Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் களம் கணவன் கடைசிக்கனவு

Featured Replies

என்னைப் பொறுத்தவரை இந்தப் பெண்ணின் மீது இரக்கத்திற்குப் பதில்.. எத்தனையோ உயிர் தியாகிகள் உயிர் கொடுத்து வளர்த்த அத்தனையையும் தனது சுயதேவைக்காக... சுய இழப்புக்காக இவர் கொச்சைப்படுத்த நினைப்பது இவர் மீது வெறுப்பையும் இவருக்கு உதவி செய்ய வேண்டுமா என்ற எண்ணத்தையுமே ஏற்படுத்துகிறது.

இரண்டு கால்களையும் இழந்து இரஞ்சிக் கொண்டிருக்கும்.. ஒருவர் மீது இரக்கமும்.. அன்பும்.. பரிவும் ஏற்படுவது வழமை. அதைக் கூட இந்தக் கதை எழுதிய பாணி இல்லாமல் செய்கிறது. இது பட்டிமன்றக் கருத்தல்ல.. எம் மன உணர்வில் உந்தப்பட்ட கருத்து..!

நெடுக்ஸ், பெரிய படிப்பு எல்லாம் படித்து இருக்கின்றீர்கள், உங்களுக்கு மருத்துவதுறையில் Ethics பற்றி ஒன்றும் சொல்லித்தரவில்லையா? அன்பினி என்பவர் என்ன உங்களைப்போல லண்டனில் சுகபோகமாக, சுகதேகியாக, உள, உடல் ஆரோக்கியத்துடன் இருந்து பிரச்சாரமா செய்கின்றார்?

Edited by கலைஞன்

  • Replies 142
  • Views 22.8k
  • Created
  • Last Reply

ஒரு அமைப்பானது சமூகத்தில் பலவிதப்பட்ட பல இயல்புகளைக் கொண்ட அல்லது வித்தியாசமான எதிரெதிரான சிந்தனைகளைக்கொண்ட சகல மக்களையும் இணைத்துக் கொள்வதில் தான் அதன் வளர்ச்சி தங்கியுள்ளது .

பிரச்சனை என்ன என்றால் த.வி.பு விசுவாசிகள் அல்லது விசுவாசிகள் போல் நடிப்பவர்கள் ஓர் பிரச்சனையை பல்வேறு கோணங்களில் அலசி ஆராயும்போது அதனுள் தாங்கள் குதித்து தங்கள் விசுவாசத்தை காட்ட முனைகின்றார்கள்.

அடேயப்பா.. கப்பலில அதிலை ஒரு ஓட்டை இருக்கிது, இதில ஒரு ஓட்டை இருக்கிது என்று சொன்னால்... ஓட்டையை அடைப்பதற்கு பதிலாக கப்பலில் ஓட்டை உள்ளது என்று சொன்னவனின் வாயை அடைப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். த.வி.புவின் பெரும்பாலான விசுவாசிகளின் உளவியல் இதுதான்.

அப்படியானால் என்ன நடக்கும்? ஒருத்தனும் உண்மையைக் கதைக்க மாட்டான். ஏன் சோலி என்றுவிட்டு ஒதுங்கிவிடுவான். கடைசியில் கப்பல் மூழ்கிவிடும்.

கால்கள் துண்டிக்கப்பட்ட ஓர் போராளி கூறும் கதையைக்கூட காதுகொடுத்து கேட்க இவர்களிற்கு நாதி இல்லை. இவர்கள்தான் எதிர்காலத்தில் தமிழீழத்தை பெற்றுக்கொடுக்க போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், பெரிய படிப்பு எல்லாம் படித்து இருக்கின்றீர்கள், உங்களுக்கு மருத்துவதுறையில் Ethics பற்றி ஒன்றும் சொல்லித்தரவில்லையா? அன்பினி என்பவர் என்ன உங்களைப்போல லண்டனில் சுகபோகமாக, சுகதேகியாக, உள, உடல் ஆரோக்கியத்துடன் இருந்து பிரச்சாரமா செய்கின்றார்?

இந்தப் பெண் தன்னை ஒரு மனிதனாக அடையாளம் காட்டியபடி தனக்கு நேர்ந்துள்ள குறைகளை எம்மிடம் எடுத்து வந்திருந்தால் நிச்சயம் இந்தப் பெண்ணின் மீது எமக்கு பரிவு வந்திருக்கும். ஆனால் தன் மீது ஒரு கவனத்தை ஏற்படுத்த.. சக போராளிகளையும் போராட்டத்தையும்.. தான் கள மாடியதையும் வைத்து புனைவு எழுதிப் பிழைக்கும் நிலைக்கு இவரை அந்த நிலை இவரை இட்டுச் சென்றிருப்பது அல்லது இவரின் பெயரால் பிறர் தமது அந்த நிலைப்பாட்டை சொல்ல அனுமதிப்பது.. இவர் தொடர்பில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அது மட்டுமன்றி இவர் உண்மையான போராளி்யா அல்லது கண்ணிவெடியில் காலை இழந்த சாதாரண பெண்ணா என்ற கேள்வியும் எழுகிறது..??! கண்ணிவெடியில் காலை இழந்த சாதாரண பொதுமகளாக இருந்தாலும் அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அவரின் நீடித்த சுபீட்சமான வாழ்க்கைக்கு வழங்க வேண்டியது சர்வதேசத்தினதும்.. எமதும் கடமையாகும். அதில் ஓரிருவர் என்ற பாகுபாடின்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் உதவிகள் சம நேரத்தில் சென்றடைய வேண்டும். சமூக மீளிணைவு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். மேலும்..

இரண்டு பார்வைகளையும் இழந்து.. இடுப்புக்கு கீழே இயங்க முடியாத நிலையில் வாழ்ந்த போராளிகளோடு கூட நான் பழகி இருக்கிறேன். அவர்கள் கூட தலைவர்.. பற்றியும் போராட்டம் பற்றியும் எமக்கு பாடம் எடுத்தார்களே தவிர.. தப்பாக ஒரு வார்த்தை சொன்னதில்லை. சொல்ல முன் வந்ததும் இல்லை. அப்படி சொல்ல வேண்டாம் என்று யாரும் அவர்களைக் கட்டிப்போட்டதும் இல்லை.

நான் வாழ்ந்த சூழலில்.. யாழ் இந்துக் கல்லூரி கல்லூரி வீதி சார்ந்த பகுதியில் பல முகாம்கள் மத்தியில் வாழ்ந்திருக்கிறேன். எனக்கு மூளைச் சலவை செய்யும் எந்த நிகழ்வும் அங்கு நடக்கவில்லை. மாறாக தினமும்.. மாலை 5 மணிக்கு சிறீலங்கா தமிழ் சேவையூடாக ஈபிடிபியின் பிரச்சார வானொலி ஒலிபரப்பையும் கோமாளித்தனங்களையும்... போராளிகள் கேட்டு சிரித்து மகிழ்வதைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் இந்தப் பெண்ணிற்கு மட்டும்.. அது மூளைச் சலவையாம் எல்லோ..???!

இங்கு மூளைச் சலவை என்று சொல்பவர்கள்.. இந்தியப் படைகள் அன்புவழி.. இனிய மாலை நிகழ்ச்சிகளைப் போன்று பிரேமதாச.. டிபி விஜேதுங்க அரசுகள் மேற்கொண்ட மூளைச் சலவை பிரச்சாரங்களைக் கூட விடுதலைப்புலிகள் தடுக்கவில்லை. மாறாக அவையே மக்களை எதிரிகளிடம் இருந்து விழிப்பை பெற உதவின..!

அடிப்படையில் இந்தக் கதை போராளிகளை மையப்படுத்தி அவர்களுக்காக பரிந்து பேசுவது போல.. பேசி போராட்ட விரோத சிந்தனைகளை பரப்புவதே அதிகம் அடங்கி இருக்கிறது. இது எதிரியின் பிரச்சார யுக்தியின் இன்னொரு வடிவம். அதற்கு இந்தப் பெண் துணை போகிறாரா என்பதுவும் கேள்விக்குறியாகிறது.

முன்னாள் போராளிகள் பலர் இன்று உண்மையாக போராளிகளாக இல்லை. அவர்கள் சிறீலங்கா சிங்களப் படைகளால் வகுப்பெடுக்கப்பட்டு திறம்பட மூளைச் சலவை செய்யப்பட்டு மீள சமூகத்துக்குள் விடப்பட்டுள்ளனர். இலட்சிய உறுதி மிக்க போராளிகளைக் கொன்று விட்டார்கள்.. அல்லது இன்னும் விடுதலை செய்யாமல் வைத்து சித்திரவதை செய்கிறார்கள்.

எனவே முன்னாள் போராளிகள் என்பதன் பெயரால் உதவி கேட்டு வருவதிலும்.. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான உதவியாக அது கோரப்படுவதும் செய்யப்படுவதும்.. இங்கு அவசியமாகிறது. இந்த இடத்தில் முன்னாள் போராளிகளும் பாதிக்கப்பட்ட மக்களாகக் கருதப்பட்டு அவர்களுக்கும் சரியான மீட்சிக்குரிய வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர்களை இன்னும் இன்னும் முன்னாள் போராளிகளாக இனங்காட்டிக் கொண்டு.. எதிரிக்கும்.. மக்களுக்கும் என்று இரண்டு தோற்றங்களை காட்டும் இரட்டை நிலைப்பாடுகளை விட்டுவிட்டு.. சமூக நீரோட்டத்தில் கலக்க விரும்பும் இந்த முன்னாள் போராளிகளையும்.. பாதிக்கப்பட்ட மக்களாக இனங்கண்டு அவர்களுக்கு சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிப்பதோடு.. உதவிகளை சர்வதேச அமைப்புக்களோடு இணைந்து பெற்றுக் கொடுக்க வேண்டும். அதுமட்டுமன்றி.. முன்னாள் போராளிகள் என்பதன் பெயரில் கதைகளை மட்டுமல்ல... அவர்கள் மீது செலுத்தப்படும் எதிரியின் கண்காணிப்புக்களையும் அச்சுறுத்தல்களையும் நீக்கவும் வகை செய்ய வேண்டும். பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முதலில் அதைப் போய் செய்யுங்கோ.. பிறகு எதிக்ஸ் பற்றி விரிவாக ஆராயலாம்..!

Edited by nedukkalapoovan

விடுதலைப்புலிகள் இயக்கம் என்பதற்குள் எத்தனையோ முரண்பாடுகள் இருக்கின்றது. இதற்கு காரணம் இந்த இனம் முரண்பாடானது. இந்த இனத்துக்குள் இருந்தே விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றார்கள். மாத்தையா கருணா இனியபாரதி பிள்ளையான் கேபி என்னும் எத்தனையோ பேர் முன்னாள் விடுதலைப்புலிகள் தான். கழுத்தில் நஞ்சைக் கட்டிய கொள்கையும் எதிரியிடம் பிடிபடும்போது குப்பி கடித்து மாண்ட போராளிகளும் கரும்புலியாய் வெடித்த போராளிகளும் என்னும் ஆயிரமாயிரமாய் களத்தில் வீழ்ந்த போராளிகளும் கடைசியில் இயக்கம் கையை தூக்கி வெள்ளைக்கொடி சகிதம் சரணடையும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆயிரமாயிரம் போராளிகளது அர்பணிப்புகளும் தியாகங்களும் அங்கவீனங்களும் வேதனைகளும் தாயகம் குறித்து எப்போதும் உன்னதமாகவே இருக்கின்றது. இந்த உன்னதத்தை இயக்கத்தை வழிநடத்திய மையவாதச் சிந்தனைமுறைக்குள் சிறைவைத்து அவற்றை அர்த்தமற்றதாக்கமுடியாது. விடுதலைக்காய் போராடினார்கள் தமது உயிரை கொடுத்தார்கள் என்ற உண்மை இயக்க முரண்பாட்டையும் இன முரண்பாட்டையும் கடந்து வாழும் உண்மை. அந்த உண்மை வேறு அதிகாரத்தாலும் அடிமைக்குணத்தாலும் உருப்பெறும் மையவாத தமிழ்த்தேசியம் வேறு. ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும் இந்த முரண்பாடு விடுதலைப்போராட்டமாகவும் பயங்கரவாதமாகவும் அணுகப்படும்போது பயங்கரவாதம் என்றே உலகால் பிரகடனப்படுத்தப்படுகின்றது. இத்தால் தியாகங்கள் அர்த்தமற்றதாக்கப்படுகின்றது. பயங்கரவாதச் சிறையில் இருந்து இந்த உன்னத தியாகங்களை முதலில் மீட்கவேண்டியது அவசியம்.

இது ஒரு வேறு பட்ட நேர்காணல். கனவுகள் கலைந்துபோன நிலைமையில் ஒரு போராளி -

சரணடைந்தவராகி, கைதியாகி, மன்னிப்பு வழங்கப்பட்டவராகி, புனர்வாழ்வுக்குட்பட்டவராகி (?), மறுவாழ்வு நிலைக்குள்ளானவராகி (?) இப்போது பொதுவாழ்வில் ஈடுபடும் ஒரு நிலைக்குள்ளான சந்தர்ப்பத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்படுகிறது.

அதிகம் பேச விரும்பாத - ஏன் பேசவே விரும்பாத - பேசி என்னதான் பயன் என்ற நிலையில் - இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.

குறிப்பாக, 'விருப்பமில்லாத நிலையிலும் நான் இங்கே பேசுவதன் மூலமாக சில விசயங்களை வெளியே தெளிவு படுத்த முடியும். உள்ள நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக பேசுகிறேன்' என்று சொல்லும் ஒரு போராளியோடு உரையாடுகிறோம்.

இந்தப் பதிவு மிகவும் உணர்ச்சி பூர்வமான நிலையில் பதிவு செய்யப்பட்டது.

....

இந்த நிலைமை அதாவது, புலிகளின் வீழ்ச்சியும் நீங்கள் சரணடைந்ததும், பிறகு இப்போது விடுதலையாகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதைப் பற்றியும் என்ன நினைக்கிறீங்கள்?

இதைத் தானே நான் முன்னரே சொல்லிவிட்டன். நாங்கள் விரும்பாத ஒரு கட்டத்துக்கு வந்திருக்கிறம் எண்டு. இப்பிடியான நிலைமைக்குப் பிறகு ஒரு காலகட்டம் வரையில நீரோட்டத்தில போக வேண்டியதுதான்.

நீந்தேக்க களைச்சுப் போனால், கொஞ்சநேரம் நீரோட்டத்தின்ர போக்கில போய்ப் பிறகு திரும்பிற விளையாட்டுத்தான்.

ஆனால், இது நிலைப்பாட்டின் வீழ்ச்சியாக மாறாதா?

அப்ப என்ன செய்யிறது? எதையும் சொல்லலாம். செய்து பாத்தாத்தான் தெரியும் எண்டு சொல்லுவார்கள். அதைமாதிரி, நாங்கள் இருக்கிற சூழ்நிலையில இப்ப பேசாமல் இருக்கிறதே மேல். தொழில், வருமானம், வீடு, பிள்ளைகளின்ர எதிர்காலம் எண்டு எங்களுக்கு முன்னாலே ஏராளம் பிரச்சினைகளிருக்கு.

இதையெல்லாம் இந்த வயதில எப்பிடிச் செய்து முடிக்கிறது எண்டு தெரியேல்ல. எல்லாத்தையும் தொடக்கத்தில இருந்து செய்ய வேணும் எண்டால் எவ்வளவு கஸ்ரம்?

22 வருசமாக பொது வாழ்வில இருந்திட்டு இப்ப இப்படித் திடீரெண்டு தனியாகக் குடும்ப வாழ்க்கைக்கு வாறதே சிரமம். உழைக்க வேண்டிய உற்சாகமான காலத்தை இளமைக்காலத்தை இழந்திட்டு இப்ப புதிசா என்ன செய்யலாம் எண்டால் என்ன செய்யிறது?

நானாவது பரவாயில்ல. கால் இல்லாதவங்கள், கையில்லாதவங்களின்ரை நிலைமையைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.

இந்த நிலைமையில நாங்கள் என்ன செய்யிறது?

எங்க இருந்தாலும் இதயம் நல்லா இருந்தாச் சரி எண்டதுதான் என்ர நிலைப்பாடு.

...

பொதுவாகவே போராளிகளின் இன்றைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்.

வசதி வாய்புள்ள ஆக்களுக்கு ஒரளவு பிரச்சினை இல்ல. சிலர் வெளியில போயிட்டினம். மற்ற ஆக்கள் சிலர் சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள். சிலருக்கு சொந்தக்காரர் நண்பர்களின் உதவி இருக்கு.

ஆனால், பலருக்கும் வசதிகள் இல்லை. உதவிகள் இல்லை. சிலருக்கு சில இடங்களில் இருந்து உதவிகள் கிடைச்சிருக்கு. அவர்கள் அந்த உதவிகளைப் பெற்றுக் கொண்டு ஏதாவது செய்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான போராளிகள் வேதனையோட இருக்கிறார்கள். அரசாங்கத்தின்ர கடனைப் பெற்றாலும் அதை வைச்சுத் தொழில் செய்யக்கூடிய நிலைமை எல்லாருக்கும் இல்லை.

பொதுவாகச் சொன்னால் இதுக்கு ஒரு ஒழுங்கான திட்டம் இருந்தால்தான் எதுவும் செய்யலாம்.

பெண்போராளிகளின் நிலைமை எப்பிடி இருக்கிறது. குறிப்பாக திருமணம் முடித்திருக்கும் பெண் போராளிகளின் நிலைமை?

அவர்களின் நிலைமை இன்னும் மோசமானது. பெரும்பாலும் இந்த மாதிரிப் பெண் போராளிகள் ஆண் போராளிகளையே திருமணம் செய்திருந்தினம். இப்ப அவர்களில் பலரும் இல்லை. பலர் ஏற்கனவே வீரச்சாவடைந்து விட்டார்கள். சிலரைப் பற்றிய தகவலே இல்லை. இந்த நிலையில இந்தப் பெண் போராளிகள் பிள்ளைகளோடு பெரிய கஸ்ரங்களைப் படுகுதுகள்.

அதுதான் சொன்னேனே, ஒரு நல்ல திட்டம் இல்லை எண்டால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

முடிவாக என்ன சொல்ல விரும்புகிறீங்கள்?

இவ்வளவு காலம் எங்களை ஒரு கொள்கையில அர்ப்பணிச்சு வாழ்ந்த நாங்கள் இப்ப இப்பிடி ஒண்டுஞ் செய்ய முடியாத ஒரு நிலையில இருக்கிறம். இதை எப்பிடி மாத்திறதெண்டு தெரியேல்ல. அதைப் பற்றித்தான் யோசிக்கிறன்.

இப்பிடி யோசிக்கேக்க இனி ஒரு சோலியும் வேண்டாம் எண்டுதான் முடிவெடுக்க முடியுது.

நல்லாக் களைச்சுப் போனா தண்ணியாவது தரவேணும். அதுக்கும் ஆளிருக்க வேணும். ஆனா, இப்ப அதுக்கெல்லாம் ஆருமே இல்ல.

ஒரு முன்னாள் போராளி என்ற வகையில உங்களின் இன்றைய மனநிலை?

முன்னாள் போராளி - இப்படிச் சொல்வது தவறு. போராளி என்றால் முன்னாள் பின்னாள் என்றெல்லாம் கிடையாது. போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை. அது வெவ்வேறு விடிவங்களை எடுக்கும். வெவ்வேறு சூழ்நிலைகளில் அது வேறான தொழில்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆகவே போராட்டத்துடன் என்றைக்கும் இணைந்திருக்கும் ஒரு போராளியை முன்னாள் போராளி பின்னாள் போராளி என்று சொல்ல முடியாது.

போராளி ஒரு அரச உத்தியோகத்தரைப்போல ஓய்வு பெறவும் முடியாது. ஓய்வாளராக அவரைக் கருதவும் முடியாது - இது அவர்களைக் கொச்சைப் படுத்தும் வார்த்தை அல்லது போராளி என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாதவர்களின் கதை எண்டுதான் அர்த்தம்.

மற்றும் படி வேறு என்ன சொல்ல முடியும். இதைத்தானே ஏற்கனவே சொல்லியிருக்கிறன்.

---------------------------------

நேர்காணல்: ஆதித்தன்

http://www.ponguthamil.com/mugangal-nirangal/mugangalnirangalcontent.asp?sectionid=3&contentid={D7503D94-3D98-4D54-8F64-DD9A380E68E1}

இவ்வளவு அவலங்களுக்குப் பிறகும் உண்மையான ஒரு போராளியின் மனநிலை...

பாதிக்கப் பட்டவர்கள் பலனடைய வேணும் என்றால் ஒரு நல்ல திட்டம் வேண்டும் ஒரு நல்ல திட்டம் இல்லாவிட்டால் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என்பதே யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சொல்லப்பட்டிருக்கும் கதையின் நாயகி அன்பினிக்கு நேசக்கரம் உதவி நிறுவன உதவிகள் செய்வது தொடர்பாக நானும் பலதடைவைகள் கதைத்திருந்தேன். ஆரம்பத்தில் தொலைபேசியெடுத்தாலே அழுதழுதே கதைத்துக்கொண்டிருந்தவர் எமது உரையாடல்களை அடுத்து காலப்போக்கில் சாதாரணமாக கதைக்கத் தொடங்கி தற்சமயம்தான் சிரித்து கதைக்குமளவிற்கு வந்துள்ளார். நான் முன்னர் எழுதிய கட்டுரையான மொனிக்கப்பட்ட ஆயுதங்களும் மொளனமாக அழும் பெண் போராளிகளும் என்கிற கட்டுரைக்கு தூண்டுதாலாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

அந்தக் கட்டுரையில் இவரைப்பற்றியும் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்தேன். அப்படி தொடர்ச்சியான எமது உரையாடல்களின் போதுதான் அன்பினியும் ஒரு கலைஞர் என்கிறபடியால் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை கதையாக எழுத விரும்புவதாகவும் அதே நேரம் தனக்கு அந் வசதிகள் இல்லாதது மட்டுமல்ல சம்பவங்களை கோர்த்து வாசிப்பவர்களிற்கு அவற்றை உணர்வோட்டமாக எழுதும் நிலையிலும் தான் இல்லை எனவே தன்னுடைய சம்பவங்களை கதையாக எழுதும்படிகேட்டிருந்தார். அதனைத்தான் சாந்தி எழுதியுமிருக்கிறார். இதனை எழுதும் போது என்னை எழுதச் சொல்லி சாந்தி கேட்டிருந்தார் காரணம் கதை வெளியாகும் போது பலர் எப்பெழுதுமே தன்னை குறிவைத்து தாக்குவதற்காகவே எழுதும் ஒரு குழு எதையாவது எழுதி அது அந்தப் பெண்ணின் மனதை பாதித்துவிடக்கூடாது என்பது அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன் காரணம் எனது எழுத்துக்களில் வரும் நக்கல் நளினங்கள் வழைமைபோல இந்தக் கதையிலும் வந்துவிடும் பிறகு ஒரு உணர்வின் கதைசொல்லியக வந்தவன் அதை நக்கலாக மாற்றிவிடக்கூடாது.

அதே போல கதை சொல்லியாக வந்திருந்த சாந்தியும் அன்பினி சொன்னவற்றைஅப்படியே எழுதாமலும் மேலதிகமாக சேர்க்காமல் முடிந்தளவு குறைத்திருக்கிறார் அதாவது பலரது பெயர் விபரங்களை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக எழுதியிருக்கிறார். இதனையே நான் எழுதியிருந்தால் நேரடியாக பெயர்களை குறிப்பிட்டே எழுதியிருந்திருப்பேன்.

அடுத்ததாக இங்கு கதைக்கு கருத்தெழுதாமல் தீர்வு அல்லது ஆலோசனை சொல்லப் புறப்பட்டிருக்கும் பலரில் இன்னமும் திருமணமாகாத இளைளுர்களும் எழுதியிருக்கிறார்கள். திருமணமாகி 18 வயதிற்கு மேல் நிரம்பிய மகன்கள் உள்ளவர்களும் எழுதியிருக்கிறார்கள். திருமணமாகாத இளைஞர்களில் ஒருவர் யாராவது முன்வந்து பலவருடம் தாயகத்திற்காக போராடிய இந்த பெண்ணை மணந்து அவரிற்கான ஒரு துணையாக இருப்பதுடன் ஒரு முன்மாதிரியாகவும் இருப்பேன் என்றோ அல்லது எனது பிள்ளைக்கு தமிழையும் தாயக பற்றையும் ஊட்டி வளர்திருக்கிறேன் நான் சொன்ன சொல்லை என் மகன் தட்டமாட்டான் என்று தம்பட்டமடிப்பவர்கள் தனது மகனிற்கு இந்தப் பெண்ணை வாழ்வின் துணையாக்குகிறேன் என்று ஒரு கருத்துகூட வரவில்லையே .ஏனெனில் இந்தப் பெண்ணிற்கு இன்று தேவை உடற் சுகமல்ல அவளது உடலை சுமக்க சுகத்தை துக்கத்தை பகிர்ந்து கொள்ள ஒருவன் ஒருவனை காதலித்திருக்கிறாள் கட்டாயப்படுத்தப்பட்டு ஒருத்தனை திருமணம் செய்திருக்கிறாள். இரண்டு கால்களும் அற்றவள்..... புரட்சி நாயகர்கள் முன்வரலாம்... யாரும் வரவில்லையே ........சொல்லலாம் நிறைய சொல்லலாம் இதுமட்டுமா பெண்... இப்படி ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டும் கை கால் இல்லாமலும் இருக்கிறார்கள். இந்த ஒரு பெண்ணை கட்டினால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடுமா என்ன?? எல்லா பெண்களிற்கும் பிரச்சனை தீரவேண்டும்..அதற்காக எல்லாரையுமா கட்டமுடியும்..அதுதானே?? ஊரிலை உள்ளவர்கள் யாராவது கட்டலாம்தானே.... வடகிழக்கில் இந்தனை இலட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள் தானே நான் மட்டும் என்னத்திற்காக துவக்கை தூக்கி காடு மேடெல்லாம் அலைய வேண்டும் .......நினைத்திருக்கலாம் பிரபாகரனும்கூட.......................

பி.கு .எனக்கு திருமணமாகிவிட்டதனால் என்னால் எதுதுவும் செய்யமுடியாது. .18 வயதிற்கு கூடிய மகனும் இல்லை

எனக்கு ஒரேயொரு மகள் வயது ஒன்பது ...............

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியார் இந்த கதையை எழுதி நாறடிக்காமல் விட்டதையிட்டு நான் மிகவும் ஆனந்தமடைகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக இங்கு கதைக்கு கருத்தெழுதாமல் தீர்வு அல்லது ஆலோசனை சொல்லப் புறப்பட்டிருக்கும் பலரில் இன்னமும் திருமணமாகாத இளைளுர்களும் எழுதியிருக்கிறார்கள். திருமணமாகி 18 வயதிற்கு மேல் நிரம்பிய மகன்கள் உள்ளவர்களும் எழுதியிருக்கிறார்கள். திருமணமாகாத இளைஞர்களில் ஒருவர் யாராவது முன்வந்து பலவருடம் தாயகத்திற்காக போராடிய இந்த பெண்ணை மணந்து அவரிற்கான ஒரு துணையாக இருப்பதுடன் ஒரு முன்மாதிரியாகவும் இருப்பேன் என்றோ அல்லது எனது பிள்ளைக்கு தமிழையும் தாயக பற்றையும் ஊட்டி வளர்திருக்கிறேன் நான் சொன்ன சொல்லை என் மகன் தட்டமாட்டான் என்று தம்பட்டமடிப்பவர்கள் தனது மகனிற்கு இந்தப் பெண்ணை வாழ்வின் துணையாக்குகிறேன் என்று ஒரு கருத்துகூட வரவில்லையே .ஏனெனில் இந்தப் பெண்ணிற்கு இன்று தேவை உடற் சுகமல்ல அவளது உடலை சுமக்க சுகத்தை துக்கத்தை பகிர்ந்து கொள்ள ஒருவன் ஒருவனை காதலித்திருக்கிறாள் கட்டாயப்படுத்தப்பட்டு ஒருத்தனை திருமணம் செய்திருக்கிறாள். இரண்டு கால்களும் அற்றவள்..... புரட்சி நாயகர்கள் முன்வரலாம்... யாரும் வரவில்லையே ........சொல்லலாம் நிறைய சொல்லலாம் இதுமட்டுமா பெண்... இப்படி ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டும் கை கால் இல்லாமலும் இருக்கிறார்கள். இந்த ஒரு பெண்ணை கட்டினால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடுமா என்ன?? எல்லா பெண்களிற்கும் பிரச்சனை தீரவேண்டும்..அதற்காக எல்லாரையுமா கட்டமுடியும்..அதுதானே?? ஊரிலை உள்ளவர்கள் யாராவது கட்டலாம்தானே.... வடகிழக்கில் இந்தனை இலட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள் தானே நான் மட்டும் என்னத்திற்காக துவக்கை தூக்கி காடு மேடெல்லாம் அலைய வேண்டும் .......நினைத்திருக்கலாம் பிரபாகரனும்கூட.......................

பி.கு .எனக்கு திருமணமாகிவிட்டதனால் என்னால் எதுதுவும் செய்யமுடியாது. .18 வயதிற்கு கூடிய மகனும் இல்லை

எனக்கு ஒரேயொரு மகள் வயது ஒன்பது ...............

போரால் சமூகத்தால் எதிரியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தாலே தீர்வு பிறக்கும் என்றால் அது சாத்தியப்பாடு குறைந்தது. இவர்களின் உடனடித் தேவைகளை கவனிக்க தொண்டர் அமைப்புக்களை நீங்கள் அணுகலாம். சர்வதேச அமைப்புக்கள் இருக்கின்றன. அவை இவர்களுக்கு உதவ தாராள மன நிலையில் உள்ளன. US aid நிறுவனம் செயற்படுகிறது. அதனிடம் இந்தப் பெண்ணின் நிலையை எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் அரசியலுக்கு அப்பால் இந்தப் பெண்ணிற்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி அளிப்பார்கள்.

மேற்கு நாடுகளில் கூட single parents இருக்கிறார்கள். அவர்களை போய் யாரும் கலியாணம் கட்டுங்கோ என்று அரசுகள் வற்புறுத்திக் கேட்பதும் இல்லை. இரஞ்சுவதும் இல்லை. இந்தப் பெண்கள் ஆகட்டும் ஆண்கள் ஆகட்டும் மன வலிமை உள்ளவர்களாக ஆக்கப்பட்டு சமூகத்தில் சவால்களை எதிர்கொள்ள பயிற்றுவிக்கப்பட்டு.. நல்ல மன பலத்தோடு தன்னம்பிக்கையோடும் வாழ கற்றுக் கொடுக்கப்பட வேண்டியவர்கள். அதற்கான அடிப்படை பொருளாதார வசதிகளும் தொழில் வாய்ப்புக்களும் அளிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில்.. வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு முன்னேறி வாழ வரும் நிலையில் இவர்களை திருமணம் செய்ய ஆட்கள் முன் வரக் கூடும்.

இன்றைய நிலையில் இவர்களை யாருக்கும் திருமணம் செய்து வைத்தால் கூட இவர்கள் அதனால் நல்ல வாழ்வை அமைத்துக் கொள்ளவா முடியும்..??! உண்மையான அக்கறை இந்தப் பெண்கள் மீதிருந்தால்.. இவர்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் முன் கொண்டு போய் நிறுத்துங்கள். அத்தோடு உங்களால் செய்யக் கூடிய உதவிகளையும் செய்யுங்கள். இவர்களின் சமூகப் பாதுகாப்பை உள்ளூர் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களே உறுதி செய்து கொடுக்க வேண்டும். அதற்கு சிங்கள எதிரியை தான் அவர்கள் வற்புறுத்த வேண்டும். அவன் தனது படைகளையும் காடைகளையும் தமிழர்களின் மண்ணில் இருந்து விலக்கும் வேளையில் இந்தப் பெண்கள் தனித்துக் கூட செளகரிகமாக வாழும் நிலை நிச்சயம் மலரும்..!

அப்போது இந்த அன்பினிகள்.. போராட்டத்தையும்.. சக போராளிகளையும் திட்டியதற்காக மனம் வருந்தவே செய்வார்கள்..! அந்த வேளைக்காகவும் நாம் செயற்பட வேண்டி உள்ளது.

Edited by nedukkalapoovan

சாத்திரியாரே என்ன ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் எங்களில் கை வைக்கின்றீர்கள்.

ஊர்வலத்தில கொடியை பிடிச்சோமா,இணையத்தில வந்து தேசியம் வளர்த்தோமா என்றிருக்கும் எங்களிடம் வந்து இப்படியெல்லாம் கேட்கக்கூடாது.நாங்கள் அழுதிடுவோமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசித்த பின்னர் பலரும் சொல்லும் கருத்துகள் ஏற்க முடியாமல் இருக்கு. முதலில் போராட்டம் பற்றியோ அங்கிருப்பவர்களின் உரிமை பற்றியோ கதைப்பதற்கு புலம் பெயர்ந்த எங்கள் யாருக்கும் ஒரு துளி உரிமை கூட இல்லை. (நான் உட்பட) அங்கிருப்பவர்களிடமே அவர்களின் உரிமை பற்றி முடிவெடுக்கும் உரிமையை விட்டு விடுங்கள். நீங்கள் அனுப்பும் சில டொலர்களும், பவுண்களும் அந்த உரிமையை உங்களுக்கு தரப் போவதில்லை. முடிந்தால், மனசிருந்தால் உதவி செய்யுங்கள். இல்லாட்டிக்கு பேசாமல் இருப்பது பெரிய விடயம். அத விட்டுப் போட்டு அந்தப் பிள்ளை ஒண்டில் குப்பியடிச்சிருக்கொனும் இல்லாட்டிக்கு கரும்புலியாய் வெடிச்சிருக்கொனும் எண்டு சொல்லுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அடுத்ததாக மூளைச் சலவை நடைபெறுவதில்லை என்று கூறுவது நூறு வீத பொய். நான் தனிப்பட்ட ரீதியில் அதை அனுபவித்திருக்கிறேன், அத்துடன் போராளிகள் எல்லாரும் சுத்த தங்கம் எண்டு சிலர் கூறுவதும் ஏற்க முடியாது. 2006 மார்கழி வரை ஊரிலே இருந்தவன் எண்ட வகையிலே நான் பல விசயங்களையும் என் கண்களாலேயே கண்டிருக்கிறேன். ஆனால் இப்போது யாரை நொந்து என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்

தாழ்மையுடன் சிலகருத்துகளையும் அறிவுரைகளையும் கூறியிருக்கும் ஜீவா ரதி சுகன் மற்றையவருக்கும் கதை எப்படி உருவானது என்ற கருத்தை நேரம் எடுத்து பகிhந்துகொண்ட சாத்திரி அவர்களுக்கும் நன்றிகளும். இந்த கதை வர போகின்றது என்ற திரியின்கீழ் அந்த எழுத்தாளரை நோக்கி சில கேள்விகளை வைத்தேன் இன்றுவரை பதில் இல்லை............. அதில் இருந்து இந்த கதையின் கீழ் உள்ள எனது அனைத்துகருத்துகளிலும் வேறுவிதமாக கண்ணோட்டம் இருப்பதால் இதை எழுதவேண்டிய கடமை உள்ளதாக உணர்கிறேன்.

முதலவாதக எனது கருத்துகளை புரியாதவர்கள்தான் இங்கே புலம்பிகொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய புலம்லையும் கொஞ்சம் புரியும்படியாக புலம்புங்கள் என்று எழுதியும் அதற்கான பதில் இல்லை ஆனால் புலம்பல் தொடர்கின்றது.

" நாம் எந்தவிடயம் பற்றி பேசுகிறோம் என்பதைவிட யாரோடு பேசுகிறோம் என்பது முக்கியமானது" அதுவே தவறுதலாக இந்த கதையின் கீழ் நடந்துவிட்டது. அந்த அப்பாவி முன்னைய பெண் போராளியின் நிலை உணராமல் இங்கு யாரும் இல்லை.........(ஒரு சில மிருகங்களை தவிர அவர்கள் இந்த பெண்ணின் நிலையை கண்டு ஒன்றும் இரங்போவதில்லை புலிவாந்தியெடுக்க இது உதவும்போல் உள்ளது என்று எண்ணி வந்துள்ளார்கள்) அவருக்கு உதவிகள் போக கூடாது என்ற நிலையிலும் இங்கு யாரும் இல்லை. ஆனால் எமது உதவிகள் அந்த பெண்ணுடைய நிரந்தர வாழ்விற்கு எவ்வாறு உதவும்? என்ற கருத்தியல் திசைமாற்ற பட்டிருக்கின்றது............... இந்த கதையில் வந்த போராளி மட்டுமல்ல இன்னும் எத்தனையோ போராளிகள் தமிழராக வாழ எத்தணித்தவர்கள் எத்தனைகளையோ இழந்து இன்று கையேந்தி நிற்கிறார்கள். பசித்தால் பத்தும் பறக்கும் என்பார்கள்.................... உண்மைதான் அவர்களுடைய பசியில் பங்கெடுப்பது என்பதை சிந்தித்து செய்வதற்கு நேர அவகாசமில்லை. அது உடனடியாகவே செய்யபட வேண்டியது................

ஆனால் இது கதை வடிவில் வெளிவர தொடங்கியபோது எமது தொலைநோக்கு பார்வையை விரிவாக்கலாம் எல்லோரும் எப்படி ஒன்று சேரலாம் என்ற கேள்விகளுக்கான பதில்களை புறந்தள்ளிவிட்டு தொடரமுடியாது இருந்தது. ஆனால் அதை தவறனாவர்களுடன் கதையாடபோனது தவறாகிவிட்டது.

ஒரு சமூகத்தின் ஒரு அங்கமான நாங்கள் இன்னொருவரை அதை செய் இதை செய் என வற்புறுத்த முடியாது. அதற்கு ஒரு அரச கட்டமைப்பை உருவாக்கி அதனுடுதான் ஒரு மனிதனின் கடமைகளை வற்புறுத்த முடியம். திரும்ப திரும்ப எந்த பாதையால் நாம் செல்ல எத்தணித்தாலும் எமக்கு வழிகாட்டிகளே தீராத தேவையாக இருக்கின்றது. இதை நாம் வடிவமைக்க வேண்டும்............. அதை தவிர்த்துவிட்டு நாம் தொடருவது என்பது ஒரு பயணமே இல்லை என்று தெளிவாக தெரிந்த பின்பும் நாடக்க எத்திக்கும் ஒரு ஏமாற்று வேலையாகும்.

முன்னைநாள் போராளிகளின் நிலையை இந் கதையை வாசித்துதான் சிலபேர் கேள்வியுற்று உள்ளார்கள்போல் அதுதான் இந்த கதையை வாசியுங்கள் என்று எமை வற்புறுத்துகிறார்கள். இது கூட ஒருவரிடம் சொல்லி அவர் எழுதிய கதை.............. வெளியிலே சொல்லமுடியாத கதைகளுடன் அங்கே எத்தனையோ போராளிகள் உள்ளார்கள்.

திரும்பவும் நான் சொல்லவருவது பசித்தவனுக்கு மீனை கொடுப்பதிலும்விட அவனுக்கு மீனை பிடிக்க கற்றுகொடுக்கலாம் என்பதே. இதை எத்தனை பேர் புரிவார்கள்..........???????

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசித்த பின்னர் பலரும் சொல்லும் கருத்துகள் ஏற்க முடியாமல் இருக்கு. முதலில் போராட்டம் பற்றியோ அங்கிருப்பவர்களின் உரிமை பற்றியோ கதைப்பதற்கு புலம் பெயர்ந்த எங்கள் யாருக்கும் ஒரு துளி உரிமை கூட இல்லை. (நான் உட்பட) அங்கிருப்பவர்களிடமே அவர்களின் உரிமை பற்றி முடிவெடுக்கும் உரிமையை விட்டு விடுங்கள். நீங்கள் அனுப்பும் சில டொலர்களும், பவுண்களும் அந்த உரிமையை உங்களுக்கு தரப் போவதில்லை. முடிந்தால், மனசிருந்தால் உதவி செய்யுங்கள். இல்லாட்டிக்கு பேசாமல் இருப்பது பெரிய விடயம். அத விட்டுப் போட்டு அந்தப் பிள்ளை ஒண்டில் குப்பியடிச்சிருக்கொனும் இல்லாட்டிக்கு கரும்புலியாய் வெடிச்சிருக்கொனும் எண்டு சொல்லுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அடுத்ததாக மூளைச் சலவை நடைபெறுவதில்லை என்று கூறுவது நூறு வீத பொய். நான் தனிப்பட்ட ரீதியில் அதை அனுபவித்திருக்கிறேன், அத்துடன் போராளிகள் எல்லாரும் சுத்த தங்கம் எண்டு சிலர் கூறுவதும் ஏற்க முடியாது. 2006 மார்கழி வரை ஊரிலே இருந்தவன் எண்ட வகையிலே நான் பல விசயங்களையும் என் கண்களாலேயே கண்டிருக்கிறேன். ஆனால் இப்போது யாரை நொந்து என்ன பயன்?

உங்கள் கருத்தையும்.. வன்னி மண்ணில் நின்று திருமணம் கூட செய்யாமல்.. மண்ணுக்காக போராடி வீழ்ந்த இந்தத் தளபதியின் பேச்சையும் கேளுங்கள்..! உங்களை விட அவருக்கு போராளிகளைப் பற்றியும் நன்கு தெரிந்திருக்கும்... மக்களைப் பற்றியும் நன்கு தெரிந்திருக்கும்..!

எண்ணற்ற அர்ப்பணிப்புக்களை செய்துள்ள போராளிகள் மீது வைக்கப்படும் ஓரிருவரின் அநாவசிய குற்றச்சாட்டுக்கள்.. அந்தப் போராளிகளை பிள்ளைகளாக.. சகோதர்களாக.. தங்களின் உயிராக நேசிக்கும் மக்களை நீங்கள் உங்களிடம் இருந்து தூர விலக்கி வைக்கிறீர்கள் என்ற அர்த்தத்தையே பெற்றுத் தரும்.

சரணடைந்த எத்தனையோ போராளிகள்.. இன்றும் சொல்கிறார்கள்.. நாங்கள் போராடிச் செத்திருக்கலாம்.. அல்லது சயனைட் அடிச்சிருக்கலாம்.. இந்த சர்வதேசத்தை நம்பி இவனிட்ட சரணடைந்து படும் துன்பத்தை விட அது மேல்.. என்று..!

இதனை எல்லாம் உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக.. நாங்கள் அதைக் கண்டோம் இதைக் கண்டோம் என்று எமக்குரிய வகைகளில் காட்சிகளை விளங்கிக் கொண்டு விபரிக்க முடியும். ஆனால் உண்மை என்பது தீர விசாரித்தறிதலிலேயே உள்ளது.

ஒரு தளபதி.. தீர பங்களிக்காமல் விசாரிக்காமல் ஒன்றைச் சொல்லமாட்டார். ஏனெனில் அவருக்கு பின்னால் நிற்கும் போராளிகள் அந்தத் தளபதியின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்துத்தான் அவரின் கட்டளைக்குப் பணிகின்றனர். அந்த வகையில் இந்த காணொளியை பாருங்கள். சிலர் இந்த கள உண்மைகளை மூளைச் சலவை என்று சொல்வார்களாக இருந்தால்.. உலகெங்கும் ஊடகங்கள் அதையே செய்கின்றன என்ற பொது முடிவுக்கும் அவர்கள் வந்தாக வேண்டும்.

அன்பினிகள் எனியாவது.. தங்களின் இன்றைய நிலை.. தேவை இவற்றைப் பற்றி மக்களுக்கு சொல்ல வேண்டுமே தவிர.. மக்கள் காணாதவற்றை தீர விசாரித்து அறியாதவற்றை கதையாக்கி மக்களின் மனங்களை நோகடித்து... அவர்களிடமே உதவியும் பெற நிற்பது சரியானதல்ல..! அது அவர்களுக்கு வேண்டிய உதவியையோ மனிதாபிமானப் பார்வையையே பெற்றுத் தராது..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையை வாசித்த பின்னர் பலரும் சொல்லும் கருத்துகள் ஏற்க முடியாமல் இருக்கு. முதலில் போராட்டம் பற்றியோ அங்கிருப்பவர்களின் உரிமை பற்றியோ கதைப்பதற்கு புலம் பெயர்ந்த எங்கள் யாருக்கும் ஒரு துளி உரிமை கூட இல்லை. (நான் உட்பட) அங்கிருப்பவர்களிடமே அவர்களின் உரிமை பற்றி முடிவெடுக்கும் உரிமையை விட்டு விடுங்கள். நீங்கள் அனுப்பும் சில டொலர்களும், பவுண்களும் அந்த உரிமையை உங்களுக்கு தரப் போவதில்லை. முடிந்தால், மனசிருந்தால் உதவி செய்யுங்கள். இல்லாட்டிக்கு பேசாமல் இருப்பது பெரிய விடயம். அத விட்டுப் போட்டு அந்தப் பிள்ளை ஒண்டில் குப்பியடிச்சிருக்கொனும் இல்லாட்டிக்கு கரும்புலியாய் வெடிச்சிருக்கொனும் எண்டு சொல்லுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அடுத்ததாக மூளைச் சலவை நடைபெறுவதில்லை என்று கூறுவது நூறு வீத பொய். நான் தனிப்பட்ட ரீதியில் அதை அனுபவித்திருக்கிறேன், அத்துடன் போராளிகள் எல்லாரும் சுத்த தங்கம் எண்டு சிலர் கூறுவதும் ஏற்க முடியாது. 2006 மார்கழி வரை ஊரிலே இருந்தவன் எண்ட வகையிலே நான் பல விசயங்களையும் என் கண்களாலேயே கண்டிருக்கிறேன். ஆனால் இப்போது யாரை நொந்து என்ன பயன்?

அப்ப உங்களுக்கு பிறகு தான். 2008 மார்ச் 15ம் திகதி நான் கொழும்பிலை இருந்து வெளிக்கிட்டனான். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முப்பதாயிரம் போராளிகளும்

பொழுது போக்குக்காகவோ

பக்கத்தில் வகுப்பு நடந்ததால் .

அல்லது

மோட்டார் சைக்கிள் ஓடலாம்

உடுப்பு போடலாம்

ஆயுதம் எடுத்து சுடலாம்

காதலிக்கலாம்

அப்பா அம்மாவுக்கு கட்டுப்படாமல் திரியலாம்.............................................................

என்று இயக்கத்துக்கு வந்தார்களா கலைஞன் மற்றும் ஜீவா?

இதில் நமக்குள் சிக்கல்.

இதற்கான பதிலிலேயே எல்லாம் தங்கியுள்ளது.

இதற்கு பதில் கூறாமல் விடுவது தான் புத்திசாலித்தனம் விசுகு அண்ணா. :)

(குப்பையை கிழற கிழற குப்பைதானே வரும்)

தொடர்ச்சியாக சக கருத்தாளர்களை மிகவும் அவமதித்து எழுதும் போக்கு இந்த திரியில் காணப்படுகின்றது. பல கருத்துகளை நீக்கியுள்ளேன். இங்கு வாசகர்கள் வாசிக்க வருவது இரண்டு மூன்று பேரின் சண்டைகளை ரசிப்பதற்கு அல்ல

தொடர்ந்தும் சக கருத்தாளரை அவமதிப்பது தொடர்ந்தால், நிர்வாகம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்

உலகம் ரொம்பப் பெரியதுங்கோ. த.வி.பு, சிங்களம், இலங்கை, தேசியம், உங்கள் நடிப்புக்கள் இவற்றுக்கும் மேலாக பரந்த உலகம் உள்ளது.

நீங்கள் தானே சிங்களவன் மேல் என்று இபே சொன்னனீங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பதில் கூறாமல் விடுவது தான் புத்திசாலித்தனம் விசுகு அண்ணா. :)

(குப்பையை கிழற கிழற குப்பைதானே வரும்)

நன்றி ஜீவா

ஆனால் ஒன்றை மட்டும் விளக்கமாக எழுதுங்கள்

குப்பை என்று எதைச்சொல்கின்றீர்கள்.

புலிகளையா?

போராட்டத்தையா?

அல்லது இதை இரண்டையும் வழிநடத்தியவரையா? :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நீங்கள் எதைச் சொன்னாலும்.. மக்களிடம் உதவி கோரி வரும் போது அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மைகளை ஆதாரங்கள் சகிதம் சொல்ல வேண்டும். அது கூட உண்மையில் அவசியமில்லை. அன்பினி போன்றவர்களின் கடந்த காலம் பற்றி மக்களுக்கு அறிய வேண்டிய தேவை இருப்பதைக் காட்டிலும் அன்பினிகளின் இன்றைய எதிர்கால தேவை என்பது பற்றியதாகத்தான் செய்திகளும் உண்மைகளுமே பகிரப்பட வேண்டும்.

அவரவர் தங்களின் சுய எண்ணத்தில் எழும் எண்ணங்களை கதைகளுள் கதாப்பாத்திரங்களாக வடித்து மக்களிடம் உதவி கேட்க.. மக்களும் எந்த ஆய்வறிதலும் இன்றி உதவி செய்ய வேண்டும்.. மனிதாபிமானம் கட்டி வளர்க்க வேண்டும் என்ற தங்கள் எதிர்பார்ப்பு தவறானது.

இன்றைய சூழலில் மக்கள் முன் வரும் ஒரு ஆக்கத்தை இட்டு மக்களுக்கு கேள்வி கேட்க உரிமை உண்டு. அதனை தடுத்து நிறுத்த முடியாது. ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாக அன்பினிக்கு தேவையான மனிதாபிமான உதவிகளைக் கோருவது வேறு.. அதைக் கோர அடுத்தவர்கள் மீது வசை பாடுதல் வேறு. அது மற்றவர்கள் மீதான மனிதாபிமானத்தை நிராகரித்து அன்பினிக்கு மனிதாபிமானம் காட்டுங்கள் என்று அழைப்பது போன்றது.

நேசக்கரத்தின் தொடக்கம் இந்த யாழ் களத்தில் தான் நிகழ்ந்தது. அன்றும் உறவுகள் அதற்கான சோதனையை கண்டனர். ஒரு கட்டத்தில் அநாவசிய கருத்தாடல்கள் மூலம்.. நேசக்கரத்தின் அப்பழுக்கற்ற நோக்கமும் சந்தேகத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் கள உறவுகள் அதனை பெரிது படுத்தாமல்.. மனிதாபிமான உதவிகள் தாயக மக்களை சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக உதவி நின்றனர். புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு எடுப்பட்டு போய் காலிழந்தவளுக்கு உதவு.. புலிகள் ஆசைகாட்டி பிடிச்சவர்களுக்கு உதவு.. புலிகளால் வலுக்கட்டாயமாக சேர்த்து வாழ்விழந்தவளுக்கு உதவு.. புலிகளால் கஸ்டப்பட்டவர்களுக்கு உதவு.. என்ற... இப்படியான கோரிக்கைகளை நீங்கள் முன் வைத்திருந்தால்.. இந்த நேசக்கரம் இங்கு உருவாகி இருக்கவே முடியாது. அதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

நேசக்கரம் அரசியல் பின்னணிகள்.. போராட்டப் பின்னணிகள் கடந்து தாயக மக்களின் துயரை சிறிதள வேணும் புலம்பெயர் யாழ் கள உறவுகளின் பங்களிப்போடு தீர்க்க என்று உருவாக்கப்பட்ட அமைப்பு. இன்று அது பல கைகள் மாறிப் போயிருந்தாலும்.. அதன் அடிப்படை இலக்கில் இருந்து மாறி புலியால் கஸ்டப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்பாக நீங்கள் அதனை முன்னிறுத்துவீர்களாக இருந்தால்.. நிச்சயம் நேசக்கரத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் என்ற வகையில் நாம் அதனூடான அனைத்துப் பங்களிப்புக்களையும் எதிர்காலத்திலும் எனியும் நிறுத்திக் கொள்ளவே வழிவகுக்கும். இது நேசக்கரத்தை செயலிழக்கச் செய்வதற்காக அல்ல. அது தனது அடிப்படை கொள்கையில் இருந்து விலகிச் செல்வதால் என்பதாகவே அமையும்.

நன்றி.

Edited by nedukkalapoovan

நீங்கள் தானே சிங்களவன் மேல் என்று இபே சொன்னனீங்கள்...

தானும், தனது குடும்பமும் பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டு ஆனால்.. அடுத்தவரை யாரோ அப்பாவிகளை ஆயுதம் ஏந்தி போராட தூண்டி, அவர்களை அங்கவீனர்களாகவும், வாழ்க்கையை தொலைத்தவர்களாகவும் மாற்றும் கைங்கரியத்தைவிட சிங்களவனுக்கு குண்டி துடைத்துவிடுவது மேல். இதையே கூறினேன். தமது பிள்ளைகளிற்கு பெரிய ஆடம்பரமாக சாமத்தியவீடு, கலியாணவீடு, பிறந்தநாள் விழாக்கள், பட்டமளிப்பு விழாக்கள்... ஆனால்.. மற்றவன் பிள்ளைகள் துவக்கு தூக்கி குண்டு அடிபட்டு உடல் துண்டாடப்பட்டு சாகவேண்டும்?

தானும், தனது குடும்பமும் பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டு ஆனால்.. அடுத்தவரை யாரோ அப்பாவிகளை ஆயுதம் ஏந்தி போராட தூண்டி, அவர்களை அங்கவீனர்களாகவும், வாழ்க்கையை தொலைத்தவர்களாகவும் மாற்றும் கைங்கரியத்தைவிட சிங்களவனுக்கு குண்டி துடைத்துவிடுவது மேல். இதையே கூறினேன். தமது பிள்ளைகளிற்கு பெரிய ஆடம்பரமாக சாமத்தியவீடு, கலியாணவீடு, பிறந்தநாள் விழாக்கள், பட்டமளிப்பு விழாக்கள்... ஆனால்.. மற்றவன் பிள்ளைகள் துவக்கு தூக்கி குண்டு அடிபட்டு உடல் துண்டாடப்பட்டு சாகவேண்டும்?

சரி, அப்படியே சேவை தொடர வாழ்த்துக்கள்!

கலைஞன் நீங்கள் எதைச் சொன்னாலும்.. மக்களிடம் உதவி கோரி வரும் போது அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மைகளை ஆதாரங்கள் சகிதம் சொல்ல வேண்டும். அது கூட உண்மையில் அவசியமில்லை. அன்பினி போன்றவர்களின் கடந்த காலம் பற்றி மக்களுக்கு அறிய வேண்டிய தேவை இருப்பதைக் காட்டிலும் அன்பினிகளின் இன்றைய எதிர்கால தேவை என்பது பற்றியதாகத்தான் செய்திகளும் உண்மைகளுமே பகிரப்பட வேண்டும்.

அவரவர் தங்களின் சுய எண்ணத்தில் எழும் எண்ணங்களை கதைகளுள் கதாப்பாத்திரங்களாக வடித்து மக்களிடம் உதவி கேட்க.. மக்களும் எந்த ஆய்வறிதலும் இன்றி உதவி செய்ய வேண்டும்.. மனிதாபிமானம் கட்டி வளர்க்க வேண்டும் என்ற தங்கள் எதிர்பார்ப்பு தவறானது.

இன்றைய சூழலில் மக்கள் முன் வரும் ஒரு ஆக்கத்தை இட்டு மக்களுக்கு கேள்வி கேட்க உரிமை உண்டு. அதனை தடுத்து நிறுத்த முடியாது. ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாக அன்பினிக்கு தேவையான மனிதாபிமான உதவிகளைக் கோருவது வேறு.. அதைக் கோர அடுத்தவர்கள் மீது வசை பாடுதல் வேறு. அது மற்றவர்கள் மீதான மனிதாபிமானத்தை நிராகரித்து அன்பினிக்கு மனிதாபிமானம் காட்டுங்கள் என்று அழைப்பது போன்றது.

நேசக்கரத்தின் தொடக்கம் இந்த யாழ் களத்தில் தான் நிகழ்ந்தது. அன்றும் உறவுகள் அதற்கான சோதனையை கண்டனர். ஒரு கட்டத்தில் அநாவசிய கருத்தாடல்கள் மூலம்.. நேசக்கரத்தின் அப்பழுக்கற்ற நோக்கமும் சந்தேகத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் கள உறவுகள் அதனை பெரிது படுத்தாமல்.. மனிதாபிமான உதவிகள் தாயக மக்களை சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக உதவி நின்றனர். புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு எடுப்பட்டு போய் காலிழந்தவளுக்கு உதவு.. புலிகள் ஆசைகாட்டி பிடிச்சவர்களுக்கு உதவு.. புலிகளால் வலுக்கட்டாயமாக சேர்த்து வாழ்விழந்தவளுக்கு உதவு.. புலிகளால் கஸ்டப்பட்டவர்களுக்கு உதவு.. என்ற... இப்படியான கோரிக்கைகளை நீங்கள் முன் வைத்திருந்தால்.. இந்த நேசக்கரம் இங்கு உருவாகி இருக்கவே முடியாது. அதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

நேசக்கரம் அரசியல் பின்னணிகள்.. போராட்டப் பின்னணிகள் கடந்து தாயக மக்களின் துயரை சிறிதள வேணும் புலம்பெயர் யாழ் கள உறவுகளின் பங்களிப்போடு தீர்க்க என்று உருவாக்கப்பட்ட அமைப்பு. இன்று அது பல கைகள் மாறிப் போயிருந்தாலும்.. அதன் அடிப்படை இலக்கில் இருந்து மாறி புலியால் கஸ்டப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்பாக நீங்கள் அதனை முன்னிறுத்துவீர்களாக இருந்தால்.. நிச்சயம் நேசக்கரத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் என்ற வகையில் நாம் அதனூடான அனைத்துப் பங்களிப்புக்களையும் எதிர்காலத்திலும் எனியும் நிறுத்திக் கொள்ளவே வழிவகுக்கும். இது நேசக்கரத்தை செயலிழக்கச் செய்வதற்காக அல்ல. அது தனது அடிப்படை கொள்கையில் இருந்து விலகிச் செல்வதால் என்பதாகவே அமையும்.

நன்றி.

நன்றி நெடுக்ஸ்!

  • கருத்துக்கள உறவுகள்

தானும், தனது குடும்பமும் பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டு ஆனால்.. அடுத்தவரை யாரோ அப்பாவிகளை ஆயுதம் ஏந்தி போராட தூண்டி, அவர்களை அங்கவீனர்களாகவும், வாழ்க்கையை தொலைத்தவர்களாகவும் மாற்றும் கைங்கரியத்தைவிட சிங்களவனுக்கு குண்டி துடைத்துவிடுவது மேல். இதையே கூறினேன். தமது பிள்ளைகளிற்கு பெரிய ஆடம்பரமாக சாமத்தியவீடு, கலியாணவீடு, பிறந்தநாள் விழாக்கள், பட்டமளிப்பு விழாக்கள்... ஆனால்.. மற்றவன் பிள்ளைகள் துவக்கு தூக்கி குண்டு அடிபட்டு உடல் துண்டாடப்பட்டு சாகவேண்டும்?

நாம் அகதியாக ஓடிவந்தோம்

உழைத்தோம். எம்மை நோக்கி அழுகுரல் கேட்டது. அதற்காக அம்மக்களால் நேசிக்கப்பட்ட தலைமை எம்மிடம் சில உதவிகளைக்கேட்டது. அதற்கு நாம் எம்மால் முடிந்தவற்றைச்செய்தோம். எம்மால் உங்களைப்போன்று இருக்கமுடியவில்லை. செய்தோம் என்பதைவிட செய்தவனை தடுக்காமல் இருந்தோம் என்பதே பெரிது. இன்றைய அவல நிலைக்கு என் போன்றோர் காரணமில்லை. செய்தவர்களை தடுத்த தங்களைப்போன்றோரே காரணம். எமது உதவிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போயிருந்தால் அமைத்து நிர்வகித்த நாட்டை நாம் காப்பாற்றியிருக்கலாம். இந்த அழிவுகளுக்கு நாங்கள் எவ்விதத்திலும் காரணமானவர்கள் அல்ல. இனி தங்களுடைய மனச்சாட்சிப்படி எழுதுங்கள்.

கலைஞன் நீங்கள் எதைச் சொன்னாலும்.. மக்களிடம் உதவி கோரி வரும் போது அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மைகளை ஆதாரங்கள் சகிதம் சொல்ல வேண்டும்.

ஏன் நான் கனடாவில நல்லாய் இருக்கிறது உங்களுக்கு பிடிக்க இல்லையோ? மற்றது, இங்கு சாந்தி அவர்கள் இணைத்த கதை ஆதாரங்கள் இல்லாத கற்பனைக்கதையோ?

என்னமோ... எக்கேடாவது கெட்டுப்போங்கோ. நான் முன்புபோல் கருத்தாடலில் பங்குபற்றுவது இல்லை. ஆர்வமும் இல்லை, விருப்பமும் இல்லை. ஆனாலும் தினமும் யாழ்களம் பார்ப்பது வழமை. அண்மையில் சில நாட்கள் போதிய நேரம் இருந்ததால்.. அத்துடன் இந்தக்கதை பற்றி அது வரமுன்னரே ஓர் திரியில் நீண்ட கருத்தாடல் செய்யப்பட்டதால்.. கதையை வாசித்தேன். ஓர் ஆர்வக்கோளாற்றில் நானும் கருத்தாடலில் பங்குபற்றினேன்.

உங்களைப்போல் த.வி.புவிற்கு விசுவாசமாக கருத்து எழுதுவது என்பது எனக்கு ஒன்றும் கடினமான செயல் அல்ல. இங்கு பெரும்பாலான யாழ் உறவுகளை மகிழ்ச்சிபடுத்துவதற்காக எழுதவேண்டும் என்றால்.. அது எனக்கு மிகவும் சுலபமான ஓர் வேலை.

விவாதம் என்று வரும்போது ஓர் சாராரிற்கு பக்கசார்பாகவே சிந்தித்து சிபாரிசுகள் செய்தால் யாழ் களத்தில் நான் பலநூறு பச்சைப்புள்ளிகளையும், பாராட்டுக்களையும் பெற அது உதவும். ஆனால்.. நீண்டகால நோக்கில் ஓர் சமுதாயத்தின் நல்வளர்ச்சிக்கு அது உதவாது.

நாம் அகதியாக ஓடிவந்தோம். உழைத்தோம். எம்மை நோக்கி அழுகுரல் கேட்டது. அதற்காக அம்மக்களால் நேசிக்கப்பட்ட தலைமை எம்மிடம் சில உதவிகளைக்கேட்டது. அதற்கு நாம் எம்மால் முடிந்தவற்றைச்செய்தோம். எம்மால் உங்களைப்போன்று இருக்கமுடியவில்லை. செய்தோம் என்பதைவிட செய்தவனை தடுக்காமல் இருந்தோம் என்பதே பெரிது. இன்றைய அவல நிலைக்கு என் போன்றோர் காரணமில்லை. செய்தவர்களை தடுத்த தங்களைப்போன்றோரே காரணம். எமது உதவிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போயிருந்தால் அமைத்து நிர்வகித்த நாட்டை நாம் காப்பாற்றியிருக்கலாம். இந்த அழிவுகளுக்கு நாங்கள் எவ்விதத்திலும் காரணமானவர்கள் அல்ல. இனி தங்களுடைய மனச்சாட்சிப்படி எழுதுங்கள்.

நான் முன்பு ஒவ்வொரு தடவையும் விளிக்கும்போது உங்களை அண்ணை என்று அழைத்தேன், ஆனால்.. நீங்கள் என்னுடன் கருத்தாடலில் பங்குபற்றிய விதமே உங்களை வெறுமனே விசுகு என்று அழைக்கும் நிலைக்கு என்னை இட்டுச்சென்றது.

அடுத்ததாக, சில விடயங்களை விளக்குவதற்கு, குறிப்பாக உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு தனிப்பட உங்கள் குடும்பம் பற்றி வினாத்தொடுக்கவேண்டி இருந்தது. மற்றும்படி... நீங்களாக இருப்பினும், உங்கள் பிள்ளைகளாயினும்.. வெளிநாட்டில் நம்மவர் மகிழ்ச்சியாகவும், வளத்துடனும் வாழவேண்டும் என்பதே எனது விருப்பம். எனது மனச்சாட்சி பற்றி எப்போதோ பேசிவிட்டேன். எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அதை மீண்டும் வாசிக்கவேண்டுமானால்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=30008&view=findpost&p=354500

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நான் கனடாவில நல்லாய் இருக்கிறது உங்களுக்கு பிடிக்க இல்லையோ? மற்றது, இங்கு சாந்தி அவர்கள் இணைத்த கதை ஆதாரங்கள் இல்லாத கற்பனைக்கதையோ?

என்னமோ... எக்கேடாவது கெட்டுப்போங்கோ. நான் முன்புபோல் கருத்தாடலில் பங்குபற்றுவது இல்லை. ஆர்வமும் இல்லை, விருப்பமும் இல்லை. ஆனாலும் தினமும் யாழ்களம் பார்ப்பது வழமை. அண்மையில் சில நாட்கள் போதிய நேரம் இருந்ததால்.. அத்துடன் இந்தக்கதை பற்றி அது வரமுன்னரே ஓர் திரியில் நீண்ட கருத்தாடல் செய்யப்பட்டதால்.. கதையை வாசித்தேன். ஓர் ஆர்வக்கோளாற்றில் நானும் கருத்தாடலில் பங்குபற்றினேன்.

உங்களைப்போல் த.வி.புவிற்கு விசுவாசமாக கருத்து எழுதுவது என்பது எனக்கு ஒன்றும் கடினமான செயல் அல்ல. இங்கு பெரும்பாலான யாழ் உறவுகளை மகிழ்ச்சிபடுத்துவதற்காக எழுதவேண்டும் என்றால்.. அது எனக்கு மிகவும் சுலபமான ஓர் வேலை.

விவாதம் என்று வரும்போது ஓர் சாராரிற்கு பக்கசார்பாகவே சிந்தித்து சிபாரிசுகள் செய்தால் யாழ் களத்தில் நான் பலநூறு பச்சைப்புள்ளிகளையும், பாராட்டுக்களையும் பெற அது உதவும். ஆனால்.. நீண்டகால நோக்கில் ஓர் சமுதாயத்தின் நல்வளர்ச்சிக்கு அது உதவாது.

உங்களின் கருத்துக்களை நாங்கள் மதிக்கிறோம். புறக்கணிக்கவில்லை. ஆனால்.. நிச்சயமாக என்னால் விடுதலைப்புலிகள் மீதான அவதூறுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம்.. நான் அவர்களை விடுதலைப்புலிகளாக அரசியல் மயப்படுத்தி பார்க்கவில்லை. அவர்களை எமது சொந்தக்கங்களாகவே பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை அன்பினியும் ஒன்றுதான்.. செஞ்சோலையில் மடிந்து போன சிறுமியும் ஒன்று தான்.. போர்க்களத்தில் மாண்டு போய்.. அவளின் உடலை எதிரி சூறையாட நாம் பலர் கலங்காதிருந்த போதும்.. நான் அழுதிருக்கிறேன்... ஏனெனில் அவளை என்னால் இன்னொருத்தியாக பார்க்க முடியவில்லை. சொந்த தங்கையாக அக்காவாவே பார்த்திருக்கிறேன்..! அந்த வகையில் அன்பினியின் பெயரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும் எனது சகோதர சகோதரிகளே இலக்காகின்றனர் என்கின்ற போது.. அவர்கள் இல்லாத ஒரு சூழலில் அவர்களுக்கு எதிராக எவரும் எதையும் எழுதி விட்டுப் போகக் கூடிய இன்றை சூழலில்.. அவர்களுக்காகவும்.. அவர்களின் பக்கமுள்ள நியாயத்தை சொல்லவும் நாம் எழுத வேண்டி இருக்கிறது.

அதுமட்டுமன்றி அன்பினிகளின் எதிர்காலத்தை அவர்களின் இன்றைய நிலை தான் தீர்மானிக்கப் போகின்றதே தவிர அவர்களின் கடந்த காலத்தை அசைபோட்டுக் கொண்டிருப்பதால் வெறுப்புக்களையே அவருக்காக சம்பாதித்துக் கொடுக்க முடியும் என்பதை இவ்வகையான ஆக்கங்களைப் படைப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இக்களத்தில் இத்திரியில் இது போன்று அமைந்த விடுதலைப்புலிகளை சாடி போராட்டத்தை சாடி.. போராளிகளை மீட்சிப்படுத்தும் மீட்பர்கள்.. வானில் இருந்து உதயமாவது குறித்தான ஆக்கங்களை ஒரு உண்மையின் தளத்தில் நின்று கொண்டு... ஏற்றுக் கொள்வது அவ்வளவு இலகுவாக இல்லை..! காரணம்.. இடைப்பட்ட போராட்ட வீழ்ச்சியால் மன மற்றும் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் போராட்டத்தின் மீது அறியாமை கொண்டு வளர்க்கும் காழ்ப்புணர்வுகளை.. நாம் ஆக்கங்களாக அங்கீகரித்து நின்று போலி மனிதாபிமானம் வளர்க்க முடியாது..!

இத்துடன் இத் தலைப்பில் எனது கருத்தை முடிக்கிறேன்.. நன்றி.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதிய உறவுகளிற்கு சில விடயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன். இங்கு கதையின் சொந்தக்காரி அன்பினிக்கு தற்சமயம் தங்குவதற்கு பாதுகாப்பான இடமும் உணவு உடை என வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கின்றது.அதனை நேசக்கரம் செய்திருக்கின்றது. முதலில் நான் எழுதியதைப்போல அன்பினி தனக்கு உதவி வேண்டும் என்பதற்காக இந்தக் கதையை எழுதச்சொல்லவில்லை ஆனாலும் உதவிய கலைஞனிற்கு நேசக்கரம் சார்பாக நன்றிகள் தன்னைப்போல காயமடைந்து மனஅழுத்தத்தில் வாழும் பலநூறு பெண் போராளிகளின் இன்றைய நிலை இதுதான் என்பதை தன்னை உதாரணமாக்கி அதனை வெளியே கொண்டுவரவேண்டும் என்பதே.ஏனெனில் எல்லாராலும் எழுதவோ அல்லது வெளிக்கொண்டுவரும் விருப்பமோ சந்தர்பப்பமோ அவர்களிற்கு இருக்காது. அடுத்து நான் புலம்பெயர்ந்து வாழும் புரட்சி பேசுபவர்கள் திருமணம் செய்ய முன்வருவார்களா எனக் கேட்டிருந்தது ஏனெனில் அவரிற்கு அடிப்படைத்தேவைகள் நிறைவேற்றப்பட்டாலும் மனஅழுத்தம் என்பது என்பதில் இருந்து விடுபட முடியாதவராகவே உள்ளார்.

அதற்கு சரியான உளவியல் வைத்திய வசதிகள் அங்கு இல்லை .சில அரசு மற்றும் அரசு சாராத அமைப்புக்கள் உளவியல் வகுப்பு என்று என்று ஏதோ கடைமைக்காக வாங்குகின்ற சம்பளத்திற்கு நித்திரை தூங்கவைக்கும் வகுப்புக்களை எடுத்து மேலும் மன உளைச்சலை கொடுக்கும் வேலைகளையே செய்கிறார்கள்.அல்லது சினிமா பாட்டு நடனம் இதுதான் அவர்களது உயர்பட்ச மனஅழுத்தத்திற்கான மருந்து.உள்ஊரிலேயே யாரும் இவர்களை மதிக்காமல் வேண்டத்தகாதவர்கள் போல நடத்தப்படுவதால் யாராவது வெளிநாட்டில் உள்ளவர் இவரை திருமணம்செய்து அவர் வெளிநாடு வந்தால் புதிய நாடு புதிய சூழல் புதிய மனிதர்கள் பழக்கங்கள் நிச்சயம் மனமாற்றத்தை கொண்டுவரும். எனவேதான் திருமணம் பற்றிய விடையத்தை எழுதினேன் .ஆனாலும் இவர் மட்டும்தான் பாதிக்கப்பட்டவரா இவரை மட்டும் திருமணம் செய்து வெளிநாடு கூட்டிவந்தால் எல்லாப்பிரச்சனையும் தீர்ந்துவிடுமா என்கிற என்கிற கருத்துக்கள்தான் பதிலாக வருமென்று தெரிந்தும்தான் நான் அதனை எழுதினேன். இறுதியாக விசுகு அவர்களிற்கு எனக்கு உங்களை மட்டுமதான் தெரியும் அதுவும் யாழ்களம் ஊடாகத்தான்.

மற்றும்படி உங்களிற்கு எத்தனை பிள்ளைகள் எத்தனை ஆண் எத்தனை பெண் அவர்களது வயது பெயர்கள் என்பன எதுவும் தெரியாது. அவைகளை தெரிந்து கொள்ள நான் ஆர்வப்பட்டதும் கிடையாது அவற்றை தெரிந்தும் எனக்கு எவ்வித பிரயோசனமும்.இல்லை ஆனால் இங்கு வானொலி தொ.காட்சி இணைய கருத்துக்களங்களில் தமிழ் தேசியத்தை தாங்களே தாங்கிப் பிடிப்பதாக நினைக்கும் கொஞ்சம் வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிற்கு தமிழ் தேசியத்தை ஊட்டி ஊட்டி வளக்கிறோம். என தம்பட்டம் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்னர் ஆனால் அவர்கள் பிள்ளைகளிற்கோ தமிழே தெரிந்திருக்காது. அதுமட்டுமல்ல பதினெட்டு வயதிற்கு பின்னர்தான் பிள்ளைகள் தாங்களாகவே எடுக்கும் முடிபுகள் அல்லது திருமண விடயத்திலோ எடுக்கும் முடிபுகள் சட்டப்படியாக அவர்களே பொறுப்பாளிகளாவார்கள். அதற்கு குறைந்த வயது குற்றங்கள் பெற்றோரையே சாரும். எனவேதான் பதினெட்டு வயது முடிந்த பிள்ளைகள் இருப்பவர்கள் முன்வருவார்களா என பொதுவாக எழுதியிருந்தேன். அதே நேரம் சட்டப்படியான திருமண வயதை தாண்டிய பின்னர் ஆணோ பெண்ணோ ஒன்றாக வாழ்வதற்கும் உறவாக இருப்பதற்கும் வயது ஒரு தடையில்லை என்பது விஞ்ஞான ரீதியாக ஆதாரப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் பதினெட்டு வயதை தாண்டிய எவரும் அன்பினியை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எனது கருத்தை எழுதியிருந்தேன். இப்பொழுது தெளிவடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நன்றிகள்.

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.