Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் தந்தை என் மகனாக...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

a59cdcb3aed028b7aecf45677a68aae8.jpg

நான் என்றுமே நேரம் தவறுவதில்லை

எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டதுதான்

பிந்திச் செல்வதால் நீங்கள் படும்

அவஸ்தையை பக்கத்தில் இருந்து

அடிக்கடி பார்ப்பவன் நான் .....

நீங்கள் தள்ளாடி நடந்ததாய்

எந்த பதிவும் இல்லை என்னிடம்

எத்தனை மணிக்கு வந்தாலும்

''எல்லாரும் சாப்பிட்டாச்சா'' என்று

கேட்பதில் நீங்கள் தனிரகம்....

அதிகாரம் செய்வது உங்களுக்கு பிடித்தமானதொன்று

ஆனால் பணியாட்களிடமும் அன்பு தான்

அடிக்கடி பொறாமைப்படுவேன் உங்களைபார்த்து

''எப்பிடிதான் இவரால மட்டும் முடியுதோ ''என்று

ஆனாலும் அருமையான அப்பா எனக்கு !!!!!!!

''செய்யமாட்டேன்'' என்று சொல்லி அதை

செய்துமுடித்து செய்யாதது போல இருப்பது

உங்கள் கை வந்த கலை அது

தெரிந்த போதிலும் உங்களிடம்

சண்டை போடுவது என் குணம்.....

சிதிலமடைந்து சிதறிப்போனபோதிலும்

சிறப்பாய் சித்திரையை கொண்டாட

சொன்னவர் நீங்கள்....சிக்கல்களுக்குள்

சிக்கிகொள்ளவே விருப்பம் உங்களுக்கு

ஆனாலும் கண்ணீருடன் கண்டதில்லை

சிற்பமாம் என் அம்மாவின் சிந்தனைகள்

போதனைகள் உங்களுக்கு ....நாங்கள்

''அடார் ஆனந்தன் ''என்றே வீட்டில் அழைத்திடுவோம்

சிரிப்பொன்றே பதிலாயிருக்கும்

சீறிப் பாய்வதில்லை எப்போதுமே ....

உங்கள் பொழுதுபோக்குகள் பிரமிக்க வைக்கும்

தினம் வயலுக்கு போவதும் வீடு கட்டுவதும்

சாதரணமானதா என்ன ?????

முயற்சி திருவினையாக்கும் பழமொழி

புதுமொழி ஆக்குவீர்கள் அடிக்கடி .....

பழமையான விடயங்களில் பற்று அதிகம்

நவீனங்கள் நாங்கள் பேசினால்

மௌனமே பதிலாகும் உங்களிடம்

ஆனாலும் குறை ஏதும் இல்லை எங்களுக்கு

நம் வீடு நவீனம் தான் அப்பா.......

குத்தல் பேச்சில் வல்லவர் நீங்கள்

அதை குற்றம் என்பது என் பழக்கம்

''நீங்க சொல்றது சரியில்ல அப்பா'' என்றால்

ஏதேதோ பேசி சமாளித்தாலும் உள்ளுக்குள்

வருந்துவது எனக்கு தெளிவாக புரியும்.....

திட்டம் தீட்டியே காலத்தை கரியாக்கி

காரியம் சாதிப்பதில் சமர்த்து.....

கால்க்காசு என்றாலும் கஷ்டபடாமல்

சேராது உங்களிடம் ...கேட்டால்

கை வலிக்கும் காசு அது....தங்காது என்பீர்கள் ......

எத்தனையோ ஆயிரம் சொந்தங்கள் உங்களுக்கு

அத்துணைக்கும் உரிமை கொண்டாடுவீர்கள்

நாங்கள் அதில் எட்டி நின்றாலும்

தட்டி கொடுத்தது ''என் மகன்'' எனும் போது

மனம் மகிழும்.....கண்களும் கூட.....

பல கோடி நன்றிகள் இறைவனுக்கு

என் அப்பாவிற்கு நான் மகன் ஆனதில்

மீண்டும் இறைவனிடம் ஒன்று

இன்னோர் பிறப்பொன்று வேண்டும்...

நான் தகப்பனாக...

என் தந்தை என் மகனாக...

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... என்ன அவதானம்..

அருமையான கவிதை

பிள்ளையின் ஒவ்வொரு அசைவையும் தந்தைதான் இரசித்தது பார்த்திருக்கிறேன்.. இப்போது இந்தக்கவிதையின் மூலம் தந்தையின் ஒவ்வொரு அசைவையும் பிள்ளை எப்படி இரசித்திருக்கிறார் என்று அறிய முடிகிறது...

பகீ எப்படி உங்களுக்கு இந்த எழுதும் ஆர்வம் ஏற்பட்டது? பகிரலாமே....

  • கருத்துக்கள உறவுகள்

பகீ, யாழில் கன்னிக்கவிதை அருமை. தொடருங்கள்.

நல்ல கவிதை

அப்பாவை மகன் போற்றும் கவிதைகள் தமிழில் குறைவு

ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

''செய்யமாட்டேன்'' என்று சொல்லி அதை

செய்துமுடித்து செய்யாதது போல இருப்பது

உங்கள் கை வந்த கலை அது

தெரிந்த போதிலும் உங்களிடம்

சண்டை போடுவது என் குணம்....

மேலுள்ள வார்த்தைகளே போதுமே, பகீ!

அப்பாவினதும், மகனதும் குணாதிசயங்களை எடுத்துரைக்க!

கடைசிப் பந்தியில்.இன்னோர் பிறப்பொன்று, இறைவனுடன் வேண்டுவது உங்கள் உறவுக்குக் கோபுரம் கடடுகின்றது! நன்றிகள்!>

" குத்தல் பேச்சில் வல்லவர் நீங்கள்

அதை குற்றம் என்பது என் பழக்கம்

''நீங்க சொல்றது சரியில்ல அப்பா'' என்றால்

ஏதேதோ பேசி சமாளித்தாலும் உள்ளுக்குள்

வருந்துவது எனக்கு தெளிவாக புரியும்....."

" திட்டம் தீட்டியே காலத்தை கரியாக்கி

காரியம் சாதிப்பதில் சமர்த்து.....

கால்க்காசு என்றாலும் கஷ்டபடாமல்

சேராது உங்களிடம் ...கேட்டால்

கை வலிக்கும் காசு அது....தங்காது என்பீர்கள் ......"

அப்பாவுக்கும் மகனுக்கும் என்றுமே அக்கப்போர் தான் . சேவலுக்கு தனது குஞ்சு பாதுகாப்பாக இருக்கவேணும் என்கின்ற நினைப்பு . குஞ்சுக்கு அதன் தேடல் ஆர்வம் . வாழ்த்துக்கள் பகீர் :):):) 5 .

  • கருத்துக்கள உறவுகள்

....

நீங்கள் தள்ளாடி நடந்ததாய்

எந்த பதிவும் இல்லை என்னிடம்

எத்தனை மணிக்கு வந்தாலும்

''எல்லாரும் சாப்பிட்டாச்சா'' என்று

கேட்பதில் நீங்கள் தனிரகம்....

....

''செய்யமாட்டேன்'' என்று சொல்லி அதை

செய்துமுடித்து செய்யாதது போல இருப்பது

உங்கள் கை வந்த கலை அது

தெரிந்த போதிலும் உங்களிடம்

சண்டை போடுவது என் குணம்.....

சிதிலமடைந்து சிதறிப்போனபோதிலும்

சிறப்பாய் சித்திரையை கொண்டாட

சொன்னவர் நீங்கள்....சிக்கல்களுக்குள்

சிக்கிகொள்ளவே விருப்பம் உங்களுக்கு

ஆனாலும் கண்ணீருடன் கண்டதில்லை

....

பழமையான விடயங்களில் பற்று அதிகம்

நவீனங்கள் நாங்கள் பேசினால்

மௌனமே பதிலாகும் உங்களிடம்

ஆனாலும் குறை ஏதும் இல்லை எங்களுக்கு

நம் வீடு நவீனம் தான் அப்பா.......

....

பல கோடி நன்றிகள் இறைவனுக்கு

என் அப்பாவிற்கு நான் மகன் ஆனதில்

மீண்டும் இறைவனிடம் ஒன்று

இன்னோர் பிறப்பொன்று வேண்டும்...

நான் தகப்பனாக...

என் தந்தை என் மகனாக...

தந்தையிடம் அனுபவமாக உணர்ந்தவற்றை நினைவூட்டிய வரிகள்...

திருத்தம்... நான் மீண்டும் என் தந்தைக்கு மகனாகவே பிறக்க விழைகின்றேன்...

.

  • கருத்துக்கள உறவுகள்

அட யாழில வெக்கப்பட்டு ஓடிய பகியா இது...நம்ப முடியவில்லை..பின்னீட்டீங்க போங்க...அருமையான அழகான கவிதை..இப்பதான் தெரியுது யாழின் வலிமை..இந்த யாழிற்க்கு வந்திராவிட்டால் நானும் எழுதியிருப்பனோ எண்டு எனக்குத் தெரியவில்லை..பலரை உருவாக்கிய,செதுக்கிய சிற்பி இந்த யாழும் யாழ்கள உறவுகளும்...தட்டிக் கொடுக்கவும்,பிழைகளைச் சுட்டிக்காட்டவும் (திட்டித் தீர்க்கவும்.. :o:lol: )ஒரு தோள் வேண்டும்..அந்த தோளாக யாழும் யாழ் உறவுகளும் இருந்தார்கள்..இருப்பார்கள்..இருப்போம்..அந்த வகையில் எங்கட யாழுக்கும்,மோகன் அண்ணாவுக்கும்,மட்டுக்களுக்கும் எண்டைக்கும் எங்கட இதயத்தில் தனி இடம் இருக்கும்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

a59cdcb3aed028b7aecf45677a68aae8.jpg

நான் என்றுமே நேரம் தவறுவதில்லை

எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டதுதான்

பிந்திச் செல்வதால் நீங்கள் படும்

அவஸ்தையை பக்கத்தில் இருந்து

அடிக்கடி பார்ப்பவன் நான் .....

நீங்கள் தள்ளாடி நடந்ததாய்

எந்த பதிவும் இல்லை என்னிடம்

எத்தனை மணிக்கு வந்தாலும்

''எல்லாரும் சாப்பிட்டாச்சா'' என்று

கேட்பதில் நீங்கள் தனிரகம்....

அதிகாரம் செய்வது உங்களுக்கு பிடித்தமானதொன்று

ஆனால் பணியாட்களிடமும் அன்பு தான்

அடிக்கடி பொறாமைப்படுவேன் உங்களைபார்த்து

''எப்பிடிதான் இவரால மட்டும் முடியுதோ ''என்று

ஆனாலும் அருமையான அப்பா எனக்கு !!!!!!!

''செய்யமாட்டேன்'' என்று சொல்லி அதை

செய்துமுடித்து செய்யாதது போல இருப்பது

உங்கள் கை வந்த கலை அது

தெரிந்த போதிலும் உங்களிடம்

சண்டை போடுவது என் குணம்.....

சிதிலமடைந்து சிதறிப்போனபோதிலும்

சிறப்பாய் சித்திரையை கொண்டாட

சொன்னவர் நீங்கள்....சிக்கல்களுக்குள்

சிக்கிகொள்ளவே விருப்பம் உங்களுக்கு

ஆனாலும் கண்ணீருடன் கண்டதில்லை

சிற்பமாம் என் அம்மாவின் சிந்தனைகள்

போதனைகள் உங்களுக்கு ....நாங்கள்

''அடார் ஆனந்தன் ''என்றே வீட்டில் அழைத்திடுவோம்

சிரிப்பொன்றே பதிலாயிருக்கும்

சீறிப் பாய்வதில்லை எப்போதுமே ....

உங்கள் பொழுதுபோக்குகள் பிரமிக்க வைக்கும்

தினம் வயலுக்கு போவதும் வீடு கட்டுவதும்

சாதரணமானதா என்ன ?????

முயற்சி திருவினையாக்கும் பழமொழி

புதுமொழி ஆக்குவீர்கள் அடிக்கடி .....

பழமையான விடயங்களில் பற்று அதிகம்

நவீனங்கள் நாங்கள் பேசினால்

மௌனமே பதிலாகும் உங்களிடம்

ஆனாலும் குறை ஏதும் இல்லை எங்களுக்கு

நம் வீடு நவீனம் தான் அப்பா.......

குத்தல் பேச்சில் வல்லவர் நீங்கள்

அதை குற்றம் என்பது என் பழக்கம்

''நீங்க சொல்றது சரியில்ல அப்பா'' என்றால்

ஏதேதோ பேசி சமாளித்தாலும் உள்ளுக்குள்

வருந்துவது எனக்கு தெளிவாக புரியும்.....

திட்டம் தீட்டியே காலத்தை கரியாக்கி

காரியம் சாதிப்பதில் சமர்த்து.....

கால்க்காசு என்றாலும் கஷ்டபடாமல்

சேராது உங்களிடம் ...கேட்டால்

கை வலிக்கும் காசு அது....தங்காது என்பீர்கள் ......

எத்தனையோ ஆயிரம் சொந்தங்கள் உங்களுக்கு

அத்துணைக்கும் உரிமை கொண்டாடுவீர்கள்

நாங்கள் அதில் எட்டி நின்றாலும்

தட்டி கொடுத்தது ''என் மகன்'' எனும் போது

மனம் மகிழும்.....கண்களும் கூட.....

பல கோடி நன்றிகள் இறைவனுக்கு

என் அப்பாவிற்கு நான் மகன் ஆனதில்

மீண்டும் இறைவனிடம் ஒன்று

இன்னோர் பிறப்பொன்று வேண்டும்...

நான் தகப்பனாக...

என் தந்தை என் மகனாக...

பகி

சமீபகாலமாக உங்கள் கவிதைகளை எல்லாம் வாசித்து வருகிறேன்... வித்தியாசமான சிந்தனைகளுடன் ஒவ்வொன்றும் வித்தியாசமாக எழுதுகிறீர்கள்... அதிகம் எழுதப்படாத விடயங்களில் எல்லாம் உங்கள் பேனா புகுந்து எழுதத்துணிந்து விடுகிறது..... வாழ்துக்கள் உங்கள் கவிப்பயணம் தொடர.....

இளங்கவி

பல கோடி நன்றிகள் இறைவனுக்கு

என் அப்பாவிற்கு நான் மகன் ஆனதில்

மீண்டும் இறைவனிடம் ஒன்று

இன்னோர் பிறப்பொன்று வேண்டும்...

நான் தகப்பனாக...

என் தந்தை என் மகனாக...

தந்தையின் மகத்துவம் மிக உயர்வானது. உங்களின் வரிகளில் அதை மிக அருமையாக விளக்கி விட்டீர்கள்.

தந்தையின் இழப்பில் மிக வேதனையை அனுபவித்திருக்கிறேன். எனது எழுத்தில் என் தந்தைக்கும் பங்குண்டு. எனது கதைகள் ஈழநாதத்தில் வந்த சமயங்களில் என்னை விட குதூகலிப்பது எனது தந்தை தான். அவர் ஒரு புத்தகப் பிரியர். " நீ தொடர்ந்து எழுதம்மா" என்று சொன்ன அந்த வார்த்தைகள் என் மனதில் இன்னும் ரீங்காரமாய்...............

மிக நன்றி . எனக்கும் இதே கனவு தான் . அடுத்த பிறவியில் அதே ஊரில் அதே அன்பான பெற்றோர்க்கு மகளாகப் பிறந்து , இழந்தவைகள் மீளவும் எனக்கு கிடைக்க வேண்டும் என்பது.

வலிகள் கற்பனைகளில் தானே வாழ்கின்றன.....

தங்கள் கவிதை அழகானது. நிஜமானது. வாழ்த்துக்கள்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா... என்ன அவதானம்..

அருமையான கவிதை

பிள்ளையின் ஒவ்வொரு அசைவையும் தந்தைதான் இரசித்தது பார்த்திருக்கிறேன்.. இப்போது இந்தக்கவிதையின் மூலம் தந்தையின் ஒவ்வொரு அசைவையும் பிள்ளை எப்படி இரசித்திருக்கிறார் என்று அறிய முடிகிறது...

பகீ எப்படி உங்களுக்கு இந்த எழுதும் ஆர்வம் ஏற்பட்டது? பகிரலாமே....

நான் தனிமையில் இருக்கும் போது தான் என் மேல் உண்மையான பாசம் வைத்தவர்கள் யார்னு உணர முடியுது

உலகத்திலே கிடைக்க முடியாத 2 பொக்கிஷங்கள் அம்மா , அப்பா

நான் இப்பொழுது என் எனது குடும்போதோட இல்லை தனிமையில் இருக்கிறேன்

என் அப்பாவோட நான் பலமுறை சண்டை பிடிப்பேன் இப்ப அது கூட இல்லை

அப்பா நினைப்பு வந்தால் உடனே போன் பண்ணி கதைப்பேன்

அப்பா ரசித்து இருக்கிறேன்

அவரின் நினைவுகள் தான் என்னை இப்பிடி எழுத துண்டியது

இன்னும் அப்பாவ பற்றி எழுதுவேன்

நன்றி valvaizagara

பகீ, யாழில் கன்னிக்கவிதை அருமை. தொடருங்கள்.

நன்றி Nunavilan

நல்ல கவிதை

அப்பாவை மகன் போற்றும் கவிதைகள் தமிழில் குறைவு

ஒரு பச்சை

நன்றி நிழலி

''செய்யமாட்டேன்'' என்று சொல்லி அதை

செய்துமுடித்து செய்யாதது போல இருப்பது

உங்கள் கை வந்த கலை அது

தெரிந்த போதிலும் உங்களிடம்

சண்டை போடுவது என் குணம்....

மேலுள்ள வார்த்தைகளே போதுமே, பகீ!

அப்பாவினதும், மகனதும் குணாதிசயங்களை எடுத்துரைக்க!

கடைசிப் பந்தியில்.இன்னோர் பிறப்பொன்று, இறைவனுடன் வேண்டுவது உங்கள் உறவுக்குக் கோபுரம் கடடுகின்றது! நன்றிகள்!>

நன்றி புங்கையூரன்

" குத்தல் பேச்சில் வல்லவர் நீங்கள்

அதை குற்றம் என்பது என் பழக்கம்

''நீங்க சொல்றது சரியில்ல அப்பா'' என்றால்

ஏதேதோ பேசி சமாளித்தாலும் உள்ளுக்குள்

வருந்துவது எனக்கு தெளிவாக புரியும்....."

" திட்டம் தீட்டியே காலத்தை கரியாக்கி

காரியம் சாதிப்பதில் சமர்த்து.....

கால்க்காசு என்றாலும் கஷ்டபடாமல்

சேராது உங்களிடம் ...கேட்டால்

கை வலிக்கும் காசு அது....தங்காது என்பீர்கள் ......"

அப்பாவுக்கும் மகனுக்கும் என்றுமே அக்கப்போர் தான் . சேவலுக்கு தனது குஞ்சு பாதுகாப்பாக இருக்கவேணும் என்கின்ற நினைப்பு . குஞ்சுக்கு அதன் தேடல் ஆர்வம் . வாழ்த்துக்கள் பகீர் :):):) 5 .

நன்றி Komagan

தந்தையிடம் அனுபவமாக உணர்ந்தவற்றை நினைவூட்டிய வரிகள்...

திருத்தம்... நான் மீண்டும் என் தந்தைக்கு மகனாகவே பிறக்க விழைகின்றேன்...

.

நன்றி ராஜவன்னியன்

வாழ்த்துக்கள்

அட யாழில வெக்கப்பட்டு ஓடிய பகியா இது...நம்ப முடியவில்லை..பின்னீட்டீங்க போங்க...அருமையான அழகான கவிதை..இப்பதான் தெரியுது யாழின் வலிமை..இந்த யாழிற்க்கு வந்திராவிட்டால் நானும் எழுதியிருப்பனோ எண்டு எனக்குத் தெரியவில்லை..பலரை உருவாக்கிய,செதுக்கிய சிற்பி இந்த யாழும் யாழ்கள உறவுகளும்...தட்டிக் கொடுக்கவும்,பிழைகளைச் சுட்டிக்காட்டவும் (திட்டித் தீர்க்கவும்.. :o:lol: )ஒரு தோள் வேண்டும்..அந்த தோளாக யாழும் யாழ் உறவுகளும் இருந்தார்கள்..இருப்பார்கள்..இருப்போம்..அந்த வகையில் எங்கட யாழுக்கும்,மோகன் அண்ணாவுக்கும்,மட்டுக்களுக்கும் எண்டைக்கும் எங்கட இதயத்தில் தனி இடம் இருக்கும்..

நன்றி சுபேஸ்

பகி

சமீபகாலமாக உங்கள் கவிதைகளை எல்லாம் வாசித்து வருகிறேன்... வித்தியாசமான சிந்தனைகளுடன் ஒவ்வொன்றும் வித்தியாசமாக எழுதுகிறீர்கள்... அதிகம் எழுதப்படாத விடயங்களில் எல்லாம் உங்கள் பேனா புகுந்து எழுதத்துணிந்து விடுகிறது..... வாழ்துக்கள் உங்கள் கவிப்பயணம் தொடர.....

இளங்கவி

நன்றி இளங்கவி

பல கோடி நன்றிகள் இறைவனுக்கு

என் அப்பாவிற்கு நான் மகன் ஆனதில்

மீண்டும் இறைவனிடம் ஒன்று

இன்னோர் பிறப்பொன்று வேண்டும்...

நான் தகப்பனாக...

என் தந்தை என் மகனாக...

தந்தையின் மகத்துவம் மிக உயர்வானது. உங்களின் வரிகளில் அதை மிக அருமையாக விளக்கி விட்டீர்கள்.

தந்தையின் இழப்பில் மிக வேதனையை அனுபவித்திருக்கிறேன். எனது எழுத்தில் என் தந்தைக்கும் பங்குண்டு. எனது கதைகள் ஈழநாதத்தில் வந்த சமயங்களில் என்னை விட குதூகலிப்பது எனது தந்தை தான். அவர் ஒரு புத்தகப் பிரியர். " நீ தொடர்ந்து எழுதம்மா" என்று சொன்ன அந்த வார்த்தைகள் என் மனதில் இன்னும் ரீங்காரமாய்...............

மிக நன்றி . எனக்கும் இதே கனவு தான் . அடுத்த பிறவியில் அதே ஊரில் அதே அன்பான பெற்றோர்க்கு மகளாகப் பிறந்து , இழந்தவைகள் மீளவும் எனக்கு கிடைக்க வேண்டும் என்பது.

வலிகள் கற்பனைகளில் தானே வாழ்கின்றன.....

தங்கள் கவிதை அழகானது. நிஜமானது. வாழ்த்துக்கள்.......

நீங்கள் ஆசைப்பட்டது நிறைவேற வாழ்த்துக்கள்

நன்றி கல்கி

Edited by pakee

  • கருத்துக்கள உறவுகள்

எட்டாவது பச்சை எனது ........ ஒரு நல்ல மொழியார்வம் கலை உணர்வு உள்ளவன் என இனக்கண்டு

இங்கு வரவைத்ததில் பெருமைப்படுகிறேன்

..............மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவை ஞாபகப்படுத்திய கவிதைக்கு நன்றி...நல்ல எழுத்தாற்றல் உங்களிடம் உள்ளது...தொடர்ந்து எழுதுங்கள்

என் தந்தையின் ஞாபகங்களையும் ........ கண்முன் கொண்டுவந்த தங்களுக்கு என் மனதார்ந்த நன்றிகள்.

அருமையான கவிதை... பாராட்டியே ஆகவேண்டும். :)10

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.