Jump to content

புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக 15 இலங்கையர்கள் மீது இந்தியாவில் குற்றப்பத்திரம் தாக்கல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக 15 இலங்கையர்கள் மீது இந்தியாவில் குற்றப்பத்திரம் தாக்கல்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு 15 இலங்கையர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் இந்த கடந்த மார்ச் 25ஆம் திகதி அரபிக்கடலில் மீன்பிடிக் கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.இதன்போது, அவர்களிடமிருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் சென்னையில் அகதியாக வசித்து வந்த மற்றொரு பிரதிவாதியான சற்குணம் இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாதுகாப்புப் படையில் உறுப்பினராக இருந்ததாகவும் அம்முகவரகம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்களில் இவர்கள் கலந்துகொண்டதாகவும் இந்தியாவிலும் இலங்கையிலும் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றதாகவும் இலங்கைக்கு எதிராகப் போரில் ஈடுபட்டதாகவும் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும் இரு நாடுகளிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் பயங்கரவாத செயல்களை புரிய தயார்படுத்துவதற்கும் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்தியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட 15 பேருக்கு எதிராகவே இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.(15)
 

http://www.samakalam.com/புலிகள்-அமைப்பை-மீள்-உரு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அங்குவாழும் கொஞ்சநஞ்ச தமிழ்ச்சனத்தையும் ஆழிப்பதுக்கு இந்தியாக்காரன் பிளான் போடுறான் .

Link to comment
Share on other sites

றோ ஏதாவது தாக்குதலை சிறிலங்காவுக்கு செய்து புலிகளின் மேல் பழியை போடவும் தயங்காது. சிறிலங்காவை வெருட்ட வேறு வழிகள்  இந்தியாவுக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிடிபட்ட 15 பேரும் சிங்கள வர்கள் அவர்கள்தான் புலிகளை மீள உருவாக்கினம் கேட்கவே சிரிப்பாய் இருக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயன்றதாக சிங்களவர்கள் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்!

விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயன்றதாக சிங்களவர்கள் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவிற்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது

செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் மீது தேசிய புலனாய்வுப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு புத்துயிரூட்ட முயற்சித்ததாகவும், இலங்கைக்கு எதிராக போரில் ஈடுபட்டதாகவும் கூறியே இவர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி அரபிக்கடலில் மீன்பிடிக் கப்பலில் ஒன்றிலிருந்து கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இலங்கையின் குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து ரவிஹன்சி என்ற மீன்பிடிக் கப்பலில் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் 300 கிலோ ஹெரோயின் மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக கொச்சியில் உள்ள முகவரகத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.வை.நந்தன, ஜனக தேசப்பிரிய, நமேஷ் சுல்லக்க செனரத், திலங்க மதுஷான் ரணசிங்க, தடல்லகே நிஸ்ஸங்க, ஏ.சுரேஷ் ராஜ், எல்.வை.நிஷாந்த சுத்தா, ஏ.ரமேஷ், சற்குணம் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலராவர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் ஈரான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொள்வனவு செய்து கடல் வழியாக இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்களில் இவர்கள் கலந்து கொண்டதாகவும், இந்தியாவிலும் இலங்கையிலும் அதன் செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்றதாகவும், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகப் போரில் ஈடுபட்டதாகவும் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஏ.ரமேஷ், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெருந்தொகையாக நிதியையும் சொத்துக்களையும் சேகரித்துள்ளார்.

இரு நாடுகளிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் பயங்கரவாத செயல்களை புரிய தயார்படுத்துவதற்கும் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அகதியாக வசித்து வந்த மற்றொரு பிரதிவாதியான சற்குணம், இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்புப் படையில் உறுப்பினராக இருந்ததாகவும் அம்முகவரகம் குறிப்பிட்டுள்ளது.
received_263394369109421.jpeg?6bfec1&6bf

received_340375077499420.jpeg?6bfec1&6bf

received_305791644761464.jpeg?6bfec1&6bf

received_955182115088112-1.jpeg?6bfec1&6

 

https://www.meenagam.com/விடுதலைப்-புலிகளை-மீளுரு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஈழத்தின் வடக்கே.. சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஹிந்தியா மேற்கொள்ளும் ஒரு வெற்றிகர நடவடிக்கையாகும். 

போக்கடா.. போக்கத்தப் பயலுகளா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

பிடிபட்ட 15 பேரும் சிங்கள வர்கள் அவர்கள்தான் புலிகளை மீள உருவாக்கினம் கேட்கவே சிரிப்பாய் இருக்குது .

தமிழ்ப் புலி, நோர்வே புலி, வெள்ளைப் புலி மாதிரி…. இது சிங்களப் புலி. ஹா.. ஹா…. ஹா…. 🤣🤣🤣🤣🤣 🐆 🐅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

எல்.வை.நந்தன, ஜனக தேசப்பிரிய, நமேஷ் சுல்லக்க செனரத், திலங்க மதுஷான் ரணசிங்க, தடல்லகே நிஸ்ஸங்க, ஏ.சுரேஷ் ராஜ், எல்.வை.நிஷாந்த சுத்தா, ஏ.ரமேஷ், சற்குணம் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலராவர்.

 

வேணும் எண்டே சிங்களவரை பிடித்து வழக்கு போட்டு இலங்கைக்கு செய்தி சொல்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுச் சடடிக்குள் குதிரை ஓடும் இந்தியா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 சிங்களவர்களும் நம்பிக்கைய கை விடாதிங்க, நாங்க இருக்கோம்.... போர்..... ஆமாம் போர்...😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல மாதங்களுக்கு முன்னரே இலங்கையிலிருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்தி வந்த  சிங்களவர்களை ஏகே துப்பாக்கிகளுடன் கேரள கடற்பரப்பில் கைது செய்ததாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வந்தன, இப்போது அவர்களை புலிகள் மீளுருவாக்கும் படையணியில் சேர்த்திருக்கிறார்கள்.

போரினாலும் அரசியல் எதிர்காலத்தினாலும் பொருளாதாரத்தாலும் பேரழிவை சந்தித்துவிட்ட தமிழர்களே மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை மீளுருவாக்க நினைக்காத தற்கால கட்டத்தில் சிங்களவர்கள் ஏன் உருவாக்கபோகிறார்கள் என்று யாராவது கேட்கமாட்டார்களா?

12 hours ago, கிருபன் said:

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் ஈரான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொள்வனவு செய்து கடல் வழியாக இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

புலிகளை அழிக்க இலங்கைக்கு ஈரானும் உதவி செய்தது இந்தியாவும் உதவி செய்தது பாகிஸ்தானும் உதவி செய்தது, இந்த நிலையில் ஹெரோயினை சின்ன படகில் ஏத்தி நாலைஞ்சு ஏகே துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு இலங்கையின் மிக நெருங்கிய இந்த மூண்டு நாடுகளுக்கிடையிலும் வெட்டியோடி புலிகளை மீளுருவாக்க முடியுமா என்று யாரும் கேட்கமாட்டார்களா?

சரி அதைதான் எவரும் கேட்கமாட்டார்கள் என்று வைத்துக்கொண்டாலும், இலங்கையில் புலிகளை மீளுருவாக்க நினைத்த அவர்கள் இலங்கை கொண்டுபோய் சேர்த்த ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் எதுக்கு இலங்கையிலிருந்து மறுபடியும் இந்தியாவுக்கு கடத்த போகிறார்கள் இதுக்கு பேசாமல் பருத்தி குடோன்லயே இருந்திருக்கலாமே என்று யாரும் கேட்கமாட்டார்களா?

முழுக்க முழுக்க ஒரு போதைபொருள் கடத்தல் கும்பலின் கைது நடவடிக்கையை இலங்கையின் வடக்கில் சீன பிரசன்னத்தை அனுமதித்த இலங்கை அரசை மிரட்ட  அப்படியே புலிகளின் மீளுருவாக்கம் என்று திரைகதை வசனம் எழுதி உருட்டிவிடும்  இந்திய உளவுபிரிவுகளின் செயற்பாட்டை பார்த்து இதுக்கு பேசாமல் நாலு தெருவில பிச்சை எடுக்கலாம் என்று யாராவது கேட்கமாட்டார்களா?

யாரும் கேட்கமாட்டார்கள், ஏனென்றால் இதே கேள்வியை காலம் காலமாக எத்தனை தடவைதான் இந்திய அரசை கேட்பது என்று பேசாமல் விட்டுவிடுவார்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.