Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பாம்பு திருட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

யாழ்ப்பாணம் - மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருட்டு சம்பவம் (14) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை வேளையில் கோயில் முன்றலில் குரங்குடன் வந்த நபரொருவர், சிறுவர்களுக்கு குரங்கு ஆட்டம் காட்டியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து மகுடி வாசித்துள்ளார். மகுடி சத்தம் கேட்ட பாம்பு கோயில் முன் பகுதிக்கு வந்துள்ளது.

அதன்போதே குறித்த நபர் பெட்டிக்குள் பாம்பை அடைத்து கொண்டு சென்றுள்ளார் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் பாம்பு திருட்டு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இதுக்கு மூட நம்பிக்கை என ஒருவர் எழுதணும்.

மனம் புண்பட்டு விட்டதாக சைவ சேனை கிளம்பி வரணும்.

ரணகளம் ஆகணும்.

அது சரி

பிழம்பு எண்டால் கொழுத்தி போட்டால்தானே மரியாதை🤣.

  • கருத்துக்கள உறவுகள்

சைவர்கள் மனம் புண்பட இது என்ன பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பா?  🙄

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பாம்பு என்ன மதம் என்று தெரிய வேணும். அதற்கு பிறகு தான் மிச்சம்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nunavilan said:

முதலில் பாம்பு என்ன மதம் என்று தெரிய வேணும். அதற்கு பிறகு தான் மிச்சம்.🙂

பாம்பு படத்தில் நாமம் போட்டிருப்பதால் அது வைஷ்ணவம் .........!   😂

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு லீவு….. இந்த பிரிவிற்கு

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

அம்மன் கோயில் பாம்புக்கு காது கேட்கும்????

4 hours ago, பிழம்பு said:
கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.

பாம்பு பால் குடிக்காது. பால் வாசனையால் ஈர்க்கப்படும். பாலை நெருங்கி வரும் உயிரினங்களை வேட்டையாட. முன்பு யாழில் விவாதித்துள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாம்புகளுக்கு காது இல்லை. கண்களால் தான் பாம்புகள் ஒலிகளை உணர்கின்றன. இதனால்தான் பாம்புகளுக்கு ‘கட்செவி’ என்றொரு பெயரும் உண்டு. 

பாம்புகளை அரவம் என்றும் அழைக்கலம். அரவம் என்றால் ஒலி என்றும் பொருள்படும்.

துரியோதனன் கொடி பாம்புக்கொடி. அதனால் அவனை அரவக்கொடியோன் என கம்பர் அழைகின்றார். இந்த அரவக்கொடியோன் என்பது பாம்பைப் போல கொடியவன் என்ற பொருளில் வரும்.

இப்ப சொல்லுங்க சிவபெருமான் கழுத்தில் இருக்கும் அரவம் கொடியதா? 😂

இல்லையா?👀

  • கருத்துக்கள உறவுகள்

“ஊர்வன”, என்ற உயிரின வகையுள் பாம்பு மிகவும் கொடியது. மனிதர்கள் வாழும் பிரதேசத்தில் இப்படியான கொடிய ஊர்வன இல்லாமல் பார்தது கொள்வதே மனிதர்களுக்கு பாதுகாப்பு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
48 minutes ago, island said:

“ஊர்வன”, என்ற உயிரின வகையுள் பாம்பு மிகவும் கொடியது. மனிதர்கள் வாழும் பிரதேசத்தில் இப்படியான கொடிய ஊர்வன இல்லாமல் பார்தது கொள்வதே மனிதர்களுக்கு பாதுகாப்பு. 

சகல உயிரினங்களுக்கும் இந்த பூமி சொந்தம். மனிதம் முதலில் ஊர்வன வாழும் காடுகளை அழிக்காமல் இருக்கட்டும். அதன் பின்னர் ...........

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சகல உயிரினங்களுக்கும் இந்த பூமி சொந்தம். மனிதம் முதலில் ஊர்வன வாழும் காடுகளை அழிக்காமல் இருக்கட்டும். அதன் பின்னர் ...........

நீங்கள் கூறியதை ஏற்று கொள்கிறேன்.  

ஆனல், எல்லா உயிர்களும் முழுமையாக வாழ்வதற்கு பிறந்தாலும் அதை உணவிற்காக கொல்கிறோம். மீன்களும் வாழவேண்டும் என்ற சிந்தனை இன்றி அவைகளை பிடித்து வாய்க்கு  ருசியாய சமைத்து உண்கிறோம்.  ஆடு, கோழி போன்றனவும் அடங்கும் 

அதே போல மக்கள் தொகைப்பெருக்கத்தால் வாழ்விடத்திற்காக மனிதர்கள் காடுகளை அழிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எமது தாயகத்தில் வன்னி பகுதி ஒரு காலத்தில் காடாக இருந்தது. இன்று பல ஆயிரம் மக்கள் வாழ்கிறார்கள். யாழ் குடாநாட்டுக்குள் எல்லோரும் வாழ முடியாது 

 இருந்தாலும் வாழ்விடத்திற்காக  காட்டை அழிக்கும் போது ஒரு வரைமுறை தேவை.    

 

  • கருத்துக்கள உறவுகள்

இதே பாம்புதானே ஏவளை ஏமாற்றி அவளை ஏதேன் தோட்டத்தில் விலக்கப்ட்ட க‌னியை புசிக்க வைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இப்ப இதுக்கு மூட நம்பிக்கை என ஒருவர் எழுதணும்.

மனம் புண்பட்டு விட்டதாக சைவ சேனை கிளம்பி வரணும்.

ரணகளம் ஆகணும்.

அது சரி

பிழம்பு எண்டால் கொழுத்தி போட்டால்தானே மரியாதை🤣.

இது அவரவர் நம்பிக்கை விருப்பம் என்று சொல்லி விட்டு ஓடி விட முடியாது

பாம்பு பாம்பு 🐍 தான்

மக்கள் மத்தியில் நடமாட அனுமதிப்பது நன்றன்று 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, விசுகு said:

இது அவரவர் நம்பிக்கை விருப்பம் என்று சொல்லி விட்டு ஓடி விட முடியாது

பாம்பு பாம்பு 🐍 தான்

மக்கள் மத்தியில் நடமாட அனுமதிப்பது நன்றன்று 

அம்மன் கோவில் இருப்பது காடு போன்ற சோலைக்குள்.........
ஊர்மனையில் காடு எதற்கு?

ஆசியா போன்ற வெய்யில் நாடுகளில் விச பிராணிகள் மக்கள் வாழும் இடங்களில் இருப்பது சகஜம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இது அவரவர் நம்பிக்கை விருப்பம் என்று சொல்லி விட்டு ஓடி விட முடியாது

பாம்பு பாம்பு 🐍 தான்

மக்கள் மத்தியில் நடமாட அனுமதிப்பது நன்றன்று 

சும்மா பேசீட்டே இருந்தா எப்படி?

அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாம்?

3 hours ago, குமாரசாமி said:

அம்மன் கோவில் இருப்பது காடு போன்ற சோலைக்குள்.........
ஊர்மனையில் காடு எதற்கு?

ஆசியா போன்ற வெய்யில் நாடுகளில் விச பிராணிகள் மக்கள் வாழும் இடங்களில் இருப்பது சகஜம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

இதே பாம்புதானே ஏவளை ஏமாற்றி அவளை ஏதேன் தோட்டத்தில் விலக்கப்ட்ட க‌னியை புசிக்க வைத்தது.

கொழும்பான் இப்பதான் விளங்குது ஏவாளை ஏமாத்தி கனியைப் புசிக்க வச்சிட்டு அவருக்குப் பயந்து இங்காலை வந்து இவரிண்ட தலைமுடியில் சிக்கிகிச்சு!🙄 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, வாலி said:

கொழும்பான் இப்பதான் விளங்குது ஏவாளை ஏமாத்தி கனியைப் புசிக்க வச்சிட்டு அவருக்குப் பயந்து இங்காலை வந்து இவரிண்ட தலைமுடியில் சிக்கிகிச்சு!🙄 

இத வாசிச்சு, மனம் புண்பட்டுடுத்து, நேக்கு மனம் புண்பட்டுடுத்து.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அம்மன் கோவில் இருப்பது காடு போன்ற சோலைக்குள்.........
ஊர்மனையில் காடு எதற்கு?

ஆசியா போன்ற வெய்யில் நாடுகளில் விச பிராணிகள் மக்கள் வாழும் இடங்களில் இருப்பது சகஜம்.

ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடினார்கள்

அவர்களில் அத்தனை பேருக்கும் பாம்பிலிருந்து தப்புவது அல்லது பாம்புக்கடிக்கான முதலுதவி தெரிந்து இருந்தது

இன்று லட்சக்கணக்கான மக்கள் திருவிழாக்களில் கலந்து கொள்கிறார்கள். இவர்களில் ஒரு விகிதமான மக்களுக்கு கூட அதைப் பற்றி தெரியாது. 

அதைவிட பாம்பைக் கண்டு மக்கள் வெகுண்டோடினால் என்னவாகும்???

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

இன்று லட்சக்கணக்கான மக்கள் திருவிழாக்களில் கலந்து கொள்கிறார்கள். இவர்களில் ஒரு விகிதமான மக்களுக்கு கூட அதைப் பற்றி தெரியாது. 

ஏன் தெரியாது? அவர்கள் என்ன ஐரோப்பாவிலா பிறந்து வளர்ந்தவர்கள்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏன் தெரியாது? அவர்கள் என்ன ஐரோப்பாவிலா பிறந்து வளர்ந்தவர்கள்? :cool:

இன்று அங்கே கூடுபவர்கள் யாரண்ணா அதிகம்???

  • கருத்துக்கள உறவுகள்

கொடிய ஊர்வன பாம்புகளை வழிபடுதல் என்பது தமிழர்களின் வரலாற்று காலந்தொட்டு இருந்து வருகிறது.. கொடிய விஷம் கொண்ட பாம்பு தனக்கு நல்வாழ்வு தரும் என்று நம்பி தமிழகள் வழிபடுகிறார்கள். பாரம்பரிய வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்த உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொடிய ஊர்வன பாம்புகளை வழிபடுதல் என்பது தமிழர்களின் வரலாற்று காலந்தொட்டு இருந்து வருகிறது.. கொடிய விஷம் கொண்ட பாம்பு தனக்கு நல்வாழ்வு தரும் என்று நம்பி தமிழகள் வழிபடுகிறார்கள். பாரம்பரிய வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்த உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

என் மதத்தை இழிவு படுத்தினால் நான் அங்கே முதலாவது ஆளாக இருப்பேன்.

அதேபோல் இது போன்ற காலத்துக்கொவ்வாத மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதும் எமது இந்த தலைமுறையின் கடமை. இல்லையெனில் அடுத்த தலைமுறை முற்றாக எம்மை விட்டு சென்று விட நாமே வழி சமைத்தவராவோம். நன்றி 🙏

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான் யாழ்ப்பாண பொது நூலகத்திற்குச் சென்றிருந்தேன்.. திடீரென ஒரு சலசலப்பு.. என்னவென்று பார்த்தால் ஒரு 5லீற்றர் வெற்றுத்தண்ணிப் போத்தலுக்குள் ஒரு குட்டிப் பாம்பு படமெடுத்தபடி இருக்க ஒருவர் கொண்டு வந்தார். அதுவும் புத்தகம் வாசிக்க வந்திருந்ததோ தெரியவில்லை, நூலக அலுவரிடம் மாட்டுப்பட்டுவிட்டது. 

அப்ப ஒருவர் சொல்லிக்கொண்டு இருந்தார் “ கோவில் பாம்போ தெரியாது.. யாரோ முனியப்பர் பக்கம் விட்டு விட்டுப்போட்டாங்களோ தெரியவில்லை” என்று..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.