Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறினாராம் அனந்தியை தமிழரசுக் கட்சி கட்சியில் இருந்து இடை நிறுத்தியுள்ளது

Featured Replies

இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கும் அனந்தி அக்காவின் அரசியலுக்குமிடையில் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நீண்ட கால அரசியல் செய்யக்கூடிய சந்தர்ப்பம் அனந்தி அக்காவிற்கு கிடையாது என்பதே எனது அபிப்பிராயம்.

 

இந்த நிலையில் மாற்று ஏற்பாடொன்றுக்கு அனந்தி அக்கா செல்வது அவசியமாகின்றது.

  • Replies 56
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்.. மாவை.. போன்றவர்கள்.. தமிழரசுக் கட்சி்யை தேசிய தலைவரால் உருப்படுத்தப்பட்ட  உதித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற  அமைப்புக்குள் தங்களை தக்க வைத்து..  நெடுநாளைக்கு  தமிழ் மக்களை ஏமாற்றலாம்   என்று நினைக்கிறார்கள்.

 

இதே தமிழரசுக் கட்சியினர்  எனி மேற்கு நாடுகளுக்கு வந்தால்    அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இவற்றிற்கு  பதில் சொல்லும் வகைக்கு மக்கள் நடந்து கொண்டால்   அன்றி.. இந்த பழைய குட்டையில்  ஊறிய பழைய மட்டைகள் திருந்தாது.

 

அனந்தி அக்கா எந்த மன்னிப்பும் கேட்காமல்.. இந்தக் கட்சியை விட்டு விலகி.. சுயேட்சையாக தன்னை மக்கள் முன் நிறுத்தலாம். தனக்கு ஆதரவு தரும் சக்திகளோடு சேர்ந்து இயங்கலாம்.

 

காலம்.. ஒரு தடவை மீளும். அப்போது இந்தக் கிழடுகளுக்கு நல்ல அரசியல் பாடத்தை  மக்கள் புகட்டுவார்கள்.

 

இங்கின சிலர் மாத்தையா விவகாரத்தையும்.. இதனையும்   ஒப்பிடுகிறார்கள்.... அவர்களுக்கு அந்தளவு தான் அறிவு. :):icon_idea:

 

Sampanthan polity interdicts Ananthy Sasitharan from ITAK

 

[TamilNet, Saturday, 17 January 2015, 16:54 GMT]

 

The Jaffna District General Secretary of Ilangkai Thamizh Arasuk Kadchi (ITAK) K. Thurairasasingam has sent a registered letter to Ms Ananthy Sasitharan, the popularly elected provincial councillor in the North, stating that she had been interdicted from the ITAK for having acted against the decision of the ITAK to support Maithiripala Sirisena in the Sri Lankan Presidential Election, informed TNA sources in Jaffna said. Ms Sasitharan has ‘violated’ the party discipline by issuing statements, conducting a press conference and by making opinion contrary to what the party had decided, the letter dated 11 January 2015, states.

The interdiction affects Ms Sasitharan's membership in the ITAK and its central executive committee, the letter further said adding that she will soon receive the charge sheet against her.

However, the accusations were baseless on procedural grounds, the TNA sources further said.

Mr Thurairasasingam is aligned with R. Sampanthan and M.A. Sumanthiran of the ITAK.

In the meantime, ITAK Youth Wing leader VS Sivakaran, in a statement issued on Friday said that a section was conspiring against the Tamil national activists with a hidden motive of unseating the activists, who are not prepared to compromise the fundamental concepts of Tamil Sovereignty (thaayakam), Nationhood (theasiyam) and the Right to Self-Determination (thannaadchi).

Senior ITAK Central Committee Member and former UN consultant Ma'ravan-pulavu K. Sachithananthan addressed the press in Jaffna before the presidential election together with Mr Sivakaran and Ms Ananthy, clarifying their position on the SL presidential election.

The press conference was convened after the ITAK leader and parliamentarian Mavai Senathirajah had threatened Ms Ananthy to resign from the ITAK after her interview to the BBC Tamil Service and a Canadian Tamil radio.

Edited by nedukkalapoovan

புது வருடம் பிறந்ததில் இருந்து நல்ல செய்திகளாகவே வருகின்றன . :icon_mrgreen:

இன்னும் இருக்கு . :o

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்  தமிழீழம் காண்பது..  தமிழன் ஒற்றுமையாக நிற்பது.. தமிழன் வேறுபாடுகள்  மறந்து செயற்படுவது.. தமிழன்  தன்  உரிமைக்காக..  நீதிக்காக  உழைப்பது.. இங்கின வரும்.. முன்னாள்  ஆயுதக் குழு பாசிசவாதிகளுக்கு...  கேடான செய்தி. இதற்கு எதிர்மறையான சம்பந்தன்.. சுமந்திரன் நடவடிக்கைகள்.. அவர்களுக்கு  இனிப்பதில்.... ஒன்றும் வியப்பில்லை. பாசிச எண்ணங்களோடு  வளர்ந்த கூட்டம்.. சாகும்  வரை அதி்ல்  இருந்து மீளாதுகள்    என்பதற்கு யாழில்..   ஒரு 5.. 6   பேர்  உதாரணம். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் புலியை விட்டுப்போபட்டு வெளியில போய் அடி படுங்கோ புண்ணியமாக போகும்.

சொந்த மக்களை போராட போன போராளிகளை காட்டுமிராண்டிதனமாக போட்டுதள்ளும் போது விசில் அடித்தவர்கள் முள்ளிவாய்காளுக்கு பிறகு வரும் விடிவையும் சமாதானத்தையும் குழப்பநினைப்பதில் வியப்பில்லை .

இதற்குள் ஒற்றுமை பற்றி வேறு :(  

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு உங்களுக்கு ஜனநாயகம் எண்டால் என்னெ என்றே புரியவில்லை.

ரவிகரன் என்று ஒருவர் இருக்கிறார். மாகாணசபை உறுப்பினர். மைத்திரி ஆதரவு நிலையில் தனக்கு உடன்பாடில்லை என்று அறிக்கைவிட்டார். ஆனால் அத்தோடு தன் நடவடிக்கையை நிறுத்தி விட்டார்.

முகாவின் பசீர் சேகுதாவூத். பிரதி அமைச்சர். கட்சி விலகும் முடிவை எடுக்கும் வரை தடுக்கப் பார்த்தார். முடியாத போது எனக்கு உடன்பாடில்லை என அறிக்கை மூலம் சொன்னார். தேர்தல் வேலையும் செய்யவில்லை.

ஆனால் இவ்விருவரும் கட்சியின் முடிவுக்கு நேர்மாறாக முடிவை எடுத்து, அதை பத்திரிகையளரை கூட்டிச் சொல்லி, மக்களை கட்சி எடுத்த முடிவுக்கு விரோதமாக போகும் படி கேட்கவில்லை.

அனந்தி மட்டுமே அப்படிச்செய்தார். இவரை இப்படிச் செய்ய வைக்க புலம் பெயர் யாவாரிகள் சிலருக்கு ( தமிழ் நெட்) மகிந்த பணம் கொடுத்ததாயும் பேச்சடிபடுகிறது. சச்சியுடன் சேர்ந்தது இன்னும் சந்தேகப்பட வைக்கிறது.

இவ்வாறு தவறான வியாபார பேர்வழிகளின் சொல்லுக்கு ஆடும் ஒருவரை கட்சியில் வைத்திருந்தால் முழுகட்சியுமே அழிந்துவிடும்.

ஒரு துளி விசம் போல.

அனந்தி சார் கட்சி 2009 முதல் இதே அரசியலையே செய்கிறது. இது அவவுக்கு பிடிக்காவிடின் விலக வேண்டியதுதானே?

கடைசியாக வடக்கு மாகாணசபையில் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு எதிர்கட்சிகள் கூட ஆதரவாக வாக்களிக்க, ஆனந்தியும் சிவாஜிலிங்கமும் நடுநிலை வகித்தனர்.

இவர்கள் தொடர்ந்து குழப்பம் செய்தபடியே இருக்கின்றார்கள். உட்கட்சிக் கூட்டங்களில் பேச வேண்டிய விடயங்களை பொதுவில் பேசிக் கொண்டு திரிகின்றனர். புலம்பெயர் அமைப்புக்களின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்ற இப்படியானவர்களை கட்சியை விட்டு தயங்காது நீக்க வேண்டும்.

அவர்கள் தனிக்கட்சி தொடங்கலாம். கஜேந்திரனோடு சேரலாம். ஏதாவது ஒரு முடிவை எடுக்கலாம்.

ஆனால் உள்ளே இருந்தபடி வெளியாரின் நிகழ்ச்சி நிரலின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதும், மகிந்தவிற்கு சார்பாக நடந்து கொள்வதையும் அனுமதிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த  இயக்க ஆட்களையே கொன்று புதைத்த பாசிசவாதிகள்.. முள்ளிவாய்க்கால்.. பற்றி பேசுவது கொடுமை.

 

அனந்தி.. காணாமல் போன மக்களின் சார்ப்பாக குரல் கொடுக்க  தமிழரசுக் கட்சியில்  இடமில்லாமல்  இருக்கலாம்... தமிழ் தேசியக் கூட்டமைப்பில்  அதற்கு இடமுண்டு.  தமிழரசுக் கட்சி   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு  உடன்பட முடியாது என்றால்.. அது கூட்டமைப்பை விட்டு விலகி.... தனது பாரம்பரிய சிங்கள பேரின தேசிய சார்பு அரசியலை முன்னெடுக்கலாம். அதற்கு    தடைகிடையாது. தமிழ் தேசியக்  கூட்டமைப்புக்குள்  இருந்து கொண்டு   தமிழரசுக் கட்சி கிழவர்கள்.... தமிழ் தேசியம்.. தன்னாட்சி.. சுயநிர்ணயம்.. இவற்றை நிர்மூலமாக்க  அனுமதிக்க முடியாது.  இதற்காக.. இந்தக் கிழவர்களின் பிள்ளைகள் போராடவில்லை. சாகவில்லை. மக்களும்  போராளிகளுமே போராடினர்... செத்து மடிந்தனர். அதனை இந்த கிழவர்கள் சிங்களவர்களோடு கூட இருந்து வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர். இன்று அதனை நியாயப்படுத்த.. கடும்போக்கு.. ஈவிரக்கமற்ற.. சர்வாதிகார.. முத்திரைகளை ஒட்டி சிங்கள.. இந்திய எஜமானர்களை குசிப்படுத்த முனைகின்றனர். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மீரா உங்களிடம் சில கேள்விகள்,

லண்டனில் வாழும் சுரேஸ் எம்பியின் சகோதரா நீங்கள்?

அனந்தியை வைத்து தமிழரசுக்கட்சியில் பிரிவினை வளர்ப்பது.

சுரேசின் மண்டையன் குழு நடவடிக்கைகளை மன்னிக்க வேண்டும் என்று எழுதுவது.

சர்வேஸ்வரன் (தம்பி) மாகாண அமைச்சராக வேண்டும் என்றும் எழுதியதாக நியாபகம்.

எல்லா புள்ளிகளையும் இணைக்கும் போது - இந்த சந்தேகம் எழுந்தது.

தவறாயும் இருக்கலாம். அப்படியாயின் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

மீரா உங்களிடம் சில கேள்விகள்,

லண்டனில் வாழும் சுரேஸ் எம்பியின் சகோதரா நீங்கள்?

அனந்தியை வைத்து தமிழரசுக்கட்சியில் பிரிவினை வளர்ப்பது.

சுரேசின் மண்டையன் குழு நடவடிக்கைகளை மன்னிக்க வேண்டும் என்று எழுதுவது.

சர்வேஸ்வரன் (தம்பி) மாகாண அமைச்சராக வேண்டும் என்றும் எழுதியதாக நியாபகம்.

எல்லா புள்ளிகளையும் இணைக்கும் போது - இந்த சந்தேகம் எழுந்தது.

தவறாயும் இருக்கலாம். அப்படியாயின் மன்னிக்கவும்.

நான் யாரென நான் யாழில் இணைந்த காலப்பகுதியிலிருந்தவர்களுக்கு தெரியும். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். நான் அனந்தியை வைத்து பிரிவினையை வளர்க்கவில்லை. சர்வேஸ்வரன் அமைச்சராக வேண்டுமென எழுதிய ஞாபகமில்லை.

ஐனநாயகத்தின் தொடராக

பேச்சுரிமை

வாக்குரிமை...  என்பன உண்டு

அதன்படி அவரது கட்சிக்குள் இருந்தபடியே தனது நிலையைச்சொல்லவும்

அது தப்பென்றால்

கட்சி  அதன் உறுப்பினரது வாக்குரிமையைப்பயன்படுத்தித்தான் விலத்தமுடியும்

இரண்டு பேர் முடிவெடுத்தல்ல...

இங்கு அது நடைமுறைப்படுத்தப்படவில்லை

தப்பான ஆரம்பம் என்பதே எனது கருத்து...

மக்களின் தேர்வு அவர்.

ஆனால்முடிவு எடுத்தவர்கள் அதைக்கவனத்தில் கொள்ளவே இல்லை..

 

விசுகு அரசியல் கட்சிகளுக்கென்று கொள்கைகள் உண்டு. ஆனந்திக்கு கட்சி முடிவு பிடிக்கவில்லையென்றால் அவர் கட்சி தலைமை மீதான அதிருப்தியை உட்கட்சி கூட்டங்களில் தான் தெரிவிக்க வேண்டும். இதை விடுத்து தனி கூட்டம் போடுவதும் புலம்பெயர் பேர்வழிகளின் சொல் கேட்டு நடப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இவரை போல இன்னும் நாலு பேர் தங்கள் இஷ்டப்படி கூட்டம் போட வெளிக்கிட்டால் என்ன செய்வது? 

ஒவ்வொரு சின்ன சின்ன முடிவுக்கும் கட்சியை கூட்டத்தை கூட்டி வாக்களிப்பு நடத்தமுடியுமா? அதுக்குத்தான் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவுப்படி கட்சிபதவிகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வார்கள் அந்த உறுப்பினர் எடுக்கும் அதுவும் குறிப்பாக செயலாளர், தலைவர் போன்றோர் முடிவெடுத்தால் அது கட்சியின் முடிவுதான்.

 

அனந்தி மீது நடவடிக்கை எடுப்பதுக்காக கட்சிக்கூட்டத்தை கூட்டவேண்டும் என்றில்லை கட்சியின் செயலாளரே போதும். 

 

இது சரியா தவறா என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்திருக்கும் அதை விவாதிக்கவும் முடியும்.

 

 அனால் கட்சியில் ஓரிருவர் தனிப்பட முடிவெடுப்பதாக சொல்வது பொருத்தமில்லாதது. அனந்திக்கு கட்சிக்குள் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் செயலாளரையும் மாற்ற முடியும். 

 

இதுக்கு மக்கள் ஆதரவிருக்க இல்லையா என்பது பிரிதொரு விடயம், அது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தெரிந்துவிடும். 

 

அனந்தி அவர்களும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெல்வது பல விமர்சங்களை அடக்க முடியும். இதுக்கு கூட்டமைப்பு இடம் தரவில்லையாயின் தனித்து எண்டாலும் போட்டியிடமுடியும் அதுக்கு யாரிடமும் அனுமதி பெறவேண்டிய தேவையும் இல்லை.

 

இல்லை அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற கட்சி அதிகாரமில்லை அவரை விட்டுப்போட்டு கட்சி தலைவர் வெளியேறவேண்டும் என்பதெல்லாம் விதண்டாவாதம் சரிவரப்போவதும் இல்லை.

 

கூட்டமைப்பில் பல கட்சிகளை சேந்தவர்கள் இருக்கிறார்கள் அனைவரையும் திருப்திப்படுத்துவது கடினம்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் கைங்கரியத்தை தமிழரசுக் கட்சியின் சம்பந்தன்  தரப்பு 2009 மேக்குப் பின்னிருந்தே ஆரம்பித்துவிட்டது. கடைசியில்... இருந்த 22 பாராளுமன்ற  உறுப்பினர்கள்...   என்பதை 15..   பின் 14 ஆக்கிக் கொண்டது தான் மிச்சம்.

 

எனி அது.. 10   குக்கும் குறைவானால் கூட ஆச்சரியப்படத் தேவையில்லை. தமிழன் பலவீனமாகனும் என்பதே   யாழில் சம்பந்தன்    கோஷ்டிக்கு துதிபாடுவோரின் உள்ளார்ந்த நோக்கமாகும்.

 

கூட்டமைப்பில்....   தமிழரசுக் கட்சியின் எதேட்சதிகாரம்......    இப்படியே வளர்ந்துக்கிட்டு போனால்.. பல பியசேனாக்களை உருவாக்கிய பெருமை சம்பந்தனை மாவையை வந்து சேரும். அது தான்  இப்ப யாழில் சிலரின் விருப்பமும் கூட.   தமிழன் சின்னாபின்னமாகி பலவீனப்படனும்..    தாங்க  அதில் குளிர்காயனும்.   அதுக்காக சம்பந்தனை  ராஜா என்றும் புகழ    இவர்கள் தயார். :icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து வறுமையால் தனிப்பட்டவர்கள் மீதான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்து விட்டீர்களா?

நீங்கள் தோற்றவர்களின் பின்னாலா தமிழ் மக்களை தொடர்ந்தும் போகச்சொல்கிறீர்கள்?

மக்கள் போக மாட்டார்கள். இனியும் போக மாட்டார்கள்.

கூட்டமைப்பின் தலைவர்கள் தோற்றவர்கள் அல்ல, வென்றவர்கள் - மக்கள் ஆதரவோடு வென்றவர்கள். புலிகளால் தற்கொலை தாக்குதல் செய்தும் அகற்ற முடியாத கோத்தபாயவை வாக்கு வலிமையால் (அனந்தி மற்றும் சிவாஜிலிங்கம் போன்றவர்களின் துரோக செயற்பாடுகளுக்கு மத்தியிலும்) அகற்றியவர்கள். போர் காலத்துக்கு பின்னான கூட்டமைப்பின் பாதை வெற்றியான பாதை. மக்கள் அவர்களுக்கு பின் அணி திரண்டு நிற்கிறார்கள்.

 

விடுதலைப்புலிகள் தோற்றார்களா இல்லை தோற்கடிக்கப்பட்டார்களா?
 
வென்றவர்கள்தான் ..... தேர்தலில் மட்டும்.
றோட்டு போடுவதற்கும்....றோட்டில் இருக்கும் கிடங்கு மூடுவதற்கும் முதுபெரும் தலைவர்கள் கட்சி தேவையா??
60 வருடகாலமாக என்னத்தை வென்றெடுத்தார்கள்? ஏதாவது ஒரு அரசியல் சானசமாற்றத்தை கூறுங்கள் பார்க்கலாம்.
விடுதலப்புலிகள் காலத்திலும் மக்கள் அவர்கள் பின் தான் நின்றார்கள். அப்போது சம்பந்தர் தலைவர் பிரபாகரனுடன் அரசியல் விடயமாக கலந்துரையாடியது தங்களுக்கு நினைவில்லையோ??
 
தமிழரசுக்கட்சி/ காங்கிரஸ் கட்சி/ தமிழர் விடுதலை கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தமிழ்பிரதேசங்களில் தேனும் பாலுமா ஓடியது? அவர்களின் மேட்டுக்குடி அரசியலினால்த்தானே ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது.
  • கருத்துக்கள உறவுகள்

மீரா பதிலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்க கு.சாண்ணா. உவர் யூட் தண்ணை சுப்பிரமணியம் சுவாமி ரேஞ்சுக்கு வைச்சு எழுதித் தள்ளுறவர். எல்லாம் தனக்குத்தான்  தெரியும் பேர்வழிகளுக்கு.. ஒன்றுமே உருப்படியா தெரியாது. உவர் முந்தி புலிகள்       இருக்கேக்கையும் யாழில   இருந்தவர். அப்ப புலிப்பாட்டு. இப்ப எதிர் பாட்டு. அவ்வளவு தான்  அவருக்கு தெரிஞ்ச     அரசியல். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாம் தனகுத்தான் தெரியும் பேர்வழிகளுக்கு"

பானை ஒன்று, கேத்திலைப் பார்த்து, கறுப்போ கறுப்பு எண்டதாம் :)

இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கும் அனந்தி அக்காவின் அரசியலுக்குமிடையில் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நீண்ட கால அரசியல் செய்யக்கூடிய சந்தர்ப்பம் அனந்தி அக்காவிற்கு கிடையாது என்பதே எனது அபிப்பிராயம்.

 

இந்த நிலையில் மாற்று ஏற்பாடொன்றுக்கு அனந்தி அக்கா செல்வது அவசியமாகின்றது.

உண்மைதான்! இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிலும் அமெரிக்காவின் பணத்திலும் இயங்கும் இந்த ஆட்சியில் ஏற்கனவே இனப்படுகொலை என்ற பதம் மறைந்து கொண்டு போகின்றது.அடுத்தது போர்க்குற்றம்.இவை அனைத்துமே இல்லாமல்போய் விடும்.மீண்டும் நான் ஏற்கனவே கூறியது போல் அல்லைப்பிட்டி இன்பம் கொலைக்கு முந்திய காலத்துக்கு பின் தள்ளப்பட்டு விட்டோம் என்பது தான் உண்மை.மகிந்தவிற்கு வாக்களிக்கவில்லையே என்று வருந்தும் காலம் வந்தாலும் வரலாம். ஆனந்தியை வெளியில் விட்டதால் மக்களுக்கு தெரியாத பல விடயங்கள் வெளியில் வரலாம்.சண்டையில் போராளிகள் கொல்லப்பட்டாலும் அழிந்த இனத்துக்கு என்ன பதில் உண்டு?

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாம் தனகுத்தான் தெரியும் பேர்வழிகளுக்கு"

பானை ஒன்று, கேத்திலைப் பார்த்து, கறுப்போ கறுப்பு எண்டதாம் :)

 

அதை சட்டி மேற்கோள் காட்டி தாந்தான் கறுப்பு எணடு பெருமை பாடிச்சாம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி செயற்குழு அனந்தி அவர்களின் நடவடிக்கைக்கு விளக்கம் கோரி அதற்கான கால அவகாசம் கூட வழங்கப்பட்டு அதற்குள் அவர் சரியான விளக்கம் தர தவறின் கட்சி அவரை இடை நிறுத்தம் செய்யும்,கட்சியின் மத்திய குழு உறுப்பினருக்கு எவ்வாறு கட்சியின் கொள்கைகள் புரியாமல் போனது அல்லது கட்சி தனது முடிவு பற்றி கட்சி உறுப்பினருடன் சரியாக விவாதிக்கவில்லையா?கட்சி எதிகாலத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்காத போது இதனை ஊடகங்களுக்கு அனந்தி பகிரங்கப்படுத்துவதை விடுத்து கட்சி தரப்பிடம் பதில் கேட்டு பதில் கடிதம் அனுப்பியிருக்கலாம் (தவறாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பின்).கட்சி அதற்கு சரியான பதில் கூறாமல் எதேச்சாதிகாரமாக செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்காலாம்.

தனக்கு மக்களின் ஆதரவு இருக்கின்றது என்பதுதான் அநந்தியின் எண்ணம். அந்த எண்ணத்தில் வந்ததுதான் அவரது கருத்துக்கள். கட்சியின் பெரும்பான்மை முடிவிற்குக் கட்டுப்பட வேண்டியது உறுப்பினர்களின் கடமை.

அருமையான முடிவு யாராக  இருந்தாலும்  ஒரு  கட்டமைப்பு ..நிர்வாகம்  என்றால் அதன் கட்டுக்கோப்புக்குள்  நடக்க  வேணும்  அவர்  உணர்வாளர் ..தியாகி  என்பதுக்கு  எல்லாம்  அப்பால் ஒரு  நிர்வாக உறுப்பினரா செயல்பட  தெரியாதவர்  எப்படி மக்களை வழிநடத்துவார்  ஆகவே அனந்தின்  இடைநிறுத்தம்  சரியே ..

 

இங்கு  அவருக்கு  விழுந்த  வாக்குகள்  பற்றி  பேசுவதில் பயன்  இல்லை  வி சி ஐயாவை  விட  கூடுதல்  வாக்கு  வாங்கியவர்  தான் கஜேந்திரன்  இப்ப  நிலைமை  என்ன  வெளிநாட்டில்  உள்ளவர்கள்  ஏற்றி  விட  வெளியில்  போய்  இன்று  முகவரி  இல்லை ...

 

ஆக புலிகளின்  தலைமை  ஒரு சுப்பனை அல்லது  குப்பனை  காட்டி  இவருக்கு  வாக்கு  போடுங்க  என்று  சொன்னால்  ஏன்  எதுக்கு  என்று  கேட்காமல் வாக்கு  போடுபவர்கள்  தான் ஈழ மக்கள்  காரணம் அவர்களின் தலைமையின் தெளிவான முடிவும்  மக்கள் மேல்  உள்ள பற்றுதலும் அந்த  மக்கள் அவருக்கு  கொடுத்த  மரியாதை ..அது  தலைவருக்கு  உரிய பண்பும் கொள்கை  பிடிப்பும் ஆதலால்  மக்கள் ஆழமா  நேசித்தார்கள்  அவரை ..

 

இப்ப ஆளாளுக்கு  தலைவர்  ஆக  பார்ப்பது ...எல்லாம்  நாங்கதான்  என்று சீன்  போடுவதும்  நடக்கே  தவிர  அந்த  மக்களுக்கு  எதாவது  நல்லது செய்வது  பற்றி  சிந்தனை  குறைவா  இருக்கு .

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் தோற்றார்களா இல்லை தோற்கடிக்கப்பட்டார்களா?

ம்...

நல்ல கேள்வி.

தோற்கடிக்க படாமலும் தோற்க முடியுமா?

எதுவாக இருந்தாலும் தோற்றவர்கள் பின்னாலும் தோற்கடிக்க பட்டவர்கள் பின்னாலும் மக்கள் ஏன் இன்னும் போகவேண்டும்? அவர்கள் போக மாட்டார்கள்.

 

வென்றவர்கள்தான் ..... தேர்தலில் மட்டும்.

தேர்தலில் மட்டுமா?

கோத்தபாயவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதிலும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

புலிகள் தற்கொலை தாக்குதல் செய்தும் கோத்தபாயவை அதிகாரத்தில் இருந்து அகற்ற முடியவில்லை. மகிந்தவுக்காக தேர்தலை பகிஸ்கரிக்க வைத்து கோத்தவை அதிகாரத்துக்கு கொண்டு வருவதில் புலிகள் வெற்றி பெற்றிருந்தார்கள்.

 

றோட்டு போடுவதற்கும்....றோட்டில் இருக்கும் கிடங்கு மூடுவதற்கும் முதுபெரும் தலைவர்கள் கட்சி தேவையா??

இதற்கு தான் அரசாங்கம், அரசியல் கட்சி மற்றும் அரசியல்வாதிகள் தேவை.

றோட்டு போடுவதற்கு எத்தனை கோடிகள் முடிகிறது தெரியுமா?

எங்கே இருந்து இந்த பணம் வரும்? அரசியல்வாதிகள் தான் அதனை கொண்டு வர வேண்டும். அல்லது நீங்களா கொடுக்க போகிறீர்கள்?

றோட்டு இல்லாமல் குடிக்க தண்ணீருக்கு கூட மக்கள் படும் பாடு தெரியுமா உங்களுக்கு?

மைல் கணக்கில் மாணவர்கள் நடந்து பாடசாலைக்கு போக வேண்டி இருப்பது தெரியுமா?

 

ஏதாவது ஒரு அரசியல் சானசமாற்றத்தை கூறுங்கள் பார்க்கலாம்.

மக்களுக்கு முதலில் தேவை நாளாந்த வாழ்க்கைக்கு தேவையான உணவு, உறையுள், ரோட்டு, ரோட்டில் உள்ள கிடங்கை மூடுதல் என்பவை ஆகும்.

 

தமிழர் விடுதலை கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தமிழ்பிரதேசங்களில் தேனும் பாலுமா ஓடியது? அவர்களின் மேட்டுக்குடி அரசியலினால்த்தானே ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது.

தேனும் பாலும் ஓடும் நாடுகள் உலகில் மிகவும் குறைவு. இலங்கை பல ஆண்டுகளை கடந்தே அந்த நிலைக்கு வரும். போர்க்காலம் இதனை இன்னும் பின் தள்ளி உள்ளது.

அரசியல் என்றும் மேட்டுக்குடி மக்களுடையதே. சீனாவிலும், ரஷ்யாவிலும் கூட அப்படித்தான்.

ஆயுதப்போராட்டம் அழிவுக்கான வழி. வெற்றி பெற்ற ஆயுதப்போராட்டங்கள் மிகவும் குறைவு. இந்திய புவியியல் வல்லாதிக்க போட்டியில் பலிக்கடாக்களாக சம்மதித்த காரணத்தாலேயே தமிழரின் ஆயுதபோராட்டம் நீண்டகாலம் இடம் பெற்றது. இந்திரா காந்தி காலத்தில் நேரடியாக இந்திய மத்திய அரசுடனும், பின்னர் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளுடகவும் இந்த ஆயுத போராட்டம் இலங்கை தமிழர்களை இந்திய நலனுக்கு பலி கொடுக்கும் செயலில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
சில நாட்கள் முன்பு கிருபன் என்று இங்கிருக்கும் சக கருத்தாளர் ஒருவரை ஒரு திரியில் கேட்டேன் 
நீங்கள் பக்க சார்பாக இருப்பதாக தெரிகிறது... இல்லாவிட்டால் எல்லா திரிகளிலும் உங்கள் கருத்தை வைக்கலாமே ?
ஏன் வைப்பதில்லை என்று.
அவருடைய பதில் ..... 
திரிகள் திசை மாறி சாக்கடையாகிவிடும் ...
சாக்கடையில் கால் பதிக்க நான் விரும்புவதில்லை என்று.
 
இந்த பதிலை முதில் நான் ஏற்று கொள்ள வில்லை .... பின்பு ஓரிடத்திற்கு காரில் 2 மணிநேரம் கார் ஓட வேண்டி வந்த போது.
அந்த இரு மணி நேரத்திலும் யாழ் களம் கிருபனின் பதில்கள் பற்றி அசைபோட்டேன்.
அவருடைய பதில் உண்மை என்றே எனக்கும் பட்டது மட்டுமல்ல ...
அவருடைய நிலைபாடும் ஏற்றுகொள்ள கூடியாதாக இருக்கிறது.
இப்போது எனக்கும் சாக்கடையில் இறங்கும் எண்ணம் வருவதில்லை.
 
இங்கே பிரச்சனை 
தமிழரசு கட்சி அனந்தியை கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது.
காரணம் அவர் கட்சியின் முடிவுக்கு எதிராக இருந்தார்.
மாகாண சபை தேர்தல் வந்தபோது ......... தமிழரசு கட்சி அனந்தியை தாமே தேடி கண்டுபிடித்து கொண்டுவந்து தேர்தலில் அவர் மக்களின் பெருவாரியான விருப்பு வாக்குகளை  பெற்று கொடுத்து கட்சியின் பெயரையும் காப்பாற்றினர்.
இப்போ குரங்கு மாங்காய் இருக்கும் மாவுக்கு தாவினாலே செய்தியாக வருகிறது.
அனந்தியின் நிலைபாட்டை அவர்கள் பேட்டி எடுத்து செய்தியாக போட்டார்கள் (போட்டவிட்டலும் அவரது நிலைப்பாடு அதுதானே?)
 
இங்கே கட்சி என்ன முடிவை எடுத்தாலும் ... அதன் உறுப்பினர் எல்லோரும் கட்டு பட வேண்டும். (இது ஜெனனாயகத்திட்கு முரணானது)
நடந்து முடிந்த தேர்தலில் கூட தேர்தல் ஆணையகத்தை முற்றுகை இட சொல்லி ஆளும் சேனாதிபதி கூறியும் அதை பொலிஸ்மா அதிபரும் இராணுவ தளபதியும்  ஏற்க மறுத்தார்கள் என்று  அவர்களை புகழ்கிறார்களே தவிர. தலைவரின் முடிவை ஏற்க மறுத்தார்கள் என்று யாரும் தண்டனை கொடுக்க வில்லை.
 
ஜெனநாயக கட்சி ஒன்று தமது  உறுப்பினர்களுடன் ஆலோசித்தே ஒரு முடிவை எடுக்க வேண்டும் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்கள் அதை ஏற்றுகொள்ள வேண்டும். (இங்கே அப்படி ஏதும் நடக்கவில்லை)
 
எனது தனிபட்ட பார்வை .....
தேர்தலை புறக்கணிப்பது என்பதை கூட்டணியோ அல்லது தமிழர் சார்ந்த அரசியல் கட்சிகளோ அதன் உறுப்பினர்களோ முடிவு கொண்டிருக்க கூடாது.
தேர்தலில் மகிந்த வென்றிருப்பதே தமிழர்களுக்கு பாரிய லாபத்தை கொடுத்திருக்கும். மகிந்தவின் குடும்ப ஆட்சிக்கு எதிராக பலமான ஒரு அரசியல் கட்சி மகிந்தவோடு  கூட இருந்தவர்களால் மேல்லேளும்பிய தருணம் இது. தற்போதைய உலக சூழலில் மேற்கு நாட்டு பணக்காரர்கள் முதலீடு செய்யும்  இடமாக இலங்கை இல்லை  காரணம் முதலீட்டுக்கு போதிய அளவு உத்தரவாதம் இல்லாமை. 
இந்த இடைவெளியை சீன முதலாளிகள் தமதாக்கி இலங்கை சந்தையை அபகரித்து கொண்டனர்.
இந்த நேரம் தேர்தல் புறக்கணிப்பு மேற்கு முதலீட்டாளர்களை மேலும் கோபமடைய செய்யலாம். அதலால் தேர்தலை புறக்கணிக்காது இந்த தேர்தலால் எமக்கு ஏதும் லாபம் இல்லை எனும் ஒரு கருத்தை  மக்கள் மத்தியில் அரசியல் மூடர்கள் போல் ஒரு நாடகத்தை போட்டு வித்தைத்திருக்கலாம்......
ஆனால் அது எவளவு சாத்தியமானது?
தற்போதைய கூட்டணி தலைவர்கள் தமது வாழ்வை பதவியை காலகாலமாக தக்க வைத்து கொண்டவர்களே தவிர மக்களுக்காக அவர்களது வீட்டில் காற்றால் விழுந்த  மர தடிகளை கூட விறகாய் கொடுக்காதவர்கள். 
இவர்களுக்கு இந்தியா சொல்வது பஞ்சாமிர்தம் காரணம் அது வாழ்வை சுதிகரிககும் என்பதனால்.
இந்த நிலையில் இந்தியா ஆதரிக்க சொன்னால் ஆதரித்தே ஆகவேண்டும்.
 
பொய்யர்கள் பொய்யால் வாழ்பவர்கள் 
அவர்களுடன் நாட்டில் இருக்கும் உண்மை நிலையையோ உலகில் நடக்கும் உண்மை நிலை பற்றியோ பேசி ஒரு  முடிவை எட்ட முடியாது.
 
நடந்தது இலங்கை சேனாதிபதி தேர்தல் ...
அதன் முடிவு மக்கள் கூட்டணியை ஆதரிக்கிறார்களாம் என்று ஒரு புரளியை கிளப்பி மேலே எத்தனையோ பொய்களை சிலர் எழுதி வருகிறார்கள்.
தேர்தல் கூட்டணியை ஆதரிக்கிறீர்களா இல்லையா ? என்றா நடந்தது 
... அப்படி ஒன்று நடந்தால் ......?
பெரும்பான்மை பெற்று ஆம் என்றுதான் முடிவு வரும் ... வருவதே தமிழர்களுக்கு நன்மையையும் கூட.
மக்கள் ஆணை கொடுத்து இருக்கிறார்களாம் 
கூட்டமைப்பு ஆணையை ஏற்று நடக்கிறதாம் .........
 
இவர்களுக்கு நாட்டில் என்ன நடந்தது என்ற உண்மை துளியளவும் தேவை இல்லை. போதிய அளவில் பொய்யை கற்பனையில் வடிக்கலாம் என்பதால் கருத்துக்கு பஞ்சம்  எந்த திரியை திறந்தாலும் வரபோவதில்லை.
 
கடந்த தேர்தலின் உண்மை நிலவரம் என்ன ?
யாழ்மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை  5 29239
இதில் கூட்டணி சொன்ன மைத்திருக்கு வாக்கு போட்டவர்கள் 2 53574 
 
பெருமான்மையாக 2 75665 பேர்கள் கூட்டணியின் சொல்லை கேக்கவே இல்லை.
அதற்காக அனந்தியின் சொல்லை கேட்டு அவர்கள் புறக்கணிக்கவும் இல்லை.
 
நடந்தது இலங்கை சேனாதிபதி தேர்தல் ....
இதில் மக்கள் வாக்கு போடுவதற்கு பல நேர்வினை எதிர்வினைகள் உண்டு.
 
யாழ் மக்களின் பெரும்பான்மையினரின்  விடயத்தை மறைத்துவிட்டு ...
கொழும்பில் ஜனாதிபதியாக வந்த மைதிரியை வைத்து திரிகளை ஓட்டுவதே இவர்களின் நிலைப்பாடு.
 
ஒரு உண்மையான விவாதத்தை இங்கே செய்ய முடியாது என்பதுதான் உண்மையான உண்மை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.