Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் லிங்கமாலா ஆனேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் லிங்கமாலா ஆனேன்

ஜுனில் வெளிவந்த ராவய பத்திரிகையில் அதன் ஆசிரியர் குழுவிலுள்ள மஞ்சுள வெடிவர்தன எழுதி, செல்வர் என்பவரால் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை இது. சிங்கள வாசகர்களை நோக்கி எழுதப்பட்ட இந்த கவிதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கவிதை. சிங்கள பேரினவாத சக்திகள் மத்தியில் சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருந்த கவிதை இது. மஞ்சுள வெடிவர்தனவின் கன்னி மரியா எனும் சிறுகதைத் தொகுதி சென்றவருடம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. அது இன்னமும் நீதிமன்ற விசாரணையில் சிக்கியிருக்கிறது. ”பறை” வாசகர்களுக்காக மீண்டும் அவரது கவிதை.

sadness2a.jpg

வெசாக்தின முழுநிலவு தலையில்

கைவைத்து அழுகிறது

அதன் மூக்குச் சளி

சாரளம் வழியால்

தெறிக்கின்றது

அயல் வீட்டில்

இன்னும் வாடவில்லை

ஐந்நூற்று ஐம்பது

புராணக் கதைகளை

சுருக்கி, நவீனப்படுத்தி

தூரத்தில் அமைத்த

வெசாக் பந்தலில்

இடைக்கிடை

விருது பாடுவது கேட்கின்றது

என்முன்

வெற்றுக் காகிதத் தாள்

கவிதைக்காக

விழித்திருக்கின்றது

சடுதியாக எங்கிருந்தோ

மிதந்து வந்த

இறைச்சித் துண்டமொன்று

காகிதத்தில் வீழ்ந்து

யோனியின் வடிவமைந்தது

கோணேஸ்வரியினுடையது

அம்பாறையிலிருந்து

கொழும்பு வர

இத்தனை நாளா?

எவ்வளவு தூரத்தில்

நம்

கண்களில் கண்ணீர்

குளிர்கின்றது

கண்ணீருக்கு மத்தியில் நான்

அங்குலி மாலாவாக அல்ல

லிங்க மாலா வாகினேன்

எனக்கு விரல்கள்

தேவையில்லை

ஆண்குறிகளே தேவை

வெகு பக்தியாக வலது கரத்தில்

இறைச்சியையும்

மறு கரத்தில் இறுக்கமாக

ஆயுதத்தினையும்

எடுத்துப் புறப்படலானேன்

வழியில் சந்திக்கும்

வீடுகளை தட்டி

சகல சிங்கள ஆண் குறிகளையும்

வெட்டி நூலாகக் கோர்த்து

இறுதியில் எனது

ஆ……….

வேதனையை தாங்கிக் கொண்டு

ஸ்ரீபாத மலையின் கழுத்திற்கு

ஆண்குறிகளை மாலையாய்

சூட்டினேன்

என்னை தடுத்து நிறுத்த போதி

மாதவன் இல்லாததால்

நான் இதனைச் செய்தேன்

சகோதர பாசமற்ற

உணர்வு அற்ற

இனம் ஒன்று எதற்கு

என் முன் வெற்றுக்

காகிதம் அதன் மீது

இரத்தக்கறை

இது ஒரு தமிழ்க் கவிதை

அதனால் சிங்களவருக்கு

இது புரியவில்லை

http://monsoonmn.wordpress.com/2009/09/23/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%86%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/

வழியில் சந்திக்கும்

வீடுகளை தட்டி

சகல சிங்கள ஆண் குறிகளையும்

வெட்டி நூலாகக் கோர்த்து

இறுதியில் எனது

ஆ……….

அப்பா நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என் முன் வெற்றுக்

காகிதம் அதன் மீது

இரத்தக்கறை

இது ஒரு தமிழ்க் கவிதை

அதனால் சிங்களவருக்கு

இது புரியவில்லை

இது ஒரு மானிடக் கவிதை,

புரிந்து கொள்ளப் பொது அறிவே போதும்!

புரிந்தும், புரியாமல் நடிக்கின்றது சிங்களம்!

அறிந்தும், அறியாமல் நடிக்கும், நமது,

அயல் நாடு போல!!

இணைப்புக்கு நன்றிகள், நுணா!!!

யாழில் தமிழ்தேசியப்பால் குடித்தவர்கள்(எங்கள்) பலரை திட்டுவது போல் சிங்களதேசியவாதிகள் இவனுக்கு திட்டுதிட்டென திட்டுவார்கள்.

புலியிற்ற காசுவாங்கிட்டான்,ரோ வின் ஆள்,எலும்புதுண்டுக்கு இனத்தை விற்கின்றான்,பந்தியாக எழுதலாம்.

உண்மையை சொன்னாலே தேசியம் கெட்டுவிடுமென அலைகின்றார்கள்.

அவர்களை உணரவைக்கும்

நல்லதொரு கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்துக்குள்ளும் மானுடம் வாழுகிறது என்பதற்கு சாட்சி இந்தக் கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணா.

உண்மையை சொன்ன சிங்களத்துக்கு கோவம் வரும், ஏனென்றால் மிருகத்துக்கு பிறத்தவர்களால் அடுத்த அறிவை எட்ட இன்னுமொரு ஐஸ் ஏஜ் வரை காத்திருக்க வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தமிழ்தேசியப்பால் குடித்தவர்கள்(எங்கள்) பலரை திட்டுவது போல் சிங்களதேசியவாதிகள் இவனுக்கு திட்டுதிட்டென திட்டுவார்கள்.

புலியிற்ற காசுவாங்கிட்டான்,ரோ வின் ஆள்,எலும்புதுண்டுக்கு இனத்தை விற்கின்றான்,பந்தியாக எழுதலாம்.

உண்மையை சொன்னாலே தேசியம் கெட்டுவிடுமென அலைகின்றார்கள்.

நீங்கள் எழுதுபவனவற்றால் தேசியம் கெடுகின்றது என்பதை நான் ஏற்றுகொள்கிறேன்.

அதற்குள் ஏன் உண்மையை இழுக்கின்றீர்கள்?

உண்மை என்பது அதுவானது அதை யாராலும் எழுத முடியாது............. எது எதுவோ அது அதுவாக இருக்கும்போதே அது உண்மையாகிறது.

அது உண்மை என்று நானோ நீங்களோ எழுத முடியாது!

ஆனால் கற்பனைகளுக்கு உண்மையென்று பெயரை சூட்டிவிட்டால் காரியம் சுலபமாக முடிந்துவிடும்............... இதென்னெ பழனிக்கு போய் நான் பஞ்சாமிருதம் காட்ட வேண்டுமா??

உங்கள் பெயரை அரிசந்திரன் என்று வாசிக்கின்றீர்களளோ? அதில் பல எழுத்துக்கள் தடுமாறுகின்றது........

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தமிழ்க் கவிதை

அதனால் சிங்களவருக்கு

இது புரியவில்லை

மனதைத்தொடும் கவிதை..அற்புதமான மொழிபெயர்ப்பு...

  • 2 weeks later...

பகிர்வுக்கு நன்றி நுணா...!

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபினமுள்ள சிங்களரின் பதிவு.ஒன்றிரண்டு நல்லவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்காக நாம் சேர்ந்து வாழமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபினமுள்ள சிங்களரின் பதிவு.ஒன்றிரண்டு நல்லவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்காக நாம் சேர்ந்து வாழமுடியாது.

நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள் எங்கட ஆட்களைவிட, நான் Moratuwa University ல் படிக்கும் போது பல பிரச்சனைகளில் பதுகாத்தவர்கள் சக சிங்கள மாணவர்களும் தங்கி இருந்த வீட்டுக்காரர் & அயலவர்கள். என்ன தேசியம் என்று வரும்போது ஓன்றாகிர்கள் எம்மைவிட.

பல Middle and Upper Class சிங்கள குடும்பங்களுக்கு எங்கட பிரச்சனையே தொரியா, ஏன் நாங்க போராடுகிறோம் என்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.