Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலரிமாளிகையும் முற்றுகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அலரிமாளிகையும் முற்றுகை 

கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/அலரிமாளிகையும்-முற்றுகை/175-300064

அலரிமாளிகைக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

அலரிமாளிகை வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Alarimalika.JPG

இன்றையதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக்கோரி இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று பகல் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தற்போது பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை வளாகத்திற்குள் நுழைந்த குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.virakesari.lk/article/131158

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல்வாதிகள்  அமைதி காத்து வருவது எதற்காக ? 🧐

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

தமிழ் அரசியல்வாதிகள்  அமைதி காத்து வருவது எதற்காக ? 🧐

அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கண்ணீர்ப் புகை பிரயோகம் 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/மீண்டும்-கண்ணீர்ப்-புகை-பிரயோகம்/175-300081

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? 

அவர்கள் காரணத்தோடுதான் அமைதி காக்கிறார்கள் என்பது புரிகிறது. அந்தக் காரணம்தான் என்ன ? 

சம்பந்தன்(சுமந்திரன் அல்ல) வாய் திறக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என நினைக்கிறேன். 

19 minutes ago, goshan_che said:

 

அடுத்தடுத்த மாதங்களில் பஞ்சம் ஆரம்பமாகிவிடும்போல் அறிகுறிகள் வெளித் தெரிய ஆரம்பித்துவிட்டன. 

புலம்பெயர் தமிழர் எல்லோரும் "நாங்கள் எல்லோரும் இலங்கையர்"  என்று கூறும் நிலை வரப்போகிறது. 🥺

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் வீட்டை நோக்கி மக்கள் படை 

 

 

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தை நோக்கி போராட்டக்காரர்கள் படையெடுத்துள்ளனர்.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல் நடத்தியமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/பிரதமரின்-வீட்டை-நோக்கி-மக்கள்-படை/175-300087

 

  • கருத்துக்கள உறவுகள்

image.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

 

புலம்பெயர் தமிழர் எல்லோரும் "நாங்கள் எல்லோரும் இலங்கையர்"  என்று கூறும் நிலை வரப்போகிறது. 🥺

எதுக்காக???????????😭

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

image.jpeg

May be an image of 1 person and text that says 'கபணி ணി T டேய் மாப்ள எவனாச்சும் ஜட்டி போடாம மாறு வேஷத்தில சுத்திட்டு இருந்தா புடிச்சி வை'

டேய் மாப்ள..எவனாச்சும்  ஜட்டி போடாம, 
மாறு வேசத்தில சுத்திகிட்டு இருந்தா பிடிச்சு  வை.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எதுக்காக???????????😭

இப்போது நாங்கள் (புலம்பெயர் தமிழர்) மட்டுமே நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கம்பீரமாக நிற்கிறோம்.

வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் பஞ்சத்தை நேரடியாக எதிர்நோக்கும்போது, அவர்களின் அவலங்களைப் பார்த்து, பிச்சை வேண்டாம் (?), நாயைப்பிடி என்று மேற்குலகிடம் நாமே கேட்கும் நிலை வரும் என எதிர்பார்க்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

இப்போது நாங்கள் (புலம்பெயர் தமிழர்) மட்டுமே நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கம்பீரமாக நிற்கிறோம்.

வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் பஞ்சத்தை நேரடியாக எதிர்நோக்கும்போது, அவர்களின் அவலங்களைப் பார்த்து, பிச்சை வேண்டாம் (?), நாயைப்பிடி என்று மேற்குலகிடம் நாமே கேட்கும் நிலை வரும் என எதிர்பார்க்கிறேன். 

இல்லை

புலமும்  தாயகமும் எம்மை விடு  என்ற  கருத்தில்  நிலைத்து

ஒத்து நிற்கும்  நிலை  தான்  வரும்

வரணும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

இல்லை

புலமும்  தாயகமும் எம்மை விடு  என்ற  கருத்தில்  நிலைத்து

ஒத்து நிற்கும்  நிலை  தான்  வரும்

வரணும்

உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்  🙏

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

இல்லை

புலமும்  தாயகமும் எம்மை விடு  என்ற  கருத்தில்  நிலைத்து

ஒத்து நிற்கும்  நிலை  தான்  வரும்

வரணும்

நாம் நகரும் விதத்தில் உள்ளது.

வரணும்🤞

  • கருத்துக்கள உறவுகள்

இவை நடக்கத்தான் வேணும்.. ஆனால்.. இப்படியே போனால்.. ஹிந்தியா படைகளை அனுப்ப வாய்ப்புள்ளது. மாலைதீவில் செய்த கணக்கா. ஹிந்திய தலையீடு.. ராஜபக்ச உட்பட போர்க்குற்றவாளிகள்.. ஊழல்வாதிகள் பதவியில் மீண்டும் உட்கார வகை சமைக்கலாம். 

சரத் பொன்சேகாவும்.. பதவி ஆசையில் திரிவது தெரிகிறது. 

என்ன தமிழர்கள் மத்தியில் மட்டும் தான் கொலைக்காரர்கள் எல்லாம் அமைச்சுப் பதவியோடு இருக்க முடியுது. தமிழர்களும்.. இந்தக் கொலைக்காரக் கூட்டத்தை நிராகரித்து வீட்டுக்கு அனுப்பனும். எனி அரசியல் பக்கம் தலைவைச்சுப் படுக்கக் கூடாது. குறிப்பாக தமிழர்களை காட்டிக்கொடுத்துப் பிழைக்கும் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ இன்னும் எமது மக்கள் அங்கு வாழ்கிறார்கள்.அதை மனதில் வைத்துத்தான் எமது கருத்துக்கள் அமைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முற்றுமுழுதான மாற்றத்தையே மக்கள் விரும்பினம். குறிப்பாக இளைய சமூகம் அதைச் செய்யும் என்று மக்கள் எதிர்பார்த்தே இளையோர் பின் அணிவகுத்திருக்கிறார்கள். இந்தச் சூழலை தமிழர் தரப்பும் தமது அரசியலை முற்றுமுழுதாக செழுமைப்படுத்த பயன்படுத்த முடியும். தமக்கான உரிமைகள் தொடர்பில் பரந்து சிந்திக்க பெரும்பான்மை சமூக இளையோரை சிந்திக்க வைக்க வேண்டியது அவசியம். இலங்கையை மீட்க இனவாத அரசியல் சரிவராது என்பதை எல்லா தரப்பும் உணரும் போது.. தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையும் மீட்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கு தற்போதைய எஜமானக் கூலி காட்டிக்கொடுப்பு அரசியல்வாதிகளை மக்கள் ஒதுக்கித் தள்ளுவது அவசியமும் ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மக்களின் மாபெரும் போராட்டம்

 

  • கருத்துக்கள உறவுகள்

காலந்தான் எத்தனை விசித்திரமான கதைகளை எழுதிச் செல்கிறது. அன்று தமிழர் போராட்டம் ஒடுக்கப்பட்டபோது; பட்டி தொட்டி எங்கும் போர்க்கதாநாயகர்களின் உருவப்படங்கள், பதாதைகள், சுலோகங்கள், வாழ்த்தொலிகள், இனிப்பு பரிமாற்றங்கள், வெடி கொழுத்தல்கள். அத்தனையும் அவர்களுக்கு சொன்ன செய்தி, தாங்களே இலங்கைச்சரித்திரத்தின் கதாநாயகர்கள், தங்கள் வம்ஷமே அரசாளத் தகுதியானவர்கள் என்றெல்லாம் கனவு கண்டவர்களை, இன்று அதே வீதிகளில் துரத்தியடிக்க கூடிய மக்கள், அவர்களை எதிர் கொள்ள தைரியமில்லாமல் ஓடி ஒளியும் பக்க்ஷாக்கள். இனிமேல் அரசியல் கதிரை ஏறுவோர் இந்த நிலையாமையை உணர்ந்து, யாவரும் சமம் எனும் உயரிய நோக்கோடு நாட்டை ஆள முன்வரவேண்டும்!

12 hours ago, Kapithan said:

இப்போது நாங்கள் (புலம்பெயர் தமிழர்) மட்டுமே நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கம்பீரமாக நிற்கிறோம்.

வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் பஞ்சத்தை நேரடியாக எதிர்நோக்கும்போது, அவர்களின் அவலங்களைப் பார்த்து, பிச்சை வேண்டாம் (?), நாயைப்பிடி என்று மேற்குலகிடம் நாமே கேட்கும் நிலை வரும் என எதிர்பார்க்கிறேன். 

அப்படி கேட்க பொறுப்பான ஆக்கள் இறக்கினமோ?

12 hours ago, விசுகு said:

இல்லை

புலமும்  தாயகமும் எம்மை விடு  என்ற  கருத்தில்  நிலைத்து

ஒத்து நிற்கும்  நிலை  தான்  வரும்

வரணும்

நான் நினைத்தேன் கபித்தனும் அதைத்தான் சொன்னார் என்று,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, satan said:

காலந்தான் எத்தனை விசித்திரமான கதைகளை எழுதிச் செல்கிறது. அன்று தமிழர் போராட்டம் ஒடுக்கப்பட்டபோது; பட்டி தொட்டி எங்கும் போர்க்கதாநாயகர்களின் உருவப்படங்கள், பதாதைகள், சுலோகங்கள், வாழ்த்தொலிகள், இனிப்பு பரிமாற்றங்கள், வெடி கொழுத்தல்கள். அத்தனையும் அவர்களுக்கு சொன்ன செய்தி, தாங்களே இலங்கைச்சரித்திரத்தின் கதாநாயகர்கள், தங்கள் வம்ஷமே அரசாளத் தகுதியானவர்கள் என்றெல்லாம் கனவு கண்டவர்களை, இன்று அதே வீதிகளில் துரத்தியடிக்க கூடிய மக்கள், அவர்களை எதிர் கொள்ள தைரியமில்லாமல் ஓடி ஒளியும் பக்க்ஷாக்கள். இனிமேல் அரசியல் கதிரை ஏறுவோர் இந்த நிலையாமையை உணர்ந்து, யாவரும் சமம் எனும் உயரிய நோக்கோடு நாட்டை ஆள முன்வரவேண்டும்!

69 இலட்சம் தனிச் சிங்கள வாக்குகளால் வென்று வந்தவன் நான் என மார்தட்டி கர்ஜித்தவர் இந்த கோட்டபாய ராஜபக்ச. 

ஆனால் அன்று தமிழர்கள் தமிழர்கள் இவரை ஆதரிக்கவும் இல்லை இன்று கலைக்கவும் இல்லை.

இயற்கை வலியது.☀️

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? 

கோத்தா போர்குற்றவாளி என்று உரத்துக் கூற வேண்டும்...சர்வதேச விசாரணை....மனித உரிமை ஆணையாளரின்   பரிந்துரைகள் அமுல் செய்யுமாறு கோர வேண்டும் .....போராட்டங்களை ஒழுங்குபடுத்தி நடத்த வேண்டும்    அப்படி செய்யும் போது இப்போது போராட்டங்களை செய்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் தேர்தல் ஒன்று வந்தால் ஓடியடி போட்டி போட்டு வேலை செய்யும் இவர்கள் இப்போது ஏன்?.  அமைதியாக இருக்க வேண்டும்   

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் வீடு எரிக்கப்பட்டதற்கும் அதற்குள் இருந்த புத்தகங்கள் எரிக்கப்பட்தற்கும் பலர் கவலை தெரிவித்து இருந்தார்கள். அந்த வீடு ரணிலுக்கு வாரிசுக்கள் இல்லாத படியால்  அவர் படித்த றோயல் கல்லூரிக்கு உயில் எழுதிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி விடயத்திற்கு வருவோம். இந்த நாட்டில் நூல்நிலையங்களுக்கும்பாடசாலைகளுக்கும்ஈஆலயங்களுக்கும், nவைத்தியசாலைகளுக்'கும் துpவைப்பது தமிழரின் கலாச்சாரம் கிடையாது. யாழ் நூலகத்திற்கு தீவைத்தவர்களும் ரணிலின் வீட்டுக்குத் தீவைத்தவர்களும்  சிங்களவர்களே அன்றி தமிழர்கள் அல்ல. அவர்களுக்குப் புத்தகங்களின் பெறுமதி தெரியாது.மேலும் யாழ்நூலகத்தையும் ரணிலின் வுpட்டையும் ஓப்பிடுவதே தவறு. யாழ் நூலகத்தில்மீண்டும் பெற முடியாத அரி ஓலைச்சுவடிகள்,ஆறுமுகநாவலர் போண்றோரின் கையெழுத்துப் பிரதிகள் தமிழர்களின் வரலாறு தொடர்பான வரலாற்று ஈவணங்கள் அனைத்தும் திட்டமிட்டு  தீயிட்டுப் பொசுக்கப்பட்டன.ஆதுவும் அமைச்சர்களின் உத்தரவில் அவர்களின் மேற்பார்வையில் தமிழ்களின் வரலாற்றையும் சிதைக்கும் நீண்ட கால நோக்கில் எரித்த அழிக்கப்பட்டன. அப்போது கல்வி அமைச்சராக இருந்து இன்று வரை அனைத்தையும் மௌனமாகக் கடந்து போனவர்தான் இந்த ரணில். அதுமட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளிடமிருந்து கரணாவைப்பிரித்து தமிழர்களைப் பலவீனப்படுத்திய குள்ள நரியும் இதே ரணில்தான்.ராஜபக்சேக்கள் மீதிருந்த போர்க்குற்ற விசாரணைகளை இழுத்தடித்து அவர்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல் இன்று வரை அவர்களுக்கு வந்த அரசியல் நெருக்கடிகளிலிலிருந்து அவர்களைக் காப்பாற்றியதும் ரணில்தான்.மாறாக ரணில் வீட்டில் எரிந்த புத்தகங்கள் மீளப்பெற முடியாத அரிய பொக்கிசங்கள் அல்ல.புத்தகங்களை எரிப்பது கண்டிக்கத்தக்கதாயினினும் இச்செயலை; யாழ்நூலகத்தை எரித்தது போல் திட்டமிட்டுச் செய்த செயல் அல்ல பட்டினியால் வயிறெறிந்த மக்கள் ஆத்திரத்தில் செய்த செயல்தான் அது. மேலும் றேபயல் கல்லூரி பஞ்சப்பராரிகள் படிக்கும் பாடசாலையும் அல்ல கோடிக்கணக்கான சொத்துக்களை உடையதும் பணக்கார முதலைகளினதும் அரசியல்வாதிகளுது பிளளைகளும் மட்டும் படிக்கும் கல்லூரி.வடக்கக்கிழக்கில் எத்தனையோ பாடசாலைகள் அடிப்படை வசதிகளற்று இருக்கும் போது இந்த பாடசாலைக்கு என எழுதி வைத்த சொத்து அழிந்து விட்டது என விசனப்படுவது. தேவையற்றது.அதுவும் ஊழல்மிகுந்த அரசியல்வாதியின் வீடு (மத்தியவங்கி பிணைமுறி). மேலும் ராஜபக்சேக்களையும் ரணிலையும் ஒரு சேர எதிர்ப்பது மக்களா அல்லது இதன் பின்னணியில் அரசியல் இயக்கமொன்றின் உறுப்பினர்கள் செயல்படுகிறார்களா என்ற சந்தேகமும் எழுவதை மறுப்பதற்கில்லை.

https://www.facebook.com/1003158954/videos/769996374419746/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Kandiah57 said:

கோத்தா போர்குற்றவாளி என்று உரத்துக் கூற வேண்டும்...சர்வதேச விசாரணை....மனித உரிமை ஆணையாளரின்   பரிந்துரைகள் அமுல் செய்யுமாறு கோர வேண்டும் .....போராட்டங்களை ஒழுங்குபடுத்தி நடத்த வேண்டும்    அப்படி செய்யும் போது இப்போது போராட்டங்களை செய்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் தேர்தல் ஒன்று வந்தால் ஓடியடி போட்டி போட்டு வேலை செய்யும் இவர்கள் இப்போது ஏன்?.  அமைதியாக இருக்க வேண்டும்   

சரியான கருத்து. 👍👍👍👍👍

தமிழர் தரப்பு செய்ய வேண்டிய வேலைகள் ஆயிரமுண்டு. அதற்கேற்ற சந்தர்ப்பங்கள் இருந்தும் ரணில் வீடு எரிப்புக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

சரியான சோத்துக்கொம்பனிகள்.😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.