Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைக்கிளில் சென்று மீன் வியாபாரம் செய்யும் பெண்மணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலாபம் திண்ணனூரான்

 

இவ் உலகத்தில் அதிகமாக வேதனைக்கும் சோதனைக்கும் உள்ளாகுபவர்கள் பெண்கள் தான். அவ்வேதனையையும் சோதனையையும் முறியடித்து வாழ்பவர்களையே சமுதாயம் புதுமை பெண் என்கின்றது. அவ்வாறான ஒரு புதுமைப் பெண்ணே கொழும்பு மட்டக்குளியில் வசிக்கும் டி. பரீதா. 

 

நான்கு பெண் பிள்ளைகளினதும் ஒரு ஆண் பிள்ளையினதும் தாயான பரீதா,  கொழும்பின் வடபகுதியில் பல  பிரதேசங்களில் சைக்கிளில் அலைந்து மீன் வியாபாரம் செய்கிறார். 

99DSC05208.jpg

44 வயதான பரீதா, கடந்த ஆறு வருடங்களாக துணிவுடன் மீன் வர்த்தகம் செய்து வருகிறார். தனது இந்த உழைப்பின் மூலமாகவே தனது ஐந்து குழந்தைகளையும் அவர் கல்வி கற்க வைக்கின்றார். 
'எனது பிள்ளைகள் வருங்காலத்தில் கல்வி கற்று பெரும் உத்தியோகங்களை பெற்று வளமாக வாழவேண்டும். என்னைப் போன்று வெயிலிலும் மழையிலும் திரிந்து கஷ்டப்படக் கூடாது என்கிறார் பரீதா. 

 

அவரின் தமிழ் பேச்சு நடை கேட்க  இனிமையாக இருக்கும். கணீரென்ற குரலில் இலக்கிய நயத்துடன் மிகத் தெளிவாக சொற்களை தொகுத்து அழகாக தமிழில் உரையாடுகின்றார். இவர் கல்வி கற்றது மோதரவிலுள்ள ஒரு பாடசாலையில்.  க.பொ.தராதரம் சாதாரணம் வரையே கல்வி கற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

99DSC05209.jpg

'பலரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீன் வியாபாரத்தில் இறங்கினேன். இதற்கு முன்னர் எவ்வித வியாபாரமும் செய்து எனக்குப் பழக்கமிருக்கவில்லை. வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல பணம் தேவை. திடீரென தோன்றிய எண்ணத்தின் படி மீன் வியாபாரத்தில் இறங்கினேன். 

 

முன்னர் புறக்கோட்டைக்குச் சென்று, மீன் சந்தையில் மீன்களை வாங்கி, செய்து சைக்கிளில் கொண்டு சென்றேன். அவற்றை பல வீதிகளில் வீடு வீடாக சென்று மீன் விற்க ஆரம்பித்தேன். சிறிது காலத்தில் எனக்கென வாடிக்கையாளர்களை தேடிக் கொண்டேன். 

 

எனது வாழ்க்கையாளர்களின் மனம் அறிந்து, அவர்களின் தேவையை உணர்ந்து மீன் விற்பனையை தொடர்ந்தேன். அதில் வெற்றியும் கண்டேன். எந்தவொரு வர்த்தகமும் தலை நிமிர நாம் எமது வாடிக்கையாளர்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளரின் மனம் நோகும்படி வார்த்தைகளை வெளியிட்டுவிட்டால், மீண்டும் அவர் என்னிடம் மீன் வாங்க வரமாட்டார். எனது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவதற்கான தரமான மீன்களையே நான் வாங்கி விற்பேன். இந்த ஆறு வருடங்களும் எனது குடும்பத்தையும் இத்தொழிலே வாழ வைக்கிறது' என்கிறார் பரீதா. 

99DSC05211.jpg

தொடர்ந்து எமக்கு அவர் தனது வியாபாரம் பற்றி விளக்குகையில், எனக்கான வாடிக்கையாளர்களாக நான் சேமித்து வைத்திருப்பது குடும்பத் தலைவிகளேயாவர். இக்குடும்பத் தலைவிகளுக்கு ஒரு குடும்ப பெண்ணின் கஷ்ட நஷ்டங்கள் நன்கு தெரியும். ஒவ்வொரு குடும்பப் பெண்களும் நல்ல அனுபவசாலிகள் இவர்கள் எனக்கு உதவும் வகையிலேயே மீன்களை என்னிடமிருந்து வாங்குகின்றனர். இதனால் நானும் மீன்களை அதிகளவில் இலாபம் வைத்து  விற்பதில்லை. 

 

தினமும் காலை 4 மணிக்கு நித்திரை விட்டெழும்பி எமது பிள்ளைகளுக்கு காலை உணவையும் பகல் உணவையும் தயாரித்து வைத்ததன் பின்னர் பேலியாகொடை மீன் சந்தைக்கு மீன் கொள்முதல் செய்வதற்காக பயணமாவேன். இச்சந்தையின் மொத்த வியாபாரிகளிடம் தினமும் எட்டு கிலோ முதல் பத்து கிலோ வரையில் கொள்முதல் செய்வேன். சில விசேட வைபவங்களையொட்டிய தினத்தில் மீன் கொள்முதல் எடை அதிகரிக்கவும் செய்யும். காலை 9 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை மீன் விற்பனையில் ஈடுபடுவேன்.  மட்டக்குளி, மோதர, சமிட்புர, கிம்புலா என பிரதேங்களிலேயே நான் மீன் விற்பனையை ஆறு வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றேன். இப்பகுதிகளிலேயே எனக்கான வாடிக்கையாளர்கள் வசிக்கின்றனர். 

 

99DSC05212.jpg
வெள்ளிக்கிழமை மற்றும் நோன்பு காலத்தில் நான்  மீன் வியாபாரத்தை மேற்கொள்வதில்லை. நான் நான்கு தடவைகள் சவூதி, ஜோர்தான், குவைத் நாடுகளுக்கு பணிப் பெண்ணாக தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தேன். இம்மூன்று நாடுகளிலும் முறையாக சம்பளம் வழங்காமையினால் ஒரே மாதத்தில் மீண்டும் நாடு திரும்பிவிட்டேன்' என்கிறார் பரீதா. 

இத்தொழிலின் பிரச்சினை இல்லையா எனக்கேட்டோம; எவ்வித பிரச்சினையும் இல்லை. எமது வியாபார  நடவடிக்கைகள் அனைத்தும் மாலை இரண்டு மணியுடன் முடிவடைந்துவிடும். அதன் பின்னர் நானும் ஏனைய பெண்களைப் போன்று குடும்பப் பெண்ணாக முற்றிலும் மாறிவிடுவேன். ஆண்கள் தான் அனைத்து தொழில்களையும் புரிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இன்று உடைக்கப்பட்டுவிட்டது. பெண்களுக்கு எவ்வளவோ சுயதொழில்கள் உள்ளன. முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்' என்றார் பரீதா, நம்பிக்கையுடன். 

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=99&display=0#sthash.d9PP5HYI.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

செய்யும் தொழிலே தெய்வம் என்பது பரீதாவுக்காக எழுதப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

-----

இதற்கு முன்னர் எவ்வித வியாபாரமும் செய்து எனக்குப் பழக்கமிருக்கவில்லை. வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல பணம் தேவை. திடீரென தோன்றிய எண்ணத்தின் படி மீன் வியாபாரத்தில் இறங்கினேன். 

------

தினமும் காலை 4 மணிக்கு நித்திரை விட்டெழும்பி எமது பிள்ளைகளுக்கு காலை உணவையும் பகல் உணவையும் தயாரித்து வைத்ததன் பின்னர் பேலியாகொடை மீன் சந்தைக்கு மீன் கொள்முதல் செய்வதற்காக பயணமாவேன்.

-----

 

பரீதாவை நினைக்க.... பாவமாகவும், பெருமையாகவும் இருக்கின்றது.

இவரின் கணவரை பற்றிய குறிப்புகளை.... செய்தியில் காணவில்லை.

அல்லது... பரீதா உழைத்துக் கொண்டு வர, வீட்டில் இருந்து சாப்பிடுகின்றாரா....

  • கருத்துக்கள உறவுகள்

அவரது துணிச்சலுக்கும் தன்னம்பிக்கைக்கும் பாராட்டுக்கள்.

பெண்களின் திறமைகள் மிகவும் பாராட்டுக்குரியவை.  பொறுப்பு என வந்துவிட்டால் தயங்கமாட்டார்கள்.  அந்தவகையில் இவருக்கும் ஏதாவது நெருக்கடி வந்திருக்கலாம்.  வேறு வழியின்றித் தொடங்கியது இப்போது இவருக்குப் பெருமையைத் தந்திருக்கிறது.  இவர் மேலும் வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளை சோதனைகள் தான் சாதனைக்கான ஏறு படிகள். வாழ்க சகோதரி.

  • கருத்துக்கள உறவுகள்

பரீதாவை விடவும் மிகவும் சிறந்த மீன் வியாபாரம் செய்யும் பெண்களை, சின்னக்கடையிலிருந்து பாசையூர் வரையும் கண்டிருக்கின்றேன்!

 

ஒரு நாள் ஒரு மீன் 'நாறிப்போச்சுப் போல கிடக்கு' எண்டு சொன்னதுக்கு.... நான் வாங்கின பேச்சு இருக்கிறதே...அப்பப்பா.. இப்ப நினைச்சாலும்...வயித்துக்குள்ள பட்டாம் பூச்சிகள் பறக்கிற மாதிரிக் கிடக்கு!

 

அவளது வாயில் ' தமிழ்' பட்ட பாடு...!

 

அண்டைக்குத் தான் எனக்குத் தெரியும்... தமிழ் மொழி எவ்வளவுக்கு வளைந்து கொடுக்கக் கூடியது எண்டு...! :lol:

 

சுயமுயற்சியால் தொழில் செய்து வாழும் 'பரீதா' ஒரு முன்னுதாரணம்! வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

பரீதாவை விடவும் மிகவும் சிறந்த மீன் வியாபாரம் செய்யும் பெண்களை, சின்னக்கடையிலிருந்து பாசையூர் வரையும் கண்டிருக்கின்றேன்!

 

ஒரு நாள் ஒரு மீன் 'நாறிப்போச்சுப் போல கிடக்கு' எண்டு சொன்னதுக்கு.... நான் வாங்கின பேச்சு இருக்கிறதே...அப்பப்பா.. இப்ப நினைச்சாலும்...வயித்துக்குள்ள பட்டாம் பூச்சிகள் பறக்கிற மாதிரிக் கிடக்கு!

 

அவளது வாயில் ' தமிழ்' பட்ட பாடு...!

 

அண்டைக்குத் தான் எனக்குத் தெரியும்... தமிழ் மொழி எவ்வளவுக்கு வளைந்து கொடுக்கக் கூடியது எண்டு...! :lol:

 

சுயமுயற்சியால் தொழில் செய்து வாழும் 'பரீதா' ஒரு முன்னுதாரணம்! வாழ்த்துக்கள்..!

 

தூய தமிழின் பெரும் பகுதியை...... நானும்,  அந்தப் பெண்களிடம் தான் கற்றேன்.

அவற்றை.... கேட்கும்  போது.... காதுக்குள் ஈயத்தை காய்ச்சி, பாச்சி விடுமால் போல் இருக்கும். :D  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மண்ணாங்கட்டி.
 
எங்கடை பருத்தித்துறை,நாகர்கோவில்,தாளையடி,ஆழியவளை பொம்புளையள் கடகம் முழுக்க மீனை நிரப்பிக்கொண்டு ஊரூராய் கால்நடையாய் நடந்து போய் மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றினதெல்லாம் ஊடகங்களுக்கு தெரியாதோ? இல்லை கோமாவோ????
 
படம் போட்டு சேக்கஸ் காட்டுறாங்கள்.

தூய தமிழின் பெரும் பகுதியை...... நானும்,  அந்தப் பெண்களிடம் தான் கற்றேன்.

அவற்றை.... கேட்கும்  போது.... காதுக்குள் ஈயத்தை காய்ச்சி, பாச்சி விடுமால் போல் இருக்கும். :D  :icon_idea:

 

இதைவிட மோசம் என்னவென்றால் நாங்கள் பள்ளிக்கூடம் போகும் மினிபஸ்சில்தான் அவர்களும் சந்தைகளில் விற்பதற்கு கூடைகளில் மீன் வாங்கிக் கொண்டு போவார்கள்.   :icon_idea:  :icon_idea:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட மோசம் என்னவென்றால் நாங்கள் பள்ளிக்கூடம் போகும் மினிபஸ்சில்தான் அவர்களும் சந்தைகளில் விற்பதற்கு கூடைகளில் மீன் வாங்கிக் கொண்டு போவார்கள்.   :icon_idea:  :icon_idea:  :icon_idea:

 

இதில் ஒரு பிழையுமில்லையே :rolleyes:

 

நீங்கள் படிக்க பஸ்சில் போனீர்கள், அவர்கள் வயிற்றுப்பிழைப்பிற்கு பயணம் செய்தார்கள்.

 

இவர் மேலும் வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அம்மா,

கொழும்பில் இந்த SLUM AREAல் பிறந்து வளர்ந்த படியால் எனக்கு நன்கு தெரியும் இந்த வாழ்க்கையை பற்றி. கடும் போதைவஸ்து பாவனையும், வன்முறையும், வறுமையும் நிறைந்த இந்த இடத்தில் நீங்கள் பிள்ளைகளின் எதிகாலத்தை நினைத்து

உழைப்பது பாரட்டத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

 

மண்ணாங்கட்டி.
 
எங்கடை பருத்தித்துறை,நாகர்கோவில்,தாளையடி,ஆழியவளை பொம்புளையள் கடகம் முழுக்க மீனை நிரப்பிக்கொண்டு ஊரூராய் கால்நடையாய் நடந்து போய் மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றினதெல்லாம் ஊடகங்களுக்கு தெரியாதோ? இல்லை கோமாவோ????
 
படம் போட்டு சேக்கஸ் காட்டுறாங்கள்.

 

 

இதில் ஒரு பிழையுமில்லையே :rolleyes:

 

நீங்கள் படிக்க பஸ்சில் போனீர்கள், அவர்கள் வயிற்றுப்பிழைப்பிற்கு பயணம் செய்தார்கள்.

 

இவர் மேலும் வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்

 

அதில் பிழை என்று சொல்லவில்லை உடையார்.  நாங்கள் வகுப்பிற்குச் செல்லும்போது நல்ல வாசத்தோடு செல்வோம்.   :)   அதைவிட அவர்களின் கைகளில், மீன்களைப் பார்த்து வாங்கும்போது ஏற்பட்ட அழுக்குகள் இருக்கும்.  அவையெல்லாம் எமது சீருடைகளிலும் சிலநேரங்களில் ஒட்டிவிடும்.  அதனைத்தான் குறிப்பிட்டேன்.   பெரிய பஸ் என்றால் பரவாயில்லை.  மினி பஸ்சுக்குள் ஆட்களையும் ஏற்றிக் கூடைகளையும் ஏற்றினால் எப்படியிருக்கும்?  

  • கருத்துக்கள உறவுகள்

 

மண்ணாங்கட்டி.
 
எங்கடை பருத்தித்துறை,நாகர்கோவில்,தாளையடி,ஆழியவளை பொம்புளையள் கடகம் முழுக்க மீனை நிரப்பிக்கொண்டு ஊரூராய் கால்நடையாய் நடந்து போய் மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றினதெல்லாம் ஊடகங்களுக்கு தெரியாதோ? இல்லை கோமாவோ????
 
படம் போட்டு சேக்கஸ் காட்டுறாங்கள்.

 

அதைவிட கொடுமை சில நேரங்களில் மினிபஸ் அவர்களை ஏத்துவதில்லை தலையில் 20லிருந்து 30 கிலே வரையான மீன் கூடையை வைத்துக்கொண்டு அச்சுவேலி சந்தையை நோக்கி ஓடும் ஓட்டம் இருக்கே..............

  • கருத்துக்கள உறவுகள்

தின்னவேலி சந்தையில் ஒருவர் மீன் விக்கிறவர்.  உதட்டுக்குச் சாயம்பூசி , பெண்கள் போன்று நடையுடை பாவணையுடன் இருப்பார். ஒரு ஆஸ்டின் 8 காரில் உதவியாளருடன் வருவார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி

 

இவர் போன்ற  தன்னம்பிக்கையுள்ள

உழைத்து  சாப்பிட  விரும்பும்  தாயக  உறவுகளை  

அதிலும் பெண்களை நாம் கவனத்தில் கொண்டு

மேலும் மேலும் முன்னேற  உதவ  வேண்டும்


 

மண்ணாங்கட்டி.
 
எங்கடை பருத்தித்துறை,நாகர்கோவில்,தாளையடி,ஆழியவளை பொம்புளையள் கடகம் முழுக்க மீனை நிரப்பிக்கொண்டு ஊரூராய் கால்நடையாய் நடந்து போய் மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றினதெல்லாம் ஊடகங்களுக்கு தெரியாதோ? இல்லை கோமாவோ????
 
படம் போட்டு சேக்கஸ் காட்டுறாங்கள்.

 

 

 

உண்மை  தான் அண்ணா

ஆனால்  இன்று எமது இனம்  உள்ளநிலையில்

சோடை போய்விடாது

எமது இனத்தின் அடையாளத்தை  காக்கும் இவர்களின் முன் மாதிரியை  வரவேற்கவேண்டிய  காலம் இது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.