Jump to content

ஊருக்குப் போன ஊர்குருவி


Recommended Posts

விடியல் சொல்வதில் உண்மை நிறைய இருக்கின்றது. எனக்குத் தெரிந்து நிறையப் பேர் போய் எந்தவிதமான பிரச்சனையும் இன்றித் திரும்பியுள்ளனர். புலம்பெயர் மக்களின் முதலீடுகளில் அக்கறை கொண்டு உள்ள சிங்கள அரசியலாளர்கள், அவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொள்ளப் போவதில்லை. ஆனால், தமிழர்களை கடத்துவதற்கும் அவர்களை காணாமல் போக்கடிப்பதற்குமான சூழ்நிலை அன்று எப்படி இருந்ததோ, அதே போன்றுதான் இன்றும் இருக்கின்றது, நாளையும் இருக்கப்போகின்றது. சம்பவங்களின் நிகழ்வுகள் பூச்சியாமாகப் போயினும், நடப்பதற்கான நிகழ்தகவு 100 ஆகவே காணப்படுகின்றது

ஊரில் இருக்கும் என் அம்மாவிடம் கேட்டேன் "எல்லாரும் வருயினம், நானும் வந்து ஒரு எட்டு பார்க்கவா என", அம்மா பதறிப் போய் சொன்னது "பொறு பொறு இப்போதைக்கு வராதே" என்று... அவாவின் குரலில் இனம்புரியாத பதற்றம் இருந்ததை உணரக் கூடியதாக இருந்தது. அந்த பதற்றம் நிறைந்த குரல்தான் தமிழர்களின் அவல வாழ்வுக்கான சாட்சி

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply

ஊரிலையிருந்து இரண்டு தென்னங்குத்தி இறக்க எவ்வளவு செலவாகும் வசம்பண்ணை? :)

:unsure:நீங்க இரண்டு பனங்குத்தி இறக்கக் கொடுத்த அதே செலவு தான் ஆகும் கு.சா அண்ணோய்..... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா?? எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா?? என்று. அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா??

ஓம் வசம்பு, நானும் கேள்விப் பட்டனான். டக்ளஸ் கப்பம் வாங்கிறதில்லையாம். ஆனா, செல்லமா பிரான்ஸில இருந்து போற பெடியள வெருட்டி வாங்கின காசு தான் டக்ளசிட வால்கள் வெளிநாட்டுப் பயணம், குறிப்பாக பிரான்ஸ் பயணம் செய்யும் போது பயன் படுகுதாம். தப்பில்லைத் தானே? என்ன செலவுக்கு காசெடுத்திருக்கிறாங்கள் அவ்வளவு தான்! சித்தாவிட புளொட் இப்ப வவுனியாவில வாலாட்டிறதில்லை (வவுனியாவில மட்டும் தான்!). டொக்டர் மொகிதீன் கொலைக்குப் பிறகு சிறி லங்காப் பொலிஸ் எடுத்த நடவடிக்கையால எல்லாரும் அனுராதபுரத்தில களி தின்னுகினயாம். ஆனா அதுக்கு முதல் கொண்டாடுற வீர மக்கள் தினத்துக்கு பூச்சாடியில இருந்து "தண்ணிச் செலவு" வரை வவுனியா மக்களிட்ட "அன்பாகக்" கேட்டு வாங்கித் தான் கொண்டாடினவங்களாம்! இதுவும் தப்பிலைத் தானே? அது சரி உங்களுக்குச் சொன்ன மாதிரி முறைப்பாடுகளைக் கவனிச்சவையோ இந்த இரண்டு "களத்தில" நிண்டு "சேவையாற்றுற" தலைவர் மாரும்? ஒருக்கா அறியத் தாங்கோவன்! :unsure::)

Link to comment
Share on other sites

ஊரில் இருக்கும் என் அம்மாவிடம் கேட்டேன் "எல்லாரும் வருயினம், நானும் வந்து ஒரு எட்டு பார்க்கவா என", அம்மா பதறிப் போய் சொன்னது "பொறு பொறு இப்போதைக்கு வராதே" என்று... அவாவின் குரலில் இனம்புரியாத பதற்றம் இருந்ததை உணரக் கூடியதாக இருந்தது.

புரியவில்லை KP கூட அவங்களிடம் இருக்கும் போது ???????

Link to comment
Share on other sites

ஓம் வசம்பு, நானும் கேள்விப் பட்டனான். டக்ளஸ் கப்பம் வாங்கிறதில்லையாம். ஆனா, செல்லமா பிரான்ஸில இருந்து போற பெடியள வெருட்டி வாங்கின காசு தான் டக்ளசிட வால்கள் வெளிநாட்டுப் பயணம், குறிப்பாக பிரான்ஸ் பயணம் செய்யும் போது பயன் படுகுதாம்.

:unsure:ஏன் இப்போ டக்ளஸ் அமைச்சரில்லையோ?? அல்லது ஒரு ரூபா சம்பளத்திலை அமைச்சராய் இருக்கின்றாரோ?? :) கூட்டமைப்புக் காரர்கள் ஏதோ சீசன் ரிக்கற் எடுத்து வைச்சோ இந்தியா, கனடா, ஐரோப்பா என்று அடிக்கடி பயணித்தவை?? அதையும் ஒருக்கால் உங்கடை புலநாய்வு மூலம் எடுத்து விடுங்கோவன். ^_^ ஒருவேளை வன்னி மக்களுக்கு என்று "புலம்(ன்)" பெயர்ந்து சிலர் சுருட்டும் பணம் அவைக்குத் தான் என்று கதைவிடப் போறியளோ??:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக இது தமிழர்களின் குணம்

பிரச்சினை தன் கதவை தட்டும்வரை அவர்களுக்கு அடுத்தவர்களுக்கு நடப்பது பற்றி அக்கறையில்லை

அல்லது

அவர்கள் ஏதோ பிழை செய்ததால் நடந்தது என்றே இருப்பர்.

நெடுக் அவர்களின் கருத்துக்களுடன் 100 வீதம் ஆதரிக்கின்றேன்

பாலஸ்தீன பழமொழி ஒன்று................

முந்தநாள் அடுத்த வீதியில் யாரொ நாலுபேர் வந்து அங்குள்ளவர்களை அடித்தார்கள் உதைத்தார்கள்.

நான் போகவில்லை....... ஏன் என்றும் கேட்கவில்லை.

நேற்று பக்கத்து வீட்டடில் உள்ளவர்களை வந்து அடித்தார்கள் உதைத்தார்கள்.

நான் போகவில்லை.... ஏன் என்றும் கேட்கவில்லை.

இன்று அதே நாலுபேரும் எனை வந்து அடிக்கிறார்கள்.

யாரும் வரவில்லை............. ஏன் என்றும் கேட்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா?? எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா?? என்று. அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா??

இங்கே எவரும் தமிழர்களுக்கு இலங்கையில் பிரைச்சினையில்லை,அங்கே தேனும் பாலும் ஓடுகின்றதென்று சொல்லவரவில்லையே. இருக்கும் பிரைச்சினைகளை,அதீத கற்பனையில் மேலும் மெருகேற்றி இலங்கையில் தமிழர்களே வாழ முடியாதென்று கதையளக்கும் தங்களைப் போன்றோரின் கருத்தைத் தான் மறுதலிக்கின்றோம். இன்று இலங்கையில் தமிழர்களுக்கு மட்டுமா பிரைச்சினை?? சிங்கள மக்களுக்கு இல்லையா?? சமீபபத்தில் ஒரு காணொளி பார்த்தேன்,அதில் புத்தபிக்குமாருக்கே ஆடைகளைப் பிடித்திழுத்து காவற்துறையினர் பொல்லுகளால் சரமாரியாக தாக்குதல்கள் நடாத்துகின்றார்கள். எனவே உண்மைகளை உள்ளபடி உண்மைகளாக எழுதுங்கள். வெறும் பரபரப்பிற்காகவும் பணப்பறிப்பிற்காகவும் மிகைப்படுத்தி பொய்களை எழுத வேண்டாமென்பதே எங்களைப் போன்றோரின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் உங்களுக்கு மட்டுமல்ல,உங்களைப் போன்ற அனைவருக்குமே........

உங்களைப் போல அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கக் கூடாதுங்க. வானொலிகளைக் கேட்பதேயில்லையா?? அவர்கள் உங்களை உசுப்பிவிடுமளவிற்குச் செய்திகளைச் சொன்னால்த் தானே, நீங்களும் நிகழ்ச்சிகளுக்கு கண்மண் தெரியாமல் பணங்களை அள்ளி வழங்கி ஆதரவு வழங்குவீர்கள். GTV "கரம் கொடுப்போம், வடம் பிடிப்போம்" என்று பச்சையாகவே சுருட்டுகின்றதே தெரியவில்லையா??

:) உங்க தாராளள மனப்பான்மைக்கு மனமார்ந்த நன்றிங்க. :D

:rolleyes:நீங்கள் பிரான்சிலுள்ள தமிழ் ஒலி வானொலியைத் தொடர்பு கொண்டால், அவர்கள் எப்படி இலங்கைக்குச் சென்று திரும்பலாமென்ற இரகசியங்களை இரகசியமாகச் சொல்லித் தருவார்கள். :):D

பி.கு: அவசரப்பட்டு நிகழ்ச்சியில் சென்று இது விடயமாகக் கேட்டுவிடாதீர்கள். காரியாலயத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே அறிவு முகர்ந்த அண்ணாச்சி ஒருவர் எழுதியவை.............. அவர் கைபடவே எழுதியவைகளில் சிலதுகள் என்னால் சிவப்பு வர்ணமிட்டு காட்டபட்டுள்ளன. அவர் மேலேயே சிலரை அறிவு குறைந்தவர்கள் என்று திட்டியுமுள்ளார். அவர் சொல்லுவது உண்மையென்றே நானும் ஒப்புகொள்கிறேன்.

காரணம் அவர் எதையும் ஒளிவு மறைவின்றி எழுதியபின்பும் ஏதும் விளங்காதவர்கள்போல். இலங்கையில் தமிழருக்கு பிரச்சனையில்லையா? என்று கேள்வி கேட்டால் அது ஒரு மூட்டாள்தனமான கேள்விதானே?

அவர் தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை என்று எங்காவது எழுதியுள்ளாரா?

எங்களுக்கு பிரச்சனை இல்லை............. எங்களுக்கு தெரிந்தவர்கள் போய்வருகிறார்கள்............... எமது சகாக்கள் அங்கிருந்து வருகிறார்கள் அவர்களில் யாருக்கும் பிரச்சனை இல்லை என்றே அவர் திரும்ப திரும்ப எழுதுகிறார்.

அதாவது சித்தார்த்தன் அமைச்சர் ஐயா டக்ளஸ் தேவனாந்தா போன்றோர் வரும்போது என்னோடு வந்து நேரடியாக பேசுகிறார்கள். நான் நேரடியாகவே அவர்களுடன் கதைக்கிறேன். அவர்களும் முற்று முழுதாக மறுப்பதற்கில்லை என்று சொன்னார்களாம்.

இந்த அண்ணாவை நேரடியாகவே அந்த மக்கள் காப்பாளர்கள் சந்திக்கின்றார்கள்.

தொடர்ந்தும் அவர் சொல்லுவது............. தற்போது களத்தில் அவர்கள்தான் நிற்கிறார்களாம். களத்தில் என்று அவர் மீண்டும் சுட்டிகாட்டியுள்ளார்.

திரும்ப திரும்ப ஒன்றை சொல்கின்றார்............. இங்கே டக்களஸ்தேவானந்தா மக்கள்சேவகன் சித்தார்த்தன் தவிர்ந்தவர்கள் பணப்பறிப்பில் ஈடுபடுகின்றார்களாம். உதாரணத்திற்கு ஜிரிவி பிரான்ஸ்லி ஏதோ றேடியோ கோயில் குளம் என்று மக்கள் சேவகர்களுடன் தொடர்பற்ற அனைத்தையும் அவர் சாடுகின்றார்.

திரும்ப திரும்ப அவர் அதைதான் சொல்கிறார் எமக்கு அங்கே பிரச்சனை இல்லை. ஆனால் தமிழருக்கு பிரச்சனை இல்லை என்று நான் சொல்லவில்லை.

ஆக இப்போது இலங்கையில் பிரச்சனையில்லாமல் வாழவும் வசதியுள்ளது

பிரச்சனையுடன் வாழவேண்டிய சூழ் நிலையும் அங்கு உள்தையே அவர் சுட்டிகாட்டகின்றார் என்று எனது அறிவுக்கு படுகின்றது.

தமிழராக ஏன் வாழ நினைக்கின்றீர்கள்?

இனி விவாதத்திற்கு உள்ளாக்கபட வேண்டியது.

Link to comment
Share on other sites

:rolleyes: கூட்டமைப்புக் காரர்கள் ஏதோ சீசன் ரிக்கற் எடுத்து வைச்சோ இந்தியா, கனடா, ஐரோப்பா என்று அடிக்கடி பயணித்தவை??

:):):D:D உதுகளை கதைக்க போனா நிறைய கதைக்கலாம். வைப்பகதில வைச்சதெல்லாம் போச்சு. அந்த கதை வேண்டாம் இப்போ எங்களுக்கு. மேலிடத்து ஓடர் இல்லை என்று சனங்களுக்கு வெள்ளி காட்டிவிட்டு கடைசியில் நெருப்பு மூட்டி எரித்ததாக கேள்விப்பட்டேன். வசம்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வருட நல்லூர்திருவிழா அந்த மாதிரி களை கட்டப்போகின்றது.புலம் பெயர்ந்தவர்கள் உலகம் முழுக்க இருந்து இப்போதே ஆயத்தமாகின்றார்கள்.வீதிகளில் நின்று கொடிபிடித்த பலர் கொடியேத்ததிற்கு நிற்கப்போகினமாம்.எங்கட சனத்திக்கு கூட்டம் கூடுவதென்றால் ஒரு அலாதிப் பிரியம்தான்.

விடிவெள்ளி நீங்கள் எழுதத்தொடங்கியதை தொடருங்கள். நாட்டிற்கு போய் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தங்கள் கருத்தை எழுதட்டும்.தமிழனுக்கு பிரச்சனையிருக்கு என்பதற்காக இவ்வளவு காலமும் சொன்னதெல்லாம் உண்மையென்றில்லை.

பீகாரில நடந்த கிட்னி எடுத்தபடத்தை ஊர்வலம் முழுவதும் காவிதிரிந்தவர்கள் தானே எம்மவர்கள்.

என்னங்க எல்லாரும் ஆரூடம் கூறுவதிலேயே நிக்கிறிங்க...

முதல்ல நல்லூருக்கு போய்வந்த பின்னர் எழுதுங்களேன் இத்தனை லட்சம் புலம்பெயர்ந்த மக்கள் வந்தவை என்று.

இல்லை நல்லூர் திருவிழாவுக்கு போக நீங்களா ஒழுங்கு செய்கிறீர்கள்?

இல்லை ஏதேச்சும் ரகசிய கருத்துக்கணிப்பு நடத்தினிங்களோ??

மேலே அறிவு முகர்ந்த அண்ணாச்சி ஒருவர் எழுதியவை.............. அவர் கைபடவே எழுதியவைகளில் சிலதுகள் என்னால் சிவப்பு வர்ணமிட்டு காட்டபட்டுள்ளன. அவர் மேலேயே சிலரை அறிவு குறைந்தவர்கள் என்று திட்டியுமுள்ளார். அவர் சொல்லுவது உண்மையென்றே நானும் ஒப்புகொள்கிறேன்.

காரணம் அவர் எதையும் ஒளிவு மறைவின்றி எழுதியபின்பும் ஏதும் விளங்காதவர்கள்போல். இலங்கையில் தமிழருக்கு பிரச்சனையில்லையா? என்று கேள்வி கேட்டால் அது ஒரு மூட்டாள்தனமான கேள்விதானே?

அவர் தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை என்று எங்காவது எழுதியுள்ளாரா?

எங்களுக்கு பிரச்சனை இல்லை............. எங்களுக்கு தெரிந்தவர்கள் போய்வருகிறார்கள்............... எமது சகாக்கள் அங்கிருந்து வருகிறார்கள் அவர்களில் யாருக்கும் பிரச்சனை இல்லை என்றே அவர் திரும்ப திரும்ப எழுதுகிறார்.

அதாவது சித்தார்த்தன் அமைச்சர் ஐயா டக்ளஸ் தேவனாந்தா போன்றோர் வரும்போது என்னோடு வந்து நேரடியாக பேசுகிறார்கள். நான் நேரடியாகவே அவர்களுடன் கதைக்கிறேன். அவர்களும் முற்று முழுதாக மறுப்பதற்கில்லை என்று சொன்னார்களாம்.

இந்த அண்ணாவை நேரடியாகவே அந்த மக்கள் காப்பாளர்கள் சந்திக்கின்றார்கள்.

தொடர்ந்தும் அவர் சொல்லுவது............. தற்போது களத்தில் அவர்கள்தான் நிற்கிறார்களாம். களத்தில் என்று அவர் மீண்டும் சுட்டிகாட்டியுள்ளார்.

திரும்ப திரும்ப ஒன்றை சொல்கின்றார்............. இங்கே டக்களஸ்தேவானந்தா மக்கள்சேவகன் சித்தார்த்தன் தவிர்ந்தவர்கள் பணப்பறிப்பில் ஈடுபடுகின்றார்களாம். உதாரணத்திற்கு ஜிரிவி பிரான்ஸ்லி ஏதோ றேடியோ கோயில் குளம் என்று மக்கள் சேவகர்களுடன் தொடர்பற்ற அனைத்தையும் அவர் சாடுகின்றார்.

திரும்ப திரும்ப அவர் அதைதான் சொல்கிறார் எமக்கு அங்கே பிரச்சனை இல்லை. ஆனால் தமிழருக்கு பிரச்சனை இல்லை என்று நான் சொல்லவில்லை.

ஆக இப்போது இலங்கையில் பிரச்சனையில்லாமல் வாழவும் வசதியுள்ளது

பிரச்சனையுடன் வாழவேண்டிய சூழ் நிலையும் அங்கு உள்தையே அவர் சுட்டிகாட்டகின்றார் என்று எனது அறிவுக்கு படுகின்றது.

தமிழராக ஏன் வாழ நினைக்கின்றீர்கள்?

இனி விவாதத்திற்கு உள்ளாக்கபட வேண்டியது.

உண்மை தான்

இதுக்கு பச்சை குத்தாமல் இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

வெள்ளவத்தையில் இருக்கும் எங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு என் பயணப்பொதிகளை வைத்துவிட்டு அப்படியே நேரே வெள்ளவத்தை காவல் நிலையத்துக்குச் சென்று அங்கு என்னை பதிந்துவிட்டு வீட்டுக்கு வந்தோம்.

இது வரைக்கும் எனக்கோ அல்லது என் தாய் தந்தையருக்கோ அல்லது என் உறவுக்காரருக்கோ பெரிதாய் சிங்கள பாசை தெரியாது நாம் ஆங்கிலத்தில் பேசினோம் அவர்களும் ஆங்கிலத்தில் பேசினார்கள் பதிவு சுமுகமாக முடிவுற்றது. அதன்பின் கிட்டத்தட்ட ஒரு கிழமை கொழும்பில் தங்கி நின்றேன். அந்த காலத்தில் வெளியே செல்லும் போது சோதனைச்சாவடிகளில் எங்கள் வாகனத்தை இலங்கைப்படையினர் சோதனையின் நிமித்தம் நிறுத்துவார்கள் எமது ஆவணங்களை பரிசீலித்துவிட்டு தொடர்ந்து செல்ல அனுமதிப்பார்கள். நாங்களும் அவர்களுடன் பகிடிவிட்டு பேசும்போது அவர்களும் பகிடியாகவும் மிகவும் நட்பாகவும் பேசுவார்கள். சில இடங்களில் ஆங்கிலம் தெரியாத படையினர் நிற்குமிடத்தில் கிட்டத்தட்ட ஊமைப்பாசைதான். காலி முகத்திடலை பாக்கபோகின்றோம் என்று சொல்வதற்கு கோல்பேஸ் என்று சொல்லிவிட்டு பின் பார்த்தலை கையால் காட்டவேண்டிய நிலை ஒன்றும் செய்ய முடியாது. பின் எங்கள் சாரதி விளக்கமாக அவர்களுக்குச் சொல்லுவார்.

அந்த ஒரு கிழமையில் இரவுவேளைகளில் சிலநேரம் இலங்கைப்படையினர் சோதனையின் நிமித்தம் எம் வீட்டுக்கு வருவதுண்டு ஆவணங்களையும் பார்த்துவிட்டு அறைகளையும் ஒரு தடவை பார்த்துவிட்டு நாங்கள் ஏதும் பகிடிவிட்டால் சிரித்துகொண்டு போய்விடுவார்கள். ஆனால் வெள்ளை வான் பற்றி புலம் பெயர் ஊடகங்களில் கேள்விப்பட்ட விடயங்கள் அந்த ஒரு கிழமையும் எந்த நேரமும் பயமுறுத்திய வண்ணம் இருந்தது. கடவுள் செயலாலோ என்னவோ நாம் அவர்களிடம் சிக்கவில்லை. நாம் இருந்த தெருவில் இருந்த வியாபாரி ஒருவர், வெளிநாட்டுக்காரர் சிலர் இவர்களால் கடத்தப்பட்டதாக எங்கள் உறவினர்கள் தெரிவித்தனர். இவற்றை புலனாய்வுத்துறையினர் என்ற போர்வையில் தமிழ்க்குழுவினரே செய்வதாக அங்கு பலரும் தெரிவித்தனர். இதன் பின் மாளிகாவத்தை, மோதறை, பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலக கோஸ்டியினரும் தமிழர்கள் மத்தியில் தம் கைவரிசையை காட்ட ஆரம்பித்ததாகவும் பாதிக்கப்பட்ட சிலர் சாட்சியம் கூறினர்.

பின்னர் எமது வவுனியா வீடு நோக்கிய பயணத்தை தொடங்குகின்றோம். இங்கு தான் நான் உண்மையிலே பயந்து நடுங்கிய வண்ணம் வானில் ஏறினேன். காரணம் புலம்பெயர் ஊடகங்களில் அந்தளவுக்கு கடத்தல், கப்பம் கேட்டல், கப்பம் கொடுக்க மறுத்தால் கொலை போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக அறிவித்துக்கொண்டிருந்தனர். நாம் கொழும்பிலே சந்தித்த எங்கள் உறவுக்காரர்கள் தங்கள் உறவினர்களுக்கு வவுனியாவிலே நடந்த கொடுமைகளை ஏற்கனவே கூறியிருந்தனர். இவைகள் எல்லாம் என்னை அந்தளவுக்கு வாட்டி வதைத்தன. இருந்தும் என் வீட்டுக்குப் போகவேண்டியிருந்ததால் கடவுள் மீது பழியை போட்டுவிட்டு வானில் ஏறி வவுனியா நோக்கி பயணிக்கின்றோம். கொழும்பு நகரை கடக்கும் வரை வழமையான சோதனைகள் ஆவணங்களை பார்த்தல், வானை ஒரு தடவை எட்டிப்பார்த்தல் இவற்றோடு முடிந்துவிடும். புத்தளத்தை தாண்டிச் செல்லும் போது தான் ஏன் தமிழனாக பிறந்தோம் என்று கோபப்படும் படி இலங்கைப்படையினர் நடந்துகொண்டனர். பெரும்பாலும் காவலரண்களில் சிறுவர்களே நிற்ப்பார்கள் அவர்கள் சிங்கள பாசையை தவிர எதுவும் பேசமாட்டார்கள் நாம் ஆங்கிலத்தில் பேசினால் சிலர் சிரிப்பார்கள் சிலர் ஏதோ சிங்களத்தில் சொல்வார்கள் அது எமக்கும் புரியாது. எம் வண்டிச் சாரதியே எமக்கிடையில் மொழிபெயர்ப்பாளராக செயற்படுவார்.

ஒரு மாதிரி வவுனியாவில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம். அதன் பின் நாம் வவுனியாவில் வானில் திரிவதில்லை ஆட்டோ, மோட்டர்சைக்கிள்களில் தான் அதிகமாக திரிவதுண்டு. இன்னும் பாதுகாப்பானது துவிச்சக்கரவண்டி தான். ஏனெனில் அதில் செல்லும் போது இலங்கைப்படையினர் அதிகமாக சந்தேகப்படமாட்டார்கள். பதின்நான்கு நாட்கள் வவுனியாவில் தங்கியிருந்தேன். இலங்கையில் அதி உச்ச பயங்கர நகரம் என்று வவுனியா நகரை கூறலாம். அந்தளவுக்கு கொலைகள் நிறைந்து காணப்பட்டது. யார் சுடுகின்றனர் ஏன் சுடுகின்றனர் என்ற காரணம் எல்லாம் தெரியாது அங்கு ஒரு பொடி கிடக்கின்றது இங்கு ஒரு பொடி தலையில்லாமல் கிடக்கின்றது. அதை கருணா கோஸ்டி போட்டிருக்கும், இதை ஈபிடிபி போட்டிருக்கும், இதை சீஐடி தான் போட்டதாம், அதை சீஎஸ்ஸோ தான் போட்டதாம், அது கொம்பனி தான் போட்டது என மக்கள் தங்களுக்குள் ஆரூடம் சொல்லது போல் பேசிக்கொள்வார்கள். அந்தளவுக்கு அங்கு ஒரு கொலைக்கலாச்சாரம் மலிந்து காணப்பட்டது. இதனிடையே இரவில் வீடு புகுந்து மயக்க மருந்துகள் விசிறிவிட்டு களவுகளும் சில இடங்களில் சிறுமிகள், இளம் பெண்கள் மீது பாலியல் வல்லுறவுகள் தாராளமாகவே நடைபெற்றன. இவற்றை துணை இராணுவக்குழுவிவரே செய்வதாக மக்கள் சாடுகின்றார்கள்.

மாலை நான்கு மணிக்கே வவுனியா நகரம் அடங்கிவிடும். ஆறுமணிக்கு பின் தெருவில் இராணுவத்தினரை தவிர யாரையும் காணமுடியாது. எங்கும் நிசப்தமாகவே தெருக்கள் காட்சியளிக்கும். இடையிடையே இராணுவ வண்டிகள் பேரிரைச்சலுடனும் அதிவேகமாகவும் தெருக்களில் பயணிக்கும். ஐரோப்பிய நாடுகளில் சாமம் சாமமாக தெருக்களில் திரியும் எங்களுக்கு இது பெரும் கஸ்டமாகவும், பெரும் பீதியையும் ஏற்படுத்தியது. இரவு 7/8 மணிக்குப்பின் நாம் வீட்டைவிட்டு முற்றத்துக்கே வருவதில்லை. ஏன் என்றால் இரவு வேளைகளில் இராணுவத்தினர் காணிகளின் ஊடாகவே ரோந்து செல்வார்கள். அவர்கள் கண்ணில் அந்த வேளைகளில் எதிர்ப்பட்டால் ஏன் வீண் வம்பு? எதுவாகிலும் நாம் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. எமது குடும்பம் 2002 சமாதானத்தின் பின் வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று பின் எமது குடும்ப அங்கத்தவர்கள் அரச வேலையில் இணைந்ததன் காரணமாக வவுனியாவில் வந்து குடியேறவேண்டி ஏற்பட்டது.

இதை அறிந்து அடிக்கடி பகல் இரவு என்று பாராது சாதரண படையினர், விசேட அதிரடிப்படையினர் எங்கள் வீட்டுக்கு சோதனையின் நிமித்தம் வருவதுண்டாம்.

ஒருநாள் காலை 4 மணி இருக்கும் எங்கள் வீடு நாய்க்குட்டிகள் பலமாக குரைக்கின்றன.

எங்கள் வீட்டு கதவு பலமாக தட்டப்படுகின்றது எனது தந்தையார் எழுந்து மின் விளக்குகளை ஒளிரவிட்டார். இதற்கிடையில் என் தாயார் சாத்திய யன்னல் இடைவெளிக்கால் வெளியில் நிற்பவர்களை கண்டு விட்டார் என்னிடம் வந்து தம்பி STF காரர்கள் வந்திருக்கின்றனர் கடவுச்சீட்டை எடுத்து வைத்திரு என்று கூறினார். இது எனக்கு முதல் அனுபவம் பயத்தினால் கால் கை எல்லாம் நடுங்குகின்றது என் தந்தையார் கதவை திறக்கின்றார் தலையில் கறுப்பு துண்டுகள் கட்டிய சிலர், தலைக்கவசங்கள் அணிந்த சிலர் என ஒரு பத்து பதினைந்து பேர் முற்றத்தில் நிக்கின்றனர். சற்று தெருவை பார்த்தேன். தெரு வெளிச்சத்தில் இரண்டு பவல் கவசவாகனங்களை கண்டேன். கடவுளே இது என்ன சோதனை என்று கடவுளை நேந்த படி நிற்க, துப்பாக்கியை கையில் ஒரு குச்சியை பிடிப்பது போல் பிடித்தவண்ணம் திடகாத்திரமான உடற்கட்டை கொண்ட இராணுவத்தினர் சட சட வென வீட்டுக்குள் உள்நுளைந்தனர். அறைகளுக்குச் சென்றனர் சோதனை செய்தனர் எங்கள் குடும்ப பதிவு அட்டை, அடையாள அட்டைகளை வாங்கி பார்த்தனர் நான் என் கடவுச் சீட்டை கொடுத்தேன் அதை வாங்கிப்பார்த்துவிட்டு எங்கிருந்து வந்திருக்கின்றீர்கள் என்று மலையகத்தமிழில் ஒருவர் என்னை கேட்டார் நான் வசிக்கும் நாட்டைச் சொன்னேன். கடவுச்சீட்டை புரட்டி புரட்டி பார்த்துவிட்டு ஐசி இருக்கா என்று கேட்டர் நானும் ஆம் என்று நான் வசிக்கும் தேசத்து அடையாள அட்டை கொடுக்க ஏதோ புரிந்தவர்போல் தலையை ஆட்டி ஆட்டி பார்த்துவிட்டு போகும் போது இந்த வீட்டில் யாரோ புதியவர் வந்திருக்கின்றதாக எமக்கு செய்தி வந்தது அது தான் வந்தோம் என்று சொல்லிவிட்டு இரவு வணக்கம்(Good night) கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக (God Bless You) என்று எல்லாம் சொல்லிவிட்டு சென்றனர். ஐரோப்பிய பொலீசார் பாணியில் அவர்களை என்னால் பார்க்ககூடியமாதிரி இருந்தது. என்னால் இதை நம்பமுடியாமல் இருந்தது, இலங்கை படையினர் அதுவும் வவுனியா இருக்கும் நிலையில் இவற்றை எல்லாம் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியுமா என்ன? இதில் கவனிக்க படவேண்டிய விடயம் என்ன என்றால் STF காரர்கள் நன்றாக தமிழில் பயிற்றுவிக்கப்படிருக்கின்றனர். அடுத்தது அவர்களின் புலனாய்வுப்பிரிவு அந்தளவுக்கு ஊரெங்கும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது. வவுனியாவில் எமது தமிழ் இளைஞர்கள் பலர் அரச புலனாய்வாளர்களாக வேலை செய்வதாக எனது மைத்துனரும் தம்பியும் தெரிவித்தனர். துணை இராணுவக்குழுக்கள் அல்ல சம்பளத்தின் நிமித்தம் இவர்கள் வேலை செய்கின்றார்களாம்.

தொடரும்.....

Link to comment
Share on other sites

மேலே :rolleyes:அறிவு முகர்ந்த :) அண்ணாச்சி ஒருவர் எழுதியவை.............. அவர் கைபடவே எழுதியவைகளில் சிலதுகள் என்னால் சிவப்பு வர்ணமிட்டு காட்டபட்டுள்ளன. அவர் மேலேயே சிலரை அறிவு குறைந்தவர்கள் என்று திட்டியுமுள்ளார். அவர் சொல்லுவது உண்மையென்றே நானும் ஒப்புகொள்கிறேன்.

அதாவது சித்தார்த்தன் அமைச்சர் ஐயா டக்ளஸ் தேவனாந்தா போன்றோர் வரும்போது என்னோடு வந்து நேரடியாக பேசுகிறார்கள். நான் நேரடியாகவே அவர்களுடன் கதைக்கிறேன். அவர்களும் முற்று முழுதாக மறுப்பதற்கில்லை என்று சொன்னார்களாம்.

இந்த அண்ணாவை நேரடியாகவே அந்த மக்கள் காப்பாளர்கள் சந்திக்கின்றார்கள்.

தொடர்ந்தும் அவர் சொல்லுவது............. தற்போது களத்தில் அவர்கள்தான் நிற்கிறார்களாம். களத்தில் என்று அவர் மீண்டும் சுட்டிகாட்டியுள்ளார்.

நீஙகள் குறிப்பிடுவது போல் டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுருட்டுவதாக நான் அறியவில்லை. அதுவும் சித்தார்த்தனிடம் வேண்டிய அளவிற்கு பணம் இருக்கின்றது. ஆனால் குறிப்பிட்ட இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கப்பம் வசூலிப்பதாகத் தான் நான் அறிந்தேன். இதுவிடயமாக டக்ளஸ் மற்றும் சித்தார்த்தன் போன்றோர் சுவிசிற்கு வந்த போது நேரடியாகக் கேட்டுமுள்ளேன். அவர்கள் அதனை முற்றாக மறுக்கவில்லை, தாம் நிச்சயமாக இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள். கப்பம் வசூலிப்பதை எவர் செய்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. சுவிசிலுள்ள மேலே குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர் திருப்பி என்னிடம் கதைக்கும் போது கேட்டார் இன்று தளத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்பவர்கள் அவர்கள். அவர்கள் சிலவேளை தமது செலவுகளுக்கு கப்பம் கேட்டிருக்கலாம் அது தப்பா?? எனவும் புலிகள் வரி என்ற பெயரில் தமது ஆடம்பரங்களுக்கு வசூலித்தபோது எவர் தட்டிக் கேட்டீர்கள் எனவும் கேட்டார். அப்போது நானும் திருப்பிக் கேட்டேன், புலிகள் தவறு செய்தார்களென்றால், நீங்களும் தவறு செய்யலாமென்கின்றீர்களா?? என்று. அதற்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிடும் கப்பம் வாங்குவோர் மக்களிடையே நின்று எதையாவது செய்கின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் பல ஊடகங்களும், கோவில்களும் அந்த மக்களுக்கு உதவவென்று விசேட நிகழ்ச்சிகளும், விசேட பூசைகளும் நடாத்தி வசூலித்த பணத்தை அப்படியே சுருட்டியதையும், கப்பத்தையும் எவ்வாறு நீங்கள் ஒன்றாக கருதுகீன்றீர்கள். தற்போது கூட பிரித்தானியாவில், 9 பாற்குடங்கள் எடுத்தால் 10வது பாற்குடம் இலவசமென்றும், இந்தப் பணமனைத்தும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காகவே என்று அதிரடி அறிவிப்புச் செய்து வசூல் வேட்டை நடத்துகின்றார்கள். ஆனால் இதில்க் கூட ஒன்றும் சென்று சேரப்போவதில்லை. இவற்றையெல்லாம் நீங்கள் நியாயப்படுத்தப் போகின்றீர்களா??

:)அடடா என்ன இது அகராதியிலேயே இல்லாத அறிவு முகர்ந்த என்று புதிசு புதிசா அறிவுக் கொழுந்துகள் எடுத்து விடுகினமே என்று யோசித்தால். அதற்கு அர்த்தைத்தையும் அவர்களே எடுத்து விட்டுள்ளார்கள். ஒருவரை நேரடியாக கேள்வி கேட்க இவர்கள் நினைத்தால் சம்மந்தப்பட்டவர்கள் இவர்கள் போன்ற அதிபுத்திசாலிகளை வந்து சந்திக்க வேண்டும். எனது கருத்தில் தளத்தில் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அது கூட என்னுடன் கருத்துப் பகிர்ந்த ஒருவர் பாவித்த வார்த்தை பிரயோகம். அது கூட அதிபுத்திசாலிகளுக்கு புரியவுமில்லாமல் அது களத்தில் என்று தெரிகின்றதாம். இப்ப புரியுது அறிவு முகர்ந்தவர்களின் கருத்துகள் எப்படியிருக்குமென்று. :D:D

Link to comment
Share on other sites

:rolleyes:அடடா என்ன இது அகராதியிலேயே இல்லாத அறிவு முகர்ந்த என்று புதிசு புதிசா அறிவுக் கொழுந்துகள் எடுத்து விடுகினமே என்று யோசித்தால். அதற்கு அர்த்தைத்தையும் அவர்களே எடுத்து விட்டுள்ளார்கள். ஒருவரை நேரடியாக கேள்வி கேட்க இவர்கள் நினைத்தால் சம்மந்தப்பட்டவர்கள் இவர்கள் போன்ற அதிபுத்திசாலிகளை வந்து சந்திக்க வேண்டும். எனது கருத்தில் தளத்தில் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அது கூட என்னுடன் கருத்துப் பகிர்ந்த ஒருவர் பாவித்த வார்த்தை பிரயோகம். அது கூட அதிபுத்திசாலிகளுக்கு புரியவுமில்லாமல் அது களத்தில் என்று தெரிகின்றதாம். இப்ப புரியுது அறிவு முகர்ந்தவர்களின் கருத்துகள் எப்படியிருக்குமென்று. :):)

அறிவு முகர்ந்த அதிக பிரசங்கிகள்:D:D:)

Link to comment
Share on other sites

விடிவெள்ளி, உங்கள் பயண அனுபவம் சுவாரசியமாய் இருக்கிது. பின்னூட்டல்களை பார்த்து உணர்ச்சிவசப்படாமல் முதலில் பயண அனுபவத்தை முழுவதுமாக கூறிமுடியுங்கள். அதன்பிறகு குடும்பியை பிடிச்சு இழுக்கலாம்.

கதையின் சாரம்சம்.. மேலோட்டமான செய்தி என்று பார்த்தால்.. இதுபற்றிய எனது பொதுவான பார்வை கிட்டத்தட்ட ஜஸ்டின் சொன்னது போன்றது. அதாவது, பத்துபேர் நாட்டுக்கு போகிறீனம் எண்டால்.. அதிலை ஏழு பேருக்கு ஒண்டும் நடக்க இல்லை, மூண்டுபேர் மாத்திரம் தான் அல்லது ஒருவர் மட்டும்தான் மாட்டுப்படுகிறார், துன்பியல் அனுபவத்தை பெறுகிறார் எண்டால்.. உண்மையில அது ஓர் ஆபத்தான பாதுகாப்பற்ற நிலமைதான்.

ஒரு கதையுக்கு.. பத்துபேரில ஒருவருக்கு துன்பியல் அனுபவம் கிடைச்சால் ஆயிரம்பேரில நூறுபேருக்கு துன்பியல் அனுபவம் கிடைக்கிது. இது பெரிய விசயம். ஊடகவியல் என்கின்ற அளவில பார்க்கும்போதுகூட.. ஒரு கடத்தல், ஒரு கொலை என்பது பெரிய விசயம்தான். இதனால்.. பாதுகாப்பற்ற நிலமையை எப்போதும் கவனத்தில கொள்ளவேணும்.

என்று ஓர் கடத்தல் கூட இடம்பெறவில்லை... ஓர் கொலைகூட இடம்பெறவில்லை.. ஓர் உயிர் அச்சுறுத்தல்கூட இடம்பெறவில்லை எண்டு ஓர் நிலமை ஏற்படுகிதோ அதுதான் உண்மையில பாதுகாப்பான நிலமை. யாரும் நம்பிப்போகலாம்.

மற்றது, இன்னோர் விசயத்தையும் கவனத்தில கொள்ளவேணும். இப்ப வெளிநாடுகளில கூட அரசியல், தீவிரவாதம் இவற்றுக்கு அப்பால.. வழமையான குழு வன்முறைகள், கொலைகள், எல்லாம் இருக்கிது. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாதபோது.. ஓர் வறிய நாடான சிறீ லங்காவில வழமையான குற்றவியல் சம்பவங்களை முற்றிலுமாக ஒழிப்பது என்பது முடியாத ஓர் விசயம்.

அண்மையிலகூட நான் ஓர் செய்தி பார்த்தன். அதில இருந்திச்சிது.. கோண்டாவில் எங்கையோ.. உள்ளூர் திருடர் காசுக்காக இரவிலை செய்த கொலைச்சம்பவம் பற்றி. ஏன்... புலிகளின் கட்டுபாட்டில இருந்தகாலட்திலகூட திருட்டுக்கள், கொலைகள் நடந்துகொண்டுதான் இருந்திச்சிது. யாராச்சும் வெளிநாட்டு ஆக்கள் வந்து இருக்கிறீனம், காசு மடியுக்கை நிறைய இருக்கிது எண்டு திருடர் அறிஞ்சால்.. இங்கிருந்து போனவர்களிண்ட அவர்கள் கஸ்ட காலத்துக்கு பலத்த இழப்புக்களை சந்திக்க வேண்டி வரலாம்.

அதாவது, வழமையான risks associated with traveling overseas எப்பவும் இருக்கத்தான் செய்யும். நாட்டுக்கு போகின்ற நூறுபேரில ஆகக்குறைஞ்சது பத்து பேருக்காவது ஆபத்துக்கள் வரத்தான் பார்க்கும். அவை உள்ளூர் திருடர் காரணமாக வரலாம், பாதாள கோஷ்டிகள் காரணமாக வரலாம். அவை கொடிய நோயாகக்கூட இருக்கலாம். பலர் டெங்கு காய்ச்சலால பாதிக்கப்பட்டு உயிர் பிழைச்சு வந்து இருக்கிறீனம்.

Link to comment
Share on other sites

விடிவெள்ளி, உங்கள் பயண அனுபவம் சுவாரசியமாய் இருக்கிது. பின்னூட்டல்களை பார்த்து உணர்ச்சிவசப்படாமல் முதலில் பயண அனுபவத்தை முழுவதுமாக கூறிமுடியுங்கள். அதன்பிறகு குடும்பியை பிடிச்சு இழுக்கலாம்.

கதையின் சாரம்சம்.. மேலோட்டமான செய்தி என்று பார்த்தால்.. இதுபற்றிய எனது பொதுவான பார்வை கிட்டத்தட்ட ஜஸ்டின் சொன்னது போன்றது. அதாவது, பத்துபேர் நாட்டுக்கு போகிறீனம் எண்டால்.. அதிலை ஏழு பேருக்கு ஒண்டும் நடக்க இல்லை, மூண்டுபேர் மாத்திரம் தான் அல்லது ஒருவர் மட்டும்தான் மாட்டுப்படுகிறார், துன்பியல் அனுபவத்தை பெறுகிறார் எண்டால்.. உண்மையில அது ஓர் ஆபத்தான பாதுகாப்பற்ற நிலமைதான்.

ஒரு கதையுக்கு.. பத்துபேரில ஒருவருக்கு துன்பியல் அனுபவம் கிடைச்சால் ஆயிரம்பேரில நூறுபேருக்கு துன்பியல் அனுபவம் கிடைக்கிது. இது பெரிய விசயம். ஊடகவியல் என்கின்ற அளவில பார்க்கும்போதுகூட.. ஒரு கடத்தல், ஒரு கொலை என்பது பெரிய விசயம்தான். இதனால்.. பாதுகாப்பற்ற நிலமையை எப்போதும் கவனத்தில கொள்ளவேணும்.

என்று ஓர் கடத்தல் கூட இடம்பெறவில்லை... ஓர் கொலைகூட இடம்பெறவில்லை.. ஓர் உயிர் அச்சுறுத்தல்கூட இடம்பெறவில்லை எண்டு ஓர் நிலமை ஏற்படுகிதோ அதுதான் உண்மையில பாதுகாப்பான நிலமை. யாரும் நம்பிப்போகலாம்.

மற்றது, இன்னோர் விசயத்தையும் கவனத்தில கொள்ளவேணும். இப்ப வெளிநாடுகளில கூட அரசியல், தீவிரவாதம் இவற்றுக்கு அப்பால.. வழமையான குழு வன்முறைகள், கொலைகள், எல்லாம் இருக்கிது. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாதபோது.. ஓர் வறிய நாடான சிறீ லங்காவில வழமையான குற்றவியல் சம்பவங்களை முற்றிலுமாக ஒழிப்பது என்பது முடியாத ஓர் விசயம்.

அண்மையிலகூட நான் ஓர் செய்தி பார்த்தன். அதில இருந்திச்சிது.. கோண்டாவில் எங்கையோ.. உள்ளூர் திருடர் காசுக்காக இரவிலை செய்த கொலைச்சம்பவம் பற்றி. ஏன்... புலிகளின் கட்டுபாட்டில இருந்தகாலட்திலகூட திருட்டுக்கள், கொலைகள் நடந்துகொண்டுதான் இருந்திச்சிது. யாராச்சும் வெளிநாட்டு ஆக்கள் வந்து இருக்கிறீனம், காசு மடியுக்கை நிறைய இருக்கிது எண்டு திருடர் அறிஞ்சால்.. இங்கிருந்து போனவர்களிண்ட அவர்கள் கஸ்ட காலத்துக்கு பலத்த இழப்புக்களை சந்திக்க வேண்டி வரலாம்.

அதாவது, வழமையான risks associated with traveling overseas எப்பவும் இருக்கத்தான் செய்யும். நாட்டுக்கு போகின்ற நூறுபேரில ஆகக்குறைஞ்சது பத்து பேருக்காவது ஆபத்துக்கள் வரத்தான் பார்க்கும். அவை உள்ளூர் திருடர் காரணமாக வரலாம், பாதாள கோஷ்டிகள் காரணமாக வரலாம். அவை கொடிய நோயாகக்கூட இருக்கலாம். பலர் டெங்கு காய்ச்சலால பாதிக்கப்பட்டு உயிர் பிழைச்சு வந்து இருக்கிறீனம்.

உண்மை என்னவெனில் வங்கு ரோட்டில் போகும் நாட்டை வெளிநாட்டு அன்னிய செலவாணி மூலம் நிவர்த்தி செய்ய சிங்கள அரசு பகீரத பிராயத்தனம் செய்கிறது. will :rolleyes: be back shortly

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளவத்தையில் இருக்கும் எங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு என் பயணப்பொதிகளை வைத்துவிட்டு அப்படியே நேரே வெள்ளவத்தை காவல் நிலையத்துக்குச் சென்று அங்கு என்னை பதிந்துவிட்டு வீட்டுக்கு வந்தோம்.

இது வரைக்கும் எனக்கோ அல்லது என் தாய் தந்தையருக்கோ அல்லது என் உறவுக்காரருக்கோ பெரிதாய் சிங்கள பாசை தெரியாது நாம் ஆங்கிலத்தில் பேசினோம் அவர்களும் ஆங்கிலத்தில் பேசினார்கள் பதிவு சுமுகமாக

என்ன MR. விடிவெள்ளி சிம்மன் எண்டவர் உங்களையும் சுத்திவிட்ராரோ அல்லது கூடுதல் வட்டிக்கு பணம் கொடுத்து நீங்களும் ஏமாந்து விட்டிர்களா ? :rolleyes::)

சும்மா எடுத்துவிட்டால் நாங்களும் கேட்பமேல்ல :):D :D

Link to comment
Share on other sites

என்ன MR. விடிவெள்ளி சிம்மன் எண்டவர் உங்களையும் சுத்திவிட்ராரோ அல்லது கூடுதல் வட்டிக்கு பணம் கொடுத்து நீங்களும் ஏமாந்து விட்டிர்களா ? :rolleyes::)

சும்மா எடுத்துவிட்டால் நாங்களும் கேட்பமேல்ல :):D :D

ஓ இவர் கனடா பிரஜையோ. பல தகவல்கள் தெரியும் போல உங்களுக்கு.சாம், இவர் தனது பிரயாண கட்டுரை என யாரையோ பழி வாங்குவது போல், உள்ளது. பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே காலப்பகுதியில் நானும் கொழும்புக்கு போயிருந்தேன். மேலே கட்டுரை எழுதும் நபருக்கு சிங்கள சிறப்பு படையினர் தமிழர்கள் ஒரிருவரை (அதுவும் புலிகள் செல்லடித்ததால்தான்) கொன்றதால் ஏதும் கோபம் இருக்கலாம். அதனாலோ என்னவோ பல உண்மைகள் மறைக்கபட்டுள்ளன.

வெள்ளவத்தை பொலிஸிற்கு நானும் போயிருந்தேன் அவர்கள் சிங்களத்திலேயே என்னுடன் பகிடிவிட்டார்கள் எனக்கு ஏதும் விளங்கவில்லை என்பதை என்னை கூட்டி சென்றவரிடம் சொன்னேன். அவர்கள் பின்பு ஆங்கிலத்தில் என்னுடன் பகிடிவிட்டார்கள் அதுவும் புரியவில்லை என்றேன். அவர்கள் தங்களை மன்னிக்கும்படி எனக்கு சொன்னார்கள் தமிழிலே அதிகளவு பகிடிவிட எமக்கு தெரியாது என்று சொல்லி தமது தொலைகாட்சியில் வடிவேலுவின் நகைசுவையை காண்பித்து சிரித்துகொண்டிருக்கும்படி சொன்னார்கள் தாம் எனது பதிவுகளை பதிய சிறிது நேரம் எடுக்கும் என்றும் சொன்னார்கள்.

என்னை கூட்டி சென்றவரிடம் கடத்தல்கள் பற்றி கேட்டேன்............ அது தமிழ் குழுக்களின் வேலை என்றார். அப்போது புலிகளின் நடமாட்டம் கொழும்பில் இருந்ததை என்னால் உணர முடிந்தது.

எனது வவுனியா பயணம் மிகவும் சுவாரிசியமானது அதை பின்பு எழுதுகிறேன்.

தொடரும்............

Link to comment
Share on other sites

இஞ்ச கன பேர் இன்னமும் 84,85 களில் நிற்கினம் பலஸ்தீன கவிதை பாடிக்கொண்டு.வேரோட ஒட்ட அறுத்துவிட்டான் சிங்களவன் இன்னமும் முளைக்கும் பூக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் இங்கிருந்த படி.

ஜீவா,தீர்க்கதரிசனமென்பது முன்கூட்டியே நடக்கப் போவதை சொல்வது இது தெரியாதததால் தான் பலர் இன்று இருந்த இடமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ரவல்ஸ் என்று பெயரையும் வைதுக்கொண்டு தமிழரைக் கொண்டு காசுபார்த்து..அந்தக் காசாலையே எம்மினத்தை மேலும் துன்புறுத்த நினைக்கும் நீங்கள்..2007 முதல் 2010வரை நாட்டுக்கு உல்லாசப் பயணம் போய் வந்திருக்கீறிர்கள் என்றால் உங்களுக்கு கவனிப்பே வேறு நண்பரே...இந்தக் கட்டுரைகள் கூட உல்லாசப் பயணத்துறை தந்திருக்கலாம்.....உங்களுக்கு மனச்சாட்சி இருந்தால்..இந்தக் கட்டுரையை தொடர்வதை இத்தோடு தயவுசெய்து நிறுத்துங்கள் .ஒரு 5 வருடத்தில் பயணக்கட்டுரைப் புத்தகமாகவே வெளியிடலாம்..அதன்பின் எம்மினம் அழிந்தோ..அடையாளம்..இழந்தோ போயிருக்கும்....அவ்வேளை இக்கட்டுரை பயனுடையதாக இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச கன பேர் இன்னமும் 84,85 களில் நிற்கினம் பலஸ்தீன கவிதை பாடிக்கொண்டு.வேரோட ஒட்ட அறுத்துவிட்டான் சிங்களவன் இன்னமும் முளைக்கும் பூக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் இங்கிருந்த படி.

ஜீவா,தீர்க்கதரிசனமென்பது முன்கூட்டியே நடக்கப் போவதை சொல்வது இது தெரியாதததால் தான் பலர் இன்று இருந்த இடமில்லை.

போராட்டம் என்பது காலங்கள் கொண்டு அல்லது தனிமனிதர்கள் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. மக்களின் அரசியல் சமூக தேவைப்பாடுகள்.. உரிமைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படுவது. சிங்களவன் 1970 களில் ஒட்ட நறுக்கியதாக சொல்லப்பட்ட ஜே வி பி தான் 1988 இல் முளைத்தது. இன்றும் இருக்கிறது. மக்களிடம் உரிமைகள் அற்ற உணர்வு தாம் இரண்டாம் நிலையில் வைத்து நடத்தப்படும் நோக்கப்படும் நிலை இருக்கும் வரை போராட்ட குணம் இருந்து கொண்டே இருக்கும்.

பலஸ்தீனம் 1985 இல் இருந்து இன்று வரை இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக கல்லெறிதான் அதிகம் நடத்திக் கொண்டிருக்கிறது. ரொக்கட் எறிவதையல்ல. காரணம் அந்த மக்களுக்கு போராட்டம் பற்றிய தெளிவு தேவை இருக்கிறது. தமிழர்களுக்கும் அந்தத் தேவை இருந்தாலும்.. அடிமையாக வாழ்வதில் கூட அவர்கள் திருப்திப்படக் கூடியவர்கள்.

ஒரு நாயை அடைத்து வைத்து சாப்பாடு போட்டாலும் அது வாலை ஆட்டும். திறந்து விட்டு சாப்பாடு போட்டாலும் அது வாலை ஆட்டும். காரணம் அதற்கு அண்டிப்பிழைத்துத்தான் பழக்கம். தமிழர்களும் இந்த வகையினரே..! இப்படிப்பட்ட ஒரு இனம்.. தேசம்.. விடுதலை.. அதன் தேவைகளை சரியாக உணர்ந்து போராடுமா என்பது கேள்விக்குறிதான்.

பலஸ்தீனம் 1985 இல் இருந்து இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறது.. கீழுள்ள இணைப்புக்களை பார்க்க.. உலகத்தை கொஞ்சம் சுற்றுமுற்றிப் பார்த்துவிட்டு கருத்தெழுத வேண்டும்.

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8576542.stm

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8577492.stm

Link to comment
Share on other sites

ஓ இவர் கனடா பிரஜையோ. பல தகவல்கள் தெரியும் போல உங்களுக்கு.சாம், இவர் தனது பிரயாண கட்டுரை என யாரையோ பழி வாங்குவது போல், உள்ளது. பார்ப்போம்.

என்ன நுணாவிலான்,

:D எதையாவது எப்படியாவது சாட வேண்டுமென்று சிலர் கதையளக்க, நீங்களுமா அதை நம்பி விடுகின்றீர்கள்?? கனடாவிலிருப்பவர் ஜெர்மனியிலா பயண முகவர் நிலையத்தை நடாத்துவார்?? :D:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ரவல்ஸ் என்று பெயரையும் வைதுக்கொண்டு தமிழரைக் கொண்டு காசுபார்த்து..அந்தக் காசாலையே எம்மினத்தை மேலும் துன்புறுத்த நினைக்கும் நீங்கள்..2007 முதல் 2010வரை நாட்டுக்கு உல்லாசப் பயணம் போய் வந்திருக்கீறிர்கள் என்றால் உங்களுக்கு கவனிப்பே வேறு நண்பரே...இந்தக் கட்டுரைகள் கூட உல்லாசப் பயணத்துறை தந்திருக்கலாம்.....உங்களுக்கு மனச்சாட்சி இருந்தால்..இந்தக் கட்டுரையை தொடர்வதை இத்தோடு தயவுசெய்து நிறுத்துங்கள் .ஒரு 5 வருடத்தில் பயணக்கட்டுரைப் புத்தகமாகவே வெளியிடலாம்..அதன்பின் எம்மினம் அழிந்தோ..அடையாளம்..இழந்தோ போயிருக்கும்....அவ்வேளை இக்கட்டுரை பயனுடையதாக இருக்கும்...

வாய்ப்புக் கிடைக்கும் போது தன் சொந்த ஊருக்கு போவது உல்லாசப் பயணமாகும் என்றா சொல்கின்றீர்கள்? ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது ஐநூறு பேராவது (தமிழர்கள்) புலம் பெயர் தேசங்களில் இருந்து இலங்கைக்கு போய்க்கொண்டிருக்கின்றனர் இப்போது. அது இந்த கோடை விடுமுறை நாட்களில் பன்மடங்கு அதிகரிக்கப் போகின்றது. ஒருவர் விடாமல், எல்லாரையு, துரோகி என்று முத்திரை குற்றி இப்போ சொந்த ஊருக்கு போகின்றவர்களையும் துரோகியாக்க முயல்கின்றீர்கள்

இந்த கட்டுரையை சகிக்கக் கூட முடியாத, அதற்கு சரியான பதில்களை கூட எழுத வழி தெரியாது நிறுத்தச் சொல்கின்ற உங்களைப் போன்றவர்களை நம்பித்தான் எங்கள் தமிழ் தேசிய போராட்டம் இன்று உறைநிலைக்கு வந்துள்ளது.

Link to comment
Share on other sites

வாய்ப்புக் கிடைக்கும் போது தன் சொந்த ஊருக்கு போவது உல்லாசப் பயணமாகும் என்றா சொல்கின்றீர்கள்? ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது ஐநூறு பேராவது (தமிழர்கள்) புலம் பெயர் தேசங்களில் இருந்து இலங்கைக்கு போய்க்கொண்டிருக்கின்றனர் இப்போது. அது இந்த கோடை விடுமுறை நாட்களில் பன்மடங்கு அதிகரிக்கப் போகின்றது. ஒருவர் விடாமல், எல்லாரையு, துரோகி என்று முத்திரை குற்றி இப்போ சொந்த ஊருக்கு போகின்றவர்களையும் துரோகியாக்க முயல்கின்றீர்கள்

இந்த கட்டுரையை சகிக்கக் கூட முடியாத, அதற்கு சரியான பதில்களை கூட எழுத வழி தெரியாது நிறுத்தச் சொல்கின்ற உங்களைப் போன்றவர்களை நம்பித்தான் எங்கள் தமிழ் தேசிய போராட்டம் இன்று உறைநிலைக்கு வந்துள்ளது.

சொந்த ஊருக்குப் போவதும் விடுவதும் அவரவர் தனிப்பட்ட விடயம்.இத்தனை நடந்தும் 20பது வருடங்களாக போய்க் கொண்டுதானிருகின்றார்கள்.வெளி நாட்டிலிருந்து வரும் தமிழர்களால் அரசாங்கத்திற்கு நிறைய வருமானம்.அரசு இதில் கவனமாகவேயிருக்கும். மற்றும் நாம் தலைசிறந்த தமிழரல்லவா அதுதான் ஆளாளுக்கு அம்பு விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்பது காலங்கள் கொண்டு அல்லது தனிமனிதர்கள் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. மக்களின் அரசியல் சமூக தேவைப்பாடுகள்.. உரிமைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படுவது.

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8576542.stm

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/8577492.stm

என்ன நீங்கள் அப்படி சொல்லிபோட்டிங்கள். தனிமனிதர்கள் வேண்டுமானால் தீர்மானிக்க முடியாது இருக்கலாம்.

அதுக்கா இந்த அர்ஜுன் என்பவராலும் தீர்மானிக்க முடியாது என்று எந்த ஆதாரத்தை வைத்து நீங்கள் சொல்லுங்கின்றீர்கள்.

அவர் எவ்ளவு பெரிய ஆளு......??

நீங்களேல்லாம் வெளிநாடுகளை இப்போதுதான் பார்க்கின்றீர்கள் அந்த அண்ணா வெளிநாட்டு வாழ்வை 80களிலேயே தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்கும் மண்ணுக்கும் புல்லுபுடுங்க போனவர்.

இப்போதும் தொடர்ந்தும் புடுங்குகிறார்............ உங்களுக்கு புரியாவிட்டால்.

அவர் புடுங்கும் புல்லுகள் பிழையானது என்று அர்ததம் ஆகிவிடுமா?

அண்ணா நீங்க இதையெல்லாம் செவிமடுக்காதைங்கோ............... தொடர்ந்து புடுங்குங்கோ உங்களின் சேவை தமிழ் மண்ணுக்கு என்றும் தேவை.

அப்படியே மேலேயிருந்து புடுங்காமல்.......... மண்புழுவா கீழே போனால் என்னமும் வளபடுத்தலாம். ( எங்களுக்கும் பெரிய ஆறுதலாக இருக்கும் சொன்ன கேட்க மாட்டாங்கிறாங்களே.....)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.