Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செக்ஸ் உறவு கொள்ளும் நேரத்தில் நம்ம ஊர் பெண்கள் என்ன நினைக்கிறார்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தனர், அதில் "இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம், அவர்களது செக்ஸ் விருப்பு வெறுப்புகள், செக்சில்  அவர்களது எதிர்பார்ப்புகள்" போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர்.

இந்த சர்வே அடிப்படையில் வந்துள்ள முடிவுகள் பெண்கள் ஆர்வத்துடன் உடலுறவில் ஈடுபடுவது குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை. அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய்விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது…”- என்கிறார்.

சரி.. பெண்கள் கணவரோடு உறவில் இருக்கும்போதும் எதைப் பற்றி நினைப்பார்கள்?

- `நாளை என்ன சமையல் செய்வது?’ என்று பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்திலும் யோசனையில் ஆழ்கிறார்கள்.

- `இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் தங்களை வாட்டும் என்று சொல்கிறார்கள்.

- `இவர் எப்போது முடிப்பார்.. நாம் தூங்கி, காலையில் எழுந்து அத்தனை வேலையையும் பார்க்க வேண்டுமே..!’ என்று உறவு நேரத்தில் பெண்கள் கவலைப்படுவதும் உண்டு என்கிறது இந்த ஆய்வு.

கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் சுவாரஸ்யமானது.

51 சதவீத பெண்கள் `கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் `கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை’ என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களே `அவரோடு தனிமையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசிவிட்டு, உறவினைத் தொடர்வோம்’ என்கிறார்கள்.

தாம்பத்ய உறவு திருப்தியாக நடந்துமுடிந்த பின்பு அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? -என்ற கேள்விக்கு …..

- `எங்களுக்கு இடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகலமாய் வாழ்க் கையை நகர்த்தி, அடுத்த முறை இணைவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று 37 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

- அவ்வப்போது ஏற்படும் உடல்வலியும், தலைவலியும் அதன் பின்பு சில நாட்கள் காணாமல் போனது என்று 21 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

- மனதுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எனக்காக அவரும், அவருக்காக நானும் வாழ்கிறோம் என்ற திருப்தியையும், நம்பிக்கையையும் திருப்தியான தாம்பத்ய உறவு ஏற்படுத்தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.

Thanks to http://inimaiyanaillaram.blogspot.com/

 

இங்கபார்ட ஒருத்தருமே இந்த திரியை பார்க்கலையாம், வாருது நல்லா வாயிலை, ம்ம்ம் கெழம்புங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கபார்ட ஒருத்தருமே இந்த திரியை பார்க்கலையாம், வாருது நல்லா வாயிலை, ம்ம்ம் கெழம்புங்கள்.

 

அதானே..... இவ்வளவிற்கும், 1326 பேர் வாசித்து விட்டுcomputer_0010.gif, நசுக்கிடாமல் போயிருக்கிறார்கள்.

உங்களையாவது.... இந்தத் திரியில் கண்டது, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. :lol:  :D

Edited by தமிழ் சிறி

இங்கபார்ட ஒருத்தருமே இந்த திரியை பார்க்கலையாம், வாருது நல்லா வாயிலை, ம்ம்ம் கெழம்புங்கள்.

 

எல்லாம் ஒரு பொறாமையால் தான் பாஸ்

 

நாங்களெல்லாம் லிஸ்ட் போட வெளிக்கிட்டால் யாழ்களத்தின் மொத்த பக்கங்களின் நீளத்தினை விட கூடவாக இருக்கும். ஹ்ம்ம்.. அந்த மனுசன் கொடுத்து வைத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு பொறாமையால் தான் பாஸ்

 

நாங்களெல்லாம் லிஸ்ட் போட வெளிக்கிட்டால் யாழ்களத்தின் மொத்த பக்கங்களின் நீளத்தினை விட கூடவாக இருக்கும். ஹ்ம்ம்.. அந்த மனுசன் கொடுத்து வைத்தவர்.

 

எந்த மனுசன் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மனுசன் :rolleyes:

 

 

அவர்  இன்னும் பேய்த்திரியிலிருந்து வெளியில் வரவில்லை... :icon_mrgreen:  :lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=143482#entry1029523

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்டால் அவர் குளிச்சவரோ,பல்லை வடிவாய் தீட்டினவரோ,கீழ் உறுப்பை வடிவாய் கழுவினவரோ என்று தான் நினைப்பன்:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரயில் ஓட வெளிக்கிட முதல் யோசிக்க வேண்டியவிசயம் உது.......ரயில் ஓட வெளிக்கிட்டாப்பிறகு எல்லாம் ரூ லேற்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் மாட்டுக்குத் தவிடு புண்ணாக்கு வைத்ததா
சாணம் பொறுக்கியாச்சா என்ற எண்ணம் வரவில்லை :D:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் அலை தோன்றும் போது தெரிவதில்லை , கரையில் மோதி சாரல் அடிக்கும் போதுதான்  தேகம் சிலிர்க்கின்றது.

 

அந்த உறவே நினைவுகளை மறக்கடிப்பதாய் இருக்க வேண்டும் , அங்கும் நினைவு இருக்குமெனில் அது வெறும் விறகுதான்...!!

ரதி,
 
 
பெண் பெயரில் வந்து இப்படி தரம் குறைவாக எழுதுவதை விட ஆண் பெயரில் வரலாமே!!
 
அருவருப்பாக இருக்கிறது!!
  • கருத்துக்கள உறவுகள்

ரதி செக்கப் செய்வதைப் பார்த்தால் ஆள் ஒருநாளிலேயே விட்டிட்டு ஓடிடுவார்.அதுக்கு எப்ப மூட் வருமென்று தெரியாது.வருகிற சந்தர்பந்தைப் பாவிச்சுடணும்.மற்றதெல்லாம் பிறகு யோசிக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் அடிக்கடி கோமாவுக்கு போறதுன்டோ  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்..ம்..    room  போட்டு யோசிக்க வேண்டிய விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி செக்கப் செய்வதைப் பார்த்தால் ஆள் ஒருநாளிலேயே விட்டிட்டு ஓடிடுவார்.அதுக்கு எப்ப மூட் வருமென்று தெரியாது.வருகிற சந்தர்பந்தைப் பாவிச்சுடணும்.மற்றதெல்லாம் பிறகு யோசிக்க வேணும்.

 

அப்பிடியெண்டால் பக்கத்திலை நிக்கிறவன் வலுகவனமாய் நிக்கோணும் எண்டுறியள் :lol:

புலவர் தகவலுக்கு நன்றி.  :D

  • கருத்துக்கள உறவுகள்

படுத்துட்டு(நித்திரையால)எழும்பைக்கைதான் நல்ல புத்துணர்ச்சியாய் இருக்கும் எண்டது எல்லாருக்கும் தெரிந்தவிடயம்தானே!!!!நித்திரையை எல்லாம் கேமா இல்ல தம்பி.கோமா வந்தால் செத்திட வேண்டியதுதான்.

பூட்டுக்கதான் சாவியைப் போடவேணும்கு.சா அண்னை!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

பெண் பெயரில் வந்து இப்படி தரம் குறைவாக எழுதுவதை விட ஆண் பெயரில் வரலாமே!!

அருவருப்பாக இருக்கிறது!!

ஈசன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்/செய்யலாம்.ஆனால் பெண் செய்யக் கூடாது. அப்படித் தானே!...நீங்கள் அப்பட்டமான ஆணாதிக்கவாதி.நான் மேலே எழுதியதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை.உங்களைப் பொறுத்த வரை கூட இந்தக கருத்தை ஒரு பெண் எழுதியத் தான் பிழை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்/செய்யலாம்.ஆனால் பெண் செய்யக் கூடாது. அப்படித் தானே!...நீங்கள் அப்பட்டமான ஆணாதிக்கவாதி.நான் மேலே எழுதியதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை.உங்களைப் பொறுத்த வரை கூட இந்தக கருத்தை ஒரு பெண் எழுதியத் தான் பிழை இல்லையா?

 
நான் நினைக்கிறேன் அவர் எதை எங்கே பேச வேண்டும் என்று ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் அப்படி என்று சொல்ல வருகிறார் என்று.
 
இப்படி எத்தனை பேரை நாங்கள் யாழில் பர்த்துவிட்ட்டோம்.
எதை எப்படி எழுதுவது என்று எங்களுக்கு சொல்லிதர இவர்கள் யார்?? 
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் அவர் எதை எங்கே பேச வேண்டும் என்று ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் அப்படி என்று சொல்ல வருகிறார் என்று.

இப்படி எத்தனை பேரை நாங்கள் யாழில் பர்த்துவிட்ட்டோம்.

எதை எப்படி எழுதுவது என்று எங்களுக்கு சொல்லிதர இவர்கள் யார்??

நான் பொருத்தமான திரியில் தான் என்ட கருத்தை வைத்துள்ளேன்.தலைப்புக்கு சம்மந்தமில்லாமல் ஆட்டுக்குள்,மாட்டை செருகும் உங்கள் பழக்கம் எனக்கில்லை

ரதி எழுதியதில் எந்த தவறும் இல்லை.  சரியான இடத்திலேயே தனது கருத்தை எழுதியுள்ளார். பாலியல் உறவு சுகாதாரத்துடன் சம்பந்தபட்டது. இங்கு எல்லோரும்  உறுப்பினர்கள் எல்லோருமே வயது வந்தவர்களே. உடலியல் சுகாதாரம் என்ற பாங்கிலேயே அவரின் கருத்து எடுத்து கொள்ளப்பட வேண்டும். ஒரு பெண் இதை எழுதக்கூடாது என்றால் ஆணும் எழுதக்கூடாது. ஏனெனில் பாலியல் உறவு என்பது பெண், ஆண் இருவருடனும் சம்பந்தப்பட்டது.  அதில் ஏற்படமு இன்பம், துன்பம் இரண்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானவை

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொருத்தமான திரியில் தான் என்ட கருத்தை வைத்துள்ளேன்.தலைப்புக்கு சம்மந்தமில்லாமல் ஆட்டுக்குள்,மாட்டை செருகும் உங்கள் பழக்கம் எனக்கில்லை

உங்களுக்கு சாதகமாக எழுதியதற்கு போய்  இப்படி திட்டுகிறீர்கள்?
 
ஈசன் போன்றவர்கள் எப்படி எதை எழுதுவது என்பது பற்றி பாடம் எடுக்க தேவை இல்லை. நீங்கள் முதிர்சி பெற்றவர் அப்படி என்று பொருள் வைத்துதானே எழுதிள்ளேன்??????
  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்/செய்யலாம்.ஆனால் பெண் செய்யக் கூடாது. அப்படித் தானே!...நீங்கள் அப்பட்டமான ஆணாதிக்கவாதி.நான் மேலே எழுதியதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை.உங்களைப் பொறுத்த வரை கூட இந்தக கருத்தை ஒரு பெண் எழுதியத் தான் பிழை இல்லையா?

அதே.... இங்கு ஆம்பிளைங்க எவ்வளவோ எழுதுறாங்க... ஆனா ஒரு பெண் அப்படி எழுதியதை பலராலும் பொறுக்க முடியவில்லை... இந்த திரி புலம்பெயர்ந்த தேசத்தில் பிறந்த பிள்ளைகளுக்கும் முதல் தலைமுறைக்கும் இடையிலான பெரும் இடைவெளிக்கு ஒரு சிறந்த உதாரணம்...

  • கருத்துக்கள உறவுகள்

அதே.... இங்கு ஆம்பிளைங்க எவ்வளவோ எழுதுறாங்க... ஆனா ஒரு பெண் அப்படி எழுதியதை பலராலும் பொறுக்க முடியவில்லை... இந்த திரி புலம்பெயர்ந்த தேசத்தில் பிறந்த பிள்ளைகளுக்கும் முதல் தலைமுறைக்கும் இடையிலான பெரும் இடைவெளிக்கு ஒரு சிறந்த உதாரணம்...

 

 

உங்களது  கருத்தோடோ

அல்லது ரதியின் எழுத்தின் மீதோ மாற்றுக்கருத்துக்கிடையாது

 

இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் ரதி  என்ற எங்களது சக கருத்துக்கள   உறவு மீது 

நாம் வைத்திருக்கும் அன்பால்

மதிப்பால்

மற்றும்  அவரது வரும்கால நன்மை கருதியதாக இருக்கலாம் என்றே  நான் நினைக்கின்றேன்

 

ஆண் எழுதலாம்

பெண் எழுதலாமா என்ற  கேள்விக்கு

இவ்வாறு நான்  எழுதிவிட்டு எல்லோரையும் சந்திப்பேன்

இதை ரதியால் செய்யமுடியுமா???

எதிர் காலத்தில்

இது போன்ற  எழுத்துக்களே  அவரை ஒதுங்கச்செய்துவிடலாம் இல்லையா???

இதற்கு எந்த தலைமுறையும் அடங்கும்.....

 

நம்ம  சமூகம்

பார்க்க  பேசத்தான் கீரோக்கள்

உண்மையில் பக்கா   வில்லன்கள் தம்பி............

 

உங்களுக்கு சாதகமாக எழுதியதற்கு போய்  இப்படி திட்டுகிறீர்கள்?
 
ஈசன் போன்றவர்கள் எப்படி எதை எழுதுவது என்பது பற்றி பாடம் எடுக்க தேவை இல்லை. நீங்கள் முதிர்சி பெற்றவர் அப்படி என்று பொருள் வைத்துதானே எழுதிள்ளேன்??????

 

 

ifeel_zps9673b157.jpg

போலி மனிதர்கள் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.