Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேர்ந்தே பறக்கலாம் வா..

Featured Replies

  • தொடங்கியவர்

பொதுவாகப்பார்த்தால் நீங்கள் சொல்வது சரி

ஆனால் நான் சொல்வது தங்கள் கவிதைப்படி வாழ்வை மற்றவர்களின் சந்தோசங்களுக்காக விட்டுக்கொடுத்தோர். (மற்றவர் மீதுள்ள அன்பு காரணமாக அவர்களுக்காக விட்டுக்கொடுப்போர்)

நன்றி அண்ணா விளக்கத்திற்கு! :)

நேரம் காலம் பார்க்காமல் விசயத்தைச் சொல்லிவிடுங்கள் குட்டி :D

நன்றி வாத்தியாரே... :) உங்கள் கருத்தை கவனத்தில் எடுக்கிறேன்... :D:lol:

  • Replies 64
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

“If you love something set it free if it returns its yours forever, if not it was never meant to be.” :)

உண்மைதான் குட்டி....உங்கள் நேசிப்பை புரிந்துகொள்ளாதவர்கள் ஒரு போதும் உங்களிடம் திரும்பி வரமாட்டார்கள்...உண்மை அன்பைப் புரிந்து கொண்டவர்கள் எவ்வளவு உயரத்துக்கு பறந்தாலும் உங்கள் காலடிதேடி வருவார்கள்...அப்படி துணை அமையக் கிடைத்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள்..

Edited by சுபேஸ்

குட்டி கவிதை நன்றாக இருக்கிறது.

ஒரு கட்டத்திற்குப் பிறகு அந்தப் பட்டாம் பூச்சியும் வட்டத்திற்குள் வர விரும்பும். கைக்கெட்டாது என்று நாமாக எண்ணிக்கொண்டு ஏன் போலியான நட்பை வளர்ப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

தப்புதான் சுபேஸ்.. :D

நீங்களாவது அவர்களை மேலே பறக்கவிட்டு, ஒண்டிக்கட்டையாக இருக்க வேண்டும் என யாழ்களம் சார்பாக வாழ்த்துகிறேன்..! :lol:

ஆமென்... :D அவர்கள் மேலே உயரத்தில் பறக்கும்போது அவர்களை இழந்துவிட்ட வலியையும் தாண்டி மனசுக்குள்ள சந்தோசமா இருக்கும் இசை அண்ணா...

  • தொடங்கியவர்

உண்மைதான் குட்டி....உங்கள் நேசிப்பை புரிந்துகொள்ளாதவர்கள் ஒரு போதும் உங்களிடம் திரும்பி வரமாட்டார்கள்...உண்மை அன்பைப் புரிந்து கொண்டவர்கள் எவ்வளவு உயரத்துக்கு பறந்தாலும் உங்கள் காலடிதேடி வருவார்கள்...அப்படி துணை அமையக் கிடைத்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள்..

நீங்கள் சொல்வது புரிகிறது சுபேஸ்...

அவர்கள் காலடி எல்லாம் வரத் தேவை இல்லை, ஒரு கணப் பொழுதேனும் கண்மூடி உண்மையான அன்பைப் புரிந்து கொண்டாலே நினைத்தால் போதும்... :)

  • தொடங்கியவர்

குட்டி கவிதை நன்றாக இருக்கிறது.

ஒரு கட்டத்திற்குப் பிறகு அந்தப் பட்டாம் பூச்சியும் வட்டத்திற்குள் வர விரும்பும். கைக்கெட்டாது என்று நாமாக எண்ணிக்கொண்டு ஏன் போலியான நட்பை வளர்ப்பான்.

இதைக் கவிதை என்றால் உண்மையில் கவிதை எழுதுபவர்கள் எல்லாரும் சேர்ந்து அடித்துக் கொல்லப் போகிறார்கள் தப்பிலி :o:lol:

இது வெறும் சிந்தனையில் சிதறிய குட்டிக் கிறுக்கல்.. ^_^

பட்டாம்பூச்சி ஒரு வட்டத்திற்குள் வர விரும்பினால் வரலாம் அதற்குத் தடை இல்லை... அதுவரை எதற்கும் மனதில் இடமளிக்காது இருப்பதே நல்லது... :)

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாம்பூச்சியை பிடித்து துன்புறுத்தினால் நரகத்தில் நரக வேதனையை அனுபவிப்போமாம் :lol: சின்னனில் அம்மம்மா சொன்னது...கவிதைக்கு நன்றி குட்டி

" பட்டாம் பூச்சியாகப் பறந்து திரியும் உன்னை

காதல் என்ற குறுகிய வட்டத்தினுள் அடைக்க மனமில்லை

அருகில் பறக்கும் உன்னை விட்டு வேறு

திசை நோக்கிப் பறக்கும் மனநிலையும் எனக்கில்லை...! "

காதல் என்பது மாறும் போர்களங்களைக் கொண்டது . அங்கு எதையும் எதிர்கொள்கின்ற வீரனே படை நடத்த முடியும் . வாழ்துக்கள் குட்டி கவிதைக்கு .

  • தொடங்கியவர்

பட்டாம்பூச்சியை பிடித்து துன்புறுத்தினால் நரகத்தில் நரக வேதனையை அனுபவிப்போமாம் :lol: சின்னனில் அம்மம்மா சொன்னது...கவிதைக்கு நன்றி குட்டி

உங்கள் கருத்திற்கும் நன்றி ரதி :lol::D

  • தொடங்கியவர்

" பட்டாம் பூச்சியாகப் பறந்து திரியும் உன்னை

காதல் என்ற குறுகிய வட்டத்தினுள் அடைக்க மனமில்லை

அருகில் பறக்கும் உன்னை விட்டு வேறு

திசை நோக்கிப் பறக்கும் மனநிலையும் எனக்கில்லை...! "

காதல் என்பது மாறும் போர்களங்களைக் கொண்டது . அங்கு எதையும் எதிர்கொள்கின்ற வீரனே படை நடத்த முடியும் . வாழ்துக்கள் குட்டி கவிதைக்கு .

எனது சுயநலத்தைத் திணித்து வீரனாவதை விட ஒரு மனிதனாக வலம்வர நினைக்கிறன்...

உங்கள் கருத்திற்கும் நன்றி கோமகன் :)

  • கருத்துக்கள உறவுகள்

எனது சுயநலத்தைத் திணித்து வீரனாவதை விட ஒரு மனிதனாக வலம்வர நினைக்கிறன்...

இதுவும் நல்லாத்தான் இருக்கு

குறிப்பு: குமாரசாமியண்ணா சொன்னதுபோல் இன்றைக்கு ஒரே தத்துவமாகத்தான் கிடக்கு... :icon_idea: :icon_idea:

பின்னேரம் ஆக..ஆக தத்துவங்கள் பிறக்குதடோய் :lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி அனுபவம் கசிகிறது கவிதையின் தையலில்..

இரைக்கு அலையும் பறவைகளின் கண்களில் படாவரைக்கும் அதன் வாழ்வும், மூசி வீசும் காற்றின் பலம் அதன் இறக்கைகளைத் தொடாதவரைக்கும் அதன் பறப்பும் பார்க்கப்பார்க்க அழகுதான். காதல் என்பது குறுகிய வட்டமல்ல எல்லைகள் அற்றது. இந்தக்கவிதையின் துளிர்ப்பில் காதல் இன்னும் செம்மையடைவதை அறிய முடிகிறது. எப்படி காதல் சிறையாகும்.... பறக்கவிட்டு இரசிக்கும் உள்ளத்தில்தான் அது பறக்கட்டும் என்று எண்ணம் பொங்கி வழிகிறதே....காதலுக்கும் , நட்புக்கும் சின்ன இழைதான் வேறுபாடு காட்ட... நட்பு காதலாக மாறமுடியும்..ஆனால் காதல் நட்பாக மாற முடியாது. தடையாக நிற்கக்கூடாது என்று எட்ட நின்று ரசிப்பது என்பது அந்த பட்டாம் பூச்சியின் ஒவ்வொரு சிறகடிப்பிற்கும் முட்களில் நிற்பதற்கு ஒப்பான வலியைத்தான் தரும். அதுவே ஓர் எல்லைக்கு அப்பால் வெறுமையை மட்டுமே உணரவைக்கும்...

சிந்தனை கவிதை இரண்டிற்கும் பாராட்டுக்கள் குட்டி :rolleyes:

ஒளிமிளிர்ந்து நடனமாடிய உன்கண்களை

முதல் முதலில் சந்தித்தபோது

என் இதயத்தில் வாள் உருவியது போல்

ஒரு வலி உணர்ந்தேன்...

பட்டாம் பூச்சியாகப் பறந்து திரியும் உன்னை

காதல் என்ற குறுகிய வட்டத்தினுள் அடைக்க மனமில்லை

அருகில் பறக்கும் உன்னை விட்டு வேறு

திசை நோக்கிப் பறக்கும் மனநிலையும் எனக்கில்லை...!

தொந்தரவு செய்வதையே உயிர் மூச்சாகக் கொண்ட

இந்த உலகில் யாருக்கும் எந்த இடஞ்சலுமில்லாது

தொடர்ந்தே நட்பென்னும் பரந்த வானில்

சேர்ந்தே பறக்கலாம் வா...

குட்டி...நல்லாத்தானே கவிதை எழுதுறீங்கள்! ஏன் அடிக்கடி எழுதுவதில்லை.

தொடர்ந்து நிறைய எழுதுங்கோ! :)

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்!

தங்களின் கவிதை.. குறைந்த வரிகளில் செறிவான விசயத்தை சொன்னாலும்...

அந்த இறுதி வரிகள்,

தொடர்ந்தே நட்பென்னும் பரந்த வானில்

சேர்ந்தே பறக்கலாம் வா...

எனது தனிப்பட்ட பார்வையில்....

"காதல்" என்று வந்தபிறகு.... நட்பென்று தொடர்வது "காதற்தோல்வி" தரும் வலியைவிடக் கொடியது. :(

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி அண்ணாவின் கவிதை தந்த தாக்கத்தில் இன்று எழுதியது...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101786

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய கவிதை, குட்டி!

இயற்கை, எம்மைப் பட்டாம்பூச்சிகளாகப் பறக்கவே படைத்தது!

நாங்களே எங்கள் இறக்கைகளை, நாங்களாகவே அரிந்து கொண்டோம்!

காதலித்து பார் கையெழுத்து அழகாகும் காதலில் தோற்று பார் வாழ்க்கை அழகாகும்.. :D # யாரோ..

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்திற்கும் நன்றி ரதி :lol::D

அதென்ன ற்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் குட்டி....உங்கள் நேசிப்பை புரிந்துகொள்ளாதவர்கள் ஒரு போதும் உங்களிடம் திரும்பி வரமாட்டார்கள்...உண்மை அன்பைப் புரிந்து கொண்டவர்கள் எவ்வளவு உயரத்துக்கு பறந்தாலும் உங்கள் காலடிதேடி வருவார்கள்.....

முற்றிலும் உண்மையான கூற்று..மேல் உள்ள வரி மனம் மிகவும் மென்மையானவர்களுக்கு இப்படியானவர்களின் செயல்பாடுகள் சவுக்கால் அடித்தது போல் இருக்கும்..கீழ் உள்ள வரி தற்போதைய கால கட்டத்தில் ???

Edited by யாயினி

MONARCHS-FLYING-80322715.jpg

ஒளிமிளிர்ந்து நடனமாடிய உன்கண்களை

முதல் முதலில் சந்தித்தபோது

என் இதயத்தில் வாள் உருவியது போல்

ஒரு வலி உணர்ந்தேன்...

பட்டாம் பூச்சியாகப் பறந்து திரியும் உன்னை

காதல் என்ற குறுகிய வட்டத்தினுள் அடைக்க மனமில்லை

அருகில் பறக்கும் உன்னை விட்டு வேறு

திசை நோக்கிப் பறக்கும் மனநிலையும் எனக்கில்லை...!

தொந்தரவு செய்வதையே உயிர் மூச்சாகக் கொண்ட

இந்த உலகில் யாருக்கும் எந்த இடஞ்சலுமில்லாது

தொடர்ந்தே நட்பென்னும் பரந்த வானில்

சேர்ந்தே பறக்கலாம் வா...

குட்டி,

நீங்களும் பட்டாம் பூச்சியாகி மனம் விரித்து பறவுங்கள். காதல் என்பது குறுகிய வட்டம் அல்ல. வாழ வாழ விரிந்து செல்லும் பால் வெளி அது. சுமைகள் அற்ற பறத்தலே அதன் அகண்ட வெளியை உணர்த்தும்

தயக்கம் விட்டு சிறகுகளை விரியுங்கள்...முழு வானமும் உங்களை வாழ்த்தி வரவேற்று பட்டாம் பூச்சியாக அங்கீகரிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒளிமிளிர்ந்து நடனமாடிய உன்கண்களை

முதல் முதலில் சந்தித்தபோது

என் இதயத்தில் வாள் உருவியது போல்

ஒரு வலி உணர்ந்தேன்...

காதல் உணர்வை உணர்ந்து இருக்கிறீர்கள்

பட்டாம் பூச்சியாகப் பறந்து திரியும் உன்னை

காதல் என்ற குறுகிய வட்டத்தினுள் அடைக்க மனமில்லை

அருகில் பறக்கும் உன்னை விட்டு வேறு

திசை நோக்கிப் பறக்கும் மனநிலையும் எனக்கில்லை...!

ஒரு தலைக்காதல் என உணர்ந்துள்ளீர்கள்

தொந்தரவு செய்வதையே உயிர் மூச்சாகக் கொண்ட

இந்த உலகில் யாருக்கும் எந்த இடஞ்சலுமில்லாது

தொடர்ந்தே நட்பென்னும் பரந்த வானில்

சேர்ந்தே பறக்கலாம் வா...

நண்பியாக்கிக்கொண்டு தொடர்ந்து நடை போட எண்ணியுள்ளீர்கள்.கவிதைக்கு நன்றி.

  • தொடங்கியவர்

குட்டி அனுபவம் கசிகிறது கவிதையின் தையலில்..

இரைக்கு அலையும் பறவைகளின் கண்களில் படாவரைக்கும் அதன் வாழ்வும், மூசி வீசும் காற்றின் பலம் அதன் இறக்கைகளைத் தொடாதவரைக்கும் அதன் பறப்பும் பார்க்கப்பார்க்க அழகுதான். காதல் என்பது குறுகிய வட்டமல்ல எல்லைகள் அற்றது. இந்தக்கவிதையின் துளிர்ப்பில் காதல் இன்னும் செம்மையடைவதை அறிய முடிகிறது. எப்படி காதல் சிறையாகும்.... பறக்கவிட்டு இரசிக்கும் உள்ளத்தில்தான் அது பறக்கட்டும் என்று எண்ணம் பொங்கி வழிகிறதே....காதலுக்கும் , நட்புக்கும் சின்ன இழைதான் வேறுபாடு காட்ட... நட்பு காதலாக மாறமுடியும்..ஆனால் காதல் நட்பாக மாற முடியாது. தடையாக நிற்கக்கூடாது என்று எட்ட நின்று ரசிப்பது என்பது அந்த பட்டாம் பூச்சியின் ஒவ்வொரு சிறகடிப்பிற்கும் முட்களில் நிற்பதற்கு ஒப்பான வலியைத்தான் தரும். அதுவே ஓர் எல்லைக்கு அப்பால் வெறுமையை மட்டுமே உணரவைக்கும்...

சிந்தனை கவிதை இரண்டிற்கும் பாராட்டுக்கள் குட்டி :rolleyes:

நன்றி அக்கா உங்கள் நேரத்திற்கும் கருத்திற்கும் :)

  • தொடங்கியவர்

குட்டி...நல்லாத்தானே கவிதை எழுதுறீங்கள்! ஏன் அடிக்கடி எழுதுவதில்லை.

தொடர்ந்து நிறைய எழுதுங்கோ! :)

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்!

தங்களின் கவிதை.. குறைந்த வரிகளில் செறிவான விசயத்தை சொன்னாலும்...

அந்த இறுதி வரிகள்,

எனது தனிப்பட்ட பார்வையில்....

"காதல்" என்று வந்தபிறகு.... நட்பென்று தொடர்வது "காதற்தோல்வி" தரும் வலியைவிடக் கொடியது. :(

பக்கம் பக்கமாக எழுதியதைச் சுருக்கி கிறுக்கியுள்ளேன், இதைப் போய் கவிதை என்று சொல்லுறீங்கள் கவிதை? :D

தோல்வி என்று என்னால் எடுக்க முடியவில்லை, விட்டுக் கொடுத்தல் என்றே உணர்கிறேன்... அதிலும் ஒரு சுகம் உள்ளது! :)

காதலித்து பார் கையெழுத்து அழகாகும் காதலில் தோற்று பார் வாழ்க்கை அழகாகும்.. :D # யாரோ..

^_^

அதென்ன ற்கும் :lol:

இதென்ன கோதாரி! :huh:

உங்கட கருத்திற்கும் என்று எழுதினது பிழையா ரதி? :rolleyes::unsure:

  • தொடங்கியவர்

குட்டி,

நீங்களும் பட்டாம் பூச்சியாகி மனம் விரித்து பறவுங்கள். காதல் என்பது குறுகிய வட்டம் அல்ல. வாழ வாழ விரிந்து செல்லும் பால் வெளி அது. சுமைகள் அற்ற பறத்தலே அதன் அகண்ட வெளியை உணர்த்தும்

தயக்கம் விட்டு சிறகுகளை விரியுங்கள்...முழு வானமும் உங்களை வாழ்த்தி வரவேற்று பட்டாம் பூச்சியாக அங்கீகரிக்கும்

நன்றி நிழலியானந்தா! :)

காதல் உணர்வை உணர்ந்து இருக்கிறீர்கள்

ஒரு தலைக்காதல் என உணர்ந்துள்ளீர்கள்

நண்பியாக்கிக்கொண்டு தொடர்ந்து நடை போட எண்ணியுள்ளீர்கள்.கவிதைக்கு நன்றி.

நன்றி நுணா, இது ஒரு தலைக்காதல் இல்லை... :)

  • கருத்துக்கள உறவுகள்

படத்திற்கு ஏற்ப நல்ல கற்பனை. அதன் மூலம்.. நல்ல விசயத்தையும் சொல்லி இருக்கீங்க..! தொடர்ந்து எழுதுங்கோ.. குட்டி..! :)

  • தொடங்கியவர்

படத்திற்கு ஏற்ப நல்ல கற்பனை. அதன் மூலம்.. நல்ல விசயத்தையும் சொல்லி இருக்கீங்க..! தொடர்ந்து எழுதுங்கோ.. குட்டி..! :)

மனதில உணர்ந்ததை சில வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளேன், (அதன் பின் படம் தேடி எடுக்க சில மணிநேரங்கள் ஆனது... :D)

இனி இந்தப் பகுதியில் நான் ஒரு பதிவு ஆரம்பிக்க சந்தர்ப்பம் வருமா தெரியவில்லை, அப்படி வருமானால் தொடர்ந்து எழுத முயற்சிப்பேன்! நன்றி நெடுக்ஸ் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.