Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீண்ட நாட்களின் பின்னர் பாராளுமன்றம் வந்த சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்னர் பாராளுமன்றம் வந்த சம்பந்தன்

July 7, 2021

SAMPANTHAN025 நீண்ட நாட்களின் பின்னர் பாராளுமன்றம் வந்த சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நீண்ட நாட்களின் பின்னர் பாராளுமன்றத்துக்கு நேற்று செவ்வாய்க் கிழமை சக்கர நாற்காலியில் வருகை தந்தார்.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க் கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூடியது. பாராளுமன்றம் கூடிய சிறிது நேரத்தில் இரா.சம்பந்தன் சக்கர நாற்காலியில் பாராளுமன்ற உதவியாளர்களினால் சபைக்குள் அழைத்து வரப்பட்டார். ஆனால் சக்கர நாற்காலியில் வருகை தந்தால் எதிர்க் கட்சி தரப்பில் கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்க முடியும் என்பதனால் தான் தனது ஆசனத்தில் அமர வேண்டுமென சம்பந்தன் கூறியதனால் அவரை வெளியே அழைத்து சென்ற பாராளுமன்ற உதவியாளர்கள் மீண்டும் அவரை கைத்தாங்கலாக சபைக்குள் அழைத்து வந்தனர்.

தனது ஆசனத்துக்கு வருவதற்கு சம்பந்தன் பெரும் சிரமப்பட்டே வந்தார். சம்பந்தன் உள்ளே வரும் போதே அவரின் ஆசனத்துக்கு பக்கத்து ஆசனக்காரரான ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தார். அவர் சம்பந்தன் வருவதனை அவதானித்து அவருக்கு உதவும் வகையில் சம்பந்தன் அமர வசதியாக அவரது ஆசனத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தார்.

சம்பந்தன் தன் ஆசனத்துக்கு வந்ததும் சபாநாயகருக்கு தலை வணங்கி மரியாதை கொடுத்து விட்டே தனது ஆசனத்தில் அமர்ந்தார். பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சிறிது நேரம் பேசி விட்டு அதனையடுத்து சுமந்திரன் எம்.பி.யை அழைத்து தனக்கு அருகில் அமர வைத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

 

https://www.ilakku.org/sampanthan-came-parliament-after-longday/

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற.. 

இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு ..

IMG-20210707-115028.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சக்கர நாற்காலியில் பாராளுமன்ற உதவியாளர்களினால் சபைக்குள் அழைத்து வரப்பட்டார். ஆனால் சக்கர நாற்காலியில் வருகை தந்தால் எதிர்க் கட்சி தரப்பில் கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்க முடியும் என்பதனால் தான் தனது ஆசனத்தில் அமர வேண்டுமென சம்பந்தன் கூறியதனால் அவரை வெளியே அழைத்து சென்ற பாராளுமன்ற உதவியாளர்கள் மீண்டும் அவரை கைத்தாங்கலாக சபைக்குள் அழைத்து வந்தனர்.

 

3 hours ago, கிருபன் said:

தனது ஆசனத்துக்கு வருவதற்கு சம்பந்தன் பெரும் சிரமப்பட்டே வந்தார்.

இந்த நிலையிலும் தமிழருக்கு விடிவு வேண்டும் என்கிற அவாவினால் வந்திருக்கிறார். மாவையருக்கு இனி  இருக்கு நெருக்குவாரம்.      

  • கருத்துக்கள உறவுகள்

3 மாச லீவை போட்டுட்டு படுத்து கிடந்த மனிசண்ட, கதிரையை ரணிலுக்கு கொடுத்தோன்ன, சிங்கம் சீறிக் கொண்டு கிளம்பீட்டுது...

பண்ணியில், பண்ணிப்பாருங்கோவன். 😜

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

3 மாச லீவை போட்டுட்டு படுத்து கிடந்த மனிசண்ட, கதிரையை ரணிலுக்கு கொடுத்தோன்ன, சிங்கம் சீறிக் கொண்டு கிளம்பீட்டுது...

பண்ணியில், பண்ணிப்பாருங்கோவன். 😜

 

4 hours ago, கிருபன் said:

சம்பந்தன் உள்ளே வரும் போதே அவரின் ஆசனத்துக்கு பக்கத்து ஆசனக்காரரான ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தார். அவர் சம்பந்தன் வருவதனை அவதானித்து அவருக்கு உதவும் வகையில் சம்பந்தன் அமர வசதியாக அவரது ஆசனத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நீண்ட நாட்களின் பின்னர் பாராளுமன்றத்துக்கு நேற்று செவ்வாய்க் கிழமை சக்கர நாற்காலியில் வருகை தந்தார்.

இந்த நிலையிலும் பாராளுமன்றம் வருகிறாரே என்று இரக்கமே வருகுதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தடவைக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர் ஆக முடியாது என்று ஒரு சட்டம் கொண்டு வந்தாங்கள் என்றால் நல்லது. ஐயா போன்ற முதியவர்கள் நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

பாராளுமன்றம் கூடிய சிறிது நேரத்தில் இரா.சம்பந்தன் சக்கர நாற்காலியில் பாராளுமன்ற உதவியாளர்களினால் சபைக்குள் அழைத்து வரப்பட்டார். ஆனால் சக்கர நாற்காலியில் வருகை தந்தால் எதிர்க் கட்சி தரப்பில் கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்க முடியும் என்பதனால் தான் தனது ஆசனத்தில் அமர வேண்டுமென சம்பந்தன் கூறியதனால் அவரை வெளியே அழைத்து சென்ற பாராளுமன்ற உதவியாளர்கள் மீண்டும் அவரை கைத்தாங்கலாக சபைக்குள் அழைத்து வந்தனர்.

முன் வரிசையில் இருந்தாலும், பின் வரிசையில் இருந்தாலும்…. நித்திரை கொள்ளுற ஆளுக்கு, எங்கையும் குந்தியிருக்கலாம் தானே…

முன்னுக்கு போய் இருக்க வேணும் என்று, ஏன் அடம் பிடித்தவர்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, கிருபன் said:

தனது ஆசனத்துக்கு வருவதற்கு சம்பந்தன் பெரும் சிரமப்பட்டே வந்தார்.

ஈழத்தமிழருக்காக எவ்வளவு சிரமப்படுகின்றார். இதை நம்மவர்கள் தான் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்

நின்மதியாக ஓய்வெடுப்பதற்கு இந்த தள்ளாத வயதிலும்  ஏன் பாராளுமன்றம் செல்கிறார் சம்பந்தன் ஐயா? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

தனது ஆசனத்துக்கு வருவதற்கு சம்பந்தன் பெரும் சிரமப்பட்டே வந்தார்.

ஒருவன் உமி தூக்கும் பலம் உள்ளவரை அரிவையையும் காமுறுவானாம்.

ஐயா தனது பலம் கொண்டு அரியாசனத்தைக் காமுற்றார், இதில் வியப்பென்ன??

  • கருத்துக்கள உறவுகள்

அவரது முதுமை மற்றும்  வயது  சார்ந்து ஏதும்  ஏடாகூடமாக  எழுதி  விடுவேனோ என்பதற்காக  எதுவும்  எழுதவிரும்பவில்லை

ஆனால் இது  கொஞ்சம்  அதிகம்  ஐயா???😭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிட்டன் தூதுவரை சந்தித்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

HSZY--bp?format=jpg&name=small

சந்தித்து என்ன பேசியிருப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

இரண்டு தடவைக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர் ஆக முடியாது என்று ஒரு சட்டம் கொண்டு வந்தாங்கள் என்றால் நல்லது. ஐயா போன்ற முதியவர்கள் நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம்.

அப்படி  ஓரு சட்டம் பாராளுமன்றில் வாக்கு எடுப்பிக்கு விடும்போது. தோற்றுவிடும்.  என்னெனில் பாராளுமன்றில். வயோதிபர்கள் பெரும்பான்மையாகும் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பிரிட்டன் தூதுவரை சந்தித்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

HSZY--bp?format=jpg&name=small

சந்தித்து என்ன பேசியிருப்பார்கள்?

குமாரசாமி அண்ணே...  என்ன  பேசியிருப்பார்கள்? என்று ஆராய்வதை விட,
அந்தப் படம் எடுக்கும் போது...   நம்ம ஆட்கள்,  நிற்கும் நிலையை... ரசியுங்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ரொம்ப பணிகிறார், மற்றவர் எப்போதும் போல் தயார்தான், அடுத்தவர் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே? நம்ம தலை காரியத்தில் கண்ணாய், துல்லியமாய் விளக்குகிறார். இந்த தீபாவளியோடு  ஒரு முடிவு வந்திடும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

ஒருவர் ரொம்ப பணிகிறார், மற்றவர் எப்போதும் போல் தயார்தான், அடுத்தவர் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே? நம்ம தலை காரியத்தில் கண்ணாய், துல்லியமாய் விளக்குகிறார். இந்த தீபாவளியோடு  ஒரு முடிவு வந்திடும்.

இறுதி மூச்சு வரை அகிம்சை வழியில் தமிழர்களுக்காக போராடும் போராளி வாழ்க வளர்க...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.