Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளீதரன் மீது முட்டை வீச்சு: ஆஸி. ரசிகர்கள் அட்டூழியம்

Featured Replies

முரளீதரன் மீது முட்டை வீச்சு: ஆஸி. ரசிகர்கள் அட்டூழியம்

ஹோபர்ட்: முத்தரப்பு போட்டியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் முட்டையை வீசியுள்ளனர்.ஆஸ்திரேலியாவில

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹோபர்ட்டில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல்

ஹோபர்ட் : ஆஸ்திரேலியாவில் நாளை முத்தரப்பு ஒருநாள் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது ‌தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹோபர்ட்டில் இலங்க‌ை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியது. கிரிக்‌கெட் வீரர் முத்தையா முரளிதரன் மீது முட்டையை வீசியுள்ளனர். நாளை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் போட்டி துவங்க உள்ள நிலையில், இலங்கை அணியின் மீதான தாக்குதல் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோ குடிச்சுப்போட்டு ு முட்டை எறிந்துள்ளார்கள். . ஆனால் இந்திய ஊடகங்கள் இதற்கு கால் கை வைத்து பெரிதாக கதை எழுதத்தொடங்கி விட்டார்கள்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

அவுச்திரேலிய, இந்திய அலைக்குள் அடிபட்டுப்போன தமது அணியையும் வெளியே கொண்டுவர இலங்கை அணியே இவ்வாறு செய்திருக்கலாம். குறிப்பாக முரளி மேல் அவுச்திரேலியர்களின் கேலியை இவர்கள் தமக்குச் சார்பாக பயன்படுத்தி இருக்கலாம். நிச்சயம் தோற்கப்போகும் அணியை கும்பல் சேர்த்து அடிக்க வேண்டிய அவசியமில்லை. அது அட்ட்டதின்போதே எதிரணியால் சரமாரியாக விழும் !

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்தியர்கள் 1996 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அரையிறுதிப் போட்டியில் தோற்கும் தருவாயில் இலங்கை வீரர்களை நோக்கி போத்தில்களையும். குப்பைகளையும் வீசியதோடு அரங்கிலும் தீ மூட்டினர்.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டையால் வீசிய இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் இது ஒரு ஜனநாயக விரோத செயல் இது ஒரு பயங்கரவாதம் இது எந்த ஒரு நாகரிகம் அடைந்த சமுகத்திலும் நடக்காது...எறியிறவன் கல்லை தூக்கி எறிந்திருக்க வேண்டும் அப்போதாவது குண்டடி படுபவனின் நோ புரிந்திருக்கும் அது சரி அது ஏன் முத்தையா முரளிதரனிற்கு மட்டும் முட்டையால் எரிந்தார்கள் அதை ஏன் இந்திய பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன உதிலை ஏதோ பம்மாத்து இருக்கிறது.

என்ன தான் இருந்தாலும் வீ ஆ அவுஸ்ரெலியன்ஸ் என்ன பொறுத்தவரை நான் வாழும் நாட்டிற்கு விசுவாசமாக நன்றியுடனும் இருப்பேன் என்பது தான் எனது இலச்சியம்,அவுஸ்ரெலிய இராணுவத்தில் ஒரு தமிழன் இராணுவ அதிகாரியாக இருக்கிறான் அவன் தமிழில் பேட்டி கொடுத்ததை நான் காதால் கேட்டனான் சிறிலங்காவில் முத்தையா முரளிதரன் கிரிகெட் அணியில் இருப்பதை விட அவுஸ்ரெலிய இராணுவத்தில் இந்த தமிழனிற்கு அதிகார் பதவி கொடுத்ததை நான் மகிழ்சியுடனும் பெருமிதத்துடன் ஏற்று கொள்கிறேன்..

முட்டைக்குள் ஆசிட் ஒண்டு இருக்க இல்ல தானே? மேலும், முட்டை சத்தான ஒரு நிறை உணவு. இதனால் முரளிதரனுக்கு அந்த நிறை உணவு கிடைக்க வேணும் எண்டுற நல்ல ஒரு நோக்கத்தில் அவர்கள் இப்படி செய்து இருக்கலாம் தானே? அவுஸ்திரேலிய மக்களிடன் இலவசமாக முட்டை வாங்கிச் சாப்பிடுவது பற்றி முரளிதரன் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும்.

பி/கு: இதை எறிஞ்சது கந்தப்பு நீங்கள் தானே? உண்மையச் சொல்லுங்கோ.. :o

மாப்பு உங்கடை சிஸ்யனையும் இங்கால பக்கம் கனநாள் காணேலை!...... ஒரு வேளை........?

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே அவுஸ்திரெலிய வீரர் ஒருவருக்கு இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ நடத்திருந்தால் இப்ப ஊடகங்களை பார்க்க வேணும்.

அவுஸ்திரேலியா என்ன இருந்தாலும் வெளிநாட்டு வீரர்களை பாதுகாக்க தவறிவிட்டது.அல்லது வேடிக்கை பார்த்தது என எடுக்கலாமா?

எறிஞ்சவர் அப்படியே கொஞ்சம் வெங்காயம் பச்சைமிளகாயும் சேர்த்து

எறிஞ்சிருந்தால் முட்டைப்பொரியல் செய்ய உதவியாய் இருந்திருக்கும் :o

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை நீங்கள் கொதி எண்ணெயையும் சேர்த்துச் சொல்லமல் விட்டிட்டியள்

அது முரளிதரனுக்கு எறிந்த முட்டை இல்லை. ஸ்ரீலங்கன் கிரிக்கெட் அணிக்கு எதிராக எறிந்தது.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஈழத்தமிழர் சிரிலங்கன் அணிக்கு எதிராக எறிய வேண்டிய முட்டையை அவுஸ்திரேலிய இளைஞர்கள் செய்துள்ளார்கள்.

அவர்களை வாழ்த்துவோம். தொடர்ந்து அவமானப்படுத்த ஊக்குவிப்போம்

முட்டை எறிந்து நாட்டை விட்டு கலைக்க வேண்டும்.

அங்க தமிழன் தலையில ஒவ்வொருநாளும் குண்டு எறியுறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை உண்மையில் எறியப்பட்டதா?. தமிழர்கள் அவுச்திரெலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்தால்,(உதாரணமாக மயூரன் மேற்கிந்தியாத்தீவில் செய்தது போல) அதனைத் தடுக்க தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்ற போர்வையில் பொய்யான தகவலை சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் வெளியிட்டு இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கக் கொடி தூக்கிறவைக்கு யார் முட்டையாலயோ என்னத்தாலயோ அடித்தாலும் அவர்கள் நமக்கு நண்பர்கள். வாழ்க அவுஸ்திரேலியா! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணியினர் மீது வந்து விழுந்த முட்டை பற்றி ஆராய்ந்து தங்கள் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துக்கொண்டு இருக்கும் யாழ்கள நண்பர்களே:

(1). முட்டை எவ்வாறு அங்கு வந்து விழுந்தது?

(2). கோழிமுட்டையா வாத்து முட்டையா?

(3). அது கூழ்முட்டையா நல்ல முட்டையா?

(4). தனியாகவா அல்லது பச்சை மிளகாய் வெங்காயத்துடனா விழுந்தது?

(5). ஓருவரையா அல்லது ஒரு குழுவையா குறிவைத்து எறியப்பட்டது?

என்றெல்லாம் ஆராய்ந்துள்ளீர்கள். நல்லது.

அந்த வேளையில் வானத்தில் கோழி அல்லது வேறு ஏதாவது பறவைகள் பறந்து சென்றிருக்கவும் சாத்தியமுண்டா?

என்பதையும் ஆய்வு செய்து கருத்து எழுதுவீர்களா?.

நேக்கு அழுகை...அழுகையா வருது அந்த முட்டையை நினைக்க முட்டை கீழே விழுந்து உடைந்திருக்கு என்ன அநியாயமா போச்சு முட்டை...ஏன் முட்டை எல்லாத்தை வேஸ்ட் பண்ணுறியள் மை டிய ஆஸிஸ் ரோட்டில தான் கல்லு இருக்கு அதால எரிந்து இருக்கலாமே எனிவே அடுத்த முறை இதை வலோ பண்ணுங்கோ...

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"கல்லை கண்டா நாயை காணோம் நாயை கண்டா கல்லை காணோம்"

மாப்பு உங்கடை சிஸ்யனையும் இங்கால பக்கம் கனநாள் காணேலை!...... ஒரு வேளை........?

சாணக்கியன் அண்ணாநான் நல்லா இருக்கிறது பிடிக்கவில்லையோ :lol: சிட்னிக்கும் கோபார்டிற்கு நிறைய தூரம் பாருங்கோ :lol: அப்படி நான் எரிந்திருந்தா இப்படி முட்டை எல்லாம் எரிந்திருக்கமாட்டேன் ஒரேடியா தலையில கல்லை தூக்கி அல்லவா போட்டிருப்பேன் :lol: ...அது சரி முட்டை வந்து நான் வெஜிட்டேரியனா அல்லது வெஜிட்டேரியனா... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை'யால் மீண்டும் சர்ச்சை வெடிக்கிறது இலங்கை வீரர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பலத்த பாதுகாப்பு

04 - February - 2008

ஹர்பஜன் விவகாரத்தின் ஈரம் காய்வதற்குள் இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. இலங்கை வீரர் முரளிதரன் முகத்தில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் முட்டையை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கோணத் தொடர் தொடங்கிய நிலையில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதால் இலங்கை வீரர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் தொடர் நேற்று பிரிஸ்பேனில் ஆரம்பமானது. இதில் பங்கேற்க இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியா வந்துள்ளனர். ஹோபர்ட்டில் வெள்ளிக்கிழமை இரவு இலங்கை வீரர்கள் உணவருந்திவிட்டு தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, சில அவுஸ்திரேலிய ரசிகர்கள் அவர்களை கிண்டல் செய்தனர். முரளிதரன் முகத்தில் முட்டையை வீசித் தாக்கினர். இதையடுத்து இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் வீரர்களை பத்திரமாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது.

இதற்கு, சமீபத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வோர்னின் உலக சாதனையை முரளிதரன் முறியடித்தது முக்கிய காரணம் எனத் தெரிகிறது. இது குறித்து இலங்கை அணிக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்;

"முரளிதரனும் மற்றவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு கார் மின்னல் வேகத்தில் அருகில் வந்தது. அதிலிருந்து ஒருவர் முரளியைப் பார்த்து திட்டினார். பின்னர் திடீரென முட்டையை எடுத்து வீசத்தொடங்கினார்" என்றார்.

இப்பிரச்சினையைத் தொடர்ந்து இலங்கை வீரர்களுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையை இலங்கை கேட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் செயலர் மதிவாணன் இதுபற்றி கூறுகையில்;

"முரளிக்கு கூடுதல் பாதுகாப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம்" என்றார்.

"முரளிதரன் தாக்கப்பட்ட பின்னர் உஷாரடைந்த இலங்கை கிரிக்கெட் சபை, வீரர்களை பத்திரமாக அழைத்து சென்றது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளது. தொடரும் சர்ச்சை .... அவுஸ்திரேலியர்களுக்கு முரளிதரன் என்றாலே `அலர்ஜி' தான். இவரது ஒவ்வொரு பயணத்தின் போதும் சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. இதன்விபரம்:

* 1995 - 96 இல் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது முரளிதரன் பந்தை எறிவதாக கூறி அவுஸ்திரேலிய நடுவர் டேரல் ஹேர் தொடர்ந்து நோ - போல் கொடுத்தார். இதை எதிர்த்து கப்டன் அர்ஜுனா ரணதுங்க வீரர்களுடன் போட்டியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார்.

2004 இல் முரளிதரனை ரசிகர்கள் கிண்டல் செய்து வெறுப்பேற்றினர். அப்போதைய அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவார்டும் `முரளி பந்தை எறிகிறார்' என குற்றம் சாட்டினார். இதையடுத்து அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடுவது இல்லையென்ற முடிவை முரளி எடுத்தார்.

* ஹேரை தொடர்ந்து அவுஸ்திரேலிய நடுவர் ரோஸ் எமர்சனும் முரளிதரன் பந்துவீச்சு ஐ.சி.சி. விதிகளுக்கு புறம்பானது என நோ - போல் வழங்கினார்.

* முரளிதரன் பெர்த்தில் உள்ள `வெஸ்டர்ன்' அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் நடந்த பரிசோதனையில் தனது பந்து வீச்சில் குறை இல்லை என்பதை நிரூபித்தார்.

* மனமாறிய முரளிதரன் பின்னர் 2007 நவம்பரில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க மீண்டும் அவுஸ்திரேலியா சென்றார்.

* தற்போது இவர் மீது முட்டை வீசப்பட்டுள்ளது.

thinakural.com

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டா இதெல்லாம்? கிரிக்கட்டில்கூட இப்படியான ரசிகர்?களும் உண்டா? :rolleyes::huh:

  • கருத்துக்கள உறவுகள்

தன் மீது முட்டை வீசப்பட்டதை முரளி நகைச்சுவையாக கருதுகிறார்

[05 - February - 2008]

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் முட்டை வீசியதை அவர் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டதாக. கப்டன் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முக்கோண ஒருநாள்கிரிக்கெட் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் தொடங்கின.

இதற்கு முன்பாக இலங்கை அணி அவுஸ்திரேலியா வந்தபோது, ஹோபர்ட்டில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் மற்றும் இரு வீரர்கள் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் முட்டையை வீசினர்.

இலங்கை அணி இப்பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பவில்லையெனக் கப்டன் ஜெயவர்தன கூறியதுடன்;

முரளிதரன் மீது ஆஸி., ரசிகர்கள் முட்டை வீசியதை முரளிதரன் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2008/2/5/s...s_page45292.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.