Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள்

Featured Replies

மனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது.

குற்றங்கள் இங்கு மேல் இருந்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றங்களை மூடிமறைக்க, பாசிச சட்டங்களை மக்கள் மேல் ஏவுகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை மறுதலிக்கின்றது. தொடர்ந்து குற்றத்தை மூடிமறைக்க படுகொலைகளைச் செய்கின்றது, கடத்துகின்றது.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலைக் குற்றத்தை, யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைக்கான ஆசிரியர் சங்க அறிக்கை முன்பு உறுதி செய்தது.

இப்படி இறுதியாக இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அனைவரினதும் கதி இதுதான். பேரினவாதம் இந்தியாவின் பக்கத் துணையுடன், அவர்களின் மேற்பார்வையில், வக்கிரமான வழிகாட்டலில் இதைத்தான் செய்து முடித்தது. சமாதானம் பேசிய வேஷதாரிகளின் பக்கத் துணையுடன் தான், இப்படுகொலைகள் அரங்கேறியது. அதாவது சரணடைய வைத்து கொல்லப்பட்டனர். இப்படி யுத்தமும், சமாதானமும், சரணடைவும், தமிழ்மக்களுக்கு தந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. இன அழிப்பாக, இனக் களையெடுப்பாக அரங்கேற்றிய பாசிச வக்கிரத்தைத் தான், இங்கு குழந்தையின் பிணமாக காண்கின்றீர்கள்.

சிறுவர் போராளிகள் பற்றி மூச்சுக்கு மூச்சு கட்டுரைகள் எழுதி, புலியெதிர்ப்பு பிரச்சாரம் செய்தவர்கள் எங்கே? இவர்களின் துணையுடன் 12 வயதே நிரம்பியிராத இந்தக் குழந்தையை கொன்று போட்டவர்கள் தான், இந்த பாசிச இனவெறி பிடித்த பாசிச "ஜனநாயகம்" பேசுவோர்கள். இதற்கு மகிந்த சிந்தனை என்னும் பேரினவாத பாசிசம் தான் தலைமை தாங்கியது. இதற்கு துணை நிற்கும் "ஜனநாயக" நாய்கள், "ஜனநாயகத்தின்" பெயரில் புலத்து (இலக்கியச்) சந்திப்புகளில் கூட ஊளையிட முடிகின்றது. எதையும் அரசியல் ரீதியாக பகுத்தாராய முடியாத "ஜனநாயக" மாயைகள்; கண்ணை மறைக்க, பாசிசம் "ஜனநாயக" கூத்தாக அரங்கேறுகின்றது.

PrabhaharanFam.jpg

இந்த படுகொலைகளைச் செய்த இந்த அரசின் பின்னால் ஜனநாயகம் பேசி, அதை முண்டு கொடுக்கும் மனித விரோதிகளின் துணையின்றி எந்த மனிதக் கோராங்களும் நடக்கவில்லை.

இறுதி யுத்தத்தில் வன்னியில் சரணடைந்தவர்கள் பெரும் தொகையானவர்கள், இப்படித்தான் கொல்லப்பட்டனர். பாலியல் ரீதியாக பெண்கள் தொடர்ச்சியாக புணரப்பட்டனர். இன்றும் இதுதான் அங்கு தொடருகின்றது.

இது போன்ற பாரிய யுத்த குற்றங்களை மூடிமறைக்க, பேரினவாதம், குற்றம் நிகழ்ந்த இடத்தை இன்று சூனியப் பிரதேசமாக்கியுள்ளது. யுத்தக் குற்றங்களை அழிக்கின்றது. இதை மூடிமறைக்க, உலக நாடுகளுடன் முரண்படுகின்றது. இதற்காக தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றுகின்றது. இதை புலியெதிர்ப்பு பேசிய நாய்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்டியும், தென்னாசிய பொருளாதார வளர்ச்சியாகக் காட்டியும், போர்க்குற்றத்தை வாலாட்டி நக்குகின்றனர்.

மறுபக்கத்தில் தலைவர் இறக்கவில்லை என்று கூறி;, புலத்தில் பினாமிச் சொத்துக்கு பின்னால் நக்கும் புலிகள், இது போன்ற குற்றங்களையே மூடிமறைக்கின்றனர். சொத்தைக் கைப்பற்ற முனையும் புலத்து தமிழீழக்காரர்கள், புலித்தலைவர் வீரமரணமடைந்ததாக கூறி இந்தக் குற்றத்தை நடக்கவில்லை என்கின்றது. அதற்கு தான் காட்டிக் கொடுத்தது அம்பலமாகக் கூடாது என்ற மற்றொரு கவலை.

இப்படி அனைத்து குற்றவாளிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர். பரஸ்பரம் தங்கள் குற்றங்களை மூடிமறைக்க, ஒருவரையொருவர் மூடிமறைக்கின்றனர்.

இன்னறய நிலையில் இதற்கு எதிராக மக்கள் மட்டும்தான், உண்மையாகவும் நேர்மையாகவும் போராட முடியும். (புலத்து) புலிகளுக்கும் சரி, புலியெதிர்ப்புக்கும் சரி, அந்த தகுதியும், அரசியல் நேர்மையும் கிடையாது. குற்றங்களை மூடிமறைப்பது, அதை பூசி மெழுகுவது, எதுவும் நடவாத மாதிரி நடிப்பது, குற்றத்தை அரசியலாக கொண்டவர்களின் இன்றைய அரசியல் நிலையாகும்.

இதற்கு வெளியில், மக்கள் தமக்காக தாம் போராட வேண்டிய நிலையில் இன்று உள்ளனர். தம் மீது இழைத்த, இழைக்கின்ற குற்றங்களுக்கு எதிராக போராட வேண்டியவராக உள்ளனர். இந்த எல்லைக்கு வெளியில், மக்களுக்கான உண்மையான போராட்டம் கிடையாது.

பி.இரயாகரன்

11.07.2009

Edited by நிழலி

  • தொடங்கியவர்

இச்செய்தி தற்போதுதான் பார்த்தேன் ... உண்மையோ/பொய்மையோ தெரியவில்லை ... ஜீரணிக்க முடியவில்லை!

Edited by Nellaiyan

தேசியத் தலைவரின் மகனது இறந்த படத்தினை அவருக்கு கொடுக்கும் மரியாதையாக நீக்கியுள்ளேன். நெல்லையன், உங்களின் செய்திக் கட்டுரைக்கான இணைப்பினை குறிப்பிடுங்கள்.

எமக்கு ஒரு நாடு தேவை என்பதில் எந்த சந்தேகமும் எவருக்கும் வேண்டாம்.

இது யாராக இருந்ததாலும் ஒரு கணம் அழுதுவிடு இதையும் ஒரு போர்க்குற்றமாக பரப்புரை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி

எமக்கு ஒரு நாடு தேவை என்பதில் எந்த சந்தேகமும் எவருக்கும் வேண்டாம்.

இது யாராக இருந்ததாலும் ஒரு கணம் அழுதுவிடு இதையும் ஒரு போர்க்குற்றமாக பரப்புரை செய்ய வேண்டும்.

ஆமென்

நான் இது தொடர்பான செய்தியினை சில மாதம்களிற்கு முன் ஒரு இணையத்தில் பார்த்திருந்தன்...

tamil circle என்ற..இணையம் என்று நினைக்கிறன்

  • தொடங்கியவர்

இங்கு வேறொரு திரியில் ...

புலிகளின் கடந்தகாலத்தை நாம் திருத்தவேண்டுமா

இதற்கு பதிலழிக்க முன் ...

... இச்செய்தியே பல கேள்விகளை எழுப்பியுள்ளது! நாம் இச்செய்தியை ஏன் மறைத்தோம்? ஏன் இதனை ஊடகங்களுக்கு கொண்டு செல்லவில்லை? இதனை மறைத்ததில் என்ன பயன் அடைந்தோம்? ... யாராவது கூறுவீர்களா????????? ஒரு பாலகனை கொன்றொழித்த சிங்கள மிருகங்களை காப்பாற்றியுள்ளோம், யாராவது மறுப்பீர்களா???????...

எவரும் புலிகளின் கடந்த கால போராட்டத்தை/பயணத்தை முற்றாக பிழை கூறவரவில்லை! எங்கேயோ விடப்பட்ட/எடுத்த சில தவறுகள்/சில முடிபுகள் ... இத்தனை வருடகாலமாக வளர்க்கப்பட்ட விருட்சத்தின் சரிவுக்கு காரணமாகி விட்டது!

நாம்(எம் மக்கள்) வந்த பாதையில் இன்று எங்கு நிற்கிறோம்???

எம் மக்களின் இன்றைய நிலை என்ன???

.....

இன்றைய நிலைக்கு காரணமான இவ் நடந்து வந்த பாதை சரியானதா?

ஏன் எம்மை சர்வதேசம் ஏற்கவில்லை? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்???

என்ன பிழை விட்டோம்? அதனை நிவர்த்தி செய்வது எப்படி?

நாம் இன்று புலத்தில் செய்யும் அரசியல் எம் மக்களை மீட்குமா?

....

இப்படியான கேள்விகளுக்கான விடை தேடல் .... "மூன்று சகாப்தங்களாக நடைபெற்ற போராட்டத்துக்கு சேறடிப்பதற்காகவுமல்ல/கறை பதித்து விடவுமல்ல ... மாறாக எம்மை புடம்போட்டு சரியான பாதையில் முன்னகரவே .....

Edited by Nellaiyan

இங்கு வேறொரு திரியில் ...

இதற்கு பதிலழிக்க முன் ...

... இச்செய்தியே பல கேள்விகளை எழுப்பியுள்ளது! நாம் இச்செய்தியை ஏன் மறைத்தோம்? ஏன் இதனை ஊடகங்களுக்கு கொண்டு செல்லவில்லை? இதனை மறைத்ததில் என்ன பயன் அடைந்தோம்? ... யாராவது கூறுவீர்களா????????? ஒரு பாலகனை கொன்றொழித்த சிங்கள மிருகங்களை காப்பாற்றியுள்ளோம், யாராவது மறுப்பீர்களா???????...

எவரும் புலிகளின் கடந்த கால போராட்டத்தை/பயணத்தை முற்றாக பிழை கூறவரவில்லை! எங்கேயோ விடப்பட்ட/எடுத்த சில தவறுகள்/சில முடிபுகள் ... இத்தனை வருடகாலமாக வளர்க்கப்பட்ட விருட்சத்தின் சரிவுக்கு காரணமாகி விட்டது!

நாம்(எம் மக்கள்) வந்த பாதையில் இன்று எங்கு நிற்கிறோம்???

எம் மக்களின் இன்றைய நிலை என்ன???

.....

இன்றைய நிலைக்கு காரணமான இவ் நடந்து வந்த பாதை சரியானதா?

ஏன் எம்மை சர்வதேசம் ஏற்கவில்லை? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்???

என்ன பிழை விட்டோம்? அதனை நிவர்த்தி செய்வது எப்படி?

நாம் இன்று புலத்தில் செய்யும் அரசியல் எம் மக்களை மீட்குமா?

....

இப்படியான கேள்விகளுக்கான விடை தேடல் .... "மூன்று சகாப்தங்களாக நடைபெற்ற போராட்டத்துக்கு சேறடிப்பதற்காகவுமல்ல/கறை பதித்து விடவுமல்ல ... மாறாக எம்மை புடம்போட்டு சரியான பாதையில் முன்னகரவே .....

இப்பதான் நித்திரையாலை எழும்பி வந்தனீங்கள் போல கிடக்கு... 2009 ம் ஆண்டு ஒருத்தர் எழுதினதை இப்ப எடுத்து படிச்சு போட்டு ஆரம்பிக்கிறீயள்....

இதை போர்க்குற்றமாக Channal 4 தொலைக்காட்ச்சி காட்டினதுகளை பாக்க இல்லை... ! ஆக என்ன நடக்குது எண்டது கூட உங்களுக்கு வெளிச்சம் இல்லை... நீங்கள் எல்லாம் விமர்சகர்கள்... எல்லாம் காலம்...

இதுகளையும் பாருங்கோ...

http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lanka+option/3652687

TCC காறர் இதுசம்பந்தமான விசாரனைக்கு தேவையான அனைத்தையும் வழங்குவதாக சொல்லி இருக்கிறார்கள்...

http://link.brightcove.com/services/player/bcpid62612474001?bctid=86382573001

Edited by தயா

யாழில் வருபவர்கள் கண்ணை காட்டிய குருடர்களே.

இவர்கள் எப்ப தமிழரங்கம்,, இனியொரு,தேசம் நெட் பார்க்க போகின்றார்களென நினைத்தேன்.இப்ப சில பேர் பார்க்கின்ற மாதிரி நிலமை மாறிவிட்டது போலுள்ளது.

கருத்து சுதந்திரத்தை ஆதரிப்போம்.

அதற்காக அவர்கள் சரி என்பதல்ல. அதையும் வாசிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வருபவர்கள் கண்ணை காட்டிய குருடர்களே.

இவர்கள் எப்ப தமிழரங்கம்,, இனியொரு,தேசம் நெட் பார்க்க போகின்றார்களென நினைத்தேன்.இப்ப சில பேர் பார்க்கின்ற மாதிரி நிலமை மாறிவிட்டது போலுள்ளது.

கருத்து சுதந்திரத்தை ஆதரிப்போம்.

அதற்காக அவர்கள் சரி என்பதல்ல. அதையும் வாசிப்போம்.

பொய்களை நாங்கள் திரும்ப திரும்ப வாசித்தால்..............

ஒரு கட்டத்தில் உண்மையென்று நம்பிவிடுவோம்.????

அப்ப கருத்து சுதந்திரம் நல்லா கொடிகட்டி பறக்கும்..............

கருத்துக்களுக்கு யாரும் தடைவிதிப்பதில்லை. கருத்துக்கள் சுதந்திரமாகவே இருக்கின்றன.

வாந்திககளைதான் அதன் நாற்றம் தாங்கமுடியாமல் அது வேண்டாம் என்று வெறுக்கிறோம்!

சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் நாட்டைவிட்டு தப்பியோடி சென்றுள்ளார் அந்த அதிகாரி தேசித்தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதனை உறுதிப்படுத்தியு|ள்ளாராம். இவர் அமெரிக்க போர்குற்ற விசாரணை திணைக்களத்திற்கு வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அமெரிக்காவின் இலங்கை தொடர்பான போர்குற்ற அறிக்கை அடுத்த வாரமளவில் வெளிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

தயா அண்ணா சொன்ன மாதிரி இது பழைய செய்தி...தமிழ் அரங்கத்தில் ராயகாரன் எழுதிய இந்த ஆக்கத்தை அந் நேரம் தேசத்திலும் இணை த்திருந்தார்கள்...அதை ஏன் தற்போது யாழில் இணைத்திருக்கார்கள் என தான் புரியவில்லை?

நெல்லையன்,

இப்போதான் coma stage இருந்து இயல்பு நிலைக்கு திரும்பினீர்களா.?

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன்,

இப்போதான் coma stage இருந்து இயல்பு நிலைக்கு திரும்பினீர்களா.?

இல்லை ராஜா அவர் எப்போதுமே கோமாவில் தான் இருப்பார். :(:(

பழைய செய்தியோ புதிய செய்தியோ பரவாயில்லை

இது ஒரு அப்பட்டமான யுத்தமீறல் அடாவடித்தனம் காட்டுமிராண்டித்தனம்

இதனை யாராவது வெளி உலகின் பார்வைக்கு கொண்டுவந்துள்ளார்களா?

சிங்கள, இந்திய காட்டுமிராண்டிகளின் மிலேச்ச படுகொலைகள் பல. இதற்கு உரிய பதிலிறுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

தமீழீழ விடுதலைக்கு ஆதரவளிக்காத 45%உம்......, தமீழீழ விடுதலைக்கு எதிரான 45%ம்மாக........ மொத்தம் 90% தமிழீழ மக்களுக்கு இது சமர்ப்பனம்... :(

தமீழீழ விடுதலைக்கு ஆதரவளிக்காத 45%உம்......, தமீழீழ விடுதலைக்கு எதிரான 45%ம்மாக........ மொத்தம் 90% தமிழீழ மக்களுக்கு இது சமர்ப்பனம்... :(

ஆக மொத்தம் மிச்சம் 10% வீதத்தில் நீங்கள் அடங்கிறீங்கள்!? :(

  • கருத்துக்கள உறவுகள்

இது தேசியத் தலைவரின் மகன் என்று சொல்லப்படுவதால் அதனை நம்புவதற்கு பலருக்குத் தயக்கமாக இருக்கிறது.விடயம் அதுவல்ல.நிச்சயம் இது ஒரு தமிழ்க் குழந்தை.குழந்தைப் போராளிகளைப் புலிகள் படையில் சேர்க்கிறார்கள் என்று ஓலமிட்ட நாடுகளையும் சர்வதேச அமைப்புக்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்து இந்தப் படுகொலைகளுக்கு நாம் நீதி கேட்க வேண்டும்.அதுவே இப்போது எம்முன் உள்ள முக்கிய கடமையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ராயகரன்... சிறீரங்கன் கோஸ்டி.. தேனீ.. அதிரடி... தீப்பொறி... இலக்கு.. அத்தனை ஆட்களும் சிங்களத்தின் கைகூலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தம் மிச்சம் 10% வீதத்தில் நீங்கள் அடங்கிறீங்கள்!? :(

அதிலும் சோம்பேறிகள் 4வீதம் சுயநலவாதிகள் 5வீதம் போக.............

அந்த அசத்;தலான தமிழரான மீதி ஒரு வீதத்திறகுள்தான் இவர்கள்.

ஏதோ என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை?

இவர்களுடன் கருத்துக்களை பரிமாறும் கொடையை கடவுள் கண்ணை மூடிகொண்டு எமக்கு அள்ளி தந்திருக்கிறான்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வருபவர்கள் கண்ணை காட்டிய குருடர்களே.

இவர்கள் எப்ப தமிழரங்கம்,, இனியொரு,தேசம் நெட் பார்க்க போகின்றார்களென நினைத்தேன்.இப்ப சில பேர் பார்க்கின்ற மாதிரி நிலமை மாறிவிட்டது போலுள்ளது.

கருத்து சுதந்திரத்தை ஆதரிப்போம்.

அதற்காக அவர்கள் சரி என்பதல்ல. அதையும் வாசிப்போம்.

ம் இந்த ரயாகரன் நல்லாய் எழுதுகிறார் என்று கட்டுரைகளை வாசித்தால் தானே தெரிகிறது இவரின் எழுத்தின் வக்கிரம்.புலிகளை மட்டுமே புறணி கூறுகிறார். சாதாரண மக்கள் கண்காண ஏனைய இயக்கங்கள் செய்த செய்கின்ற கொலைகள் கொள்ளைகள் பற்றி ஒரு வரிதானும் எழுத இவரால் எழுத முடியவில்லை. இவர் எப்படி நடுநிலையான எழுத்தாளராவார்?? ஏனையவர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. இப்போ கண்ணை கட்டிய குருடர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.

விடுதலைப்புலிகளால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டவர்களாக இந்தக் கட்டுரையாளர் இருக்கிறார். கோஷம் மட்டுமே இவர்கள் சொத்து. கோவணம் கூட இவர்களின் சொத்தாக இருக்குமா என்பது எனது சந்தேகம். கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு பகுதியை மட்டும் விமர்சிப்பதுதான் என்பது இவரது பக்கவாதம்.

இந்தப் படங்கள் எல்லாம் இவருக்குக் கிடைத்திருக்கும் வழியைச் சிந்தித்தால் யாரோ அந்தத் தகவல்களை களத்திலிருந்தே எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியானால் இவருக்கும் தகவல் வழங்கியவருக்குமான தொடர்புதான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

பழைய செய்தியோ புதிய செய்தியோ பரவாயில்லை

இது ஒரு அப்பட்டமான யுத்தமீறல் அடாவடித்தனம் காட்டுமிராண்டித்தனம்

இதனை யாராவது வெளி உலகின் பார்வைக்கு கொண்டுவந்துள்ளார்களா?

இயக்கத்திற்குப் போகாத அப்பாவி இளைஞர்,யுவதிகள்,பச்சை பாலகர்கள்,வயோதிபர்கள் எத்தனையோ பேர் இறந்துள்ளனர் அவர்களின் படங்கள் கிடைக்கவில்லையா...ஏன் அவர்களை எல்லாம் விட்டு போட்டு தலைவரின் மகனின் படத்தை ஆதாரமாக வைத்தா விசாரிக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டவர்களாக இந்தக் கட்டுரையாளர் இருக்கிறார். கோஷம் மட்டுமே இவர்கள் சொத்து. கோவணம் கூட இவர்களின் சொத்தாக இருக்குமா என்பது எனது சந்தேகம். கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு பகுதியை மட்டும் விமர்சிப்பதுதான் என்பது இவரது பக்கவாதம்.

இந்தப் படங்கள் எல்லாம் இவருக்குக் கிடைத்திருக்கும் வழியைச் சிந்தித்தால் யாரோ அந்தத் தகவல்களை களத்திலிருந்தே எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியானால் இவருக்கும் தகவல் வழங்கியவருக்குமான தொடர்புதான் என்ன?

ராயகரன் தான் டிபென்ஸ் இணையத்தில் இருந்து தான் இப் படங்களை சுட்டதாக எழுதியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.