Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெடியளே! உங்களுக்குத்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதும் காதல் கொண்டு
கொண்டது கோலம் என்று
கோதையர் மேல் காதல் கொண்டால்
காயும் நிலைதான் காளையர்க்கு

கொடியிடை வேண்டுமென்றும்
கொள்ளை அழகு வேண்டுமென்றும்
குருடராகிக் குனிந்து நின்றால்
கோட்டான் கூட உமைக் குதறிடும்

நல்லதும் கெட்டதும் நாலுவிதம்
நம்மெதிரே உள்ளவைதான்
நகல் நிகர்த்து நல்லது காண்
நன்மை நீயும் பெற்றிடுவாய் 

கண் காணும் கவர்வின்றி உண்மைக்
காதல் தான் வேண்டுமென்றால்
கால்களில் வீழாது காதல் செய்வீர் 
கம்பீரமாய் நின்று காதல் செய்வீர்

உள்ளளகைக் கண்டு காதல் செய்வீர்
உத்தமி ஒருத்தி வந்திடுவாள்
உண்மைக் காதல் தந்திடுவாள்
உம்மை உய்யவும் வைத்திடுவாள்

உணர்ந்து காதல் செய்திடுவீர்
உண்மை அன்பைப் பெற்றிடுவீர்
உன்மத்தராய் ஆகாமல்
உயிர் ஒன்றி வாழ்ந்திடுவீர்

 

  • கருத்துக்கள உறவுகள்

பெடியளுக்கு மட்டும்தானோ? கிழடங்களுக்கு இல்லையோ?..... :D

காதலா ......வேண்டாம்.

பொடியள் எல்லோரும் ஏற்கனவே உன்மத்தராய் ஆகிட்டாங்க யாழில் தெரியுதானே...... :D 

கவிதை கலக்கல் அம்மா. 

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்குள் கணக்கா உண்மைகள், புதைஞ்சு போய்க்கிடக்கு எண்டது உண்மை தான்! :D

 

ஆனால், அந்த வயசைத் தாண்டின பிறகுதானே, எங்களுக்குத் தத்துவங்கள் பிறக்கிறது! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ், கவிதை ரெண்டுபேரும் லைக் பண்ணியிருக்கினம்.. நியாயம்தான்.. :unsure: ஆனால் நம்மட புத்தனும் லைக் பண்ணியிருக்கிறாரே.. :huh: இது கொடுமை இல்லையா? :D

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்குள் கணக்கா உண்மைகள், புதைஞ்சு போய்க்கிடக்கு எண்டது உண்மை தான்! :D

 

ஆனால், அந்த வயசைத் தாண்டின பிறகுதானே, எங்களுக்குத் தத்துவங்கள் பிறக்கிறது! :icon_idea:

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் காலம் பிந்தியே பிறக்கிறது ஞானமாக. :D

கண்டதும் காதல் கொண்டு

கொண்டது கோலம் என்று

கோதையர் மேல் காதல் கொண்டால்

காயும் நிலைதான் காளையர்க்கு

கொடியிடை வேண்டுமென்றும்

கொள்ளை அழகு வேண்டுமென்றும்

குருடராகிக் குனிந்து நின்றால்

கோட்டான் கூட உமைக் குதறிடும்

நல்லதும் கெட்டதும் நாலுவிதம்

நம்மெதிரே உள்ளவைதான்

நகல் நிகர்த்து நல்லது காண்

நன்மை நீயும் பெற்றிடுவாய் 

கண் காணும் கவர்வின்றி உண்மைக்

காதல் தான் வேண்டுமென்றால்

கால்களில் வீழாது காதல் செய்வீர் 

கம்பீரமாய் நின்று காதல் செய்வீர்

உள்ளளகைக் கண்டு காதல் செய்வீர்

உத்தமி ஒருத்தி வந்திடுவாள்

உண்மைக் காதல் தந்திடுவாள்

உம்மை உய்யவும் வைத்திடுவாள்

உணர்ந்து காதல் செய்திடுவீர்

உண்மை அன்பைப் பெற்றிடுவீர்

உன்மத்தராய் ஆகாமல்

உயிர் ஒன்றி வாழ்ந்திடுவீர்

 

 

இந்தசாட்டை இந்தக்களத்தில் எந்தப் பொடியனுக்கு அக்கா ? சுபேஸ் , சுண்டல் , நேற்கொழுதாசன் இப்பிடி வரிசை நீழுதே....! :lol:  தம்பியவை நீங்கள் யாரும்  காத்தில மோதினீங்களே ? :lol:

 

பெடியளுக்கு மட்டும்தானோ? கிழடங்களுக்கு இல்லையோ?..... :D

 

எண்ணமே வாழ்வு புத்தா. :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா கவிதைக்கு... அருமையான கருத்தான கவிதை ஒண்டு.. ஆனால் என்ன கவிதையின் அடி அகோரம் தாங்கேலாமல் இருக்கு அக்கா.. :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ், கவிதை ரெண்டுபேரும் லைக் பண்ணியிருக்கினம்.. நியாயம்தான்.. :unsure: ஆனால் நம்மட புத்தனும் லைக் பண்ணியிருக்கிறாரே.. :huh: இது கொடுமை இல்லையா? :D

நியாயமான கேள்வி.. இளமை திரும்புகிறது.. :D

நல்ல கவிதை.

 

கண்டதும் காதல் கொண்டு
கொண்டது கோலம் என்று
கோதையர் மேல் காதல் கொண்டால்
காயும் நிலைதான் காளையர்க்கு

 

இந்த வரிகளில் எது/எவர் காயும் நிலை என்பதை குறிப்பிடாததால் பொருள் மயக்கம் தந்து சற்று இடறுகிறது.

கண்டதும் காதல் கொண்டு

கொண்டது கோலம் என்று

கோதையர் மேல் காதல் கொண்டால்

காயும் நிலைதான் காளையர்க்கு

கொடியிடை வேண்டுமென்றும்

கொள்ளை அழகு வேண்டுமென்றும்

குருடராகிக் குனிந்து நின்றால்

கோட்டான் கூட உமைக் குதறிடும்

நல்லதும் கெட்டதும் நாலுவிதம்

நம்மெதிரே உள்ளவைதான்

நகல் நிகர்த்து நல்லது காண்

நன்மை நீயும் பெற்றிடுவாய் 

கண் காணும் கவர்வின்றி உண்மைக்

காதல் தான் வேண்டுமென்றால்

கால்களில் வீழாது காதல் செய்வீர் 

கம்பீரமாய் நின்று காதல் செய்வீர்

உள்ளளகைக் கண்டு காதல் செய்வீர்

உத்தமி ஒருத்தி வந்திடுவாள்

உண்மைக் காதல் தந்திடுவாள்

உம்மை உய்யவும் வைத்திடுவாள்

உணர்ந்து காதல் செய்திடுவீர்

உண்மை அன்பைப் பெற்றிடுவீர்

உன்மத்தராய் ஆகாமல்

உயிர் ஒன்றி வாழ்ந்திடுவீர்

 

 

ஒரு முடிவோடைதான் இருக்குறியள்  :lol: :lol: :icon_idea: . காதல் காதல் போயின் சாதல் சாதல் என்று

முண்டாசுகவி சொன்னதை மாற்றி இளையவர்களை வாழவைக்கும் உங்கள் கவிதைக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் சுமே :) :) .

 

  • கருத்துக்கள உறவுகள்

"கண் காணும் கவர்வின்றி உண்மைக்
காதல் தான் வேண்டுமென்றால்
கால்களில் வீழாது காதல் செய்வீர் 
கம்பீரமாய் நின்று காதல் செய்வீர்"

 

 

உண்மைக் காதல் என்றால் காலில் வீழ்ந்தாலும் பரவாயில்லை.
இந்தக்காலத்தில் கண்டதற்கெல்லாம் காலில் வீழ்கின்றார்கள் அது தப்புத் தான் :D

சுமே நல்ல கவிதையப்பா!

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை எடுத்து கொண்டால் வெறும் மத்தளங்கள் மட்டுமே....வேணாம் விடுவம்....யார் மனதையும் கஸ்ரப்படுத்த விரும்ப இல்ல..

 

அப்பிடியே சூட்டோட சூடா உந்தப் பெட்டைப் புள்ளையளுக்கும் புத்திமதி சொல்லுறமாதிரி ஒரு கவிதையை எடுத்து விடுங்கோ புள்ளை :rolleyes::lol:

இப்பெல்லாம் பெடியளைவிட பெட்டையள்தான் மோசமாக் கிடக்கு. :lol:

கவிதையின் அடி அகோரம் தாங்கேலாமல் இருக்கு அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளழகைக் கண்டு காதல் செய்வீர்

உத்தமி ஒருத்தி வந்திடுவாள்

உண்மைக் காதல் தந்திடுவாள்

உம்மை உய்யவும் வைத்திடுவாள்

 

 

புற அழகே முழுக்க முழுக்க.. மேக்கப்பா கிடக்குது. இதில உள்ளழகைக்  (அக்காக்கும் ல.. ள.. ழ பிரச்சனை போல..) கண்டு காதல் செய்ய ஆண்கள் எல்லாம் அகத்தியராக எல்லோ வேணும். முகப்புத்தகத்தில ஸ்ரேரஸ் மாத்திற கணக்கா ஆக்களை மாத்திறதில.. எது உத்தமின்னு கண்டுபிடிக்கிறது..??! அதென்ன உண்மைக் காதல்.. அதைக் கண்டுபிடிக்க.. ஏதாவது பாகைமானி.. வெப்பமானி.. வேகமானி.. கலோரிமானி.. இருக்குது..! உய்ய வைக்கமாட்டாள்.. ஓய வைத்திடுவாள். கலியாணம் கட்டி.. ஓய்ச்சு போனவையை கண்ட பின்னுமா... இந்தப் போலி உபதேசம்..! பொடியளே சிக்குப்பட முதல் சிந்தியுங்க...!

 

காதல் என்பது கண்ணைக் கட்டி காட்டில் விடுவது போன்றது. ஆபத்தானது..! விடப்படும் காடு முட்புதராகவும் இருக்கலாம்.. காரிருள் சூழ்ந்த காடாகவும் இருக்கலாம். நல்ல பூங்காடா இருந்தால்.. அது உங்க லக்கு. அது இப்ப உங்களுக்கு யூரோமில்லியனில லக்கடிக்கிற அளவில தான் இருக்குது. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொடியிடை வேண்டுமென்றும்

கொள்ளை அழகு வேண்டுமென்றும்

குருடராகிக் குனிந்து நின்றால்

கோட்டான் கூட உமைக் குதறிடும்

 

 

சும்மா நாலு இலக்கியப் பாடலைப் படிச்சிட்டு கதை அளக்கப்படாது.

 

கொடி இடை.. சப்பா இப்பவே கண்ணைக் கட்டுது. எல்லாம் 5 10 சுற்றுப் பெருத்த ஆலமரமா கிடக்குது. இதில கொடியிடை... வேணும் என்று பொடியள்...

 

கொள்ளை அழகு.. ஆமாக்கா.. மேக்கப் கடையில கொள்ளை அடிச்சுத்தான் அந்த அழகை காப்பாத்த வேண்டிக் கிடக்குது. அதென்றால் உண்மை தான்.

 

குருடராய் ஆக்கிப் போட்டியளே.. அங்க என்ன கிடக்குது ரசிக்க..???!

 

வாறது குதறிடிறதிலும்.. கோட்டான் குதறிட்டா தேறல்ல..!

 

இந்த இரண்டு பாக்களுக்குமான பொருள் விளக்கமே போதுமுன்னு நினனக்கிறோம். இன்றைய.. பொடியள்.. நிலையை விளக்க..! :lol:

 

 

இந்தசாட்டை இந்தக்களத்தில் எந்தப் பொடியனுக்கு அக்கா ? சுபேஸ் , சுண்டல் , நேற்கொழுதாசன் இப்பிடி வரிசை நீழுதே....! :lol:  தம்பியவை நீங்கள் யாரும்  காத்தில மோதினீங்களே ? :lol:

 

 

ஏன் அக்கா ஏன் ? 

ஆராச்சும் புரோக்கர்மார் இத பார்த்தா என்னாகிறது ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த புத்தன்,நேற்கொழு தாசன், புங்கை, சுபேஸ், தப்பிலி, கோமகன், இசை, சாந்தி, வாத்தியார், அலை, யாயினி, ஆமிக்காரர், கரன், நெடுக்ஸ், ராயவன்னியன் அண்ணா ஆகிய உறவுகளுக்கு நன்றி.
 


பெடியளுக்கு மட்டும்தானோ? கிழடங்களுக்கு இல்லையோ?..... :D

 

கிழடங்களுக்கு வேறை இருக்கு போடுறன். :D
 


நன்றி அக்கா கவிதைக்கு... அருமையான கருத்தான கவிதை ஒண்டு.. ஆனால் என்ன கவிதையின் அடி அகோரம் தாங்கேலாமல் இருக்கு அக்கா.. :D

 

அடி அகோரமாய் விழுந்தாலும் நீங்கள் திருந்தவே போறியள் :lol:

 


பெண்களை எடுத்து கொண்டால் வெறும் மத்தளங்கள் மட்டுமே....வேணாம் விடுவம்....யார் மனதையும் கஸ்ரப்படுத்த விரும்ப இல்ல..

 

உங்கள் கருத்தை எழுதுவதால் யார் மனம் கஷ்டப்படப் போகுது. நாங்களும் அறிந்துகொள்ளலாம் எல்லோ யாயினி.


 


அப்பிடியே சூட்டோட சூடா உந்தப் பெட்டைப் புள்ளையளுக்கும் புத்திமதி சொல்லுறமாதிரி ஒரு கவிதையை எடுத்து விடுங்கோ புள்ளை :rolleyes::lol:

இப்பெல்லாம் பெடியளைவிட பெட்டையள்தான் மோசமாக் கிடக்கு. :lol:

 

அடுத்தது பெட்டையளுக்குத்தான். :lol:
 


கவிதையின் அடி அகோரம் தாங்கேலாமல் இருக்கு அக்கா.

 

உங்களுக்குமா??? :rolleyes:
 


சும்மா நாலு இலக்கியப் பாடலைப் படிச்சிட்டு கதை அளக்கப்படாது.

 

கொடி இடை.. சப்பா இப்பவே கண்ணைக் கட்டுது. எல்லாம் 5 10 சுற்றுப் பெருத்த ஆலமரமா கிடக்குது. இதில கொடியிடை... வேணும் என்று பொடியள்...

 

கொள்ளை அழகு.. ஆமாக்கா.. மேக்கப் கடையில கொள்ளை அடிச்சுத்தான் அந்த அழகை காப்பாத்த வேண்டிக் கிடக்குது. அதென்றால் உண்மை தான்.

 

குருடராய் ஆக்கிப் போட்டியளே.. அங்க என்ன கிடக்குது ரசிக்க..???!

 

வாறது குதறிடிறதிலும்.. கோட்டான் குதறிட்டா தேறல்ல..!

 

இந்த இரண்டு பாக்களுக்குமான பொருள் விளக்கமே போதுமுன்னு நினனக்கிறோம். இன்றைய.. பொடியள்.. நிலையை விளக்க..! :lol:

 

அப்ப நீங்கள் கோவிலுக்குப் போய் பெட்டையளை விட்டுவிட்டு மனிசியளைத்தான் பாக்கிறனீங்கள் போல (முகக்குறி வருதில்லை)
உங்களுக்கு இந்த ஜென்மத்தில விடிவில்லை

 


 

vil-timide.gif

 

 

இந்த ஆட்டத்துக்கு நான் வரலை!

 

 

ஏன் ஏன் அண்ணா ?????
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.