Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலத்தடி நீரில் கலந்திருப்பது.... இயற்கை எண்ணை. அமெரிக்கா அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_9256.JPG

 

நிலத்தடி நீரில் கலந்திருப்பது.... இயற்கை எண்ணை. அமெரிக்க நிபுணர் அறிவிப்பு.

 

யாழ். குடாநாட்டில்.... அண்மையில் நிலத்தடி நீர் மாசு பட்டு விட்டதாகவும், அதில்... சுன்னாகம் மின் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியேற்றப் பட்ட கழிவு எண்ணை, கிணற்று நீருடன் கலந்து விட்டதாகவும் வந்த செய்திகளை... நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

 

இதனை பரிசோதிப்பதற்காக... அமெரிக்க, நோர்வே... நிபுணர்கள் சென்ற மாதம் யாழ். குடாநாட்டிற்கு வந்து.... யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் கிணற்று நீரின் மாதிரிகளை....  சேகரித்து, அமேரிக்கா கொண்டு சென்று  ஆராய்ச்சி செய்ததில், அதில் கழிவு எண்ணை இல்லை என்றும்.... நிலத்தடி நீரில் கலந்திருப்பது, இயற்கையாக நிலத்தில் இருந்து அமுக்கத்தால் வெளியெ வரும் எண்ணை என்றும் அமெரிக்க, நோர்வே நிபுணர்கள் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.

 

இதற்கிடையில்.... இந்தியாவும், இரகசியமாக, ரஷ்ய எண்ணை நிபுணர்களுடன்... இந்த நீரின் மாதிரிகளை முன்பே சோதித்துப் பார்த்ததாகவும், தங்களின் முடிவும்... அது இயற்கை எண்ணை என்று தெரிந்ததாகவும்... வடபகுதி இந்திய துணைத் தூதரக அதிகாரி இன்று தெரிவித்தார்.

 

அதனை.... ஏன், முன்பே தெரிவிக்கவில்லை என, நிருபர் ஒருவர் கேட்ட போது.... அதற்கு பதில் சொல்ல மறுத்து மேலே கையை காட்டினார்.இதனை வெளியிடக் கூடாது என்று.... இந்திய மத்திய அரசின் உத்தரவாக இருக்கலாம் என்று நினைக்க வேண்டியுள்ளது.

 

அத்துடன்.... அந்தப் பகுதிகளில்,  மத்திய கிழக்கை விட, அதிகமான எண்ணை வளம் இருப்பதாக சீனா சில வாரங்களுக்கு முன் தெரிவித்துள்ளது.

 

தமிழனின் பூமியில் எண்ணை இருப்பது இப்போது உறுதியாக தெரிந்தாலும்... அதன் பலனை அனுபவிக்கப் போவது... அமெரிக்கா, நோர்வே, இந்தியா, ரஷ்ய, சீனா இவர்களில்  யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

அண்மையில்.. ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாக சீனாவுக்கு சென்றதில்... இந்த எண்ணையை வெளியே எடுக்கும் ஒப்பந்தத்தை இரகசியமாக செய்துள்ளதாக, இந்தியா... சந்தேகம் தெரிவிக்கின்றது.

 

எது எப்படியோ... வருகின்ற நாட்களில்,  இந்த எண்ணையால், யாழ் குடாநாட்டில் பல... சர்வதேச புடுங்குப் பாடுகளை எதிர் பார்க்கலாம்.

 

நன்றி: Kaathila puu. Com.

 

முட்டாள் பயலுகள்  :)

சிறியர் மகிழ்ச்சியான செய்தி. :D 
இவங்கள் எங்கடை எண்ணெயிலை ஆட்டை போட முன்னம் நாங்கள் ஏதாவது செய்யவேண்டும்.  :o
எங்கடை கஷ்ட காலத்துக்கு மண்ணெண்ணெய் மகேஸ்வரனும் இப்ப உயிருடன் இல்லை. :(
விக்கியர் உடனடியா விரைந்து செயற்பட்டு அமெரிக்கனுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு அமெரிக்கனை எங்கடை எண்ணெயிலை ஆட்டையை போட விட்டால் விரைவில் தமிழீழம்தான்.  :D  :lol:  :icon_idea:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சிறியர் மகிழ்ச்சியான செய்தி. :D
இவங்கள் எங்கடை எண்ணெயிலை ஆட்டை போட முன்னம் நாங்கள் ஏதாவது செய்யவேண்டும்.  :o
எங்கடை கஷ்ட காலத்துக்கு மண்ணெண்ணெய் மகேஸ்வரனும் இப்ப உயிருடன் இல்லை. :(
விக்கியர் உடனடியா விரைந்து செயற்பட்டு அமெரிக்கனுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு அமெரிக்கனை எங்கடை எண்ணெயிலை ஆட்டையை போட விட்டால் விரைவில் தமிழீழம்தான்.  :D  :lol:  :icon_idea:

 

 

முதல்வர் விக்னேஸ்வரன் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய சம்மதித்தாலும்.....

சம்பந்தன், சுமந்திரன் கோஸ்டி அதற்கு இணங்குவார்களா...? சீமான். :rolleyes:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் முருகன்  கண்ணைத் திறந்திட்டான்...! :D

 

இந்தியாவுக்கு.. இந்த முறை போடப்போற 'நாமம்' கொஞ்சம் பெரிசாத் தான் இருக்கும் போல கிடக்கு! :icon_idea:

 

8811049975_a10b0ba439_b.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் முருகன்  கண்ணைத் திறந்திட்டான்...! :D

 

இந்தியாவுக்கு.. இந்த முறை போடப்போற 'நாமம்' கொஞ்சம் பெரிசாத் தான் இருக்கும் போல கிடக்கு! :icon_idea:

 

 

உண்மைதான் புங்கை....

தமிழன் எவ்வளவு நாள் தான்.... துன்பத்திலேயே, வாழ்வது என்பதை புரிந்து....

நல்லூர் முருகனும், மாவிட்டபுர கந்தனும்... கண்ணை திறந்து விட்டார்கள். :)

 

இந்தியாவின் நிலையை நினைக்கத்தான்... பரிதாபமாக உள்ளது. :D

இந்தியா யாழ்ப்பாணத்தில், தனது துணைத் தூதகரகத்தை வைத்திருந்தும்....

இந்த எண்ணை கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தை.... தனது தேவையற்ற மௌனத்தின் மூலம், முன்பே தெரிவிக்காததால்....

எண்ணைக் கிணறு தோண்டும் வேலைகள்... அமெரிக்காவுக்கோ, சீனாவுக்கோ  போகப் போகின்றது. :lol:

 

Edited by தமிழ் சிறி

april fool ?

எண்ணெய் இருப்பது உண்மை எனில், அதை எடுக்கும் உரிமையை இந்தியா மற்றும் சீனாக்கு குடுக்ககூடாது. இவர்களட்டை குடுத்தால் அதால் ஒரு நன்மையும் இல்லை. மாறாக என்னை எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கொடுப்பது கொஞ்சம் நல்லது.


என்னம்மா இப்புடி பண்ணுறியள் :icon_mrgreen:


ஏப்ரல் பூள் ஆக்குரியல் :icon_idea:

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி, ஆனா, இதை பாதுகாப்பாக எடுக்காவிட்டால் எம் மக்களுக்குதான் ஆபத்து

  • கருத்துக்கள உறவுகள்
நன்றி: Kaathila puu. Com.
என்ன காதில பூ .கொம் செய்தி வெளியிட்டிருக்கு ....அத்துடன் இன்று ஏப்பிரல் முதலாம் திகதி.....

Edited by putthan

இது ஏப்ரல் பூல்க்கு போட்ட செய்தி இல்லைதானை :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

kaathila poo

 

april 1st

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் எண்ணெய் எடுக்கும் உரிமையை அமெரிக்காவிடம் கொடுத்திட்டு.. அமெரிக்கா.. தமிழீழம் அமைக்க எங்களுக்கு உதவினால்.. சரி. டீலை அப்படிப் போட்டால் என்ன. குவைத்தை வைச்சு.. இன்று முழு மத்திய கிழக்கையும் சீர்குலைக்கல்லையா அமெரிக்கா. தமிழீழத்தை வைச்சு முழு ஆசியாவையும் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை.  :icon_idea:   :lol:

 

அதுக்கு முதலில.. தேவையான அளவு எண்ணெய் இருக்கனும். மன்னார் குடாவில் ஆய்வு செய்யிறம் என்று போனவை கிண்டிக்கிளறி விட்ட எண்ணெய் தான் இதுவோ யார் அறிவார்..?! அதனால் அவர்கள் அடக்கி வாசித்திருப்பார்கள். இந்தியா எங்களை நாசம் செய்ய என்றே இருக்கும் அயல் நாடு தானே.  :)

 

ஐங்கரநேசனை எனி எதை வைச்சு திட்டுறது..?!  :D


மேலும் செய்தி ஆதாரம்.. காதில்பூ டாட் கொம். இது ஏப்ரல் பூல் செய்தி என்பது உண்மை.  :lol:  :D 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
ஆகா... ஈழத்தமிழனுக்கு குபேர வாழ்வு கிட்டப்போவதை இந்தப்பதிவும், பின்னூட்டங்களும் எடுத்தியம்ப, நான் எனைமறந்து மயங்கிப்போனேன். தற்போது மயக்கம் தீர்ந்தது. ஆனாலும் இவர்களில் யாருக்குச் 'சிறந்த சித்திரை மடையன்' பட்டமளித்துச் சிறப்பிக்கலாம் என்ற குழப்பம் மட்டும் இன்னமும் தீரவில்லை. :D  :lol:     april-fools-day-001.gif
  • கருத்துக்கள உறவுகள்

இது ஏப்ரல் பூல் செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

காதிலபூ.கொம் என்ற போடும்போதே தெரியவில்லையா?? ஆனாலும nice try..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையார் கோவிலடி கிணறு இனி எனக்குத்தான் சொந்தம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயாவது  இப்படி ஒரு செய்தி வரும் என நினைத்தேன்.

அரேபியாவை விட இங்கே எண்ணெய்  அதிகம் என்றதும் இணைப்பைத்தான் பார்த்தேன்

படுபாவிப்பயல்கள் இதுக்கென்றே காலமை வெள்ளனக் குந்தியிருந்து யோசிக்கின்றார்கள் :D:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆசத்திட்டீங்கள்  சிறீ...! அங்க எண்ணை கிடைத்தால் ...அதுஒரு சுகமான கனவு...! :)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இது ஏப்ரல் பூல் என்று தெரியாமல் எனது நிறுவனத்தை ஒப்பந்தம் சம்பந்தமாக முயற்சி செய்யச்சொல்லிவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

இனிப்பான செய்தி, ஆனால் பலர் கெட்டிக்காரர்களாகிவிட்டார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

எடிட் பண்ணும் வசதி மட்டும் இல்லாவிட்டால் பலரின் மேதாவிலாசம் சந்தி சிரிசிருக்கும் போல :)

நல்ல வேளை காலையில வேற வேலை இருந்ததால இதுக்க மாட்டாம தப்பிசேண்டா சாமி.

கு.சா அண்ணை - துலா என்ர மறந்திடவேண்டாம் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

april-fool-s-day-26.gif?w=300&h=250

 

யாழ்களத்தில்.... ஒவ்வொரு "ஏப்பிரல் முட்டாள்" தினத்தன்றும் ஏதாவது ஒரு....

"ஜில்மால்" செய்தியை இணைப்பது எனது வழக்கம். :D 

சென்ற வருடம்.... "மலேசிய விமானத்தின், கறுப்புப் பெட்டி காலியில் கண்டு பிடிப்பு" என்றும்... இணைத்திருந்தேன்.

 

சென்ற வருடத்தைப் போலவே... இந்த வருடமும் பல நூற்றுக் கணக்கானவர்களை,

முட்டாளாக்கியதில் எனக்கு.. அற்ப சந்தோசம். :lol: .

இந்த திரியை... கிளிக் பண்ணியவர்கள் அனைவரும் முட்டாள்களே.....

இதுவரை எண்ணிப் பார்த்ததில், யாழ் களத்தில் 703 முட்டாள்கள் உள்ளார்கள் :icon_idea:.

 

இந்தத் திரிக்கு, கருத்து எழுதி... நகைச்சுவையாக கொண்டு சென்ற உறவுகளான....

Gari, சீமான், புங்கையூரன், ஆதவன், சேர்வயர், உடையார், புத்தன், எழுஞாயிறு, நெடுக்ஸ், பாஞ்ச் அண்ணை, மீரா,  இசைக்கலைஞன், குமாரசாமி அண்ணா, வாத்தியார், சுவி, வாசி, கிருபன், கோசான் ஆகியோருக்கும்...

இந்த முட்டாள் தினச் செய்தியை.. உடனே நீக்காமல், புரிந்துணர்வுடன் செயல்பட்டு... ஊக்கப் படுத்திய இணையவனுக்கும், நன்றி. :)

 

மீண்டும், அடுத்த ஏப்பிரல் முட்டாள் தினத்தில், உங்களை நிச்சயம் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

ஏனென்றால்.... நீங்கள், புத்திசாலியாக வர, சான்ஸே... இல்லை. :D  :lol:  :icon_mrgreen:  

 

Edited by தமிழ் சிறி

நல்லூர் முருகன்  கண்ணைத் திறந்திட்டான்...! :D

 

இந்தியாவுக்கு.. இந்த முறை போடப்போற 'நாமம்' கொஞ்சம் பெரிசாத் தான் இருக்கும் போல கிடக்கு! :icon_idea:

 

8811049975_a10b0ba439_b.jpg

 

தமிழ் சிறியர்  வெற்றிகரமாக எல்லோருக்கும் மேலே படத்திலிருப்பதை போட்டிட்டார்.  :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

 

april-fool-s-day-26.gif?w=300&h=250

 

மீண்டும் அடுத்த ஏப்பிரல் முட்டாள் தினத்தில், உங்களை நிச்சயம் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

 

ஏப்பிரல் முட்டாள் தினத்தில், நாங்கள் எப்படி முட்டாள்கள் ஆகின்றோம் ??????.   :(  :(        

 

 ஏப்பிரல் முட்டாள் தினத்தன்று, நாங்கள் ஒரு முட்டாளைச் சந்திப்பதால்தானோ !!!!!!.  :o  :o    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.