Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க சாத்தியக்கூறு உள்ளது.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க சாத்தியக்கூறு உள்ளது.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி ! 

1196823-madhurai-3.webp

மதுரை: இலங்கையில் இருந்து இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சியை சேர்ந்த அபிராமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அதில், ''இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக பெற்றோர்கள் இந்தியாவுக்கு அகதியாக வந்தனர். 1993- ஆம் ஆண்டு நான் இந்தியாவில் தான் பிறந்தேன்.

இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்

தற்போது 29-வயது ஆகிறது. ஆதார் கார்டு பெற்று இருப்பதாகவும் தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும்.. இந்த விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை

1539338935phpNwmpsc.jpeg

இந்த மனு மீதான விசானையின் போது நீதிபதி சுவாமிநாதன் கூறுகையில், ''மனுதாரரின் பெற்றோர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்துள்ளனர். பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மை இனமாக உள்ள மக்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்தால் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு செய்ய வேண்டும்

ஆனால், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு எந்த வித வழிகாட்டுதலும் இல்லை. எனவே இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்'' என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சாத்தியக்கூறுகள் உள்ளது

மேலும், மனுதாரர் இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் இந்தியாவில் பிறந்துள்ளார். எனவே மனுதாரர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த மனுவிற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த மனுவை தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய உள்துறை செயலாளர் 16 வாரங்களுக்குள் பரீசிலனை செய்ய வேண்டும் என வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

https://tamil.oneindia.com/news/madurai/sri-lankan-refugees-can-be-granted-citizenship-madurai-court-opinion-481048.html

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா அதிருதில்ல 

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரிகள்???

  • கருத்துக்கள உறவுகள்

”இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்க சாத்திக்கூறுகள் உள்ளது” - சென்னை உயர்நீதிமன்றம்

By T. SARANYA

18 OCT, 2022 | 12:54 PM
image

இந்திய குடியுரிமைச் சட்டத்தில் இல்லை என்றாலும் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான சமமாக சாத்தியக்கூறுகள் உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

இந்திய குடியுரிமை வழங்கவேண்டி தான் அனுப்பிய மனுவை மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் எனக் கோரி திருச்சியைச் சேர்ந்த அபிராமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு நேற்று (17) விசாரணைக்கு வந்தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ’’இந்த வழக்கில் மனுதாரரின் பெற்றோர் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கையில் நடந்த போரின் காரணமாக இந்தியா வந்துள்ளனர். இந்தியா வந்த பின்பு 1993ல் மனுதாரர் பிறந்துள்ளார். 

தற்போது மனுதாரருக்கு 29 வயதாகிறது. மனுதாரருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் குடியுரிமை கேட்டு மனு செய்துள்ளார்.

மனுதாரரின் பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். ஆனால் மனுதாரர் இந்தியாவில் பிறந்துள்ளார். அவர் இலங்கை குடிமகளாகவும் இல்லை; மனுதாரரின் கோரிக்கையை ஏற்காவிட்டால் அது சரியானதாக இருக்காது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கான குடியுரிமைச் சட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதில், இலங்கை இல்லை. இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான சமமாக சாத்தியக்கூறுகள் உள்ளது.

எனவே, மனுதாரர் குடியுரிமை வழங்கக்கோரி தாக்கல் செய்த மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு வெளிநாட்டவர் துறை செயலாளருக்கு அனுப்பவும். அதனை தமிழ்நாடு வெளிநாட்டவர் துறை செயலாளர் மத்திய உள்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். 

மத்திய உள்துறை செயலாளர் மனுதாரரின் மனு குறித்து 16 வாரங்களில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும்’’ என  உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/137901

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக தீபத்தியர்களுக்கு உடனடயாக அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டு குடியுரிமையும் வழங்கப்படுகிறது.
எம்மவர்கள் அங்கு பிறந்தாலும் குடியுரிமைக்கு காக்க வேண்டி உள்ளது.
தமிழ்நாடு எல்லாவற்றுக்கும் நடுவண் அரசை நாடி நிற்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் என்ன என்பது புரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

குறிப்பாக தீபத்தியர்களுக்கு உடனடயாக அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டு குடியுரிமையும் வழங்கப்படுகிறது.
எம்மவர்கள் அங்கு பிறந்தாலும் குடியுரிமைக்கு காக்க வேண்டி உள்ளது.
தமிழ்நாடு எல்லாவற்றுக்கும் நடுவண் அரசை நாடி நிற்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் என்ன என்பது புரியவில்லை. 

திராவிட அரசுகளுக்கு… தமிழர் விடயத்தில் அக்கறை இல்லை.
அவர்களுக்கு… சாராயம் குடிக்க மட்டுமே தமிழர் தேவை.
தமிழன்… தமிழ்நாட்டை ஆளும் போது தான்,
தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம், நடக்கவேண்டும்......நடந்தால் நல்லது......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க சாத்தியக்கூறு உள்ளது.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி ! 

நீண்ட காலத்தின் பின் இப்படி ஒரு முடிவு மகிழ்ச்சியாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க சாத்தியக்கூறு உள்ளது..


அப்பிடியே மிச்சமிருக்கிற 45 - 50 இலட்சம் பேருக்கும் கொடுத்தீர்களானால் ஈழத்தமிழர் நன்றியுடையவர்களாக இருப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nochchi said:


அப்பிடியே மிச்சமிருக்கிற 45 - 50 இலட்சம் பேருக்கும் கொடுத்தீர்களானால் ஈழத்தமிழர் நன்றியுடையவர்களாக இருப்பினம்.

இவ்வளவு பேர் உள்ளார்கள் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nunavilan said:

இவ்வளவு பேர் உள்ளார்கள் என நான் நினைக்கவில்லை.

கிட்டத்தட்ட ஒண்டரை லட்சம் பேர் இருக்கலாம் தமிழகத்தில்

நொச்சி சொன்னது இலங்கைல உள்ளவர்களையும் சேர்த்து இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிட்டத்தட்ட ஒண்டரை லட்சம் பேர் இருக்கலாம் தமிழகத்தில்

நொச்சி சொன்னது இலங்கைல உள்ளவர்களையும் சேர்த்து இருக்கலாம்

நீங்கள் சுட்டியிருப்பது சரி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாக் குடுத்தான் இந்தியன்.  

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியனாவது குடுக்கிறதாவது...

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குடியுரிமை வழங்கப்படும் சாத்தியம் இல்லை. 

இலங்கை அகதிகள் இந்தியாவுக்கு இலங்கை அரசுடன் பேரம் பேசுவதற்கான துருப்புச் சீட்டு.  குடியுரிமை வழங்கி, சீட்டை நழுவ விடாது. 

🤨

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

குறிப்பாக தீபத்தியர்களுக்கு உடனடயாக அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டு குடியுரிமையும் வழங்கப்படுகிறது.
எம்மவர்கள் அங்கு பிறந்தாலும் குடியுரிமைக்கு காக்க வேண்டி உள்ளது.
தமிழ்நாடு எல்லாவற்றுக்கும் நடுவண் அரசை நாடி நிற்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் என்ன என்பது புரியவில்லை. 

எனக்கு அவர்களின் ஒருசில உரிமைகள் தெரியும் அவையாவா.....1...ஒவ்வொரு நாளும் சினிமா படம் பார்க்கலாம்    2...நன்றாக சாப்பிடாலம்.  3...படிக்கலாம்..4...நன்றாக மது அருந்தலாம்....5...1. 2. 3. 4.    என்று திருமணம் செய்யலாம்     6...ஒவ்வொருவரும் தனித்தனி அரசியல் கட்சி தொடங்கலாம்.   ....

இப்படி நிறைய உண்டு    மத்திய’ அரசு சொல்வதை கேட்டு கேள்விகள் இல்லாமல் அப்படியே செய்வது கூட அவர்களின் உரிமை தான்    இலங்கை தமிழர்கள் மாதிரி  மொழி மண்.  என்றெல்லாம அவர்கள் அடிபடமாட்டார்கள்.    🤣🤣 கன்னடன் தொலுங்கன். மலையாளம்........எல்லோரும் தமிழ் நாட்டில் வாழலாம்”   முதல்வர் ஆகலாம்     சினிமா இல்லை என்றால் 50 % தமிழ்நாடு தமிழர்கள்    உரிமை இல்லை என்று உணரக்கூடும்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.