Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

Featured Replies

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழின் அவசியம் பற்றி,

யாழை நான் தற்போது பாவிப்பது, பல்வேறு சாராரின் கருத்துக்களை அறிந்து கொள்ள.தேசிய விடுத்தலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றியவர்கள் இன்று பல குழுக்களாக அணிகளாக பல்வேறு கருத்துக்களுடன் செயற்படுகிறோம்.இதில் அவர் அவரின் கருத்துக்களை நிலைப்பாடுகளை கருத்தாடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை புரிந்துணர்வை நோக்கிப் பயணிப்பதற்க்கு யாழ் அவசியம்.ஆனால் இதனை வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையோ ,துரோகி என்னும் பட்டங்களாலோ செய்ய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்கள் ஆதாரங்களுடன் கேட்கப் படலாம்.அதனை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்லலாம்.மடியில் கனம் இல்லாதவர்கள் பதில் சொல்லலாம்.இதனை விட்டு விட்டு யாழை எந்த வித சொந்த நலனும் இன்றி நடாத்தும் மோகனுக்கு அலுப்புக் கொடுப்பது எந்த நியாயும் இருப்பகாகத் தெரியவில்லை.இன்று யாழைப் போல் சுயாதினமாக கருத்துத் தடைகள் இன்றி இயங்கும் தளம் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.

மோகன் அண்ணாவுக்கு இருக்கும் பிரச்சினைகள்.

நேர விரயம் - மட்டுறுகினர்கள் மோகன் அண்ணாவின் வேலைப் பளுவைப் பகிர்ந்து கொள்ளல்.தொழில் நுட்பம் அறிந்தவர்கள் உதவி செய்தல்.

பண விரயம் - உறுப்பினர் ஆகிறவர்கள் ஒரு சிறு தொகையை சந்தாவாக வழங்குதல் - பேபால் மூலம் இதனைச் செய்யலாம்.

தலையிடி- உறுப்பினர்களிடையே இருக்கும் பிரச்சினைகளை மோகன் அண்ணா மீது திணிப்பதை நிற்பாட்டினால் இகனை இலகுவாக நிற்பாட்டலாம்.பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் எழுதினால் இதனை இலகுவாக நடைமுறைப் படுத்தலாம்.

மேலே எழுதியவை நடைமுறைப்படுத்தா விடின் இன்னும் சில மாதங்களில் யாழ் மூடப்படுவது தவிர்க்க முடியாது போகும்.எனக்கு யாழ் நிற்பாட்டப்படுவது கவலை அழிக்கிறகு.ஆனால் நாங்கள் ஒரு தனி மனிதரின் வாழ்க்கையோடு விளையாட முடியாது.எங்கள் எல்லாருக்கும் இருப்பதைப் போல் மோகன் அண்ணாவுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கிறார்கள்.அதனை அவர் நிச்சயமாகக் கருத்தில் எடுக்க வேண்டும்.

பொறுப்புணர்வுடன் இதனை அணுகி ,உங்கள் கருத்துக்களை, ஆதரவை மோகன் அண்ணாவுக்கு வழங்கும் படியும், நான் மேலே சொன்ன விடயங்களுக்கு ஆதரவு நல்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.அல்லது உங்களிடம் வேறு தீர்வுகள் இருந்தால் அவற்றையும் எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்.

  • Replies 53
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி Narathar, நானும் யாழ் களத்தை 2005 ல் இருந்து பதிவுகளை ஆர்வமாக படிப்பவன் கிட்டடியில்தான் யாழுடன் இனைத்து கொண்டேன், உங்களுடைய கருத்துகள் நூறு வீதம் உண்மை, நீங்கள் சென்ன மாதிரி நான் ரெடி சந்தா உறுப்பினராக (அதற்காக $1000 கோட்க வேண்டாம்), உங்கள் கலகம் நன்மையில் முடிய வாழ்த்துக்கள்

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழின் அவசியம் பற்றி,

இன்று யாழைப் போல் சுயாதினமாக கருத்துத் தடைகள் இன்றி இயங்கும் தளம் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.

மோகன் அண்ணாவுக்கு இருக்கும் பிரச்சினைகள்.

பண விரயம் - உறுப்பினர் ஆகிறவர்கள் ஒரு சிறு தொகையை சந்தாவாக வழங்குதல் - பேபால் மூலம் இதனைச் செய்யலாம்.

சந்தாக்காரனாக நான் இணைய தயார்.....சந்தா விபரங்களை அறியத் தரவும்

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவோ.. வேறு யாழ் கள நிர்வாக உறவுகளோ.. இந்த செய்தியில் உள்ள உள்ளடக்கங்களை உறுதி செய்தால் மட்டும் மேற்கொண்டு சிந்திக்க முடியும். :)

(காரணம் திண்ணையில் மேகன் அண்ணா இப்படிக் குறிப்பிட்டுள்ளார்..

மோகன் : (01 August 2011 - 07:46 PM) தொடர்ச்சியாக சில புதுப்பித்தல் வேலைகள் செய்து கொண்டிருப்பதால் இடையிடையே யாழ் இணைய வழங்கியில் தடங்கல்கள் ஏற்படும். )

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் "திறந்த உரையாடல்கள்" அனுமதிக்கப்பட்டிருந்தாலும், களத்தின் எதிர்காலம் கள உறவுகளின் கைகளில் முழுமையாக இல்லை! "பே பால்" கணக்கின் இணைப்பை முகப்பிலும், கருத்துக்களத்திலும் இணைத்தால் உதவக்கூடியவர்கள் கட்டாயம் உதவுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் தொடர நானும் சந்தாதாரராக இணைய சம்மதிக்கின்றேன்

சந்தாக்காரனாக நான் இணைய தயார்.....சந்தா விபரங்களை அறியத் தரவும்

நீங்கள் இரண்டு முறை சந்தா கட்ட வேண்டும் ஜில் :)

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா விபரங்களை யாழ் களத்தின் ஒரு பகுதியில் இட்டால்,மனச்சாட்சி உள்ளவர்கள் சந்தா கட்டக் கூடியதாக இருக்கும்!

இந்த நாளையில கல்யாண வீட்டுக்குப் போகேக்குள்ள கூட, என்வலப்போட போகாட்டால் ஒரு மாதிரியாப் பார்க்கிறாங்கள்!

யாழ் களம் மட்டும் இன்னும், சன்னிதிக் கந்தன் மாதிரி!!!! :wub:

முன்பும் கூறியதுதான். சந்தாக் கட்டணம் வசூலிப்பது மிக இலகுவான முறை. நான் இணையத் தயார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாழின் அவசியம் பற்றி,

யாழை நான் தற்போது பாவிப்பது, பல்வேறு சாராரின் கருத்துக்களை அறிந்து கொள்ள.தேசிய விடுத்தலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றியவர்கள் இன்று பல குழுக்களாக அணிகளாக பல்வேறு கருத்துக்களுடன் செயற்படுகிறோம்.இதில் அவர் அவரின் கருத்துக்களை நிலைப்பாடுகளை கருத்தாடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை புரிந்துணர்வை நோக்கிப் பயணிப்பதற்க்கு யாழ் அவசியம்.ஆனால் இதனை வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையோ ,துரோகி என்னும் பட்டங்களாலோ செய்ய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.குற்றச்சாட்டுக்கள் சந்தேகங்கள் ஆதாரங்களுடன் கேட்கப் படலாம்.அதனை நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்லலாம்.மடியில் கனம் இல்லாதவர்கள் பதில் சொல்லலாம்.இதனை விட்டு விட்டு யாழை எந்த வித சொந்த நலனும் இன்றி நடாத்தும் மோகனுக்கு அலுப்புக் கொடுப்பது எந்த நியாயும் இருப்பகாகத் தெரியவில்லை.இன்று யாழைப் போல் சுயாதினமாக கருத்துத் தடைகள் இன்றி இயங்கும் தளம் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.

மோகன் அண்ணாவுக்கு இருக்கும் பிரச்சினைகள்.

நேர விரயம் - மட்டுறுகினர்கள் மோகன் அண்ணாவின் வேலைப் பளுவைப் பகிர்ந்து கொள்ளல்.தொழில் நுட்பம் அறிந்தவர்கள் உதவி செய்தல்.

பண விரயம் - உறுப்பினர் ஆகிறவர்கள் ஒரு சிறு தொகையை சந்தாவாக வழங்குதல் - பேபால் மூலம் இதனைச் செய்யலாம்.

தலையிடி- உறுப்பினர்களிடையே இருக்கும் பிரச்சினைகளை மோகன் அண்ணா மீது திணிப்பதை நிற்பாட்டினால் இகனை இலகுவாக நிற்பாட்டலாம்.பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் எழுதினால் இதனை இலகுவாக நடைமுறைப் படுத்தலாம்.

மேலே எழுதியவை நடைமுறைப்படுத்தா விடின் இன்னும் சில மாதங்களில் யாழ் மூடப்படுவது தவிர்க்க முடியாது போகும்.எனக்கு யாழ் நிற்பாட்டப்படுவது கவலை அழிக்கிறகு.ஆனால் நாங்கள் ஒரு தனி மனிதரின் வாழ்க்கையோடு விளையாட முடியாது.எங்கள் எல்லாருக்கும் இருப்பதைப் போல் மோகன் அண்ணாவுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கிறார்கள்.அதனை அவர் நிச்சயமாகக் கருத்தில் எடுக்க வேண்டும்.

பொறுப்புணர்வுடன் இதனை அணுகி ,உங்கள் கருத்துக்களை, ஆதரவை மோகன் அண்ணாவுக்கு வழங்கும் படியும், நான் மேலே சொன்ன விடயங்களுக்கு ஆதரவு நல்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.அல்லது உங்களிடம் வேறு தீர்வுகள் இருந்தால் அவற்றையும் எழுதும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நாரதர் அவர்களுக்கு நன்றி.

ஒரு சிறந்த அரசியல் மற்றும் குமுகாயச் செயல்நெறிக்கான தளமாக இருக்கும் யாழ்களம் தொடர்ந்து இயங்கும் விதமான செயற்பாடுகளுக்கு நானும் என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்வேன். தமிழ்க்குமுகாயத்தின்பால் நின்று நியாயாபூர்வமாகவும் எதிர்நிலையாகவும் சிந்திப்போரிடையே புரிந்துணர்வையும் கருத்தியல் பரிமாற்றத்தையும் ஏற்படுத்திவரும் யாழ்க்களம் பாதுகாக்கப்படுவது அவசியமானது.

கள உறவுகள் கண்ணியமான கருத்தாடலை மேற்கொள்வதூடாகப் பொறுப்பாளரை நெருக்கடிக்குள்வாக்குவதை தவிர்ப்பதோடு, கருத்தெளுதும்போது தானும் இதன் பங்காளன் என்ற நிலையில் சிந்தித்துச் செயற்படும் பாங்கு ஏற்படுமாயின் திரு மோகனவர்களது பாதிவேலைப்பளு குறைந்துவிடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா பற்றி முன்பு பலமுறை பேசப்பட்டது. பரிந்துரைக்கப்பட்டது

ஆனால் மேலே ஒண்டிப்புலி கூறிய காரணங்களால் மோகன் அண்ணாவால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா பற்றி முன்பு பலமுறை பேசப்பட்டது. பரிந்துரைக்கப்பட்டது

ஆனால் மேலே ஒண்டிப்புலி கூறிய காரணங்களால் மோகன் அண்ணாவால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இன்னுமுருக்க முயற்ச்சி செய்து பார்பதுதனே , ஏன் வாக்கெட்டுப்பு நடத்த கூடாது with various options

  • கருத்துக்கள உறவுகள்

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

ஒண்டிப்புலி சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சந்தா கட்டுவதென்பது யாழை தொடர்ந்து நடத்திச் செல்ல, ஒவ்வொருவரும் மனச்சாட்சிப் படி கட்டுவது.

அதற்காக..... அடாத்தாக கருத்து எழுத முடியாது. அப்படி எழுதினால் வழக்கம் போல்... மட்டுறுத்தினர் கத்தியை பாச்ச வேண்டும்.

ஒண்டிப்புலியின் இரண்டாவது, மூன்றாவது கருத்தை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். யாழ் களம் என்றால்... அது மோகன் அண்ணாவின் பிள்ளை. அதனை வேறு யாரும் பராமரிப்பது அழகல்ல.

பிற்குறிப்பு: நான் சந்தா கட்ட ரெடி.

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

வேறு ஒருவரிடம் ஒப்படைப்பது சரியானதாக இருக்காதது ஆனால் யாழை வியாபர நோக்கில் கொண்டு செல்வது சிறந்ததாக இருக்கும் அதில் கருத்துக் களம் ஒரு பகுதியாக இருந்துட்டு போகட்டும்.

நான் நீண்ட நாட்கள் யோசித்தேன் ஏன் மோகன் அண்ணா இன்னும் யாழை மாற்றிஅமைக்கவில்லை என்று? ஆனால் அதன் சரி பிழைகளை பற்றி எனக்கு தெரியாது.

மோகன் அண்ணாவிடம் எனது தனிப்பட்ட அட்வைஸ் நாளக் கடத்தாது யாழை மாற்றி வியாபர நோக்கமாக மாற்றுவது ஒன்று தான் யாழ் நிலைப்பதுக்கும் உங்களுக்கும் நல்லது.

நேற்று ஆர்ம்பித்த பல இணையங்கள் இன்று வருவாயில் கொடிகட்டிபறக்கிறது ஆனால் நீங்கள் இன்னும் தேசியம் தேசியம் என்ற காணல்நீரில் யாழையும் உங்கள் நேரத்தையும் வீணாக்கி கொண்டு இருக்கிறீங்கள்.

  • தொடங்கியவர்

[ஃஉஒடெ நமெ='ஒண்டி புலி' டிமெச்டம்ப்='1312282163' பொச்ட்='678566']

வன்மையாக கண்டிக்கிறேன் இதன் மூலம் மோகனுக்கும் அவர்களின் குழுவுக்கும் வேலை பழு என்னம் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை, நாளைக்கே சந்தாவை வழங்கிவிட்டு எகத்தாளமாக கருத்தாடக்கூடியவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர், ஏற்கனவே ஓசி என்டு தெரிந்தும் வெளுத்து கட்டுபவர்கள் சந்தா என்டதும் என்னம் துள்ளுவார்கள். உள்ளதுக்கேயே 2,3 பெயரில் நடாமாடுபவர்களால் சிக்கல் வரும், அப்படி இருப்பார்கள் எல்லா பெயர்களிலும் சந்தா செலுத்த ரெடியா? அப்படி ஒரு பெயரில் கட்டிவிட்டு என்னொருமொரு பெயரில் கட்டாவிட்டால் என்ன செய்வீர்கள்? மோகனால் கடினமாக இருந்தால் 3 வழிகள் இருக்கின்றன.

1. சாதரணமாக யாழை கொண்டு நடாத்துதல்

2. வேறு யாரிடமாவடு ஒப்படைத்தல்

3. மூடிவிடுதல்.

[/ஃஉஒடெ]

சந்தா என்பது கட்டாயம் கட்ட வேண்டியது அல்ல, யாழுக்கு நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் அதனைச் செய்ய ஒரு வழிமுறை.அது கட்டாயத்தின் அடிப்படையில் அன்றி விருப்பின் அடிப்படையில் செய்யப்பட வேண்டியது. இதுவும் நடக்காவிட்டால் மோகன் அண்ணா மூன்றாவது வழிமுறையையே மேற்கொள்வார்.என்னைப் பொறுக்கவரை இது மிகவும் வேதனையான விடயம்.யாழ் பிழையானவர் கைகளில் செல்லக் கூடாது என்பதற்காகவே அதனை அவர் விற்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆராம்ப யாழ்களத்தில் எழுதப்பட்ட சுயமான ஆக்கங்களுக்கும், பின்னராக வருகின்ற களத்தின் கருத்துக்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் எத்தனை ஆக்கங்கள் யாராலும் எழுதப்படுகின்றன என்று கேட்டால் அது பூச்சியமே! கடந்த ஆறுமாதம், ஏன் ஒரு வருடகாலப்பகுதியினை மீளப் பார்வையிட்டால் எத்தனை ஆக்கங்கள் வந்திருக்கின்றன. கவிதைப் பகுதியைத் தவிர, மற்றவவை எல்லாம் வேறு எங்காவது எழுதப்படுகின்ற ஆக்கங்களை இணைத்து அதற்கான விமர்சனங்களாகவே போகுகின்றன.

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

பல தடவை நிறுத்துவதற்கான வேண்டுகோளை அவர் முன்வைத்திருக்கின்றார். ஒவ்வொரு தடவையும் வேண்டாம் என்ற வேண்கோளை அவர் மதித்திருக்கின்றார். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதாகத் தான்நிலை போய்க் கொண்டிருக்கின்றது.

மோகன் அண்ணாவிடம் ஒரு வேண்கோள்.

யாழ்களத்தின் ஆரம்பத்தில் இருந்து 2007, அல்லது 2009ம் வரையிலான கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடியுமா??(backup)

  • கருத்துக்கள உறவுகள்

ஆராம்ப யாழ்களத்தில் எழுதப்பட்ட சுயமான ஆக்கங்களுக்கும், பின்னராக வருகின்ற களத்தின் கருத்துக்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் எத்தனை ஆக்கங்கள் யாராலும் எழுதப்படுகின்றன என்று கேட்டால் அது பூச்சியமே! கடந்த ஆறுமாதம், ஏன் ஒரு வருடகாலப்பகுதியினை மீளப் பார்வையிட்டால் எத்தனை ஆக்கங்கள் வந்திருக்கின்றன. கவிதைப் பகுதியைத் தவிர, மற்றவவை எல்லாம் வேறு எங்காவது எழுதப்படுகின்ற ஆக்கங்களை இணைத்து அதற்கான விமர்சனங்களாகவே போகுகின்றன.

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

பல தடவை நிறுத்துவதற்கான வேண்டுகோளை அவர் முன்வைத்திருக்கின்றார். ஒவ்வொரு தடவையும் வேண்டாம் என்ற வேண்கோளை அவர் மதித்திருக்கின்றார். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதாகத் தான்நிலை போய்க் கொண்டிருக்கின்றது.

மோகன் அண்ணாவிடம் ஒரு வேண்கோள்.

யாழ்களத்தின் ஆரம்பத்தில் இருந்து 2007, அல்லது 2009ம் வரையிலான கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடியுமா??(backup)

யாழில் வரும் ஆக்கங்கள் தொடர்பில் நீங்கள் முன் வைத்திருக்கும் சில குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. யாழ் ஆரம்பித்த காலம் தொட்டு எல்லா வயதினரும் உறுப்பினராக இருந்துள்ளனர். இரட்டை அர்த்தக் கதைகள் ஆண்.. பெண் இரு தரப்பாலும் கதைக்கப்பட்டுள்ளன. சினிமா பேசப்பட்டுள்ளது. கொசிப் கதைக்கப்பட்டுள்ளது. ஏன் தனிநபர் வசைபாடல்கள் நிகழ்ந்துள்ளன. ஏன் நீங்கள் யாழோடு தீவிரமாக இருந்த காலத்திலும் பக்கம் பக்கமாக அரட்டை அடித்திருக்கிறீனம்.. அதற்காக யாழ் அன்று போல் இன்றில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

காலப் போக்கில் இளைஞர்களாக ... இளைஞிகளாக பதிந்தவர்கள்.. வாழ்க்கையில்.... செட்டிலாகி விட்டார்கள். ஒரு சிலரைத் தவிர வேறு பலர் இங்கு இப்போது இல்லை. ஆனால் அந்த நடுத்தர வயதுக்காரர்கள் அப்போதும் போல இப்போதும் இருக்கினம். அவர்களே இந்த யாழைக் கொண்டும் நடத்தினம். ஒரு சிலரைத் தவிர..!

என்னைப் பொறுத்தவரை யாழ் கருத்தியல் ரீதியாக (கள உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்தல்ல) தொய்ந்திருப்பதாகத் தெரியவில்லை. யாழில் வெறும் காதல் கவிதைகள் குவிந்த காலம் போய் இன்று பலதரப்பட்ட விடயங்களும் பதியப்படுகின்றன. கடந்த ஆறு மாத காலத்துள்.. என்னால் மட்டும் சுயமாக பதியப்பட்ட பல ஆக்கங்களை இனங்காட்ட முடியும். என்னைப் பொறுத்த வரை யாழில் இணைந்த ஆரம்ப காலத்தில் எழுதக் கிடைக்காத சில விடயங்களை இப்போ எழுதச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன்.

யாழின் ஆரம்ப காலத்தில்.. ஒருவர் எழுத்துப் பிழை விட்டாலே.. அவரை கிண்டலடித்து வெளியேற்றிய நிகழ்வுகள் உண்டு. இன்று அப்படி ஒரு நிலையில்லை.

யாழின் இடைக்காலத்தில் இள வயதினரின் அரட்டை கோலோஞ்சி இருந்தது.

இன்றைய உறவுகள் முன்னைய தவறுகள் பலவற்றை திருத்தி.. அவற்றைக் கடந்து நிற்கிறார்கள். இரட்டை அர்த்தம் பொதிந்த வசனங்கள் என்ன.. முழுத் தூசணத்தோடு எழுதப்பட்ட தனிமடல்களைக் கூட.. அதுவும் யாழ் கள பெண் பெயரில் இருந்த உறுப்பினர்கள்.. எந்த நியாயமும் இன்றி எழுதி அனுப்பி இருந்த கேவலங்கள் கூட முன்னர் நடந்துள்ளன.

ஆகவே காலத்தை ஒப்பிட முடியாது. நாங்கள் எப்படி செயற்படுறம் என்பதில தான் யாழின் பயன்படு திறன் தங்கியுள்ளது.

நீங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வினவுகிறேன்.. நீங்கள் யாழில் இணைந்ததில் இருந்து உங்களின் சுய ஆக்கமாக யாழுக்காக பதிந்த ஒரு பதிவை கள உறவுகளுக்கு இனங்காட்ட முடியுமா..??! அதற்காக நீங்கள் திறமையற்றவர் என்று கூற முடியாது. அதேபோல் தான் மற்றவர்களுக்கும் இருக்கலாம்.

யாழில் உள்ள ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கக் கூடும். அதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர் இவர் போல இல்லை.. என்ற ஒப்பீடு தவறானது. யாழ் அப்போது போல இப்போ இல்லை என்ற ஒப்பீடும் தவறானது. யாழ் எப்போதும் நல்லவற்றை காவ வேண்டும் என்ற எண்ணமே சிறப்பானது.

மற்றும்படி.. உங்களையோ.. அல்லது எவரையுமோ குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இதனை பதிவிடவில்லை. எண்ணத்தில் உதித்ததை சொல்ல முற்பட்டுள்ளேன். இதற்காக என்னோட சண்டைக்கு வாறதில்லை.

நன்றி. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

-----

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

-----

யாழில் வரும் ஆக்கங்கள் தொடர்பில் நீங்கள் முன் வைத்திருக்கும் சில குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. யாழ் ஆரம்பித்த காலம் தொட்டு எல்லா வயதினரும் உறுப்பினராக இருந்துள்ளனர். இரட்டை அர்த்தக் கதைகள் ஆண்.. பெண் இரு தரப்பாலும் கதைக்கப்பட்டுள்ளன. சினிமா பேசப்பட்டுள்ளது. கொசிப் கதைக்கப்பட்டுள்ளது. ஏன் தனிநபர் வசைபாடல்கள் நிகழ்ந்துள்ளன. ஏன் நீங்கள் யாழோடு தீவிரமாக இருந்த காலத்திலும் பக்கம் பக்கமாக அரட்டை அடித்திருக்கிறீனம்.. அதற்காக யாழ் அன்று போல் இன்றில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

காலப் போக்கில் இளைஞர்களாக ... இளைஞிகளாக பதிந்தவர்கள்.. வாழ்க்கையில்.... செட்டிலாகி விட்டார்கள். ஒரு சிலரைத் தவிர வேறு பலர் இங்கு இப்போது இல்லை. ஆனால் அந்த நடுத்தர வயதுக்காரர்கள் அப்போதும் போல இப்போதும் இருக்கினம். அவர்களே இந்த யாழைக் கொண்டும் நடத்தினம். ஒரு சிலரைத் தவிர..!

என்னைப் பொறுத்தவரை யாழ் தொய்ந்திருப்பதாகத் தெரியவில்லை. யாழில் வெறும் காதல் கவிதைகள் குவிந்த காலம் போய் இன்று பலதரப்பட்ட விடயங்களும் பதியப்படுகின்றன. கடந்த ஆறு மாத காலத்துள்.. என்னால் மட்டும் சுயமாக பதியப்பட்ட பல ஆக்கங்களை இனங்காட்ட முடியும். என்னைப் பொறுத்த வரை யாழில் இணைந்த ஆரம்ப காலத்தில் எழுதக் கிடைக்காத சில விடயங்களை இப்போ எழுதச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன்.

யாழின் ஆரம்ப காலத்தில்.. ஒருவர் எழுத்துப் பிழை விட்டாலே.. அவரை கிண்டலடித்து வெளியேற்றிய நிகழ்வுகள் உண்டு. இன்று அப்படி ஒரு நிலையில்லை.

யாழின் இடைக்காலத்தில் இள வயதினரின் அரட்டை கோலோஞ்சி இருந்தது.

இன்றைய உறவுகள் முன்னைய தவறுகள் பலவற்றை திருத்தி.. அவற்றைக் கடந்து நிற்கிறார்கள். இரட்டை அர்த்தம் பொதிந்த வசனங்கள் என்ன.. முழுத் தூசணத்தோடு எழுதப்பட்ட தனிமடல்களைக் கூட.. அதுவும் யாழ் கள பெண் உறுப்பினர்கள்.. எந்த நியாயமும் இன்றி எழுதி அனுப்பி இருந்த கேவலங்கள் கூட முன்னர் நடந்துள்ளன.

ஆகவே காலத்தை ஒப்பிட முடியாது. நாங்கள் எப்படி செயற்படுறம் என்பதில தான் யாழின் பயன்படு திறன் தங்கியுள்ளது.

நீங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வினவுகிறேன்.. நீங்கள் யாழில் இணைந்ததில் இருந்து உங்களின் சுய ஆக்கமாக யாழுக்காக பதிந்த ஒரு பதிவை கள உறவுகளுக்கு இனங்காட்ட முடியுமா..??! அதற்காக நீங்கள் திறமையற்றவர் என்று கூற முடியாது. அதேபோல் தான் மற்றவர்களுக்கும் இருக்கலாம்.

யாழில் உள்ள ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கக் கூடும். அதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர் இவர் போல இல்லை.. என்ற ஒப்பீடு தவறானது. யாழ் அப்போது போல இப்போ இல்லை என்ற ஒப்பீடும் தவறானது. யாழ் எப்போதும் நல்லவற்றை காவ வேண்டும் என்ற எண்ணமே சிறப்பானது.

மற்றும்படி.. உங்களையோ.. அல்லது எவரையுமோ குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இதனை பதிவிடவில்லை. எண்ணத்தில் உதித்ததை சொல்ல முற்பட்டுள்ளேன். இதற்காக என்னோட சண்டைக்கு வாறதில்லை.

நன்றி. :)

தூயவனின் ஆதங்கத்துக்கு, நெடுக்ஸின் பதில் பொருத்தமாக உள்ளது.

முள்ளிவாய்க்காலின் பின் பலர் மனம் சோர்ந்தது உண்மை.

அதற்கு, நீங்கள் மர்றவர்களை குற்றம் சாட்டாமல்....

முள்ளிவாய்க்காலின் பின் எத்தனை உருப்படியான பதிவுகளை, பதிந்திருக்கின்றீர்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது.

- நம்மில் ஒவ்வொருவரும் தாம் ஒரு மட்டுறுத்தினர் என எண்ணி ஒவ்வொரு பதிவையும் பதிந்தால் களம் சிறப்பாக இருக்கும்.

- ஆக்கங்களை பதிவு செய்பவர்களுக்கு ஏதாவது வழியில் ஊக்கம் தரப்படல் வேண்டும்.

வேறு ஒரு தளத்தில் நான் icash பற்றி அறிந்திருக்கின்றேன்.

இது உண்ணையான பணம் இல்லை. உதாரணமாக ஒருவர் களத்தில் ஒரு நல்ல பதிவை பதிந்தால் அதனை ஊக்கப்படடுத்த விரும்புவோர் அவரிற்கு icash கொடுக்கலாம். அதை வைத்து அவா; தனக்கு பிடித்தவர்களிற்கு பொருட்கள் (சும்மா விளையாட்டிற்கு) அன்பளிப்பு செய்யலாம். அல்லது அவரும் வேறு ஒருவின் ஆக்கத்திற்கு icash அன்பளிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவனின் ஆதங்கத்துக்கு, நெடுக்ஸின் பதில் பொருத்தமாக உள்ளது.

முள்ளிவாய்க்காலின் பின் பலர் மனம் சோர்ந்தது உண்மை.

அதற்கு, நீங்கள் மர்றவர்களை குற்றம் சாட்டாமல்....

முள்ளிவாய்க்காலின் பின் எத்தனை உருப்படியான பதிவுகளை, பதிந்திருக்கின்றீர்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது.

சிறித்தம்பி! தூயவன் பாலியல் சம்பந்தமாக எதுவும் கதைக்க மாட்டார்.ஆனால் இதர சம்பவங்கள் அனைத்திலும் மகாகெட்டிக்காரர்?

அதிலும் தனிமனிதர் தாக்குதலுக்கு இவரிடம் எல்லோரும் பாடம் எடுக்கலாம்.மட்டுறுத்தினரை கேட்டால் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் வரும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒரு தளத்தில் நான் icash பற்றி அறிந்திருக்கின்றேன்.

இது உண்ணையான பணம் இல்லை. உதாரணமாக ஒருவர் களத்தில் ஒரு நல்ல பதிவை பதிந்தால் அதனை ஊக்கப்படடுத்த விரும்புவோர் அவரிற்கு icash கொடுக்கலாம். அதை வைத்து அவா; தனக்கு பிடித்தவர்களிற்கு பொருட்கள் (சும்மா விளையாட்டிற்கு) அன்பளிப்பு செய்யலாம். அல்லது அவரும் வேறு ஒருவின் ஆக்கத்திற்கு icash அன்பளிக்கலாம்.

அதுக்குத்தான்..... பச்சைப் புள்ளி நடைமுறையில் இருக்கே....

இதை வைச்சு, மோகன் அண்ணா என்ன செய்ய முடியும்?

அவரும் இங்கை மினக்கெட்டு... கோடு, கச்சேரி எண்டு போனால்... அங்கு, பச்சைப் புள்ளியை காட்ட முடியுமா? கந்தசாமி.

சரியான விபரம் கெட்ட... பயலாக இருக்கிறாங்கள். நம்ம பசங்கள். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! தூயவன் பாலியல் சம்பந்தமாக எதுவும் கதைக்க மாட்டார்.ஆனால் இதர சம்பவங்கள் அனைத்திலும் மகாகெட்டிக்காரர்?

அதிலும் தனிமனிதர் தாக்குதலுக்கு இவரிடம் எல்லோரும் பாடம் எடுக்கலாம்.மட்டுறுத்தினரை கேட்டால் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் வரும். :lol:

இன்று... அவர் வேறொரு பதிவில், உங்கள் மீது நடத்திய தனி மனித தாக்குதலை பார்த்தேன் குமாரசாமியண்ணை.

ஒரு பானை, சோத்துக்கு.... ஒரு சோறு பதம் என்று... சும்மாவா சொன்னார்கள்.

ரேக் இற் ஈசி அண்ணை. நம்ம பையன் தான் தூயவன். என்ன குழப்பமோ... ஆரறிவர். :)

அதுக்குத்தான்..... பச்சைப் புள்ளி நடைமுறையில் இருக்கே....

இதை வைச்சு, மோகன் அண்ணா என்ன செய்ய முடியும்?

அவரும் இங்கை மினக்கெட்டு... கோடு, கச்சேரி எண்டு போனால்... அங்கு, பச்சைப் புள்ளியை காட்ட முடியுமா? கந்தசாமி.

சரியான விபரம் கெட்ட... பயலாக இருக்கிறாங்கள். நம்ம பசங்கள். :D:lol:

சாத்தியமோ இல்லையோ ஒருவரின் புதுமையான கருத்துக்களுக்கு ஊக்கம் தரல் வேண்டும்.

இன்னொருவிதமாக பார்ப்போம், களத்தில் 'reputation' என்று ஒன்று உண்டு. இதில் 1000 எடுப்பவர்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம்?

எனது உதாரணத்தை (icash) நடைமுறைபடுத்த எவ்வளவு நேரம் செலவாகும் என்பது எனக்கு தெரியாது. இது மோகன் அண்ணவிற்கு தெரியும் என்று நினைக்கின்றேன்.

நீங்கள் சொன்ன பச்சைப்புள்ளி ஒருவரின் கருத்துக்கு மட்டுமே. அது அவரின் profilஇல் வராது என்று நினைக்கின்றேன்.

தற்பொழுது உள்ள நடைமுறையில் ஒருவரின் ஆக்கங்களின் எண்ணிக்கைகளை வைத்து தான் அவரை பற்றி மதிப்பிட முடிகிறது. ஆனால் அது ஒரு குத்துமதிப்பான மதிப்பீடே. காரணம் நான் "ஆம்" என்று எழுதினாலும் அது எனது கருத்துக்களின் எண்ணிக்கையை அதிக்கரிக்கின்றது.

ஆனால் icash சற்று வித்தியாசம். இங்கே பயனுள்ள ஆக்கங்களிற்கு உறுப்பினார்கள் அன்பளிப்பு செய்யலாம். ஒருவரிடம் எவ்வளவு icash உள்ளது என்பதை வைத்து அவரின் யாழ்கள மதிப்பீட்டை நாம் ஓரளவு கணித்துவிட முடியும். மற்றும் உறுப்பினார்கள் மேலும் நல்ல ஆக்கங்களை தர ஊக்குவிப்பாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.