Jump to content

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்; கோட்டாகோகம மீது தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்; கோட்டாகோகம மீது தாக்குதல் 


கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ரணலன-ஆடடம-ஆரமபம-கடடககம-மத-தககதல/175-300899

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மை என்றால்.. ரணில் தப்புத்தாளம் போடுறார். மாணவர்களின் பலத்தை இராணுவத்தைக் கொண்டு அடக்க முற்பட்டு.. தோற்றவர்கள் பலர். இது பிலிப்பைன்ஸ் மார்க்கோஸின் நிகழ்வுகளுக்கு ஒத்து எல்லாம் நடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்,  ரணிலுக்கு…. பதவி விலக இரண்டு வாரம் கால அவகாசம் கொடுத்தவர்கள்.
ரணில்… அவர்கள் மீது, தாக்குதலை தொடுத்ததன் மூலம்,
நாளையே…. பெரிய போராட்டம் வெடிக்கும்.
ஆனால் அதை அடக்க… துப்பாக்கி சூடுகள் கூட நடத்தப் படலாம்.

நாளைக்கு… அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவும் இருக்கின்றது.
ஏதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை நாளை அறியலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ரணிலின் ஆட்டம் ஆரம்பம்; கோட்டாகோகம மீது தாக்குதல் 

அல் ஜஸீரா மற்றும் பீ.பீ.சீ போன்ற செய்திகளில் 'கோட்டா கோ கோம்' போராட்டக் கொட்டைகள் பிடுங்கி எறியப்படும் காட்சிகள் 00:30 மணிக்கு ஒளிபரப்பாகியது. நள்ளிரவு 01:00மணிக்கு முகமூடிகள் அணிந்து படையினர் உள்ளடங்கலாக நடவடிக்கையில் ஈடுபட்டதைக் காண முடிந்தது. நாளை சுடுகலனும் பாவிக்கப்படலாம். அமெரிக்க, இந்திய ஆசீர்வாதத்தோடு மீண்டும் அப்பாவிகள் காவுகொள்ளப்பட உள்ளனர். அதேவேளை முன்னணிப் போராட்டக்காரர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். உறவுகள் முன்பே சுட்டியதுபோல் நரியினது வேலை ஆரம்பித்தவிட்டது. ரணிலின் தொடக்கமும் முடிவும் உறுதியாகிறதாகவே தென்படுகிறது.
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் அதிபராக வேறு ஒருவர் வந்து இருப்பினும் இதே நடவடிக்கையே. அப்புறப்படுத்தல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விடயம் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்கள் ரணிலுக்கு சந்தர்ப்பம் கொடுத்து வெள்ளியுடன் தாம் தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்போவதாகக் கூறியபின்னரும், வியாழன் இரவே ரணில் தனது அதிகாரத்தைக் காட்டத் தொடங்கியிருப்பது, போராட்டக்காரர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லவே என்று கூறப்படுகிறது. 

பழைய ஆட்சியாளர்களை, ஊழல்ப் பெருச்சாளிகளை அப்புறப்படுத்தவென்று வந்த போராட்டம் இன்று அதே பெருச்சாளிகளால் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

இனிமேல் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும். 

ராஜபக்ஷேக்கள் பெளத்தத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பவர்கள், தமது வாக்கு வங்கியை அதிகரிக்க. 

ரணில் பிக்குகளை தூரத்தில் வைத்திருப்பவர் என்று அறியப்பட்டவர். ஆனால், தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் அவரும் சென்றிருப்பது கங்காராமயவின் ஆசீர்பெற. அதுமட்டுமல்லாமல், ராணுவத்தின்மீதான பூரண அதிகாரம் தனக்கிருப்பதாகக் காட்ட ராணுவத் தலைமையகத்திற்கும் உடனே சென்று முப்படைப் பிரதானிகள், பொலீஸ் உயர் அத்தியட்சகர் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் பெருந்தலைகளோடு ஆலோசனைக் கூட்டமும் நடத்தியிருக்கிறார்.

இந்த நரி தற்போது சிங்கத்தின் தோல்போர்த்தி வந்திருக்கிறது. நண்மைக்கல்ல. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களை இலக்குவைத்து இழுத்துச் செல்லும் அதிரடிப்படை. காலில் விழாத குறையாகக் கெஞ்சும் இளைஞனும் அவனது துணையும். "மச்சான், நான் உங்களைப் பார்த்து அப்படிக் கூறவில்லை, என்பாட்டில் வீட்டிற்குத்தான் செல்கிறேன், தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்" என்று அவன் கெஞ்சியும், தனது துப்பாக்கியை இன்னொரு வீரனிடம் கொடுத்துவிட்டு அவனை எப்படியாவது இழுத்துச்செல்ல அந்த அதிரடிப்படைவீரன் முயல்கிறான். 

https://twitter.com/dhothaka/status/1550237788133814272?s=20&t=lWqFI---E20UjdcuSMgjFA

https://twitter.com/dhothaka/status/1550237788133814272?s=20&t=lWqFI---E20UjdcuSMgjFA

எந்த ராணுவம் உங்களின் யுத்த கதாநாயகர்கள் என்று இதுவரை கூவினீர்களோ, அதே ராணுவம் இப்போது உங்கள் முன்னால் வந்து நிற்கிறது. எங்கே, இப்போது கூறுங்கள் பார்க்கலாம் நீங்கள் எங்களின் உண்மையான் கதாநாயகர்கள் என்று ?

Edited by ரஞ்சித்
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடடா   அரசால் ஊட்டி வளர்க்க படட படையினரின் போக்கு இப்பொது விளங்கும்....   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

போராட்டக்காரர்கள் ரணிலுக்கு சந்தர்ப்பம் கொடுத்து வெள்ளியுடன் தாம் தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்போவதாகக் கூறியபின்னரும், வியாழன் இரவே ரணில் தனது அதிகாரத்தைக் காட்டத் தொடங்கியிருப்பது, போராட்டக்காரர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லவே என்று கூறப்படுகிறது. 

அன்று ஏதிலிகளாக நின்ற எம்மை, எப்படி ஓட ஓட விரட்டி கொன்று குவித்தார்களோ அந்த சூழலை இவர்களும் கண்டு, அனுபவித்து அதன் வலியை உணரவேண்டாமோ? காலம் முழு மூச்சோடு இறங்கியிருக்குது, ஏறினாலும் விடாது, இறங்கினாலும் விடாது தான் நினைத்ததை நடத்தி முடிக்கும் வரை. தோல்வியோடு வீட்டுக்கு போய் ஓய்வெடுக்காமல்  வலிந்து வந்து நிக்கிறவர்களோடு தன் பழைய கணக்கை தீர்க்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

அன்று ஏதிலிகளாக நின்ற எம்மை, எப்படி ஓட ஓட விரட்டி கொன்று குவித்தார்களோ அந்த சூழலை இவர்களும் கண்டு, அனுபவித்து அதன் வலியை உணரவேண்டாமோ? காலம் முழு மூச்சோடு இறங்கியிருக்குது, ஏறினாலும் விடாது, இறங்கினாலும் விடாது தான் நினைத்ததை நடத்தி முடிக்கும் வரை. தோல்வியோடு வீட்டுக்கு போய் ஓய்வெடுக்காமல்  வலிந்து வந்து நிக்கிறவர்களோடு தன் பழைய கணக்கை தீர்க்க.

இல்லை சாத்.

எமக்கு நடந்தவற்றுடன் இவற்றை ஒப்பிடவே முடியாது. இன்றுவரை சுடப்பட்டுக் கொல்லப்பட்ட சிங்களவர் ஒருவர் தான். நேற்றிரவு கூட ஆயுதங்கள் பாவிக்காமலேயே மக்களை விரட்டியிருக்கிறார்கள். இப்போராட்டங்களில் ஒரு சிங்களவனும் உயிரிழக்கக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். தமது ராணுவத்தின்மீதும், பொலீஸ் மீதும் மக்கள் வெறுப்படையாமல் பார்த்துக்கொள்வதில் மிகக் கவனமாக ஆட்சியாளர்கள் செயலாற்றுகிறார்கள். தமிழர்மீது தாம் நடத்திய அக்கிரமங்களை சிங்களவர் ஒருபோதுமே உணர அவர்கள் விடப்போவதில்லை. மக்கள் தமது "யுத்தக் கதாநாயகர்கள்" எனும் விம்பம் நொருங்காமல் எப்போதும் மனதில் இருக்க சகலதையும் இந்த ஆட்சியாளர்கள் செய்வார்கள். 

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இல்லை சாத்.

எமக்கு நடந்தவற்றுடன் இவற்றை ஒப்பிடவே முடியாது. இன்றுவரை சுடப்பட்டுக் கொல்லப்பட்ட சிங்களவர் ஒருவர் தான். நேற்றிரவு கூட ஆயுதங்கள் பாவிக்காமலேயே மக்களை விரட்டியிருக்கிறார்கள். இப்போராட்டங்களில் ஒரு சிங்களவனும் உயிரிழக்கக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். தமது ராணுவத்தின்மீதும், பொலீஸ் மீதும் மக்கள் வெறுப்படையாமல் பார்த்துக்கொள்வதில் மிகக் கவனமாக ஆட்சியாளர்கள் செயலாற்றுகிறார்கள். தமிழர்மீது தாம் நடத்திய அக்கிரமங்களை சிங்களவர் ஒருபோதுமே உணர அவர்கள் விடப்போவதில்லை. மக்கள் தமது "யுத்தக் கதாநாயகர்கள்" எனும் விம்பம் நொருங்காமல் எப்போதும் மனதில் இருக்க சகலதையும் இந்த ஆட்சியாளர்கள் செய்வார்கள். 

உண்மை. பார்வைக்கு வன்நடவடிக்கைபோன்ற தோற்றப்பாட்டினையும் இழப்புகளற்ற மென் நடவடிக்கையூடாக போராட்டக்காரரை அப்புறப்படுத்தவே முயல்வார்கள். கதாநாயகவிம்பம் பாதுகாக்கப்படுதல்தான் அவர்களது முதலீடு. அதனை இழக்கவிரும்பமாட்டார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“கோட்டா கோ கம” படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுள் வந்தது! – ஊடகவியலாளர்கள் உட்பட பலர் மீது தாக்குதல் – பலர் காயம்!

July 22, 2022
spacer.png

 

கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரால் நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 8 பேர் காயமடைந்துள்ளதுடன், ஊடகவியலாளர்கள்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டாகோகமவில் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் – இரண்டு ஊடகவியலாளர்கள் கைது!

கோட்டாகோகமவில் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன். இரண்டு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளரான சதுரங்க பிரதீப் குமார, கசுன் குமாரகே ஆகியோர் கிராஸ்கட் எனும் பகுதியில் இடைமறிக்கப்பட்டு விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் எந்தவொரு காவல் நிலையத்திலும் ஒப்படைக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கோட்டாகோகம போராட்டக்களத்தில் ஊடகவியலாளர் றசிக குணவர்தன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது தலையில் இரும்பு கம்பியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுள் வந்தது!

கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது போராட்டக்களத்திலிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட 10 போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு சிவில் உடையணிந்த இராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் மற்றும் விமானப்படையை சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினருடன் மோத வேண்டாம், இல்லையெனில் அவசரச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் போது பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத வண்ணம் கோட்டா கோ கம பகுதியை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோட்டா கோ கம பகுதியில் கூடாரங்கள் மற்றும் தடயங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 

https://globaltamilnews.net/2022/178696

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலி முகத்திடல் போராட்டக்களம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது – ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்!

காலி முகத்திடல் போராட்டக்களம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது – ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டிற்கும் மேற்பட்டவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், இரண்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த பகுதியில் இருந்த சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை போராட்டக்கள பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காலிமுகத்திடல் பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதுடன், காலிமுகத்திடல் பிரதேசத்திற்குச் செல்லக்கூடிய அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு முற்றாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தியின் சுற்றுவட்டத்தில் இருந்து பாதை மூடப்பட்டுள்ளதுடன், ஷங்கிரிலா ஹோட்டல் அருகில் பாலதக்ஷ மாவத்தையும் குறுக்காக மறிக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் சைத்திய வீதி, லோட்டஸ் வீதி என்பனவும் குறுக்காக மறிக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலி முகத்திடல் பிரதேசத்தை நோக்கிச் செல்ல எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுத்துள்ளதுடன்,செல்ல முற்படும் சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1291940

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் - ஏற்றுக்கொள்ள முடியாதவிடயம் - சர்வதேச மன்னிப்புச்சபை

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டித்துள் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு  இது ஏற்றுக்கொள்ள முடியாதது  அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும்  என வேண்டுகோள் விடுத்துள்ளது.

army_atta.jpg

டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படவேண்டும்,இலங்கை அதிகாரிகள் உடனடியாக இந்த வன்முறை நடவடிக்கைகளை கைவிடவேண்டும்,சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும் பத்திரிகையாளர்கள் கோட்டா கோ கமவிற்குள் நுழைவதை தடுக்ககூடாது,பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்வதை தடுப்பது பத்திரிகை சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயல் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்;துள்ளது.

126007286_mediaitem126007485.jpg

FYObD6tacAEIEfi.jpg

FYObJYYakAA4kaW.jpg

FYOa--HaQAAWxKY.jpg

FYObCw5aMAELjD7.jpg

FYOTYTuaAAEO4yC.jpg

FYOTaiyaUAAaovx.jpg

FYOTVzAaMAA4Wk7.jpg

FYOTXZdaQAAsTuS.jpg
 

https://www.virakesari.lk/article/131991

 

 

ஆர்ப்பாட்ட முகாம்கள்மீது படையினர் தாக்குதல் - தலைவர்கள் கைது அல்ஜசீரா

ஆர்ப்பாட்டக்காரர்கள்  மீது ஈவிரக்கமற்ற தாக்குலை மேற்கொண்ட பின்னர் இலங்கை இராணுவத்தினர் தலைநகர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றியுள்ளனர்.

அருகில் உள்ள கோட்டா கோ கம  ஆர்ப்பாட்ட கூடாரங்களை அழித்த படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர்கள் பலரை கைதுசெய்துள்ளதுடன் அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையிலிருந்து ஆர்;ப்பாட்டக்காரர்கள் வெளியேறி சில மணிநேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

22ம் திகதி ஜனாதிபதி செயலக பகுதியிலிருந்து வெளியேறும் தங்கள் நோக்கத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

protests_atta1.jpg

நள்ளிரவளவில் பெருமளவு படையினர் கோட்டாகோகம பகுதியை நோக்கி செல்வதாக நாங்கள் கேள்விப்பட்டோம்,தீடிரென அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி ஓடுவதை பார்த்தோம் என இளம் ஆர்ப்பாட்டக்காரரான நிபுன் சாரக ஜெயசேகர அல்ஜசீராவிற்கு  தெரிவித்தார்.

அதன் பின்னர் அவர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து ஈவிரக்கமின்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என அவர் குறிப்பிட்டார். இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து தப்பமுயன்றவேளை அவர் சிறிய காயங்களிற்கு உட்பட்டுள்ளார்.

இhhணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டவேளை அதனை நேரடியாக ஒளிபரப்பு செய்த ஜெயசேகர எனினும் நிலவிய குழப்பநிலை காரணமாக தனது கையடக்கதொலைபேசியை தொலைத்துள்ளார்.

தாக்குதல் காரணமாக பத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மோசமாக காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறு தடவை பிரதமராக பதவி வகித்த ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் மீதான ராஜபக்சக்காளின் நீண்ட கால செல்வாக்கு குறித்து அதிகரித்துவரும் கடும் சீற்றத்தை காணப்பட்ட  தொடர் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து  முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடினார்.

தாக்குதல் கைதுகள் குறித்து அறிந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும் கைதுசெய்யப்பட்டவர்கள் எங்கே உள்ளனர் என்பதை தெரிவிக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நான் பொலிஸ்மா அதிபரையும் இராணுவதளபதியையும் தொடர்புகொள்ள முயன்றுள்ளேன்,தேவையற்ற படைபலபிரயோகம்  நாட்டிற்கும் அதன் சர்வதேச கௌரவத்திற்கும் உதவாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டவேளை நிலவிய குழப்பம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான அஞ்சன பண்டாரவத்தை அல்ஜசீராவிற்கு இவ்வாறு தெரிவித்தார்.

எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை,தீடிர் என அவர்கள் வந்து சத்தமிட்டவாறு ஆபாசவார்த்தைகளில் ஏசியவாறு  தாக்குதல் மேற்கொண்டு எங்களை அங்கிருந்து துரத்தினார்கள் என அவர் குறிப்பிட்டார்.

அங்கு 200 படையினர் காணப்பட்டனர் ஆனால் அந்த பகுதி இராணுவத்தினரின் கடல்போல காணப்பட்டது என்றார் அவர்.

சமூக ஊடகங்கள் மூலம் தாக்குதலை ஒளிபரப்பிக்கொண்டிருந்தவேளை விமானப்படையை சேர்ந்த ஒருவர் தலையில் தாக்கினார் என இளம் செயற்பாட்டாளர் சபீர் முகமட் தெரிவித்தார்.

அவர் பின்னால் இருந்து வந்து தலையில் தாக்கினார் எனது கையடக்க தொலைபேசியை பறித்து எறிந்தார்,நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த பலர் தாக்கப்பட்டனர் என அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்தார்.

அவர்கள் கோட்டா கோ கமவை மூடிவிட்டனர் எந்த பத்திரிகையாளரும் உள்ளே செல்ல முடியாது என அவர் குறிப்பிட்டார்.

பலர் தாக்குதல்களை சமூக ஊடகங்கள் மூலம் நேரலை செய்தனர் எனினும் அதிகாரிகளின் தலையீட்டால் அது அடிக்கடி பாதிக்கப்பட்டது.

படையினர் எவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களின் பகுதிக்கு வந்தனர்  மீடியா மீடியா என சத்தமிட்ட நபரை எப்படி திருப்பியனுப்பினர் என்பதை வீடியோக்கள் காண்பித்துள்ளன.

அதன் பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களை சோதனையிட்டனர்.

FYPDKgxUsAQtNS1.jpg

ஆர்ப்பாட்ட இயக்க தலைவர்களில் ஒருவரான மெலானி குணதிலக கோட்டா கோ கம பகுதிக்கு செல்ல முயன்றவேளை படையினரால் தடுக்கப்பட்டார், அவர் படங்களை எடுக்கமுயன்றவேளை இராணுவவீரர் ஒருவர் கையடக்க தொலைபேசி பறித்து அவற்றில் உள்ளவற்றை அழித்தார் என அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்தார்.

எனது நண்பர் கேள்விகேட்க முயன்றவேளை படையினர் அவரையும் கைதுசெய்தனர் என அவர் தெரிவித்தார்.

22ம் திகதி 2 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளிக்கவுள்ளனர் என்ற அறிவிப்பின் பின்னர் 22 ம் திகதி அதிகாலையி;ல் 1 மணிக்கு மிகப்பெருமளவு இராணுவத்தினர்  கோட்டா கோ கமவை சுற்றிவளைத்து  அனைத்து திசைகளில் இருந்தும் ஆயுதமற்ற ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க தொடங்கினார்கள் என ஆர்ப்பாட்ட தலைவர்கள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

தகவல்தொழில் நிலையம்,அங்கவீனமுற்ற படையினர் கூடாரம் 

நாளாந்தம் பெருமளவானவர்களிற்கு உணவளித்த சமூக சமையலறை உட்பட பல கூடாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என ஆர்ப்பாட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணி நுவான் போபகே செயற்பாட்டாளர்கள் லகிருசில்வா,அனுரங்க, அங்கவீனமுற்ற படை வீரர் ஒருவர் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விக்கிரமசிங்க இன்று புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பதவியேற்ற பின்னர் பின்னர் ரணில் விக்கிரமிங்க நான் அரச கட்டிடங்களை ஆக்கிரமித்தல் அரசாங்கத்தை பதவி கவிழ்க்க முயலுதல் போன்றவற்றை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார்.

நாளை நாளை நாங்கள் இங்கிருந்து செல்வோம் என பகிரங்கமாக அறிவித்திருந்தோம்,நாங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்க தீர்மானித்தோம்,தங்கள் அதிகாரத்தை காண்பிப்பதை தவிர இதனை செய்வதற்கான நோக்கம் வேறு எதுவும் இருக்க முடியாது ஆர்ப்பாட்ட இயக்கத்தை மிரட்டி ஒடுக்குவதே அவர்களின் நோக்கம் என ஜெயசேகர குறிப்பிட்டார்.
 

 

https://www.virakesari.lk/article/131994

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ராணுவம் நள்ளிரவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: பிபிசி தமிழ் செய்தியாளரும் தாக்கப்பட்டார்

22 ஜூலை 2022, 02:24 GMT
புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்
YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இலங்கையில் பாதுகாப்புப் படையினர் தலைநகர் கொழும்புவில் உள்ள முக்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்ட முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி கூடாரங்களை அகற்றத் தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே இருந்த போராட்டக்காரர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்குச் சில மணிநேரத்திற்கு முன்னதாக, நூற்றுக்கணக்கான துருப்புகள் மற்றும் போலீஸ் கமாண்டோக்கள் போராட்டக்காரர்களை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

பிபிசி செய்தியாளர்கள் மணிகண்டன், அன்பரசன் எத்திராஜன், ஜெரின் சாமுவேல் ஆகியோர் பிபிசி நேரலையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, வீடியோ செய்தியாளர் ஜெரின் ராணுவத்தால் தாக்கப்பட்டார். அதோடு, ராணுவ வீரர் ஒருவர் அவருடைய கைபேசியைப் பறித்து, அதிலிருந்து வீடியோக்களை அழித்தார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பிறகு இது நிகழ்ந்துள்ளது.

 

இலங்கை ராணுவம் போராட்டக்காரர்கள் மீது திடீர் தாக்குதல்

 

படக்குறிப்பு,

இலங்கை ராணுவம் போராட்டக்காரர்கள் மீது திடீர் தாக்குதல்

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் 13ஆம் தேதியன்று நாட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர், சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமாவை கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதியன்று ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு, 20ஆம் தேதியன்று நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்க, பொதுமக்களிடம் செல்வாக்கு இல்லாதவராகக் காணப்படுகிறார். மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

 

இலங்கை ராணுவம் போராட்டக்காரர்கள் மீது திடீர் தாக்குதல்

நாட்டின் நிதியைத் தவறாகக் கையாண்டமைக்காக ராஜபக்ஷ நிராகத்தின் மீது பலர் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரச்னையின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்கள். ஆனால், அவர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மறுநாளே தெருக்களில் சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

விக்ரமசிங்க பதவியேற்ற உடனேயே, அரசாங்கத்தைக் கவிழ்க்க அல்லது அரசாங்க கட்டடங்களை ஆக்கிரமிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் ஜனநாயகம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியதோடு, அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

ராணுவத்தால் கலைக்கப்பட்ட போராட்டக்காரர்கள்

எதிர்ப்பு இயக்கத்தை விரைவில் அரசாங்கம் படிப்படியாக ஒடுக்கக்கூடும் என்று போராட்டக்காரர்கள் மத்தியில் கவலைகள் இருந்தன. ஜனாதிபதி செயலகத்தின் வளாகம் மாத்திரம் போராட்டக்காரர்களின் வசமிருந்த நிலையில், அதை இன்று மதியம் அரசாங்கத்திடம் கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்திருந்தனர்.

இருப்பினும், இலங்கையில் ஜனாதிபதி செயலகத்தை கடந்த 104 நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்த போராட்டகாரர்கள், இன்று (22-07-2022) அதிகாலை ராணுவத்தால் கலைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் உள்ளிட்ட படை வீரர்களை ஈடுபடுத்தி, அரசாங்கம் ஜனாதிபதி செயலகம் மற்றும் அதை அண்மித்த வளாகத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய ராணுவம் மற்றும் போலீஸார் வரழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து வீதிகளையும் ராணுவத்தினர், தடுப்பு வேலிகளை அமைத்து மூடியிருந்தனர்.

அதன்பின்னர், திடீரென ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வருகை தந்த ராணுவம், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.

ராணுவத்தின் தடியடி தாக்குதலை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள், ஜனாதிபதி செயலக வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

பிபிசி செய்தியாளர் மீது தாக்குதல்

ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியிலிருந்து இளைஞர், யுவதிகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்களை கலைப்பதற்காக ராணுவம் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், பிபிசி தமிழ் பேஸ்புக் பக்கத்தின் ஊடாக நேரடி ஒளிபரப்பை வழங்கிக் கொண்டிருந்தோம்.

இதன்போது, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர், பிபிசி தமிழ் செய்தியாளர் மணிகண்டன் மற்றும் வீடியோ செய்தியாளார் ஜெரினின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்திருந்தனர்.

 

இலங்கை ராணுவம் போராட்டக்காரர்கள் மீது திடீர் தாக்குதல்

அதைத் தொடர்ந்து, நாம் பிபிசி செய்தியாளர்கள் என்று எமது செய்தியாளர்கள் கூறி பாதுகாப்புப் பிரிவிற்கு தெளிவூட்டல்களை வழங்க முயன்ற சந்தர்ப்பத்தில், ஊடக கடமைகளுக்கு மீண்டும் மீண்டும் இடையூறு விளைவித்தனர்.

அதன் பின்னர், பிபிசி தமிழ் வீடியோ செய்தியாளர் ஜெரின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதுடன், ஜெரினுடைய வயிற்றின் மீது ராணுவ அதிகாரியொருவர் தனது பாதணி அணிந்த பாதங்களினால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதையடுத்து, ஏனைய பிபிசி செய்தியாளர்களின் உதவியுடன், தாக்குதலுக்கு இலக்கான செய்தியாளர் அருகிலுள்ள நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

குறித்த பகுதியைச் சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமையினால், வாகனங்கள் உள்ளே பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் முடியாத நிலைமை காணப்பட்டது.

அதன்பின்னர், 1990 என்ற இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டு, தாக்குதலுக்கு இலக்கான எமது செய்தியாளரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆம்புலன்ஸ் குறித்த பகுதிக்கு வருகை தந்து, பிபிசி செய்தியாளரை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உதவியது.

இந்நிலையில், குறித்த ஊடகவியலாளருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

காவல்துறை செய்தித்தொடர்பாளர் எஸ்.எஸ்.பி.நிஹல் தல்டுவா பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டது குறித்து தனக்குத் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரிப்பதாகவும் கூறியுள்ளார்

இதேவேளை, கொழும்பின் பிரதான பகுதிகளில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-62261266

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் : அமெரிக்க தூதுவர் கவலை

U.S.-ambassador_-galle-face-protest_-attகொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை  குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அதிகாரிகள் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றோம் என தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கான உடனடி அனுமதியை வழங்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

https://www.virakesari.lk/article/131995

காலிமுகத்திடல் போராட்டம் மீது அடக்குமுறை : கனடா, பிரித்தானியா கண்டனம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை  குறித்து பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஆழ்ந்த கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளன.

galle-face-protests_-Canada_-Britain_.jp

குறித்த சம்பவம் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் தெரிவிக்கையில்,

uk.JPG

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைகிறேன்.  அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகின்றோம் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவிக்கையில்,

canada.JPG

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை.  அதிகாரிகள் நிதானத்துடன் செயல்படுவதும் வன்முறையைத் தவிர்ப்பதும் முக்கியம் என கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
 

https://www.virakesari.lk/article/131996

காலிமுகத்திடல் போராட்டம் மீது அடக்குமுறை : சுவிற்சர்லாந்து கண்டனம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட  நடவடிக்கை குறித்து சுவிஸ்லாந்து உயர்ஸ்தானிகர் டொமினிக் ஃபர்க்லர் ஆழ்ந்த கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில்  சுவிற்சர்லாந்து உயர்ஸ்தானிகர் டொமினிக் ஃபர்க்லர்தெரிவிக்கையில்,

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைகிறேன்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான உரிமை முக்கியமானது.

காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கான உடனடி அனுமதியை வழங்கவேண்டும். இலங்கைக்கு பரஸ்பர மரியாதையும் ஒத்துழைப்பும் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

swiss.JPG
 

https://www.virakesari.lk/article/131998

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் – அமெரிக்கா

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்குங்கள் – அமெரிக்கா வலியுறுத்து!

நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்குமாறும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://athavannews.com/2022/1291964

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது - ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு. எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது என ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

29.jpg
 

 

https://www.virakesari.lk/article/132004

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம், தூதுவர்களால் கவலைப்படுவதைத் தவிர வேறென்னதான் செய்ய முடியும். பரவாயில்லை, கவலைப்படவாவது செய்தார்கள். தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோதும் கவலைப்பட்டார்களா? யாருக்காவது நினைவிருக்கிறதா?

  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது - ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு. எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது என ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

29.jpg
 

 

https://www.virakesari.lk/article/132004

நீங்கள்நல்லா கவலைப்படுங்கோ, இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும் போது ஒன்றும் செய்யாமல் கைகட்டி இருந்து விட்டு இப்ப ஒரு சின்ன தாக்குதலுக்கே இப்பிடி 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தூதுவர், பிரித்தானிய தூதுவர், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி நாடகமாடுகிறார்களா
பிள்ளையையும் நுள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுதல் தானே இது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்க தூதுவர், பிரித்தானிய தூதுவர், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி நாடகமாடுகிறார்களா
பிள்ளையையும் நுள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுதல் தானே இது

 

இவர்கள் அவசரமாக  அனுதாபப்படுகிறார்கள்  என்றால்.....???

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமை தங்கள் கையை மீறிவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள். ரணிலோடு தொடர்ந்து செயலாற்ற விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்திருந்ததே? நல்லாட்சி காலத்தில் ராஜபக்ஸ் குடும்பத்தை ஐ. நாவில் காப்பாற்றியவர் இன்று அதே கோட்டில். பாப்போம் எப்படி முடியுதென்று? கடைசியாய் ஆப்கானிஸ்தானில நடந்ததுபோல் அமெரிக்க இராணுவம் இதுதான் சந்தர்ப்பம் என்று வந்து இறங்கினாலும் ஆச்சரியமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்க தூதுவர், பிரித்தானிய தூதுவர், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி நாடகமாடுகிறார்களா
பிள்ளையையும் நுள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுதல் தானே இது

மேற்கு நாடுகள் எல்லாம் கவலை தெரிவித்து விட்ட நிலையில்….

பக்கத்து நாடான இந்தியா… இன்னும் கவலை தெரிவிக்கவில்லை என்று,
எனக்கு கவலையாக இருக்கு. 😁

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://thodarum.com/ltte-intelligent-mathavanmaster/ இயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி பி.திகதி – 24.07.1958   தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆரம்பகால பொறுப்பாளருமாகிய, மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009 முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் வீரச்சாவடைந்துள்ளார். தலைவர், பொட்டமான், மாதவன் மாஸ்ரர் என குறிப்பிடும் அளவிற்கு புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்ற கட்டுமானத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புலனாய்வுத்துறையில் மிகத் திறமையான செயற்பாடுகளை உடைய பலரை இனம் கண்டு அவர்களின் ஊடாக, விடுதலைப் புலிகளுக்கான புலனாய்வின் வீச்சை அதிகரித்து, அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்தியவர். உலகநாடுகளில் வாழும் பலரது அன்பையும் நட்பையும் பெற்று புலனாய்வுத்துறை திறம்பட செயற்பட்ட மூத்த தளபதிகளில் மாதவன் மாஸ்ரர் அவர்கள் குறிப்பிடத்தக்க இடத்தை தனக்கென பதிவுசெய்தவர். தான் நேசித்த மண்ணின் விதையாக வீழ்ந்துள்ள  மாதவன் மாஸ்டர் அவர்களால் வளர்க்கப்பட்ட புலனாய்வுத் துறைப் போராளிகள் பலரை முள்ளி வாய்க்காலில் இருந்து கடுமையான முயற்சிகளின் ஊடாக பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நின்று களமாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரால் பயிற்றப்பட்டு சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும், அரச நிர்வாகங்களுக்குள்ளும், அதன் படைகளுக்குள்ளும் ஊடுருவி தமது செல்வாக்கைச் செலுத்தி உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர், கடைசி நேர சரணடைவின் போது மிகக் கடுமையான காயங்களுடன் இராணுவத்திடம் சரணடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த போராளிகள் பலரை பாதுகாப்பாக வெளியேற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்காலில் இருந்து  மாதவன் மாஸ்ரர் அவர்களும் பாதுகாப்பாக வெளியேறியிருப்பார் என எண்ணியிருந்த போராளிகளுக்கு இவரின் வீரச்சாவு செய்தி ஏற்க முடியாத ஒன்றாகவே அமையும். அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகைய பலரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு தன்னோடு அழைத்துச் சென்று நடந்திருக்கிறது. அந்தத் தடங்களில் மாதவன் மாஸ்ரரும் நடந்து உயர்ந்து விடுதலைப்புலிகள் புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவராகியிருந்தார். காலங்கள் கடந்தும் அழியாத வரலாற்றுப் பொக்கிசமாக முள்ளிவாய்க்கால் முடிவோடு இன்னும் முடியாத வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் மாதவன் மாஸ்ரரையும் காலம் கௌரவப்படுத்திக் கொள்கிறது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மாணவனாக படித்துக் கொண்டிருந்த ரகுநாதன் என்ற இளைஞன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததும் அந்த இளைஞன் ஒரு காலத்தின் கதையானதும் நாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த அதிசயம் அல்ல அற்புதம். சிங்களத்தின் கொடிய இனவாதம் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் தின்ற காலத்தில் தான் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ரகுநாதனின் வாழ்வும் மாற்றத்தைக் கண்டது. தலைவர் பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி மற்றும் வனஜா, ,ஜனனி, ஜெயா,.. ஆகிய பெண்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற அந்த நாளில் இத்தகைய போராட்டங்களில் தன்னையும் இணைத்து விடுதலைப்பாதையில் நடக்கத் தொடங்கிய ரகுநாதன் 83 தமிழர் மீதான இனக்கொலையின் பின்னர் இந்தியாவிற்கு படிப்பை தொடர்வதற்காக பெற்றோரால் அனுப்பப்பட்டார். நாட்டைப்பிரிந்த துயர் சொந்த நாட்டில் தொடர்ந்து வாழ முடியாத அவலம் அயல்நாட்டில் கல்வியைத் தொடர முடியாத மனவுளைச்சலைக் கொடுத்தது. அப்போது இந்தியாவில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பினைத் தானே தேடி அவர்களுடன் தனது பணிகளை ஆரம்பித்தார். இந்தியாவில் 4வது பயிற்சிப் பாசறையில் பயிற்சியை முடித்து ரகுநாதன் மாதவனாகினார். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் , புலிகளின் புலனாய்வுத்துறையின் இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கபிலம்மான் ஆகியோர் உட்பட பலரை உருவாக்கியது 4வது பயிற்சிப்பாசறையாகும். இங்கிருந்து உருவாகிய பலர் பின்னாட்களில் அரசியல் இராணுவ புலனாய்வுத் துறைகள் என பல்பரிமாண ஆற்றலோடு பல்லாயிரம் பேரை உருவாக்கும் பேராற்றலைப் பெற்றார்கள். அக்காலத்தில் ‘போர்க்களம்’ என்ற பெயரில் நூலொன்று உள்ளகச் சுற்றாக வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நூலானது தமிழ் மொழியில் உலக இராணுவ நுணுக்கங்கள், பயிற்சிகளின் நெ(பொ)றிமுறைகள் யாவையும் கற்பித்தலுக்கும் போராளிகள் கற்றுக் கொள்ளவும் பயன்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழில் இராணுவப் பயிற்சியை போராளிகளுக்கு வழங்க வேண்டுமென்ற விருப்பத்தை இந்த நூல் நிறைவு செய்திருந்தது. போர்க்களம் நூலின் உருவாக்கத்தில் மாதவன் மாஸ்ரரின் பங்கானது வரலாற்றில் அழிக்க முடியாதது. வெளிநாட்டு இராணுவப் பயிற்சிகள், இராணுவ வெளியீடுகள் , ஆயுதங்கள் பற்றிய நூல்களையெல்லாம் பெற்று அவற்றை தமிழாக்கம் செய்து போராளிகளுக்கு இலகுவாய் கற்பிக்கும் வகையில் வடிவமைத்து முதல் முதலில் தமிழில் இராணுவ பயிற்சியை போராளிகளுக்கு வழங்கிய பெருமையில் மாதவன் மாஸ்ரருக்கு கணிசமான பங்கு உண்டு. ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட மாதவன் மாஸ்ரர் தலைவரோடு பணிகளில் இணைந்து 1987களில் தாயகம் வந்து சேர்ந்தார். தாயகம் திரும்பிய பின்னரும் தலைவருக்கு அருகாமையிலேயே பணிகள் நிறைந்தது. எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை பெற்றவர்களுள் மாதவன் மாஸ்ரரும் ஒருவர். பின்பு இந்திய இராணுவ காலத்தில் தலைவருடன் இணைந்திருந்தவரை யாழ்மாவட்டத்திற்கான பணிகளுக்காக தலைவரால் அனுப்பப்பட்டார். 26.10.1987 இந்திய இராணுவம் மாதவன் மாஸ்ரர் பிறந்த ஊரான அளவெட்டியில் நிகழ்த்திய படுகொலைச் சம்பவமானது வரலாற்றில் அளவெட்டி கிராமத்தினால் மறக்க முடியாதது. இந்திய இராணுவத்தினரின் முதலை என்னும் எம்.ஐ.24 ரக உலங்குவானூர்தியால் நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதலில் அளவெட்டி இந்து ஆச்சிரமத்திலிருந்த வயோதிபர்கள் சிறுவர்கள் உட்பட 15பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியிருந்த அந்தக்காலத்தில் காட்டிலிருந்து 1988இல் யாழ்மண்ணை வந்தடைந்தார் மாதவன் மாஸ்ரர். ஊரெங்கும் இந்தியப்படைகள் சுற்றி நிற்க மக்களுடன் வாழ்ந்த போராளிகளில் மாதவன் மாஸ்ரரும் அந்தக் காலத்து சவால் நிறைந்த நாட்களையெல்லாம் கடந்து சென்றார். உறக்கமில்லை உணவில்லை அலைவும் மரணப் பொழுதுகளுமாக விடிந்த பொழுதுகள். எனினும் மாறாத தேசக்காதலோடு மக்களோடு ஊரெங்கும் நடந்து திரிந்த கால்கள் ஓயாது உழைத்துக் கொண்டேயிருந்தது. அப்போதைய யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல்.மதி அவர்கள் திருநெல்வேலியில் இந்திய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டார். 10.12.1988 இந்தியப்படைகளிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரகாவியமான மதி அவர்களின் இழப்போடு தொடர்புகள் யாவும் அறுபட்டு தனித்துப் போனார் மாதவன் மாஸ்ரர். மீண்டும் காட்டுக்குச் செல்வதற்குமான வழிகளும் தொடர்புகள் அற்றுப்போய்விட்டது. கடல்வழியாக தனது முயற்சியில் தமிழகத்திற்குச் சென்றடைந்து கிட்டண்ணா, பாலாண்ணா ஆகியோரின் தொடர்புகளை எடுத்து அவர்களோடு பணிகளைத் தொடர்ந்தார். எங்கிருந்தாலும் விடுதலைப் போராளிக்கு ஓய்வில்லையென்பதனை தனது உழைப்பால் உணர்த்திய போராளி. பின்னர் 1989களில் பிறேமதாச அரசோடு பேசும் காலம் வந்த போது தாயகம் வந்து பாலமோட்டைக் காட்டுப்பகுதியைச் சென்றடைந்தார். ஒவ்வொரு போராளியின் நினைவிலும் மாதவன் மாஸ்ரரின் கலகலப்பும் நகைச்சுவையுமே நினைவில் நிற்கும் மறக்க முடியாத மனிதன். மென்மையான அந்த இதயத்தினுள் ஒரு மாபெரும் புலனாய்வாளன் புலனாய்வு ஆசான் புதைந்து கிடந்ததை காலமே கைபற்றி வெளியில் காட்டியிருந்தது. புலிகளின் புலனாய்வுத்துறை பெரு வளர்ச்சி கண்டு உலகை அதிசயிக்க வைத்த எல்லா வெற்றிகளின் பின்னாலும் மாதவன் மாஸ்ரரும் வெளியில் தெரியாத வேராக இருந்தார். அந்தக்காலம் தலைவருக்கும் தளபதிகளுக்கும் சோதனைகளும் தடைகளுமே சூழ்ந்திருந்தது. எனினும் புலிகளின் அமைப்பின் துறைசார் வளர்ச்சிகள், மாற்றங்கள் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் ஒரு பிரிவாக புலனாய்வுப்பிரிவின் தேவையும் அதன் எதிர்கால பணிகளும் உணரப்பட்டு தனித்த சிறப்பான புலனாய்வுத்துறையை உருவாக்க தலைவரின் சிந்தனையின் செயல்வடிவமாக போராளிகள் செயற்படத் தொடங்கியிருந்தனர். அப்போதைய பிரதித்தலைவரான மாத்தையாவின் நிர்வாகத்தில் சலீம் அவர்களின் பொறுப்பின் கீழ் மாதவன் மாஸ்ரரினால் பயிற்சிகள் வழங்கப்பட ஆயத்தங்கள் தயாராகியது. புலனாய்வுப்பிரிவின் பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளின் முடிவில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் போராளிகள் தெரிவு செய்யப்பட்டு பாலமோட்டைக்கு உள்வாங்கப்பட்டார்கள். புலனாய்வுத்துறையின் வளர்ச்சியின் ஆரம்பம் இங்கேதான் உருவாகியது. இதுவே பின்னாளில் புலனாய்வுத்துறையின் பல்பரிமாண மாற்றத்தின் ஊற்றாகியது. பாலமோட்டைக் காடுகளே இந்திய இராணுவ காலத்தில் புலிகளின் வரலாற்றில் முக்கிய பங்கை வகித்த வரலாற்றைத் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருந்தது. பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலம் அது. பாலமோட்டையிலிருந்தே அரசியல் போராளிகளை இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி கொழும்புக்கு ஏற்றிச் செல்லும். அரசியல் பேச்சுக்குச் சென்று திரும்பும் போராளிகளை மாதவன் மாஸ்ரரால் வளர்க்கப்பட்ட புலனாய்வுப்போராளிகள் பத்திரமாக பாதுகாப்பாக கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார்கள். யாழ்மாவட்டத்திலிருந்து அதிகளவிலான போராளிகளும் இதர மாவட்டங்களிலிருந்து ஐந்து ஐந்து போராளிகளுமாக பாலமோட்டைக்கு வந்து சேர்ந்தார்கள். புலனாய்வுப் பயிற்சிக்கு வந்திருந்த போராளிகள் தனித்தனியே நேர்முகம் செய்யப்பட்டார்கள். பயிற்சியின் கடுமை கட்டுப்பாடுகள் யாவும் விளங்கப்படுத்தப்பட்டு அனைத்து விதிகளையும் ஏற்றுக் கொள்ளும் துணிச்சல் மிக்கவர்களை மட்டுமே பயிற்சியில் பங்கெடுக்க அனுமதியும் வழங்கப்பட்டது. பயிற்சியின் கடினம் கட்டளைகளை ஏற்றுக் கொண்டு போராளிகள் புலனாய்வுப்பயிற்சிக்குத் தயாரானார்கள். 37என்ற சுட்டுப்பெயரைக் கொண்டு இயங்கிய முகாம் புலனாய்வுப்பயிற்சி முகாமாக அமைக்கப்பட்டது. லெப்.கேணல் கிறேசி அனைத்து முகாம்களுக்கு பொறுப்பாகவும் புலனாய்வுப் பகுதிக்கு சலீம் அவர்களும் பொறுப்பாக புலனாய்வுப் பயிற்சியில் ஆண் பெண் போராளிகள் தயாராகினர். பயிற்சிக்கான முதல் நாள் கலந்துரையாடலில் பயிற்சி பெறும் போராளிகளுக்கான பயிற்சி விதிகள் விளக்கப்பட்டது. பயிற்சியின் போது தினமும் 10கிலோ மண்மூடையைச் சுமந்தபடியே பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நித்திரைக்குச் செல்லும் நேரம் தவிர்த்த இதர நேரமெல்லாம் 10கிலோ மண்மூடையை யாரும் கழற்றவே கூடாதென்று அறிவுறுத்தப்பட்டது. இப்பயிற்சியின் நெறிப்படுத்துனர்களாக மாதவன் மாஸ்ரர் மற்றும் சலீம் ஆகியோர் கவனிப்பர் எனவும் விளக்கப்பட்டது. புலனாய்வுத்துறை பயிற்சிகளில் மாதவன் மாஸ்ரரின் சிரத்தையும் கவனமும் அனைத்துப் போராளிகளையும் அப்பயிற்சியில் அக்கறையோடு பயிற்சியைத் தொடர வைத்தது. அதுமட்டுமன்றி குறும்புகள் ,குழப்படிகள் நிறைந்த இளவயதுக்காரர்களால் நிறைந்த அந்தப் பயிற்சி முகாமில் பயிற்சியாசிரியராக மட்டுமின்றி ஒரு தந்தையின் கண்டிப்பும் கவனமும் ஒவ்வொரு போராளிக்கும் பொதுவாகவே இருந்தது. குறும்புகள் செய்வோருக்கு தண்டனைகள் வழங்குவதில் தந்தையாகவும் அவர்களின் வளர்ச்சியில் தாயின் அக்கறையோடும் புலனாய்வுப்பயிற்சிகளை நடாத்தி புலனாய்வுத்துறையின் வளர்ச்சியில் தனது பங்களிப்பை காத்திரமாக வழங்கியிருந்தார். மாதவன் மாஸ்ரரினலேயே உருவாக்கப்பட்ட போராளிகள் புலனாய்வுத்துறையின் பல்துறைசார் ஆற்றல்களோடும் வளர்ந்தார்கள். அனைத்து புலனாய்வுப் போராளிகளின் உருவாக்கத்திலும் மாதவன் மாஸ்ரரே ஆதாரமாக ஆசானாக இருந்தார். யாழ்மாவட்டத்தின் பொறுப்பாளராக தலைவரால் நியமிக்கப்பட்டிருந்த பொட்டு அம்மான் 1989 இறுதியில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தளபதி பானு அவர்கள் யாழ்மாவட்டத்தின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். காரணம் சொல்லப்படாமல் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு பொட்டு அம்மான் அவர்கள் தலைவரால் பாலமோட்டைக்கு அழைக்கப்பட்டார். தனது ஒவ்வொரு அசைவிலும் பணியிலும் புலனாய்வுக்கான திறனையும் ஆழமையையும் வெளிப்படுத்தியது மட்டுமன்றி அதுவே சிந்தனையாயிருந்த பொட்டு அம்மான் அவர்கள் புலிகளின் புலனாய்வுத்துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பொட்டு அம்மானிடம் திறமை வாய்ந்த தளபதிகளான லெப்.கேணல் சூட், லெப்.கேணல். மாதகல் ராஜன், மாதவன் மாஸ்ரர் ,கபிலம்மான் போன்றவர்களைக் கொடுத்த தலைவர் புலனாய்வுத்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான தளத்தையும் வழியையும் உருவாக்கும் பொறுப்பை பொட்டு அம்மான் அவர்களிடம் கையளித்திருந்தார். பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறையின் உருவாக்கம் புதிய வடிவத்தில் காலடி வைத்த காலம் 1990. இக்காலம் இந்தியப்படைகள் ஈழத்தை விட்டு வெளியேறியிருந்தது. புலிகள் நாட்டுக்குள் வந்திறங்கி மக்களோடும் மக்களின் பணிகளோடும் தங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தார்கள். புலனாய்வுத்துறையின் முக்கிய மாற்றமும் வளர்ச்சியும் புதிய பாய்ச்சலை நோக்கிய பயணம் ஆரம்பித்திருந்த இந்நேரத்தில் பொட்டு அம்மான் அவர்களால் மாவட்டங்களுக்கான புலனாய்வுப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். யாழ்மாவட்டம் மாதகல் ராஜன் , வன்னிமாவட்டம் மல்லி , மட்டக்களப்பு மாவட்டம் நியூட்டன் , திருகோணமலை மாவட்டம் கபிலம்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டு மாவட்டங்களுக்கான புலனாய்வுத்துறை கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இக்காலமானது மிகுந்த சிக்கல் நிறைந்த காலமாக இருந்தது. அதுமட்டுமன்றி சகோதர இயக்கங்கள் , இந்திய இராணுவத்தோடு இணைந்து இயங்கியவர்கள் , இந்திய இராணுவ காலத்தில் நடந்த பல படுகொலைகளில் நேரடிப் பங்காளிகள், எதிரியின் உளவாளிகள் முகவர்கள் யாவரும் கலந்திருந்த சிக்கல்கள் நிறைந்த நேரமது. ஒவ்வொரு விடயத்தையும் சரியாக இனங்கண்டு ஆராய்ந்து விடுதலைப்பயணம் பயணிக்க வேண்டிய இக்கட்டான காலமும் இதுவே. இந்தக் காலத்தில் தான் புலனாய்வுத்துறையினரின் முக்கிய பணிகளில் ஒன்றாக தகவல் சேகரிப்பு விசாரணைப்பிரிவு உருவாக்கப்பட்டது. சேகரிக்கப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை , உறுதிப்படுத்தல் , சரியான வகையில் இனங்காணப்பட்ட விடயங்கள் அனைத்தும் சரியானவே என்பதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு விசாரணைப் பிரிவின் கையிலேயே இருந்தது. இவ்விசாரணைப் பிரிவிற்கும் பொட்டு அம்மானுக்குமான இணைப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டார். விடயங்களைச் சரியாக ஆராய்ந்து அவற்றை எழுத்து வடிவாக்கி அறிக்கைகள் தயாரித்து பொட்டு அம்மானுக்கு வழங்கும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரரின் பங்கு காத்திரமானது மட்டுமன்றி காலத்தின் தேவையாகவும் அமைந்தது. அறிக்கைகள் என்பது கடதாசிகளில் எழுதப்பட்டாலும் அக்கடதாசிகளிலேயே அனைத்து விடயங்களும் த(தே)ங்கியிருந்தது. ஒவ்வொரு சிறு சிறு விடயங்களிலும் சரிகளையும் ,தவறுகளையும் , நியாயங்களையும் , தீர்வுகளையும் இவ் அறிக்கைகளே தாங்கிக் கொண்டிருந்தது. ஒரு சிறு தவறுக்கும் ஒரு அறிக்கையே காரணமாகிவிடக்கூடிய ஆபத்தான பணி. ஆபத்தான பணியையும் அழகாக செய்து முடிக்கும் திறமை மாதவன் மாஸ்ரரிடமும் மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட புலனாய்வுத்துறைப் போராளிகளிடமுமே இருந்தது. போராளிகள் சேகரித்து வரும் அறிக்கைகள் யாவையும் தானே வாசித்து அவ்வறிக்கைகளை தொகுப்பாக்கி கோடிகளுக்கு நிகரான பெறுமதி மிக்க புலனாய்வுப்பணியின் தந்தையாகவே மாதவன் மாஸ்ரரின் தியாகம் அமைந்தது. இக்காலத்தில் மாதவன் மாஸ்ரரிடம் கல்விக்குழுவினை உருவாக்குமாறு பொட்டு அம்மானால் பணிக்கப்பட்டது. ஒவ்வொரு சொல்லுக்கும் செயல்வடிவத்தையே காட்டும் திறமை மிக்கது புலிகளின் வரலாறு. பொட்டு அம்மானின் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் பொறுப்பாளராக மாதவன் மாஸ்ரர் நியமிக்கப்பட்டு கல்விக்குழுவின் செயற்பாட்டுக் குழு உருவாக்கம் காண்கிறது. கல்விக்குழு ஆசிரியர் குழுவில் 3பேர் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் உலக புலனாய்வு அமைப்புகள் கட்டமைப்புகள் பற்றிய தரவுகளை சேகரித்தல் மற்றும் நூல்களை தருவித்துக் கொடுக்க வேண்டும். தருவிக்கப்படும் அனைத்துலக புலனாய்வு பிறமொழி நூல்களை ஓய்வுபெற்ற மொழிப்புலமையாளர்களுக்கு ஊதியம் வழங்கி நூல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பொறுப்பையும் கண்காணிக்கும் பொறுப்பும் மாதவன் மாஸ்ரரிடமே இருந்தது. இப்பணிக்காக தனியாக இடமொன்றை ஒழுங்கு செய்து அங்கு வைத்தே இப்பணி மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போதைப் போல அந்தக்காலம் இலகுவில் கணணியில் தட்டச்சு செய்து நூல்களை வடிவமைக்கவோ அல்லது அச்சுப்பதிக்கவோ இலகு வசதிகள் இல்லை. பிறேமதாச அரசின் பொருளாதாரத்தடை நடைமுறையில் இருந்த காலம். அடிப்படை தேவைகள் கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அச்சடிக்கும் கடதாசியிலிருந்து அனைத்தும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மொழிபெயர்க்கப்படும் புலனாய்வு நூல்களை அச்சுக்கோர்த்து நூல்வடிவாக்கி புலனாய்வுப் போராளிகளுக்கு கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கும் பெரும் பொறுப்பை மாதவன் மாஸ்ரரே எற்றிருந்தார். அத்தோடு இலங்கையில் வரும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் முக்கியமான செய்திகளை வெட்டி அவற்றை மட்டைகளில் ஒட்டி அச்சுப்பிரதியெடுத்து நூலுருவாக்கும் பொறுப்பானது ஒரு புலனாய்வுத்துறையின் போராளியிடம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு போராளியும் தனக்கு வழங்கப்படும் பொறுப்பையும் பணியையும் கவனமாகவும் கடமையுணர்வோடும் செய்து முடிக்கும் திறனை ஊட்டியது புலிகளின் பயிற்சிகளும் பாசறைகளும். இங்கும் மாதவன் மாஸ்ரரின் பங்கும் பணியும் பெரியது. மாதவன் மாஸ்ரரால் உருவாக்கப்பட்ட கல்விக்குழுவின் அபார வளர்ச்சியும் செயற்பாடும் வேகவேகமாய் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொடுத்தது. இத்தனை வளர்ச்சியின் முதுகெலும்பாக மாதவன் மாஸ்ரரே நிமிர்ந்து நின்றார். இத்தோடு பிறமொழிகளில் வெளியாகும் புலனாய்வு திரைப்படங்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு போராளிகளுக்கு காட்டப்பட்டது. அனைத்து துறைசார் போராளிகளுக்கும் கல்விக்குழுவினால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களே கற்பித்தலில் பயன்படுத்தப்பட்டது. இக்கற்பித்தல் பொறுப்பும் ஒரு புலனாய்வுத்தறைப் போராளியிடம் வழங்கப்பட்டிருந்தது. கல்விக்குழுவே அனைத்து துறைசார் போராளிகளுக்கான விழிப்புணர்வையூட்டியும் புடம்போட்டு வளர்த்து பணிகளுக்கு அனுப்பினார்கள். அதுபோல வெளிப்பணிகளுக்குச் செல்லும் ஆண் பெண் போராளிகளையும் கல்விக்குழுவே பயிற்றுவித்து அனுப்பியது. கல்விக்குழு உருவாக்கிய திறமையானவர்களை வைத்தே இதர துறைகளின் போராளிகளுக்கான பயிற்சிகளும் , இளநிலைப் போராளிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இத்தனைக்கும் ஆணிவேராக நின்ற மாதவன் மாஸ்ரரினால் உருவாக்கப்பட்டவர்கள் பலர் பின்னாட்களில் பெரும் பொறுப்புகளில் கடமைகளைத் தொடரவும் ஏணியாக நின்ற இமயம் மாதவன் மாஸ்ரர். கல்விக்குழுவின் ஆரம்பமும் அதன் அடித்தளமுமே பின்னாளில் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் இதர துறைகளின் திறமையாளர்களை செயற்பாட்டாளர்களை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்ததை வரலாறு தன் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டது. உலகம் புலிகளின் புலனாய்வுத்துறையை இன்றுவரை புதிர்களாயே பார்க்கும் வகையில் புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியானது மேம்படவும் அதி உச்சதிறனுடன் வளரவும் காரணமான பலரை உலகம் காணாமல் அவர்கள் மௌனங்களாலே எழுதப்பட்டார்கள். அந்த மௌனம் எழுதிய வரிகளில் மாதவன் மாஸ்ரரும் அடங்குகிறார். 1993 காலம் தமிழீழப்போராட்ட வரலாற்றில் சவால் நிறைந்த நெருக்கடியை புலிகள் சந்தித்த காலம். எனினும் புலனாய்வுத்துறையின் நுண்ணிய அவதானிப்பு ஆற்றல் எல்லாத்தடைகளையும் உடைத்துக் கொண்டு நிமிர வைத்தது. இக்காலம் மாதவன் மாஸ்ரர் உருவாக்கிய போராளிகள் வெவ்வேறு துறைகளுக்கும் பணிகளுக்கும் சென்று கொண்டிருந்தார்கள். கல்விக்குழுவின் வளர்ச்சியானது மாதவன் மாஸ்ரருக்கு மேலும் பல பணிகளை வழங்கிய நேரம் கல்விக்குழுவிற்கான பொறுப்பாளராக பொஸ்கோ அவர்கள் நியமிக்கப்பட்டார். மாதவன் மாஸ்ரர் பொட்டு அம்மான் அவர்களின் நேரடி அவதானத்திற்குள் உள்வாங்கப்பட்டார். இக்காலத்தில் வெளியக புலனாய்வுத்துறையின் ஆண்கள் பிரிவுக்கு தளபதி கேணல் சாள்ஸ் அவர்களும் , பெண்கள் பிரிவுக்கு தளபதி லெப்.கேணல் அகிலா அவர்களும் பொறுப்பில் இருந்தார்கள் அகிலா அவர்கள் வீரச்சாவடையும் வரையும் பெண்கள் புலனாய்வின் பொறுப்பாளராக அகிலா அவர்களே இருந்தார். அதிலும் அகிலா அவர்கள் வெளியகப்பொறுப்போடு வெளியகப்பணியகத்தின் பொறுப்பையும் ஏற்றிருந்தார். இவ்விரண்டு நிர்வாகங்களுக்கும் உட்படாத ஒரு பணியை பொட்டு அம்மான் அவர்கள் மாதவன் மாஸ்ரரிடம் வழங்கியிருந்தார். அந்த வேலைத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் மாதவன் மாஸ்ரரிடமே வழங்கியிருந்தார். புலனாய்வுத்துறையின் பணிகள் இரகசியமானதாகவும் ஆழமானதாகவும் இருந்த போதிலும் இவை அனைத்திலும் மாதவன் மாஸ்ரருக்குப் பெரும் பங்கிருந்தது. அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கா அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து 3ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. சமாதானத்தைக் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்ட சந்திரிகா அம்மையார் அவர்கள் தமிழர் தரப்புடன் போர் செய்யத் தக்க தனது முழுபலத்தையும் பயன்படுத்த முனைந்து யுத்தத்தில் ஈடுபடத்தொடங்கியது. குறிப்பாக தமிழர் தாயகப்பகுதிகளான வடகிழக்கில் யுத்தம் ஆரம்பித்திருந்தது. தொடர்ந்த விமானத் தாக்குதல்கள் எறிகணை வீச்சுக்கள் மரணத்தின் காலைகளையே தமிழர் நிலத்தில் பரவிவிட்டிருந்தது. அன்றாட விடியல் சாவுகளைக் கொண்டு வரும் பொழுதுகளாகவே விடியத் தொடங்கியது. எல்லா நம்பிக்கைகளும் போய் இனி யுத்தம்தான் என சந்திரிகா அரசு கடல், தரை, வான் படைகளை களத்தில் இறக்கியது. மாதவன் மாஸ்ரர் மிகவும் அவசியமான பொறுப்பொன்றை பொறுப்பேற்று தனது பணிகளில் நேர்த்தியும் கவனமுமாகியிருந்த வேளையில் சூரியக்கதிர் நடவடிக்கையை எதிரி மேற்கொண்ட நாட்களவை. யாழ்மண்ணைக் கைப்பற்றும் முயற்சியில் யாழ்மாவட்டத்தில் பலாலி ,காங்கேசன்துறை ஆகிய இடங்களில் முகாமிட்டிருந்த சிங்களப்படைகள் முற்றுமுழுதாக யாழ்மண்ணைக் கைப்பற்றும் நோக்கில் அனைத்து முனைகளிலிருந்தும் முன்னேறத் தொடங்கியது. 09.07.1995அன்று பலாலியில் முகாமிட்டிருந்த சிங்களம் முன்னேறிப்பாய்தல் எனும் பெயரில் வலிகாமம் வடக்கு, மேற்கு பகுதிகளை நோக்கி படை நகர்வை மேற்கொண்டனர். தங்கள் வாழிடங்களைவிட்டு இடம்பெயர்ந்த மக்கள் தேவாலங்கள் கோவில்களில் தஞ்சமடைந்தனர். முன்னேறும் படைகளுக்கு ஆதரவாக வான்படைகளின் புக்காரா விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தன. இதன் தொடக்கமாக நவாலி தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது சிங்கள வான்படை நடாத்திய தாக்குதலில் படுகாயமடைந்தும் மரணித்துப் போனவர்களின் உறவுகளின் கண்ணீரால் நிறைந்தது. குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என இக்குண்டு வீச்சில் இரத்தமும் சதையுமாக நவாலி தேவாலய வளாகம் மரண ஓலத்தால் நிறைந்தது. 3குண்டு வீச்சு விமானங்கள் ஒன்றாக நடாத்திய தாக்குதலில் இரத்தக்கறைபடிந்த துயரத்தை மக்கள் மனங்களில் பதிவாக்கியது. பேரவலத்தின் ஆரம்பம் அன்று தொடங்கியது. அதேதினத்தில் அளவெட்டி , சண்டிலிப்பாய் போன்ற பகுதிகள் நோக்கியும் பலாலியிலிருந்து எதிரியால் தொடுக்கப்பட்ட பீரங்கி , எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட எதிரி வலிகாமம் தென்மேற்கு , மேற்கு , தெற்கு பகுதிகள் நோக்கியும் மக்கள் வாழிடங்கள் நோக்கி தாக்குதலை மேற்கொண்டனர். உடுத்த உடைகளுடன் கைகளில் அகப்பட்டவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். வீதியெங்கும் மக்கள் வெள்ளம். மக்கள் நகரும் இடமெங்கும் எதிரியின் விமானத்தாக்குதலும், எறிகணை வீச்சுகளும் துரத்திக் கொண்டு போனது. மரணங்களும் , காயங்களும் சாவின் வாசனையை துயரத்தின் வேதனையை மக்கள் அனுபவித்தபடியே நடந்தார்கள். காயமடைந்தவர்களை காப்பாற்ற அவகாசமோ மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஆதரவோ கிடைக்கவில்லை. மருத்துவ வசதியோ காயமடைந்தோரை ஏற்றிச் செல்ல வாகன வசதியோ இல்லாமல் மரணம் மலிந்தது. மனங்கள் மட்டும் வலியோடு நடந்தது. நவாலிமண்மீது வீசப்பட்ட குண்டுகளால் அக்கிராமம் அமைதியை இழந்தது. அழுகையினாலும் மரண வலியினாலும் உயிர்கள் துடிக்க அன்று நவாலி சென்பீற்றர் தேவாலயம் மற்றும் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் வீழ்ந்த குண்டுகளால் 147இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து போக 360இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்கும் வழியின்றி பலரை இழக்கும் நிலமையை அன்றைய நாளில் அங்கிருந்த மக்களால் மறக்க முடியாத வடுவைத் தந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உணவு, நீர் வசதிகளை வழங்கிய 48தொண்டர்களும் அன்று தங்கள் உயிர்களை அங்கே விதைத்து விழிமூடிக்கொண்டனர். எதிரியின் வரவை எதிர்த்து சமராடிக் கொண்டிருந்தார்கள் புலிகள். நவாலி , நாகர்கோவில் ,நந்தாவில் அம்மன்கோவில் என இடம்பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த மக்கள் தங்கிடங்களிலெல்லாம் சிங்கள வான்படையின் தாக்குதல் பெரும் உயிரழிவைத் தந்தது. அநியாயமாக அழிக்கப்பட்ட நவாலி தேவாலயத்தை அரச ஊடகம் புலகளின் ஆயுதத் தொழிற்சாலை குண்டுவீச்சில் அழிக்கப்பட்டதென அறிவித்திருந்தது. உலகமும் இந்த அழிப்பை பெரிதுபடுத்தவில்லை. தேவாலயம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி யாழ் மறை மாவட்ட ஆயர் வத்திக்கானுக்கு அறிவித்திருந்தார். வத்திக்கானும் நாவாலித் தேவாலயத்தின் மீது வீசப்பட்ட குண்டுகளில் அழிந்த தேவாலயம் பற்றியோ உயிர்கள் பற்றியோ எவ்வித கவனத்தையும் காட்டவில்லை. என்றும் தமிழர் மீதான அழிவுகளை உலக நாடுகள் இப்படித்தான் மௌனிகளாக வெறும் பார்வையாளர்களாக நின்று பார்த்தது. புலிகளே மக்களின் அழிவுகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் முதல் முன்னேறி வரும் இராணுவத்துடனான சமரையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் மக்களைக் குண்டுவீசிக் கொன்றழித்த புக்காரா குண்டுவீச்சு விமானம் மீது 14.07.1995 சண்டிலிப்பாயில் வைத்து புலிகளின் ஏவுகணை மூலம் புக்காரா சுட்டுவீழ்த்தப்பட்டது. கடற்புலிகளால் இதே காலம் எடித்தாரா கப்பல் மீது கடற்புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டு கடல் மூலமான எதிரியின் வழங்கலிலும் புலிகள் தடைய ஏற்படுத்தியிருந்தனர். தரையால் முன்னெடுக்கப்பட்ட எதிரியின் முன்னேறிப் பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக புலிகளால் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையும் மேற்கொள்ளலுக்கு திட்டமிடப்பட்டது. புலிப்பாச்சல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காலம் பௌர்ணமிகாலமாகும். நிலவு காலத்தில் வலிந்த தாக்குதல்களைச் செய்வதில் அதிகளவு பாதகத்தையே சந்திக்க வேண்டிய நிலமை வரும். ஆனால் அந்த நிலவுகாலத்தில் எதிரியிடமிருந்து மண்ணையும் மக்களையும் காப்பாற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தைக் காலம் கொடுத்தது. புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் புலிகளின் இராணுவத் திறனும் எதிரியுடனான சண்டையும் எதிரியால் எதிர்கொள்ள முடியாது போக கைப்பற்றிய பகுதிகளை விட்டு எதிரி பின்வாங்கிப் போனான். புலிப்பாய்ச்சல் மூலம் எதிரியின் கனவு சிதைக்கப்பட்டது. 17.10.1995 அன்று ரிவிரெச (சூரியக்கதிர்) என்ற பெயரில் யாழ்மண்ணை முற்றுகையிடும் கனவோடு சிங்களப்படைகள் முன்னேறத் தொடங்கியிருந்தது. வரலாறு காணாத அழிவையும் இழப்பையும் இடப்பெயர்வையும் கண்டது யாழ்மண். காலம் காலமாய் சேர்த்த சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து அகதியாக்கப்பட்டார்கள் மக்கள். சிங்களத்தின் கொலைக்கரங்கள் தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் கொன்று போட்டுக் கொண்டிருக்க கிடைத்ததைக் கைகளில் எடுத்துக் கொண்டு இடம்பெயரத் தொடங்கியவர்களை 30.10.1995அன்று மாபெரும் துயரில் வீழ்த்தியது காலம். 6லட்சம் தமிழர்களை ஒரேநாளில் துடைத்தெடுத்து சொந்த இடங்களிலிருந்து துரத்திய அந்த நாளின் துயரத்தை வார்த்தைகளுக்குள் கட்டி வைக்க தமிழில் வார்த்தைகளாலேயே முடியாது போனது. மழைவெள்ளத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்தது. ஒருநாளில் யாழ்மண்ணின் குடிகள் தங்கள் சொந்த ஊரைப் பிரிந்து சென்று கொண்டிருந்தது. 30.10.1995அன்று புலனாய்வுத்துறையின் பணியகப்பொறுப்பாளரும் வெளியக பெண்கள் பிரிவு புலனாய்வுப் பொறுப்பாளருமான லெப்.கேணல்.அகிலா அவர்கள் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். மண்ணை மீட்கும் சமரில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிர்களை ஈந்து கொண்டிருந்தவர்கள் வரிசையில் லெப்.கேணல்.அகிலா அவர்களும் வீரகாவியமானார். மாதவன் மாஸ்ரரின் வழிநடத்தலில் பாலமோட்டைக் காடுகளில் நடைபெற்ற முதல் புலனாய்வுப் பாசறையில் வளர்ந்த அகிலா விடுதலைப்புலிகள் முதல்பெண் கரும் புலியை உருவாக்கிபெருமைக்குரியவரும்.அவர்களின் புலனாய்வுத்துறையின்பணிகளானது ஒரு தனி வரலாறு. புலிகள் பெரும் சவாலையும் நெருக்கடியையும் சந்தித்த காலங்களில் இக்காலமும் முக்கியமான காலமாகும். இப்போது லெப்.கேணல்.அகிலா அவர்களின் பொறுப்பிலிருந்த பணியகப் பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் பொட்டு அம்மானால் வழங்கப்பட்டது. இப்போதைய காலம் போல கையுக்குள் ஆவணங்களை சேமிக்கும் இலத்திரனியல் வசதியோ அல்லது சேமிப்பு வசதிகளோ இல்லாத காலம். அனைத்து கோவைகள் ஆவணங்கள் யாவுமே கையெழுத்து வடிவில் லட்சக்கணக்கான கடதாசிகளில் எழுதப்பட்டு கோவைப்படுத்தப்பட்டவை. ஒவ்வொரு ஆவணமும் விலைபேச முடியாத பெறுமதி மிக்கவை. உயிரை விடவும் பெறுமதி வாய்ந்தவை அத்தனை ஆவணங்களும். எதிரி முன்னேறி வரவர அத்தனை ஆவணங்களையும் பின்னகர்த்திக் கொண்டு போக வேண்டிய பொறுப்பு மாதவன் மாஸ்ரரிடம் வந்தது. ஏற்கனவே ஒருவரின் நிர்வாகத்தின் கீழிருந்து அனைத்தையும் மீளச்சீர்படுத்தி வேகவேகமாய் அனைத்தையும் இடம் மாற்றி பாதுகாப்பாக வன்னிக்குக் கொண்டு செல்லும் பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் தனக்கு வழங்கப்பட்ட பணியைச் சக போராளிகளின் துணையோடு பாதுகாப்பாகவும் கொண்டு சென்று சேர்த்தார். இதுவொரு சவாலான பணியாகவே இருந்தது. எல்லோரையும் உள்வாங்கி பொறுப்பைக் கொடுத்து ஆவணங்களை நகர்த்த முடியாத அவசரம். தனது பொறுப்பில் மாதவன் மாஸ்ரர் காட்டிய அர்ப்பணிப்பு , பொறுப்புணர்வு ஒரு போராளியின் கடமையை உணர்த்தியது. குறித்த போராளிகளை மட்டுமே நியமித்து குறித்த கால இடைவெளிக்குள் அனைத்தையும் பத்திரப்படுத்திய மாதவன் மாஸ்ரரின் பணியை பொட்டு அம்மான் பாராட்டி கௌரவித்திருந்தார். புலனாய்வுத்துறையின் வளர்ச்சியும் பணிகளின் விரிவாக்கமும் புலனாய்வுத்துறைப் போராளிகளின் பல்பரிமாண ஆற்றலும் எங்கும் சென்று வென்று வரும் வல்லமையை வளர்த்திருந்த காலத்தின் ஒரு பகுதியது. எதிரியைவிடவும் எம்மவர்களின் தொல்லைகள் காட்டிக்கொடுப்புகள் சகோதர இயக்கங்களின் அநியாயங்கள் எல்லைமீறியிருந்த காலம். பணிகளுக்காக எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இயங்கத் தொடங்கிய போராளிகளை எதிரி இனங்காண்கிறானோ இல்லையோ மற்றைய இயக்கங்கள்; இனம் கண்டு பணிகளில் நின்ற போராளிகளை ஆதரித்த குடும்பங்கள் அவர்களின் தங்கிடங்களை தேடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலமையிலிருந்து போராளிகளை பாதுகாப்பதோடு ஆதரவாளர்களின் குடும்பங்களையும் பாதுகாக்கும் சமவேளை சகோதர இயக்கங்களுடனான ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து கொண்ட பொட்டு அம்மான் அதற்காக ஒரு கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தை மாதவன் மாஸ்ரரிடம் விளக்கி ஒரு நிர்வாக அலகை உருவாக்கும் பணியை ஒப்படைத்தார். இவ்விடத்தில் அரசியல் போராளியாகவும் மாதவன் மாஸ்ரரின் ஆழுமை வெளிப்பட்டிருந்தது. புலனாய்வுத்துறையின் மூலவேரான மனிதர் அரசியல் பணியிலும் பணிகளை நகர்த்தவும் பணியாற்றவும் முடியுமென்ற உண்மையை ஒவ்வொருவரும் உணரும் வகையில் அவரது அரசியல் பணிகள் அமைந்தது. இப்பணியில் முக்கியமான பொறுப்புக்களில் இருந்த புலனாய்வுத்துறைப் போராளிகளையும் பொட்டு அம்மான் கொடுத்திருந்தார். இப்பணியில் மாதவன் மாஸ்ரரிற்குத் துணையாக ஞானவேல் அவர்கள் பணியாற்றத் தொடங்கியிருந்தார். இம்முயற்சியே பின்னாட்களில் சகோதர இயக்கங்கள் அரசியல்வாதிகளை புலிகளோடு ஒற்றுமைப்பட்டு அரசியல்பணிகளைச் செய்வதற்கான மூலவேராக இருந்தது. பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒருங்கிணைவு மற்றைய இயங்கங்களுடனான புரிந்துணர்வு செயற்பாடுகள் யாவுக்கும் பொட்டு அம்மானின் திட்டமிடல்களும் செயற்பாடுகளும் புலனாய்வுப் போராளிகளின் பணிகளும் மாதவன் மாஸ்ரரின் உழைப்புமே காரணம். ஓவ்வொரு இயக்கங்களுடனும் தொடர்புகளைப் பேணவும் ஒவ்வொரு இயக்கங்களுடனும் இணைந்து பணியாற்றவும் கூடிய வகையில் ஒவ்வொரு இயக்கங்களுக்குமான தனித்தனியான புலனாய்வுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அக்கட்டமைப்பு மூலம் அவர்களுடனான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்தகால தவறுகள் , புரிதலின்மைகளினால் ஏற்பட்ட கசப்புணர்வுகள் யாவையும் இந்தக் கட்டமைப்பு கணிசமான அளவு மறந்து பணிகளைச் செய்யவும் காரணமாகியது. எனினும் பழைய தவறுகளை மட்டுமே எண்ணையூற்றி வளர்த்து அதில் குளிர்காயத்துடித்தவர்களுக்கு மத்தியில் சகோதர இயக்கங்களுடனான தொடர்பாடல் பணிசார்ந்த வேலைகள் இறுக்கமடைந்தது. இதில் ரெலோ , ஈ.பீ.ஆர்.எல்.எவ் போன்ற இயக்க நிர்வாகங்களோடு ஆரம்பமே மிகவும் சிறந்த புரிதல் , தாயகம் எனும் ஒரே நோக்கத்திலான பணிகளும் செய்யும் வாய்ப்பை உருவாக்கியதில் கணிசமான பங்களிப்பையும் போராளிகளை உருவாக்கியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கென்பது அளப்பரியது. ஒருகாலம் எதிரும் புதிருமாக இருந்த நிலமையை மாற்றி புலிகளின் புலனாய்வுப் போராளிகளுக்கான தடைகள் இல்லாத ஆதரவை இராணுவ கட்டுப்பாட்டில் இயங்கிய இயக்கங்களும் , இயக்கப் பிரமுகர்களும் வழங்கி தங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதன் வெளிப்பாடே சமாதான காலத்தில் ஒரே மேசையில் அனைவரும் ஒன்றிணையக் காரணமாய் அமைந்தது. மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது. அந்த மாற்றம் புலிகளுக்கும் ,மற்றைய சகோதர இயக்கங்களுக்கும் இடையில் புதிய மாற்றங்களை உருவாக்கியது. இம்மாற்றத்தின் வேராக நின்றவர் பொட்டு அம்மான் அவர்கள். ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் 2002 பெப்ரவரி 22ம் திகதி சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்டது. இவ்வொப்பந்தமானது கைச்சாத்திடப்பட்ட பின்னர் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற 6கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. அனைத்து பேச்சுவார்த்தைகளும் நோர்வேயின் மத்தியஸ்தத்தில் நடைபெற்றிருந்தது. இப்பேச்சுவார்தைகள் யாவும் இலங்கைக்கு வெளியில் வெளிநாடுகளில் நடைபெற்றிருந்தது. புலிகள் அனைத்துலக சமூகத்திற்கு தமது முழுமையான ஆதரவினை வழங்கி இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர். ஆயுதங்களோடு போர்புரிந்த அமைப்பானது அரசியல் ரீதியான விடுதலையை விரும்பியதன் அடையாளமாக இப்பேச்சுவார்த்தைகளில் புலிகள் பங்கேற்றார்கள். இக்காலத்தில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாயகத்திற்கு சென்று புலிகளின் அனைத்துதுறைசார் போராளிகளுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்து செல்லும் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணி நிலத்தில் வாழும் போராளிகளுக்கும் மக்களுக்குமான இணைப்புப் பாலமாக மாதவன் மாஸ்ரர் ஆற்றிய பங்கானது புலத்திலிருந்து மாதவன் மாஸ்ரரின் நிர்வாக அலகின்கீழ் பணியாற்றியவர்கள் அனைவருமே மாதவன் என்ற மலையின் சிகரம் தொடவல்ல ஆற்றலை பண்பை அறிந்திருந்தனர். இதேவேளை இலங்கையின் அனைத்து பாகங்களிலும் வாழ்ந்த அனைத்து சமூகங்களுடனும் நல்லுறவை வளர்த்து புலிகளுக்கும் அந்த மக்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்தியதிலும் மாதவன் மாஸ்ரரின் பங்கு வெளியில் வராத உண்மையாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. நம்பியிருந்த சமாதான காலம் தமிழருக்கான விடுதலையை நிம்மதியான வாழ்வைத் தருமென்று நம்பிய நம்பிக்கைகள் எல்லாம் மெல்ல மெல்ல சிதையத் தொடங்கியது. அனைத்துலகமும் புலிகள் மீதே தங்கள் முழுமையான பலத்தையும் பயன்படுத்தத் தொடங்கியது. இலங்கையரசின் அத்துமீறல்கள் யாவற்றிற்கும் அனைத்துலக சமூகம் ஆதரவாகவே நடந்து கொண்டது. 2009 மேமாதம் எங்கள் கனவுகள் , இலட்சியப் பயணத்தின் நிமிர்வுகள் யாவுமே அனைத்துலகத்தின் ஆதரவோடு பலியெடுக்கப்பட்டு குறுகிய நிலப்பரப்பில் புலிகளின் பலம் முடக்கப்பட்டது. வாழ்வோமாயினும் போராடுவோம் இல்லை வீழ்வோமெனினும் இறுதிவரை போராடிச்சாவோம் என்ற நிலமையில் புலிகள் அனைத்துலக பலத்தோடு போராட வேண்டிய நிலமைக்குத் தள்ளியது உலகு. பெரும் பலங்களாக விளங்கிய தளபதிகளும் போராளிகளும் இறுதிச்சமரில் பங்கேற்றார்கள். எல்லாரையும் போல மாதவன் மாஸ்ரரும் தனது முடிவை களத்திலே எழுதும் முடிவையெடுத்தார். தனது துணைவியோடு இணைந்து தனக்கான பணிகளோடு களத்தில் நின்றார். தங்களது இறுதி முடிவு தப்பித்தல் அல்ல இறுதிவரை போராடிச் சாதல் என்ற முடிவைத் தனது அன்புக்கினிய தோழமைகளுக்கு அறிவித்துவிட்டு களத்தில் நின்றார். 18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் கடற்கரையில் 30வருட விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு புலிகளின் ஆயுதங்களும் மௌனித்துக் கொண்டது. போராடியே தமிழினத்தின் அடையாளத்தை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்த புலிகளின் வரலாறு அந்தக் கடலைகளோடு கரைந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்கால் அலைகளோடு உயிர்களின் துயரோசைகள் கலந்தது. இறுதிவரை இலட்சியம் சுமந்து ஒன்றாய் வாழ்ந்த தோழர்கள் தளபதிகள் போராளிகளோடு மாதவன் மாஸ்ரரும் தனது முடிவைத் தானே தேர்ந்து விழிமூடினார். புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சி , இராணுவ , அரசியல் வளர்ச்சி , சமூக பொருளாதார , உலக அரசியலுடனான மாற்றங்களுக்கு ஏற்ப புலிகளின் அனைத்து வளர்ச்சியிலும் மாற்றங்களிலும் மாதவன் மாஸ்ரர் என்ற மாபெரும் ஆற்றல் இருந்ததும் வளர்ந்ததும் வரலாறாக….! புலிகளின் போரியல் வெற்றிகளை வழிநடாத்திய தளபதிகள் பலருடனும் நட்பும் நெருக்கமும் கொண்டிருந்த மாதவன் மாஸ்ரரிடம் தங்கள் திட்டமிடல்களுக்கான ஆலோசனைகள் பெற்று தாக்குதல் வியூகங்கள் அமைத்து சண்டைகளை வழிநடாத்திய பல தளபதிகள் யாவரோடும் மாதவன் மாஸ்ரரும் அழியாத வரலாறாக மனங்களில் நிறைகிறார். உலகம் தனது மூச்சை நிறுத்தும் வரையும் வாழும் விடுதலைப் போராட்ட வரலாறுகள் ஒவ்வொன்றிலும் புலிகளின் வரலாறும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அந்த வரலாறுகள் ஒவ்வொன்றினுள்ளும் புலிகளும் மாவீரர்களும் பிறந்து கொண்டேயிருப்பார்கள். மாதவன் மாஸ்ரர்களாகவும் மரணத்தை வென்ற புலிவீரர்களாகவும் என்றென்றும் துளிர்த்துக் கொண்டேயிருப்பார்கள் புலிகள்.     நினைவுப்பகிர்வு : சாந்தி நேசக்கரம்
    • அவர் உங்களுக்கு நல்லதை சொல்கிறார் நீங்கள் அர்த்தம் விளங்காமல் ....... பிராண்டி விட ஒரு பூனை வளர்க்க சொல்கிறார் போல......!  😁
    • இருவரும் மன்னிக்கவும்.., தற்போது on arrival visa அவே நடைமுறையில் உள்ளது… இணைய வழி இன்னமும் இயங்கவில்லை… அதுதான் விமானநிலையத்தில் அமளி…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.