Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் பல ஆயீரம் பேர்கள் வந்து  எழுதுகிறார்கள் செய்திகள் இணைக்கிறார்கள்  புனை பெயரில் இந்த புனை நீங்கள் வைக்க காரணம் என்ன ? அது பற்றிய தகவல்களை சுவாரஸ்யமாக  இணையுங்கள்  சில பேர் பாதுகாப்புக்கு என்பார்கள்  அதை சொல்லாமல் அந்த புனை பெயரும் அதற்க்கான‌ காரணம் என்ன ?


என்னை எடுத்துக்கொண்டால் நான் டுபாயில் இருக்குறப்ப எனது அறையில் ஒரு அண்ணை இருந்தார் அவருக்கு வயது 40 அவர் கல்யாணம் கட்ட வில்லை அவரை நாங்கள் பகிடி பண்ணுவது முனிவர் என்று செல்லமாக கூப்பிட்டுவோம் பிறகு அந்த பெயரை  வைத்து எழுதுன நான் . உங்களுக்கு ஒரு காரணம் இருக்கும் அதையும் ஒருக்கா சொல்லுங்கோவன்

டங்குவார் ,சுண்டல் ,நெடுக்கு.குறுக்கு,பனங்காய்,சனியன்,நதமுனி,மருதங்கேணி,கறுப்பி,மொசப்பதெமியர்,மீனா,தமிழ் சிறி, புத்தன்,பனங்காய் ,நாரதர் இப்படி சொல்லி கொண்டே போகலாம் ஒருக்கா இந்த பக்கமும் வாங்கோ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பெயரில பெரிசா ஒன்றுமில்லை. இங்கின குறுக்காலபோனவர் ஒரு சும்மா நோண்டிக்கொண்டிருந்தாரா.. அவருக்கு நெடுக்காலப்போகவும் ஆக்கள் இருக்கினம் என்று இனம் காட்ட.. உருவாக்கின பெயர். குறுக்குக்கு எதிர்ச் சொல் நெடுக்கு.  அந்த வகையில்... உருவானது. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாயார் பிறந்த ஊர் புங்குடுதீவு!

 

யாழ் களத்தில் எழுதும்.. அல்லது வாசிக்கும் போது எனது 'புனை பெயர்' கண்ணில் படும்.. அப்போது எனது ஊரின் நினைவும், தாயாரின் நினைவும் ஒரு முறை வந்து போகும்!

 

தாயகத்திலிருந்து வெகு தூரம் போய் விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க, இந்தப் புனை பெயர் உதவுகின்றது!

 

'எந்தையும், தாயும் இணைந்து மகிழ்ந்து இருந்ததும்.. இந்நாடே!'

  • கருத்துக்கள உறவுகள்

நான் அன்புத்தம்பி...

 

முதலில் அம்மா மேல் உள்ள பக்த்தியின் காரணமாக ,,அம்மா..

 

என்ற பெயரில் வந்தேன் ,பின்னர்

அம்மா என்பதை மாற்றினால் நல்லது என்று நண்பர்களின் கருத்திற்கு இணங்க..

 

அன்புத்தம்பி என்று பெயர் சூட்டிக் கொண்டேன்..

 

 

இந்த பெயரை எனக்கு ,வைத்தது...அன்பு அக்கா..ஒருவர்..

 

அவர் இங்கே நீண்ட நெடுங்கால யாழ் கள உறுப்பினர் ..

 

அவர்களின் அன்புக்குப் பாசமான..அன்புத்தம்பி..யாழ்களத்தில் பிறந்தார்..

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு...

விசுவலிங்கம் சுப்பிரமணியம் குகதாசன்

சுருக்கம்..

நல்லதொரு முயற்சி

வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

நீன்டகாலம் யாழ் இணையத்தின் பார்வையாளனாக இருந்திருந்தேன். ஒருநாள் மகளிடம் இதில் நான் தமிழில் எழுதவேண்டும் எனக் கூறினேன். அவவும் உடனே இதுக்குள்ளே புகுந்து அதிகாரிகள், அமைச்சர்களைச் சந்தித்து , வீட்டில அப்பாவின்ர அறுவை தாங்க முடியவில்லை.நீங்கள் எப்படியாவது ஒரு விசா தந்துதவுங்கோ என்று கேட்டு என்னை இங்கே கொண்டுவந்து விட்டார்.

 

அவ வைத்த பெயர்தான் SUVY . எனது மகள் எனக்கு வைத்த பெயர். பின் தமிழ்  பாமினி எழுத்துருவில் தமிழுக்குத் தட்டித் தட்டி பின் தமிழைத் தட்டி தத்தக்கப் பித்த என்று  ஒரு மாதிரிக் கரையேறிட்டன். :rolleyes::)

 

இப்ப நான் வீட்டில குரைச்சால் இன்டைக்கு யாழ் வேலை செய்யேல்லையோ என்று மனிசியோ, பிள்ளைகளோ ஓடிவந்து கணணியைப் பார்க்கிற அளவுக்கு நிலைமை இருக்கு...! :lol:  :D

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடத்தில் வாத்தி வேலை கிடைக்காததால்
இங்கினை வாத்தி வேலை பார்க்கலாம் என்று வந்தேன் :D

பயலுகள் ரொம்ப மோசமா இருக்காங்கள் :lol:

 

இனிமேல் வேறை வேலைக்குப் போகலாம் என யோசிக்கின்றேன் :D 

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு வேலை செய்த இடத்திலுள்ள நண்பர் ஒருவர் மூலம் யாழ்களத்தை பற்றி அறிந்து, பார்த்த போது...
இதுதான் நான் எதிர் பார்த்ததும், எனக்கு ஏற்றதும் என்று முதல் நாளே பிடித்து விட்டது.
ஆனால் இதில் இணைவதற்கு.. நல்ல பெயர் வேண்டும், அத்துடன் அந்தப் பெயர் எண்சாத்திரத்துடன், எனக்குப் பொருந்த வேண்டும் என்பதில் 7,8 பெயர்களை தெரிவு செய்து பார்த்தால் ஒன்றும் சரிவரவில்லை. இந்த பெயர் வைக்கும் பிரச்சினையால்... 4,5 மாதம் உருண்டோடி விட்டது.

 

ஒரு வெள்ளிக்கிழமை... தலையை போட்டு குடைந்து கொண்டிருந்ததில், :D 
நான் ஒறிஜினல் தமிழன் என்ற படியால்......
எனக்கு தமிழ் மீது இருக்கும் அளவுகடந்த பற்றையும், எனது பெயரில் பாதியையும் சேர்க்க....
"தமிழ் சிறி" என்ற பெயர் மின்னல் மாதிரி, மூழையில் மின்னியது.
உடனே.... அந்தப் பெயரை வைத்து, யாழில் இணைந்து விட்டேன். :)

 

இணைந்து சிலமாதங்களில்...இந்தக்களத்தில் சிறி என்னும் பெயருடன் ஒருவர் இருந்தவர்.(அவர் இடைக்கிடை தான் களத்துக்கு வருவார்.) அவர்..... "அப்ப நாங்களெல்லாம், சிங்கள சிறியோ..." என்று கடுப்பாகி விட்டார்.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்பிய 2 அல்லது 3 பேர்களை புனை பெயராக வைத்து யாழில் அங்கத்துவராக முயற்சித்தேன். அவை ஏற்கனவே எடுத்தாகி விட்டது என  யாழ் சொன்னா. பிறந்த ஊரினை புனை பெயராக்கினேன். யாழுக்கு பிடிச்சுப்போச்சு. :)

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு வேலை செய்த இடத்திலுள்ள நண்பர் ஒருவர் மூலம் யாழ்களத்தை பற்றி அறிந்து, பார்த்த போது...

இதுதான் நான் எதிர் பார்த்ததும், எனக்கு ஏற்றதும் என்று முதல் நாளே பிடித்து விட்டது.

ஆனால் இதில் இணைவதற்கு.. நல்ல பெயர் வேண்டும், அத்துடன் அந்தப் பெயர் எண்சாத்திரத்துடன், எனக்குப் பொருந்த வேண்டும் என்பதில் 7,8 பெயர்களை தெரிவு செய்து பார்த்தால் ஒன்றும் சரிவரவில்லை. இந்த பெயர் வைக்கும் பிரச்சினையால்... 4,5 மாதம் உருண்டோடி விட்டது.

 

ஒரு வெள்ளிக்கிழமை... தலையை போட்டு குடைந்து கொண்டிருந்ததில், :D 

நான் ஒறிஜினல் தமிழன் என்ற படியால்......

எனக்கு தமிழ் மீது இருக்கும் அளவுகடந்த பற்றையும், எனது பெயரில் பாதியையும் சேர்க்க....

"தமிழ் சிறி" என்ற பெயர் மின்னல் மாதிரி, மூழையில் மின்னியது.

உடனே.... அந்தப் பெயரை வைத்து, யாழில் இணைந்து விட்டேன். :)

 

இணைந்து சிலமாதங்களில்...இந்தக்களத்தில் சிறி என்னும் பெயருடன் ஒருவர் இருந்தவர்.(அவர் இடைக்கிடை தான் களத்துக்கு வருவார்.) அவர்..... "அப்ப நாங்களெல்லாம், சிங்கள சிறியோ..." என்று கடுப்பாகி விட்டார்.  :lol:

அப்போ, 'கூழ் முட்டை' என்ற பெயரும் எண் சாத்திர அடிப்படையில் 'கை விடப்பட்டிருக்க' வேண்டும் என நினைக்கிறேன்!   :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பெயரில பெரிசா ஒன்றுமில்லை. இங்கின குறுக்காலபோனவர் ஒரு சும்மா நோண்டிக்கொண்டிருந்தாரா.. அவருக்கு நெடுக்காலப்போகவும் ஆக்கள் இருக்கினம் என்று இனம் காட்ட.. உருவாக்கின பெயர். குறுக்குக்கு எதிர்ச் சொல் நெடுக்கு.  அந்த வகையில்... உருவானது. :lol::icon_idea:

 

நன்றி நெடுக்கண்ணை உங்கள் கருத்துக்கும் குறுக்கால போவன் அண்ணை இப்ப கழத்திற்கு வராது இல்லை என்றாலும் சிறந்த ஒரு எழுத்தாளர் கருத்தாளனும் கூட போனவருடம் சுடர் ஒளீ பத்திரிகையில் குறுக்காலபோவன் அண்ணை ஒரு கட்டுரை எழுதினார் அரசியல் ப‌ற்றி அது இப்ப உன்மையாக நடக்கிற மாதிரி தோன்றுகிறது அவர் எங்கு இருந்தாலும் எழுத்து திறமையுடனே வாழ்ந்து கொண்டுருக்க வாழ்த்து கிறேன் :)

குகதாசன் அண்ணா ஆரம்பத்தில் குதாசன் என்று எழுதிய அவர் பெயர் மாற்றிய பின்பு ஒரு நல்ல சம்பவம் 4 வருடங்கள் இருக்குமா சரியாக எனக்கு தெரியாது பெயர் மாற்றிய சில நாட்களில் வசம்பு அண்ணை சொன்னார் விசுகு அந்த பெயரை பின்புறம் இருந்து பார்க்க சிரிப்பாக வருவதாக சொன்னாரு ஞாபகம் இருக்குறதா விசுகு அண்ணா சின்ன ஜோக் ஆனால் வசம்பு அண்ணனை யாழ் களமும் நாமும் இழந்து விட்டோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் புங்கையூரான், சுவி,அன்புத்தம்பி வாத்தியார், தமிழ் சிறி அண்ணை நூணாவிலன்

இவர்களுக்கு ஒரு பதிவு தபால் அனுப்புங்கோ தெரிந்தா ஆட்கள்

புத்தன், பெருமாள், கலைஞன்,முரளி, நிழலி, நிலாமதி ,சாந்தி, ஆறுமுல நாவலர், மல்லிகை வாசம் ,சாத்திரி,ஆதிவாசி ,டங்கிளாஸ், வல்வை சகாறா, இன்னும் தொடரும்

கலர் போட்டு காட்டப்பட்டவர்கள் மிக மிக முக்கியமானவர்கள் :) :)

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

நிறம் கறுப்பானதால் சூட்டிக்கொண்ட பெயர் அத்தோடு அழகான தமிழ் பெயர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறம் கறுப்பானதால் சூட்டிக்கொண்ட பெயர் அத்தோடு அழகான தமிழ் பெயர்.

 

நன்றி கறுப்பி நான் 7 வ‌ருடங்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு தனி மடல் அனுப்பியிருந்தேன் ஞாபகம் இருக்குதா அதிலை தமிழை சப்பி துப்பி யிருந்தேன் அந்த நேரத்தில் தமிழ் எனக்கு ரைப்பண்ணவே வராது நீங்கள் இணைக்கும் செய்திகளை பாராட்டியும் ,எப்படி தமிழில் ரைப்பண்ணுவது என்பது பற்றியும் கேட்டிருந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தை சிலகாலங்களாகப் பார்த்து வந்தேன்.. ஆனால் பாமனியை "டைப்" பண்ணத் தெரியவில்லை.. :unsure:

தெரிந்த ஒருவர் லண்டனில் இருந்து வந்தார்.. அவரிடம் உதவி கேட்டேன். அவர் "யூனிகோடு" என்றார். :huh: கிராமக்கோடு தெரியும்.. :D அதென்ன யூனிக்கோடு என்று யோசிப்பதற்குள் சில காலம் ஓடிவிட்டது. :blink:

பிறகு ஒருவழியாக ஈகலப்பையை கண்டுபிடித்து யாழ்களத்தில் இணைந்துவிட்டேன்.

என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, இம்சை அரசன் திரைப்படம் அப்போதுதான் வெளிவந்திருந்தது. அதில் 'டங்குவாரை அறுத்துவிடுவார்கள்' என்றொரு வசனம் வரும். அட.. ஒருமாதிரி நல்ல சொல்லா இருக்கே என்று அப்பெயரையே வைத்துவிட்டேன்.. :o

அறிமுகப் பகுதியில் இந்தச் சொல்லுக்கு விளக்கம் என்ன என்று கேட்டு புத்தன்ஜீ என்னைக் கலாய்த்தது இன்றும் நினைவில் உள்ளது.. :lol:

பிறகு ஒரு கட்டத்தில் அந்தப் பெயர் அலுத்துவிட்டது. 2009 இல் போர் முடிந்து இழப்புகள் என்று மன அழுத்தம் வேறு.. பெயர் மாற்றம் செய்யும் எண்ணம் வந்தது..

நம்ம இசைத்தலைவரின் 'மனந்திறந்து' என்கிற பாடலை அப்போது அடிக்கடி யூடியூபில் கேட்பேன்.. அவரது ஞாபகமாக பெயரை மாற்றிக்கொண்டேன். :huh::D

தமிழோடு தொடர்புள்ள பெயராக வைக்கவேண்டும் என்று யோசித்தபோது எனது அண்ணாவின் மகள் பெயரை எனது புனை பெயராக்கிக்கொண்டேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி நான் 7 வ‌ருடங்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு தனி மடல் அனுப்பியிருந்தேன் ஞாபகம் இருக்குதா அதிலை தமிழை சப்பி துப்பி யிருந்தேன் அந்த நேரத்தில் தமிழ் எனக்கு ரைப்பண்ணவே வராது நீங்கள் இணைக்கும் செய்திகளை பாராட்டியும் ,எப்படி தமிழில் ரைப்பண்ணுவது என்பது பற்றியும் கேட்டிருந்தேன்

அன்புடன் நினைவு கூறுதலுக்கு நன்றிகள் முனிவர் ஜீ.  ஞாபகம் சற்று மறந்தநிலையில் நினைவினை பகிர்ந்ததில் மகிழ்வுகளும் நன்றிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

.. என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, இம்சை அரசன் திரைப்படம் அப்போதுதான் வெளிவந்திருந்தது. அதில் 'டங்குவாரை அறுத்துவிடுவார்கள்' என்றொரு வசனம் வரும். அட.. ஒருமாதிரி நல்ல சொல்லா இருக்கே என்று அப்பெயரையே வைத்துவிட்டேன்.. :o

 

எனக்கு நீங்கள் எப்பொழுதும் 'டங்குவார்' தான்.. ! :lol::)

 

அதிலுள்ள ஒரு நட்பு உணர்வு, 'இசை'யில் இல்லை !! :(

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நீங்கள் எப்பொழுதும் 'டங்குவார்' தான்.. ! :lol::)

அதிலுள்ள ஒரு நட்பு உணர்வு, 'இசை'யில் இல்லை !! :(

என்ன செய்வது..! சில முடிவுகளால் சில நன்மை தீமைகள் ஏற்படத்தான் செய்யும்.. ஆ.. ரைட்டு என்றிட்டு போய்ட்டே இருக்கவேண்டியதுதான்..! :o:blink:

என்னுடைய நிஜப்பெயர் நல்லாத்தான் இருந்திச்சு ஆனா அதை சுருக்கி என்னை கூப்பிடிறதற்கு என்று ஒரு பெயரை வைச்சினம், அந்தப் பெயர் ஒரு பெண்பிள்ளைகளுக்கும் இருந்திருக்காது ஏன் ஆண்பிள்ளைகளுக்கு கூட ஒரு சிலருக்கு தான் அந்த பெயர் இருக்கும் என நினைக்கிறன். அதனால் எனக்கு பெயரை மாற்ற சந்தர்ப்பம் கிடைச்சா மாற்றுவதற்கு 3 பெயர் வைச்சிருந்தன் அல்லது எனக்கு பெண்பிள்ளைகள் பிறந்தால் அவர்களுக்கு வைக்கலாம் என யோசிச்சிருந்தன். எனக்கு விருப்பமான் பெயர்கள் செவ்வந்தி , ஓவியா, இலக்கியா. 2006 இல் யாழில் இணைந்த போது வேறு சில பெயர்களில் வந்தன் ஆனா அது எனக்கு பிடிக்கவில்லை பிறகு செவ்வந்தி என்ற பெயரில் வந்து அப்படியே இருக்கன். ஆனா என்ன மிச்ச பெயர்களை வைக்க பெண்பிள்ளை தான் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி டங்குவார் ,ராசவன்னியன், செவ்வந்தி அக்கா , கறுப்பி ,thamilini

என்னதான் டங்குவார் என்ற பெயரை அடிக்க முடியாது அல்லோ

புத்தன், பெருமாள், கலைஞன்,முரளி, நிழலி, நிலாமதி ,சாந்தி, ஆறுமுல நாவலர், மல்லிகை வாசம் ,சாத்திரி,ஆதிவாசி ,டங்கிளாஸ், வல்வை சகாறா, இன்னும் தொடரும்

என்னையும் நினைவில் வைத்து இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றிகள் முனிவர்ஜீ.  :)
 
மல்லிகையின் தனித்துவமான வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.  :wub:  புலம்பெயர்ந்து வெளிநாடு வந்த புதிதில் (2003ல்) அச்சிறு நகரத்தில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்திற்கான செய்திமடல் ஒன்றில் எழுதிய கவிதைக்காக உருவாக்கிய புனை பெயர் இது. 
 
அதன் பின்னர் பல காலங்களாக உபயோகிக்கப்படாமல் இருந்த இப்புனை பெயருக்கு வாசம் கொடுத்தது யாழ் களம் தான்.  :)
 
எனது எனது பள்ளி ஆசிரியர் ஒருவர் மல்லிகை மைந்தன் என்ற புனை பெயரில் ஆக்கங்கள் எழுதி வந்தார். அப்பெயரின் பாதிப்பாகவும் இருக்கலாம்.  :)
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

என்னையும் நினைவில் வைத்து இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றிகள் முனிவர்ஜீ.  :)
 
மல்லிகையின் தனித்துவமான வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.  :wub:  புலம்பெயர்ந்து வெளிநாடு வந்த புதிதில் (2003ல்) அச்சிறு நகரத்தில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்திற்கான செய்திமடல் ஒன்றில் எழுதிய கவிதைக்காக உருவாக்கிய புனை பெயர் இது. 
 
அதன் பின்னர் பல காலங்களாக உபயோகிக்கப்படாமல் இருந்த இப்புனை பெயருக்கு வாசம் கொடுத்தது யாழ் களம் தான்.  :)
 
எனது எனது பள்ளி ஆசிரியர் ஒருவர் மல்லிகை மைந்தன் என்ற புனை பெயரில் ஆக்கங்கள் எழுதி வந்தார். அப்பெயரின் பாதிப்பாகவும் இருக்கலாம்.  :)

 

 

நன்றி மல்லிகை வாசம் கன நாளைக்கு பிறகு நலமா நண்பரே :)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.