Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா தலைமையில் புதியக்கட்சி உதயமானது

Featured Replies

கருணா தலைமையில் புதியக்கட்சி உதயமானது
 
 

article_1486819654-a.jpg

வா.கிருஸ்ணா

வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன், முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்தப் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று (11) காலை, மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும், இதன்போது தமது ஆதரவைப் புதிய கட்சியின் உருவாக்கத்துக்கு வழங்கியுள்ளது.

முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வின்போது, கட்சியின் பொதுச்செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் வி.கமலதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சினை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளவும் மட்டக்களப்பில் கட்சி அலுவலகம் திறப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

வடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும் கணவனை இழந்துள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டினை மேற்கொள்ளும் வகையிலும், இக்கட்சி செயற்படவுள்ள அதேவேளை, வடகிழக்கில் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

article_1486819663-b.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/191372/கர-ண-தல-ம-ய-ல-ப-த-யக-கட-ச-உதயம-னத-#sthash.hMyS9zfE.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இது யாரின் நிகழ்ச்சி நிரலோ தெரியலை 

இருக்கிற கட்சியினராலே எதுவும் செய்ய முடியலை இதில நீங்கள் வேறா போங்க ....................இந்தியா போல் இங்கைக்குள் கன கட்சி வந்துடும் போல இருக்கே சபா முடியலை 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாய் வழியா சிரிப்பு வரல ...:cool:

  • தொடங்கியவர்

 

எனக்கு பாதுகாப்பும் தேவை இல்லை எதுவும் தேவை இல்லை, நான் திரும்பி போவேன் யாழ்ப்பாணத்திற்கு - விநாயகமூர்த்தி முரளிதரன்

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் .....அந்தாளும் என்ன செய்வது ...கல்லா கட்டவில்லையே 
சர்வ வல்லமை பொருந்தியவருடன் இருந்த போது ராஜ வாழ்க்கை வாழ்ந்தார் ...
இப்போது எல்லோரும் இவரை செல்லாக்காசாக்கி மூலையில் உட்கார வெச்சிட்டினம் 
ஒவ்வொரு நாளும் அடிக்கிற தண்ணிக்கே பென்சன் காசு காணாது 
அதுதான் புதிய பிசினஸ் ஆரம்பித்திருக்கிறார் ....பார்ரா இவருக்கும் பின்னாடி கொஞ்ச எடுபிடிகளும் திரியுது 
அதுக்குள்ளே நாம் திராவிடர் வேற ....யாருங்கடா நீங்க எங்கிருந்து கிளம்பி வர்ரீங்கோ ...கிந்தியாவுக்கு எதுவோ தேவைப்படுது போல 

  • கருத்துக்கள உறவுகள்

பார்ரா இவங்க அலப்பறையை..!

எந்த "லெட்டர் பேட்" கட்சிக்கும் ஈழத்தில் இருபது பேர் கூடுவாங்க போல இருக்கே..! :):grin:

article_1486819674-c.jpg

  • தொடங்கியவர்

"விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதே த.தே.கூட்டமைப்பு" : கருணா

 

 

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதன் உருவாக்கத்தில் எனக்கும் பங்கிருக்கிறது. ஊடகவியாளர் சிவராமின் தலைமையிலேயே முதன் முறையாக இக்கட்சி தோற்று விக்கப்பட்டது. அதை வெளியில் சொல்வதற்கு கூட சம்பந்தன் மறுக்கிறார். இவ்வாறு முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

11.jpg

மட்டக்களப்பில் அவரது தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற புதிய அரசியல் கட்சி உருவாக்கம் தொடர்பாக இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போதே இதனைத் தெரிவித்தார். 

மட்டக்களப்பு போகஸ் மண்டபத்தில் இந்நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

தொடர்ந்து பேசிய அவர், இன்று தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியிலான பாரிய குழப்பநிலை காணப்படுகின்றது. தமிழ் மக்களுக்கொரு கட்சி தேவை என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். அதற்காகத்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழரசுக் கட்சி போன்ற கட்சிகள் தோற்றம் பெற்றன. ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பாரிய குழப்பநிலை தலை தூக்கியுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சிவி .விக்னேஸ்வரன் ஒன்றைச் செய்தால் மற்றவர்கள் அதற்கு தடைவிதிக்கிறார்கள். கேபாபுலவில் எங்களின் நிலங்களைப் பெற்றுக் கொடுப்போம் என்று ஒத்துழைக்கப்போனால் அதற்குள்ளும்  எதிர்ப்பு. இவ்வாறானதொரு சூழலில்தான் தமிழ் மக்களின் அரசியல் சூழல் சென்று கொண்டிருக்கிறது.

நீங்கள் இவ்வளவு காலமும் ஏன் கருணா அம்மான் வெளியே வராமல் இருந்தார் என்று சிந்தித்திருக்கலாம். கவிஞர் காசி ஆனந்தன் அடிக்கடி கூறுவார் நிறைவாகும் வரை மறைவாக இரு என. இப்போதுதான் அதற்கான காலம் கனிந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு தலமை தாங்கும் தகுதியான தலைவர்கள் இன்றில்லை. அதற்காகத்தான் இவ்வாறாதொரு அமைப்பை தோற்றுவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. என்றார்.

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களைக் காட்டிக்கொடுத்த, கருணா போன்ற கடைந்தெடுத்த துரோகிகளும், அதே தமிழ் மக்கள்முன் எதுவிதத் தயக்கமும் இன்றி வரமுடியும் என்றால்....! அந்தத் தமிழ்மக்கள் எத்தனை உயர்வானவர்கள்....!!  அப்படியான தமிழர்களையா பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி வருகிறார்கள்.??? :(:(

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா...தலைவர் பாசறையில் வளர்ந்த, துணிச்சல் மிக்க உங்களால் மட்டும் தான் தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மெளலானாவுடன் ஓடிப் போனதோடு துணிச்சலும் ஓடி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/02/2017 at 5:21 PM, நவீனன் said:
கருணா தலைமையில் புதியக்கட்சி உதயமானது
 
 

article_1486819654-a.jpg

வா.கிருஸ்ணா

 1 -வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

2 - தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன், முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்தப் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு விடயங்களுக்கும்

முரளிக்கும் வெகு தூரம்..

பாவம்

நம்மை காட்டிக்கொடுத்து உழைச்ச பணத்தை

நம்மிடமே தர வாறார்

நல்ல விடயம் தானே...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2017 at 0:26 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எனக்கு வாய் வழியா சிரிப்பு வரல ...:cool:

புரட்சி முடியல.:102_point_up_2:tw_blush:

On 2/11/2017 at 9:51 PM, நவீனன் said:

மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும், இதன்போது தமது ஆதரவைப் புதிய கட்சியின் உருவாக்கத்துக்கு வழங்கியுள்ளது.

1jk8im.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. இவர் எப்ப வெளிய வந்தவர். இவர் இப்ப உள்ள போறதும் வெளிய வாறதுமாவே இருக்கிறார். இதில இவருக்கு இன்னொரு கட்சி. இருந்த கட்சிகளின் எண்ணிக்கையே..உலக சாதனக்கு உதவுமே. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.