Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்! திரையுலகப் பிரபலங்கள் அஞ்சலி; நாளை உடல் தகனம்

Featured Replies

தென்னிந்திய திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான முரளி மாரடைப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று அதிகாலை உயிர் இழந்துள்ளார்.

நேற்று இரவு வீட்டில் இருந்தபோது இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டும் பலன் இல்லாமல் இறந்து விட்டார். இறக்கும்போது வயது 47.

முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு் அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. . புகழ்பெற்ற முரளியின் மரணச் செய்தியறிந்த திரையுலக பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், சேரன், நாசர், சரத்குமார்,ராதிகா,சூர்யா, மனோபாலா, ராமநாராயணன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். முரளியின் உடல் நாளை தகனம் செய்யப்படுகின்றது. அதையொட்டி அனைத்துப் படப்பிடிப்புகளும் இரத்துச் செய்யப்படுகின்றன.

சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான பூ விலங்கு படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனவர் இவர்.காலமெல்லாம் காதல் வாழ்க, அள்ளித் தந்த வானம், புதுவசந்தம், ஆனந்தம், வெற்றி‌கொடிகட்டு, சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக நடித்திருக்கும் படம் பானா காத்தாடி ஆகும்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9972:2010-09-08-07-45-30&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • கருத்துக்கள உறவுகள்

முரளியின் தாய் தமிழ், தகப்பன் கன்னடம். இருந்தும் அவர் ஈழத்தமிழர்கள் மீது தாய் தமிழர்கள் மீது அளவு கடந்த பற்றுக் கொண்ட ஒரு நடிகர். கன்னட திரைச்சமூக எதிர்ப்பையும் மீறி ஈழத்தமிழர்களுக்கான போராட்டங்களில் கலந்து கொண்டது மட்டுமன்றி சாமானிய மக்களுக்கு தானாகச் சென்று உதவும் உள்ளம் கொண்டவர். எளிமையானவர்.

முரளி நல்ல கலைஞன் மட்டுமன்றி ஒரு நல்ல மனிதரும் கூட.

அன்னாரின் பிரிவால் துயரும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். முரளிக்கு கண்ணீரஞ்சலிகள். :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர். பல படங்களை‌த் தயா‌ரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். அலட்டலில்லாத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த முரளி பிறந்தது பெங்களூரு என்றாலும் அவர் ஒரு தமிழராகவே வாழ்ந்தார். நதிநீர் பிரச்சனையில் தமிழக, கன்னட திரையுலகினர் போராட்டங்களில் ஈடுபட்டபோது தமிழ்‌த் திரையுலகம் சார்பில் போராட்டத்தில் முதன்மையாக கலந்து கொண்டவர் முரளி என்பது குறிப்பிடத்தக்கது.

முரளி அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு எனது இதய பூர்வமான அஞ்சலிகள்...அவர் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

காதலித்தவர்கள்,காதலித்து ஏமாந்தவர்களுக்கு முரளியின் படமென்டால் விருப்பம் என நினைக்கிறேன் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் முரளிக்கு எனது இரங்கல்கள்..! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளிக்கு என் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கலைஞ்சனை இழந்துவிடோம். அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

:wub: நடிகர் முரளிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். :unsure:

sympathy12.gif

08-murali-080910.jpg

ஆடம்பரம் இல்லாத அமைதியான ஒரு நடிகர். அவரின் படத்தில் வரும் பாடல்கள் எப்போதும் நினைவில் இருக்கும்.

அன்னாருக்குக் கண்ணீர் அஞ்சலிகளும் :wub: அவரின் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக

  • கருத்துக்கள உறவுகள்

முரளிக்கு என் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். ஆழ்ந்த அஞ்சலிகள் !

நல்ல ஒரு நடிகன் நல்ல மனிதன் இச் செய்தி கேட்டதும் மிகவும் மனவேதனை

அடைந்துள்ளேன் . அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் இவரின் பிரிவால் ஆறாத்துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்துக்கு

எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

சென்னை பிரபல திரைப்பட நடிகர் முரளி திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

IN08_MURALI_177566e.jpg

நேற்று இரவு முரளிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக்கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முரளி உயிரிழந்தார்.

பாலச்சந்தரின் நாயகன்:

1984ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் முரளி. இவரது தந்தை சித்தலிங்கையா பிரபலமான கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க நடிகர் முரளி.

முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தார். காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முரளி நடித்த படங்கள்.

பகல் நிலவு, இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார்.

சாதனை படைத்த இதயம்:

முரளியின் நடிப்பில் வெளியான புது வசந்தம், இதயம் ஆகிய படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் படங்களாகும். குறிப்பாக புது வசந்தம் தமிழ்த் திரையுலகில் புதிய வரிசைப் படங்களுக்கு இலக்கணம் வகுத்தது. இதயம் திரைப்படத்தில் காதல் சொல்லப்பட்ட விதமும், முரளியின் நடிப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

தமிழ் உணர்வாளர்:

பாணா காத்தாடி தவிர தனது படங்கள் அனைத்திலும் ஹீரோவாகவே நடித்த பெருமைக்குரியவர் முரளி. முரளியின் தந்தை கன்னடர் என்றாலும், அவரது தாய் தமிழ்ப் பெண். காவிரிப் பிரச்சனையின்போது தமிழ்த் திரையுலகம் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு தனது உணர்வைப் பதிவு செய்தார்.

அவரது மகன் அதர்வாவை சமீபத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தார் முரளி. அவர் ஹீராவோக நடித்த முதல் படமான பாணா காத்தாடியில் முரளியும் சிறிய ரோலில் நடித்திருந்தார். மகன் நடித்த முதல் படமே முரளியின் கடைசிப் படமாக அமைந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவாஜி கணேசன், சரத்குமார் , விஜயகாந்த் , பிரபு என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் முரளி.

47 வயதில் துயர மரணம்:

மறைந்த முரளிக்கு வயது 47 ஆகிறது. முரளியின் திருமணம் காதல் திருமணமாகும். அவரது மனைவி பெயர் ஷோபா.

முரளியின் உடல் நாளை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

08-murali-body200.jpg

செய்தியின் மூலம்

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நெடுக்ஸ் கூறிய இதயம் படத்தை நாமும் சிறுவயதில் பார்த்தோம். படத்தை பார்த்து எனது சகோதரிகள் கண்ணீர் சிந்தியது நினைவில் உள்ளது. முரளி அவர்களின் ஏராளம் படங்களை பார்த்து உள்ளேன்... தற்போது நினைவில் இல்லை. வெறும் 47 வயதில் மரணம் என்பது கசப்பான விடயம். எனினும், தனது திரைபப்படங்கள், நடிப்பு, பாடல் காட்சிகள் மூலம் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் போல் முரளி அவர்களும் நிலைத்திருப்பார் என்று கூறலாம். இதய அஞ்சலிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

முரளி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் இவரின் பிரிவால் ஆறாத்துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்துக்கு

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் முரளியின் மரணம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

முரளி நடித்த பொற்காலம், இதயம் போன்ற படங்கள் காலத்தால் அழியாதவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.