Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் கோழைகளாக இருந்திருந்தால், காத்தான்குடியை புலிகளிடம் இழந்திருப்போம் -ஹிஸ்புல்லாவின் அதிரடிப் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

a%2B%25285%2529.jpeg

முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
 
காத்தான்குடி தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல்கள் படுகொலை சம்பவதை நினைவு கூறும் 28ஆவது ஷுஹதாங்கள் தின பிரதான நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 
 
 “ புலிகளால் பள்ளிவாசல்களில் படுகொலை செய்யப்பட்ட ஷுஹதாக்கள் தினத்தை எம்மால் என்றுமே மறக்க முடியாது. இந்த கொடூர சம்பவம் இடம்பெற முன்னர் வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக மாபெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதை நாங்கள் உணர்ந்தோம். ஆனால், இந்தளவு மோசமான – அகோரமான ஒரு சம்பவம் இடம்பெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் இவ்வாறு படுமோசமான ஒரு செயலை செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
 
நான் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடமும் பூர்த்தியாகாத நிலையில் தலைவர் மர்ஹும் அஷ்ரப் சேர் தலைமையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரோமதாஸ, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சிறிபால ஆர்டிகல உள்ளிட்ட அரசியல் உயர் மட்டத்தில் அடிக்கடி பேச்சு நடத்திக்கொண்டிருந்த போதே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஒருவாரத்தின் ஏறாவூரிலும் படு மோசமான பள்ளிவாசல் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. 
 
இந்த ஷுஹதாக்கள் இரத்தம் சிந்தியதன் விளைவாகவோ எம்மால் முழு கிழக்கு மாகாண முஸ்லிம்களையும் பாதுகாக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை எவ்வாறு விரட்டியடித்தார்களோ அதே போன்று கிழக்கிலிருந்தும் குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து முஸ்லிம்களை அடித்து விரட்ட கடும் முயற்சிகளை செய்தனர்.  
 
விடுதலைப் புலிகளின் அந்த கடுமையான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு பள்ளிவாசல் படுகொலைச் சம்பவங்கள் பெரும் தாக்கம் செலுத்தியது. சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதால் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய தேவை – உணர்வு அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. 
 
காத்தான்குடி படுகொலை சம்பவத்தில் ஷுஹதாக்கள் சிந்திய இரத்தம் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. நாங்கள் கேட்டதையெல்லாம் அரசாங்கம் வழங்கியது. இராணுவ முகாம்களை கோரினோம் வழங்கினார்கள், காத்தான்குடியில் பொலிஸ் நிலையம் அமைக்குமாறு கோரினோம் அமைத்தார்கள், ஆயுதம் கோரினோம் வழங்கினார்கள்.
 
ஷுஹதாக்கள் படுகொலை சம்பவம், அவர்கள் சிந்திய இரத்தம் என்பவற்றால் நாங்கள் மன ரீதியாகவும் பலமடைந்தோம். இங்கிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறான சூழலில் ஷுஹதாக்களின் சிந்திய இரத்த உணர்விலேயே உருவாக்கப்பட்டார்கள். எம்மை விரட்டியடிக்க முற்படுபவர்களுக்கு பாடம் புகட்டி அவர்களுக்கு முன்பு நாங்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும், எமது பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்விலேயே நாங்கள் வளர்ந்தோம். இன்று நாங்கள் எமது பிரதேசத்தை கிழக்கு மாகாணத்தில் முக்கிய பிரதேசமாக அபிவிருத்தி செய்துள்ளோம். 
 
காத்தான்குடி படுகொலைக்கு பின்னர் மிகவும் அச்சுறுத்தலான சூழலில்  எனது இருப்பிடத்தை மட்டக்களப்பு இராணுவ முகாமுக்கு மாற்றிக் கொண்டு அங்கிருந்து முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில்,  அச்சுறுத்தல்களுக்கு பயந்து காத்தான்குடியை விட்டு வெளியேற பலர் தயாரானார்கள். அப்போது நாங்கள் யாரையும் ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மரணித்தாலும் இந்த மண்ணிலே தான் மரணிக்க வேண்டுமே தவிர யாரும் வெளியேற முடியாது என கூறினோம். எனது இத்தீர்மானம் சமூக ரீதியாக எனக்கு ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தியது. 
 
எனினும், நாங்கள் அன்று ஊரை விட்டு போக அனுமதித்திருந்தால் இன்று கத்தான்குடி என்ற மண் இருந்திருக்காது. எவ்வாறு வடக்கில் முஸ்லிம் பிரதேசங்களை நாங்கள் இழந்தோமோ அது போன்று கிழக்கிலும் இழந்திருப்போம். 
 
அன்று ஆயுத ரீதியான பங்கரவாதத்தை நாங்கள் முகம்கொடுத்தோம். இன்று அரச அதிகாரிகளின் பயங்கரவாதத்துக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.  முஸ்லிம்களின் பூர்வீக காணிகளில் அவர்களை குடியேற்ற முடியாத அளவுக்கு தடையாக அரச அதிகாரிகள் செயற்படுகின்றனர். இதனை முறியடிப்பது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. 
 
தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாக வட கிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். தமிழ் மக்களும் - முஸ்லிம் மக்களும் ஒற்றுமைப்பட்டு வாழுகின்ற போது மாத்திரமே வடகிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். மாறாக முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. இந்த விடயத்தில் தமிழ் தலைமைகள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். 
 
வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதாக இருந்தால் முஸ்லிம்களை தமிழ் மக்கள் கௌரவிக்க வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும், தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கும் தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும். மாறாக தமிழ் தலைமைகள் தமது அரசியல் சுயலாபங்களுக்காக தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், கோஷங்கள், விமர்சனங்களை முன்வைக்கின்ற போது ஒரு போதும் வடகிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. 
 
தமிழ் - முஸ்லிம் மக்கள் இந்த மண்ணிலே நிம்மதியோடு – அரசியல் தீர்வு பெற்று வாழ வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள், அரசியல் உரிமைகளை மதிக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டும். – என்றார். 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான லொள்ளுக்குத்தான் சமீபத்தில் கண்டியில் வைச்சு மொத்தி எடுத்தவன் சிங்களவன் அப்ப கிட்டடியிலை திரும்பவும் வேண்டி கட்ட போகினம் போல் இருக்கு சிலோனிலை அரசியலவாதிகளும் மத கூட்டமும் இனதுவேஷம் கிளப்பினால் தூக்கு தண்டனை என்றால் சிலோன் சொர்க்கபுரியாகி விடும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, colomban said:

a%2B%25285%2529.jpeg

முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
 

சிறிலங்காவில் பரந்துவாழும் முஸ்லீம்களுக்கு என்ன அடிப்படைப்பிரச்சனை எண்டு ஆருக்கும் தெரியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவில் பரந்துவாழும் முஸ்லீம்களுக்கு என்ன அடிப்படைப்பிரச்சனை எண்டு ஆருக்கும் தெரியுமோ?

தங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை தமிழருக்கு இருக்குது என்று  என்னிடம் பல சிங்களவர்கள் திரும்ப திரும்ப கேட்பார்கள். அதற்கு திரும்ப திரும்ப பதில் சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் உங்கள் மக்களிடம் தானே? அதிலும் மேலாக கொழும்பு பொருளாதாரமே உங்களிடம். இப்ப புலம்பெயர்ந்த மக்கள் அள்ளி இறைக்கும் பணமும் நிரம்பி வழிகிறது. எங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்கிறார்கள். என்ன செய்யலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Jude said:

தங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை தமிழருக்கு இருக்குது என்று  என்னிடம் பல சிங்களவர்கள் திரும்ப திரும்ப கேட்பார்கள். அதற்கு திரும்ப திரும்ப பதில் சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் உங்கள் மக்களிடம் தானே? அதிலும் மேலாக கொழும்பு பொருளாதாரமே உங்களிடம். இப்ப புலம்பெயர்ந்த மக்கள் அள்ளி இறைக்கும் பணமும் நிரம்பி வழிகிறது. எங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்கிறார்கள். என்ன செய்யலாம்?

நாங்கள் என்ன தான் குத்தி முறிந்தாலும் அத்தனை அதிகாரங்களும் அவர்களிடம் தானே உள்ளன.விரும்பிய நேரத்தில் அத்தனையும் அவரகள் கைக்கு போகுமே அது எப்படி?

எந்த சிங்கள மகனாவது தனது வீட்டில் ஒரு அறையைத் தானும் அத்துமீறி போய் இருக்கவிடுவானா?ஏன் இலவசமாக என்றாலும் கொடுப்பானா?

இன்று சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்பவர்கள் யார்?

அத்தனை பேருமே தங்கள் சொந்த வீடுகளில் வாழ்ந்த மக்களாச்சே?

இதுவே சிங்கள மக்கள் எனும் போது எத்தனை இழப்பீடுகள் கிடைத்திருக்கும்.

தமிழன் என்ன தான் கேட்டான்?

சிங்களமக்கள் எவ்வளவு உரிமையுடன் வாழ்கிறார்களோ அதே உரிமையுடன் தமிழனும் வாழவேண்டுமென்று தானே கேட்கிறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, Jude said:

தங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை தமிழருக்கு இருக்குது என்று  என்னிடம் பல சிங்களவர்கள் திரும்ப திரும்ப கேட்பார்கள். அதற்கு திரும்ப திரும்ப பதில் சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் உங்கள் மக்களிடம் தானே? அதிலும் மேலாக கொழும்பு பொருளாதாரமே உங்களிடம். இப்ப புலம்பெயர்ந்த மக்கள் அள்ளி இறைக்கும் பணமும் நிரம்பி வழிகிறது. எங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்கிறார்கள். என்ன செய்யலாம்?

நான் கேள்வி கேட்டது முஸ்லீம்கள் சம்பந்தமாக......இந்ததிரியையாவது சாம்பாரக்கி நீர்த்துபோகாமல் பார்த்துக்கொள்ளவும்........

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கான இன அடையாளம் உலகிலேயே தொன்மையான என் மொழி மற்றும் என் மூதாதையர் வாழ்ந்த மண் என்று நான் நினைக்கிறேன். பண்பாடும் பழக்க வழக்கங்களும் இவற்றின் மீதே கட்டப்பட்டவை. இடையில் தோன்றியவை மதங்கள். மதங்களை இன அடையாளங்களாய் ஏற்பது அறிவியல்பூர்வமாய்த் தோன்றவில்லை. ஆனால் எந்த மண்ணில் தோன்றிய மதமானாலும் அதனை ஏற்றுப் பின்பற்ற அனைவருக்கும் உரிமையுண்டு. அவ்விடயத்தில் அவர்களுக்கு ஏற்படும் தடைகளைப் போக்குவது நம் அனைவரின் கடமையும் கூட . அவர்களுக்கு உரிய பிரச்சினைகளைப் பேசித்தான் தீர்க்க வேண்டும். அவர்களும் தம்மை நம்மோடு தான் அடையாளப்படுத்த வேண்டுமே தவிர, வேறு நாட்டில் உள்ள அதே மதத்தினரோடு அல்ல. ஏனெனில் மதம் என்பது இன அடையாளம் அல்ல. அது ஒரு மார்க்கம். அவ்வளவே. மற்றப்படி இன அழிப்பினை எதிர்கொள்ளும் நம் பிரச்சினையும் தமிழ் முஸ்லிம்களின் பிரச்சினையம் ஒன்றல்ல. ஈழப்பிரியன் சொல்வதைப் போல, நாமும் சிங்களவருக்குச் சமமான வாழ்வுரிமையை மட்டுமே கேட்கிறோம். அதுவும் நம் மண்ணிலேயே !

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

தங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை தமிழருக்கு இருக்குது என்று  என்னிடம் பல சிங்களவர்கள் திரும்ப திரும்ப கேட்பார்கள். அதற்கு திரும்ப திரும்ப பதில் சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் உங்கள் மக்களிடம் தானே? அதிலும் மேலாக கொழும்பு பொருளாதாரமே உங்களிடம். இப்ப புலம்பெயர்ந்த மக்கள் அள்ளி இறைக்கும் பணமும் நிரம்பி வழிகிறது. எங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்கிறார்கள். என்ன செய்யலாம்?

எத்தனை இனப்படுகொலைகளை சிங்கள மக்கள் கண்டுள்ளார்கள் என  கேட்க தெரியாதோ??  இங்கை தான் வீரம்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

எத்தனை இனப்படுகொலைகளை சிங்கள மக்கள் கண்டுள்ளார்கள் என  கேட்க தெரியாதோ??  இங்கை தான் வீரம்.tw_blush:

அவர்கள் இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ளவில்லை. ஜே.வி.பி. கிளர்ச்சி காலத்தில் இப்படி பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், பயங்கரவாதம் உள்ள நாடுகளில் அதற்கு ஆதரவான பகுதிகளில் இவ்வாறு இடம்பெறுவதாகவும், சிங்கள மக்களும் இவ்வாறன இறப்புகளை அனுபவித்து உள்ளார்கள் என்றும் சொல்கிறார்கள். 

கலவரங்களை பற்றி கேட்டால், கலவர காலத்தில் சிங்கள மக்களும் தமிழ் பகுதிகளில் தாக்கப்பட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுப.சோமசுந்தரம் said:

எனக்கான இன அடையாளம் உலகிலேயே தொன்மையான என் மொழி மற்றும் என் மூதாதையர் வாழ்ந்த மண் என்று நான் நினைக்கிறேன். பண்பாடும் பழக்க வழக்கங்களும் இவற்றின் மீதே கட்டப்பட்டவை. இடையில் தோன்றியவை மதங்கள். மதங்களை இன அடையாளங்களாய் ஏற்பது அறிவியல்பூர்வமாய்த் தோன்றவில்லை. 

இனம் என்றால் என்ன? நீங்கள் மொழியை வைத்து இனத்தை அடையாளம் காண்கிறீர்கள். ஆனால் பல மொழிகள் இடையில் வந்தவையே. மலையாளம் தமிழில் இருந்து பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான மொழி. அதற்காக மலையாளிகள் தங்களை தமிழர் என்று அடையாளம் காண்பதில்லை. அமெரிக்க ஜனாதிபதி  ரம்பின் பெற்றோர்கள் ஜெர்மனியில் இருந்து வந்தவர்கள். ஆனால் ரம் தன்னை ஜெர்மானியர் என்று அடையாளம் காண்பதில்லை. வை. கோபாலசாமியின் மூதாதையர் தெலுங்கர்கள். அவர் தன்னை தமிழராக அடையாளம் காண்கிறார். இலங்கை தமிழரில் பலரின் பூர்வீகம் மலையாளத்தில் இருந்து வருகிறது. தேசிய தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவுகள் கேரளாவில் அவரின்  பூர்வீக உறவுகளுடன் திருமண பந்தம் செய்து வாழ்கிறார்கள். அதற்காக தமிழீழ தேசிய தலைவர் மலையாளி அல்ல - அவர் தமிழர். ஆகவே மொழி தான் இன அடையாளம் என்று எப்படி சொல்வீர்கள்? ஒரு இனத்தில் பிறந்து வேறு மொழி பேசும் மக்கள் அந்த இனத்தை சேர்ந்தவர்களா அல்லது பேசும் மொழிக்கு உரிய இனத்தை சேர்ந்தவர்களா? இவர்கள் எல்லாம் வேறு இனம் ஆனாலும் பேசும் மொழிக்கு உரிய இனத்துடன் அடையாளம் காண்கிறார்கள். நீங்கள் சொல்வது இங்கு சரி என சொல்வீர்கள். இன்று பிரான்சில் பிறந்த தமிழர் பிரெஞ்சு மொழி பேசுகிறார். அவரின் பேரப்பிள்ளைகளும் பெரெஞ்சு பேசும் மக்களாவர். அவர்கள் பிரெஞ்சு இனமா தமிழரா? உங்கள் வாதப்படி பேசும் மொழி இனத்தை நிர்ணயித்தால் அவர்கள் பிரெஞ்சு இனமாவர். 

பண்பாட்டுக்கு அடிப்படை மொழி - மதமல்ல என்றால் ஏன் பிறப்பு, திருமணம், இறப்பு சம்பந்தமான நிகழ்வுகள் மொழி சார்ந்து அமையாமல் மதம் சார்ந்து அமைந்து இருக்கின்றன? 

Edited by Jude

7 hours ago, Jude said:

தங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை தமிழருக்கு இருக்குது என்று  என்னிடம் பல சிங்களவர்கள் திரும்ப திரும்ப கேட்பார்கள். அதற்கு திரும்ப திரும்ப பதில் சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் உங்கள் மக்களிடம் தானே? அதிலும் மேலாக கொழும்பு பொருளாதாரமே உங்களிடம். இப்ப புலம்பெயர்ந்த மக்கள் அள்ளி இறைக்கும் பணமும் நிரம்பி வழிகிறது. எங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்கிறார்கள். என்ன செய்யலாம்?

ஜூட் நீங்கள் வேண்டுமென்றே இப்படி கேட்பதாக நினைக்கிறேன. ஏனென்றால்  தமிழர் பிரச்சனைக்கான தீர்வு வரைபு  என்று ஒரு தீரவுத் திட்ட நகல் ஒன்றை நீங்கள் சிறுது காலத்திற்கு முன்பு நீங்களாகவே வெளியிட்டிருந்திர்கள். இப்போது தமிழர்களுக்கு  என்ன பிரச்சனை உண்டு என்பது போல் கேட்கிறீர்கள். உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

தங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை தமிழருக்கு இருக்குது என்று  என்னிடம் பல சிங்களவர்கள் திரும்ப திரும்ப கேட்பார்கள். அதற்கு திரும்ப திரும்ப பதில் சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் உங்கள் மக்களிடம் தானே? அதிலும் மேலாக கொழும்பு பொருளாதாரமே உங்களிடம். இப்ப புலம்பெயர்ந்த மக்கள் அள்ளி இறைக்கும் பணமும் நிரம்பி வழிகிறது. எங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்கிறார்கள். என்ன செய்யலாம்?

 

13 minutes ago, tulpen said:

ஜூட் நீங்கள் வேண்டுமென்றே இப்படி கேட்பதாக நினைக்கிறேன. ஏனென்றால்  தமிழர் பிரச்சனைக்கான தீர்வு வரைபு  என்று ஒரு தீரவுத் திட்ட நகல் ஒன்றை நீங்கள் சிறுது காலத்திற்கு முன்பு நீங்களாகவே வெளியிட்டிருந்திர்கள். இப்போது தமிழர்களுக்கு  என்ன பிரச்சனை உண்டு என்பது போல் கேட்கிறீர்கள். உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 

நான் கேட்கவில்லை - சிங்களவர்கள் கேட்கிறார்கள். தமிழருக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. சிங்களவருக்கும் இப்படியான பிரச்சினைகள் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழருக்கு உள்ள பிரச்சனைகளை கையாள தமிழரிடம் நிறைய பணமும் வளங்களும் இரு க்கின்றன. ஆனால் எமது தலைமைகள் இந்த வளங்களை பயன்படுத்தி பிரச்சனைகளை தீர்க்க முயல்வதில்லை.

  1. வெளிநாட்டு பணம் தொழில்சாலைகளை கட்ட பயன்படுவதில்லை. மாறாக வாள்வெட்டு குழுக்களுக்கு மோட்டர் சையிக்கில் வாங்க பயன்படுகிறது.
  2. மாகாண சபை தொழில்சாலைகளை கட்ட பயன்படுவதில்லை. தங்களுக்குள் வழக்கு போட்டு யார் அமைச்சர், யார் லஞ்சம் வாங்கினார். யார் துப்பாக்கி வாங்கினார் என்று சண்டை பிடிக்க பயன்படுகிறது.
  3. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் எங்கள் மக்களின் பகுதிகள் - ஆனால் அவற்றை பயன்படுத்தி பெறக்கூடிய வேலை வாய்ப்புகளையோ, பொருளாதார அபிவிருத்தியையோ எமது தலைமைகள் செய்வதில்லை. புலம் பெயர்ந்தவரின் பணம் இலங்கை வங்கிகளில் நூறு பில்லியனுக்கும் மேலாக சேர்ந்து சிங்கள பகுதிகளில் முதலிடப்படுகிறது. 

 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Jude said:
  1. வெளிநாட்டு பணம் தொழில்சாலைகளை கட்ட பயன்படுவதில்லை. மாறாக வாள்வெட்டு குழுக்களுக்கு மோட்டர் சையிக்கில் வாங்க பயன்படுகிறது.
  2. மாகாண சபை தொழில்சாலைகளை கட்ட பயன்படுவதில்லை. தங்களுக்குள் வழக்கு போட்டு யார் அமைச்சர், யார் லஞ்சம் வாங்கினார். யார் துப்பாக்கி வாங்கினார் என்று சண்டை பிடிக்க பயன்படுகிறது.
  3. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் எங்கள் மக்களின் பகுதிகள் - ஆனால் அவற்றை பயன்படுத்தி பெறக்கூடிய வேலை வாய்ப்புகளையோ, பொருளாதார அபிவிருத்தியையோ எமது தலைமைகள் செய்வதில்லை. புலம் பெயர்ந்தவரின் பணம் இலங்கை வங்கிகளில் நூறு பில்லியனுக்கும் மேலாக சேர்ந்து சிங்கள பகுதிகளில் முதலிடப்படுகிறது. 

 

இதை ஏற்றுக்கொள்கிறேன் நான் :101_point_up:

30 minutes ago, Jude said:

 

நான் கேட்கவில்லை - சிங்களவர்கள் கேட்கிறார்கள். தமிழருக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. சிங்களவருக்கும் இப்படியான பிரச்சினைகள் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழருக்கு உள்ள பிரச்சனைகளை கையாள தமிழரிடம் நிறைய பணமும் வளங்களும் இரு க்கின்றன. ஆனால் எமது தலைமைகள் இந்த வளங்களை பயன்படுத்தி பிரச்சனைகளை தீர்க்க முயல்வதில்லை.

  1. வெளிநாட்டு பணம் தொழில்சாலைகளை கட்ட பயன்படுவதில்லை. மாறாக வாள்வெட்டு குழுக்களுக்கு மோட்டர் சையிக்கில் வாங்க பயன்படுகிறது.
  2. மாகாண சபை தொழில்சாலைகளை கட்ட பயன்படுவதில்லை. தங்களுக்குள் வழக்கு போட்டு யார் அமைச்சர், யார் லஞ்சம் வாங்கினார். யார் துப்பாக்கி வாங்கினார் என்று சண்டை பிடிக்க பயன்படுகிறது.
  3. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் எங்கள் மக்களின் பகுதிகள் - ஆனால் அவற்றை பயன்படுத்தி பெறக்கூடிய வேலை வாய்ப்புகளையோ, பொருளாதார அபிவிருத்தியையோ எமது தலைமைகள் செய்வதில்லை. புலம் பெயர்ந்தவரின் பணம் இலங்கை வங்கிகளில் நூறு பில்லியனுக்கும் மேலாக சேர்ந்து சிங்கள பகுதிகளில் முதலிடப்படுகிறது. 

 

உண்மை. தமிழர் தம் வளங்களை வீண் விரயம் செய்கிறாரகள் என்பதை நான் அங்கு சென்ற போது புரிந்து கொண்டேன். தமது வாழ்கைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த முயலாத  வீண் பழமை பேசும் போக்கு, நெகிழ்சித் தன்மை அற்ற  நிலைப்பாடு தமிழர்  வாழ்வியலை பாதிக்கிறது என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கட அலம்பறை தாங்க முடியல்ல

அண்மையில கண்டில, கடந்த வருசம் காலில எண்டு சிங்களவன் போட்டு தாக்கினதப் பத்தி, துணிவா கதைக்க மாட்டார் நாணா... 

அடி விழேக்க கதையே இல்லை. அந்த பக்கம் தலை வைத்தே படுக்க வில்லை. 

இங்க வந்து செத்த பாம்பு அடிக்கிறார். 

மதரீதியா தம்மை அடையாளப் படுத்துவதன் ஆபத்தை தமிழக இஸ்லாமியர்கள் உணர்ந்தது போல இவர்கள் உணரவில்லை.

அண்மையில், யாழ்பாணம் வந்த சிங்கள பிக்கர், விஸ்ணுவின் எட்டாவது அவதாரம் தான் புத்தர்.... நாம எல்லாம் ஒன்று என்று நூல் விடுவதை, தமிழ் பேசும் இந்த முட்டாள்தன அரசியல் வாதிகள் புரிந்து கொள்ளப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம்.. புலிகளின் முக்கிய போராட்ட இலக்கே காத்தான்குடியை பிடிப்பது தான். அதனை இவர் புலிகளோடு போராடி மீட்டவர்.

போடாங். வாயில நல்லா வருகுது.

புலிகள் இருந்த போது வாயே திறக்காததுகள் எல்லாம்.. இப்ப புலியை விரட்டினம்.. வென்றம் என்று கொண்டு.

புலிகளை இல்லை.. தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தும்.. காடைகளை கொண்டும்.. சிங்களவர்களோடு சேர்ந்து நின்று கொன்றம் என்று சொல்வதற்குப் பதலிலாக.. புலிகளை என்று உச்சரிக்கிறார்கள் இப்போது.. அவ்வளவே. ?

Edited by nedukkalapoovan

23 hours ago, colomban said:

முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  

ஹிஸ்புல்லா உட்பட இஸ்லாமிய பயங்கரவாதிகள் இலங்கையிலிருந்து முழுமையாக அகற்றப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

சிறிலங்காவில் பரந்துவாழும் முஸ்லீம்களுக்கு என்ன அடிப்படைப்பிரச்சனை எண்டு ஆருக்கும் தெரியுமோ?

யாவாரம் பிரச்னை இல்லாமல் செய்யவேணும்.

காசு வர வர, 6,7 பொம்பிளையள் கட்டிடனும்....

பிறக்கிற பிள்ளையளுக்கு காணி நிலம் வேணும். அது வடக்கோ, தெற்கோ, மேற்கோ, கிழக்கோ... நமக்கு வந்தாகணும்...

அவ்வளவு தான்..... சிங்களவன் கத்தினால் வாலை சுருட்டி பதுங்குவதும்.... ஊருக்கு இழைத்த பிள்ளையார் கோவில் ஆண்டி போல... தமிழரிடம் மட்டும் நியாயம் பிளப்பது... 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

யாவாரம் பிரச்னை இல்லாமல் செய்யவேணும்.

காசு வர வர, 6,7 பொம்பிளையள் கட்டிடனும்....

பிறக்கிற பிள்ளையளுக்கு காணி நிலம் வேணும். அது வடக்கோ, தெற்கோ, மேற்கோ, கிழக்கோ... நமக்கு வந்தாகணும்...

அவ்வளவு தான்..... சிங்களவன் கத்தினால் வாலை சுருட்டி பதுங்குவதும்.... ஊருக்கு இழைத்த பிள்ளையார் கோவில் ஆண்டி போல... தமிழரிடம் மட்டும் நியாயம் பிளப்பது... 

செம.....நாதமுனி.....குசி...காணிபிடிப்பதில்..புலிதானுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

ஹிஸ்புல்லா உட்பட இஸ்லாமிய பயங்கரவாதிகள் இலங்கையிலிருந்து முழுமையாக அகற்றப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இவர் வேற காமடி பண்ணிக்கிட்டு :grin: 

அவன் தங்கள் இனம் மீது அக்கறை கொண்டவன் வேணுமென்றால் நம்ம  அமைச்சர்மார்களை / எம்பிக்களை அகற்றுங்கள்:100_pray: 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த அரசுடனும்..........ரெடி......அப்ப யாருக்கு பிரச்சினை

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இவர் வேற காமடி பண்ணிக்கிட்டு :grin: 

அவன் தங்கள் இனம் மீது அக்கறை கொண்டவன் வேணுமென்றால் நம்ம  அமைச்சர்மார்களை / எம்பிக்களை அகற்றுங்கள்:100_pray: 

அது தான் எங்கடை ஆக்களிட்ட அமைச்சு பதவியே இல்வையே.பின்பு என்னத்தை அகற்நுறுது.எல்லா பிழைகளும் எமது தான்.

22 hours ago, Jude said:

தங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை தமிழருக்கு இருக்குது என்று  என்னிடம் பல சிங்களவர்கள் திரும்ப திரும்ப கேட்பார்கள். அதற்கு திரும்ப திரும்ப பதில் சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் உங்கள் மக்களிடம் தானே? அதிலும் மேலாக கொழும்பு பொருளாதாரமே உங்களிடம். இப்ப புலம்பெயர்ந்த மக்கள் அள்ளி இறைக்கும் பணமும் நிரம்பி வழிகிறது. எங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்கிறார்கள். என்ன செய்யலாம்?

சிங்கள மக்களுடன் பழகுபவர்களுக்கு 2 விடயங்கள் புரியும். ஒன்று தமிழ் மகளுக்கு என்ன பிரச்சனை எதற்காகச் சண்டை பிடித்தார்கள் என்ற அடிப்படை கூடச் சிங்கள மக்களுக்குப் புரியாத புதிர். மற்றது இலங்கை நாடானது பௌத்த சிங்களவரின் சொத்து, இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களைத் தாங்கள் சகல உரிமைகளுடன் நாட்டில் உலாவ விட்டுள்ளனர் என்ற பெருமிதம்.

எமது உரிமைப் பிரச்சனையைச் சாதாரண இலங்கைக் குடிமகனுக்குக் கூடப் புரிய வைக்க முடியாத நிலையில் இருந்து கொண்டு கனவுலகில் வாழுகிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, இணையவன் said:

சிங்கள மக்களுடன் பழகுபவர்களுக்கு 2 விடயங்கள் புரியும். ஒன்று தமிழ் மகளுக்கு என்ன பிரச்சனை எதற்காகச் சண்டை பிடித்தார்கள் என்ற அடிப்படை கூடச் சிங்கள மக்களுக்குப் புரியாத புதிர். மற்றது இலங்கை நாடானது பௌத்த சிங்களவரின் சொத்து, இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களைத் தாங்கள் சகல உரிமைகளுடன் நாட்டில் உலாவ விட்டுள்ளனர் என்ற பெருமிதம்.

எமது உரிமைப் பிரச்சனையைச் சாதாரண இலங்கைக் குடிமகனுக்குக் கூடப் புரிய வைக்க முடியாத நிலையில் இருந்து கொண்டு கனவுலகில் வாழுகிறோம்.

சும்மா   சம்பந்தன்ரை தம்பி மாதிரி......அரைச்சமாவையே அரைச்சுக்கொண்டு  கதைக்காதேங்கோ.....

சிங்கள மக்களுக்கு எல்லாம் தெரியும்.

தமிழனின் பலம் தமிழனுக்கே தெரியாது.

ஆனால் சிங்களத்திற்கு நன்றாக தெரியும்.


கடலில் வீணாக கலக்கும் மகாவலியை வடக்கிற்கு திருப்பச்சொல்லி பாருங்கள்...அப்போது தெரியும் அவர்கள் பயமும் அச்சமும்......

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2018 at 4:48 PM, Jude said:

தங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை தமிழருக்கு இருக்குது என்று  என்னிடம் பல சிங்களவர்கள் திரும்ப திரும்ப கேட்பார்கள். அதற்கு திரும்ப திரும்ப பதில் சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. மூன்றில் இரண்டு பங்கு கடல் வளமும். மூன்றில் ஒரு பங்கு நிலமும் உங்கள் மக்களிடம் தானே? அதிலும் மேலாக கொழும்பு பொருளாதாரமே உங்களிடம். இப்ப புலம்பெயர்ந்த மக்கள் அள்ளி இறைக்கும் பணமும் நிரம்பி வழிகிறது. எங்களுக்கு இல்லாத என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்கிறார்கள். என்ன செய்யலாம்?

 

2 hours ago, குமாரசாமி said:

சிங்கள மக்களுக்கு எல்லாம் தெரியும்.

தமிழனின் பலம் தமிழனுக்கே தெரியாது.

ஆனால் சிங்களத்திற்கு நன்றாக தெரியும்.

உங்களுக்கு எப்படி முஸ்லீம்களுக்கு என்ன அடிப்படைப்பிரச்சனை எண்டு தெரியாதோ, அப்படியே தமிழர்களுக்கு என்ன அடிப்படைப்பிரச்சனை எண்டு சிங்களவர்களுக்கும் தெரியாது. அவர்களின் உலகம் அவர்கள் மொழியில் உள்ள ஊடகங்களிலும் பிக்குகளின் பிரசங்கங்களிலும் தங்கி உள்ளது. சிங்கள ஊடகங்கள் விற்பனைக்காக இனத்துவேஷத்தை அடிப்படியாக கொண்டு செயற்படுகின்றன.

On 8/4/2018 at 3:50 PM, குமாரசாமி said:

சிறிலங்காவில் பரந்துவாழும் முஸ்லீம்களுக்கு என்ன அடிப்படைப்பிரச்சனை எண்டு ஆருக்கும் தெரியுமோ?

தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களின் பிரச்சினை தமிழரான உங்களுக்கே தெரியாத போது எப்படி சிங்களத்தில் வராத தமிழர் பிரச்சினைகள் சிங்களவருக்கு புரியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.