Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். நெடுந்தீவில் பயங்கரம்! : வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 5 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

22 APR, 2023 | 01:45 PM
image

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் ஐவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், 3 பெண்களும் 2 ஆண்களுமே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நெடுந்தீவு, மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றிலேயே இன்று காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/153483

  • Replies 98
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு படுகொலை ; படகுச்சேவை இடைநிறுத்தம்

Published By: T. SARANYA

22 APR, 2023 | 03:27 PM
image

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்குப் பயணம் செய்யவுள்ளனரென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு பகுதியில் இன்று (22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு பெண் ஆபத்தான நிலையில் யாழ் போதனா  வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

https://www.virakesari.lk/article/153494

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு படுகொலை ; சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் - அமைச்சர் டக்ளஸ்

Published By: T. SARANYA

22 APR, 2023 | 03:44 PM
image

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நெடுந்தீவு இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் தங்கியிருந்த ஐவர் இன்று சனிக்கிழமை அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வட மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியதுடன்,  இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் களைய வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/153497

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவில் படுகொலை : படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

நெடுந்தீவில் படுகொலை : படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பிக்க செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்கு பயணம் செய்யவுள்ளனரென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு பெண் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையோ குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1330624

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஏராளன் said:

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஆமா...இவர் யாருங்க பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்கு? கொஞ்ச நாளாய் முந்திரிக்கொட்டைபோல எல்லாத்துக்கையும் மூக்கை நுழைச்சுக்கொண்டு ஓடித்திரியிறார். கடற்தொழில் அமைச்சர் எப்போ போலீஸ் மா அதிபர் ஆனவர்? மாமா வேலை பாக்கிறாரா? நரி பதவிக்கு  வந்ததும் வராததுமாக இவரை தட்டு வைத்து அழைக்கும் போதே சந்தேகப்பட்டேன் இப்படியேதும் நடக்கபோகுதெண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படைக்கு அருகில் இருக்கும் வீட்டில் ......அவர்களுக்கு தெரியாமலா இருக்கும் ?  உயிருக்கு உத்தரவாதமில்லாத நாடாகிப்போய்விட்ட்து. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சுற்றுலா பயணிகளை அழைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் ஐவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து வன்முறை கலாச்சாரத்தை தவிர எந்த மாற்றதையும் இந்த நாடு காணவில்லை. நான் தீவுப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்டனான்.இறுதிக்காலத்தில் அங்கு போய் வாழலாம் என்று சும்மா கனவு தான் காண்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கை சுற்றுலா பயணிகளை அழைக்கிறது.

புலம் பெயர் முதலீட்டாளர்களையும் வரட்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

நெடுந்தீவு படுகொலை ; சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் - அமைச்சர் டக்ளஸ்

Published By: T. SARANYA

22 APR, 2023 | 03:44 PM
image

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நெடுந்தீவு இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் தங்கியிருந்த ஐவர் இன்று சனிக்கிழமை அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வட மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியதுடன்,  இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் களைய வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/153497

 

குற்றவாளிகள், குற்றத்திற்கான காரணங்கள் கண்டறியப்படவேண்டும். இப்படியான சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கு பொறுப்புடன் செயற்படவேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு. 

இறந்தவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

புலம் பெயர் முதலீட்டாளர்களையும் வரட்டாம்.

அப்புறம் என்ன பெட்டி படுக்கைகளுடன் போய் தலையை கொடுக்க வேண்டியது தான்.

ம். நெடுந்தீவில் தான் நிலமை ஒரு மாதிரி மற்ற இடங்கள் பரவாயில்லை.
அப்படின்னு நினைப்போமாக.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் என்ன பெட்டி படுக்கைகளுடன் போய் தலையை கொடுக்க வேண்டியது தான்.

ம். நெடுந்தீவில் தான் நிலமை ஒரு மாதிரி மற்ற இடங்கள் பரவாயில்லை.
அப்படின்னு நினைப்போமாக.

கனடாவில் இருந்து சென்ற ஐயர் ஒருவரையும்… சென்ற மாதம் ஏதோ ஒரு தீவில் 
கொலை செய்ததாக… யாழ். களத்தில் ஒரு செய்தி வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

கனடாவில் இருந்து சென்ற ஐயர் ஒருவரையும்… சென்ற மாதம் ஏதோ ஒரு தீவில் 
கொலை செய்ததாக… யாழ். களத்தில் ஒரு செய்தி வந்தது.

புலம்பெயர் தமிழர் அனைவரும் தற்கொலை செய்வதற்காக சிரீலங்கா செல்வதாக பி.பி.சி நாளை செய்தியுடன் வரும்...😎

  • கருத்துக்கள உறவுகள்

காலங்காலமாக எதிரியோடு கூட்டு நின்று சொந்த இனத்தை கொன்றொழித்தவர்கள் எவருமே சொறீலங்கா சட்டத்தால் தண்டிக்கப்படாத நிலையில்.. குறிப்பாக ஒரு தாடியர் அமைச்சர் பதவிக்கு வரும் காலங்களில் எல்லாம் தீவகத்தில் இப்படி படுகொலைகள் நிகழ்வது சாதாரணமாகி விட்டது. நெடுந்தீவில் நடப்பது இது முதற்தடவையும் அல்ல. இத்தனைக்கும் இது ஈபிடிபி ஒட்டுக்குழுக் கும்பலின் வாக்கு வேட்டை கோட்டையாகவும்.. சொறீலங்கா கடற்படையின் முழு கண்காணிப்பு ஆளுகையின் கீழும் இருக்கிற தீவுகளில் ஒன்று.  

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு மக்களின் சொத்தாக இல்லாமல் ,அரசாங்கத்தின் சொத்தாக இருக்க வேணும் என்ற கொள்கை சிறிலங்கா இனவாத அரசாங்கத்துக்கு உண்டு ,மக்கள் குடியெறினால் அந்த தீவை சீனாக்காரனுக்கோ,அமெரிக்கா காரனுக்கோ குத்தகைக்கு கொடுக்க முடியாது கண்டியளோ.....

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐவரும் 75 வயதை கடந்த முதியவர்களே ! பல கோணங்களில் விசாரணை !

22 APR, 2023 | 09:23 PM
image

 

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக இன்று மீட்கப்பட்டுள்ளார். 

2__9_.jpg

100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

2__6_.jpg

லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82) , பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76) , கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83) , மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலங்களாக இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

நெடுந்தீவு மாவளி இறங்கு  துறைக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டியொருவர் நெடுந்தீவுக்கு செல்வோருக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல் ,உணவு வழங்குதல் போன்றவற்றை தொழிலாக செய்து வந்துள்ளார். 

இவரது கணவர் 1986ஆம் ஆண்டு குமுதினி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த மூதாட்டி தனது வாழ்வாதாரத்தை தானே கொண்டு நடாத்தி வந்துள்ளார். 

2__2_.jpg

நெடுந்தீவில் உள்ள ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து வந்திருந்த ஐவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டில் தங்கியுள்ளனர். 

2__10_.jpg

இந்நிலையில் குறித்த வீட்டில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை காலை எவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அயலவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது வெட்டு காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டுள்ளனர். 

ஒருவர் வீட்டின் வெளியேயும் ஏனையவர்கள் வீட்டின் உள்ளே படுக்கை மற்றும் ஏனைய பாகங்களிலும் கொடூரமான வெட்டு காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டனர்.

2__3_.jpg

அதில் ஒருவர் படுகாயங்களுடன் காணப்பட்ட நிலையில் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர். 

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் குழு நெடுந்தீவு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

2__7_.jpg

நால்வர் அடங்கிய கும்பலே படுகொலை செய்தது ?

நால்வர் கொண்டே கும்பலே படுகொலையை செய்துள்ளதாகவும் , வீட்டின் சற்று தூரத்தில் முன் பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ளமையால் , வீட்டின் பின் பகுதி  ஊடாகவே கும்பல் வீட்டினுள் புகுந்து இருக்கலாம் எனவும் , வாள்கள் மற்றும் கோடரி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

2__4_.jpg

அதேவேளை வீட்டில் இருந்த ஐவர் படுகொலையாகி உள்ளதாலும் , ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாலும் , வீட்டில் இருந்த பொருட்கள் எவையேனும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனவா ? என்பதனை அறிய முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

படகு சேவைகள் இடைநிறுத்தம்

நெடுந்தீவில் இருந்து குற்றவாளிகள் தப்பி செல்லாதவாறு நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையிலான படகு சேவைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. 

 

நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை

 

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் நெடுந்தீவுக்கு நேரில் சென்று சம்பவ இடத்தினை நேரில் பார்த்து விசாரணைகளை முன்னெடுத்தார். 

2__8_.jpg

அதேவேளை யாழ்ப்பாண தடயவியல் பொலிஸ் குழுவும், சட்ட வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். 

 

நீதிபதியை வழிமறித்து போராட்டம்

 

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் விசாரணைகளை முடித்துக்கொண்டு நெடுந்தீவு இறங்கு துறைக்கு வந்த நீதவானை வழிமறித்து மக்கள் போராட்டம் நடாத்தினார்கள். 

 

குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் எனவும் , நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரி போராட்டம் செய்தனர். 

 

சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் 

நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , உடற்கூற்று பரிசோதனைக்காக சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

டக்ளஸ் பொலிஸாருக்கு பணிப்பு

வட மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியதுடன்,  இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் களைய வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார். 

https://www.virakesari.lk/article/153511

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்ய திட்டம் போட்டவர்கள், களவா, தோணில வந்து, இரவோடிரவா போயிருக்கலாமே?

டக்கியர் உத்தரவு சந்தேகம் வரவைக்குது 🤔

இந்ந வெக்கைல நீதவான் கோட்டு, ரையோட ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினத்திற்கான எதிரிகள் வேறெங்குமில்லை. எல்லாம் நம்முடன் கூடவே தான் இருக்கின்றார்கள்.

பணம் சகலதையும் தீர்மானிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று அட்சய திருதியை நாள் என சொல்லப்பட்டது. தமிழ்வின் தளத்தில் இறந்தவர்களில் மூவர் சுவிஸ் நாட்டினை சேர்ந்த தமிழர்கள் என கூறப்படுகின்றது. அனைவரும் உறவினர்கள் எனவும் செய்தியில் உள்ளது. 

பணம், நகை கொள்ளை அடிப்பதற்காக கொலை செய்யப்பட்டார்களோ. அல்லது வேறு ஏதும் பகையோ. நூறு வயது மூதாட்டியையே வெட்டுகின்றார்கள் என்றால் இப்படியான இடத்தில் யாருக்குக்குத்தான் பாதுகாப்பு உத்தரவாதம் உள்ளது? 

2 hours ago, nedukkalapoovan said:

காலங்காலமாக எதிரியோடு கூட்டு நின்று சொந்த இனத்தை கொன்றொழித்தவர்கள் எவருமே சொறீலங்கா சட்டத்தால் தண்டிக்கப்படாத நிலையில்.. குறிப்பாக ஒரு தாடியர் அமைச்சர் பதவிக்கு வரும் காலங்களில் எல்லாம் தீவகத்தில் இப்படி படுகொலைகள் நிகழ்வது சாதாரணமாகி விட்டது. நெடுந்தீவில் நடப்பது இது முதற்தடவையும் அல்ல. இத்தனைக்கும் இது ஈபிடிபி ஒட்டுக்குழுக் கும்பலின் வாக்கு வேட்டை கோட்டையாகவும்.. சொறீலங்கா கடற்படையின் முழு கண்காணிப்பு ஆளுகையின் கீழும் இருக்கிற தீவுகளில் ஒன்று.  

 

கடற்படை முகாம் அருகில் உள்ளதாம். இரவில் கடற்படையினர் தெருவில் ரோந்து பணியில் ஈடுபடுவது உண்டா? இந்த படுகொலையை செய்தவர்கள்/துணை நின்றவர்கள் இவ்விடம் மிகவும் பரீட்சயமானவர்களே. தீவுப்பகுதி தனித்துவிடப்பட்ட இடம். ஆபத்துக்கு கத்தினாலும் உதவிக்கு எவரும் வர மாட்டார்கள் என எனது நண்பர் ஒருவர் கூறினார். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

தீவுப்பகுதி தனித்துவிடப்பட்ட இடம். ஆபத்துக்கு கத்தினாலும் உதவிக்கு எவரும் வர மாட்டார்கள் என எனது நண்பர் ஒருவர் கூறினார். 

முழு யாழ்ப்பாணமே இன்று இப்படித்தான்.. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நேற்று அட்சய திருதியை நாள் என சொல்லப்பட்டது. தமிழ்வின் தளத்தில் இறந்தவர்களில் மூவர் சுவிஸ் நாட்டினை சேர்ந்த தமிழர்கள் என கூறப்படுகின்றது. அனைவரும் உறவினர்கள் எனவும் செய்தியில் உள்ளது. 

பணம், நகை கொள்ளை அடிப்பதற்காக கொலை செய்யப்பட்டார்களோ. அல்லது வேறு ஏதும் பகையோ. நூறு வயது மூதாட்டியையே வெட்டுகின்றார்கள் என்றால் இப்படியான இடத்தில் யாருக்குக்குத்தான் பாதுகாப்பு உத்தரவாதம் உள்ளது? 

ஒரு சில வருடங்களுக்கு முன்பு சிங்கள இனவாத அரசுகளின் கெடுபிடிகளால் புலம்பெயர் மக்கள் தாயகம் செல்ல அச்சப்பட்டார்கள். இன்று அதே  பிரச்சனையை தமிழ் ஒட்டுக்குழுக்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

கடற்படை முகாம் அருகில் உள்ளதாம். இரவில் கடற்படையினர் தெருவில் ரோந்து பணியில் ஈடுபடுவது உண்டா? இந்த படுகொலையை செய்தவர்கள்/துணை நின்றவர்கள் இவ்விடம் மிகவும் பரீட்சயமானவர்களே. தீவுப்பகுதி தனித்துவிடப்பட்ட இடம். ஆபத்துக்கு கத்தினாலும் உதவிக்கு எவரும் வர மாட்டார்கள் என எனது நண்பர் ஒருவர் கூறினார். 

தீவகத்திற்குள் எவர் புதிதாக நுழைந்தாலும் சில மணித்துளிகளுக்குள் சொறீலங்கா கடற்படைக்கு விபரமான விடயம் போய்விடும். தீவகம் முழுவதும் ஈபிடிபி ஒட்டுக்குழு ஆதரவோடு சொறீலங்கா கடற்படைக்கு உளவு சொல்ல ஆக்கள் இருக்கினம்.

மேலும்.. நெடுந்தீவுக்கு போகும் வழி எங்கும் தடை முகாம்கள் உள்ளன. மண்டைதீவில் ஆரம்பித்து கடைசி இறங்கு துறை வரை. 

இவ்வளவையும் தாண்டி இவ்வளவு ஆயுதங்களோடு போய் 5 பேரை வெட்டிச் சாய்ப்பது என்பது புதிய கள்ளருக்கு அவ்வளவு இலகுவாக நடத்தக் கூடிய விடயமல்ல. இது ஏலவே அறிமுகமான ஆட்களின் வேலை. இதன் பின்னணியில் பல்வேறு காரணிகள் இருக்க வாய்ப்புள்ளது.

நெடுந்தீவை சீனாவிடம் கையளிக்கும் நோக்கமும் அதில் அடங்கக் கூடும். நெடுந்தீவை விட்டு மக்களை அச்சுறுத்தி வெளியேற்றும் நோக்கமும்.. தீவக அதிகார சபை உருவாக்கமும்.. மகாவலி அபிவிருத்தி சபையை உருவாக்கி அம்பாறை... திருமலையில் இருந்து தமிழர்களை வெட்டி விரட்டி.. இன்று அந்த இரு மாவட்டங்களும் சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்களாகும் அளவுக்கு கொண்டு வந்ததில்.. இதே ரணில் இருந்த கட்சியில் ஜே ஆர்.. காமினியின் பங்கோடு ரணிலுக்கும் குறிப்பிடத்தக்க பங்குண்டு. வடக்கில் அதன் ஆரம்பமோ இது என்று அச்சப்படக் கூடிய விடயமே இது. 

தமிழின அழிப்பில்.. மகிந்தவை விட ரணிலின் பங்களிப்பு நீண்டது நெடியது.. நரித்தனமானது. 

தீவக மக்கள் ஒருங்கிணைவதும்.. தங்கள் மண்ணை வளத்தை காக்க உறுதி பூணுவதுமே.. இந்த நேரத்தில் செய்யக் கூடிய விடயமாக இருக்க வேண்டும். ஏனெனில்.. தீவகம் என்பது மிகவும் வளம் பொருந்திய பூமி. அது கடல் சார்ந்து மட்டுமல்ல.. விவசாயம்.. கால்நடை வளர்ப்பு.. உட்பட ஏனைய தொழில்துறைகளிலும் அது வடக்கின் அபிவிருத்தியில் முக்கிய பங்களிக்கக் கூடிய பூமி. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவுப் குமுதினிப் படுகொலை முதல் இன்று வரை.. தமிழர் படுகொலைகள்.. பல்வேறு வடிவங்களில்..

 

குமுதினிப் படகேறி
உறவுகள் சென்றனர்
கரைதனை எட்டாமல்
கறைதனில் வீழ்ந்தனர்
அலைகடல் நடுவினில்
அராஜகம் நடந்தது
புத்தன் புதல்வர்கள்
கொலைவெறியாட்டம் போட்டனர்
அகிம்சை என்பது
அகத்தினில் அழிந்தது
ஆயுதம் என்பது
ஆர்ப்பரித்து எழுந்தது
திசைகள் எங்கினும்
முடிவுகள் கோரம்…!
புலிதனின் வீரத்தில்
கிளர்ந்தனர் வேங்கைகள்
அப்பாவிகள் அழித்தவன்
கலம்தனைத் தகர்த்தனர்
ஆதிக்கம் என்பது
அடங்கியே போக…!
வேங்கையின் வீரத்தில்
விடுதலைக்காய் ஏங்கினர்
வேள்விகள் தனில்
ஆயிரம் ஆயிரமாய்
உயிர்கள் உறங்கின…!
விடியல் என்பது
விலை கொடுத்த பொருளாய்
வாங்க மடியேந்தும் நிலை
இன்னும் தொடர்கதையாய்..!
முடிவுகள் என்பது
முடிவிலியாய்…..
தமிழன் குருதியென்பது
பெருகும் ஆறாய்
தீர்வுகள் மட்டும்
கேள்விக் குறியாய்…???!
காலம் என்பது
மக்களுக்காய் கனிய
தலைவன் வழியில்
காத்திருப்புத் தொடருது..!
சேதி ஒன்று வரும்
தேசம் விடிந்ததென்று
எதிர்பார்ப்பு விரைவாக
ஒற்றுமை என்பது திடமாக
கடந்ததுகள் நினைவாக்கி
வேற்றுமைகள் கலைத்துக்
கலந்திடுவோம்
இலட்சியப் பயணத்தில்
வேங்கையின் பாதையில்…!

https://kuruvikal.wordpress.com/2020/11/02/எழுத்துப்-பொறுக்கி-குரு/

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

கடற்படைக்கு அருகில் இருக்கும் வீட்டில் ......அவர்களுக்கு தெரியாமலா இருக்கும் ?  உயிருக்கு உத்தரவாதமில்லாத நாடாகிப்போய்விட்ட்து. 

கடந்த காலத்தில் வடக்கில் இரவில் நடந்த படுகொலைகளை கண்டு நடுங்கியவர்களுக்கு இதை கண்டு பிடிப்பது ஒன்றும் பெரிய கஷ்ரமில்ல. இராணுவ முகாம்களுக்குள் மதிலோரத்தில் பதுங்கு குழிகளை அமைத்து, அந்த மதிலியேயே சிறு துவாரங்களை அமைத்து  அதற்குள் இருந்தவாறு தெருவில் போவோர் வருவோரை கண்காணித்து தமக்கு வேண்டாதவர்களை போட்டுத்தள்ளியவர்கள் வேறெங்குமிருந்து வரவில்லை, வேறெங்கும் போகவுமில்லை எல்லாமே இராணுவ அரங்கத்துக்கருகிலேயே நடந்தன, அங்கிருந்து வந்தவர்களாலேயே அரங்கேற்றப்பட்டது. அன்று துப்பாக்கி, இன்று வாள் அதொன்றே வித்தியாசம். நான் திரும்பியும் வந்துவிட்டேன் என்று பொய்ச்சொல்லு, என்று சொல்லி அனுப்பியவருடன் வந்திறங்கியது வாள்வெட்டுக்குழு!

3 hours ago, நிழலி said:

நெடுந்தீவில் இருந்து குற்றவாளிகள் தப்பி செல்லாதவாறு நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையிலான படகு சேவைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. 

 

 

3 hours ago, நிழலி said:

ஐவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டில் தங்கியுள்ளனர். 

 

3 hours ago, நிழலி said:

சனிக்கிழமை காலை எவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அயலவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது வெட்டு காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டுள்ளனர். 

இவ்வளவு நேரமும்  கொலைகாரர் அங்கே என்னத்தை தேடிக்கொண்டிருந்திருப்பார்கள்? கடற்படையைக்கடந்து வந்த கொலைகாரர் கடற்படைக்குள்ளேயே இருக்கலாமல்லவா? இதுகளை தடுக்க முடியாவிட்டால் இவர்கள் எல்லாம் ஏன் இன்னும் இங்கே எங்கள் இடத்தை அடைத்துக்கொண்டும் எங்களை அச்சுறுத்திக்கொண்டும் இருக்கிறார்கள்?

1 hour ago, nedukkalapoovan said:

இதே ரணில் இருந்த கட்சியில் ஜே ஆர்.. காமினியின் பங்கோடு ரணிலுக்கும் குறிப்பிடத்தக்க பங்குண்டு.

நரியார் கதிரை ஏறியவுடன் அழைத்தது முப்படை, தெற்கை அடக்குவதற்கு. தாடியர்; வடக்கை அழிப்பதற்கு. நம்மவருக்கு அதாவது நம்ம தலைவர்களுக்கு இதில பங்குமில்லை பழியுமில்லை அவர்கள் உறக்கத்தில். இவர்கள் வேணுமா நமக்கு? மக்களை வழிநடத்துவதற்கு, தன்னுயிரை கொடுத்து காப்பதற்கு துணிந்த நல்ல தலைவனே தேவை. பிச்சுத்தின்னும், ஓடி ஒழியும் ஓநாய்கள் தேவையில்லை. 

7 hours ago, தமிழ் சிறி said:

கனடாவில் இருந்து சென்ற ஐயர் ஒருவரையும்… சென்ற மாதம் ஏதோ ஒரு தீவில் 
கொலை செய்ததாக… யாழ். களத்தில் ஒரு செய்தி வந்தது.

அனலைதீவு! அப்படித்தானே? ஒவ்வொரு தீவாய் குறித்து செய்தி வெளிவருகின்றது. வடக்கில்  இராணுவ ஆட்சிக்காலத்தில் தீவுகளை குத்தகைக்கு எடுத்து மக்களை கொத்தடிமைகளாக நடத்தியவர்கள் யாரென்று கேட்டால் தெரியும் பதில்!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது

சம்பவத்துடன் தொடர்பில்லாத வேறு ஒரு நபரை குற்றவாளியாக அடையாளங்கண்டு கைது செய்து அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என சான்றிதழ் அளிக்கப்படும்வரை வரை படகுசேவை இடைநிறுத்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.