Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரிந்தப் “புத்திசீவிகள்”?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாரிந்தப் “புத்திசீவிகள்”?

eliteintelectuals1-300x143.jpg

இலங்கை அரசு, உலகப் பொதுப் புத்தியில் உருவகப்படுத்தப்பட்ட “சர்வதேசத்தின்” ஆசியுடன் நிகழ்த்தி முடித்த, வரலாறுகாணாத வன்னி நிலத்தின் மனிதப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். “புத்திஜீவிகள்”, “சர்வதேசம்” என்ற அழகிய சொல்லாடல்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க, நடத்தப்பட்ட இனப்படுகொலையில் தொடர்ச்சியாக இனச்சுத்திகரிப்பு அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

தாம் வாழ்ந்து களித்த மண்ணிலிருந்து, அப்பாவி மக்கள் அவலக்குரெழுப்ப விரட்டியடிக்கப்படுகின்றனர். சிங்கள பௌத்தக் குடியேற்றவாசிகளும், பல்தேசிய நிறுவனங்களும் அந்த நிலங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. “புத்திஜீவிகளும்”, “சர்வதேசமும்” இன்னும் தன்னார்வ நிறுவனங்களும் தமது நிலங்களிலிருந்து அறுத்தெறியப்படும் மக்கள் கூட்டத்திற்கு எலும்புத் துண்டுகளை வீசியெறிந்து “உதவி” செய்வதாக மார்தட்டிக்கொள்கிறார்கள்.

கொதித்தெழும் மக்கள் கூட்டம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகத் திரும்பிவிடாமல் அவதானமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.

தம்மைப் “பன்முகத் தன்மை” கொண்டவர்களாகக் உருவமைத்து வெளிப்படுத்தும் இவர்கள் பிரதான முரண்பாடுகளிலிருந்து, தம்மை விடுவித்துக்கொண்டு குறுகிய முரண்பாடுகளுக்கு அழுத்தம் வழங்குகிறார்கள். ஒடுக்கப்படும் தேசிய இனங்களிடையேயான உள்ளக முரண்பாடுகள், சாதியம், பிரதேச முரண்பாடுகள், பாலின முரண்பாடுகள் என்பனவற்றிற்கு போலித்தனமான அழுத்தம் வழங்கி பிரதான மற்றும் அடிப்படை முரண்பாடுகளை நிராகரிக்கின்றனர்.

இது புதிய உலக ஒழுங்கைநிறுவ முயலும் அதிகார வர்க்கத்தின் பொதுவான ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலாகும்.

எங்கெங்கெல்லாம் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றனவோ, எங்கெங்கெல்லாம் மக்கள் வர்க்க ரீதியிலான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் “புதிஜீவிகளதும்”, “தன்னார்வ நிறுவனங்களதும்”, “சர்வதேசியத்தினதும்” உடனடிப் பிரசன்னத்தைக் காணமுடியும். உலகின் பல்தேச நிறுவனங்களின் பணபலத்தோடு இயங்கும் இவர்களின் கவர்ச்சிகரமான அரசியல் இன்றைய சமூகத்தின் நச்சு வேர்கள்.

இந்தப் பின்னணியிலேயெ 71 “புத்திஜீவிகள்” இணைந்து வெளியிட்டிருக்கும் “தமிழ் சமூகத்திற்கும் அதன் அரசியல் சமூகப் பிரதிநிதிகளுக்குமான வேண்டுகோள்” என்ற அறிக்கையைக் காணமுடியும்.

ஒடுக்கும் பாசிச அரசோடு இசைவாக்கம் அடைந்துகொள்ளக் கோரும் இந்த அறிக்கை, வடக்கிலிருந்து இரவோடிரவாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்றப்படாமை தமிழ்ப்பேசும் மக்களின் தவறு என்று வாதிட முனைகிறது.

வடக்கின் அரச அதிபருக்குக் கூட வெளியிலிருந்து வரும் எவரையும் சந்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வட கிழக்குள் ஒவ்வோரு குடியேற்ற வாசியும் துப்பாக்கியின் மிரட்டலுடனேயே துயில் கொள்ளும் அவலத்தை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

இலங்கையில் நடந்துமுடிந்த இன அழிப்புக்கு எதிராக, வட கிழக்கில் முஸ்லீம் தமிழ் மக்களின் நிலத்தையும், கடலையும் கொள்ளையிடும் இலங்கை இராணுவ விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராக, இந்தியா, சீனா போன்ற பல்தேசிய கம்பனிகளின் சுரண்டலுக்கு எதிராக,கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்களின் விவசாய காணிகள் சிங்கள அரச ஆக்கிரமிப்பாளர்களால் பறிக்கப்படுவதற்கு எதிராக சம்பிரதாயத்திற்காவது ஒரு அறிக்கை எழுத முடியாத இந்த புத்திஜீவிகள் தமிழ் மக்களை முஸ்லீம் மக்களுக்கு எதிராக முன்னிறுத்தி முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ் மக்களே தடை என்கின்றனர்.

தான் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களிடையேயான முரண்பாட்டுகளைத் தூண்ட மகிந்த அரசு முயல்கிறது. இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் எமது “புத்திஜீவிகளும்” உள்வாங்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் வளர்வதில் எந்தத் தவறும் இல்லை.

சமூகப்பற்றுள்ள எந்த மனிதனுக்கும் முஸ்லீம்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்பதில் எந்த முரண்பாடும் இருக்க முடியாது. ஆனால் மனித விரோதிகளால் கொலைசெய்யப்பட்டு தெருக்களில் வீசியெறியப்படும் பிணங்களை மௌனமாய்க் கடந்துசென்று வடக்கின் இதயத்தில் அமர்ந்துகொண்டு முஸ்லீம் மக்கள் குடியேற்றப்படாமைக்குத் வடக்குத் தமிழர்களே காரணம் என்று அறிக்கை விடுவது சந்தேகத்திற்குரியது.

அரசாங்கம், சிங்கள பௌத்தக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக முஸ்லீம் மீள் குடியேற்றத்தை நிராகரிக்கிறது என்ற வெளிப்படையான உண்மையை மறைத்து, தமிழ்ப் பேசும் மக்களைக் குற்றம் சுமத்தும் அருவருக்கும் செயற்பாட்டின் ” புத்திஜீவித்தனத்தை” நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இனச்சுத்திகரிப்பை நிறுத்துமாறு போராடும் மக்களுக்கு ஆதரவு வழங்குவதும், புலிகளால் வெளியேற்றப்பட்ட தமிழ்ப் பேசும் முஸ்லீம்களை மீள்குடியேற்ற மறுக்கும் இலங்கை அரசை உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும், மகிந்த பாசிச அரசிற்கு எதிராகப் போராடும் சிங்கள மக்களை ஊக்கப்படுத்துவதும் இன்றைய எமது கடமையாகும்.

உலகம் முழுவதும் தன்னார்வ நிறுவனங்களின் நிதி வழங்கலோடும், மேற்கின் ஜனநாயகச் சொல்லாடலோடும் மக்கள்முன் வருகின்ற மேல்தட்டு புத்திஜீவிகளின் சமரச அரசியல், எதிர்காலத்தை எச்சரிக்கும் அபாய அறிவிப்பாகும்.

தேடகம் – கனடா

அசை – பிரான்ஸ்

இனியொரு..

சமூகப் பாதுகாப்பு இயக்கம் -பிரான்ஸ்

71 “புத்திசீவிகள்” கையெழுத்திட்ட அறிக்கை:

தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவுற்ற பின்னணியில், இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனக் குழுக்களும் தமது கடந்த காலத்தை மீள்பார்வை செய்வதும், மீள்மதிப்பீடு செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விடயங்களாக விளங்குகின்றன. எமது கடந்த கால செயற்பாடுகளின் மீதான ஒரு விமர்சன ரீதியான சுய பார்வையின் மூலமாகவே அரசின் முன்னும் சிவில் சமூகத்தின் முன்னும் இன்று தீர்வை வேண்டி நிற்கும் பிரதானமான விடயங்கள் பற்றி எதிர்காலத்தில் கருத்தாழம் மிக்க வழிமுறைகளில் நாம் சிந்திக்க முடியும்.

யுத்தம் தீர்க்கமாகமுடிவுற்ற போதிலும், இனப்பிரச்சினைக்கான முடிவு இன்னமும் தென்படவில்லை. இனப்பிரச்சினையானது குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வேண்டி நிற்கிறது. பெரும்பான்மைவாத அரசிடமிருந்து ஒரு நீடித்திருக்கக் கூடிய தீர்வைப் பெறுவதற்கான தேடுகையில் தமிழ்ச் சமூகம் இன்று பிரதானமாகக் கரிசனை கொண்டுள்ளது. இராணுவ மயமாக்கத்தினாற் தொடரும் பாதுகாப்பற்ற நிலைமை ஓர் உடனடிக் கவனமாக அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டமும், வன்முறை நிறைந்த அரசியற் கலாசாரமும் சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை மேலும் சிதைவுக்குட்படுத்தியுள்ளன. மீள்குடியமர்வு, மீள்நிர்மாணம் போன்ற விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. காணிப் பகிர்வு, அரச மற்றும் சமூக வலையமைப்புக்களினைத் தொடர்புகொள்ளுதல், மொழி சமத்துவம், அதிகாரப் பகிர்வு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், பால், வர்க்க, மற்றும் சாதி அடிப்படையிலான அடுக்கமைவுகளின் தொடரும் இருப்பு போன்றன இன்றைய அரசியல் நிலவுருவின் பகுதிகளாக விளங்குகின்றன.

இந்த வகையில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பான விடயத்தை நாம் இங்கு எழுப்புகின்றோம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் யுத்த நடவடிக்கைகளும், ஆயுதப் போராட்டமும் வலுப்பெற்று வந்த சூழலில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஏறத்தாழ் 80, 000 முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றினார்கள். அன்றைய காலத்தில் ஆயுத ரீதியாகப் பலம் மிக்க அமைப்பாக, வட பகுதியின் பெருமளவிலான நிலப்பரப்பை தன்வசம் வைத்திருந்த விடுதலைப் புலிகள் ஒரு சமூகம் முழுவதையுமே இரண்டு தினங்களுக்குள் வட மாகாணத்தில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவர்களுக்கு 2 மணி நேர அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டது. இந்த வெளியேற்றத்தின் பின்பு, வெளியேற்றப்பட்ட சமூகங்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீளவும் திரும்பிச் செல்வதற்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புக்களாலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கைக் காலப்பகுதியில், உடனடி மனிதாபிமான மற்றும் மீள்கட்டுமாணத் தேவைகளுக்கான செயலகம், இலங்கை அரசுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாக, முஸ்லிம் மக்களின் மீள்திரும்புதலுக்கு வழிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது.

இன்றைய அரசியல் சூழலில், வட புலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், அவர்களின் மீள்திரும்புகையும், மீள்குடியமர்வும் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் மீதான தெளிவான ஒரு சவாலாக உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் வடக்கில் உள்ள தமது தாயகங்களுக்கு படிப்படியாகத் திரும்பத்தொடங்கியிருந்த போதிலும், அவர்கள் மீளத்திரும்புவதற்கு உகந்த சூழல் அமைந்திருந்திருக்கவில்லை. மீளத்திரும்பியவர்கள் அரசிடமிருந்து குறைந்தபட்ச உதவிகளைக்கூடப் பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் நிருவாக மையங்களின் விரோதப் போக்குகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் பண்பாடு மற்றும் நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாமற் போனமை அவர்களின் மீள்வருகையினை வட பகுதியில் உள்ள சமூகங்கள் குறைந்த அளவிலேயே ஏற்றுக்கொள்கின்ற தன்மையினை ஏற்படுத்தியிருப்பதுடன், திரும்பி வரும் மக்களுக்கு இடராகவும் அமைகின்றது.

போரின் போதும், போரின் பின்னரும் தமிழ் சமூகம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதே போன்ற இடர்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட வட பகுதியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலையினை நாம் நினைவில் நிறுத்துவது அவசியமானது. தமிழ் சமூகம் அனுபவித்த வேதனைகளையும், இன்னல்களையும் காரணங்காட்டி முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விடயத்தை ஓரங்கட்ட முடியாது. வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்களின் முன் எமது இருப்புக்காக எந்த அளவுக்கு நாம் போராடுகிறோமோ அதே அளவுக்கு நாம் எமது செயல்களின், எமது உறுதிக்கூற்றுக்களின், எமது மௌனங்களின் அரசியலினை மீளாய்வுக்குட்படுத்துவது அவசியமாகும்.

முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை கடந்த முப்பதாண்டு காலத் தமிழ்த்தேசிய அரசியற் பிரசாரத்தின் குறுகிய நோக்குடைய, பிற சமூகங்களினை ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய உந்துகையின் மிகவும் மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். எங்களுடைய சிவில் மற்றும் அரசியற் தலைமைகள் இதனை விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தவறியமை, கடந்த காலத்தினையும், எம்மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தொடர்பாக எமக்கு உள்ள தார்மீக மற்றும் அரசியற் பொறுப்புக்களையும் நாம் நியாயபூர்வமான முறையில் அணுகுவதிலிருந்து எம்மை தடுத்துவிட்டது. தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இடையிலான உறவுகள் துருவப்பட்டுப்போவதற்கு நாம் எவ்வாறு காரணங்களாக இருந்திருக்கிறோம் என்பது பற்றிய ஒரு சுயவிசாரணை முப்பது ஆண்டு காலப் போரின் முடிவின் பின்னரும் கூடஎம்மத்தியில் உருவாகவில்லை. அரசியல் அதிகாரப் பகிர்வு, சமவுரிமை என்பன அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் உரித்தான விடயங்கள் என்பதனையும், தமிழ் சமூகத்துக்கு மாத்திரமே உரித்தான ஏனையோரைக் கருத்திற் கொள்ளாத ஒரு அரசியற் தீர்வு இல்லை என்பதனையும் நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீடித்திருக்கக்கூடிய ஓர் அரசியற் தீர்வினை அடைவதற்கு இனங்களுக்கு இடையில்– குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே– நல்லிணக்கமும், உரையாடலும் அவசியமான செயற்பாடுகளாகும். விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான பிரசைகளின் குழுவினால் தயாரிக்கப்பட்ட “மீட்சிக்கான தேடுகை: வடக்கு முஸ்லிம்களின் கதை” என்ற ஆவணம், முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டமை தொடர்பாக தமிழ் சமூகத்தின் மௌனம் பற்றி கண்டனம் மிக்க வெளிப்படுத்தல் ஒன்றை அண்மையில் மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கம் பற்றிய ஓர் உண்மையான செயற்பாட்டினை நோக்கி நாம் நகர வேண்டுமாயின் நாம் இந்த மௌனத்தைக் கலைக்க வேண்டும்.

எங்களது இருப்புக்காக நாம் புதிய செயற்பாட்டியற் பாதைகளை உருவாக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இன்றைய காலப்பகுதியில், ஏனைய சமூகங்களுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களிலிருந்து உதயமாகும் பதில்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நாம் நீதியானதும், ஜனநாயக பூர்வமானதுமான ஒரு அரசியற் தீர்வைத் தேடுகையில் இது மிகவும் பிரதானமானது. இதற்கான ஒரு படியாக முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக பகிரங்கமான எதிர்ப்பு வெளியிடப்படல் வேண்டும். இந்தப் பலவந்தவெளியேற்றம் போன்ற ஒரு வெறுக்கத்தக்க செயல் எம்மத்தியில் இனிவருங் காலங்களில் ஒரு போதும் நிகழமாட்டாது என நாம் முழுமனதுடன் கூறவேண்டும். இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை நாம் ஒரு போதும் குற்றம் எனக்கருதாது இருக்கமாட்டோம் எனக் கூறவேண்டும். இந்த சம்பவத்தையும், அதன் தொடர்ச்சியையும் மீள்நோக்க வேண்டிய அதேவேளை, உரையாடல்களை ஏற்படுத்தவும், வடக்கில் முஸ்லிம் மக்களின் இலகுவான மீள்திரும்புகைக்கும், மீள்குடியமர்வுக்கும் உதவும் வகையில் பல்லின சமூகங்களை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துதல் அவசியமானது.

ஏனைய சமூகங்களின் இடர்களையும், நலன்களையும் கருத்திற் கொள்ளாது, தமிழ் சமூகம் தன்னிச்சையாகவும், மற்றைய சமூகங்களிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கியும் தொடர்ந்து செயற்பட முடியாது. எந்தவொரு சமூகத்தினையும் பாதிக்கும் அநீதிகள், ஒடுக்குமுறைகள், வேற்றுமைப்படுத்தல்களினை நாம் அக்கறையுடன் அணுக வேண்டும். எல்லா மட்டங்களிலும் சமூகத்தின் பன்முகத்தன்மையினை எம்மத்தியில் ஊக்குவிப்பதற்கும், ஜனநாயகம், நீதி, சமத்துவம் என்பவற்றின் நலனை மையமாகக் கொண்ட பல்வேறு சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்ற ஓர் அரசியலினைப் பற்றிக் கொள்ளவும் நாம் எதுவித தயக்கமும் இன்றி உறுதி பூணுவோம்.

Signatories:

1. Mr. P. Ahilan 2. Dr. Darshan Ambalavanar 3. Ms. Jovita Arulanantham 4. Ms. Kundhavi Balachandran 5. Mr. Sivakolunthu Buvanakumar 6. Dr.GodwinConstantine 7. Dr.KumarDavid 8. Mr. R. Devarajan 9. Ms. Cayathri Divakalala 10. Dr. S. Ganesan 11. Mr. Shaseevan Ganeshananthan 12. Mr. P.B. Gowthaman 13. Dr. Rajan Hoole 14. Ms. Sithiravel Ithaiyarani 15. Mr. T. Antony Jeganathan 16. Ms. Vasuki Jayasankar 17. Dr. T. Jayasingam 18. Mr. D.B.S.Jeyaraj 19. Mr. Theliwattai Joseph 20. Mr. Ahilan Kadirgamar 21. Mr. Silan Kadirgamar 22. Ms. Niyanthini Kadirgamar 23. Ms. Sarvam Kailasapathy 24. Ms. Dushiyanthini Kanagasabapathipillai 25. Dr. S.V. Kasynathan 26. Mr. Thirukovil Kaviyuvan 27. Mr. Sathy Kulasingam 28. Mr. Prithiviraj Kulasingham 29. Prof. Vijaya Kumar 30. Ms. Maha Luxmy Kurushanthan 31. Mr. K.C. Logeswaran 32. Mr. S. Manisegaran 33. Mr. Chandrasekaran Manimaran 34. Mr. P. Muthulingam 35. Mr. V. Nandakumar 36. Ms. Malini Paramaguru 37. Ms. Nirmala Rajasingam 38. Ms. Vasuki Rajasingam 39. Mr. Sanjayan Rajasingham 40. Mr. C. Rajeshkumar 41. Ms. A. Renu 42. Ms. Kumudini Samuel 43. Ms. Rani Samuel 44. Dr. Paikiasothy Saravanamuttu 45. Dr. Muthukrishna Sarvananthan 46. Ms. Ambika Satkunanathan 47. Mr. Shyam Selvadurai 48. Rev. Jothini Seenithamby 49. Dr. T. Shanaathanan 50. Ms. M. Mangaleswary Shanker 51. Ms. C. Shanthini 52. Mr. Shobashakthi 53. Mr. P.N. Singham 54. Ms. Vasuki Sivakumar 55. Mr. K.S. Sivakumaran 56. Dr. Sumathy Sivamohan 57. Mr. Subramaniam Sivathasan 58. Mr. Balasingam Skanthakumar 59. Mr. M. Sooriyasekaram 60. Dr. K. Sritharan 61. Rev. M. Jude Sutharshan 62. Mr.H.D. Thampoe 63. Ms. Priya Thangarajah 64. Mr. Kandiah Thanikasalam 65. Mr.R. Thevamaran 66. Prof. S.Thillainathan 67. Dr.Sharika Thiranagama 68. Mr.M.Thiruvarangan 69. Mr.UmaVaratharajan 70. Mr.GodfreyYogarajah 71. Mr.RonnieYogarajah

http://inioru.com/?p=25534

  • Replies 66
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் எங்கேயிருந்து தேடிக் கொண்டுவந்து போடுகிறீர்கள் இவற்றை...சில அறியப்பட்ட எழுத்தாளர்கள் என்று கூறக்கூடியவர்கள் எல்லாம் குடும்பம் குடும்பமாக கையெழுத்து வைத்துள்ளார்கள் :icon_mrgreen:

Tamils kill Tamils

Y?

இவை கையெழுத்து போட்டு எங்க அனுப்பினவை. பாவம் நாங்கள் ஒருவராலும் மீட்சி இல்லை. சித்தாந்தம் பேசியே செத்து விட்டோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் எங்கேயிருந்து தேடிக் கொண்டுவந்து போடுகிறீர்கள் இவற்றை...சில அறியப்பட்ட எழுத்தாளர்கள் என்று கூறக்கூடியவர்கள் எல்லாம் குடும்பம் குடும்பமாக கையெழுத்து வைத்துள்ளார்கள் :icon_mrgreen:

தீபம் தொலைக்காட்சியில் நடைபெற்ற உரையாடலில் நிர்மலா நித்தியானந்தன் தமிழர்களைப் பற்றிக் கூறியதையும் இணைக்கவேண்டும்!

புத்திசீவிக் குடும்பங்கள்! நல்ல சீவியம் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இதனால்தான் ஒரு போதும் இவர்கள் பின்னால்போனதில்லை.

387970_146367998811069_100003136100600_192736_1586807029_n.jpg

புத்திஜீவிகள் என்று தமக்கு தாமே முத்திரை குத்தி வெறும் வரட்டு சித்தாந்தம் பேசுபவர்கள் ஒருபுறம் ,எதுவித அரசியல்கருத்தியலும் இல்லாமல் எடுத்தற்கும் மண்டையில் போட்டால் சரி என நினைப்பவர்களுக்கும் இடையில் எமது அரசியல் ஓடிக்கொண்டிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/jYIDZ6bs9dc

http://youtu.be/W08QxE_Ampw

http://youtu.be/f6dpcfv0cS4

முஸ்லிம் மக்களை குடியேற புலிகள் விடேல்லையெண்டு ஒப்பாரி வைச்ச நிர்மலா அக்கா இப்ப யாழ்ப்பாணத்து தமிழர் வரவேற்கேல்லையாம். இவர் போய் நிண்டு தாரளமாய். வரவேற்கலாம்தானே யார் இப்ப தடை போடுறதுக்கு அங்கை இருக்கினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

387970_146367998811069_100003136100600_192736_1586807029_n.jpg

புத்திஜீவிகள் என்று தமக்கு தாமே முத்திரை குத்தி வெறும் வரட்டு சித்தாந்தம் பேசுபவர்கள் ஒருபுறம் ,எதுவித அரசியல்கருத்தியலும் இல்லாமல் எடுத்தற்கும் மண்டையில் போட்டால் சரி என நினைப்பவர்களுக்கும் இடையில் எமது அரசியல் ஓடிக்கொண்டிருக்கின்றது.

வெற்றுப் பேச்சால் மட்டுமே, தம்மை ஆள் என்ற கணக்குக்குள் கொண்டுவருபவர்கள் கூட அடுத்தவன் பேச்சுரிமை மீது தாவி உதைக்கின்றார்கள்.

சரணாகதியின் ஆயுதம் மீதான வெறுப்பு என்பது, வெற்றி கொண்டவன் மேலான பொறாமையின் இன்னொரு பெயர்.

  • கருத்துக்கள உறவுகள்

கன ஆட்களுக்கு புலி இல்லையென்பது பெரும் பிரச்சினையாக கிடக்கு.

புலி புலி என்று கத்திகத்தி மற்றதெல்லாம் மறந்துபோய்...........

இப்ப புலி இல்லையென்றால் அடுத்தது என்ன என்பதில் பெரும் சிக்கல்.

புலி மறிக்குது

புலி அடிக்குது

புலி கொல்லுது

புலி குறுக்கால கிடக்குது................................. என்று அவர்கள் சொன்னவையே இப்ப அவைக்கு பலயீனமான சாட்சியாக்கிடக்கு.

இங்க இருந்து கொஞ்சப்பேர் இப்படித்தான் என்னோட சிங்களவன் நல்லவன் அவனோட வாழலாம் என்று கோட் ரையுடன் கொஞ்சம் பணத்தையும் வரை படங்களுடனும் திட்டங்களுடனும் போனவ.

இப்ப போன பந்து வந்த கணக்கில வந்து சொல்லினம். சிங்களவன் எல்லா இடமும் பிடித்திட்டான். நுளையவிடுகிறானில்லை. பிரபாகரன் திரும்ப வரமாட்டேரோ என்று சனம் ஏங்குது என்று.

எமது அரசியல் என்று நான் எழுதியதுதான் அந்த நோட்டிஸ்

புத்திஜீவிகளுக்கும் மண்டையில் போடுபவர்களுக்கும் இடையில் என்று .

முள்ளிவாய்காலில் போட்ட பிரம்படி இங்கும் பலரை பித்துப்பிடிக்க பண்ணிவிட்டது .

அடுத்தவர் வந்து புதுக்கதை சொல்லுகின்றார் .அங்கிருப்பவர்கள் புலிகளை மறந்து கனகாலமாகிவிட்டது.இங்கிருப்பவர்களுக்கு தான் இருப்பு கொள்ளுதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

எமது அரசியல் என்று நான் எழுதியதுதான் அந்த நோட்டிஸ்

புத்திஜீவிகளுக்கும் மண்டையில் போடுபவர்களுக்கும் இடையில் என்று .

முள்ளிவாய்காலில் போட்ட பிரம்படி இங்கும் பலரை பித்துப்பிடிக்க பண்ணிவிட்டது .

அடுத்தவர் வந்து புதுக்கதை சொல்லுகின்றார் .அங்கிருப்பவர்கள் புலிகளை மறந்து கனகாலமாகிவிட்டது.இங்கிருப்பவர்களுக்கு தான் இருப்பு கொள்ளுதில்லை

இதை பற்றி நீங்கள் எழுதிய புத்தகம் பற்றி ஏன் இன்னும் சொல்லவில்லை?? :) :)

அது சரி உமா மகேஸ்வரனும் புத்தி ஜீவியாமே?? :) :)

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலா எண்டவா சைட்டில இருக்கிறவைக்கு.. தமிழ் தேசியம் வீழ்ச்சி அடையனும் எண்ட ஆசை. காதர் பக்கம் இருக்கிறவைக்கு தமிழர் ஒற்றுமை சிதறனும் எண்ட ஆசை.

முஸ்லீம்களைப் பொறுத்தவரை... காத்தான்குடியில் படுகொலை.. யாழ்ப்பாணத்தை விட்டு துரத்தினது. இது இரண்டும் தான் அவைக்கு அரசியல் செய்ய நிவாரணம் பெற உள்ள தேடல்கள். ஆனால் மூதூர் தொடங்கி யாழ்ப்பாணம் வரை முஸ்லீம்களால் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து ஏன்.. காதர் என்பவர் கூட பேசவில்லை..! மூதூரில் பல பாரம்பரிய தமிழ் கிராமங்கள் பறித்தெடுக்கப்பட்டு முழு முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் அப்படி. அம்பாறையில் அப்படி. மன்னாரில் அப்படி. வவுனியாவில் அப்படி. யாழ்ப்பாணம் மட்டுமே தேறி இருந்தது.. எனி அங்கும் முஸ்லீம்களின் அடாவடி தொடர வாய்ப்புண்டு. இது குறித்து உந்த காதர் கத்தரிக்காய்கள்.. ஒரு பகிரங்க விவாதத்திற்கு.. இந்தக் களத்திற்கு வர முடியுமா.

காதர்.. நிர்மலா போன்றவர்கள்.. யாழ் இணையத்தை பார்க்க நேரிட்டால்.. உங்கள் கருத்துக்களோடு இங்க வாங்கோ கருத்தாடி.. ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரிப்பம்.

சும்மா தமிழ் மக்களால் மட்டும் தான் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டது என்ற அடிப்படையில் நின்று கொண்டு தமிழ் மக்கள் மீது முஸ்லீம்களோட ஒட்டுங்கோ என்று நெருக்குவாரம் செய்தால் இணக்கம் பிறக்காது. தமிழ் மக்களால் முஸ்லீம்கள் பாதிக்கப்பட பல ஆண்டுகள் முன்னரே முஸ்லீம்களால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் பாதிப்பு என்பது சிங்கள பெளத்த பேரினவாதத்தோடு எப்படி இருந்ததோ.. அதே நிலையில் தான் முஸ்லீம் மத அடிப்படைவாத தேசியத்தாலும்.. அவர்கள் பாதிக்கப்பட்டிருந்திருக்கின்றனர். இன்றும் அது தொடர்கிறது. அதுவே தமிழ் முஸ்லீம் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டும் உள்ளது. இதனை சிங்கள பெளத்த பேரினவாதம் தனக்கு சாதகமாக்கி இரு இனங்களையும் துருவ மயமாக்கி.. அந்தப் பலவீனத்தில் தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்.. தமிழ் மக்களை பார்த்து.. மட்டும்.. சிங்களவனும் ஒற்றுமையா வா என்று அழுத்தம் கொடுக்கிறான். முஸ்லீம்களும் தமிழ் மக்களின் பலவீனமான அரசியல்.. பொருண்மிய நிலையை தங்களுக்கு சார்பாக வைச்சுக் கொண்டு.. தமிழ் மக்கள் மீது மிரட்டல் தொனியில் இவ்வாறான கோரிக்கைகளை விடுகினம். அதற்கு தமிழ் மக்கள் அடிபணியத் தயாராக இல்லை.

முஸ்லீம்களுக்கு போர்க்காலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு தமிழ் மக்கள் நிவாரணம் வழங்கனும் என்பதை ஏற்றுக் கொள்கின்ற ஒரு காரியம் நடந்தால்.. முஸ்லீம்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் முஸ்லீம்கள் நிவாரணம்.. செய்ய முன் வர வேண்டும். தங்கள் நேசக்கரத்தை நீட்ட வேண்டும்.

யாழ்ப்பாண முஸ்லீம்களின் இடம்பெயர்வு என்பது முஸ்லீம்கள் செய்த தமிழர் சகோதர்களுக்கு எதிரான துரோகத்தின் விளைவே அன்றி விடுதலைப்புலிகளின் தவறு அது அல்ல.

பொதுப்படையாக விடுதலைப் புலிகள் அதை தமது குற்றமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய வகைக்கு முஸ்லீம்களினதும்.. சிங்களவர்களினதும் பிரச்சாரம் அமைந்ததே அன்றி.. ஆனால் அதற்குப் பின்னால் இருந்த உண்மைகளை யாரும் செவிமடுக்க முன்வரவில்லை.

இந்த நிலையில் தான் விடுதலைப்புலிகள் பழியை தம்மீது சுமத்தியாவது.. முஸ்லீம்களை சமாதானப் படுத்த முனைந்தனர். ஆனால் விடுதலைப் புலிகள் செய்த அளவிற்கு.. கூட முஸ்லீம்கள் தமிழ் மக்கள் மீது தாம் புரிந்த குற்றங்களுக்காக வருந்தியதும் இல்லை.. சமாதானம் செய்து கொண்டதும் இல்லை. ஏன் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகளை ஏற்றுக் கொள்ளக் கூட தயார் இல்லை. இந்த நிலையில் எப்படி தமிழ் மக்கள் கடந்த காலத்தை அப்படியே மறந்துவிட்டு முஸ்லீம் மத அடிப்படை தேசியவாதத்தின் முன் மண்டியிட்டு நிற்பர்..??!

இங்கு பேசிய நால்வரும்.. ஏதோ தமிழ் மக்கள் தான் தவறுவிட்ட போல சொல்லினம். ஆனால் உண்மையோ அதற்கு மாறாக உள்ள நிலையில்.. இவர்கள் எதை வெட்டி விழுத்தினாலும்.. களத்தில் உளமார தமிழ் - முஸ்லீம் அந்நியோன்னியத்தை வளர்ப்பது கடினம்.

அதற்கு முதலில்.. முஸ்லீம்கள் தங்கள் தவறை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களுக்கு நன்மை செய்கின்ற அதேவேளை தமிழ் மக்களும் முஸ்லீம்களை மன்னித்து தமது தவறை உணர்ந்து அவர்களுக்கு நல்லது செய்ய முன் வரும் நிலையில் மட்டுமே ஓரளவு மனமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

அதற்கு நிறைய விட்டுக் கொடுப்புக்களும்.. உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் பங்குவமும் அவசியம். அது காதர் உட்பட பலரிடம் இல்லை என்பதையே இந்த உரையாடல் உணர்த்தி நிற்கிறது. அந்த வகையில் உளமாரமான தமிழ் - முஸ்லீம் இணைவு என்பது நீண்ட பாதையை கடக்க வேண்டிய ஒன்றாகவே உள்ளது.

Edited by nedukkalapoovan

பயங்கர ஆபத்துக்களின் மத்தியில் பரமதேவா இரண்டாவது தடவை மட்டக்களப்புச் சிறையை உடைத்தது மகா பிழை.

இந்தப் பதிவிற்கு இடப்பட்டுள்ள பின்னூட்டங்களில் ஒன்று.

Posted on 01/11/2012 at 11:31 am

புத்திஐpவிகள் வெளியிட்ட அறிக்கையை பிரமுகப் பெண்னின் பிபிசி தமிழ் ஓசை பேட்டியும் கேட்டேன். இந்த பிரமுகப் பெண் சில மாதங்களுக்கு முன் எங்கள் பகுதிக்கு வந்திருந்தார். எங்கள் சமூகத்தில் அக்கறை மரியாதை செய்பவராக அவர் கதைத்தார். அதே நேரம் தமிழ் சமூக சகொதரர்கள் மேல் கடும் வெறுப்பாக கதைத்தார். எங்களுடைய பின்னடைவுக்கு வீழ்ச்சிக்கு காரணம் ஒட்டுமொத்த தமிழ் சமூகம்தான் என்றமாதிரி இவவின் கதை இருந்தது.அப்போதுதான் இவவின் தந்திரம் விளங்கியது.எங்களுக்கும் தமிழ் சகொதரர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தி அதில் குளிர்காய பார்க்கிறார்கள் என்பது தெரிந்தது. இப்போது இவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் இந்த தந்திரம்தான் தெரிகிறது. இப்படியான நேரத்தில் நாங்கள் விழிப்பாக இருக்கிறோம். எங்களை பயன்படுத்தி அரசியல் செய்ய நாங்கள் இழிச்ச வாயாகள் இல்லை என்பதை இந்த இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படிக்கு H.M. ரஹீம்

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலா எண்டா சைச்சில இருக்கிறவைக்கு.. தமிழ் தேசியம் வீழ்ச்சி அடையனும் எண்ட ஆசை. காதர் பக்கம் இருக்கிறவைக்கு தமிழர் ஒற்றுமை சிதறனும் எண்ட ஆசை.

முஸ்லீம்கள்.. காத்தான்குடியில் படுகொலை.. யாழ்ப்பாணத்தை விட்டு துரத்தினது. இது இரண்டும் தான் அவைக்கு அரசியல் செய்ய நிவாரணம் பெற உள்ள தேடல்கள். ஆனால் மூதூர் தொடங்கி யாழ்ப்பாணம் வரை முஸ்லீம்களால் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து ஏன்.. காதர் என்பவர் கூட பேசவில்லை..! மூதூரில் பல பாரம்பரிய தமிழ் கிராமங்கள் பறித்தெடுக்கப்பட்டு முழு முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து உந்த காதர் கத்தரிக்காய்கள்.. ஒரு பகிரங்க விவாதத்திற்கு.. இந்தக் களத்திற்கு வர முடியுமா.

புலிகள் வென்றபோதெல்லாம் ஓடி வந்து எடுப்பதில் எங்களையும் சேர்க்க மறக்காதீர்கள் என்றவர்கள் இன்று எங்கு போனார்கள்???

நீ போராடிப்பெறு

அதை எனக்கும் பங்கிடு

இதற்கு வக்கால்த்து வாங்கும்கூட்டமும் அதைத்தானே செய்தது. செய்யுது.

  • கருத்துக்கள உறவுகள்

அடங் கொய்யால நானே னெ; வீட்டுக்க போக முடியாத நிலையில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு தடை விதிக்கிறேனாம்?????????????முன்பு எல்லாத்திற்கும் தமிழ்மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத புலிகள் என்ற குழு தடை விதிச்சதாக பிரச்சாரம் பண்ணினான்கள்.இப்ப புலிகள் இல்லாத நிலையில் தமிழ்மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் தடை விதிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். முடிந்தால் தேர்தலில் நின்று வெற்றி பெற்று இந்த மாற்றங்களைச்செய்யட்டும்.அடிபட்டு நொந்து நூலாகி நாங்களே மீளக் குடியேற வக்கிலாத நிலையில் இப்படி அறிக்கை விடுவது தமிழ் முஸ்லிம் மக்களின் மேல் உள்ள கரிசனையில் அல்ல அவர்களுக்கிடையில் மோதலை உருவாக்குவதற்கேயாகும்.முஸ்லிம்களாவது எங்கோ ஒரு இடத்தில் உயிரச்சமின்றி வாழ்ந்தார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் எம்மினம் கருவறுக்கப்பட்ட போது இந்த அறிக்கை மன்னர்கள் எங்கே போனார்கள்!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது அரசியல் என்று நான் எழுதியதுதான் அந்த நோட்டிஸ்

புத்திஜீவிகளுக்கும் மண்டையில் போடுபவர்களுக்கும் இடையில் என்று .

முள்ளிவாய்காலில் போட்ட பிரம்படி இங்கும் பலரை பித்துப்பிடிக்க பண்ணிவிட்டது .

அடுத்தவர் வந்து புதுக்கதை சொல்லுகின்றார் .அங்கிருப்பவர்கள் புலிகளை மறந்து கனகாலமாகிவிட்டது.இங்கிருப்பவர்களுக்கு தான் இருப்பு கொள்ளுதில்லை

மகிந்தா, தமிழருக்கு புலியைப் பற்றி காட்டிய படத்தை விட, நீங்கள் புலியைப் பற்றி காட்டின படம்தானே 100 நாட்கள் ஓடியது. உங்கள் திருவாக்குகள் நியத்திலா, இல்லை உங்கள் ஆசையிலா தயாரிக்கப் படுகின்றது என்பதை நாம் இனித்தான் அறிய வேண்டுமா?

"புலிகளுக்குப் பின்னால் இன்று மக்கள் இல்லை" என்ற வசனம் சொல்லப்படாமலே அது கொண்டிருக்கும் பொருள், அன்று மக்கள் பின்னால் இருந்தார்கள் என்பதையே!

ஆனால் அந்த வசனம், "என்றும் மக்கள் புலிகளின் பின்னால் இருந்தார்கள் இல்லை!" என்பவன், சொல்லப்படுவது பொருள் குற்றமா? இல்லை பொய்க்குற்றாமா?

மறத்தல் என்ற சொல்லே முன்னால் நினைக்கப் பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது அல்லவா? அப்படி நினைக்கப்பட்டார்கள் என்பதை பொய் என்று சத்தம் போட்டு கூறியவன் இப்படி மறந்துவிட்டார்கள் என்று எப்படிக் கூற முடியும்? இவைதான் புத்துசாலித்தனத்தின் பாதிப்புக்களா?

தெரிந்தவர் சொன்னார்... றோ மூளைச்சலவை ( mind control warfare ) செய்த பலபேரில் இவவும் ஒராளாம்...

இது தொடர்பாக வந்த இன்னுமொரு பதிவு

நிர்மலாவின் குரலும் 71 ஆட்டுக்குட்டிகளும்! : ப.வி.ஸ்ரீரங்கன்

இனவாத அரசினது ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் இலங்கைச் சிறுபான்மை மக்களது உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.

இந்த ஈனத்தனத்தை எல்லாக் காரியவாதத் தமிழர்களும்திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.

நிர்மலா தலைமையில்,71 புத்தி சீவிகள் என்பவர்கள் குறியீடாகிய தருணம் என்ன?

அவர்களுக்குப் பின்னே கட்டியமைக்கப்பட முனையும் கோரிக்கைகளது அரசியல் என்ன?

அந்த அரசியலின் வழி நலமடையமுனையும் வர்க்கம் எது?

இவை கேள்விகள்.

பதில்களுக்கு இன்னுஞ் சிலகாலம் பொறுத்திருந்தே தீரவேண்டும்.எனினும்,சில குறிப்புகளை இங்ஙனமும் பார்த்தே ஆகவேண்டும்.இவர்களது விபரீத அரசியலை பரவலாக அறிக்கைகள் மூலம் புலத்தில் பிளவுண்ட இடதுசாரி முகாங்கள் அறிவித்திருக் கின்றன.இந்த விபரீத அரசியலைப் பற்றிய புரிதலுக்கான நிபந்தனைகள்,இலங்கையினது இனவாத அரசியலுக்குள் தொடர்ந்து வியூகமிடும் அந்நியப் பிராந்திய நலன்களைக் குறித்துப் புரிந்துகொள்வதைக் கோருவதேயாகும்.அந்தக் கோரிக்கையானது பிராந்திய நலனுள் பின்னப்பட்ட தமிழ்பேசும் மக்களதும்,ஏனைய இலங்கைச் சிறுபான்மை மக்களதும் அரசியல் தலைவிதியைக் குறித்துப் பேசுவதற்கானவொரு வெளியைத் தேடிக்கொள்வதன் பொருட்டு மேலும் சில குறிப்புகளைக் குறித்துக்கொள்வதென்று…

„…இரவு மட்டுமல்ல

இந்த மண்ணின் இருப்பும்

அச்சத்தைத் தருகிறது

கிழட்டுப் பலாமரத்தில்

பச்சோந்தியொன்று.

வண்ணத்துப் பூச்சிகள்

சிறகடிக்கின்றன…“ -செழியன்.

முள்ளிவாய்க்கால்வரை இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம் இன்று!

80 களில் ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும், இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.

முள்ளி வாய்க்காலில் பல பத்தாயிரம் மக்கள் புலிகளோடு சேர்த்துக்கொல்லப்பட்டார்கள்.அப்போது,கொல்லப்படும் மக்களைப் புலிகளைக் காப்பதற்காக தேசியவாதிகள் எவருமே கண்டுகொள்ளவில்லை!இந்தக் கண்டுகொள்ளாத சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்கிய இலங்கை அரசு,மக்களைக்கொன்று குவித்து அவர்களுக்குள் மறைந்திருந்த புலிகளைப் பூண்டோடு வேட்டையாடியது.

இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு புத்திசீவிக்குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் 71 பேர்கள் அடங்கிய கையெழுத்து அறிக்கை என்பதும்- ஆலோசனைகள் என்பதும், அதுசார்ந்த நிர்வாக அலுகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.

புலியை அழித்து முடித்துவிட்ட-இப்போதைய-நிலைமைகளில், இலங்கை இராணுவம் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் தனது முகாங்களை நிறுவிப் பலாத்தகாரமான இராணுவ அதிகாரத்தை நிறுவித் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து வாழ்வு முன்னெடுப்பையும் தீர்மானிக்கும்போது, இந்திய ரோவினது ஆலோசனைக்கொப்பப் புலிகளால்துரத்தப்பட்ட இஸ்லாமிய மக்களை வைத்து எழுதப்படும் கோரிக்கைகள் இலங்கை அரசிடமே விடப்படவேண்டிய நிலையில் நாடு இருக்கும்போது,அதைத் தமிழ் தரப்பை நோக்கி எறிவதென்பதும் சாணாக்கியத்தனமானதுதாம்.

இப்போதும் நாம் சொல்வது, தமிழ் பேசும் மக்களின் முதற்தரமான எதிரிகள் இலங்கை அரசும்,அந்த அரசைத் தூக்கி நிறுத்துவதற்காவும்,சிங்கள அரசுக்கெதிரான- இனவொடுக்குமுறைக் கெதிரான தமிழ்பேசும் மக்களின்போராட்டத்தையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய இந்திய அரசுமே தமிழ்பேசும் மக்களின் அதிமுதல் எதிரிகள்.

யுத்தம் செய்தும்-இராணுவ ஆட்சியைக் கட்டமைக்கும் எந்தவொரு சமுதாயமும் தனது வலுவுக்குள் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டிருப்பதில்லை . இது அரசியல் விஞ்ஞானத்தில் மிகத் தெளிவாக நாம் உணரத்தக்கது.இந்தச் சூழலில் இலங்கைபோன்ற மிகவும் பின் தங்கிய-எந்தச் சமூகவுற்பத்தியையும் தனது சொந்த முயற்சியால் முன்னெடுக்காதவொரு நாட்டில் „எந்தச் சுயாண்மையும்“ நிலவ முடியாது.

இதுதாம் இன்றைய இலங்கையில் நிலவுகின்ற அரசியற்சூழல்.

இந்தச் சூழலைத் தகவமைக்கும் புறதேசங்களது அரசியல் ஆர்வங்களானது, இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையைத் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்க விரும்புகின்றன.இதன் உச்சக்கட்டமாகவே,இப்போது இனங்களுக்கிடையில் பிளவுவாதத்தையும்-வரலாற்றுப்பழியையும் மீளவுருப்போட்டு நகர்த்தப்படும் அரசியலாக இந்த 71 நபர்களது பெயரோடு உலாவரும் கோரிக்க்குப்பின் நிலவும் அரசியல்“யாழ்பாணியம்-தேசியம்,தமிழர்கள்“ என்று குறியீடுகளுக்குள் உந்தித்தள்ளப்பட்டு,அங்கே பிரதேச வாதம் மூப்படைய வைக்கப்படுகிறது.

இந்தத் தகவமைப்புக்கு உந்துதலாக இருப்பதும் இந்திய அரசியல் ஆர்வமென்பதுதாம் உண்மையாகும்.

இலங்கையென்பது இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நிலப் பிரதேசம் என்பதும்,இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சமூகவுறுகளின் இறமைக்கு அதி முக்கிய பாத்திரம்பெறும் வலையமென்பதும் உண்மையாக இருப்பதால்,பண்டுதொட்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுகள்,விருப்பங்கள்,ஆர்வங்கள்,ஆதிக்கங்கள் சங்கிலித் தொடராகப் பின்னப்பட்டு வருகிறது.

இந்த இந்தியாவென்ற ஒரு தேச அரசியல் கட்டுமானமானது பிராந்திய ஆதிக்கத்தின் வெளிப்பாட்டோடு முன் நிறுத்தப்படும் பாரிய யுத்த ஜந்திரத்தோடு“உலகின் பாரிய ஜனநாயக நாடு“என்று பிரகடனம் பெறுகிறது.இந்த நாட்டைப்பற்றிய அரை குறைப் புரிதலின் வெளிப்பாடே முள்ளி வாய்க்காலுக்குப்பின் பலரிடம் அரசியல் கருத்தாக வருகிறது.

இந்தியாவைப் பகைக்காமல்தமிழ் மக்கள் அரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவின் உதவியோடு பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டுமென்பதும் ஒரு திசைவழியில் 71 பேர்கள் அடக்கமுறும் கோரிக்கையென்பதும் ஏதோவொரு சிலரின் விருப்புக்குட்பட்ட பார்வைகள் அல்ல.

அவை,பிராந்திய நலன்களது நீண்டகால நோக்கின் ஒரு பகுதி வியூகமாகும்.

உதாரணமாக: புலிகளால் இதுவரை நடாத்தப்பட்ட இந்தப் போராட்டம்,அதாவது, ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள், புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம்காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் சிங்களப் பாசிச இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இஃது பாத்திரமாகியது.இந்தச் சூழலை மிக நுணுக்கமாக இனம்கண்ட இந்தியப் பிராந்திய நலனானது தன்னைத்தொடர்ந்து நாம் பின்தொடரும் காரியத்தில் கனாக் காணும் அரசியலது தொடரே இப்போது தமிழ்பேசும் மக்களக்குள் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு“விடிவு“குறித்து வகுப்பெடுக்கிறது.இது,ஏமாற்றப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின் அரசியலது அடுத்த கட்டத்தைக் குழப்பிக்கொள்வதையும்-குட்டையைக் குழப்பி பிடிக்க முனையும் மீனையும் இனங்கண்டாக வேண்டும்.

இலங்கையின் அரசமைப்பில், இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்கள் தம்மை மிக மிகத் தந்திரமாகத் தக்க வைத்துக்கொண்ட வரலாறு மிகவும் கொடியது.இது கடந்த காலத்தில் சிங்கள-தமிழ்-முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் தரப்பில் சுமார் 300.000.அப்பாவி மக்களையும் கொன்று தள்ளியுள்ளது.

இன்றுவரையும், இழுபட்டுப்போகும் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய கொடிய இராணுவ ஒடுக்குமுறையால் மனிதவுரிமைகள் துளியளவும் இல்லாது போய்விட்டது. இந்த இலட்சணத்தில் தமிழ் பேசும் மக்களினதும்-முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் எதிர்காலமானது வெறும் இருண்ட வெளிக்குள் நகர்கிறதென்பதைத் தட்டிக்கழித்து விட்டு, இந்த 71 நபர்கள் செய்யும் மோடி வித்தையானது பெருத்த சந்தேகத்துக்குரியது.இதற்குப் பின் நகர்த்தப்படும் அரசியலது வீரியம் என்னவென்பது குறித்து நீண்ட ஆய்வுகள் தேவையாகிறது.

இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும்.இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகபூர்வமான அரசுகிடையாது.

இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில், தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது.புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறென்று அன்று கூறியவர்கள்-ஏன் தமிழ்பேசும் மக்களை இலங்கை-இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கிறார்கள்?

எப்படித் தமிழ் பேசும் மக்களினது வாழ்வில் காலாகாலமாகத் தீங்கிழைக்கும் சிங்கள இனவாத ஆளும் வர்க்கத்தை, முழுமொத்த இலங்கை மக்களது நண்பர்களாக்கித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்?

இந்தியாவினதும்,இலங்கையினதும் ஆளும் வர்க்கங்களது அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய இந்த 71 நபர்களும்,அரசியல் சாக்கடைகள்-மக்கள் விரோதிகள்! மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படைச் சேவைக்காக நிர்வாகப் பலத்தைத் தேடுவது முஸ்லீம்மக்களின் உரிமையல்லவே.

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

11.01.2012

http://inioru.com/?p=25577

பின்னூட்டங்களில் ஒன்று

Shaseevan Ganeshananthan

சிறீரங்கன்,

இக்கோரிக்கையில் நான் கையெழுத்திடும் போது மிகவும் யோசித்த பின்னரே கையெழுத்திட்டேன். தமிழ் மக்களது மனவடு காரணமாக தமிழ்த்தேசிய அரசியல் செல்லும் பாதை மேலும் மேலும் வெளியொதுக்கல் நிறைந்ததாக மாறிவருகின்றது. இது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காது. அந்நிய அரசியல் சக்திகள் பயன்படுத்தக்கூடிய அரசியல் வெளிகளிலே இன்னும் நீண்ட காலம் இயங்க வேண்டியிருக்கும்.

தமிழ்த்தேசிய அரசியல் ‘வெளியொதுக்கலுக்கு’ மாறாக ‘உள்வாங்கல்’ களுடன் கூடிய தன்மையையும் ‘ஜனநாயகபூர்வமான’ தமிழ்த்தேசிய அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில், ‘விடயம்’ சார்ந்தே கையெழுத்திட்டேன். இது போன்று வேறு பார்வைகள் அதில் கையெழுத்திட்ட வேறு சிலருக்கு இருந்திருக்கக்கூடும். பொதுமைப்படுத்தி அணுகுவது எவ்வளவு தூரம் பொருத்தமானதோ தெரியவில்லை.

உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி தமிழ் அங்கு தமிழ் மக்களைக் குடியேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளுடன் கூடிய சுற்றுநிருபத்திற்கும் கையொப்பமிட்டிருப்பேன். அக்கோரிக்கையை ஏன் அரசை நோக்கி மேற்குறித்தவர்கள் முன் வைக்கவில்லை என்ற கேள்வியும் முக்கியமானதுதான்.

இவ்விடயம் சார்ந்து விரிவான பதிவொன்றை விரைவில் எழுத முயற்சிக்கின்றேன்.“

ஜயா , தமிழர்களாகிய எங்களிடத்தில் எதுவும் இருந்தால்தானே மற்றவர்களிற்கு கொடுப்பதற்கு. 60 வருடத்திற்கு மேலான அகிம்சை, ஆயுதப் போராட்டத்தில் தோல்வி அடைந்து , உயிர் இழந்து ,உடமை இழந்து ,எல்லாம் இழந்துநடு வீதியில் நாம் தமிழர்நிற்கும் போது, எங்களிடத்தில் வந்து முஸ்லீம்களிற்கு அதைக்கொடு, இதைக்கொடு, அதிகாரம் கொடு என்றால் ,நாங்கள் எதை ஜயா கொடுப்பது.முதலில் தமிழர் எங்களிற்கான பாதுகாப்பு வலையங்களைநீக்கி எங்கள் இடங்களைக் கொடுங்கள்: மீன் பிடி வலையங்களை நீக்குங்கள்: தரப்படுத்தலைநிறுத்துங்கள்: காணி , போலிஸ் அதிகாரங்களைக் கொடுங்கள்: ஆயிரக் கணக்கில் சிறையில் வாடும் எங்கள் உறவுகளை விடுதலை செய்யுங்கள்: முதலில் தமிழர்கள் எங்களை தமிழர்களாக எங்கள் பூர்வீக இடத்தில் வாழ விடுங்கள்: பூர்வீகக்குடிகள் நாங்களே பிச்சை எடுக்கிறோம். இதில் வந்தேறு குடிகளுக்கு கொடு என்றால் எதைக்கொடுப்பது. சரி வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் மட்டுமா வாழ்கிறார்கள்: கிறீஸ்த்தவர்கள் வாழவில்லையா??? இல்லை மலையகத் தமிழர்கள் வாழவில்லையா? அவேர்கள் எபோதாவது வடக்குகிழக்கு தமிழரிடம் அதிகாரம் கேட்டார்களா???? இல்லை அவேர்கள் எப்போதாவது எம்மோடு முட்டி மோதி வெட்டி இனக்கலவரத்தில் ஈடுபட்டார்களா. அதென்னா முஸ்லீம்களுக்கு மட்டும் அதிகாரம் கொடு, ஆட்டுக்குட்டி கொடு என்று எங்களைநச்சரிக்கிறிர்கள்: வடக்கு கிழக்கு தமிழனின் தனித் தாயகம். எப்படி தமிழரோடு கிறீஸ்த்தவர்களும், மலையக மக்களும் வாழ்கிறார்களோ, அப்படியே முஸ்ல்லிம்களும் தாராளமாக வாழலாம். இதுதான் உண்மை. யதார்த்தம். வடக்கி கிழக்கு தமிழ் மக்கள் உரிமையோடும் , பாதுகாப்போடும், அதிகாரதோடும் வாழும் நிலைமை வருமாயின் முஸ்லீம்களும் அப்படியே வாழ்வார்கள்: இதற்கு நல்ல உதாரணம் தமிழ் நாடு. தமிழ்நாட்டில் தமிழர்கள் பாதுகாப்போடு வாழ்கிறார்கள்: அங்கு முஸ்ல்லிகளூம் அதே போல் வாழுகிறார்கள்: ஈழத்தில் வன்னியில் புலிகளின் கட்டுபாட்டில் இருந்த பொழுது எப்படி வன்னித்தமிழர்கள் எந்த பிரச்சனை இன்றி வாழ்ந்தார்களோ, அதே போல் முல்லைத்தீவில் இருந்த்த 55 முஸ்லீம் குடும்பகளும் வாழ்ந்தது நல்ல உதாரணம். எடுத்துக்காட்டு . முதலில் வடக்கு கிழக்கின் பூர்வீகக்குடிகளாகிய தமிழர் எங்களை உரிமையோடு வாழ விடுங்கள்: முஸ் லிம்களும் எவ்வித பிரச்சனை இன்றி அச்சமற்று வாழ்வார்கள்: வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களீனது தாயகம். இது முஸ்லீம்களுக்கும் பொருந்த்தும். கிறீஸ்த்தவர்களிற்கும் பொருந்த்துன். அல்லது இந்திய வம்சாவளித்தமிழர்க்ளிற்கும் பொருந்தும். ஆனால் வடக்கு கிழக்கில் மதரீதியான இனக்களிற்கு ஒரு போதும் உருமைகள் பகிர்ந்தளிற்கப்படமாட்டாது.இதுதான் சாதரண தமிழனின் உணர்வு.நிர்மலா வந்தா என்ன இல்லை, யாரு வந்தா என்னா. அவெர்கள் சொல்லவதை சொல்லட்டும். பேசுவதைப் பேசட்டும். அவெர்கள் எல்லாம் இத்தனை நாள்நித்திரையிலா கிடந்தார்க ள்: மக்களாகிய எங்களிடத்தில் கேட்காமல்,கோமாளிகளாகிய உங்களால் எவருக்கும் எந்த உரிமையும் பகிர்ந்த்து அழிக்க முடியாது

  • thamizhan

Edited by தப்பிலி

முஸ்லீம்களுக்கும் மற்றய இனத்தவர்களுக்கும் ஒருபோதும் நல்லினக்கம் வரப்போவதில்லை.. எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்....  

பிகு... எங்கேயாவது போய் உடல்/பேச்சு மனோரிஸம் பற்றி வாசிச்சுவிட்டு, சாத்திரியார் ஒட்டின வீடியோக்களை பாருங்கள்.. குறிப்பிட்ட பெண்....., பொய், பித்தலாட்டம், மற்றவனை பேயனாக்கும் முயற்சி, உடனுக்குடன் தயாரிக்கப்பட்ட உவமாணக்கதைகள் எண்டு பிச்சு உதருறா... இவவை சொல்லிப்பயனில்லை.. இந்தமாதிரிகளை தேசியத்துக்கு ஆதரவான மீடியாக்களில் இழுத்துவிடுபவர்களைத்தான் சொல்லோனும்...lol

Edited by Panangkai

thamizhan

ஈழம் 'கிடைத்தவுடன்' இந்தமாதிரி எழுதும் பேமானிகளுக்கு பச்சைமட்டை அடி போடொனும்.. :icon_mrgreen:

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதன் என்ற அளவுக்கு, நிரம்பாதவர்கள்; அரமோ, இல்லை மரமோ நிட்சயமாக அடுத்தவனுக்கு உபயோகமாகப் போவாதில்லை. இந்த வகை மேதைகள் அடுத்தவனை அடித்து தன் உலைக்குள் போட்டுபவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

<p>

தீபம் தொலைக்காட்சியில் நடைபெற்ற உரையாடலில் நிர்மலா நித்தியானந்தன் தமிழர்களைப் பற்றிக் கூறியதையும் இணைக்கவேண்டும்!

புத்திசீவிக் குடும்பங்கள்! நல்ல சீவியம்

நிர்மலா நித்தியானந்தன்???

'புத்தி சீவிகள்' என்றால் என்ன? இந்த மொக்கன் தப்பிலிக்கு ஒன்றுமா விளங்கவில்லை.

வெறும் புத்தகங்களைப் வாசித்து விட்டு, அதன் போக்குக்கு நடப்பதா?

அல்லது வாசித்த புத்தக அறிவை கிரகித்துக் கொண்டு சொந்த மூளையையும் பாவித்து வரும் ஞானமா?

  • கருத்துக்கள உறவுகள்

'புத்தி சீவிகள்' என்றால் என்ன? இந்த மொக்கன் தப்பிலிக்கு ஒன்றுமா விளங்கவில்லை.  

வெறும் புத்தகங்களைப் வாசித்து விட்டு, அதன் போக்குக்கு நடப்பதா?

அல்லது வாசித்த புத்தக அறிவை கிரகித்துக் கொண்டு  சொந்த மூளையையும் பாவித்து வரும் ஞானமா?

புத்தியுள்ள மனிதர்களின் மூளையையும் சீவிச் சீவிமொட்டையாக்குபவர்கள் தான் புத்திசீவிகள் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.