Jump to content

யாழ்ப்பாணத்து கூழ்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள்.

கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்:

ஒடியல் மா - 100 கிராம்

கழுவின இறால் - 100 கிராம்

கழுவின பாதி நண்டு - 8

மீன்தலை - 1

புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி

பயிற்றங்காய் - 10

புளி - ஒரு சின்ன உருண்டை

பாலாக்கொட்டை - 100 கிராம்

சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் - சிறிதளவு

மிளகு - சிறிதளவு

நற்சீரகம் - சிறிதளவு

செத்தல் மிளகாய் - சிறிதளவு

செய்முறை:

1. ஒடியல் மாவை அரிப்பன் கொண்டு நன்றாக அரித்து கழுவி வைக்கவும்.

2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல் மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து உருண்டையாக்குங்கள்.

3. அந்த உருண்டையோடு புளி சேர்த்து கரைத்து வைக்கவும்.

4. பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன் பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு வேகவிடவும்.

5. மீன்தலை, நண்டு, இறால் ஆகியவற்றையும் பானைக்குள் போடவும்.

6. இறுதியாக கரைத்த புளிக்கரைசலையும் உப்பையும் சேர்த்து தடிப்பானவுடன் இறக்கவும்.

7. சூடாக சுவையான யாழ்ப்பாணத்துக்கூழ் தயார்.

கூழ் குடிப்பதன் மூலம் சளி சம்பந்தமான பிரச்சனைகள் அண்டாது என்பது இம்மக்களுடைய கருத்தாகும்.

நன்றி யாழ் மண்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீயண்ணை - யாழ் மண் வாசனை அடிக்கின்றது.

கூழ் என்றதும் ஆடிப்பிறப்பு தான் ஞாபகம் வருகின்றது.

இத்துடன் சோமசுந்தரப்புலவரின் பாடலும் ஞாபகம் வருகின்றது.

இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாண கூழ் என்பது என் உணர்வுகளுடன் இணைந்த ஒன்று

அப்பா புற்றுநோயில் சாக 6 நாட்களின் முன்பும் குடித்த ஒரு உணவு (அதுதான் இறுதியாக வாய்மூலம் உட்கொண்ட உணவாகவும் இருந்தது)

யாழில் சுற்றம் சூழ காச்சி உண்டதும்,

நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து டுபாயில் கூழ் காச்சியதும் பலருடன் சேர்ந்து அருந்தியதும்,

கனடா வந்த பின் காச்சி சுற்றம் சூழ குடிக்க ஆளின்றி அலைந்ததும்..........

நன்றி தமிழ் சிறி

Edited by நிழலி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீயண்ணை - யாழ் மண் வாசனை அடிக்கின்றது.

கூழ் என்றதும் ஆடிப்பிறப்பு தான் ஞாபகம் வருகின்றது.

இத்துடன் சோமசுந்தரப்புலவரின் பாடலும் ஞாபகம் வருகின்றது.

இணைப்புக்கு நன்றி.

வாஷா, நேற்று இந்தப் பதிவை யாழ் மண்ணில் பார்த்தேன்.

யாழ்கள உறவுகளும் நாலு நாள் ஈஸ்டர் லீவில் வீட்டில் நிற்கும் செய்து பார்க்கட்டும் என்று இங்கு இணைத்துள்ளேன்.

ஏற்கெனவே யாழ் மண்ணுக்கு நன்றி தெரிவித்துள்ளேன்

கூழ் என்னும் போது நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஞாபகம் தான் வரும்.

இதோ அவரின் ஆடிக் கூழ் பாடல்.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆக்கம்:நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்

பச்சையரிசி இடித்துத் தெள்ளி

வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து

தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்

சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி

வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டுமா வுருண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே

குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து

அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல

மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண கூழ் என்பது என் உணர்வுகளுடன் இணைந்த ஒன்று

------

யாழில் சுற்றம் சூழ காச்சி உண்டதும்,

நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து டுபாயில் கூழ் காச்சியதும் பலருடன் சேர்ந்து அருந்தியதும்,

கனடா வந்த பின் காச்சி சுற்றம் சூழ குடிக்க ஆளின்றி அலைந்ததும்..........

நன்றி தமிழ் சிறி

உண்மை தான் நிழலி,

கூழ் குடிக்கும் போது சுற்றம் சூழ நண்பர், உறவினர்களுடன் குடிக்கும் போது தான் சுவையாக இருக்கும்.

அதனை பலரும் கூழ் பாட்டி என்று தான் சொல்வார்கள்.

இப்போது நீங்கள்...... கனடாவில் கூழ் காய்ச்சினால் சுற்றம், சூழ கூழ் குடிக்க ஆட்கள் இருக்கிறார்கள் தானே....... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூழ் மறக்க முடியாத ஒரு உணவு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=10828&st=0

http://www.yarl.com/forum/index.php?showtopic=3345

குளக்காட்டான், 2005ம், 2006ம் ஆண்டிலேயே யாழ் களத்தில் கூழ் காய்ச்சியாச்சா......

அது ஆறியிருக்கும், கூழ் சூடாக குடித்தால் தான் சுவையாக இருக்கும்.smiley-eatdrink003.gifsmiley-eatdrink059.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆக்கம்:நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்

பச்சையரிசி இடித்துத் தெள்ளி

வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து

தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்

சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி

வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டுமா வுருண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே

குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து

அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல

மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

ஸ்ரீறியண்ணை யாழ்ப்பாண மண்வாசனை என்பதை தான் அப்படி எழுதிவிட்டேன். புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கூழ் என்றால் அது யாழ்ப்பாணமக்களின் விரும்பிய உணவு.

பாடல் பதிவிற்கு நன்றி ஸ்ரீறியண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கிடக்கட்டும்

எல்லாரும் ஆடிக்கூழைப்பற்றி கதைக்கிறியளோ இல்லாட்டி ஒடியல் கூழைப்பற்றி கதைக்கிறியளோ?

ஏனெண்டால்

ஆடிக்கூழுக்கும் ஒடியல்குழுக்கும் கனக்க வித்தியாசமெண்டு நினக்கிறன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கிடக்கட்டும்

எல்லாரும் ஆடிக்கூழைப்பற்றி கதைக்கிறியளோ இல்லாட்டி ஒடியல் கூழைப்பற்றி கதைக்கிறியளோ?

ஏனெண்டால்

ஆடிக்கூழுக்கும் ஒடியல்குழுக்கும் கனக்க வித்தியாசமெண்டு நினக்கிறன் :)

என்ன வித்தியாசம் குமாரசாமி அண்ணை,

தலையிலை கல்லை தூக்கிப் போடாமல், உடன சொன்னால் நல்லது கண்டியளோ........ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வித்தியாசம் குமாரசாமி அண்ணை,

தலையிலை கல்லை தூக்கிப் போடாமல், உடன சொன்னால் நல்லது கண்டியளோ........ :)

எனக்கு தெரிந்தவரைக்கும்

ஆடிக்கூழ் இனிப்பாக இருக்கும்

ஒடியல்கூழ் காரசாரமாக இருக்கும்

சிறித்தம்பி!!!!

என்ரை ஊரிலை ஆடிக்கூளெண்டால் பச்சையரிசிமாவிலை அதுவும் அரிசிமாவை குறுணிகுறுணியாய் உருட்டி பயறு பனங்கட்டி எல்லாம் இனிப்பாய் செய்வினம்

இருந்தாலும் ஊருக்கு ஊர் வித்தியாசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தவரைக்கும்

ஆடிக்கூழ் இனிப்பாக இருக்கும்

ஒடியல்கூழ் காரசாரமாக இருக்கும்

சிறித்தம்பி!!!!

என்ரை ஊரிலை ஆடிக்கூளெண்டால் பச்சையரிசிமாவிலை அதுவும் அரிசிமாவை குறுணிகுறுணியாய் உருட்டி பயறு பனங்கட்டி எல்லாம் இனிப்பாய் செய்வினம்

இருந்தாலும் ஊருக்கு ஊர் வித்தியாசம்

குமாரசாமி அண்ணா, இதுவரை நான் கூழ்குடிச்சதே ஒரு பத்து தரம் தான்,

எல்லாம் காரசரமான கூழ் தான். அதில் இனிப்பு கூழ் என்று நீங்கள் சொல்ல வாய் ஊறூது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீறியண்ணை யாழ்ப்பாண மண்வாசனை என்பதை தான் அப்படி எழுதிவிட்டேன். புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கூழ் என்றால் அது யாழ்ப்பாணமக்களின் விரும்பிய உணவு.

பாடல் பதிவிற்கு நன்றி ஸ்ரீறியண்ணை.

வாஷா, யாழ் களத்துக்கு எந்த விதமான பிரச்சினையும் என்னால் வரக்கூடாது.

அப்படியான விஷங்களில் நான் மிக அவ தானமாக இருப்பேன். :)

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்தவரைக்கும்

ஆடிக்கூழ் இனிப்பாக இருக்கும்

ஒடியல்கூழ் காரசாரமாக இருக்கும்

சிறித்தம்பி!!!!

என்ரை ஊரிலை ஆடிக்கூளெண்டால் பச்சையரிசிமாவிலை அதுவும் அரிசிமாவை குறுணிகுறுணியாய் உருட்டி பயறு பனங்கட்டி எல்லாம் இனிப்பாய் செய்வினம்

இருந்தாலும் ஊருக்கு ஊர் வித்தியாசம்

குமாரசாமி அண்ணா, இதுவரை நான் கூழ்குடிச்சதே ஒரு பத்து தரம் தான்,

எல்லாம் காரசரமான கூழ் தான். அதில் இனிப்பு கூழ் என்று நீங்கள் சொல்ல வாய் ஊறூது.

ஆடிக்கூழ் செய்முறைக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26210&st=0

http://www.yarl.com/forum3/index.php?showtopic=41646

Edited by KULAKADDAN
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள்.

கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்:

ஒடியல் மா - 100 கிராம்

கழுவின இறால் - 100 கிராம்

கழுவின பாதி நண்டு - 8

மீன்தலை - 1

புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி

பயிற்றங்காய் - 10

புளி - ஒரு சின்ன உருண்டை

பாலாக்கொட்டை - 100 கிராம்

சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் - சிறிதளவு

மிளகு - சிறிதளவு

நற்சீரகம் - சிறிதளவு

செத்தல் மிளகாய் - சிறிதளவு

செய்முறை:

1. ஒடியல் மாவை அரிப்பன் கொண்டு நன்றாக அரித்து கழுவி வைக்கவும்.

2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல் மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில் நன்றாக அரைத்து உருண்டையாக்குங்கள்.

3. அந்த உருண்டையோடு புளி சேர்த்து கரைத்து வைக்கவும்.

4. பின்னர் நன்றாக கழுவிய அரிசியுடன் பயிற்றங்காய், பலாக்கொட்டை, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு வேகவிடவும்.

5. மீன்தலை, நண்டு, இறால் ஆகியவற்றையும் பானைக்குள் போடவும்.

6. இறுதியாக கரைத்த புளிக்கரைசலையும் உப்பையும் சேர்த்து தடிப்பானவுடன் இறக்கவும்.

7. சூடாக சுவையான யாழ்ப்பாணத்துக்கூழ் தயார்.

கூழ் குடிப்பதன் மூலம் சளி சம்பந்தமான பிரச்சனைகள் அண்டாது என்பது இம்மக்களுடைய கருத்தாகும்.

நன்றி யாழ் மண்.

.

இந்தக் கூழுக்கு ஏன் கணவாய் சேர்க்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படிக் கூழ் யாழ்ப்பாணத்தில மட்டும் தானா சமைக்கிறவை. எதற்கு யாழ்ப்பாணக் கூழ் என்றீனம். :D

இது மச்சக் கூழ். எப்படி சைவக் கூழ் சமைக்கிறது...?????! :D

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்துக் கூழ் இணைப்பிற்கு மிகவும் நன்றி சிறி அண்ணா!

எனது அப்பாவுக்கும், அப்பப்பாவுக்கும் மிகவும் பிடித்த உணவு கூழ் தான் :D . நிழலி உங்கள் அப்பாவுக்கும் பிடித்த உணவா? :D

வீட்டில் உறவுகள் ஒன்றாகா சேரும் போது அப்பா தானே இதனை செய்து பரிமாறுவார்... எல்லா சத்தும் நிறைந்த இந்த உணவுக்கு ஈடு எதுவும் இல்லை என்று சொன்னது கூட ஞாபகம் வருகிறது...

கூழை வடலியில் பிழா மாதிரி ஒன்று செய்து (சரியாகப் பெயர் ஞாபகம் இல்லை) அதில் தருவார்... அதன் ருசியே தனி... எனது அப்பப்பா சொல்லுவார், கூழ் நல்ல பதமா செய்து இருக்க என்று அறிய, அந்தக் கூழைக் குடிக்கும் போது, குடிப்பவரின் மூக்கிலிருந்து நீர் சிந்துமாம்...

அது ஒரு கனாக் காலம்... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் முந்தி ஒருக்கால் கூழ் காய்ச்சி இருக்கிறமாக்கும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=26267

கூழை பற்றிய செய்முறையே..... நாவூற வாயூற பகுதியில் கனக்க இருக்கும் போலை இருக்குது.

ஒவ்வொரு கூழும் ஒரு விதம். இந்த கோடை விடுமுறைக்கு எல்லாத்தையும் ஒரு கை பார்க்க வேண்டியது தான்.smiley-eatdrink026.gif

Link to comment
Share on other sites

ஏன் இப்படிக் கூழ் யாழ்ப்பாணத்தில மட்டும் தானா சமைக்கிறவை. எதற்கு யாழ்ப்பாணக் கூழ் என்றீனம். :lol:

இது மச்சக் கூழ். எப்படி சைவக் கூழ் சமைக்கிறது...?????! :rolleyes:

இந்த செய்முறை 2005 இல் பழைய யாழ் களத்திலை எழுதினது.

ஒடியற் கூழ் செய்முறை (சைவ கூழ்)

image29bw.jpg

தேவையான பொருட்கள்

ஒடியல் மா 250 கிராம்

150 கிராம் புழுங்கல் அரிசி

பலாக்காய் சுளை+பலா கொட்டை 250 கிராம்

பயற்றங்காய் 250 கிராம்

மரவள்ளி கிழங்கு 250 கிராம்

முருக்கம் காய் பிஞ்சு 2

முருக்கம் இலை, +முசுட்டை இலை,+ முல்லை இலை 250 கிராம்

மாங்காய் பெரிசா 1

செத்தல் மிளகாய் 250 கிராம் இடித்து தூள் ஆக்கியது

உப்பு அளவுக்கு

செய் முறை

புது ஒடியல் மா என்றால் கூழ் வைக்க 2 மணி நேரம் ஊற வைத்து நீரை 2 அல்லது 3 முறை மாற்றவும்

பழைய மா என்றால் 4 மணி நெரம் முதல் வைத்து பல முறை நீரை மாற்றவும்

இது மாவின் காறல் தன்மை போக உதவும்

பானையில் அரிசியை கழுவி அவிய வைக்கவும். அரிசி பதி அவிந்து வரும் போது எல்ல மரக்கறிகளையும் போட்டு அவிய விடவும்

மரக்கறிகள் அவிந்ததும் செத்தல் மிளகாய் தூள், உப்பு என்பவற்றை உங்கள் சுவை அளவுக்கு சேர்க்கவும்

நன்கு கலக்கி சிறிது நேரத்தின் பின் ஊற வைத்த ஒடியல் மாவை நீர் விட்டு கரைத்து சேர்க்கவும்

நன்கு கலக்கி கொதித்ததும் இறக்கவும்

கூழை அளவான பாத்திரத்தில ஊத்தி பலா இலையில் பனுவல் செய்து குடியுங்க :-))

http://www.yarl.com/forum/index.php?&showtopic=3345&st=20

Edited by KULAKADDAN
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கூழுக்கு ஏன் கணவாய் சேர்க்கவில்லை?

கூழுக்கு சின்ன கணவாயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டால்..... கடிபடும் போது நல்ல சுவையாக இருக்கும் ரதி.

ஆனால் இங்கு கூழ் காய்ச்சின சட்டி, சிறியதாக இருந்ததால் கணவாயை சேர்க்காமல் விட்டுள்ளார்கள். ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படிக் கூழ் யாழ்ப்பாணத்தில மட்டும் தானா சமைக்கிறவை. எதற்கு யாழ்ப்பாணக் கூழ் என்றீனம். ^_^

------

இது ஒடியல் மாவில் செய்வதால், பனைகள் அதிகம் உள்ள இடமான யாழ்ப்பாண மக்களால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கலாம்.

யாழ் மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட சில பிரயோசனமான பொருட்கள் ....... துலா, இடியப்ப உரல் போன்றவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக் கூழ் இணைப்பிற்கு மிகவும் நன்றி சிறி அண்ணா!

எனது அப்பாவுக்கும், அப்பப்பாவுக்கும் மிகவும் பிடித்த உணவு கூழ் தான் ^_^ . நிழலி உங்கள் அப்பாவுக்கும் பிடித்த உணவா? :)

வீட்டில் உறவுகள் ஒன்றாகா சேரும் போது அப்பா தானே இதனை செய்து பரிமாறுவார்... எல்லா சத்தும் நிறைந்த இந்த உணவுக்கு ஈடு எதுவும் இல்லை என்று சொன்னது கூட ஞாபகம் வருகிறது...

கூழை வடலியில் பிழா மாதிரி ஒன்று செய்து (சரியாகப் பெயர் ஞாபகம் இல்லை) அதில் தருவார்... அதன் ருசியே தனி... எனது அப்பப்பா சொல்லுவார், கூழ் நல்ல பதமா செய்து இருக்க என்று அறிய, அந்தக் கூழைக் குடிக்கும் போது, குடிப்பவரின் மூக்கிலிருந்து நீர் சிந்துமாம்...

அது ஒரு கனாக் காலம்... :(

image29bw.jpg

-----

கூழை அளவான பாத்திரத்தில ஊத்தி பலா இலையில் பனுவல் செய்து குடியுங்க :-))

http://www.yarl.com/forum/index.php?&showtopic=3345&st=20

குட்டி, பலா இலையில் கூழ் குடிப்பது..... கூழுக்கு தனிச்சுவையை தரும் என்பது முற்றிலும் உண்மை.

நீங்கள் குறிப்பிடும் பலா இலையில் செய்த பிளாவை குளக்காட்டான் தனது படத்தில் காட்டியுள்ளார், அதனை பனுவல் என்று குறிப்பிடுகின்றார்.

Link to comment
Share on other sites

குட்டி, பலா இலையில் கூழ் குடிப்பது..... கூழுக்கு தனிச்சுவையை தரும் என்பது முற்றிலும் உண்மை.

நீங்கள் குறிப்பிடும் பலா இலையில் செய்த பிளாவை குளக்காட்டான் தனது படத்தில் காட்டியுள்ளார், அதனை பனுவல் என்று குறிப்பிடுகின்றார்.

இல்லை தமிழ் சிறி, அவர் பனை ஓலை பிழாவை குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். கள்ளுத்தவறணைக்களில் இருப்பதை போன்றது. நான் படத்தில் காட்டிய பலா இலை பனுவல்?? ஐ குறிப்பிடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கூழ் என்டால் காரசாராமாய் இருக்க வேனும்.கண்னாலும் மூக்காலும் தணன்னி வரவேனும். :wub: சிலர் தேங்கய் சொட்டு சேர்த்து குடிப்பினம்.எனக்கு அது சரிப்பட்டு வராது.அது சரி சிறி ஏன் பாதி நன்டு :rolleyes: சாப்டாட்டு விசயத்தில கஞ்சத்தனம் கூடாது :lol:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.