Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

A Jaffna Wife's Poem

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நன்றி :wub:

வல்கனோ! பிற மொழியை தயங்கித் தயங்கி பேசுபவர்களுக்கு, உங்கள் அலசல் ஒரு ஊக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக அம்மா மீது மரியாதை செலுத்துபவர்கள் எல்லாப் பெண்களையும் மதிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள்...இவர்கள் தாய் மீது செலுத்தும் அதே அளவு அன்பை தனது மனைவி மீதும் செலுத்தினால் குடும்பத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை.

வொல்கனோ உங்கள் மொழி பற்றிய விளக்கத்திற்கு நன்றி.

பொதுவாக அம்மா மீது மரியாதை செலுத்துபவர்கள் எல்லாப் பெண்களையும் மதிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள்...இவர்கள் தாய் மீது செலுத்தும் அதே அளவு அன்பை தனது மனைவி மீதும் செலுத்தினால் குடும்பத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை.

வொல்கனோ உங்கள் மொழி பற்றிய விளக்கத்திற்கு நன்றி.

ம்ம்! அன்பு One Way Traffic எண்டு சொல்லுறியளோ!!!!! இது கலிகாலமெல்லோ! இன்னும் என்னத்தையெல்லாம் சொல்லபோறீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வோல்கனோ.உங்கடை அலசல் எனக்கு மிகவும் பயன்படும்

பொதுவாக அம்மா மீது மரியாதை செலுத்துபவர்கள் எல்லாப் பெண்களையும் மதிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள்...இவர்கள் தாய் மீது செலுத்தும் அதே அளவு அன்பை தனது மனைவி மீதும் செலுத்தினால் குடும்பத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை.

வொல்கனோ உங்கள் மொழி பற்றிய விளக்கத்திற்கு நன்றி.

அதே போல், அப்பா மீது மரியாதை செலுத்தும் பெண்கள் எல்லா ஆண்களையும் மதிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். தம் அப்பா மீது செலுத்தும் அதே அன்பை தனது கணவன் மீதும் பெண்கள் செலுத்தினால் குடும்பத்தில் ஒரு பிரச்சனையும் வராது :)

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல், அப்பா மீது மரியாதை செலுத்தும் பெண்கள் எல்லா ஆண்களையும் மதிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். தம் அப்பா மீது செலுத்தும் அதே அன்பை தனது கணவன் மீதும் பெண்கள் செலுத்தினால் குடும்பத்தில் ஒரு பிரச்சனையும் வராது :blink:

:rolleyes:

  • தொடங்கியவர்

பொதுவாக அம்மா மீது மரியாதை செலுத்துபவர்கள் எல்லாப் பெண்களையும் மதிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள்...இவர்கள் தாய் மீது செலுத்தும் அதே அளவு அன்பை தனது மனைவி மீதும் செலுத்தினால் குடும்பத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை.

இப்படித்தான் எல்லோரும் சொல்வார்கள், ஆனால் அப்படி எல்லோரும் இருப்பதில்லை :rolleyes:

  • தொடங்கியவர்

பெண் பிள்ளைகள் தமது தாய் செய்தவற்றை செய்வதில்லையா..??! சொல்வதில்லையா..??! அவர்கள் தமது தாயை போற்றுவதில்லையா..??!

ஒரு ஆணிற்கு அவனின் தாய் அவனுக்குச் செய்தவற்றை நினைவு கூறவுமா உரிமை இல்லை..??!

நெடுக்ஸ், கட்டுறதுக்கு முன்னமே அம்மா புராணம் என்றால், ....?????? ஆண்டவா!!!

... இது அம்மாவின் புகழ்பாட அல்ல, சிலர் ஏதாவது குறை மனிசிமாரில் பிடிக்க வேண்டும் என்பதற்கு, அம்மாவை ஆயுதமாக்குகிறார்கள்!!! ... ஒரு வீட்டில் காதால் கேட்டததிலிருந்து ... இப்படியான ஆண், அவருடைய மனைவி சொன்னார் .... இப்படியெண்டால் அம்மாவையே கட்டி இருக்கலாம் தானே?? ....

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நீங்கள் சொல்வதும் சரி தான்...ஆனால் ஆண்களும் சரி பெண்களும் சரி அப்படி நினைப்பதில்லை...ஆனால் அதில் சில பேர் விதி விலக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், கட்டுறதுக்கு முன்னமே அம்மா புராணம் என்றால், ....?????? ஆண்டவா!!!

... இது அம்மாவின் புகழ்பாட அல்ல, சிலர் ஏதாவது குறை மனிசிமாரில் பிடிக்க வேண்டும் என்பதற்கு, அம்மாவை ஆயுதமாக்குகிறார்கள்!!! ... ஒரு வீட்டில் காதால் கேட்டததிலிருந்து ... இப்படியான ஆண், அவருடைய மனைவி சொன்னார் .... இப்படியெண்டால் அம்மாவையே கட்டி இருக்கலாம் தானே?? ....

அம்மா இன்றி நானில்லை. அம்மா தந்த உடல்.. அப்பா தந்த உயிர். அவர்களைப் பற்றி பேச எவரும் தடை போட முடியாது. அதேபோல் மற்றவர்களும் அவர்களின் அப்பா அம்மா பற்றி பேச நாமும் தடையாக இருக்க முடியாது. இதில் புராணம் என்பதில் எனக்கு எதுவும் புரியவில்லை..! அம்மா நல்லதாச் செய்திருந்தா அதைச் சொல்வதும் அவசியம். துணையாக வருபவரும் நல்லது செய்தால் நிச்சயம் அன்பான துணைவன் என்றால் பாராட்டாமல் இருக்கமாட்டான். ஆனால்.. துணைவி அன்பானவளாக நம்பிக்கைக்குரியவாளாக இருக்க வேண்டும்.

ஏனெனில்.. மனநிலை சரியான ஒரு தாய் ஒரு போதும் குழந்தைக்கு நம்பிக்கைத் துரோகியாக இருக்கமாட்டாள். குழந்தை மீது அன்பின்றி இருக்கமாட்டாள். ஆனால் துணைவி என்பவள் அப்படிப்பட்டவள் அல்ல. பலர் ஏமாற்றுக்காரர்களாக கணவனை ஆண் என்று கண்டு அவனின் துன்பத்தில் மகிழ்பவர்களாகக் கூட இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களை வாழ்ந்த எவனுக்கு மனம் வரும்..??! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல், அப்பா மீது மரியாதை செலுத்தும் பெண்கள் எல்லா ஆண்களையும் மதிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். தம் அப்பா மீது செலுத்தும் அதே அன்பை தனது கணவன் மீதும் பெண்கள் செலுத்தினால் குடும்பத்தில் ஒரு பிரச்சனையும் வராது :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அழுகை அழுகையா வருது

நமது நிழலிக்கு இந்தக்கதியா என்று..

ஆனால் நம்மை வெட்டும் மட்டுனரின் வாலும் வெட்டுவாங்குது என்று ஒரு புறத்தால் சந்தோசமாகவும் கிடக்கு..

  • தொடங்கியவர்

துணைவி என்பவள் அப்படிப்பட்டவள் அல்ல. பலர் ஏமாற்றுக்காரர்களாக கணவனை ஆண் என்று கண்டு அவனின் துன்பத்தில் மகிழ்பவர்களாகக் கூட இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களை வாழ்ந்த எவனுக்கு மனம் வரும்..??! :lol:

தம்றி, எல்லா மம்முகளும் .... வைபுகளாக இருந்தவர்கள்/இருப்பவர்கள் தான்!!! ...... இப்படியே போனால் பிள்ளையாரின் நிலைதான்! :D

எனக்கு அழுகை அழுகையா வருது

நமது நிழலிக்கு இந்தக்கதியா என்று..

ஆனால் நம்மை வெட்டும் மட்டுனரின் வாலும் வெட்டுவாங்குது என்று ஒரு புறத்தால் சந்தோசமாகவும் கிடக்கு..

:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா இன்றி நானில்லை. அம்மா தந்த உடல்.. அப்பா தந்த உயிர். அவர்களைப் பற்றி பேச எவரும் தடை போட முடியாது. அதேபோல் மற்றவர்களும் அவர்களின் அப்பா அம்மா பற்றி பேச நாமும் தடையாக இருக்க முடியாது. இதில் புராணம் என்பதில் எனக்கு எதுவும் புரியவில்லை..! அம்மா நல்லதாச் செய்திருந்தா அதைச் சொல்வதும் அவசியம். துணையாக வருபவரும் நல்லது செய்தால் நிச்சயம் அன்பான துணைவன் என்றால் பாராட்டாமல் இருக்கமாட்டான். ஆனால்.. துணைவி அன்பானவளாக நம்பிக்கைக்குரியவாளாக இருக்க வேண்டும்.

ஏனெனில்.. மனநிலை சரியான ஒரு தாய் ஒரு போதும் குழந்தைக்கு நம்பிக்கைத் துரோகியாக இருக்கமாட்டாள். குழந்தை மீது அன்பின்றி இருக்கமாட்டாள். ஆனால் துணைவி என்பவள் அப்படிப்பட்டவள் அல்ல. பலர் ஏமாற்றுக்காரர்களாக கணவனை ஆண் என்று கண்டு அவனின் துன்பத்தில் மகிழ்பவர்களாகக் கூட இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களை வாழ்ந்த எவனுக்கு மனம் வரும்..??! :D

நெடுக்ஸ், திருமணம் என்பது பெற்றோர் - பிள்ளைகள் என்ற உறவுக்கும் அப்பால் சென்று, அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் முதன்மையானவர்கள் என்ற நிலையில் வரவேண்டிய உறவு. இதில் அம்மா உடல் தந்தாள் , அப்பா உயிர் தந்தார் என்று சொல்லிக் கொண்டு திரிய முடியாது. ஏனெனில் அவள் தன் உயிரையும் உடலையும் அவனுக்கு முழுமையாகத் தந்து விடுவதுமட்டும் இல்லாமல் அவனது உயிரையும் சுமந்து உடல் தருபவளாக இருக்கிறள். பெற்றோர் வாழ்க்கையின் ஆரம்பப்படி மட்டுமே வர முடியும், வாழ்வின் அடுத்தடுத்த படிகளைத் தாண்டவேண்டும் எனில் அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் வேண்டும். ஒருவன் அல்லது ஒருத்தி வாழ்வியலில் மகனாகவோ அல்லது மகளாகவோ மட்டும் என்றுமே வழ்ந்துவிட முடியாது. பொதுவாக எந்த பெண்ணுமே தன்னை மட்டுமே தன் கணவன் மெச்சிக்கொள்ள வேண்டும் என விரும்புகிறாள். அது அவளது உரிமையும் கூட. இதைப் புரிந்து நடந்துகொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற்று இருக்கிறார்கள்.

அடுத்து, "பலர் ஏமாற்றுக்காரர்களாக கணவனை ஆண் என்று கண்டு அவனின் துன்பத்தில் மகிழ்பவர்களாகக் கூட இருக்கிறார்கள்" எனக் குறிப்பிடுகிறீர்கள். எந்த ஒரு நல்ல குடும்பப் பெண்ணும் தன் கணவனின் துன்பத்தில் மகிழ்ச்சி அடைபவளாக இருக்கமாட்டாள். கணவன் குடி, புகை, வேறு பெண்கள் தொடர்பு என பணத்தை செலவுசெய்து குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காத நிலையிலும் தன் கணவனை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்காத பல ஆயிரம் ஆயிரம் பெண்கள் நம் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கடின வேலைசெய்து உழைத்து இப்பிடிப்பட்ட கணவன்மருக்கு சோறுபோடும் பல பெண்களை கண்ணால் கண்டிருக்கிறேன் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் பலர் தம் கணவனுடன் இணைந்து குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைச் சுமக்கின்றனர். ஒஉர்சிலர் நீங்கள் குறிப்பிடுவது போல தம் கணவனின் துன்பத்தில் மகிழ்ச்சியடையலாம். ஆனாலும் எல்லாரையும் இந்த வகையறைக்குள் அடக்கிவிட முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது பெற்றோர் - பிள்ளைகள் என்ற உறவுக்கும் அப்பால் சென்று, அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் முதன்மையானவர்கள் என்ற நிலையில் வரவேண்டிய உறவு. இதில் அம்மா உடல் தந்தாள் , அப்பா உயிர் தந்தார் என்று சொல்லிக் கொண்டு திரிய முடியாது.

அற்புதமான

அதேநேரம் இன்றைய எமது சந்ததிக்கு தேவையான கருத்து

நன்றி சகோதரா.

  • கருத்துக்கள உறவுகள்

பெண் பிள்ளைகள் தமது தாய் செய்தவற்றை செய்வதில்லையா..??! சொல்வதில்லையா..??! அவர்கள் தமது தாயை போற்றுவதில்லையா..??!

ஒரு ஆணிற்கு அவனின் தாய் அவனுக்குச் செய்தவற்றை நினைவு கூறவுமா உரிமை இல்லை..??!

எல்லா அம்மாமாரும் பிள்ளைகளை அடிப்பதில்லை. இது யாழ்ப்பாணத்தில்.. எந்த பனங்கூடலுக்குள் இருந்து வந்த பெண்..???! :D

ஏனிப்படி சுயநலமே உருவானவர்களாக இருக்கிறார்கள் இந்தப் பெண் பிரசுகள்..??! திருமணம் ஆக முன்னர் இவர்களும் ஒரு தாயின் பிள்ளைகள் தானே..???!

இது தாய் புராணம் அல்ல. தாயை அவன் உதாரணமாக்கிக் காட்டிக் கொள்கிறான். காரணம் அவன் தாயின் அன்பை இவளிடமும் எதிர்பார்ப்பதால் இருக்கும்.

ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடிய மனநிலை இருக்குமா இவர்களிடம்...???!

இந்தக் கவிதையில் யாழ்ப்பாண மனைவியின் கணவன் பற்றிய எண்ணங்களைச் சொன்னவர்கள்..

யாழ்ப்பாணப் பெண்களின் போலி டாம்பீகங்களையும் கணவனிடமான எதிர்பார்ப்புக்களையும் எல்லோ அவிழ்த்துவிட்டிருக்க வேண்டும்..??! :lol: :lol:

பனங்கூடலுக்கால வந்த பெண்ணுக்கு தாய்பாசம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.

ஆனால் பல்கலைகளகத்திற்கு அருகுகால வந்த அண்ணை. இப்படித்தான் எனது அம்மா எனக்க உடுப்பு மடித்துதாறவா என்று அந்த பெண்ணின் உடுப்பையும் சாப்பாத்தையும் குறைந்தது ஒரு வருடத்திற்காகவாவது மடித்து துடைத்து செய்து காட்டியிருந்தால். அந்த பெண் பாhத்து பாழகியிருப்பாளே. ஒரு நியாயமான சிந்தனை தரம் தாழ்த்த பெண்ணை பனங்கூடலுக்குள் தேட வேண்டிய நிலமை உங்களுக்கு.

தனது பிறவி சுதந்திரத்தையே காணமால் தொலைத்த அந்த பெண்ணின் வார்த்தைகள் உங்களுக்குபு புரியாதுபோனால்....... அதில் ஆச்சரியபட ஏதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு தகப்பனாக இருந்தாலும்

எனது பிள்ளை எனக்காக தன்னுடையதை அவமதிக்க அனுமதியேன்

உந்த கவிதையை பார்க்கும் போது, தமிழ் சினிமாவையும், தொல்லைகாட்சி தமிழ் மெகா தொடர்களையும் பார்த்து கற்பனையில் மிதக்கும் ஒரு வேலைவெட்டி இல்லாத (தெரியாத) ஒரு பெண்ணால் எழுதப்பட்டது போல் உள்ளது.

அது சரி கடைசி நாலு வரிகளில் கணவனை அடிக்க நினைத்ததும், வேலைவெட்டி தெரியாத பெண்ணின் கற்பனை ஓட்டம் நின்று விட்டது போல தெரிகிறது - கணவன் திருப்பி அடித்தால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்திருக்குமோ?

  • தொடங்கியவர்

தாயா???? தாரமா????

கண்ணதாஸனின் மொழியில் ... எந்த மனதில் அன்பு உள்ளதோ, அந்த மனமே அம்மா அம்மா!!! ...

ஒரு தாயின் ஸ்தானத்தை தாரம் நிரப்பலாம்! ஆனால் தாரத்தின் ஸ்தானத்தை தாய் நிரப்பலாமா????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.