Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கு சிறி ..அந்த மாதிரி ....முஸ்பாத்தியாக இருக்கு...... :blink:

  • Replies 225
  • Views 21.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம் என்று வந்தார் வல்வை வயாகரா.....

சிவ பூசைக்குள் கரடி வந்த மாதிரி இருக்கே..... என்று யோசித்த விசைக் கலைஞனுக்கு.......

இனியும், இங்கை நின்றால்.... டங்குவார் அறுந்து போகும் என்று புத்தியாக யோசித்து,

திண்ணையில் இருந்து தப்பி ஓட...... :blink::lol::D:D

தொடருங்கள் சிறி அண்ணா

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அந்தாள் ஏற்கனவே பல பிரச்சனைகளில் மாட்டுப்பட்டு இருக்குது.அதுக்குள்ள இது வேறையா :blink:

  • கருத்துக்கள உறவுகள்

ச்சே.. நம்மளைக் காலை வாரிவிட்டதில எத்தினை பேருக்கு சந்தோசம்? போறபோக்கைப் பார்த்தால் கட்டுப்பணமும் தேறாது போல..! :blink::lol:

  • கருத்துக்கள உறவுகள்
:blink::lol::D:D:D:(
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் விடுமுறை லண்டன் ஹீத்துரு விமான நிலையம் பிரயாணிகளால் நிரம்பி வழிந்தது...விமான நிலையத்தில் இருந்து வேறு நாட்டிற்கு பிரயாணம் செய்ய வந்தவர்களும்,அவர்களை வழியனுப்ப வந்தவர்களும்,வேறு நாட்டில் இருந்து வந்தவர்களும் ஆக விமான நிலையம் ஒரு விழாக் கோலம் பூண்டிருந்தது.

அதிகாலை நேரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானத்தில் இருந்து தோலில் தொங்கிய ஒர் சிறிய பையும்,ஸ்டைலாக தலையின் மேல் தொங்கிய கூலிங் கிளாசுடன் நண்பர் விமானத்தை விட்டு இறங்கினார்...அவர் நடந்து வரும் அழகைப் பார்த்து ஒரு அழகிய இந்தியப் பெண் அவரிடம் சென்று ஆங்கிலத்தில் யூ லுக் ஹான்சம் அன்ட் கீயூட் அவர் தாங்யூ பின் அப் பெண் அவரிடம் கேட்டார் எங்கிருந்து வருகிறீர்கள் அவர் இடத்தை சொன்னார்,என்ன வேலை செய்கிறீர்கள் என கேட்க தான் ஒரு நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பதாக சொன்னார்,உங்களுக்கு மணமாகி விட்டதா,கேள் பிரண்ட் இருக்கா என கேட்க இல்லை எனச் சொன்னார்...நாம் நண்பர்களாக இருப்போமா என கேட்க ஆம் எனச் சொல்லி தொலைபாடல் இலக்கங்களை பறிமாறிக் கொண்டனர்.

அப்படியே அவர்கள் இருவரும் கதைத்துக் கொண்டு இருக்கையில் கொபி[coffee]குடிப்போமா என அப் பெண் கேட்க ஆம் என நண்பர் தலையாட்டிக் கொண்டு இருக்கையில் என்னங்க லக்கேஜ்யை எடுக்காமல் எங்களையும் விட்டிட்டு வந்து எவளோட கதைத்துக் கொண்டு இருக்கிறீங்கள் என கீச்சுக் குரலில் ஒரு குரல் கேட்க டாட் என்ர பொம்மையை காணலேல்ல என என்னொரு குரல் கேட்க கதைத்துக் கொண்டு இருந்த அப் பெண் அட சீ என்ர மாதிரி அவரைப் பார்க்க மகளை தூக்கிய படி சீ அருமையான சான்சை[சந்தர்ப்பத்தை]மிஸ் பண்ணிட்டனே என கவலைப் பட்டபடி அப் பெண்ணையே திரும்பிப் பார்த்த படி,மனைவியின் கத்தல்களை கேட்டபடி விமான நிலையத்தை விட்டு நொந்து நூலாகி அறுந்து போன வாராக வெளியே வந்தார் பெண்களின் உற்ற தோழன் நமது டங்குவார் :)

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :)
  • கருத்துக்கள உறவுகள்

ரதியக்கா ஜாமாசுடீங்க.................தொடர்பாடல்..இலக்கங்கள் என் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி பின்னீட்டிங்க. :):lol:

ரதி சூப்பரா எழுதி இருக்கிறிர்கள்... :):lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு... இந்த திரியை பார்க்கும் போது நிறைய பேருக்கு உங்களில் அன்பு பாசம் எண்டு புரியுது. :lol: ஒருத்தன்ரை காலை வாருறதுக்கு இவ்வளவு போட்டியா? :)

உங்களோட கூட்டு வைச்சால், மாறி எங்களுக்கும் இருட்டடி விழும் போல இருக்கு. அதனால கொஞ்ச நாளைக்கு இளையோர் மன்ற பக்கம் வராதைங்கோ :(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அசத்திடிங்க :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

இ.கலைஞன் எங்களை கடிச்ச மாதிரி ஒருத்தராலும் இ.கலைஞனை கடிக்க முயலவில்லை அந்த ஆதங்கத்தில் தான் எழுதினேன்...யாராவது நல்லா கடிச்சால் நான் என்ட மனசு ஆறும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு... இந்த திரியை பார்க்கும் போது நிறைய பேருக்கு உங்களில் அன்பு பாசம் எண்டு புரியுது. :) ஒருத்தன்ரை காலை வாருறதுக்கு இவ்வளவு போட்டியா? :lol:

உங்களோட கூட்டு வைச்சால், மாறி எங்களுக்கும் இருட்டடி விழும் போல இருக்கு. அதனால கொஞ்ச நாளைக்கு இளையோர் மன்ற பக்கம் வராதைங்கோ ^_^:D

அடப்பாவிகளா..! ஆபத்திலதான் நல்ல் நண்பர்களைத் தெரியும் எண்டுவினம்..! நீங்கள் இப்பிடி இருக்கிறீங்களே..!! :D

சரி பரவயில்லை..! இங்க எல்லாத்தையும் ரெக்கி எடுத்துக்கொண்டுதானே இருக்கிறன்..! :wub: நானே "அடுத்த கட்டத்தில" பார்த்துக்கொள்ளுறன்..! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரி பரவயில்லை..! இங்க எல்லாத்தையும் ரெக்கி எடுத்துக்கொண்டுதானே இருக்கிறன்..! :lol: நானே "அடுத்த கட்டத்தில" பார்த்துக்கொள்ளுறன்..! :lol::)

டங்குவார் கழன்று தொங்கிக்கிட்டே இருக்கிறது.. தெரியாம.. ரெக்கி எடுக்கிராராமெல்லே... ரெக்கி. அதுவும் அடுத்த கட்டத்துக்காமில்ல..! முடியல்லடா சாமி. :D:lol:

http://www.youtube.com/watch?v=JHm5ijei20E

பாவம் இந்த.. பாஸ்...! விட்டிடுங்க..! :wub:^_^

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
:lol::):lol:

ஈஸ்டர் விடுமுறை லண்டன் ஹீத்துரு விமான நிலையம் பிரயாணிகளால் நிரம்பி வழிந்தது...விமான நிலையத்தில் இருந்து வேறு நாட்டிற்கு பிரயாணம் செய்ய வந்தவர்களும்,அவர்களை வழியனுப்ப வந்தவர்களும்,வேறு நாட்டில் இருந்து வந்தவர்களும் ஆக விமான நிலையம் ஒரு விழாக் கோலம் பூண்டிருந்தது.

அதிகாலை நேரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானத்தில் இருந்து தோலில் தொங்கிய ஒர் சிறிய பையும்,ஸ்டைலாக தலையின் மேல் தொங்கிய கூலிங் கிளாசுடன் நண்பர் விமானத்தை விட்டு இறங்கினார்...அவர் நடந்து வரும் அழகைப் பார்த்து ஒரு அழகிய இந்தியப் பெண் அவரிடம் சென்று ஆங்கிலத்தில் யூ லுக் ஹான்சம் அன்ட் கீயூட் அவர் தாங்யூ பின் அப் பெண் அவரிடம் கேட்டார் எங்கிருந்து வருகிறீர்கள் அவர் இடத்தை சொன்னார்,என்ன வேலை செய்கிறீர்கள் என கேட்க தான் ஒரு நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பதாக சொன்னார்,உங்களுக்கு மணமாகி விட்டதா,கேள் பிரண்ட் இருக்கா என கேட்க இல்லை எனச் சொன்னார்...நாம் நண்பர்களாக இருப்போமா என கேட்க ஆம் எனச் சொல்லி தொலைபாடல் இலக்கங்களை பறிமாறிக் கொண்டனர்.

அப்படியே அவர்கள் இருவரும் கதைத்துக் கொண்டு இருக்கையில் கொபி[coffee]குடிப்போமா என அப் பெண் கேட்க ஆம் என நண்பர் தலையாட்டிக் கொண்டு இருக்கையில் என்னங்க லக்கேஜ்யை எடுக்காமல் எங்களையும் விட்டிட்டு வந்து எவளோட கதைத்துக் கொண்டு இருக்கிறீங்கள் என கீச்சுக் குரலில் ஒரு குரல் கேட்க டாட் என்ர பொம்மையை காணலேல்ல என என்னொரு குரல் கேட்க கதைத்துக் கொண்டு இருந்த அப் பெண் அட சீ என்ர மாதிரி அவரைப் பார்க்க மகளை தூக்கிய படி சீ அருமையான சான்சை[சந்தர்ப்பத்தை]மிஸ் பண்ணிட்டனே என கவலைப் பட்டபடி அப் பெண்ணையே திரும்பிப் பார்த்த படி,மனைவியின் கத்தல்களை கேட்டபடி விமான நிலையத்தை விட்டு நொந்து நூலாகி அறுந்து போன வாராக வெளியே வந்தார் பெண்களின் உற்ற தோழன் நமது டங்குவார் :lol:

இதை வாசித்த பின், நல்ல மட்டன் புரியாணியை ஒரே வெட்டாக வெட்டிய திருப்தி வருகுது....

நண்பா இசை ,

என்னையா உம மேல பல பேரு கொலவெறியோட இருப்ப்பங்கபோல இருக்கே,

மக்களே நண்பன் பகிடி பண்ணா சந்தோசமா ஏத்துக்காம இப்படி போட்டு பொரட்டி எடுக்கிகளே,

என்னசெயுறது நாமளும் தான் கொஞ்சம் அதிகமா பண்ணிட்டோமா இசை,

என்ன செய்யுறது நல்ல எண்ணைய தடவிகிடும், வகையா விழும் போல இருக்கே :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நண்பா இசை ,

என்னையா உம மேல பல பேரு கொலவெறியோட இருப்ப்பங்கபோல இருக்கே,

மக்களே நண்பன் பகிடி பண்ணா சந்தோசமா ஏத்துக்காம இப்படி போட்டு பொரட்டி எடுக்கிகளே,

என்னசெயுறது நாமளும் தான் கொஞ்சம் அதிகமா பண்ணிட்டோமா இசை,

என்ன செய்யுறது நல்ல எண்ணைய தடவிகிடும், வகையா விழும் போல இருக்கே :D:D

ராமதேவா.. இதுக்கெல்லாம் அசந்திடுவோமா? இப்புடுச் சூடு.. :lol:

http://www.youtube.com/watch?v=Looe44Refgo

:lol:

சித்திரை விடுமுறைக்கு குடும்பத்துடன் லண்டன் வந்த ' டங்கு' தனது நண்பன் ஒருவரின் குடும்பத்துடன் தங்கினார். இளையராஜாவின் இசையில் மயங்கும் பசை, அன்று வழக்கத்திற்கு மாறாக ARR இன் இசையில் "டங்கு டக்கு...டங்கு... டக்கு... டங்கு டக்கு... டங்கு டக்கு...." அந்தப் பாடலை முணு முணுத்த வண்ணம் டப்பாங் குத்து போட்டபடியே துவாயுடன் பாத்ரூம் பக்கம் போனார்...

"அங்க என்ன சத்தம்?" என்ற மனைவியின் மெதுமையான குரலில் வந்த கேள்விக்கு, " அது ஒண்ணுமில்லிங்... சும்மா ஒரு பாட்டுக்கு முன்னால் வாற மீசிக்ங்கோ..." என்று பம்மினார். "சரி சரி கெதியா போட்டு வந்தால் தானே மற்றாக்களும் ரெடியாக ஏலும்" என்று சொல்ல, ஐந்து நிமிசத்தில வாறன் என்றபடி உள்ளே நுழைந்தார். "ஐஞ்சு நிமிசமோ? அரைமனதியாலம் என்றாலும் பறவாய் இல்லையடா மச்சான் இண்டைக்காவது ஒழுங்கா குளியடா பிளீஸ்" என்ற நண்பனின் பதிலை கேட்டு சிரித்தவாறே குளிக்கத் தொடங்கினார்.

மியூசிக் தானே போட்டம், இப்ப மனுசிக்குக் கேட்காது தானே என்றபடி மீதிப் பாடலையும் மெதுவாகப் பாடத் தொடங்கினார்...

'டங்கு டக்கு... டங்கு டக்கு.... டங்கு டக்கு... டங்கு டக்கு...

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு...

சிகரத்தை அடைந்தால் figure-றினைப் பாரு...

என்பேரு டங்குயப்பா

எடுபட்ட நடையப்பா

என்னோட உள்ளதெல்லாம்

உவதிங்க படையப்பா

நெஞ்சில் ஆறு படையப்பா

பினால நூறு figure-ரப்பா

பிரச்னை என்று வரும் போது

மனைவியிடம் சரண்டரப்பா

(சரண்டரப்பா சரண்டரப்பா)

பாசமுள்ள மனுசனப்பா

நான் மீசை வளிச்ச குழந்தையப்பா

என்றும் நல்ல தம்பி நானப்பா

நன்றி உள்ள ஆளப்பா

காலாட்டி வளத்தது

கனடா நாட்டு மண்ணப்பா' :D:lol:

ஒரு மாதிரி குளியலறையை விட்டு வெளியே வந்தவர் வாய் சும்மா இருக்க ஏலாமல், " நான் லண்டனுக்கு வந்து இரண்டு நாள் தான் ஆகுது, ஆனால் சரியாக மெலிஞ்சு போனேன்" என்றார். அது நண்பனின் காதில் கேட்கவே, "மச்சான் நீ லண்டனுக்கு வந்து இரண்டு நாளில மேலிஞ்சது மாதிரி தெரிய இல்லையடா, இப்ப அரை மணத்தியாலத்துக்குள்ளே மேலிஞ்சது மாதிரித் தான் இருக்கு" என்றதும் மெல்ல நல நழுவி மனைவி எடுத்து வைத்து இருந்த உடைகளை போட ஆரம்பித்தார். ஏறக் குறைய இரண்டு மணிநேராமாகி விட்டது, டங்கு கண்ணாடியுடன் ஒட்டிக் கொள்ளாத குறையாக அறையை விட்டு வெளியே வராமல் இருந்தவரை நேரத்துக்கு வரும் படி மனைவியும், மகளும் நண்பனுமாக அழைத்தார்கள். எங்கு போனாலும், ஒரு மாப்பிள்ளை ரேஞ்சில் தன்னை அலங்கரிப்பது அவரின் ஸ்டைல். (யப்பா..... தாங்க முடியலடா சாமி!) டங்குவின் ஸ்டைலைக் கண்ட நண்பன் டங்குவின் மகளிடம், "அங்க நிறைய பேர் நிப்பினம் அப்பாட கையைப் பிடிச்ச படியே தான் நிக்க வேணும்" என்று சொன்னதும், ஆ.. கா... மகளுக்கு ஐடியா குடுக்கிறானே என்று உள்ளுக்குள்ளே நொந்தது கொண்டவர் வெளியே காட்டிக் கொள்ளாமல், "அங்க நிறைய அங்கிள் மாரோட அப்பா பிஸியாக இருப்பேன் நீங்கள் அம்மாவோட தான் நிக்கோணும்" என்றதும், அவரது மனைவியார் ஒரு புன்சிரிப்புடன் சரி எனத் தலையாடினார்.

எல்லோரும் மாலை 5 .30 மணியளவில் கல்லூரி பழைய மாணவர் ஒன்றுகூடல் விழாவுக்கு வந்து இருந்தார்கள். மண்டப நுழைவாயிலில் நுழையும் போது சேரனின் 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே....' பாடல் ஒலிக்கிறது. கண்களுக்குக் குளிர்மையாக வானவில்லின் வர்ணங்களில் சாறி என்ன... சுடிதார் என்ன... ஸ்...ஸ்....ஸ்....எங்கு பார்த்தாலும் பிகருகள்... 'ஓ... வந்தது பெண்ணா.... வானவில் தானா...???' என்றபடி கண்ணகள் கட்டுப்பாடு இன்றி அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தை கஷ்டப் பட்டு கொன்றோலில் கொண்டு வந்தார். நண்பர்களைப் பார்த்த சந்தோசத்தில் கட்டித் தழுவி சுகம் விசாரித்தவர், பிகருகளைப் பார்த்து கைகுலுக்கி கண்ணடித்து வணக்கம் தெரிவித்துக் கொண்டார். 'பசுமை நிறைந்தத நினைவுகளே... பாடித் திரிந்த பறவைகளே...' பாடல் ஒலிக்கும் போது டங்குவின் கல்லூரியின் பக்கத்துப் பாடசாலையில் படித்த பெண்களை இங்கே காண்கிறார்... ஒரு கணம் அவர்களை வெள்ளை சீருடையிலும் அந்த கோடு கோடு போட்ட கழுத்துப் பட்டியிலும் கன்பனை செய்தது பார்த்த டங்குவின் நண்பன் ஒருவரின் மகன் ஓடிவந்து அவரின் மகளை விசாரித்தான். குனிந்து சிறுவனின் காதில் அவர்கள் இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து figures இருக்கும் இடத்திற்குச் செல்கிறார். தனியாக அங்கே போனதால் அவருக்கு ராஜ மரியாதை கிடைக்கும் என்று எண்ணினார்... கொஞ்ச நேரம் இருந்து அங்குள்ள பெண்களோடும், அவர்கள் சகோதரிகளோடும் அரட்டை அடித்த பின்பு சாப்பாடுப் பக்கம்... கேட்கவா வேணும்??? :lol:

புல் கட்டு கட்டிவிட்டு, திரும்பியவருக்கு இன்ப அதிரிச்சி... ஒரு கோனறில் ஒரு குருப் பெண்கள் (10 -15 ) பாடுக்குப் பாட்டு நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருந்தார்கள். விடுவாரா டங்கு? இளையராஜாவின் பரம விசிரியாச்சே?? அதிலும் ஒரு முக்கிய அறிவித்தலை அறிவித்திருந்தார்கள், அந்த பாட்டுக்குப் பாடு நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர் ஒரு அழகிய பெண்ணின் கையால் பரிசு பெறுவார்கள் என்று... இதுக்குப் பிறகும் டங்கு விடுவாரா?????

தெரிஞ்ச பாட்டு தெரியாத பாட்டு என்று சும்மா பாட்டுகள் என்றால்... சொல்லி வேலை இல்லை... எதிர் பார்த்த படி அவருக்கே பரிசும் வழங்க முடிவெடுத்து இருந்தார்கள். பரிசளிக்க வரும் அந்த அழகிய பெண் எப்படி இருப்பாரோ என்று கற்பனை கடலில் மூழ்கிப் பொய் இருந்தார்... இந்தக் கூட்டத்திலையே அழகான பெண் என்று சொல்லுகிறார்கள்.... பரிசு தரும் போது கைகளை பிடித்து நன்றி சொல்லவேண்டும், அப்படியே கன்னத்தில் சின்னதாக ஒரு முத்தமும் கொடுக்க வேண்டும் என்ற ஒரு முடிவோடு பரிசு வாங்க ரெடியானார். இதோ அந்த அழகான பெண்மணி என்று சொல்லும் போது, தன்னை அறியாமலே டங்கு தனது இரு கண்களையும் இறுக்கி மூடிக் கொண்டார். 'வெல் டான்' என்று சொல்லி பரிசை கொடுக்கும் போது கண்களை மூடியவாறே அந்தப் பெண்ணின் கைகளையும் லேசாகப் பற்றிக் கொண்டார். அதோட நிப்பாட்டாமல், கன்னத்திலும் சிறிதாக ஒரு முத்தத்தையும் கொடுத்த போது "என்ன இது?" என்று அந்தப் பெண்ணின் குரல் கேட்டு கண்ணை திறந்தவருக்கு எள்ளும் கொள்ளும் முகத்தில் கலன் கலனாக வழிந்தது... ^_^:D :D வீட்ட வாடி :D :D என்ற தொணியில் டங்குவின் மனைவி கண்ணால் நக்கலாகச் சிரித்ததை டங்கு ஒருவாறு அசடு வழிய சுதாகரித்துக் கொண்டார்!!!

  • கருத்துக்கள உறவுகள்

வைச்சான்யா செம ஆப்பு. காட்சியும் பாடலும் அசத்தல்..!

இந்தப் பாடல் இப்படி அமைஞ்சிருந்தா இன்னும் சூப்பர்..

'டங்கு டக்கு... டங்கு டக்கு.... டங்கு டக்கு... டங்கு டக்கு...

சிங்க நடை போட்டு சிகரத்தில் (யாழில நில்லு) ஏறு...

சிகரத்தை அடைந்தால் figure-றினைப் பாரு...

என் பேரு டங்குயப்பா

எடுபட்ட நடையப்பா

நான் ஒரு வெறும் டப்பா

என்னோட உள்ளதெல்லாம்

உதவாத படையப்பா

நெஞ்சில் ஆறு முடியப்பா

பின்னால நூறு figure-ரப்பா

பிரச்னை என்று வரும் போது

மனைவியிடம் சரண்டரப்பா

(சரண்டரப்பா சரண்டரப்பா)

பாசமுள்ள மனுசனப்பா

நான் மீசை வழிச்ச குழந்தையப்பா

என்றும் நல்ல தம்பி நானப்பா

நன்றி உள்ள ஆளப்பா

காலாட்டி வளத்தது

கனடா நாட்டு மண்ணப்பா'

டங்கு எனியுமா நாங்க ரெக்கி எடுக்கிறம் அது இதெண்டு கொண்டு பிழைப்பை ஓட்டனும். யோசிச்சுப் பாருங்க..! குட்டி பையங்க கூட உங்கள ஒரு வாங்க வாங்கிறாங்க இல்ல.... :lol::D

படைப்புக்கு நன்றி குட்டி. படைக்கத் தூண்டிய இசைக்கும் நன்றி. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் இப்படி போட்டுத்தாக்குகிறார்களே...

இசை ஒரு நல்ல பையன் என்ற மாயை மெல்ல மெல்ல விலகுகிறதே..

  • கருத்துக்கள உறவுகள்

என்ன டங்கு எல்லோரும் இப்படி போட்டுத் தாக்குறாங்கள் :lol::lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.