Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாக வேலை செய்த கல்யாணசுந்தரம் உண்மையை போட்டு உடைத்த உடனிருந்த நிர்வாகி

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி தொடங்கிய இசை எங்கப்பா.? இசையின் கருத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அவரிடம் இருந்து காத்திரமான, நடுநிலையான கருத்துவரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். 

பாக்கியராசன் கதை கேட்டு மூத்தவர் சீமான் இளையவர் கல்யாணசுந்தரத்தை விலக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன் சென்ற இசை பதில் சொன்னால் நல்லா இருக்கும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எழுச்சிதமிழர் போய் இப்படிலாம் பண்லாமா

 

  • கருத்துக்கள உறவுகள்

119082547_3117764768331966_7341237677369

இன்று மேலும் தெளிவு கிடைக்கும் என்டு நம்புவம் ..👍

  • கருத்துக்கள உறவுகள்

சரி இந்த திரியில்

சீமானிசமா பிரபாகரனிசமா என்றால் நீங்கள் எதை தெரிவு செய்வீர்கள் என்று நேர்மையாக பதிலளிக்க முடியுமா.

தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்த எந்த இசம்(தத்துவம்) தேவைப்படுகிறது.

பிரபாகரனிசத்தை முன்னிலைப்படுத்தி தமிழ்தேசியத்தை கையில் எடுத்துவிட்டு இப்போ சீமானிசம் என்று பேசினால் உனக்கென்ன வந்திச்சு என்று மூத்தவர் சீமான் பேசியதில் தவறு இல்லையா .?

யாராவது மூத்தவர் இளையவர் காணொளிகளை இணைப்பவர்கள் உங்கள் கருத்தை கூறினால் ஆக குறைந்தது உங்கள் தேசிய பார்வை எங்களுக்கு வெளிச்சமாகும் 🤣

இல்லை இடும்பவனம் கார்த்திக், மாவட்ட நிர்வாகிகள் சொல்லுற காணொளிகளை இணைத்து உங்களுக்கே விளங்காத கருத்துகளுக்கு ஆதரவு தேடப்போறீங்களா.?🤪

ஒண்டு மட்டும் உண்மை, இதே இடும்பவனம் கார்த்திக் போன்றவர்கள் இதே போல கட்சியை விட்டு வெளியேறும் போதும் நீங்கள் வந்து எனக்கு அப்பவே தெரியும் இவர் பொய் சொன்னவர் என்று சப்பைக்கட்டு கட்டுவீங்கள். 🤣

சொல்லுவது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.

தலைசிறந்த கெரில்லா இயக்கமாக இருந்த புலிகள், மரபுவழி இராணுவமாக மாறியபோது நடந்தவை மனசிலே வந்து போகுது 😂

இப்போ புலிகள் இருந்திருந்தால் மூத்தவர் சீமான் எங்கே இருந்திருபார் என்று நினைச்சு நான் பலமாக சிரிப்பதுண்டு 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

30 minutes ago, முதல்வன் said:

சரி இந்த திரியில்

சீமானிசமா பிரபாகரனிசமா என்றால் நீங்கள் எதை தெரிவு செய்வீர்கள் என்று நேர்மையாக பதிலளிக்க முடியுமா.

தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்த எந்த இசம்(தத்துவம்) தேவைப்படுகிறது.

பிரபாகரனிசத்தை முன்னிலைப்படுத்தி தமிழ்தேசியத்தை கையில் எடுத்துவிட்டு இப்போ சீமானிசம் என்று பேசினால் உனக்கென்ன வந்திச்சு என்று மூத்தவர் சீமான் பேசியதில் தவறு இல்லையா .?

யாராவது மூத்தவர் இளையவர் காணொளிகளை இணைப்பவர்கள் உங்கள் கருத்தை கூறினால் ஆக குறைந்தது உங்கள் தேசிய பார்வை எங்களுக்கு வெளிச்சமாகும் 🤣

இல்லை இடும்பவனம் கார்த்திக், மாவட்ட நிர்வாகிகள் சொல்லுற காணொளிகளை இணைத்து உங்களுக்கே விளங்காத கருத்துகளுக்கு ஆதரவு தேடப்போறீங்களா.?🤪

ஒண்டு மட்டும் உண்மை, இதே இடும்பவனம் கார்த்திக் போன்றவர்கள் இதே போல கட்சியை விட்டு வெளியேறும் போதும் நீங்கள் வந்து எனக்கு அப்பவே தெரியும் இவர் பொய் சொன்னவர் என்று சப்பைக்கட்டு கட்டுவீங்கள். 🤣

சொல்லுவது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.

தலைசிறந்த கெரில்லா இயக்கமாக இருந்த புலிகள், மரபுவழி இராணுவமாக மாறியபோது நடந்தவை மனசிலே வந்து போகுது 😂 (

இப்போ புலிகள் இருந்திருந்தால் மூத்தவர் சீமான் எங்கே இருந்திருபார் என்று நினைச்சு நான் பலமாக சிரிப்பதுண்டு 🤣🤣🤣

உங்கள் சிரிப்பு - புலிகளின்  தமிழ் மக்களின் அழிவை ரசிப்பதா இருக்கு. என்னவோ நினைத்தேன் உங்களை, நீங்களும் சராசரி பொழுது போக்காளன்தான்

தலைவர் எங்கள் கடவுள், அவரின் வழியில் தான் தமிழ் தேசியம் பயணிக்கின்றது. 🙏

புலிகள் இருக்கும் போது காலை வாரினீர்கள் இல்லாத போதும் வாருகின்றீர்கள் அவர்களை வைத்து.

உங்களுக்கென ஒரு தனிநிலைமையை முடிவெடுத்து, அதன்பின் நிமிர்த்து நில்லுங்கள்.

உங்களுக்கு மக்களின் விடிவுக்கு என்ன செய்ய முடியுமோ அதை பட்டியலிட்டு, மக்களின் விடிவிற்கு பாடுபடுங்கள், உங்களின் செயல் நல்லதென்றால், உங்களுடன் சேர்ந்து விடிவிற்காக உழைப்போம் ஒன்றாக

 இப்படி சீண்டுவதற்கு பொழுது போக்க வேண்டாம்

சீமான் என்ற தலைவர் இப்ப தமிழ் நாட்டுக்கு தேவை, முதலில் தமிழர்களின் விடிவு, இந்த சலசலப்புகளையும் தாண்டி தமிழ்நாட்டு தமிழர்கள் தலை நிமிர்வார்கள்

சிரிப்பவர்கள் எல்லாம் இங்கு சொரிமானத்திற்குதான் வருகின்றார்கள் 

40 minutes ago, முதல்வன் said:

 

 

ஏமாற்றப்படும் தமிழர்கள் ,புறக்கணிக்கப்படும் தமிழர்கள் |

https://www.youtube.com/watch?v=3RGaQcSBfIc

காலை வாரும் தமிழர்கள் 

போட்டி, பொறமை, வஞ்சம்......... இது கலந்த கலவைதான் தமிழர்👍

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

நமது ஊரில், இளவயது உள்ள அனைவருக்கும் உள்ள கனவு வெளிநாடு வருவது.

இந்த நிலை தொடர்ந்தால், இறக்கும் வயதுபோனார் பிணங்களை தூக்கி போட சிங்களம் தான் வரும். அதன் பின் தமிழர் இல்லாத நாட்டில், ஈழம் எதுக்கு என்கிற கேள்வி எழுமே?

முதலில், நமது இளைஞர்களின் மனதை மாத்தி, என்ட்டர்ப்ரூனேர்ஸ் ஆக மாத்தக்கூடிய வழிவகைகளில் நமது சக்தியை பயன்படுத்த வேண்டும்.

அதுக்கு, ஒரு திரியினை திறந்து, உங்கள் திறமையினை அதில் காட்டுங்கள். நாமும் பேராதரவு தருவதுடன், பங்களிப்போம்.

 

 

இதைத்தானே நானும் எல்லா இடத்திலையும் எழுதுறன்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, முதல்வன் said:

 

 

முதல்வன் கோஷன் உங்களிடம் தாயகத்திற்கு நல்ல திட்டமிருந்தால் சொல்லுங்கள், ஒன்றாக சேர்ந்து பயணிப்போம்

தனக்கு பிடித்த தெய்வங்களை போற்றி  பாடினால் கேட்டது அனைத்தும் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் வளர்ந்தவர்கள் அரசியலிலும் அப்படி செய்தால் எல்லாம் கிடைக்கும் என்ற தப்பு கணக்கையே போட்டார்கள். அத்த தவறால்  கிடைத்த விளைவான முள்ளிவாய்க்கால் பேரிழப்பின் பின்னரும் துதி பாடல் அரசியலையே   தொடர்ந்து  அதில் சுகம் காணும்  ஆசையால் சுயமாக சிந்தித்து தர்க்கரீதியாக அரசியல் விவாதம் செய்பவர்கள் மீது ஆத்திரப்படுவது, கீழ்தரமாக நையாண்டி செய்வது, துரோகி என்று வசைபாடுவது தொடர்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, உடையார் said:

தலைசிறந்த கெரில்லா இயக்கமாக இருந்த புலிகள், மரபுவழி இராணுவமாக மாறியபோது நடந்தவை மனசிலே வந்து போகுது 😂

மன்னிக்கவும் உடையார் அண்ணே. நான் அழுவதற்கான குறியீடாகத்தான் அதை நினைத்தேன். சிரிப்பிற்கான குறியீடாக 🤣 இதை பயன்படுத்தினேன். பரவாயில்லை ஆனால் அது கவலைக்கான குறியீடுதான் அதில் மாற்றுக்கருத்தில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

மன்னிக்கவும் உடையார் அண்ணே. நான் அழுவதற்கான குறியீடாகத்தான் அதை நினைத்தேன். சிரிப்பிற்கான குறியீடாக 🤣 இதை பயன்படுத்தினேன். பரவாயில்லை ஆனால் அது கவலைக்கான குறியீடுதான் அதில் மாற்றுக்கருத்தில்லை 

நன்றி முதல்வன், உங்களை நம்புகின்றேன், யாரும் எம் மக்களின் அழிவை நினைத்து சிரிக்கமாட்டார்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் தாயகத்தில் சொந்தமுயற்சியில் சொந்தப்பணத்தில் பல திட்டங்களை முன்னெடுத்து தோற்றுப்போனவர் வரிசையில் நானும் ஒருவன். 

75 இற்கு மேற்பட்ட போர் விதவைகளுக்கு தொழில் அமைத்து மாதாந்த வருவாய்க்காக ஒருவருடத்துக்கு மேல் பணம் செலவழித்துள்ளேன்.

முன்னாள் போராளிகளை இணைத்து/நம்பி பெரும்தொகை பணத்தை முதலீடு செய்தேன். எல்லாவற்றையும் வெளிபடுத்தினால் தான் நாங்கள் இங்கே கருத்துவைக்கலாம் என்றால் என்னை விடுங்கள் இந்தப்பக்கமே நான் வரவில்லை. 

ஆனால் சகலமுயற்சியும் தோல்வியில். 😢

உங்களிடம் ஏதும் திட்டமிருந்தால் சொல்லுங்கள் என் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

நான் இங்கே எழுதுவது வேடிக்கை அல்லது பொழுதுபோக்கு என்று நினைத்தால் சொல்லுங்கள் என் தவற்றை நான் திருத்திக்கொள்கிறேன். 

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2020 at 11:15, உடையார் said:

 

முதல்வன் கோஷன் உங்களிடம் தாயகத்திற்கு நல்ல திட்டமிருந்தால் சொல்லுங்கள், ஒன்றாக சேர்ந்து பயணிப்போம்

உடையார் நிச்சயம் முடிந்ததை செய்கிறேன். 

என்னால் முடிந்ததை செய்ய நான் என்றைக்கும் பின் நின்றதில்லை என்பது என்னை அவதானிப்பவர்களு புரியும். 

ஆனால் இதை ஏன் இங்கே இணைக்கிறீர்கள்?

****

 

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

மேலும் தாயகத்தில் சொந்தமுயற்சியில் சொந்தப்பணத்தில் பல திட்டங்களை முன்னெடுத்து தோற்றுப்போனவர் வரிசையில் நானும் ஒருவன். 

75 இற்கு மேற்பட்ட போர் விதவைகளுக்கு தொழில் அமைத்து மாதாந்த வருவாய்க்காக ஒருவருடத்துக்கு மேல் பணம் செலவழித்துள்ளேன்.

முன்னாள் போராளிகளை இணைத்து/நம்பி பெரும்தொகை பணத்தை முதலீடு செய்தேன். எல்லாவற்றையும் வெளிபடுத்தினால் தான் நாங்கள் இங்கே கருத்துவைக்கலாம் என்றால் என்னை விடுங்கள் இந்தப்பக்கமே நான் வரவில்லை

ஆனால் சகலமுயற்சியும் தோல்வியில். 😢

அப்படி சொல்லவில்லை, நாங்கள் 2009 க்கு பின் தனிய தனிய நின்று உதவுகின்றோம், ஆனா அதன் பலன்???. ஓன்றாக நின்றால் நல்ல பலனை ஏதிர்பார்க்காலம். உங்கள் பலரின் நல்ல செயற் திட்டங்களால். மனதார பாராட்டுகின்றேன் உங்களை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உடையார் நிச்சயம் முடிந்ததை செய்கிறேன். 

என்னால் முடிந்ததை செய்ய நான் என்றைக்கும் பின் நின்றதில்லை என்பது என்னை அவதானிப்பவர்களு புரியும். 

ஆனால் இதை ஏன் இங்கே இணைக்கிறீர்கள்?

நன்றி கோஷன்... அந்த திரியில் நல்ல திட்டங்களை வைத்தால், அதை ஒருவராவது பயண்படுத்துவார்கள் ; 

இதில நின்றுவிட்டு நீங்கள் போய்விட்டால்??? யாரைப்பிடிப்பது🤔

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

அப்படி சொல்லவில்லை, நாங்கள் 2009 க்கு பின் தனிய தனிய நின்று உதவுகின்றோம், ஆனா அதன் பலன்???. ஓன்றாக நின்றால் நல்ல பலனை ஏதிர்பார்க்காலம். உங்கள் பலரின் நல்ல செயற் திட்டங்களால். மனதார பாராட்டுகின்றேன் உங்களை. 

இங்கே ஒருங்கிணைக்கலாம். அங்கே ஒருங்கிணைப்பது தான் கடினம். 

யாழ் வைத்தியசாலை மருத்துவர்கள், பழைய மாணவர்கள், நேசக்கரம் என்று பகுதிநேர ஒருங்கிணைப்பாளர்கள் இருந்தார்கள்.  

ஒரு முழுநேர அரசியல் கட்டமைப்பு, நடுநிலையான தமிழீழம் சார்ந்து இல்லை.

கிழக்கு, வடக்கு, வன்னி, யாழ்ப்பாணம் என்று நிற்கிறார்கள்.

முன்னாள் போராளிகளை நம்பினேன், தலைவர் இருந்தபோது இருந்த மாதிரி இப்போ இல்லை. அம்மாவுக்கு மருந்துக்கு கூட காசு அனுப்பாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பினேன். முடிவு சுழியம் தான்.

இணைந்து பயணிக்க இப்பவும் தயார். 

ஆனால் நான் உதவிசெய்வதால் மற்றவர்கள் எதையுமே செய்வதில்லை வாய் மட்டும் தான் பேசுது என்று ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது மனதை வலிக்கும் என்று எப்போ உணருவீங்கள்😢

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் அண்ணா இந்த‌க் காணொளிய‌ முழுதும் பாருங்கோ , தொலைபேசியில் நான் உங்க‌ளுக்கு சொன்ன‌ ப‌ல‌ உண்மைக‌ளை இந்த‌ ஜ‌யா சொல்லுகிறார் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தை ப‌ற்றி , 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கபூர்வமாக தகவல் தொழினுடப்பதுறையில் சர்வதேச திட்டங்களை எடுத்து கொடுத்தால் நேர முகாமைத்துவம் இன்மை, நொண்டி சாட்டுகள் இப்படி இழந்த பொருளாதரம் தான் அதிகம்.

புலிகள் இருந்திருந்தால் நிலமைவேறு. 

வன்னி தொழினுட்பக்கல்லூரி, கணினிப்பிரிவின் கணினுட்பம் போன்றவை அவற்றை திறம்பட நாடாத்தி இருக்கும். போரின் நடுவிலும் கணினுட்பம் என்ற மாதாந்த தகவல்தொழினுட்ப சஞ்சிகை வன்னியில் வந்து கொண்டுதான் இருந்தது.

இப்பொ இலங்கையில் தமிழரை வைத்து நடாத்தும் BPO ஆட்களை கேளுங்கள் எம்மவரைப்பற்றி சொல்வார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, முதல்வன் said:

இங்கே ஒருங்கிணைக்கலாம். அங்கே ஒருங்கிணைப்பது தான் கடினம். 

யாழ் வைத்தியசாலை மருத்துவர்கள், பழைய மாணவர்கள், நேசக்கரம் என்று பகுதிநேர ஒருங்கிணைப்பாளர்கள் இருந்தார்கள்.  

ஒரு முழுநேர அரசியல் கட்டமைப்பு, நடுநிலையான தமிழீழம் சார்ந்து இல்லை.

கிழக்கு, வடக்கு, வன்னி, யாழ்ப்பாணம் என்று நிற்கிறார்கள்.

முன்னாள் போராளிகளை நம்பினேன், தலைவர் இருந்தபோது இருந்த மாதிரி இப்போ இல்லை. அம்மாவுக்கு மருந்துக்கு கூட காசு அனுப்பாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பினேன். முடிவு சுழியம் தான்.

இணைந்து பயணிக்க இப்பவும் தயார். 

ஆனால் நான் உதவிசெய்வதால் மற்றவர்கள் எதையுமே செய்வதில்லை வாய் மட்டும் தான் பேசுது என்று ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது மனதை வலிக்கும் என்று எப்போ உணருவீங்கள்😢

நானும் பல தரப்பட்ட வழிகளில் அங்கு செய்தேன், உங்களுக்கு கிடைத்த அனுபவம்தான் எனக்கும் கிடைத்திச்சு, அதற்கு பலன் இருக்கா என்று நான் திரும்பி பார்க்கவில்லை, மனது சந்தோஷமாக இருக்கு,

உண்மையாக யாரையும் நோகடிக்க நோக்கம் யாருக்கும் விருப்பமில்லை, தப்பாக நினைக்க வேண்டாம்,

உங்கள் மனதிற்கு இன்னும் பல செயற்திட்டங்களை செய்யலாம்; ஒன்றாக சேருவோம் என்ற நம்பிக்கையிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ இங்கே பிரச்சனை தமிழ்தேசியமல்ல. அதை கொண்டுபோகும் மூத்தவர் சீமான். 

எமக்குத்தேவை தமிழ்தேசியம் வெல்லவேண்டும் அதில் மாற்றுக்கருத்தில்லை. அதில் சீமான் இல்லை என்றாலும் வெல்லும். 

அதுக்கு அனைவரும் தேவை. இதை நீங்கள் புரிவீங்கள் என்று நம்புகிறேன் உடையார் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

நானும் பல தரப்பட்ட வழிகளில் அங்கு செய்தேன், உங்களுக்கு கிடைத்த அனுபவம்தான் எனக்கும் கிடைத்திச்சு, அதற்கு பலன் இருக்கா என்று நான் திரும்பி பார்க்கவில்லை, மனது சந்தோஷமாக இருக்கு,

நிச்சயமா உடையார் அண்ணை. நானும் பலனை நினைக்கவில்லை. ஆனால் அது சங்கிலித்தொடர் போல நிறையபேர் பயன்பெறவேண்டும் என்று கோடிக்கணக்கில் முதலிட்டேன். எனக்கு காசு கேட்கவில்லை இலாபத்தை வைத்து இன்னும் பல இடங்களில் தொடங்குங்கள் என்று கேட்டேன்.

கடன்பட்டு அனுப்பினேன். இன்னும் கட்டிகூட முடிக்கவில்லை. பொருளாதாரம் தான் எங்களை உரிமையுடன் வாழவைக்கும் என்று நம்பினேன். 

எல்லாவற்றையும் என் மனத்திருப்திக்காக மட்டுமே செய்தேன் இருந்தாலும் மேலும் நிறையப்பேர் பயன்பெறவேண்டும் என்ற ஆசை இருந்தது.

இதுவரை யாழில் எங்கும் குறிப்பிடவேண்டும் என்று கூட நான் விரும்பவில்லை. 

ஏதோ இந்த திரியில் மனசில் பட்டதை எழுதுகிறோம் என்பதற்காக, ஒண்டுமே செய்யாமல் புலிகள் அழிவதில் சந்தோசமடைந்து பொழுதுபோக்கிக்கொண்டிருக்கிறோம் என்ற கருத்து மனசை பெரிதும் பாதித்தமையால் பதிந்தேன்.

அதற்கு விருப்பிட்டவரின் மனசை நான் புரிந்துகொள்கிறேன். அந்த இளையவரின் வயசில் நான் இருந்தபோது அவரை விட கொலைவெறியில் இருந்தேன். நான் செத்தாலும் பரவாயில்லை 2 லட்சம் சிங்களவனை கொல்லவேண்டும் என்றுக்கூட இருந்தேன்.

இப்போ இப்படி எழுதுகிறேன் என்றால் நீங்கள் புரிவீர்கள் என்ற நம்பிக்கை மட்டும்தான். 😢

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் கல்யாணசுந்தரத்தின் பேட்டி பார்க்கும் போது உண்மை இருப்பதாகப்பட்டது, ஆனால் தொடர்ச்சியாக பேட்டி வழங்கி  தலைமை மீதான குற்றச்சாட்டும் தான் நிரபராதி என்பதும் சந்தேகம் ஏற்படுகிறது.

அவர் குற்றமற்றவர் என்றால் தொடர்ந்து ஊடக பேட்டி வழங்குவது ஏன்? இது தான் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கும் வழிமுறையா?
 

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுமட்டும் உண்மை அண்ணை. இந்த யாழ் இணையத்தோடு இண்டைக்கு மட்டும் நின்று விவாதிக்கிறவர்களில் 99 வீதமானவர்கள் தமிழ்தேசியத்தை மனசார நேசிக்கிறவர்கள் என்பதை மட்டும் மனசிலே வைச்சு கருத்துகளை பதியுங்கள். 

தமிழ்தேசியம் வெல்ல அவர்களிடம் மாற்றுகருத்துகள் இருக்கலாம் ஆனால் அதற்காக அவர்கள் துரோகிகள் அல்லர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.