Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கில் சட்ட வல்லுனர்கள் குழுவொன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளது.இந்த விஜயத்தின் போது சட்ட நிபுணர்கள் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் சட்ட நிபுணர் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரும் வருகை தருவார்கள் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடனும், அமைச்சின் சட்ட நிபுணர்கள் குழுவுடனும் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும் சர்வதேச நகர்வுகள் மூலமாகவே எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற நிலையில் அதனை இலக்காக கொண்டு நகர்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இதன்போது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் இராஜதந்திர கலந்துரையாடல் எதுவும் முன்னெடுக்கப்படாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அதன் நோக்கம் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)

http://www.samakalam.com/சுமந்திரன்-தலைமையில்-சட்/

 

  • Replies 119
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் குழு.... அமெரிக்கா போய்,
என்ன "பீலா".... விடப் போறாங்களோ... என்று,
இப்பவே... வயித்தை கலக்குது. 😂

அமெரிக்க யாழ்.கள உறவுகளான... 
ஈழப் பிரியன், ஜஸ்ரின், மருதங்கேணி, நில்மினி, நுணாவிலான் ஆகியோர் 
சுமந்திரனை நேரடியாக சந்தித்தித்து, 
நாலு புத்திமதியை வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.🤣

ப்ளீஸ்... கறுப்புக் கொடி  காட்டிடாதீங்க. அது, கறுப்புக் கொடிக்கு  அவமானம்.  😎

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் முக்கியத்துவம் மிக்க பயணமென நம்புகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

இது மிகவும் முக்கியத்துவம் மிக்க பயணமென நம்புகிறேன் 

சீரியஸ் ஆக பகிடி விடவேண்டாம் 🤣

25 minutes ago, தமிழ் சிறி said:

அமெரிக்க யாழ்.கள உறவுகளான... 
ஈழப் பிரியன், ஜஸ்ரின், மருதங்கேணி, நில்மினி, நுணாவிலான் ஆகியோர் 
சுமந்திரனை நேரடியாக சந்தித்தித்து, 
நாலு புத்திமதியை வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.🤣

தான் சொல்வதைத்தான் கேட்கணும் என்று மனிசன் விடாப்பிடியாக நிக்கும் .முக்கியம் கேள்விகள் கேட்கப்படாது நேரம் போய் விடும் என்றல்ல கேள்விக்கு விடையே தெரியாத பள்ளிக்கூடத்தில் படித்தவர் நம்ம ஆள் .🤣

கதைக்கப்போற அமெரிக்கன் இனம் தெரியாத நோய் ஆள் தாக்கப்பட வாய்ப்பு உள்ளது .அந்த நோய்  கிருமி முதன் முதல் தென்னிந்தியாவில் காணப்பட்டுள்ளது .

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில வயல் உழுறதுக்கு டிராக்டர் ஓட தெரியனும்…

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அமெரிக்காவில வயல் உழுறதுக்கு டிராக்டர் ஓட தெரியனும்…

ரக்ரர் உருட்டினவர் பாக்கேலயே?!🤭

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

சீரியஸ் ஆக பகிடி விடவேண்டாம் 🤣

தான் சொல்வதைத்தான் கேட்கணும் என்று மனிசன் விடாப்பிடியாக நிக்கும் .முக்கியம் கேள்விகள் கேட்கப்படாது நேரம் போய் விடும் என்றல்ல கேள்விக்கு விடையே தெரியாத பள்ளிக்கூடத்தில் படித்தவர் நம்ம ஆள் .🤣

கதைக்கப்போற அமெரிக்கன் இனம் தெரியாத நோய் ஆள் தாக்கப்பட வாய்ப்பு உள்ளது .அந்த நோய்  கிருமி முதன் முதல் தென்னிந்தியாவில் காணப்பட்டுள்ளது .

 

உண்மையாக இது முக்கிய பயணம். அடுத்த வருடங்கள் தமிழருக்கு  மிகவும் முக்கியமானவை என்பது எனது எண்ணம.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இதன்போது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் இராஜதந்திர கலந்துரையாடல் எதுவும் முன்னெடுக்கப்படாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

பார்த்தால் முக்கியமான பயணம்போற்த்தான் தெரிகிறது. ஆனால் யாருக்கு, எதுக்கு? என்பது தெரியும் போது, யாரும் திரும்பிப்போய் முடியாத முடிவை எட்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

பார்த்தால் முக்கியமான பயணம்போற்த்தான் தெரிகிறது. ஆனால் யாருக்கு, எதுக்கு? என்பது தெரியும் போது, யாரும் திரும்பிப்போய் முடியாத முடிவை எட்டியிருக்கும்.

சுமந்திரன் தன்னுடைய கருத்துக்களை மிகவும் நிதானத்துடன், மக்களின் மனமறிந்து வெளியிட்டிருப்பின் தமிழர்களிடையே அவருக்கு மிகவும் வரவேற்பு இருந்திருக்கும்.

இப்போதும் காலம் இருக்கிறது. அவர் மிகவும் நிதானித்து கருத்துக்களை வெளியிடவேண்டும். 

 

மூலம் ; ahalnews.com

சுமந்திரன் தலைமையிலான நிபுணர் குழுவுக்கு அமெரிக்கா அழைப்பு

USA-768x510.jpg
Share on facebook
 
Share on twitter
 
Share on linkedin
 
Share on whatsapp

கொழும்பு, நவம்பர் 05

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தலைமையிலான தமிழர் தரப்பு சட்ட நிபுணர் குழு ஒன்றை வொஷிங்டன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினையில் இந்தியாவுடன் சேர்ந்து செயற்படத் தீர்மானத்திருக்கும் அமெரிக்கா, அதனை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் உட்பட தமிழர் தரப்பு சட்ட நிபுணர் குழு ஒன்றை வொஷிங்டன் டி.ஸிக்கு அழைத்து, தமிழர் தரப்பின் அரசியல் நிலைப்பாட்டை கேட்டறிந்து, தெளிவுபடுத்திக்கொள்ள தீர்மானித்திருக்கின்றதாக அறிய வருகின்றது. 

கொழும்பு அரசுத் தரப்புகளால் கசியவிடப்பட்டிருக்கும் அமெரிக்காவின் இந்த நகர்வு பற்றிய தகவல்களால் கொழும்பு பெரும் இராஜதந்திரச் சீற்றத்தில் இருப்பதாகவும் அந்த தரப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. 

TNA.jpg

தற்போதைய ஏற்பாட்டின்படி சுமந்திரன் உட்பட மூன்றுபேரடங்கிய நிபுணர் குழு இன்னும் 10 நாட்களில் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடனும், அதன் சட்ட நிபுணர்களுடனும் விரிவான பேச்சுக்களில் ஈடுபடும் எனத் தெரிகின்றது.  இந்தக் குழுவிற்கு ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுடன், ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன், சட்ட நிபுணர் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரை சம்பந்தன் நியமித்துள்ளார் எனத் தெரிகிறது.

அமரர்,தந்தை செல்வநாயகத்தின் புதல்வர் எஸ்.ஸி.சந்திரஹாசன் மற்றும் அவரின் துணைவியார் நிர்மலா சந்திரஹாசன், (இவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், நல்லூர்த் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவருமான இ.மு.வி.நாகநாதனின் மகளாவார்) தற்போது இந்தியாவில் உள்ள அவர் கொழும்புக்கு வந்து, மற்ற இருவருடனும் இணைந்து வொஷிங்டன் பயணமாவார் எனக் கூறப்பட்டது. 

Dr.-Kanaganayagam-Kana-Iswaran-1.jpgPresedent’s Counsel Kanaganayagam Kanag-Isvaran

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்ததும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்கள், யோசனைகளைப் பரிந்துரை செய்வதற்காக 2006 இல் நியமித்த அனைத்துத் தரப்பு நிபுணர் குழுவில் சுமந்திரன் தவிர்ந்த மற்றைய இருவரும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Dr.-Nirmala-Chandrahasan.jpgDr. Nirmala Chandrahasan

வொஷிங்டன் – புதுடில்லி அரசுகளின் மிக, மிக உயர்ந்த மட்டத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கிய தீர்மானத்திற்கு அமையவே இந்த நகர்வு மேற்கொள்ளப்படுவதாக அறிந்துள்ள கொழும்பு அரசு வட்டாரங்கள், அதனால் பெரும் கலக்கத்தில் மூழ்கி இருக்கின்றன என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன. இந்த விடயத்தை அறிந்த பின்னரே, புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நம்பப்படுகிறது.

கெரவலப்பிட்டிய மின் நிலையப் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு அவசர அவசரமாக – இரவோடிரவாக – கைமாற்றும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு, அமெரிக்காவை தன வசப்படுத்தும் நடவடிக்கையில் – தனது பங்காளிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி – கோட்டபாய அரசு ஈடுபட்டமையின் பின்னணி இதுதான் எனவும் அறிய வருகின்றது.

Dr.-Naganathan-Selvakkumaran.jpgProf. Naganathan Selvakkumaran

இந்த வொஷிங்டன் சந்திப்பு முதலில் செப்டம்பரில் நடைபெறுவதாக இருந்தது. அச்சமயத்தில் சுமந்திரனுடன் சட்டத்துறை நிபுணர்களான பேராசிரியர் என் செல்வகுமாரன், திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரை சட்ட நிபுணர் குழுப் பிரதிநிதிகளாக சம்பந்தன் நியமித்திருந்தார். மூவரின் பயணத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 

எனினும், கொரோனாத் தொற்று நெருக்கடி காரணமாக இந்தக் கலந்துரையாடல் தள்ளிப்போனமையால் பேராசிரியர் செல்வகுமார் இந்த மாத நடுப்பகுதியில் அமெரிக்கா செல்ல முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. அதனால் அவரது இடத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரனை சம்பந்தன் நியமித்துள்ளார். அடுத்த வாரத்தில் இக்குழு கொழும்பிலிருந்து வொஷிங்டன் பயணமாகும் எனத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினையில் இந்தியாவுடன் சேர்ந்து செயற்படத் தீர்மானத்திருக்கும் அமெரிக்கா, அதனை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் உட்பட தமிழர் தரப்பு சட்ட நிபுணர் குழு ஒன்றை வொஷிங்டன் டி.ஸிக்கு அழைத்து, தமிழர் தரப்பின் அரசியல் நிலைப்பாட்டை கேட்டறிந்து, தெளிவுபடுத்திக்கொள்ள தீர்மானித்திருக்கின்றதாக அறிய வருகின்றது. 

தமிழரின் இரத்தக்களரிக்கு மூல கர்த்தாவான இரண்டு நாடுகள் சேர்ந்து தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு காரணம் தெரியாதவர், ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்காதவர், தமிழரின் அழிவிற்கு பின் அரசியலில் நுழைந்தவர்,  சிங்களவருடன் வாழ்வதில் பெருமை கொள்பவருடன் பேசி என்ன தீர்வு வரப்போகிறது? தங்கள் லாபத்திற்கும், சிங்களவனை மிரட்டுவதற்கும் தமிழரை பயன்படுத்துவார்களே ஒழிய, இவர்களால் எதுவும் ஆகாது. ஆனால் காலம் கனிந்து வந்தால் இவர்களால் அதை தடுக்கவும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, satan said:

தமிழரின் இரத்தக்களரிக்கு மூல கர்த்தாவான இரண்டு நாடுகள் சேர்ந்து தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு காரணம் தெரியாதவர், ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்காதவர், தமிழரின் அழிவிற்கு பின் அரசியலில் நுழைந்தவர்,  சிங்களவருடன் வாழ்வதில் பெருமை கொள்பவருடன் பேசி என்ன தீர்வு வரப்போகிறது? தங்கள் லாபத்திற்கும், சிங்களவனை மிரட்டுவதற்கும் தமிழரை பயன்படுத்துவார்களே ஒழிய, இவர்களால் எதுவும் ஆகாது. ஆனால் காலம் கனிந்து வந்தால் இவர்களால் அதை தடுக்கவும் முடியாது.

எங்கள் கோபத்தை கொஞ்சம் மூட்டை கட்டிவைத்து நிதானமாக யோசிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது கோபம் அல்ல, அனுபவம் தந்த பாடம்! இந்தியா ஒருநாழும் இலங்கைத்தமிழர் தன்னிறைவாக, சுதந்திரமாக வாழ வழி விடாது. இருந்தாலும் தனது இருப்புக்கு குந்தகம் ஏற்படப் போகிறது என்றால், தமிழரை கட்டியணைத்து, அவர்களை வைத்து (கட்டி, அடிமைப்படுத்தி) தன்னை பாதுகாத்து கொள்ள முனையும். காலம் அப்படியான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். தனது கைக்குள் சிங்களத்தை வைத்திருப்பதற்காக ஓடியோடி தமிழரை அழிக்க சகல உதவிகளையும் செய்து கொண்டிருக்க, சிங்களம் சீனா பக்கம் சாய்ந்தது ஒரு உதாரணம். தமிழருக்கு விடிவு வேண்டும் என்று காலம் நியமித்து விட்டால் யாரும் தடுக்க முடியாது. ஆனால் நம்ம தலைமைகள் சொல்லும், சிங்கள மக்கள் ஏற்காத   தீர்வு நமக்கு வேண்டவே வேண்டாம், அடிபட்டாலும் நாம் அவர்களோடு சேர்ந்தே  வாழ்வோம் என்று அடம்பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 சில நேரம் இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கலாம். படித்த மேட்டுக்குடிகள் எப்படி கையாளுகின்றார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இருப்பினும் இதற்குள்ளும் இந்திய ஆரியத்தரப்பு மூக்கை நுழைக்குமாயின் எல்லாம் பரநாசம்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

 சில நேரம் இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கலாம். படித்த மேட்டுக்குடிகள் எப்படி கையாளுகின்றார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இருப்பினும் இதற்குள்ளும் இந்திய ஆரியத்தரப்பு மூக்கை நுழைக்குமாயின் எல்லாம் பரநாசம்.

தை பிறக்க போனால், சுமந்திரன்... விதைத்த நெல்லை, குத்தி அரிசியோடை போய்... பொங்கல் வைத்து... அமெரிக்கனுக்கும் கொடுத்து... கொண்டாடி வரலாமே எண்டு யோசிக்கிறேன்... 🤔

10 hours ago, satan said:

இது கோபம் அல்ல, அனுபவம் தந்த பாடம்! இந்தியா ஒருநாழும் இலங்கைத்தமிழர் தன்னிறைவாக, சுதந்திரமாக வாழ வழி விடாது. இருந்தாலும் தனது இருப்புக்கு குந்தகம் ஏற்படப் போகிறது என்றால், தமிழரை கட்டியணைத்து, அவர்களை வைத்து (கட்டி, அடிமைப்படுத்தி) தன்னை பாதுகாத்து கொள்ள முனையும். காலம் அப்படியான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். தனது கைக்குள் சிங்களத்தை வைத்திருப்பதற்காக ஓடியோடி தமிழரை அழிக்க சகல உதவிகளையும் செய்து கொண்டிருக்க, சிங்களம் சீனா பக்கம் சாய்ந்தது ஒரு உதாரணம். தமிழருக்கு விடிவு வேண்டும் என்று காலம் நியமித்து விட்டால் யாரும் தடுக்க முடியாது. ஆனால் நம்ம தலைமைகள் சொல்லும், சிங்கள மக்கள் ஏற்காத   தீர்வு நமக்கு வேண்டவே வேண்டாம், அடிபட்டாலும் நாம் அவர்களோடு சேர்ந்தே  வாழ்வோம் என்று அடம்பிடிக்கும்.

முக்கிய விசயம் என்னவெண்டா.... டெல்லிக்காரர்... கையில் இருந்து... வாஷிங்டன் காரர் கைக்கு பிரச்சனை போன மாதிரி தெரியுது. 

அந்த வகையில் சந்தோசம்...

அதுதான்... மனோ கணேசனை.... ரவூப் ஹக்கீமை... (திமுக ஆதரவு).... இந்தியா இழுத்து.... சம்பந்தனை சந்திக்க வைத்து.... பழைய குருடி கதவை திறடி வேலை பார்க்க நிக்குது.

இதை புரிந்தாவது.... சம்பந்தன் அய்யா விலகி இருக்கவேணும்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் குழு.... அமெரிக்கா போய்,
என்ன "பீலா".... விடப் போறாங்களோ... என்று,
இப்பவே... வயித்தை கலக்குது. 😂

அமெரிக்க யாழ்.கள உறவுகளான... 
ஈழப் பிரியன், ஜஸ்ரின், மருதங்கேணி, நில்மினி, நுணாவிலான் ஆகியோர் 
சுமந்திரனை நேரடியாக சந்தித்தித்து, 
நாலு புத்திமதியை வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.🤣

ப்ளீஸ்... கறுப்புக் கொடி  காட்டிடாதீங்க. அது, கறுப்புக் கொடிக்கு  அவமானம்.  😎

கணக்க பயப்படாதீங்கோ...

பயணம் டெல்லிக்கு இல்லை... வாஷிங்டன் பக்கம்..... கொஞ்சம் நம்பிக்கையுடன் இருப்பமே..

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் குழு.... அமெரிக்கா போய்,
என்ன "பீலா".... விடப் போறாங்களோ... என்று,
இப்பவே... வயித்தை கலக்குது. 😂

அமெரிக்க யாழ்.கள உறவுகளான... 
ஈழப் பிரியன், ஜஸ்ரின், மருதங்கேணி, நில்மினி, நுணாவிலான் ஆகியோர் 
சுமந்திரனை நேரடியாக சந்தித்தித்து, 
நாலு புத்திமதியை வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.🤣

ப்ளீஸ்... கறுப்புக் கொடி  காட்டிடாதீங்க. அது, கறுப்புக் கொடிக்கு  அவமானம்.  😎

சா
ஆக்ரோசமாக வெளிக்கிட்ட என்னை பூனை குறுக்கால போன மாதிரி தடுத்துப் போட்டீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப...கோட்டா,மகிந்த போனமாதிரித்தான்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 சில நேரம் இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கலாம். படித்த மேட்டுக்குடிகள் எப்படி கையாளுகின்றார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இருப்பினும் இதற்குள்ளும் இந்திய ஆரியத்தரப்பு மூக்கை நுழைக்குமாயின் எல்லாம் பரநாசம்.

உண்மையிலேயே தமிழர்களுக்கு தீர்வு காண வேண்டுமென்றால்

கூட்டணியில் உள்ள கட்சிகளுடனும் மற்றைய கட்சி தலைவர்களுடனும் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்து 

பொதுவானதொரு தீர்வு பொதியுடன் போயிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியின் கனடா கிளை அனுப்பிய காசுக்கு எப்படி கணக்கு காட்டப்போறார் என்று பார்ப்பம் சிலவேளை அந்தப்பக்கம் போகமாலே சு .மா .சு நேரே சிலோனுக்கு ரிக்கெட் போட்டாலும் போடுவார் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தமிழரசு கட்சியின் கனடா கிளை அனுப்பிய காசுக்கு எப்படி கணக்கு காட்டப்போறார் என்று பார்ப்பம் சிலவேளை அந்தப்பக்கம் போகமாலே சு .மா .சு நேரே சிலோனுக்கு ரிக்கெட் போட்டாலும் போடுவார் .

பெருமாளுக்கு திரும்பவும் சஞ்சய் ராமசாமி சின்ட்றோம்?🤔 நக்கீரரும் அம்மணியும் நேராக சந்தித்த சி.எம்.ஆர் இணைப்பு வந்து ஒரு வருடம்  தாண்டி விட்டதே? பார்க்காமல் இருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

இது கோபம் அல்ல, அனுபவம் தந்த பாடம்! இந்தியா ஒருநாழும் இலங்கைத்தமிழர் தன்னிறைவாக, சுதந்திரமாக வாழ வழி விடாது. இருந்தாலும் தனது இருப்புக்கு குந்தகம் ஏற்படப் போகிறது என்றால், தமிழரை கட்டியணைத்து, அவர்களை வைத்து (கட்டி, அடிமைப்படுத்தி) தன்னை பாதுகாத்து கொள்ள முனையும். காலம் அப்படியான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். தனது கைக்குள் சிங்களத்தை வைத்திருப்பதற்காக ஓடியோடி தமிழரை அழிக்க சகல உதவிகளையும் செய்து கொண்டிருக்க, சிங்களம் சீனா பக்கம் சாய்ந்தது ஒரு உதாரணம். தமிழருக்கு விடிவு வேண்டும் என்று காலம் நியமித்து விட்டால் யாரும் தடுக்க முடியாது. ஆனால் நம்ம தலைமைகள் சொல்லும், சிங்கள மக்கள் ஏற்காத   தீர்வு நமக்கு வேண்டவே வேண்டாம், அடிபட்டாலும் நாம் அவர்களோடு சேர்ந்தே  வாழ்வோம் என்று அடம்பிடிக்கும்.

இந்தியாவின் மிகப்பெரிய பலவீனம்/தவறு புலம்பெயர் தமிழர்தான். எங்களுக்கு அடுத்த, கல்வியில் தலைசிறந்து விழங்கும்   தலைமுறை எப்போதுமே இந்தியாவிற்கு எதிராகவே நிற்கும். 

இந்திய மிகவும் கேவலமான கொள்கை வகுப்பாளர்களின் தூர நோக்கற்ற, சுயநலமான சிந்தனை இறுதியில் இந்தியா சிதறுவதற்கே வழிவகுக்கும்.

அன்நாள் என் வாழ்வின் பொன்னாள. 

1 hour ago, பெருமாள் said:

தமிழரசு கட்சியின் கனடா கிளை அனுப்பிய காசுக்கு எப்படி கணக்கு காட்டப்போறார் என்று பார்ப்பம் சிலவேளை அந்தப்பக்கம் போகமாலே சு .மா .சு நேரே சிலோனுக்கு ரிக்கெட் போட்டாலும் போடுவார் .

ஏனையா, 

கொஞ்சமும் positive ஆகச் சிந்திக்க  மாட்டீர்களா ? 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 சில நேரம் இதுவொரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கலாம். படித்த மேட்டுக்குடிகள் எப்படி கையாளுகின்றார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

கத்தரியில்  மிளகாய் வருது என்று சொன்னால் தன்னும்  நம்புவம் இந்தாள்  திருந்தியிட்டுது மட்டும் சொல்லிடாதேங்கோ அது உலக அழிவுக்கு பின்னால் இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

13+ , 13 , 13- , உள்ளக சுய நிர்ணயம் , சுய நிர்ணயம் , வெளியக சுயநிர்ணயம் , ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு , சமஸ்டி , தனி நாடு கோர வில்லை , அதிகார பகிர்வு , சர்வதேச மத்தியஸ்தம் , அழுத்தம் , காலக்கெடு ,மாகாண சபை ..

பேச்சுவார்த்தைக்கு பிறகான அறிக்கை இப்படித்தான் இருக்கும்..

டிஸ்கி

தேர்வுக்கு தயார் ஆகும் மாணவர்களுக்கு ஆசிரியர் முக்கியமானவற்றை அடிக்கொடிட்டு காட்ட சொல்லுவார் ..👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஏனையா, 

கொஞ்சமும் positive ஆகச் சிந்திக்க  மாட்டீர்களா ? 

உங்களை வருத்தப்பட வைத்ததுக்கு மன்னிக்கவும் யதார்த்தம் என்பது உண்டல்லவா ?

இவ்வளவு காலமும் சுமத்திரன் ஒரேயொரு தமிழ்மக்களுக்கு செய்த நல்ல வேலை ஒன்றை சொல்லுங்க ?

தன்னுடன் மட்டுமே அதிகாரிகள் பேசணும் என்று பிடிவாதம் பிடிப்பார் போற இரண்டு பேர் புதியவர்கள் இலகுவாக காய் வெட்டி விளையாடுவார் .

அரசியல்கட்சிகளில் தமிழர்களின் எதிரிகளான மகிந்த கோத்தாவை விட அதிகமுறை தமிழர்களால் கொடும்பாவி கட்டி எரிபட்டவர் .

இவ்வளவு காலமும் இலங்கைக்குள் சுமத்திரனால் நடந்த குத்து வெட்டு இனி உலகம் பூரா தெரிந்து கொள்ளப்போகினம் இப்ப இங்கு எழுதினத்துக்கு மாறாக ஒன்றும் நடக்கப்போவதில்லை வீணாக நம்பிக்கை வைத்து ஏமாந்து போவது தமிழர்களுக்கு சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் வழமையான ஒன்று .

அதைவிட பெரும்பகிடி ahalnews.comகாரரின் தேவையற்ற உசுப்பேத்தல் .

17 hours ago, Kapithan said:

கொழும்பு அரசுத் தரப்புகளால் கசியவிடப்பட்டிருக்கும் அமெரிக்காவின் இந்த நகர்வு பற்றிய தகவல்களால் கொழும்பு பெரும் இராஜதந்திரச் சீற்றத்தில் இருப்பதாகவும் அந்த தரப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. 

இராஜதந்திர சீற்றம் என்ற பதம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கினம் .

கடைசியாக அங்கு போக போற இரண்டு பேர் ஜனாதிபதி சட்ட தரணிகள் ஒன்று சுமத்திரன்  இரண்டாவது கனகேஸ்வரன் முடிவு யாருக்கு சாதகமாய் இருக்கும் ?

3 hours ago, Justin said:

நக்கீரரும் அம்மணியும் நேராக சந்தித்த சி.எம்.ஆர் இணைப்பு வந்து ஒரு வருடம்  தாண்டி விட்டதே? பார்க்காமல் இருக்கிறீர்களா?

அவை சந்திப்பு ஒருபக்கம் இருக்கட்டும் அந்த கணக்கு சரியானதா  இல்லையா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.