Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீட்சைக்கு நாட்குறிக்கும் நாள் நெருங்கி வருகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உட்புகுந்து உயிர் அரிக்கும்

வித்தை கற்க வேண்டும்

sadness.jpg

காக்க காக்க என்று

கல் மண் புழுதியிலும்,

பனி உறையும் பாதையிலும்

வீசு புயல் மழையினிலும்,

வேதனையைச் சொன்னபடி,

குப்பைக் காடுகள்போல்

அந்நியக் கண்கள் சீண்டும்

அவமானம் தின்றபடி,

வேர் கிழித்த வலி

விளம்பி, விம்மி, வெந்துருகி

அறியாத தெருவெல்லாம்

அலைமோதிக் கிடந்தோமே

எவர் வந்து கேட்டார்கள்?

எவர் வந்து பார்த்தார்கள்?

எவர்தான் எதிரியென்று

எமக்குப் புரியவில்லை

யார்தான் துரோகியென்று

யதார்த்தம் விளங்கவில்லை

சிதறுண்டு போனோம்

சிதையுண்டும் போனோம்

விதை அழுகிப் போனதெனும்

இழிநிலை ஆனதைய்யோ...

இனம் முடை நாத்தத்தில்

உட்கார்ந்து கொண்டதையோ...

தாங்க முடியலையே.......

பொல்லாத குறியை

மறுக்கும் பெண்ணுடம்பில்

திணித்ததுபோல்....

எல்லாரும் சேர்ந்து

என் தேசமெனும் பெருந்தாயில்

பொல்லா அவலமெல்லாம்

புகுத்திவிட்டு போயினரே.

இப்போது வேசங்கள் கட்டுகிறார்

வேதனைதான் பொறுக்கலையே...

ஐயோ....

பேனா முனை தொட்டால்

பொல்லாத சிறுக்கியாகி

பித்தை நிலை கொண்டு

பிடாரியாய் போவேனோ?

தேனாக நின்ற

என் தேசத்தின் புதல்வர்களைக்

காணாமல் செய்தவர் யார்?

காரணங்கள் உரைப்பீரோ?

பனி உறைத்த தெருவினிலே

பறை அறைந்து நின்றவரே!

பெயல் மணக்கும் பொழுதுகளில்

பதறி நிறைந்தோரே!

வீசு புயல் மழையினிலே

தாகங்கொண்டு நிலைத்தவரே!

அந்நியச் சீண்டல்களின்

அவமானம் தாங்கி...

அன்புச் சோதரர்காய் அலங்கோலமானவரே!

எங்கு போய் விட்டீர்கள்?

முள்ளிவாய்க்காலில்

வெட்டுண்டு வீழ்ந்தது

எங்கள் அவயங்கள்

எப்படி மறந்தீர்கள்?

அவ்வளவு சீக்கிரம் மறப்பதற்கு

அறணையா நாங்கள்?

அட மூளையுங்கூடவா

முண்டமாய் போனது?

கண்ட கண்ட கோதாரி

பின் கதவால் வந்து

உள்வீட்டில் உட்கார்ந்து

உப்பரிகைக் கிடப்பில்

உல்லாசம் காணுது.

அண்ணரே, தம்பியரே

இன்னுமா அடிபட்டுக் கொள்கிறீர்?

உச்சுக் கொட்டிக் கொண்டு

உட்கார்ந்து பார்க்க

என்னால் முடியாது

அண்ணன்களே!, தம்பிகளே!

கும்பி கொதிக்கிறது.

சூலை மேடேறி

மாகாளி அழைத்து

தீட்சைக்கு நாட்குறிக்கும்

நாள் நெருங்கி வருகிறது

எச்சரித்துக் கொள்கிறேன்

குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

உட்புகுந்து உயிர் அரிக்கும்

வித்தை கற்கவேண்டும்

எத்தனை முறை நோக்கினும்

எதுவும் விளங்கக்கூடாது.

சத்தியத்தின் மூச்சழித்தோர்,

தத்துவ எதிர்வினையை

நித்தியத்தில் அநுபவிக்கும்

நிலை தந்தே தீரவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியத்தின் மூச்சழித்தோர்,

தத்துவ எதிர்வினையை

நித்தியத்தில் அநுபவிக்கும்

நிலை தந்தே தீரவேண்டும்

கவிதைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சூளை மேடேறி

மாகாளி அழைத்து

தீட்சைக்கு நாட்குறிக்கும்

நாள் நெருங்கி வருகிறது

எச்சரித்துக் கொள்கிறேன்

குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

நல்ல கவிதை சகோதரி.

காலத்தின் தேவையறிந்து எழுதப்பட்ட ஒன்று!!!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியத்தின் மூச்சழித்தோர்,

தத்துவ எதிர்வினையை

நித்தியத்தில் அநுபவிக்கும்

நிலை தந்தே தீரவேண்டும்

கவிதைக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளே கனன்று கொண்டிருக்கும் தீ எழுத்தாய் வந்துள்ளது, சகாரா அக்கா!

உட்புகுந்து உயிர் அரிக்கும்

வித்தை கற்கவேண்டும்

இது இயல்பிலேயே வரவேண்டும், கற்பது கடினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணா, புங்கையூரான், புத்தன் மற்றும் கிருபன் உங்கள் பதிவுக்கு நன்றிகள்

கிருபன் நீங்கள் கூறுவதுபோல் இயல்பில் வந்தால்தான் இறுதிவரை நிலைக்கும். அப்படிப் பார்த்தால் தமிழனத்தின் இயல்பு எப்போதுமே சலுகைக்காக அடிமையாவதாகத்தான் விகிதாசாரத்தில் அதிகமாக இருக்கிறது. :(

அவலம், வேதனை, விரக்தி, கோபத்தில் கொட்டிய அனல் வரிகள் ....

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையாய் கனல்கின்றன உங்கள் வரிகள் சகாரா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொலைத்துவிட்ட அகராதியில் தேடுகிறேன் இதற்கான வார்த்தைகளை. :(

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வேர் கிழித்த வலி[/size]

[size=4]விளம்பி, விம்மி, வெந்துருகி[/size]

[size=4]அறியாத தெருவெல்லாம் [/size]

[size=4]அலைமோதிக் கிடந்தோமே[/size]

வேர் கிழித்த வலிகள்

வெந்த எம் மனங்களிலும்....

கவிதை அழகு.

கவிதைக்கு நன்றி அக்கா, தொடர்ந்தும் பல கவிதைகள் எழுதுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

தாங்க முடியலையே என்று தேம்பியழும் உன் குரலை

வேசங்கள் கண்டு வேதனையில் துவழும் உன் மனதை

அனல் வீசும் வார்த்தை கொண்டு எம்

அவலத்தை எடுத்து வந்த இக்

கவிதைக்கு கருத்தெழுத என்

தமிழுக்கு வலுவுமில்லை

என் செய்வோம் இதுதான் எம்

தலைவிதியோ.........

காலத்துக்கேற்ற கவிதை தந்த சகாராவிற்கு

நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நாள் நெருங்கி வந்துவிட்டதா அல்லது தொடுவானம் அருகில் இருக்கின்றது போன்று இப்போதும் தெரிகின்றதா?

உட்புகுந்து உயிர் அரிக்கும்

வித்தை கற்கவேண்டும்

இதெல்லாம் சுட்டுப்போட்டாலும் நேர்மையாக இருந்து பழகியவர்களுக்கு வராது.

Edited by கிருபன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாள் நெருங்கி வந்துவிட்டதா அல்லது தொடுவானம் அருகில் இருக்கின்றது போன்று இப்போதும் தெரிகின்றதா?

 

எதுவுமே தெரியவில்லை கிருபன் இந்தக் கவிதை எழுதிய காலத்தில் இருந்த சாத்தியங்கள்கூட அற்றுப் போய்விட்டதென்றே தோன்றுகிறது.

இதெல்லாம் சுட்டுப்போட்டாலும் நேர்மையாக இருந்து பழகியவர்களுக்கு வராது.

 

நாங்கள் நிமிர்ந்தே நின்று பேசிப்பேசி முகத்தில் அறைவாங்குபவர்கள். தந்திரம் என்பது எங்களுக்கு இழுக்கு. தேவைப்படும் இடங்களில் நிமிர்ந்து பேசாமல் ஒளிந்து கொள்வோம். தேவையற்ற வேளைகளில் வாய்ச்சவடால்களால் வீர வசனங்களில் விளம்பரம் செய்வோம். சாம, பேத, தான, தண்ட வழிகளை தெளிவாக உபயோகிக்கத் தெரியாது என்பதைவிட உபயோகிக்க முடியாது.

  • 4 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நிமிர்ந்தே நின்று பேசிப்பேசி முகத்தில் அறைவாங்குபவர்கள். தந்திரம் என்பது எங்களுக்கு இழுக்கு. தேவைப்படும் இடங்களில் நிமிர்ந்து பேசாமல் ஒளிந்து கொள்வோம். தேவையற்ற வேளைகளில் வாய்ச்சவடால்களால் வீர வசனங்களில் விளம்பரம் செய்வோம். சாம, பேத, தான, தண்ட வழிகளை தெளிவாக உபயோகிக்கத் தெரியாது என்பதைவிட உபயோகிக்க முடியாது.

 

மீளப்பார்க்கும் தேவையை காலம் அளித்திருக்கிறது கிருபன்

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்
On 19.4.2011 at 3:25 AM, வல்வை சகாறா said:

 

 

உட்புகுந்து உயிர் அரிக்கும்

வித்தை கற்க வேண்டும்

 

 

 

sadness.jpg

 

காக்க காக்க என்று

கல் மண் புழுதியிலும்,

 

பனி உறையும் பாதையிலும்

வீசு புயல் மழையினிலும்,

வேதனையைச் சொன்னபடி,

 

குப்பைக் காடுகள்போல்

அந்நியக் கண்கள் சீண்டும்

அவமானம் தின்றபடி,

 

வேர் கிழித்த வலி

விளம்பி, விம்மி, வெந்துருகி

அறியாத தெருவெல்லாம்

அலைமோதிக் கிடந்தோமே

 

எவர் வந்து கேட்டார்கள்?

எவர் வந்து பார்த்தார்கள்?

 

எவர்தான் எதிரியென்று

எமக்குப் புரியவில்லை

 

யார்தான் துரோகியென்று

யதார்த்தம் விளங்கவில்லை

 

சிதறுண்டு போனோம்

சிதையுண்டும் போனோம்

 

விதை அழுகிப் போனதெனும்

இழிநிலை ஆனதைய்யோ...

 

இனம் முடை நாத்தத்தில்

உட்கார்ந்து கொண்டதையோ...

 

தாங்க முடியலையே.......

 

பொல்லாத குறியை

மறுக்கும் பெண்ணுடம்பில்

திணித்ததுபோல்....

எல்லாரும் சேர்ந்து

என் தேசமெனும் பெருந்தாயில்

பொல்லா அவலமெல்லாம்

புகுத்திவிட்டு போயினரே.

 

இப்போது வேசங்கள் கட்டுகிறார்

வேதனைதான் பொறுக்கலையே...

 

ஐயோ....

பேனா முனை தொட்டால்

பொல்லாத சிறுக்கியாகி

பித்தை நிலை கொண்டு

பிடாரியாய் போவேனோ?

 

தேனாக நின்ற

என் தேசத்தின் புதல்வர்களைக்

காணாமல் செய்தவர் யார்?

காரணங்கள் உரைப்பீரோ?

 

பனி உறைத்த தெருவினிலே

பறை அறைந்து நின்றவரே!

 

பெயல் மணக்கும் பொழுதுகளில்

பதறி நிறைந்தோரே!

 

வீசு புயல் மழையினிலே

தாகங்கொண்டு நிலைத்தவரே!

 

அந்நியச் சீண்டல்களின்

அவமானம் தாங்கி...

அன்புச் சோதரர்காய் அலங்கோலமானவரே!

 

எங்கு போய் விட்டீர்கள்?

 

முள்ளிவாய்க்காலில்

வெட்டுண்டு வீழ்ந்தது

எங்கள் அவயங்கள்

எப்படி மறந்தீர்கள்?

 

அவ்வளவு சீக்கிரம் மறப்பதற்கு

அறணையா நாங்கள்?

 

அட மூளையுங்கூடவா

முண்டமாய் போனது?

 

கண்ட கண்ட கோதாரி

பின் கதவால் வந்து

உள்வீட்டில் உட்கார்ந்து

உப்பரிகைக் கிடப்பில்

உல்லாசம் காணுது.

 

அண்ணரே, தம்பியரே

இன்னுமா அடிபட்டுக் கொள்கிறீர்?

 

உச்சுக் கொட்டிக் கொண்டு

உட்கார்ந்து பார்க்க

என்னால் முடியாது

 

அண்ணன்களே!, தம்பிகளே!

கும்பி கொதிக்கிறது.

 

சூலை மேடேறி

மாகாளி அழைத்து

தீட்சைக்கு நாட்குறிக்கும்

நாள் நெருங்கி வருகிறது

எச்சரித்துக் கொள்கிறேன்

குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

 

உட்புகுந்து உயிர் அரிக்கும்

வித்தை கற்கவேண்டும்

 

எத்தனை முறை நோக்கினும்

எதுவும் விளங்கக்கூடாது.

 

சத்தியத்தின் மூச்சழித்தோர்,

தத்துவ எதிர்வினையை

நித்தியத்தில் அநுபவிக்கும்

நிலை தந்தே தீரவேண்டும்

 

2011´ம் ஆண்டு,   வல்வை சகாறாவினால் இயற்றப் பட்ட  கவிதை,
எனது கண்ணில் படாமல் போனது, ஏனென்று தெரியவில்லை.

அந்த... நேரம்,  30 வருடமாக  நடந்த  போரில்.... புலிகள்,  ஆயுதத்தை மௌனமாக்கிய  தருணம்.
பலரும்.. விரக்தியின் விழிம்பில் நின்று, எம் இனத்தை... காட்டிக் கொடுத்த,
ஓட்டுக் குழுக்களின்....  "கிழக்கில் வெள்ளி... வடக்கில் வசந்தம்" 
என்ற கோசம்... யாழ். களத்திலும்  ஒலித்த குரல்களுக்கு, கெட்ட  வார்த்தையில் பதில் சொல்லி,
எச்சரிக்கை  புள்ளிகள் வாங்கியிருந்த காலமாக இருக்கலாம்.

 "கிழக்கில் வெள்ளி... வடக்கில் வசந்தம்"  என்று...... கோசம் போட்ட,
கருணாவையும்,  ஆனந்த  சங்கரியையும், டக்ளஸ்  தேவானந்தாவையும்....  இன்று அரசியல் களத்தில்  காணவில்லை.
அவர்களுக்கு.... வக்காலத்து வாங்கிய ஆட்களையும் காணவில்லை.

இதனை... நினைக்க, "வைக்கல்  பட்டடை, ### இன்" நினைவு வருகின்றது.   
காலம்... எவ்வளவு வேகமாக, உருண்டோருக்கின்றதும், 
தமிழனுக்கு மறதிக் குணம் அதிகம் உள்ளதையும்  மீண்டும் நினைவூட்டுகின்றது. 

அடுத்து.... சம்பந்தன், மாவை, சுமந்திரன்... வாயை, பொச்சடித்துக் கொண்டு, 
பச்சைப்   பொய்  பேசிக் கொண்டு,  மேடையில்... வேட்டி  சால்வையுடன் வருவார்கள்.
முதலில்... இப்படி வரும், பச்சோந்தி  அரசியல் வாதியின்.... வேட்டியை, உருவா விட்டாலும்,
சால்வையை... உருவினாலேயே... மற்ற,  கள்ள அரசியல் வாதிகள் உருவாக  மாட்டார்கள்.  

விழிப்புணர்வு.... எம்மில், ஒரு சாதாரண விடயத்தில் இருந்து தான்... தொடங்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்போதுதான் பார்க்கிறேன், அருமையான கவிதை. அன்றும் சரி இன்றும் சரி. சூப்பர் சகோதரி.....நன்றி தமிழ்சிறி .....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலையான் கில்லர் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பக்கத்தில்  ஆரவாரமாக கருத்தாடி அநேகமாக நான் வேலையால் வந்து பார்க்கும் தருணங்களில் பல வெட்டுப்பட்ட கருத்துகளையும் நின்று மல்லுக்கட்டுவதையும் தூக்கமின்றி யாழுக்குள் உலவுவதையும் பார்த்திருக்கிறேன். அதனால் இந்தக் கவிதை உங்கள் பார்வைக்குத் தட்டுப்படாமல் போயிருக்கும். நன்றி இலையான் கில்லர் உங்கள் நினைவு மீட்டலுக்கு.

5 hours ago, suvy said:

நானும் இப்போதுதான் பார்க்கிறேன், அருமையான கவிதை. அன்றும் சரி இன்றும் சரி. சூப்பர் சகோதரி.....நன்றி தமிழ்சிறி .....!  tw_blush:

நன்றி சுவி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இப்போ கவிதையின் சுருதி கொஞ்சம் மாறுது ...........

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

ஆனால் இப்போ கவிதையின் சுருதி கொஞ்சம் மாறுது ...........

பூட்டா இல்லையே  சுருதி  தானே?

அதை  மீண்டும்   மாத்திக்கலாம்:grin:

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

ஆனால் இப்போ கவிதையின் சுருதி கொஞ்சம் மாறுது ...........

கவிதையில் சுருதி மாற்றமா? உங்கள் பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வல்வை சகாறா said:

கவிதையில் சுருதி மாற்றமா? உங்கள் பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்

நான் 2005இல் எப்படி யாழுக்கு வந்தேனோ 
அதே கண்ணுடன்தான் இருக்கிறேன் ..............

காட்ஸிகள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது ..
ஒரே மாதிரி இருந்தால் சலிப்பும் வரலாம் அல்லவா ?

சலிப்பில்லாமல் இருப்பதால்தான் தொடர்ந்தும் வருகிறேன் என்று நினைக்கிறேன் 
அடிக்கடி காட்சிகளை மாற்றி சலிப்பில்லாமல் பார்த்து கொள்கிறார்கள். 

பழைய பாடல்கள் இனிமையானவை என்றாலும் 
புதிய பாடல்களுடன் மாறி மாறி கேட்க்கும்போதுதான் 
அவை இனிமையாக கூட தெரியலாம் இல்லையா ?  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.