Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவியா..? கிறுக்கலா...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பசிவந்து உணவு உண்டால் முடிவு இன்பம் தரலாம்
உணவைக் கண்டு பசிவந்தால் முடிவு துன்பம் தரலாம்
 
உணர்ச்சி வந்து உறவு கொண்டால் முடிவு இன்பம் தரலாம்
உறவுக்காக உணர்ச்சி கொண்டால் முடிவு துன்பம் தரலாம்
 
காதல் வந்து அழகைக் கண்டால் முடிவு இன்பம் தரலாம்
அழகைக் கண்டு காதல் வந்தால் முடிவு துன்பம் தரலாம்
 
வாழ்வதற்குப் பொருள் தேடினால் முடிவு இன்பம் தரலாம்
பொருள் தேடுவதே வாழ்க்கையானால் முடிவு துன்பம் தரலாம்
 
 
பாஞ்சின் கவி படிப்போருக்கு கவியா..? கிறுக்கலா...?
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Paanch said:
 
 
உணர்ச்சி வந்து உறவு கொண்டால் முடிவு இன்பம் தரலாம்
உறவுக்காக உணர்ச்சி கொண்டால் முடிவு துன்பம் தரலாம்
 
காதல் வந்து அழகைக் கண்டால் முடிவு இன்பம் தரலாம்
அழகைக் கண்டு காதல் வந்தால் முடிவு துன்பம் தரலாம்
 
 
 
பாஞ்சின் கவி படிப்போருக்கு கவியா..? கிறுக்கலா...?

தத்துவக்கவிதந்த வித்துவனே இது என்ன வினா? பாராட்டுகள்.  ஆனால் எல்லாம் அனுபவித்து எழுதியதுபோல் உ...ள்.......ள.....துதுதுதுதுதுதுதுதுதுது.

  • கருத்துக்கள உறவுகள்

திரு பாஞ்ச் 

பல "பஞ்ச்"சுகளை 

ஒரு நாரில் கோர்த்து 

படிப்பவர் பரவசமடைய 

கண்ட கவிதை மாலையிஃதே ....!  tw_blush:

 

சூப்பர் பாஞ்ச் ....! 

  • கருத்துக்கள உறவுகள்

குசேலனும் வாழ்ந்தான்,

கண்ணனும் வாழ்ந்தான்!

அன்பின் பிணைப்பால்..,

அவலும் கூட அமுதாய் இனித்தத

வெறும் சாக்குக் கட்டில் கூட.,,,

வேப்பம் காற்றின் தாலாட்டில்..

சொர்க்கத்தை நினைவூட்ட்டும்!

 

மனம் கொண்டதே மாளிகை, பாஞ்ச்!

பணம் அல்ல என்பதை உங்கள் கவிதை அழகாய் உணர்த்துகின்றது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

தத்துவக்கவிதந்த வித்துவனே இது என்ன வினா? பாராட்டுகள்.  ஆனால் எல்லாம் அனுபவித்து எழுதியதுபோல் உ...ள்.......ள.....துதுதுதுதுதுதுதுதுதுது.

மகவு பெற்ற தாயின் வலி போக்க மூலிகைச்செடி நொச்சி உதவும். :D:

கள உறவுகளின் ஐயம் போக்க யாழுறவு நொச்சியும் உதவுகிறார். :)

அனுபவமே தலைசிறந்த கல்வியாகும். :rolleyes:

 

7 hours ago, suvy said:

திரு பாஞ்ச் 

பல "பஞ்ச்"சுகளை 

ஒரு நாரில் கோர்த்து 

படிப்பவர் பரவசமடைய 

கண்ட கவிதை மாலையிஃதே ....!  tw_blush:

 

சூப்பர் பாஞ்ச் ....! 

கவிதைக்குப் போட்ட மாலை கவிக்குப் போட்டதுபோல் கருத்தும் சுவைக்கிறதே சுவி.:)

 

2 hours ago, புங்கையூரன் said:

குசேலனும் வாழ்ந்தான்,

கண்ணனும் வாழ்ந்தான்!

அன்பின் பிணைப்பால்..,

அவலும் கூட அமுதாய் இனித்தத

வெறும் சாக்குக் கட்டில் கூட.,,,

வேப்பம் காற்றின் தாலாட்டில்..

சொர்க்கத்தை நினைவூட்ட்டும்!

 

மனம் கொண்டதே மாளிகை, பாஞ்ச்!

பணம் அல்ல என்பதை உங்கள் கவிதை அழகாய் உணர்த்துகின்றது!

புங்கையவர்களே! முது வயதில் புரியும் தத்துவங்கள், சிறு வயதிலேயே புரிந்திருந்தால்.....! வாழ்க்கையை நினைக்கவே இனிக்கிறது.!! :100_pray:  

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன கவிதைப்பூங்காடு பகுதியில் இணைகாமல் வேற பகுதில் இணைப்பது கவிதையை 

அழகான  வரிகள்  இன்னும் வரட்டும் கவிதைகள்  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 16.4.2017 at 5:36 PM, Paanch said:
வாழ்வதற்குப் பொருள் தேடினால் முடிவு இன்பம் தரலாம்
பொருள் தேடுவதே வாழ்க்கையானால் முடிவு துன்பம் தரலாம்.

அருமையான வரிகள்... பாஞ்ச் அண்ணை.
பொருள் தேடுவதே வாழ்க்கையாகிய பலரின் முடிவுகள் மிகவும் சோகமாக முடிந்ததை..... 
அரசியல் வாதிகளிலிலிருந்து சாதாரண மனிதர் வரை, 
எத்தனையோ உதாரணங்கள் கண் முன்னே காணக் கூடியதாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, முனிவர் ஜீ said:

அதென்ன கவிதைப்பூங்காடு பகுதியில் இணைகாமல் வேற பகுதில் இணைப்பது கவிதையை 

அழகான  வரிகள்  இன்னும் வரட்டும் கவிதைகள்  tw_blush:

கவிதைப் பூங்காட்டில் நுளைந்து பாருங்கள் கவிதையைப் பார்க்க முடியும். :)

ஏறிப்பார்க்க முயன்றால் பார்க்க முடியாது சறுக்கிவிடும் :shocked:

கவிதையை வரவேற்ற அழகுக்கு நன்றி முனிவர் ஜி. :100_pray:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை வரவேற்றுக் கருத்தும் பதிந்த ராசவன்னியன், தமிழ் சிறி அவர்களுக்கு நன்றிகள்!! 

பச்சை போட முடியவில்லை இங்கு பனி பொழிவதால் பச்சைகளும் வெள்ளையாக மாறிவிட்டன.

Bildergebnis für snow

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

கவிதைப் பூங்காட்டில் நுளைந்து பாருங்கள் கவிதையைப் பார்க்க முடியும். :)

ஏறிப்பார்க்க முயன்றால் பார்க்க முடியாது சறுக்கிவிடும் :shocked:

கவிதையை வரவேற்ற அழகுக்கு நன்றி முனிவர் ஜி. :100_pray:

நான் வேவு பார்க்கும் போது கருத்துக்களம் பிரச்சினைகள்  பகுதியிலே இருந்தது பாஞ் அண்ண உங்கள் கவிதை  அதை யாரோ பெயர்தெடுத்து இங்கே வைத்து விட்டார்கள் அண்ண என்று நினைக்கிறேன்tw_blush:

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை  என்றாலே  ஏதோ ஒருவகை கிறுக்கில் வருவது தானே அண்ணா:grin:

பசி

உணர்ச்சி

காதல்

சொத்து...

இவை இருந்தால் கிறுக்கு தானே??

அப்போ இதுவும் கவிதை தானே..

தொடர்ந்து கிறுக்குங்கள்

 வேண்டுமானால் கிறுக்கல் மன்னன் புத்தரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்;

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வதற்குப் பொருள் தேடினால் முடிவு இன்பம் தரலாம்
பொருள் தேடுவதே வாழ்க்கையானால் முடிவு துன்பம் தரலா

வாழிய
 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/16/2017 at 11:36 AM, Paanch said:
உணர்ச்சி வந்து உறவு கொண்டால் முடிவு இன்பம் தரலாம்
உறவுக்காக உணர்ச்சி கொண்டால் முடிவு துன்பம் தரலாம்

பாஞ்சு எல்லாம் சரி.

இது மட்டும் விழங்குதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

பாஞ்சு எல்லாம் சரி.

இது மட்டும் விழங்குதில்லை.

அனேகமாக அது பெண்களை வருத்தும் ஆண்களின் ஆதிக்கச் சக்தி. உங்களை முதிர்ந்த அறிவுள்ளவராக யாழ் களம் காட்டினாலும் அனுபவத்தில் சிறு பிள்ளைபோல் தெரிகிறது. சிறு பிள்ளைகளிடம் இதுபற்றி விழம்பினாலும் அவர்களுக்கு அது விளங்காது, ஈழத்தின் பிரியனே.! :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 16.4.2017 at 5:36 PM, Paanch said:

பாஞ்சின் கவி படிப்போருக்கு கவியா..? கிறுக்கலா...?

கவி படித்தோம் பாஞ் கவியிலே காலத்தைக் கண்டோம்.  வாழ்க வளமுடன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, shanthy said:

கவி படித்தோம் பாஞ் கவியிலே காலத்தைக் கண்டோம்.  வாழ்க வளமுடன்.

மோதிரக் கைகளால் குட்டுவாங்கினாலும் பாஞ்சுக்கு பஞ்சுபோல் இருக்கும். :)

தமிழர்கள் சாந்திபெறும் காலம் காண உழைக்கும் சாந்திக்கு நன்றிகள்.!! :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் தத்துவம் பொழியுது கவிதையில்

பாஞ்ச் ஏன் இப்படி தத்தவ விசாரத்தில் இறங்கி விட்டீர்கள். காலம் எங்காவது கடத்திப்போய் காய வைத்துவிட்டதா?<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.