Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பள்ளிக்கூடப் பேருந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்



எங்கள் ஊரை ஊடறுத்து காங்கேசன் துறை  வீதி செல்கிறது. அப்பாதையில்  தெல்லிப்பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 769 ம் இலக்கப் பேருந்தும் , காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் 768 ம் இலக்கப் பேருந்தும் செல்கிறது. அந்த பேருந்துக்கள் யாழ்ப்பாணம் தாண்டியும் செல்கிறதா அல்லது யாழ்ப்பாணத்துடன் நின்றுவிடுகிறதா என்பது பற்றி எனக்கு இதுவரை தெரியவில்லை.

இக்காலத்தில எப்படியோ தெரியவில்லை. நான் படித்த காலத்தில் பள்ளிக்குச்
செல்வதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிப் பேருந்துகள் உண்டு.
எங்களுக்கு அது பெருங் கவலைதான் என்றாலும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே பேருந்தை விடும்படி யாரையும் கேட்கும் நிலையிலா நாம் இருந்தோம். அத்தோடு அதில் ஆபத்தும் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது தானே.

எமது ஊரில் பேருந்து வந்து நிற்கும்போது எல்லா இருக்கைகளும் நிறைந்துபோய்
இருக்கும். அதனால் பள்ளிக்குச் செல்லும்போது ஒருநாள்க் கூட இருந்து
சென்றதில்லை. அனால் பள்ளி முடிந்து வரும் வேளை, ஆகச் சுண்டுக்குளிப்
பெண்களும் கொன்வென்ற் பெண்களும் குறைந்தளவானவர்களே இருப்பதனால் அதிக இருக்கைகள் வெற்றிடமாக இருக்கும். ஆனாலும் வேம்படியில் அதிகமானவர்கள் ஏறுவதால் முண்டியடித்துக் கொண்டு ஏறினால் விரும்பிய இருக்கையில் இருக்கலாம். அல்லது நிக்க வேண்டியதுதான்.

எனக்கு பேருந்தின் பின்பக்கம் உள்ள உயரமான இருக்கைதான் பிடித்தமானது. அதில் இருப்பதற்காக எப்படியாவது இடித்துப்பிடித்துக் கொண்டு ஏறிவிடுவேன். எனக்குப் போட்டியாக நான்கு பேர் இருந்தார்கள் தான். நாங்கள் நான்கு பேரும் பக்கத்தில்
பக்கத்தில் பேருந்து வரும் நேரம், தடகள வீரர்கள் ஓடுவதற்குத் தயாராக
நிற்பதுபோல் நிற்போம்.  எனது அதிஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.
ஒவ்வொருமுறையும் நானே வெற்றிக்கொடி நாட்டுபவளாக அந்த உயரமான இருக்கையைப் பிடித்திருப்பேன்.

இந்த அதிஷ்டம் நான் ஒ/எல் படிக்கும் வரை தொடர்ந்தது. அதன்பின் வேறு விடயங்கள் மனதை ஈர்த்ததால் இடம் பிடிக்க ஓடுவது குறைந்துவிட்டது.

ஒருநாள் எனக்கொரு விபரீத ஆசை ஏற்பட்டுவிட்டது. இன்று கடைசியாக் நின்று பேருந்தில் ஏறினால் என்ன என்று. நண்பிகளிடமும் கூறினேன். அவர்களும் சரிஎன,  எல்லோரும் ஏறும் வரை நாங்கள் காத்திருந்தோம். இன்னும் ஏற இனது ஆறு பேர்தான் பேருந்து நகரத் தொடங்கியது.

 

எல்லோரும் பயந்துபோய் தள்ளிக் கொண்டு ஏற முயல  நான் தான் கடைசி ஆள். பேருந்து வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. கடைசிப் படிவரை என் நண்பிகள் நிற்கிறார்கள். நான் கால் வைக்க இடமே இல்லை. எறடி எறடி என்கிறார்களே தவிர நான் ஏற இடம் விட எண்ணவில்லை. அவர்களுக்கும் பதட்டம். நான் கொஞ்சநேரம் கைபிடியைப் பிடித்தபடி ஓடினேன் இடம் கிடைக்குமென்று. அதன்பின் தொங்கிக் கொண்டு வரும் பழக்கம் இல்லாததால் கையை விட்டுவிட்டேன்.

பேருந்து தன்பாட்டில் போய்க்கொண்டு இருக்கு. எனக்கோ அவமானம் ஒருபுறம் ஏமாற்றம் ஒருபுறம். இனி என்ன செய்வது. யாழ் தரிப்புவரை தனியே  நடந்ததை 
இன்றுவரை மறக்க முடியவில்லை. ஆனாலும் மனதுக்கு ஆறுதல் தந்த விடயம், நான் யாழ் தரிப்பிடத்தை அடைந்தபோது, எனக்காக நண்பிகள் நால்வரும் பேருந்தை விட்டு இறங்கி, எனக்காகக் காத்திருந்ததுதான்.

இப்படி எத்தனையோ நினைவுகள் மீட்டிப் பார்க்கும் போது இன்பத்தையும் துன்பத்தையும் 
தருவன எம்முள்ளே உள்ளன.

 

ம்ம்........ தொடருங்கோ உங்கள் சாதனைகளை நண்பி!



உங்கட காதல் கதையையும் மறந்திடாமல் எழுதுங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடக்காலம் திரும்ப வராத காலம். சுமேயக்கா நீங்கள் பஸ்சில பயணிச்சிருங்கிறீங்கள். நாங்கள் சயிக்கிளிலை பயணிச்ச இனிய அனுபவங்கள் நிழலாடுது உங்கள் அனுபவத்தை வாசிக்க. நாங்கள் சுற்றிய கோவில் திருவிழாக்கள் , கொண்டாட்டங்கள், நட்புக்களின் வீட்டு நல்ல , துயர காரியங்கள் இப்படி நினைவுகள் கனக்க....

என்னுடைய பள்ளிக்கூட காலத்தில ஒரு பதிவு இது:-http://www.yarl.com/forum3/index.php?showtopic=46974&st=0&p=461245


பிற்குறிப்பு :- இந்த எனது அனுபவப்பதிவில் வருகிறவர்கள் யாராவது இதனை வாசிக்க நேர்ந்தால் தொடர்பு கொள்ளுங்கோ.



ம்ம்........ தொடருங்கோ உங்கள் சாதனைகளை நண்பி!



உங்கட காதல் கதையையும் மறந்திடாமல் எழுதுங்கோ :lol:

 


மச்சி கதையோடை கதையாய் உங்கடை காதலையும் எழுதீடுங்கோ. வாசிக்க ஆவலாயுள்ளோம். :lol:
 

பள்ளிக்கூடக்காலம் திரும்ப வராத காலம். சுமேயக்கா நீங்கள் பஸ்சில பயணிச்சிருங்கிறீங்கள். நாங்கள் சயிக்கிளிலை பயணிச்ச இனிய அனுபவங்கள் நிழலாடுது உங்கள் அனுபவத்தை வாசிக்க. நாங்கள் சுற்றிய கோவில் திருவிழாக்கள் , கொண்டாட்டங்கள், நட்புக்களின் வீட்டு நல்ல , துயர காரியங்கள் இப்படி நினைவுகள் கனக்க....

என்னுடைய பள்ளிக்கூட காலத்தில ஒரு பதிவு இது:-http://www.yarl.com/forum3/index.php?showtopic=46974&st=0&p=461245

பிற்குறிப்பு :- இந்த எனது அனுபவப்பதிவில் வருகிறவர்கள் யாராவது இதனை வாசிக்க நேர்ந்தால் தொடர்பு கொள்ளுங்கோ.

 

மச்சி கதையோடை கதையாய் உங்கடை காதலையும் எழுதீடுங்கோ. வாசிக்க ஆவலாயுள்ளோம். :lol:

 

 

 

காதலா :o எனக்கு அப்படி ஒண்டும் வரேலையப்பா :D அப்ப சாந்தி மச்சி உங்கட காதல் கதையை எடுத்துவிடுங்கோ நாங்கள் கேட்பமல்லோ :lol:

வரேலை எண்டா நம்பிவியளோ வரப் பார்த்தது தான் ஆனால் சரிவரேலை :lol:

இந்த அதிஷ்டம் நான் ஒ/எல் படிக்கும் வரை தொடர்ந்தது. அதன்பின் வேறு விடயங்கள் மனதை ஈர்த்ததால் இடம் பிடிக்க ஓடுவது குறைந்துவிட்டது.

 

அக்கா அந்த வேறு விடயங்கள் என்ன என்று விளக்கமா சொன்னீங்கள் எண்டா நல்லா இருக்கும் கேக்க ஆவலா இருக்கிறம். :D

 

பல பழைய நினைவுகளை மீட்டியதற்கு நன்றி .

ஆண்களுக்கு பெண்களுக்கு என பள்ளிகூட பஸ் முதலில் 764 யாழ்பாணம் -பலாலி லைனில் தான் தொடங்கியது என நினைக்கின்றேன் .

வேம்படி மாணவிகள் தமது யாழ் இந்து மகளிர் நண்பிகளுக்கு சீட் பிடித்துக்கொண்டுவர அதே தரிப்பிடத்தில் ஏறிய யாழ் இந்துமாணவர்கள் வேம்படி மாணவிகளுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்தால் இரண்டு தனி தனி பஸ்கள் விடவேண்டிவந்தது என கேள்விப்பட்டேன் .உரும்பிராய் சிவகுமார் ஒரு மாணவியின் கன்னத்தையும் பதம் பார்த்ததாக ஒரு கதையும் உண்டு

சுமே பஸ்சுக்கு ஓடிவாறதை நினைச்சன் சிரிப்புத்தான் வந்திது :lol: :lol: . கதை மொக்கையாய் இருந்தாலும் நல்லாய் இருக்கு  :D  .வாழ்த்துக்கள் சுமே :) :) .

  • கருத்துக்கள உறவுகள்
 
769 கொடிகாமம் வரை செல்வது. கதைக்கு நன்றி.
  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்க கொழும்பு கோட்டடையில் கோனர் சீற் பிடிக்க ஓடுப்பட்ட ஞாபகம் தான் வந்ததது.நன்றி பகிர்வுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட உறவுகளுக்கு நன்றி.



காதலா :o எனக்கு அப்படி ஒண்டும் வரேலையப்பா :D அப்ப சாந்தி மச்சி உங்கட காதல் கதையை எடுத்துவிடுங்கோ நாங்கள் கேட்பமல்லோ :lol:



வரேலை எண்டா நம்பிவியளோ வரப் பார்த்தது தான் ஆனால் சரிவரேலை :lol:

 


அதுக்கும் ஒரு துணிவு வேணும் அலை.சும்மா வாய்தான். :lol:



அக்கா அந்த வேறு விடயங்கள் என்ன என்று விளக்கமா சொன்னீங்கள் எண்டா நல்லா இருக்கும் கேக்க ஆவலா இருக்கிறம். :D
 

 


நீங்கள் சின்னப் பெடியள். உங்களுக்கெல்லாம் சொல்ல ஏலாது மயூரன். :D



பல பழைய நினைவுகளை மீட்டியதற்கு நன்றி .

ஆண்களுக்கு பெண்களுக்கு என பள்ளிகூட பஸ் முதலில் 764 யாழ்பாணம் -பலாலி லைனில் தான் தொடங்கியது என நினைக்கின்றேன் .

 .உரும்பிராய் சிவகுமார் ஒரு மாணவியின் கன்னத்தையும் பதம் பார்த்ததாக ஒரு கதையும் உண்டு

 


இப்பிடி ஒரு கதை நான் கேள்விப் பட்டதே இல்லை.



சுமே பஸ்சுக்கு ஓடிவாறதை நினைச்சன் சிரிப்புத்தான் வந்திது :lol: :lol: . கதை மொக்கையாய் இருந்தாலும் நல்லாய் இருக்கு  :D  .வாழ்த்துக்கள் சுமே :) :) .

 



மொக்கை எண்டால் என்ன?? எனக்கு விளக்கம் வேணும். ரதியும் அடிக்கடி இந்த வார்த்தையைச் சொல்கிறவர்.

மொக்கை எண்டால் மொக்கு

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கை என்றால் கூர் மழுங்கியது என்று அர்த்தம்.. :D ஊரில் கத்தி மொட்டையா இருக்கு என்று சொல்வதை தமிழகத்தில் மொக்கையா இருக்கு என்பார்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொக்கை என்றால் கூர் மழுங்கியது என்று அர்த்தம்.. :D ஊரில் கத்தி மொட்டையா இருக்கு என்று சொல்வதை தமிழகத்தில் மொக்கையா இருக்கு என்பார்கள்..!

தகவலுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டிக் களிச்சுப் பாத்தா என்னையும் என் அனுபவக் கதையையும் மொக்கு என்று சொல்வதில் கனபேர் சந்தோசப்படுறியள் போல கிடக்கு.சரி சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கோ எனக்கொன்றுமில்லை. :rolleyes:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவப் பகிர்வு சுமோ.
நான்... சின்னனாக இருக்கும் போது... ஊரில் இரட்டைதட்டு பஸ், பலாலி வீதியால் ஒடும்.
தம்பி, தங்கச்சி, எல்லாரும்... பான்ஞ்சு விழுந்து, மேல் தட்டில் முன்பக்கம் போயிருப்போம்.
இனிமையான.... இளமைக் காலங்கள், மீண்டும் வராதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா... நாங்கள் பள்ளிக்கூடத்தால திரும்பி வர, ஒரு சிவப்பு டபிள் டேக்கர் சந்தியிலை..... கவிண்டு கிடக்குது.
எனக்கு... அதைப் பார்க்க கவலையாய்ப் போச்சுது.(அதற்குள் இருந்த சனம், செத்ததைப் பற்றி கவலைப் படாத வயது)
இங்கிலாந்துக்குப் போனால்.... இப்பவும் மேல் மாடி, பஸ்ஸில்... முன் பக்கம் இருக்க விருப்பம்.
நாம் பள்ளிக்கூடந்துக்கு, நடந்து போனாலும், சைக்கிளில், போனாலும்.... பஸ்சில் போக முடியவில்லையே... என்று ஏக்கம் இருந்த காலமது.

நல்லதொரு அனுபவ பகிர்வு சுமோ,


நாங்களும் பாடசாலை பஸ்ஸில் தான் போய்வாறது, அப்படி போய் வரும்போது செய்யும் அட்டகாசம் தாங்கமுடியாது,

 

பஸ்சாரதி சிலவேளைகளில் எம்மை பாடசாலைகளில் இறக்காது நேராக பஸ்யை  யாழ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுபோனதும் இருக்கு.

 

அல்லது பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது செய்யும் குழப்படிகளால் பஸ்சாரதி பஸ்யை கோண்டாவில் பஸ்டிப்போக்குள் கொண்டு போய் விட்டிட்டு தனது

 

மேல்அதிகாரிகளிடம் முறையிட்ட சந்தர்ப்பங்கள் இருக்கு. அது ஒரு  காலம். :D

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா... நாங்கள் பள்ளிக்கூடத்தால திரும்பி வர, ஒரு சிவப்பு டபிள் டேக்கர் சந்தியிலை..... கவிண்டு கிடக்குது.

எனக்கு... அதைப் பார்க்க கவலையாய்ப் போச்சுது.(அதற்குள் இருந்த சனம், செத்ததைப் பற்றி கவலைப் படாத வயது)

இங்கிலாந்துக்குப் போனால்.... இப்பவும் மேல் மாடி, பஸ்ஸில்... முன் பக்கம் இருக்க விருப்பம்.

நாம் பள்ளிக்கூடந்துக்கு, நடந்து போனாலும், சைக்கிளில், போனாலும்.... பஸ்சில் போக முடியவில்லையே... என்று ஏக்கம் இருந்த காலமது.

 

நான் லண்டன் வந்து ஒரே ஒருமுறை தான் பஸ்சின் மேல் மாடியில் போய் இருந்திருக்கிறேன். நன்றி சிறி.

 

நல்லதொரு அனுபவ பகிர்வு சுமோ,

நாங்களும் பாடசாலை பஸ்ஸில் தான் போய்வாறது, அப்படி போய் வரும்போது செய்யும் அட்டகாசம் தாங்கமுடியாது,

 

பஸ்சாரதி சிலவேளைகளில் எம்மை பாடசாலைகளில் இறக்காது நேராக பஸ்யை  யாழ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுபோனதும் இருக்கு.

 

அல்லது பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது செய்யும் குழப்படிகளால் பஸ்சாரதி பஸ்யை கோண்டாவில் பஸ்டிப்போக்குள் கொண்டு போய் விட்டிட்டு தனது

 

மேல்அதிகாரிகளிடம் முறையிட்ட சந்தர்ப்பங்கள் இருக்கு. அது ஒரு  காலம். :D

 

பள்ளிக்கூட நினைவுகள் மகிழ்வும், வேதனையும் கொள்ள வைக்கும் நினைவுகள்.நன்றி  நவீனன்.

 

நான் பள்ளிகூட பேருந்தில் ஏறியதில்லை, ஆனால் அந்த பேருந்தில் வரும் பிகர்களுக்காக தரிப்பிடத்தில் காத்திருந்திருக்கிறேன்.

764, 769, 808 நான் காத்திருந்த பேருந்து இலக்கங்கள். அப்புறம் கச்சேரி-யாழ்ப்பாணம் ஓடும் தட்டி வான்கள்.

 

சுமே அக்கா, பொன்னம்பலம், ஜெயபாலன் டீச்சர் ஆட்கள் வேம்படியில் படிப்பிற்கும் போது நீங்கள் அங்கெ இருந்தீர்களா. ( வயதை அறியும் நோக்கமில்லை :D  )

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மொக்கை (மழுங்கல்) பிரிவு என்று தனியாக  ஒரு  பிரிவை இந்தப் பகுதியில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று யாழ் நிருவாகத்திற்கு பரிந்துரை செய்கிறேன். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பள்ளிகூட பேருந்தில் ஏறியதில்லை, ஆனால் அந்த பேருந்தில் வரும் பிகர்களுக்காக தரிப்பிடத்தில் காத்திருந்திருக்கிறேன்.

764, 769, 808 நான் காத்திருந்த பேருந்து இலக்கங்கள். அப்புறம் கச்சேரி-யாழ்ப்பாணம் ஓடும் தட்டி வான்கள்.

 

சுமே அக்கா, பொன்னம்பலம், ஜெயபாலன் டீச்சர் ஆட்கள் வேம்படியில் படிப்பிற்கும் போது நீங்கள் அங்கெ இருந்தீர்களா. ( வயதை அறியும் நோக்கமில்லை :D  )

 

எனக்கு நினைவில்லைப் பகலவன். அதில் உங்கள் அம்மாவும் அடக்கமா?? வயதை மறைக்கும் நோக்கமில்லை. :lol:

யாழில் மொக்கை (மழுங்கல்) பிரிவு என்று தனியாக  ஒரு  பிரிவை இந்தப் பகுதியில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று யாழ் நிருவாகத்திற்கு பரிந்துரை செய்கிறேன். :lol:

 

அதற்குள் உங்கள் கவிதையும் அடங்கும் சாத்திரி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நினைவில்லைப் பகலவன். அதில் உங்கள் அம்மாவும் அடக்கமா?? வயதை மறைக்கும் நோக்கமில்லை. :lol:

 

அதற்குள் உங்கள் கவிதையும் அடங்கும் சாத்திரி. :lol:

 

அது கவிதை இல்லை புதுக் கவிதை :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வந்து ஆரம்பத்திலை கரிக்கோச்சியிலைதான் பள்ளிக்கூடம் போய்வந்தனான்....அதுக்குப்பிறகு களிசான் பருவம் போய் ரவுசர் பருவம் வந்தவுடனை பளையிலையிருந்து வெளிக்கிட்டு வாற சிரிபி கலவன் ஸ்கூல் பஸ் :wub:  :wub:  அதிலை பெடிபெட்டையள் உரஞ்சுப்பட்டு இழுபறிப்பட்டு இரண்டொரு கைகலப்பு வர..... பெட்டையளின்ரை பெருசுகள் பெரிய இடங்களோடை கொன்ராக் வைச்சு....தனிய பெட்டையளுக்கு மட்டும் வசு :( ....அதுக்கு சுத்த தமிழிலை சொல்லுறதெண்டால் "மகளிர்சேவை" அதிலை பகிடியென்னெண்டால் றைவரும் ஆம்பிளை கொன்ரைக்டரும் ஆம்பிளை...சரி விடுவம்........ :D

ஏழேகாலுக்கு மகளிர் சேவை வரும்.......அதிலை கனவுக்கன்னியள் எல்லாரும் கிலுகிலுவெண்டு சிரிச்சுக்கொண்டு அந்தமாதிரி சொகுசாய் போவினம் :huh: .....அதுக்கை போய்ஸ் இல்லாத வசுவும் ஒரு வசுவே எண்டு சினந்த லேடீஸ் கனபேர் :wub: ...சரி கிடக்கட்டும்.....

மகளிர் சேவை போய் ஒரு பத்து நிமிசம் கழிய கண்டாவளையிலையிருந்து ஒரு வசு காட்டரைக் வந்தவன் மாதிரி ஒருபக்கம் இழுத்துக்கொண்டுவரும்...அதிலை கட்டாயம் ஏறோணும்......இல்லாட்டில் அடுத்த வசு...அதிலை போனால் அரைமணித்தியாலம் பிந்திடும்..... பிறின்சிபல் வரிசையிலை நிக்கவிட்டு கனக்ககேள்வி கேப்பார்....அடியும் விழும் விழாமலும் விடும்.....அது அவர்ரை அண்டையான் மூட் எப்பிடியோ......ரீச்சருக்குத்தான் வெளிச்சம் :icon_mrgreen:........சரி வசுவுக்கு வருவம்...

அதுக்கை வெங்காய்ச்சாக்கு,தேக்காய்ச்சாக்கு,பச்சைமிளகாய்ச்சாக்கு எண்டு 60பேர் இருக்கிற வசுவுக்கை ஒரு  சந்தையையே கொண்டுவருவாங்கள் :o ....அதுக்குள்ளை நானும் ரொபின்நீலம் போட்டு தோய்ச்ச வெள்ளைச்சேட்டோடை இடிபட்டுநெருக்குப்பட்டு....அதுக்கையும் அம்சமான நாட்டுக்கட்டையள் வந்தால்....சட்டை  கசங்கினாலும் பரவாயில்லை எண்டு போட்டு......

சரி அதை விடுவம் என்ரைவாயும் சும்மாயிருக்காது....

  • கருத்துக்கள உறவுகள்

நான் வந்து ஆரம்பத்திலை கரிக்கோச்சியிலைதான் பள்ளிக்கூடம் போய்வந்தனான்....அதுக்குப்பிறகு களிசான் பருவம் போய் ரவுசர் பருவம் வந்தவுடனை பளையிலையிருந்து வெளிக்கிட்டு வாற சிரிபி கலவன் ஸ்கூல் பஸ் :wub:  :wub:  அதிலை பெடிபெட்டையள் உரஞ்சுப்பட்டு இழுபறிப்பட்டு இரண்டொரு கைகலப்பு வர..... பெட்டையளின்ரை பெருசுகள் பெரிய இடங்களோடை கொன்ராக் வைச்சு....தனிய பெட்டையளுக்கு மட்டும் வசு :( ....அதுக்கு சுத்த தமிழிலை சொல்லுறதெண்டால் "மகளிர்சேவை" அதிலை பகிடியென்னெண்டால் றைவரும் ஆம்பிளை கொன்ரைக்டரும் ஆம்பிளை...சரி விடுவம்........ :D

ஏழேகாலுக்கு மகளிர் சேவை வரும்.......அதிலை கனவுக்கன்னியள் எல்லாரும் கிலுகிலுவெண்டு சிரிச்சுக்கொண்டு அந்தமாதிரி சொகுசாய் போவினம் :huh: .....அதுக்கை போய்ஸ் இல்லாத வசுவும் ஒரு வசுவே எண்டு சினந்த லேடீஸ் கனபேர் :wub: ...சரி கிடக்கட்டும்.....

மகளிர் சேவை போய் ஒரு பத்து நிமிசம் கழிய கண்டாவளையிலையிருந்து ஒரு வசு காட்டரைக் வந்தவன் மாதிரி ஒருபக்கம் இழுத்துக்கொண்டுவரும்...அதிலை கட்டாயம் ஏறோணும்......இல்லாட்டில் அடுத்த வசு...அதிலை போனால் அரைமணித்தியாலம் பிந்திடும்..... பிறின்சிபல் வரிசையிலை நிக்கவிட்டு கனக்ககேள்வி கேப்பார்....அடியும் விழும் விழாமலும் விடும்.....அது அவர்ரை அண்டையான் மூட் எப்பிடியோ......ரீச்சருக்குத்தான் வெளிச்சம் :icon_mrgreen:........சரி வசுவுக்கு வருவம்...

அதுக்கை வெங்காய்ச்சாக்கு,தேக்காய்ச்சாக்கு,பச்சைமிளகாய்ச்சாக்கு எண்டு 60பேர் இருக்கிற வசுவுக்கை ஒரு  சந்தையையே கொண்டுவருவாங்கள் :o ....அதுக்குள்ளை நானும் ரொபின்நீலம் போட்டு தோய்ச்ச வெள்ளைச்சேட்டோடை இடிபட்டுநெருக்குப்பட்டு....அதுக்கையும் அம்சமான நாட்டுக்கட்டையள் வந்தால்....சட்டை  கசங்கினாலும் பரவாயில்லை எண்டு போட்டு......

சரி அதை விடுவம் என்ரைவாயும் சும்மாயிருக்காது....

 

நீங்கள் சாவச்சேரி சந்தைக்கு  போன தேங்காய்களோடு  பயணம் செய்திருக்கிறீங்கள். எண்டு தெரியிது. ஆனா  கத்தரிக்காய்தான்  பாவம்  நசிஞ்சிருக்கும்.

:lol:

 

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் வந்து ஆரம்பத்திலை கரிக்கோச்சியிலைதான் பள்ளிக்கூடம் போய்வந்தனான்....அதுக்குப்பிறகு களிசான் பருவம் போய் ரவுசர் பருவம் வந்தவுடனை பளையிலையிருந்து வெளிக்கிட்டு வாற சிரிபி கலவன் ஸ்கூல் பஸ் :wub:  :wub:  அதிலை பெடிபெட்டையள் உரஞ்சுப்பட்டு இழுபறிப்பட்டு இரண்டொரு கைகலப்பு வர..... பெட்டையளின்ரை பெருசுகள் பெரிய இடங்களோடை கொன்ராக் வைச்சு....தனிய பெட்டையளுக்கு மட்டும் வசு :( ....அதுக்கு சுத்த தமிழிலை சொல்லுறதெண்டால் "மகளிர்சேவை" அதிலை பகிடியென்னெண்டால் றைவரும் ஆம்பிளை கொன்ரைக்டரும் ஆம்பிளை...சரி விடுவம்........ :D

ஏழேகாலுக்கு மகளிர் சேவை வரும்.......அதிலை கனவுக்கன்னியள் எல்லாரும் கிலுகிலுவெண்டு சிரிச்சுக்கொண்டு அந்தமாதிரி சொகுசாய் போவினம் :huh: .....அதுக்கை போய்ஸ் இல்லாத வசுவும் ஒரு வசுவே எண்டு சினந்த லேடீஸ் கனபேர் :wub: ...சரி கிடக்கட்டும்.....

மகளிர் சேவை போய் ஒரு பத்து நிமிசம் கழிய கண்டாவளையிலையிருந்து ஒரு வசு காட்டரைக் வந்தவன் மாதிரி ஒருபக்கம் இழுத்துக்கொண்டுவரும்...அதிலை கட்டாயம் ஏறோணும்......இல்லாட்டில் அடுத்த வசு...அதிலை போனால் அரைமணித்தியாலம் பிந்திடும்..... பிறின்சிபல் வரிசையிலை நிக்கவிட்டு கனக்ககேள்வி கேப்பார்....அடியும் விழும் விழாமலும் விடும்.....அது அவர்ரை அண்டையான் மூட் எப்பிடியோ......ரீச்சருக்குத்தான் வெளிச்சம் :icon_mrgreen:........சரி வசுவுக்கு வருவம்...

அதுக்கை வெங்காய்ச்சாக்கு,தேக்காய்ச்சாக்கு,பச்சைமிளகாய்ச்சாக்கு எண்டு 60பேர் இருக்கிற வசுவுக்கை ஒரு  சந்தையையே கொண்டுவருவாங்கள் :o ....அதுக்குள்ளை நானும் ரொபின்நீலம் போட்டு தோய்ச்ச வெள்ளைச்சேட்டோடை இடிபட்டுநெருக்குப்பட்டு....அதுக்கையும் அம்சமான நாட்டுக்கட்டையள் வந்தால்....சட்டை  கசங்கினாலும் பரவாயில்லை எண்டு போட்டு......

சரி அதை விடுவம் என்ரைவாயும் சும்மாயிருக்காது....

 

குமாரசாமி அண்ணா,

உங்கள் எழுத்தை பாத்தாலே உங்கட குழப்படியள்  விளங்கும் எ ங்களுக்கு.நீங்கள் மிச்சம் சொல்லாட்டியும் நாங்கள் கெஸ்பண்ணுவம் :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.