் எங்கே என்று தேடுவது.

மண்டையை போட்டு உடைத்தார். போன் நம்பர்.... கம்பெனிக்கு அடித்தார்... அது PAY AS YOU GO: இலக்கம். முகவரி இராது.

 

*****

அவரது பழைய வேலை இடத்துக்கு சென்று, நண்பர்கள் இருப்பார்களா என்று விசாரித்தால், அனைவரும் ஒதுங்கிக் கொள்கிறார்கள். 

அவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. 6 வாரத்தில் வந்து இருந்தார். கிரிமினல் ரெகார்ட் காரணமாக இவர் வீடுகள் எடுத்து இருக்க முடியாது. ஆகவே யாராவது நண்பர்கள் உதவி இருக்க வேண்டும்.

மிக கடுமையான தேடல்களின் பின்னர், இவர் தங்கி இருந்த முகவரி கிடைத்தது.

போனார். ஆள் இல்லை. இரண்டு வருடத்துக்கு முன்னரே போய் விட்டாரே. 

ம்ம்ம்.. நன்றி சொல்லி, கிளம்பிய போது... ஒரு நிமிடம்... தனக்கு வரக்கூடிய கடிதங்களை தனக்கு forward பண்ணுமாறு ஒரு முகவரி தந்து போனார்.

அந்த முகவரிக்கு சென்றார் ஆன். அது பெட் & பிரெக்பாஸ்ட் அமைப்பு. 

ஆமாம், இந்த படத்தில் உள்ள நபர் இங்கே இருந்தார். பணம் தர முடியாததால், போனவாரம் அனுப்பி வைத்தோம். ஒரு காரில் கிளம்பி சென்றார், எங்கே போனார் என்று தெரியவில்லை.

cctv பார்த்து, கார் இலக்கம் பிடித்து, காரை பிடித்து.... ட்ரைவரை கண்டு பிடித்து.....

.... கேட்டால் தனது நண்பர் ஒருவரின் மூடப்பட்ட ரெஸ்டாரண்ட் ஒன்றின் மேல்தளத்தில் தங்கி இருக்கிறார் என்று தகவல் கிடைத்தது.

போலீசார் சென்றபோது, நல்ல உறக்கத்தில் இருந்தார் டாக்டர் மக்தி அஹமது MBBS.

பத்து வருட தண்டனை வழங்கப்பட்டு உள்ளே இருக்கிறார். 

இளமையில் திரில் காரணமாக திருடியது, தனது வாழ்வினையே நாசமாக்கியது என்று சொல்லி அழுதார்.  திருட்டு விடயமாக சிக்கியபின்னர், தனது மனைவி, பிள்ளையுடன் தன்னை விட்டு நீங்கி, விவாகரத்து செய்து விட்டதாகவும் அழுதார் அவர்.

எல்லாம் இழந்த பின்னர், இனி என்ன வாழ்வு என்று விரக்தி கொண்டே, மேலும் தவறுகள் இழைத்ததாகவும் சொன்னார் அவர்.

ஒரு டாக்டர். மிகச்சிறப்பான பல்கலைக்கழக கல்வி. பிரயோசனம் இல்லாமல் போய் விட்டதே.

****

இதனை எழுதும் போது, தமிழ் சிறியர் சொன்ன ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. மைதானத்தில் ஒரு பேனையினை கண்டு எடுத்துக் கொண்டு வீடு போயிருக்கிறார். அதனை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு வருமாறு இரவு நேரத்தில் தந்தை திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்.

****

சிறு, சிறு திருட்டுகளை சிரித்து ஊக்குவிக்க கூடாது. உடனேயே அதனை கண்டித்து திருத்த வேண்டும், இல்லாவிடில் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதே இந்த கதை சொல்லும் கருத்து.
 

நாதம்,

எழுதி முடிஞ்சோ? கருத்து எழுத இப்ப 2.30 மணத்தியாலமா நான் வெயிட்டிங் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இதனை மருத்துவ உலகு அங்கீகரித்தாலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பகிடியில்லை நாதம், உண்மையிலே ரசித்து வாசித்தேன்.

கடைசியில் போட்டிருந்த மெசேஜ் நைஸ் டச்👌.

ஒரு கொசுறு தகவல்:

இந்த சிறு திருட்டுக்களை கிளெப்டோமேனியா என்பார்கள். நீங்கள் சொன்னது போல் இது இருப்பதை ஒரு defence ஆக காட்டி திருட்டு வழக்கில் இருந்து தப்ப முடியாதுதான்.

ஒரு குற்றம் செய்ததாக காணப்பட ஒருவரின் செயலும்(act), அந்த குற்றத்தை செய்ய விரும்பிய மன நிலையும் முக்கியம் (intention).

பொதுவாக ஒருவரது intention ஐ இல்லாது ஆக்கும் மனநிலைகளுக்கே diminished responsibility அதாவது அந்த செயலை செய்யும் எண்ணம் வரும் அளவுக்கு மனநிலை உள்ளவர் அல்ல என்ற அடிப்படையில் விலக்கு (defence) வழங்கபடும்.

ஆனால் இப்படியான திருட்டுகளில் திருட்டு செயலும், திருடும் எண்ணமும் இருப்பதால் சட்டம் இதை ஒரு திருட்டாகவே கருதும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் பெருவிளையாடல் அல்லவே. டாக்குத்தர் சின்ன திருட்டுக்களை விட்டுவிட்டு பாம்பெண்ணை பிஸினஸ் செய்திருக்கலாம்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய ராணியின் பாட்டி குயீன் மேரி (5 ம் ஜோர்ஜின் மனைவி) க்கும் இந்த பிரச்சனை இருந்ததாக சொல்வார்கள்.

சொல்ல மறந்தது:

பி பி சியில் பார்த்ததை மிகவும் தத் ரூபமாக எழுதியுள்ளீர்கள். 👏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான எழுத்து நடை.. திறில் படம் பார்த்ததுபோல் இருந்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில வாழ்ந்த காலங்களில சில கிழவியள் கதை சொல்லுற போது, கேட்டுக்கொண்டே இருக்க வேணும் போல இருக்கும்!
அது மாதிரி...அடுத்ததாக என்ன நடக்குமோ என ஆவலைத் தூண்டும் ஒரு எழுத்து நடை..!
தொடர்ந்தும் எழுதுங்கள்,நாதம்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறும்படம் பார்த்த மாதிரி இருக்கிறது.

தகவலுக்கு நன்றி நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நாத்தின் எழுத்தைப் பற்றி எழுதியவர்களுக்கு ஒரு விடையம்.அவர் இப்படியான பலதை ழுதியுள்ளார்.அப்படி எழுதுவதில் அபார திறமையுள்ளவர்.ஆனால் விதி யாரைத்தான் விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மூச்சில் வாசிக்க வைத்த, சிறப்பான எழுத்து.  நன்றி நாதம்ஸ். 👍 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Meilleurs GIFs Rusk | Gfycat

சிறியர் கொண்டுபோன பேனை எழுதாத பேனையாய் இருக்குமோ........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இங்கு நாத்தின் எழுத்தைப் பற்றி எழுதியவர்களுக்கு ஒரு விடையம்.அவர் இப்படியான பலதை ழுதியுள்ளார்.அப்படி எழுதுவதில் அபார திறமையுள்ளவர்.ஆனால் விதி யாரைத்தான் விட்டது.

விதி (rule) எல்லாருக்கும் பொதுவானது. 

அது யாரையும் விடாது.

முகமன் பாராது.

எல்லாருக்கும் நல்ல பிள்ளைக்கு நடிக்காது.

நேற்று நல்லா எழுதினார் என்று இன்றைய பிழையை கவனியாது போகாது.

நேற்று பிழையாக எழுதினார் என்று இன்றைய நல்ல எழுத்தை பாராட்டாமலும் போகாது.

விதி வலியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இங்கு நாத்தின் எழுத்தைப் பற்றி எழுதியவர்களுக்கு ஒரு விடையம்.அவர் இப்படியான பலதை ழுதியுள்ளார்.அப்படி எழுதுவதில் அபார திறமையுள்ளவர்.ஆனால் விதி யாரைத்தான் விட்டது.

ஆகா.... இப்பிடியுமா ஆப்படிப்பது...

நம்ம விதி, இந்த கண்ராவியை எல்லாம் வாசித்து துளைக்க வேண்டிக் கிடக்குது எண்டுறியள்.....  😜

14 hours ago, goshan_che said:

பகிடியில்லை நாதம், உண்மையிலே ரசித்து வாசித்தேன்.

கடைசியில் போட்டிருந்த மெசேஜ் நைஸ் டச்👌.

ஒரு கொசுறு தகவல்:

இந்த சிறு திருட்டுக்களை கிளெப்டோமேனியா என்பார்கள். நீங்கள் சொன்னது போல் இது இருப்பதை ஒரு defence ஆக காட்டி திருட்டு வழக்கில் இருந்து தப்ப முடியாதுதான்.

ஒரு குற்றம் செய்ததாக காணப்பட ஒருவரின் செயலும்(act), அந்த குற்றத்தை செய்ய விரும்பிய மன நிலையும் முக்கியம் (intention).

பொதுவாக ஒருவரது intention ஐ இல்லாது ஆக்கும் மனநிலைகளுக்கே diminished responsibility அதாவது அந்த செயலை செய்யும் எண்ணம் வரும் அளவுக்கு மனநிலை உள்ளவர் அல்ல என்ற அடிப்படையில் விலக்கு (defence) வழங்கபடும்.

ஆனால் இப்படியான திருட்டுகளில் திருட்டு செயலும், திருடும் எண்ணமும் இருப்பதால் சட்டம் இதை ஒரு திருட்டாகவே கருதும்.

கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி, தல...

 

11 minutes ago, goshan_che said:

விதி (rule) எல்லாருக்கும் பொதுவானது. 

அது யாரையும் விடாது.

முகமன் பாராது.

எல்லாருக்கும் நல்ல பிள்ளைக்கு நடிக்காது.

நேற்று நல்லா எழுதினார் என்று இன்றைய பிழையை கவனியாது போகாது.

நேற்று பிழையாக எழுதினார் என்று இன்றைய நல்ல எழுத்தை பாராட்டாமலும் போகாது.

விதி வலியது.

கண காலத்துக்கு பிறகு, டுடே பப் கோயிங் வித் பிரண்ட்ஸ்.... டு ராய்ஸ் தி கிளாஸ். 🦔

பாராட்டியோர், லைக் அடித்தோர் அனைவருக்கும் நன்றி.

***

எனக்கு, இந்த ஒனாண்டிப்புலவரில் கணக்க விசயம் இருக்கிற மாதிரி தெரியுது.... ஆள் அடக்கி வாசிக்குது... அவரது பாணி எழுத்து பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

 

கண காலத்துக்கு பிறகு, டுடே பப் கோயிங் வித் பிரண்ட்ஸ்.... டு ராய்ஸ் தி கிளாஸ். 🦔

பாராட்டியோர், லைக் அடித்தோர் அனைவருக்கும் நன்றி.

எனக்கு, இந்த ஒனாண்டிப்புலவரில் கணக்க விசயம் இருக்கிற மாதிரி தெரியுது.... ஆள் அடக்கி வாசிக்குது... அவரது பாணி எழுத்து பிடிக்கும்.

👍🏿

என்ஜாயி நாதமுனி

Pubஇல நல்லா மப்பாகி 🤣

ஜின் ஊத்தி Fun ஆகி

கோலா சேர்த்து ஒண்ணாக்கி 🤣

பிகு: பெருமாள் வந்து கட்டிப்பிடிப்பார் கவனம்.

பிகு பிகு: ஓனாண்டிக்கு நான் ஒண்ணாம் நம்பர் ரசிகன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல்

நாதா! உங்கள் எழுத்து எனக்கு பிடித்திருக்கு :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2021 at 19:43, குமாரசாமி said:

நாதா! உங்கள் எழுத்து எனக்கு பிடித்திருக்கு :cool:

ஏதாவது பரிசு கொடுக்கிறது நாதருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ரகம். இப்படிப் பல ரகங்கள். நம்ம டாக்குத்தர் சிலரும் சந்தர்ப்பம் கிடைத்தால் தப்புச் செய்வார்கள் என்பதற்கு.. பழைய வழக்குகள் கட்டியம் சொல்லுகின்றன. 

ஆனால் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார சேவை உத்தியோகத்தரா.. அது டாக்டர்.. தாதி.. ச்பிசியோ.. யாராகவும் இருக்கலாம்.. இப்போது ஆன்லைனில் சோதனை செய்து பார்க்க முடியும்.

https://www.gmc-uk.org/registration-and-licensing/the-medical-register

https://www.hcpc-uk.org/check-the-register/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 19:43, தனிக்காட்டு ராஜா said:

ஏதாவது பரிசு கொடுக்கிறது நாதருக்கு 

ஆ.... ஆயிரம் பொற்காசுகளா.... மண்டபத்தில் யாரும் எழுதித்தரவில்லை. நானே தான் எழுதினேன். 😳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆ.... ஆயிரம் பொற்காசுகளா.... மண்டபத்தில் யாரும் எழுதித்தரவில்லை. நானே தான் எழுதினேன். 😳

யாரங்கே இந்தப் பொற்காசுகளை புலவரிடம் கொடுத்து விடுங்கள்......!  😁

1000 Gold Coins Prize Scheme from Vedic Days! | Tamil and Vedas

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இடையில இரன்டு பித்தலைக் காசு தெரியிற மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

என்ன இடையில இரன்டு பித்தலைக் காசு தெரியிற மாதிரி இருக்கு.

நாளும் பொழுதும் காசோட புளங்கிறவனுக்கு கழுகுக்கண் எண்டு என்ர ஆச்சி அடிக்கடி சொல்லுறவ..😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.