Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நாமலின் இலக்கு… 2029 ஜனாதிபதி தேர்தல்.
இப்போ போட்டியிடுவது… அவரது கட்சியை பொதுமக்கள் மறக்காமல் இருக்கவும், சித்தப்பா பசில் ஜனாதிபதி கோதாவில் இறங்க முதல்…. மகிந்த உயிருடன் இருக்கும் காலத்திலேயே… ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஜனாதிபதியாக வர “நாமல் ரெடி” என்ற செய்தியை சொல்லி… “லைன் கிளியர்” பண்ணி வைத்திருக்கின்றார்கள்.

கொஞ்சம் பொறுங்கள்,.......அனுர போர் குற்ற விசாரணை செய்து ராஜபக்ஷ குடும்பத்தை சொத்துக்கள் எல்லாம் பறித்து விட்டு சிறையில். போடுவான்   நாங்கள் கேட்ட போர்குற்றவிசாரனை நடக்கப்போகுது      சுமத்திரனை அனுரக்கு கிட்ட விடக்கூடாது   🙏 இனி ராஜபக்ஷ குடும்பம் அரசியலில் தலை எடுக்க முடியாது    கண்ணை மூடி கொண்டு குண்டுகளை. தமிழர்கள் தலையில் போட்ட. பலனை அனுபவிக்க வேண்டாமா  ?? 🙏🙏

குறிப்பு,.. போர் குற்ற விசாரனை   செய்யவிட்டாலும்கூட.  ஏதோவொரு விசாரனை மூலம்   நடக்கும் 

  • Replies 283
  • Views 40.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கு

  • இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி.  புலம்பெயர்ஸ்  இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும்.  தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

  • ரசோதரன்
    ரசோதரன்

    தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டை இறுதி முடிவுகள்:

 

Hambantota Final


Anura Kumara Dissanayake

221,913 51.96%

Anura Kumara Dissanayake 
51.96% Order
Sajith Premadasa

131,503 30.79%

Sajith Premadasa 
30.79% Order
Ranil Wickremesinghe

33,217 7.78%

Ranil Wickremesinghe 
7.78% Order
Namal Rajapaksa

26,707 6.25%

Namal Rajapaksa 
6.25% Order
Dilith Jayaweera

2,978 0.70%

Dilith Jayaweera

காலி இறுதி முடிவுகள்:

 

 

Galle Final


Anura Kumara Dissanayake

366,721 51.45%

Anura Kumara Dissanayake 
51.45% Order
Sajith Premadasa

189,555 26.59%

Sajith Premadasa 
26.59% Order
Ranil Wickremesinghe

107,336 15.06%

Ranil Wickremesinghe 
15.06% Order
Namal Rajapaksa

24,382 3.42%

Namal Rajapaksa 
3.42% Order
Dilith Jayaweera

8,263 1.16%

Dilith Jayaweera 
 

 

பொலநறுவை இறுதி முடிவுகள்:

Polonnaruwa Final


Anura Kumara Dissanayake

130,880 46.12%

Anura Kumara Dissanayake 
46.12% Order
Sajith Premadasa

100,730 35.49%

Sajith Premadasa 
35.49% Order
Ranil Wickremesinghe

36,908 13.00%

Ranil Wickremesinghe 
13.00% Order
Namal Rajapaksa

5,594 1.97%

Namal Rajapaksa 
1.97% Order
Dilith Jayaweera

1,727 0.61%

Dilith Jayaweera
  • கருத்துக்கள உறவுகள்

அரியம் மட்டக்களப்பில் மண் கவ்வியுள்ளார்!

 

Polling Division - Batticaloa

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

64,068 Votes

43.37%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

41,538 Votes

28.12%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

24,168 Votes

16.36%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

12,758 Votes

8.64%

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், வன்னி மாவட்ட தேர்தல் முடிவு. large.IMG_7598.jpeg.c125a535e533d644b5827d0a925fa24e.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

சிறுபான்மை தமிழர்கள், முஸ்லிம்கள்,   மலையகத் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் மாவட்டங்களில் அநுர 50% க்கு குறைவாக எடுத்திருக்கின்றார். ஆனால் சிங்கள மாவட்டங்கள் அனைத்திலும் 50% க்கு அதிகம் எடுத்துள்ளார்.

தெரியாத தேவதையை விட தெரிந்த பேயே பரவாயில்லை என்று நினைத்திருப்பார்களோ என்னவோ?

26 minutes ago, Kandiah57 said:

பாராளுமன்ற தேர்தலில் அனுர பெரும்பான்மை பெறுவாரா. ??பெறவிடில்.  ஆட்சி அமைக்க ஆதரவு தேவை   யாரை பிடிப்பார்.?? 

என்ன கந்தையர் தூக்க கலக்கமோ? அனுரா இன்னும் ஜனாதிபதியாகக்கூட பொறுப்பேற்கவில்லை அதற்குள் பாராளுமன்றத்தேர்தல் தேர்தல் பற்றி கவலைப்படுகிறீர்கள். தேர்தலில் நிற்கும் எண்ணம் உண்டோ?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: குறையும் அனுரகுமார திஸநாயகே வாக்கு சதவீதம், சஜித் பிரேமதாசா ஏறுமுகம் - நேரலை

இலங்கை ஜனாதிபதி தேர்தல்
22 செப்டெம்பர் 2024, 01:56 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே முந்துகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரகுமார திஸநாயகே முன்னணியில் இருக்கிறார்.

தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அனுரகுமார திஸநாயகே தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றிருந்த அனுரகுமார திஸநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்த கட்டங்களில் படிப்படியாக குறைந்தது. இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரணில் விக்கிரமசிங்கே மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

விறுவிறுப்பாக வாக்குப்பதிவு

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர். தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகள் உள்பட இலங்கை முழுவதுமே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

1.7 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாயின.

வாக்கு எண்ணிக்கை

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், நேற்றிரவே இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 1,703 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்கே. சஜித் பிரேமதாசா ஆகிய மூவருக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவிய இந்த தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதே மக்களின் ஆதரவு அனுரகுமார திஸநாயகேவுக்கு அதிகம் இருந்தது புலப்பட்டது.

தபால் வாக்குகள் மட்டுமின்றி, வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளிலுமே அனுரகுமார திஸநாயகே, மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

 
இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாக்கு எண்ணிக்கை நிலவரம்

  • அனுரகுமார திஸநாயகே - 15,70,412 (44.12%)
  • சஜித் பிரேமதாசா - 10,76,029 (30.23%)
  • ரணில் விக்ரமசிங்கே - 5,63,054 (15.82)

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, ஒட்டுமொத்தமான பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த அனுரகுமார திஸநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. ஆனாலும், வெற்றி பெறத் தேவையான 50 சதவீத வாக்குகளுக்கு நெருக்கமாக அவரே இருக்கிறார். அதேநேரத்தில், சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிற. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் வாக்கு சதவீதம் குறைந்தே இருக்கிறது.

ஒருவேளை, யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காவிட்டால், மக்களின் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தீர்மானிக்கப்படும்.

நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு

வாக்குப்பதிவு நாளான நேற்று (செப்டம்பர் 21) இரவு 10 மணி முதல் இன்று (செப்டம்பர் 22) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக போலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.

பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் நேரத்தில் வீட்டிலேயே நேரத்தைச் செலவிடுமாறு போலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை காலையிலும் தொடர்ந்த நிலையில் இலங்கை முழுவதும் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 
இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜனாதிபதி தேர்தலில் 38 பேர் போட்டி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆகவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செக, தமிழர்களின் பொது வேட்பாளர் என்ற பெயரில் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட 38 பேர் களத்தில் இருந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kandiah57 said:

கொஞ்சம் பொறுங்கள்,.......அனுர போர் குற்ற விசாரணை செய்து ராஜபக்ஷ குடும்பத்தை சொத்துக்கள் எல்லாம் பறித்து விட்டு சிறையில். போடுவான்   நாங்கள் கேட்ட போர்குற்றவிசாரனை நடக்கப்போகுது      சுமத்திரனை அனுரக்கு கிட்ட விடக்கூடாது   🙏 இனி ராஜபக்ஷ குடும்பம் அரசியலில் தலை எடுக்க முடியாது    கண்ணை மூடி கொண்டு குண்டுகளை. தமிழர்கள் தலையில் போட்ட. பலனை அனுபவிக்க வேண்டாமா  ?? 🙏🙏

குறிப்பு,.. போர் குற்ற விசாரனை   செய்யவிட்டாலும்கூட.  ஏதோவொரு விசாரனை மூலம்   நடக்கும் 

கண்டிப்பாக இல்லை. மஹிந்த குடும்பம் விசாரணைகளை எதிர்கொள்ளும், தமிழருக்கு கொடுமை செய்ததற்காகவல்ல, பதுக்கிய சொத்துக்களை பறிப்பதற்காக. போர்க்குற்றம் தொடர்பாக உள்ளூர் கண்துடைப்பு விசாரணை செய்து, நடந்தது என்னவென்று காட்ட முயற்சிப்பார். அவர் ஏற்கெனவே கூறி விட்டார், அதாவது போரில் என்ன நடந்தது என அறியவே தமிழர் விரும்புகின்றனர், யாரையும் தண்டிக்க அவர்கள் விரும்பவில்லை, அது எனது வேலையுமில்லை, அதை நீதிமன்றம் கையாளும் என்று உறுதிபட கூறிவிட்டார். பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்கிற நிலையில் தமிழர் இப்போ. இந்தியா மூக்கை நுழையா விட்டால் சரி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள்

Published By: DIGITAL DESK 3

22 SEP, 2024 | 11:16 AM
image
 

மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல்  தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 64,068 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கின்றார்.

சுயேட்சையாக போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 41,538  வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்க 24,168 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் பாக்கியசெல்வம் 12,758 வாக்குகளை பெற்றுள்ளார்.

https://www.virakesari.lk/article/194448

  • கருத்துக்கள உறவுகள்

சனத்தொகை கூடிய கொழும்பு, களுத்துறை , கம்பஹா  மாவட்டங்களில் தெளிவான வெற்றியாளர் இல்லை! அநுரவின் வாக்கு சதவீதம் மெதுவான இறங்குமுகத்திலும், சஜித்தின் வாக்கு சதவீதம் மெதுவான ஏறுமுகத்திலும் உள்ளன. எனினும் சஜித் 40% ஐ தாண்டுவது கடினம். 

 

Polling Division - Dehiwala

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

19,338 Votes

41.73%

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

12,505 Votes

26.98%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

11,565 Votes

24.96%

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
 

1,163 Votes

2.51%

DILITH JAYAWEERA

DILITH JAYAWEERA

SLCP

party-icon
 

753 Votes

1.62%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

375 Votes

0.81%

Polling Division - Kalkudah

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

45,325 Votes

49.03%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

24,782 Votes

26.81%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

10,890 Votes

11.78%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

7,504 Votes

8.12%

K.K. PIYADASA

K.K. PIYADASA

IND4

party-icon
 

983 Votes

1.06%

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

pres-elec.jpg

தற்போதைய நிலை.

pre-elec.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் சஜித்துக்கு அலை அடிக்கின்றது. ஆனால் அநுரவும் சில தேர்தல் தொகுதிகளை வென்றுள்ளார். ரணிலுக்கு வாக்களித்தவர்கள் இரண்டாவது தெரிவாக சஜித்தையே அநேகமாகப் போட்டிருப்பார்கள். ரணிலுக்குப் போட்டவர்களின் இரண்டாவது விருப்பத் தெரிவை எண்ணும்போது சஜித் வெல்ல வாய்ப்பிருக்கின்றது! ஜேவிபியின் வெற்றி கைநழுவிப் போனால் கலவரம் வெடிக்கும் நிலை உருவாகலாம் என்பதால்தான் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

 

Polling Division - Colombo Central

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

46,063 Votes

51.77%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

20,220 Votes

22.72%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

19,397 Votes

21.80%

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
 

1,123 Votes

1.26%

DILITH JAYAWEERA

DILITH JAYAWEERA

SLCP

party-icon
 

367 Votes

0.41%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

295 Votes

0.33%

 

யாழ் மாவட்ட இறுதி முடிவுகள்.. அரியத்திற்கு வடக்கிலும் கிழக்கிலும் சங்கூதிவிட்டார்கள்

Jaffna Final


Sajith Premadasa

121,177 32.60%

Sajith Premadasa 
32.60% Order
Ariyanethiran Pakkiyaselvam

116,688 31.39%

Ariyanethiran Pakkiyaselvam 
31.39% Order
Ranil Wickremesinghe

84,558 22.75%

Ranil Wickremesinghe 
22.75% Order
Anura Kumara Dissanayake

27,086 7.29%

Anura Kumara Dissanayake 
7.29% Order
K.k. Piyadasa

6,074 1.63%

K.k. Piyadasa 
1.63% Order
Generic placeholder image

16,105 0.13% 

Other 
 

 

தமிழர்கள் வசிக்கும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் அரியம் நாலாவது இடத்தில்!😱😱😱😱

Polling Division - Potuvil

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

70,942 Votes

55.26%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

30,263 Votes

23.57%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

18,053 Votes

14.06%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

4,802 Votes

3.74%

  • கருத்துக்கள உறவுகள்
profileNPP

ANURA KUMARA DISSANAYAKE

 
2,459,99339.44%
profileSJB

SAJITH PREMADASA

 
2,124,29834.06%
profileIND16

RANIL WICKREMESINGHE

 
1,094,42617.55%
profileIND9

ARIYANETHIRAN PAKKIYASELVAM

 
210,3793.37%
profileSLPP

NAMAL RAJAPAKSA

 
142,5892.29%
 
அரியநேத்திரன் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்திலும், 
நாமல் ராஜபக்சவை பின்தள்ளி,  முன்னுக்கும்   உள்ளார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

ஜேவிபியின் வெற்றி கைநழுவிப் போனால் கலவரம் வெடிக்கும் நிலை உருவாகலாம் என்பதால்தான் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

கலவரம் குழப்பங்கள் செய்வதில் விசேட தேர்ச்சி பெற்றவர்கள் ஜேவிபி. தமிழர்களுக்கு அடிபோட்டு கடை வீடுகளை எரிக்க கூடியவர்கள்😟

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கலவரம் குழப்பங்கள் செய்வதில் விசேட தேர்ச்சி பெற்றவர்கள் ஜேவிபி. தமிழர்களுக்கு அடிபோட்டு கடை வீடுகளை எரிக்க கூடியவர்கள்😟

இப்போதைய தலைமுறை நாட்டை ஆள நினைப்பவர்கள். முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அடைந்திருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

அரியநேத்திரனால் யாழ்பாண ஜனாதிபதியாக கூட வர முடியவில்லை என்று பார்த்தால் வீரம் விளைந்த மண் என று கூறப்படும் வன்னியிலும் தோல்வி. தாயக, புலம் பெயர் புல்லுருவிகளை மக்கள் அடையாளம் காண தொடங்கி உள்ளனர். உசுப்பேற்றல் காலாவதியாகிவிட்டது என்ற செய்தி புலம் பெயர் அரசியல் வியாதிகளுக்கும் சேர்ததே சொல்லப்பட்டிருக்கிறது. 

மகிழ்சசி. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இப்போதைய தலைமுறை நாட்டை ஆள நினைப்பவர்கள். முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அடைந்திருக்கலாம்!

சிங்களத்தின் முகம் எப்போதும் ஒன்று தான். அது தலைமுறைகளை கணக்கு வைப்பதில்லை. இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடும்.

கன நாளைக்கு முகத்தை மறைக்க முடியாது மறைக்கவும் அவர்கள் முயல்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

https://election.hirunews.lk/tamil/இன்னும்நிறைய இடங்கள் வர கிடக்கு. உள்ளக தகவலின் படி இரண்டாவது சுற்று எண்ணத்தேவையில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

சிங்களத்தின் முகம் எப்போதும் ஒன்று தான். அது தலைமுறைகளை கணக்கு வைப்பதில்லை. இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடும்.

கன நாளைக்கு முகத்தை மறைக்க முடியாது மறைக்கவும் அவர்கள் முயல்வதில்லை.

சிங்களம் தமிழரின் சகவாழ்வு குறித்துச் சிந்திக்கும் என இத்தனை அழிவுகள் அதன் பின்வந்த 15 ஆண்டுகால சிங்களத்தின் நகர்வுகள், அதற்குச் சான்றாகத் தமிழர் தெருக்கள் தோறும் பௌத்த அடையாளங்களை நிறுவுதல் என்று சிஙகள அரசு செய்துவருகின்றது. இதனை எதிர்த்து ம.வி.மு எங்காவது ஒருவார்த்தை கூறியுள்ளதா? இந்த (அவ)லட்சணத்தில் அநுரா வந்தால் தேனும் பாலும் தெற்கிலிருந்து வட-கிழக்கு நோக்கிப்பாயப்போகுதாம் என்று நம்புவோரை நினைத்து... 


நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி     
 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை அரியநேந்திரன் வேட்பாளராக நிறுத்தபடாது இருந்திருந்தால் தமிழர்பகுதியின் வாக்குகள் அநுரவைவிட சஜித் எப்போதோ முன்னணியில் இருந்திருக்ககூடும்.

எது எப்படி என்றாலும் சிங்களதேசம்  தனது தலைவரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் எந்தவிதமான அக்கறையும் இல்லை

33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கலவரம் குழப்பங்கள் செய்வதில் விசேட தேர்ச்சி பெற்றவர்கள் ஜேவிபி. தமிழர்களுக்கு அடிபோட்டு கடை வீடுகளை எரிக்க கூடியவர்கள்

அப்படி ஒரு சம்பவம் நடந்தால் , எப்படி சஹ்ரான் தேவாலயங்களுக்கு குண்டு வைத்து ஒட்டி உறவாடிய சிங்களவர் முஸ்லீம்கள் உறவுக்கு ஆப்படித்து தனது இனத்துக்கு தானே குழிபறித்தானோ  

அதேபோல்  சிங்களவர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் தமிழர் தீர்வு விவகாரத்தில் ஐநா பொறுப்புக்கூறல் விவகாரத்துக்கு, நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை பயங்கரவாதத்தை தான் அழித்தோம் என்று இன்றுவரை சமாளித்துவரும் சிங்களம்  ஒரு இனகலவரத்துக்கு முயன்றால் ஆடு தானே கொண்டுபோய் கத்திக்கு தலையை நீட்டினமாதிரி ஆகிவிடலாம்.

அதனால் சர்வதேசம்  ஒவ்வொரு மனிதனின் காற் சட்டைக்குள்ளிருக்கும் கைபேசிக்கு வந்துவிட்ட இக்காலத்தில் தமிழர்களுக்கெதிரான ஒரு கலவரம் என்றால் 83 போல் அல்லாமல் சிங்கள தனது இனத்தின் சர்வதேச பாதுகாப்பு கருதி அரசு இயந்திரம் முடிந்தவரை பெரும் எடுப்பில்  அடக்க பார்க்கும் என்று நம்பலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nochchi said:

சிங்களம் தமிழரின் சகவாழ்வு குறித்துச் சிந்திக்கும் என இத்தனை அழிவுகள் அதன் பின்வந்த 15 ஆண்டுகால சிங்களத்தின் நகர்வுகள், அதற்குச் சான்றாகத் தமிழர் தெருக்கள் தோறும் பௌத்த அடையாளங்களை நிறுவுதல் என்று சிஙகள அரசு செய்துவருகின்றது. இதனை எதிர்த்து ம.வி.மு எங்காவது ஒருவார்த்தை கூறியுள்ளதா? இந்த (அவ)லட்சணத்தில் அநுரா வந்தால் தேனும் பாலும் தெற்கிலிருந்து வட-கிழக்கு நோக்கிப்பாயப்போகுதாம் என்று நம்புவோரை நினைத்து... 


நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி     
 

அநுரா 1968 இல் பிறந்தவர். எனவே 1983 இல் இவரின் வயதொத்தவர்களின் காடைத்தனம் தான் இனக் கலவரம். அதை நேரில் பார்த்தவன் நான். இதுவரை ஜேவிபி அது சார்ந்து எந்த மன உளைச்சலையும் வெளியிட்டதில்லை. அதை செய்திருந்தால் அவர்கள் இந்த இலக்கை அடைவதற்கு அது தடையானது என்ற புரிதல் அவர்களுக்கு என்றுமே நினைவில் உண்டு. 

3 minutes ago, valavan said:

 

அதனால் சர்வதேசம்  ஒவ்வொரு மனிதனின் காற் சட்டைக்குள்ளிருக்கும் கைபேசிக்கு வந்துவிட்ட இக்காலத்தில் தமிழர்களுக்கெதிரான ஒரு கலவரம் என்றால் 83 போல் அல்லாமல் சிங்கள தனது இனத்தின் சர்வதேச பாதுகாப்பு கருதி அரசு இயந்திரம் முடிந்தவரை பெரும் எடுப்பில்  அடக்க பார்க்கும் என்று நம்பலாம். 

எம்மையும் அழித்து விட்டு 

இனக்கலவரத்தையும் தானே தூண்டி நின்று நடாத்தி விட்டு 

அதைக் காட்டி சர்வதேசத்திடம் பணமும் பார்க்க வல்லது சிங்களம். வரலாறு முக்கியம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:
 
அரியநேத்திரன் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்திலும், 
நாமல் ராஜபக்சவை பின்தள்ளி,  முன்னுக்கும்   உள்ளார்.

இந்த சந்தோஷமாவது கடைசியில் கிடைத்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

யாழ்ப்பாணம், வன்னி மாவட்ட தேர்தல் முடிவு. large.IMG_7598.jpeg.c125a535e533d644b5827d0a925fa24e.jpeg

K.K. Piyadasa க்கும் வாக்களிக்கும் நிலையில் யாழ் வன்னி மக்கள் 🤪

ரெலிபோனுக்கும் கல்குலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல்🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாதவூரான் said:

https://election.hirunews.lk/tamil/இன்னும்நிறைய இடங்கள் வர கிடக்கு. உள்ளக தகவலின் படி இரண்டாவது சுற்று எண்ணத்தேவையில்லை. 

எண்ண ச்சொல்லி விட்டார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ragaa said:

இந்த சந்தோஷமாவது கடைசியில் கிடைத்துள்ளது

அது கூட... எங்களுடைய சில புல்லுருவிகளுக்கு பிடிக்கவில்லை. 
ஒரே... வயித்தெரிச்சலில் புலம்பிக் கொண்டு திரிகிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

எண்ண ச்சொல்லி விட்டார்கள்

 

இரண்டாவது எண்ணினால் அநுரா பின் செல்வார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.