Jump to content

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம்மிடமிருந்து விடைபெற்ற மற்றுமொரு 'வானொலிக் கலைஞன்'

 
இலங்கை வானொலியின் ஆரம்ப கால அறிவிப்பாளர்களில் ஒருவராகிய திரு.ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்கள் இன்று காலை(29.07.2014) இலங்கை  சிலாபம் அரச மருத்துவ மனையில் காலமானார். அன்னாருக்கு வயது 74 ஆகும். 

220px-Rajaguru.jpg இளமைக் காலத்தில் 

திரு.இரா.சே.கனகரத்தினம் திரு.கனகரத்தினம் அவர்கள் இலங்கை வானொலியில் மிகவும் பிரபலமான அறிவிப்பாளர் ஆவார். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டுவரை சுமார் முப்பது ஆண்டுகள் பிரபல அறிவிப்பாளராகப்  பவனி வந்தார். இலங்கை வானொலியின் புகழ் பூத்த அறிவிப்பாளர்களாகிய கே.எஸ்.ராஜா, பி.எச். அப்துல் ஹமீத், மயில்வாகனம் சர்வானந்தா, வி.என்.மதியழகன், ஜோக்கிம் பெர்னாண்டோ, நடராஜா சிவம், ஜெயகிருஷ்ணா, ஜி.போல் ஆன்டனி, ராஜேஸ்வரி சண்முகம், சற்சொரூபவதி ஆகிய அத்தனை அறிவிப்பாளர்களுடனும் பணி புரிந்தவர் என்ற பெருமை மட்டுமல்லாது, இவர்கள் அத்தனை பேருக்கும் முன்னோடியும் ஆவார்.

இலங்கையின் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முதலாவதுதமிழ் வானொலி அறிவிப்பாளர் ஆவார்.திரையிசைப் பாடல் வரிகளை சங்க காலப் பாடல்வரிகளோடு தொடர்பு படுத்தும் "பொதிகைத் தென்றல்" முதலான இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். திரையுலகின் பல கலைஞர்கள், கவிஞர்கள் பற்றிய பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியவர்.

200px-RSKanagaratnam1.jpg வயது முதிர்ச்சியின்போது திரு.கனகரத்தினம் அவர்கள் பிறந்தது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள சிலாபம் அருகே உள்ள 'மருதங்குளம்' என்னும் கிராமம் ஆகும். இவரது பெற்றோர் முத்தையா, பொன்னம்மாள் ஆவர். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை கனகரத்தினம். தந்தை முத்தையா தமிழ்நாடுஅரசவம்சத்தை சேர்ந்தவர்.கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் இவரது வீட்டில் இருந்தது. 'ராஜகுரு சேனாதிபதி' என்பது இவர்களின் குடும்பத்தின் பரம்பரைப்  பெயர்.மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் சென் மேரீஸ் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றார். இவர் திருமணம் ஆகாதவர்.

 அக்காலத்தில் இலங்கை வானொலியில் இணைந்திருந்தவர்களில் மிகுந்த இலக்கிய புலமை கொண்டவராகத் திகழ்ந்த ராஜகுரு அவர்கள், இதன் காரணமாக 

kanaga_rathinam001.jpg இசைஞானி இளையராஜா மற்றும், 

பி.எச்.அப்துல் ஹமீத் இவர்களுடன்

இரா.சே.கனகரத்தினம் அவர்கள். இலக்கிய கண்ணோட்டத்துடன் பாடல்களை ஒலி பரப்பியதோடு, இலக்கியத் தரம் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்தார். 'பொதிகைத் தென்றல்', 'காலைக்கதிர்', 'பாட்டொன்று கேட்போம்', இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தினார்.பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் இதழில் இவரது 'ராஜகுரு சேனதிபதி' என்ற பெயரின் சிறப்பைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்கள். கடந்த 1988 ஆம் ஆண்டில் 'மனம் போன போக்கில்' என்னும் பெயரில் ஒரு சிந்தனை நூலையும்

f-8-4.jpg (இ-வ) பின்வரிசையில் - பெனடிக், ஜோசப் ராஜேந்திரன், மயில்வாகனம், மஹதி ஹசன், ஜோக்கிம் பெர்னாண்டோ, சந்திரமோகன், சண்முகம் அமர்ந்திருப்போர் - விசாலாட்சி ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம், பி. பி. தியாகராஜா, கனகரட்ணம் அப்துல் ஹமீத்.

 

வெளியிட்டிருந்தார்.இலங்கை வானொலி என்னும் மனம் மயக்கும் மந்திர ஊடகத்தில் இணைந்து மூன்று தசாப்தங்களாக எம்மையெல்லாம் மனம் மகிழச் செய்த அந்த வானொலிக் கலைஞனின் மறைவிற்கு அந்திமாலை ஆசிரிய பீடம் தனது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் இழப்பால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக. 

 

http://anthimaalai.blogspot.com

 

 

 

 

Link to comment
Share on other sites

நல்லதொரு தமிழ் உணர்வாளர். ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் சில சினிமா வசன உரையாடல்களூக்கும் பாடல்களுக்கும் தடை இருந்தது.

 

எனினும் இவர் அவற்றை எல்லாம் கவனத்தில் எடுக்காமல் அலட்சியப்படுத்திவிடுவார்.

 

இவர் நடாத்திய 'கதம்பம்' எனும் நிகழ்ச்சியில் 'நல்ல தமிழ் கேட்போம்' என்னும் பகுதி நிச்சயமாக இடம்பெறும். அதிலே வீரபாண்டிய கட்டப்பொம்மன் வசன உரையாடலும், தமிழுக்கு அமுதென்று பேர்.. போன்ற பாடல்களும் அடிக்கடி இடம்பெறும். அதனால் அடிக்கடி தண்டனை பெற்று குறிப்பிட்ட காலம் ஒலிவாங்கிக்கு முன் வராமல் இருந்ததும் உண்டு.

 

எனினும் இவற்றுக்காக அவர் தனது உணர்வுகளை கைவிட்டதில்லை!!

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவைனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் குரலின் ஒளிப்பதிவை, இணையத்தில்..... தேடினேன். கிடைக்கவில்லை.
யாரிடமாவது இருந்தால், இணைத்து விடுங்கள்.

 

அன்னாரின் மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு.கனகரத்தினம் அவர்களின் குரல் இன்னமும் காதில் ஒலித்த நினைவு இருந்துகொண்டே இருக்கிறது. மிகுந்த தமிழ் உணர்வாளர்.

அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரத்தில்

எல்லோரம் தங்களது பெயர்களை சுருக்கி  வைத்திருக்க

சுருக்கி  வைக்க முயற்சிக்க முயலும் போது

இவர் மட்டும்  தனது பெயரை 

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்  என்பார்.

அதுவே ஒரு அழகும் கம்பிரமும் ஆகும்..

 

திரு.கனகரத்தினம் அவர்களின் குரல் இன்னமும் காதில் ஒலித்த நினைவு இருந்துகொண்டே இருக்கிறது. மிகுந்த தமிழ் உணர்வாளர்.

அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

f-8-2.jpg

 

"ராஜகுரு சேனாதிபதி என்ற பெயரைப் பயன்படுத்த மயில்வாகனமே காரணம்...''

"என் தங்கச்சி பெயர் நோனம்மா. பாசமலர் படத்தில் வரும் அண்ணன் தங்கை அதாவது சிவாஜி, சாவித்திரி மாதிரி தான் நாங்கள் இருவரும் வாழ்ந்தோம். என் தங்கச்சி மீது உயிரையே வைத்திருந்தேன். எங்கு சென்றாலும் தங்கையை அழைத்துச் செல்வேன். ஒரு நாள் என் அம்மாவை என் தங்கை திட்டினாள். நான் அதை கண்டுக்கொள்ளவில்லை. அப்போது என் அம்மா, "என்ன உன் தங்கச்சி திட்டுறத வேடிக்கை பார்க்கிறியா..?" என்றார் என்னிடம். உடனே எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது. என் தங்கையை என் கோபம் தீருமட்டும் அடித்தேன். பாவம் என் தங்கை! துடித்துப் போய்விட்டாள். அந்த சம்பவத்திற்குப் பின் அவள் என்னோடு பேசுவதில்லை. நானும் கதைப்பதில்லை. வீட்டில் அவள் தான் சமையல் செய்வாள். சாப்பாட்டை தட்டில் போட்டு விட்டு நான் இருக்கும் அறைக்கு எதிரே இருக்கும் கதவு நிறையில் சாய்ந்து கொண்டிருப்பாள். அவள் அப்படி நின்றால் அவள் என்னை சாப்பிட கூப்பிடுகிறாள் என்று அர்த்தம். என் தங்கையை நான் அப்படி அடித்திருக்கக் கூடாது. அவசரப்பட்டுவிட்டேன்.

 என் தங்கையை அடித்ததை எண்ணி நான் என் மனசுக்குள் அழுத நாட்கள் அனேகம். பிறகு என் தங்கைக்கு பிடித்தவனையே அவளுக்கு திருமணமும் செய்து வைத்தேன். எல்லாமே பாசமலர் படத்தில் வருவது போல.... சில காலங்களுக்கு பிறகு என் தங்கையின் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் கிளம்ப ஆரம்பித்தன.

துரதிஷ்டவசமாக அவள் இறந்துவிட்டாள். என் தங்கையின் இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இன்றும் காலையில் அவள் படத்துக்கு முன்பாகத்தான் கண் விழிக்கிறேன்...” என்று தனது பாசத்துக்குரிய தங்கையின் நினைவுகளை எம்மோடு பகிர்ந்துகொண்ட கனகரட்னத்திடம் அவரின் பூர்வீகம் பற்றி கேட்டோம்.

“நான் பிறந்தது சிலாபம் மருதங்குளத்தில். அப்பா பெயர் முத்தையா, அம்மா பொன்னம்மாள். அப்பா ராஜவம்சத்தை சேர்ந்தவர். தமிழ் நாட்டில் இருக்கும் அயோத்தியிலிருந்து வந்தவர். கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் எங்கள் வீட்டில் இருந்தது. ராஜகுரு சேனாதிபதி என்பது எங்கள் குடும்பத்தின் பரம்பரை பெயர்.

 ராஜாவுக்கு குருவாகவும், சேணைக்கு அதிபதியாகவும் இருப்பவர்கள் என்பதுதான் அதன் பொருள். மதுரங்குளம் முழுவதும் என் தாத்தாவுக்கு சொந்தமான இடம் தான். ஆனால் தாத்தாவுக்கு போகும் இடமெல்லாம் மனைவிகள் இருந்திருக்கிறார்கள். அதனால் அவர் அங்கெல்லாம் ஒரு வீட்டை கட்டி அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். தாத்தாவின் அந்த வீடுகள் தாத்தாவுக்கு அந்தப்புரமாக இருந்திருக்கிறது. இப்போது அந்த இடங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் காணி தாத்தாவின் பெயரில் தான் இருக்கிறது.

“எங்கள் குடும்பத்தில் நான் ஏழாவது பிள்ளை. நான் பிறந்த வீட்டில் நாயக்கர் காலத்து தூண்கள் மாதிரி பெரிய பெரிய தூண்கள் இருக்கும். ஆனால் எனக்கு அந்த வீட்டில் தொடர்ந்து இருக்கக் கிடைக்கவில்லை. அப்பா அந்த வீட்டை அவரின் அண்ணணுக்கு எழுதி கொடுத்துவிட்டதால், நாங்கள் வேறு வீட்டிற்கு மாறி வந்து விட்டோம். ஆரம்பத்தில் என் பெயரை கனகரட்ணம் என்றுதான் எழுதி வந்தேன். ‘ராஜகுரு சேனாதிபதி என்று எழுதுவதை நான் விரும்பவில்லை.

 பிறகு நான் அறிவிப்பாளராக ரேடியோ சிலோனுக்கு பணியாற்ற வந்தபோது, அங்கே மயில்வாகனம் இருந்தார். அவர் என்னை சிலாபக்காரர், கரையர், மீன்பிடிக் கிராமத்தான் என்பதாக மதிப்பிட்டு அப்படியே வெளியே சொல்லியும் வந்தார். ரேடியோ சிலோனிலும் அப்படித்தான் ஏனையோரிடத்தில் அறிமுகம் செய்தும் வந்தார்.

“இவர் ஒரு கரையர் பையன்” என்று சொல்வது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. உண்மையில் நான் ஒரு பெரிய குடும்பத்து பையன் என்பது மயில்வாகனத்திற்கு தெரியாது. இவரது வாயை எப்படி மூடுவது? என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பிறகு தான் என் பெயருக்கு முன்னால் ‘ராஜகுரு சேனாதிபதி என்பதை சேர்த்துக்கொண்டேன்” என்று தமது ஊரையும், பெயரையும் பற்றி விபரித்த கனகரட்னத்திடம் முதல் பாடசாலை பிரவேசம் பற்றிக் கேட்டோம்.

“மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் தான் என் முதல் அரிவரி தொடங்கியது. என் அம்மாதான் என்னை அங்கே அழைத்துச் சென்றாள். அங்கே நான் நாலாவது வரை கல்விக் கற்றேன்.

எனக்கு அகரம் கற்பித்தவர் யார் என்பது எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் பாக்கியநாதன், திருமதி பாக்கியநாதன் ஆகியோர் அங்கே படிப்பித்தார்கள். அவர்கள் இருவருக்கும் என்மீது நல்ல பிரியம். நான் அரிவரி படித்த அந்தக் கட்டடத்தை இடித்து விட்டு இப்போது சமுர்த்தி நிலையத்தை அங்கே அமைத்திருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு சென் மேரீஸ் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே எஸ். எஸ். சி. வரைப் படித்தேன். அங்கே என்னோடு ஒரே பெஞ்சில் அமர்ந்து படித்த கந்தசாமி, மெளலானா, அபுல் ஹசன், டக்ளஸ் ஆகியோரை இன்றும் நினைக்கிறேன்” என்றவரிடம், பாடசாலை நாட்களில் நாடகங்கள் நடித்திருக்கிறீர்களா? என்று கேட்டோம்.

“எனக்கு சின்ன வயசிலேயே கிரிக்கெட் விளையாடுவதென்றால் ரொம்பப் பிடிக்கும். ஐந்தாவது படிக்கும்போது ‘அமணனும் குமணனும்’ என்ற நாடகத்தில் புலவர் வேடத்தில் நடித்தேன். அதற்குப் பிறகு நான் நாடங்கள் நடிக்கவில்லை.”

வானொலி பிரவேசம் எப்படி அமைந்தது?

    

“எனக்கு சின்ன வயசிலேயே வானொலி என்றால் உயிர். அப்போ இப்போ மாதிரி வீட்டுக்கு வீடு வானொலி கிடையாது. எங்கேயோ ஒரு வீட்டில் தான் வானொலியைக் காண முடியும். ஒரு சில ஹோட்டல்களில் வானொலிகளை சத்தமாக போட்டிருப்பார்கள். நான் பாடசாலை செல்லும் நாட்களில் அந்த ஹோட்டல்களுக்கு அருகில் நின்று வானொலி ஒலிபரப்புகளை கேட்பேன். அப்போது என் குரலும் வானொலியில் ஒலிக்காதா என்ற ஆவல் எனக்குள் உருவாகி குதியாட்டம் போடும், நான் தனிமையில் இருக்கும்போது வானொலி அறிவிப்பாளர்கள் பேசுவது போல பேசி பயிற்சி எடுத்துக்கொள்வேன்.

இது இப்படி இருக்க அப்பாவுக்கும் எனக்கும் எப்போதும் கருத்து முரண்பாடு வந்து கொண்டே தான் இருந்தது. அப்பா எனக்கு எந்த உதவியையும் செய்ய முடியாது என்று கூறி 'வீட்டை விட்டு வெளியே போ' என்று விரட்டினார். அப்போது வேறு ஒருவரின் உதவியுடன் வானொலிக்குள் பிரவேசம் செய்ய முயற்சி செய்தேன். வர்த்தமானியில் வெளியான அறிவிப்பாளர்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விட்டு விண்ணப்பம் போட்டு விட்டு காத்திருந்தேன். பிறகு வரச் சொன்னார்கள்.

 அதற்குப் பிறகு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். தேர்வானேன். முதல் நாள் ஒலிபரப்பிற்காக மைக் முன்னால் அமர்ந்தபோது எனக்கு நடுக்கமாக இருந்தது. எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் என் குரலைக் கேட்கப் போகிறார்களே என்ற பயமும் பரபரப்பும் தான் அந்த நடுக்கத்திற்குக் காரணம். அப்போது நமது வானொலி தமிழகத்திலும் தெளிவாக ஒலிபரப்பாகி வந்தது. அதனால் அவர்களும் கேட்க கோடிக்கணக்கான மக்களை எமது குரல் சென்றடைந்த காலம் அது. இலங்கை வானொலியில் நிறைய நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். பொதிகை தென்றல், காலைக்கதிர், பாட்டொன்று கேட்போம், இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நானே பெயரும் சூட்டினேன்.”

நீங்கள் வானொலி நட்சத்திரமானப் பின்னர் தங்களின் முதல் ரசிகை? முதல் காதல்?

“நான் வானொலி நட்சத்திரமானப் பிறகு எத்தனையோ பெண்களின் காதல் ரசம் சொட்டும் கடிதங்களைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அந்தக் காதல் கடிதங்களை மட்டும் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆனால் எந்தப் பெண்ணும் என் மனசிலும் பதியவில்லை.

வாழ்க்கையிலும் துணையாகவில்லை. அது ஏனோ தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணிலும் பிடிப்பு ஏற்படவில்லை. என்னை எத்தனையோ பெண்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். என் மீது உள்ள காதலை நேரிடையாகவே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் என்னமோ தெரியவில்லை எனக்குதான் காதல் உணர்வே வரவில்லை. ஒரு முறை பெங்களூரிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தப் பெண் என்னைப் எப்படியோ தேடிக் கண்டுபிடித்து அவள் எனது தீவிர ரசிகை என்றும் அவள் என்னை விரும்புவதாகவும் சொல்லி கெஞ்சினாள்.

ஆனால் நான்தான் அவளோடு வந்த குடும்பத்தார்களிடம் கைகொடுத்து கும்பிட்டு அவளை அழைத்துச் செல்லும்படி சொன்னேன். இப்படியொரு மக்கனாக அந்தக் காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். அந்தப் பெண்களின் சாபம் தானோ என்னவோ நான் இன்று தனிமையில் கஷ்டப்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது போலும்.

“ஒருமுறை நேரடியோ சிலோனில் நான் அறிவிப்பாளராக கடமையாற்றி கொண்டிருந்தபோது மறுபக்கத்தில் நந்தசேன என்பவர் ஒலிபரப்பிற்கு உதவியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின் என்னை அழைத்த நந்தசேனை, மச்சான் உனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா? என்றார் நான் இல்லை என்றேன். தண்ணீ, பொண்ணு என்று கேட்க நான், இல்லவே இல்லை என்று மறுத்தேன்.

அப்போது நந்தசேன, நீயெல்லாம் ஏன்டா பூமியில பிறந்தாய்? என்று கேட்டார். நான் விக்கித்து நின்றேன்” என்று சொன்ன ராஜகுரு சேனாதிபதியிடம் அப்பாவிடம் அடிவாங்கி இருக்கிறீர்களா? என்று கேட்டோம்.

“அப்பாவிற்கு என்னை பிடிக்காது. அதனால் எப்போதும் என்னை அடிப்பார். சில நேரங்களில் என்னை அடித்து வீட்டை விட்டு துரத்திவிடுவார். நான் என் வீட்டுத் தோட்டத்திலுள்ள வாய்க்காலில் தென்னம் ஓலையை போட்டுப் படுத்து தூங்கிவிட்டு மறுநாள் காலையில் வருவேன். சில நாட்களில் மரத்தில் ஏறி அதன் உச்சியில் உள்ள கிளையில் அமர்ந்து அப்படியே தூங்கி விடுவேன்.

கீழே விழாமலிருக்க இடுப்பில் ஒரு கயிற்றை கட்டி மரத்தில் கட்டிவிட்டு தான் தூங்குவேன். ஒரு நாள் நானும் எனது நண்பர் பொன்னம்பலமும் மாலையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிலாபத்திற்கு சென்று நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தோம். வரும்போது வழியில் நான் கீழே விழுந்து காலில் நல்ல அடிபட்டுவிட்டது. காயத்தோடு வீட்டுக்கு வந்தபோது அப்பா என்னை வீட்டிற்கு வெளியே நின்ற மரத்தில் கட்டி வைத்து அடித்தார். இன்றும் அந்த சம்பவம் என் மனதில் அப்படியே இருக்கிறது.”

தனிமை உங்களுக்கு கொடுமையாகத் தெரியவில்லையா?

“இல்லை. அது ஆண்டவன் கொடுத்த வரம். தனிமையை இனிமையானதாகவே கருதுகிறேன். நானே சமைத்து சாப்பிடுகிறேன். எனக்கு இதுவரையும் எந்த நோயும் வந்ததில்லை. கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. நான் வானொலி, தொலைக்காட்சி கேட்பதும் பார்ப்பதும் கிடையாது. உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள திருச்சி வானொலியை மட்டும் தினமும் கேட்கிறேன்.”

மறக்க முடியாத நபர்கள்?

நண்பர் நமசிவாயம், பெர்ணான்டோ, நெவில் ஜயவீர உள்ளிட்டோரை மறக்கவே முடியாது.

ம்... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?

“எங்கள் வீட்டுக்கு முன்னாடி இருந்த மதுரங்குளம் குளத்தில கரனம் போட்டு குதித்து, நீந்தி விளையாடிய அந்த நாட்கள்... இன்று அந்தக் குளத்தைப் பார்க்கும்போது ரொம்பவும் ஏக்கமாக இருக்கும். என்ன செய் வது இப்போது என்னால் கரணம் போட்டு அந்த குளத்தில் குதிக்கவோ, நீந்தவோ முடியாது. வீட்டு குளியலறையில் தான் குளிக்கிறேன்.

கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி உங்கள் புரிதல் என்ன?

“நாம் கொண்டு வந்ததும் ஒன்றுமில்லை; கொண்டு போவதும் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட சில காலங்கள் இங்கே கொஞ்சம் தங்கியிருந்து விட்டு போகிறோம். அவ்வளவு தான். என்னைப் பொருத்தவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை இனிமையானது என்றுதான் சொல்வேன்” என்று முடித்தார் கனகரட்ணம்.

 

http://www.thinakaran.lk/vaaramanjari/2010/10/03/?fn=f1010038

 

 

 

7850bc1816b7ddb84950879605144333.jpg  ஆத்மா சாந்தியடைய என் ஆழ்ந்த அஞ்சலிகள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களால் எப்போதும் தமிழர்களை ஆள முடியாது.. வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ 04 JUN, 2024 | 04:18 PM   பா.ஜ.க.-வால் தமிழ்நாட்டை, தமிழர்களை எப்போதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். கடந்த சில மாதங்களுக்மாதங்களுக்கு முன் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்று (ஜூன் 4) தமிழ்நாட்டில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், "பா.ஜ.க.-வால் தமிழகத்தை ஆளவே முடியாது" என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/185310
    • நாம் த‌மிழ‌ர் க‌ட்சி அங்கீகரிக்கப் ப‌ட்ட‌ க‌ட்சியாகி விட்ட‌து  8ச‌த‌ வீத‌த்தை தாண்டி🙏🥰...............................................................................   
    • "விடியல் உன் கையில்"     "இரவின் மடியில் விடியலுக்கு காத்திராதே விழிகள் திறந்தால் விடியல் உன் கையில்!"   நான் என் வீட்டின் மாடத்தில் தூணை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை. உள்ளத்தில் கொதிக்கும் வெப்பம் தாங்கமுடியாமல் இருக்கிறது. நான் இதுவரை சென்ற பாதை இப்ப குழப்பத்தை தருகிறது. நான் கீழே பார்க்கிறேன். வீதியின் ஓரத்தில் ஒரு சிவத்த மோட்டார் வாகனம் விடாமல் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. என் உள்ளமும் அதற்கு ஈடாக சிவந்து அலறிக் கொண்டு இருந்தது. இப்ப மாலை ஆறு மணி, இருட்ட ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது. என் கண்கள் வீதியால் போகும் வாகனங்களை அங்கும் இங்குமாக நோட்டமிட்டபடி தொங்கிய தோள்களுமாக வாடிய முகமுமாக இருந்தது. என் இதயத்தில் ஒரு வெற்றிடம் விடிவு இன்றி தவிக்கிறது. அது என்ன ? என் தோல்வி தான் என்ன ? எது உண்மையில் என் வாழ்வில் பிழைத்தது? என் மனம் பல பல சிந்தனை வெள்ளத்தால் மூழ்கி, அவை ஒவ்வொன்றும் என்னைப் பார்த்து கத்திக்கொண்டு இருந்தன. அந்த வெறுமை என்னையே விழுங்கும் அளவிற்கு இருக்கிறது. அது தான் நான் உங்களுடன் என் கதையை இப்ப பகிர்கிறேன்.   நான் இலங்கையை விட்டு ஒரு அந்நியனாக லண்டன் வந்த நாளை இன்னும் மறக்கவில்லை. என் வாழ்வு ஒரு நோக்கம் கொண்டதாக, ஒரு பெரிய அந்தஸ்து நிலையில் என்னை அமைக்க ஆசைப் பட்டேன். அதை இந்த லண்டன் மாநகரம் எனக்கு தந்தது. நான் வந்து மூன்றாம் நாளே ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி முகாமையாளராக பதவி பெற்றேன். உண்மையில் என் நோக்கம் இதை விடப் பெரிது, என்றாலும் முதல் படியில் கால் வைத்தல் தானே ஏணியின் கடைசிப் படிக்குப் போகலாம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அது மட்டும் அல்ல, நான் என் முழுக்கவனத்தையும் அந்த நிறுவனத்திலும் என் வேலையிலும் கட்டாயம் செலவழிக்க வேண்டும் என்பதும் தெரியும். ஆனால் என் முதல் தவறை, இப்ப என் உள்ளத்தை தாக்கும் வேதனை, சொல்லிக்கொண்டு இருக்கிறது!   நான் என் வாழ்வின் மற்ற விடயங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல், வேலை, வேலை , என்றே இருந்துவிட்டேன். பதவி, பதவி இதுவே இதுவே என் முழு நோக்கமாக இருந்தது. இப்ப நினைத்தால் நான் முழு முட்டாள் என்று தோன்றுகிறது. வீடு வாங்கினேன், மோட்டார் வண்டி வாங்கினேன் , பதவி உயர்வு அடைந்தேன். என் செல்வாக்கு நல்ல அழகான பெண்ணை மனைவியாக்கியது. ஆனால் என்னை எதுவுமே திருப்தி செய்யவில்லை. நான் அந்த நிறுவனத்தின் தலைமை பதவியை அடையவேண்டும், என் செல்வாக்கு , அதிகாரம் அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கிலும் ஒலிக்க வேண்டும். அது வரை நான் ஓயப்போவதில்லை! அது தான் என் உள்ளத்தில் எதிர் ஒலித்துக்கொண்டு இருந்தது!   ஆனால் நான் மிகத் தவறு செய்தது இப்ப தான் புரிகிறது. நான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள், அவளுக்கும் ஆசைகள் இருக்கும் என்பதை மறந்தே விட்டேன்.   அந்தஸ்துக்கு ஒரு அழகிய மனைவி, கொலு பொம்மைமாதிரி இருப்பது வாழ்வு அல்ல என்பதை நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் குடும்பத்தில் இருந்து மனத்தளவில் மிகத் தூரவே இருந்துவிட்டேன். ஆமாம், முதல் இரவு நாம் சந்திக்கும் பொழுது அவள் எத்தனை எதிர்பார்ப்புடன் இருந்தாள் என்பதை, இப்ப தான் அவளின் நாட்குறிப்பில் இருந்து அறிகிறேன்.   'என் கணவர் வந்ததும் ஆரத்தழுவி அன்பு செலுத்துவார் என்று எத்தனையோ கனவு கண்டேன். நாம் முதல் முதல் தனிய ஒரு அறையில் சந்திக்கிறோம். பகல் முழுவதும் திருமண கொண்டாட்டம், நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்கள் என கழிந்தது. இரவு ஆனதும் ஆனந்தமாய் மகிழ்திருக்கலாம் என்று ஏங்கி நின்றேன். ஆனால் அவரோ, தன் நிறுவனம் பற்றியும், அதில் தான் சம்பள உயர்வுடன் அடுத்த மாதம் புது பதவிக்கு போவதாகவும், நான் வந்த ராசி வேலை செய்வதாகவும் புகழ்ந்தாரே தவிர, இது எம் இருவரின் முதல் இரவு என்பதை எனோ மறந்து விட்டார். என்ன செய்வது கணவன் கதை கதைத்தான். கண் வெட்டாமல் அவனை நான் ரசித்து கொண்டு இருந்தேன். அவரின் பேச்சின் வலி கூட எனக்கு வலிக்வில்லை. அவரை கட்டிப் பிடிக்கும் தைரியம் எனக்கில்லை. மெல்ல வாய்திறந்து, நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னேன். அவரோ எல்லாம் தன் பதவி தந்த அழகு என்றார்'. என்று குறிப்பிட்டு இருந்தார்!   எனக்கு அவளை மாதிரியே அழகிய பெண்குழந்தை மூன்று ஆண்டுகள் கழித்து பிறந்தது. அவளுக்கு அது ஒரு ஆறுதல், ஆனால் நானோ இன்னும் என் வேலையில் கடுமையாகவும், பதவி, அதிகார மோகம் அபின் மாதிரியும் என்னை அதில் அடிமையாக்கி விட்டதை நான் உணரவே இல்லை. அவள் பலதடவை தனக்கு மகன் வேண்டும் என்று கூறியதையே பொருட்படுத்தாமல், எல்லாம் என் முழு நோக்கம் அடையட்டும் என்று தள்ளி கடத்திவிட்டேன் . அது அவளை எவ்வளவு பாதிக்கும் என்று யோசிக்கவே இல்லை. நாளடைவில் நான் எனக்கே அந்நியனாகி விட்டேன்!   எட்டு ஆண்டுகளுக்கு பின் அவள் மனநிலை பாதித்து தன்னையே இழக்க தொடங்கிவிட்டாள். அவள் உடல்நிலை உருக்குலைய தொடங்கியது. என் மனைவி என்று நான் பெருமை பட்ட அழகு இப்ப அவளிடம் இல்லை. ஆனால் நான் இப்ப அந்த நிறுவனத்தின் தலைமை பதவியில் மிகப்பெரிய வசதிகளுடன், அதிகாரத்துடன் இருக்கிறேன். வைத்தியர் என்னிடம் வந்து அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவளுக்கு நல்ல கணவனாக, அவளின் விருப்பு வெறுப்பு அறிந்து நெருக்கமாக அன்பு காட்டினால், அவள் விரைவில் குணமடைவார் என்றார்.   இப்ப என் பதவி, பொறுப்பு அதிகாரம் எல்லாம் மிக உச்சியில். எனக்கு நேரம் கிடைப்பதே குறைந்து விட்டது, ஏன், என்னையே இப்ப கவனிக்க முடியாத நிலையாகி விட்டது. அது தான் நான் இப்ப மாடியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் மாடியில் இருந்த கதிரையில் சாய்ந்து அயர்ந்துவிட்டேன். என் கன்னத்தை யாரோ தடவுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டு கண்விழித்தேன். என் ஐந்து வயது மகள் தான். நான் விழித்ததும் ஒரு முத்தம் தந்தார், மகளின் கண்ணில் கண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது. அந்த கண்ணீர் பல கேள்விகளை என் மேல் கேட்டுக் கொண்டு இருந்தது. நான் என்றுமே நல்ல தந்தையாக மகளுக்கு இருந்தது இல்லை . ஆக இந்த ஐந்து ஆண்டும் தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த உடைகள், தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த விளையாட்டு சாமான்கள் இப்படி அளவற்று கொடுத்தேனே தவிர, ஒரு சொட்டு அன்பாக பேசியோ, விளையாடவோ, அணைக்கவோ இல்லை. எல்லாம் என் மனக்கண்ணில் ஓடிக்கொண்டு இருந்தது.   நான் என் மகளை தூக்கினேன். அவரின் கண்ணீரை துடைத்தேன். மகள் என்னை யாரோ ஒருவன் போல பார்த்தார். பின் ' அப்பா , அம்மா வருவாரா ?' என்று கேட்டார். நான் அவரை கட்டிப்பிடித்து ' கட்டாயம் வருவார், விடியல் பிறக்கும்' என்றேன். விடியல் என் கையில் தான் என்பதை, காலம் கடந்தாலும், மகளின் பார்வை, கண்ணீர் உணர்த்தியது. மகள் அதற்குப் பின் என் கையில் உறங்கிவிட்டார்.   இப்ப இருளாகிவிட்டது. அந்த இருண்ட வானில் அழகிய நிலவை பார்த்தேன். அது என் மனைவியின் முகம் மாதிரி எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக புறக்கணித்த என் வெறுமையை நிரப்பும் காலம் வந்துவிட்டது என்று நினைத்தேன். ஒரு தாள் எடுத்து, நான் இதுவரை முயன்று பெற்ற அந்த தலைமை பதவிக்கு விடை கொடுக்க, அதில் இருந்து விலகும் ராஜினாமா கடிதம் எழுதினேன், அதில் பிற்குறிப்பாக நான் அங்கேயே ஒரு சாதாரண ஊழியராக வேலை செய்ய விருப்பம் என்றும் குறிப்பிட்டேன், எனக்கு இப்ப மன நிம்மதி, மகளை கட்டிலில் கிடத்திவிட்டு, படுத்து இருந்த மனைவியின் பக்கத்தில் போனேன். குனிந்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து, அவளின் தலையை என் மடியில் கிடத்தினேன், அவளின் கண்ணில் இருந்து அந்தக் கண்ணீர் என் மடியை நனைத்தது. அவளின் கையை வருடியபடி நான் என்றும் உனக்கு மட்டுமே கணவன், என் பதவியை, அந்த அதிகார மோகத்தை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கத்தியே விட்டேன்!     "விடியல் பிறக்கிறது, காற்றில் அதன் குரல் கேட்கிறது என் உலகம் விழிக்கிறது, மண்டியிட்டு உன்னைச் சந்திக்கிறேன் உன் மடியில் என் ஆத்மா இனி உறங்கட்டும் எம் வாழ்வு உன் கையில் இனிமையாகட்டும்!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • நான் சொன்னது சத வீதத்தை அல்ல. நோட்டாவுக்கு கூட தனியாக சதவீதம் போட்ட தற்ஸ்தமிழ் அண்ணன் கட்சியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதை. வியஜ பிரபாகரன், செளமியா முன்னே வருவது போல் ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டார்கள்🤣. போன சட்ட மன்றத்தேர்தலில் தமிழ் நாட்டில் 3 வது பெரிய கட்சி…. இப்போ 8 தொகுதியில் 3வது பெரிய கட்சி🤣.
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.