Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸின் உயர் விருதான செவாலிய விருதை பெற்றார் முன்னாள் ஜனாதிபதி!

Featured Replies

பிரான்ஸின் உயர் விருதான செவாலிய விருதை பெற்றார் முன்னாள் ஜனாதிபதி!

 

 

DnjIyx7VsAAr5hv.jpg

பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மிகப் உயரிய விருதான செவாலியே விருது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை பெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெறுகின்றார்.

பிரான்சின் தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சார்பாக பிரஞ்சு தூதுவர் ஜீன் மரின் சூ வழங்கினார்.

பாரிஸ் பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தில் அவர் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கிளாஸ் டி மாட்ரிட் உறுப்பினராகவும், உலகளாவிய தலைமைத்துவ அறக்கட்டளையின் உறுப்பினராகவும், தெற்காசிய கொள்கை, ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

DnjI3VHU0AEOvY4.jpg

http://athavannews.com/பிரான்சில்-உயர்-விருதான/

  • கருத்துக்கள உறவுகள்

செவாலியர்.. விருது.. நாகர்கோவில் படுகொலை.. நவாலி படுகொலை.. யாழ் பெரிய கோவில் படுகொலை.. செம்மணிப்படுகொலை.. மற்றும் புதுக்குடியிருப்புப் படுகொலை.. பெரியமடு படுகொலை மற்றும்.. யாழ்ப்பாணப் பெரும் இடம்பெயர்வுக்கு காரணமானவருமான.. சந்திரிக்காவுக்கு வழங்கப்படுவதை யாராவது தமிழ் அமைப்புக்கள் பிரான்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளனவா.

ஒரு இனப்படுகொலையாளருக்கு.. செவாலியர் விருது. பிரான்சுக்கே வெட்கக் கேடான விடயம். ?

  • கருத்துக்கள உறவுகள்

வைன் ராக்கிலை வைன் முடிந்து இருக்கும் இவ வைன் வேண்ட போயிருப்பா அந்தநேரம் ஆள் மாற்றி குடுத்துபோட்டான்கள் போல் இருக்கு . சும்மா இருங்க நெடுக்ஸ் தமிழ் அமைப்புக்கள் என்ன செய்கினம் என்று தெரியாதா ?

நண்டு சட்டிக்குள் நண்டுகள் என்ன செய்வினமோ அதுதான் செய்ய முடியும் அவர்களால் .?

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை விடுவம்.. அவை ஊருக்கு கொலிடே போவதையிட்டு கப் சிப் ஆகிட்டினம். ஆனால்.. உதயன் பத்திரிகை நிறுவனம் மீது இவா காலத்தில் தான் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது முதன்முறையாக. சனநாயகத்தின் அடிப்படையான பத்திரிகை சுதந்திரத்தையே மறுத்தலித்த இவருக்கு செவாலியர் வழங்கப்படுவதை உதயன் கூடக் கண்டிக்கவில்லையே..???!

கொடுமையான உலகம். ?

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த வேஸ்ட்...யாருக்கு.  .எப்போ. ..எதற்கு எல்லாம் விருது கொடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு வர முறையே இல்லயா...

  • கருத்துக்கள உறவுகள்

தகுதி அற்றவர்களுக்கு  கொடுக்கப் படும் விருதுகளால்.... அந்த விருதுகள் தான்  அவமானப்பட்டு, கேள்விக்குறிக்கு உள்ளாகின்றன. 
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், முன்பு இந்த விருதை பெற்றவர் என நினைக்கின்றேன்.
இப்போ... பிரான்சின் உயர் விருதான,   செவாலியே  விருது மதிப்பிழந்து விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழவி அங்கைதானே படிச்சது.......அங்கினேக்கை பிரெஞ்சிலை வெட்டி விளாசியிருக்கும்.மிச்சமாய் கிடந்ததை தூக்கி குடுத்திருப்பாங்கள் எண்டு நான் நினைக்கிறன். என்னென்ன திருக்கூத்து விட்டு விருதை வாங்கிச்சுதோ ஆருக்குத்தெரியும்?

ரிரிஎன் தொலைக்காட்சியை மூடுவதற்கு இவர்தான் காரணமென கேள்விப்பட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அட்ரா சக்கை.....!

அடுத்த விருது....சுப்பிரமைனியன் சுவாமிக்கு.....!

  • தொடங்கியவர்
சந்திரிக்காவுக்கு நாமல் வாழ்த்து
 
 

image_aaa66c3f47.jpgபிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருதை பெற்றுக்கொண்டமைக்காக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு, நாடாளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியில் எத்தகைய வேறுபாடு காணப்பட்டாலும் வாழ்த்து தெரிவிப்பதாக, நாமல் ராஜபக்ஷ தனது ரிவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு குறித்த விருது நேற்றைய தினம் (20), வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

image_2bc87b756d.jpg

http://www.tamilmirror.lk/செய்திகள்/சந்திரிக்காவுக்கு-நாமல்-வாழ்த்து/175-222315

இது பல்வேறு துறைகளில் வழங்கப்படுகிறதோ?

இலங்கையில் பகற்கொள்ளை அடிக்கும் சில பெண்கள் ஏற்கனவே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

 

  • தொடங்கியவர்

பிரான்சில் கோப்பை கழுவினேன், பிள்ளைகளை பராமரித்தேன்- மனம் திறந்தார் சந்திரிகா

 

 
 

வறுமையென்றால் என்னவென்பதை நான் அறிவதற்கான வாய்ப்பு பிரான்சில் கல்வி கற்றவேளையே எனக்கு கிடைத்தது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள உயர் கௌரவத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் பகுதி நேர வேலைகளை செய்தேன் ஆங்கிலம் கற்பித்தேன், குழந்தைகளை பராமரித்தேன், துப்புரவு வேலைகளை செய்தேன், பல்கலைகழக ஹோட்டல்களில் கோப்பை கழுவினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தனது உரையில் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது

நான் எனர் இரண்;டாவது தாயகம் என நான் கருதும் நாட்டிலிருந்து இந்த கௌரவம் கிடைத்துள்ளமை குறித்து நான் பெருமிதமடைகின்றேன்.

பிரான்சில் நான் பல்கலைகழக கல்வியை கற்பதற்கான புலமைப்பரிசிலை அந்த நாடு எனக்கு வழங்கியது.

பிரான்சின் இந்த தாராள மனப்பான்மை எனது ஆளுமையும் அறிவும் வளர்ச்சியடைவதற்கு காரணமாக அமைந்தது.

சுதந்திரம் சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய  நிலையான விழுமியங்களை நான் அனுபவிப்பதற்கான வாய்ப்பை பிரான்சே வழங்கியது.

பன்முகத்தன்மையின் அழகையும் அவசியத்தையும் நான் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை பிரான்ஸ் வழங்கியது.

எனது பெற்றோர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட  அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மை என்ற விழுமியமும்,நான் நம்பிய கொள்கைகள் மீதான தளர்வற்ற பற்றும்- பாரிஸில் கல்விகற்றவேளை முழுமையாகின.

இலங்கை அரசாங்கம் வெளிநாட்டில் கல்விகற்கும் மாணவர்களிற்கு பணத்தை இலங்கையிலிருந்து அனுப்புவதற்கு அவ்வேளை தடை விதித்திருந்ததால் நான் பிரான்ஸ் எனக்கு பல்கலைகழக மாணவி என்ற அடிப்படையில் வழங்கிய பணத்தை வைத்தே கல்வி கற்றேன்

நான் ஏனைய மாணவர்களை போலவே வாழ்ந்தேன்,பல்கலைகழக உணவு விடுதியில் குறைந்த கட்டணத்திற்கு வழங்கப்படும் உணவை உட்கொண்டேன்,பொது போக்குவரத்தை பயன்படுத்தினேன் பணத்தை சேமிப்பதற்காக  கலை நிகழ்ச்சிகளிற்கு செல்வதை தவிர்த்தேன்.

நான் பகுதி நேர வேலைகளை செய்தேன் ஆங்கிலம் கற்பித்தேன், குழந்தைகளை பராமரித்தேன், துப்புரவு வேலைகளை செய்தேன், பல்கலைகழக ஹோட்டல்களில் கோப்பை கழுவினேன்.

இதன் காரணமாக நான் ஏழ்மையென்றால் என்னவென்பதை அறிந்தேன். இலங்கையில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திராது.

இது தீவிரவாதத்தை நோக்கிய எனது ஆர்வத்தை மேலும் அதிகரித்தது.சிறுவயதிலிருந்தே எனக்குள் தீவிரவாத சிந்தனைகள் மையம்கொண்டிருந்தன.

68 மே சம்பவங்களின் போது நான் வீதியில் நின்றேன்,ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தேன்,தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான  ஏற்பாடுகளை செய்தேன் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டேன்.

பிரான்சில் உள்ள இலங்கை தூதரகத்திலிருந்து பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி என்னை சந்திக்க விரும்புகின்றார் என தகவல் கிடைத்தது.

cbk_2.jpg

நான் அந்த அதிகாரியை சந்தித்தேன், நான் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் அடுத்த பிளேனில் இலங்கை செல்லவேண்டியிருக்கும் என எச்சரித்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/40896

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சவுக்கும் கொடுக்கலாம் ஏனென்றால் விருதெல்லாம் இப்ப மலிவு விலையில் 

  • கருத்துக்கள உறவுகள்

 

kovil+vadivelu+1_memekadai.blogspot.com.

என்னங்கப்பா .. காசியப்பன் பாத்திர கடையே தேவலாம் போல கிடக்கு ..?

  • கருத்துக்கள உறவுகள்

Quellbild anzeigen

 

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்கிறார்கள், வாலி என்றால் குரங்கு, செவாலி என்றால் செங்குரங்கு.

ஆகவே பிரஞ்சுக்காரர்கள் தங்கள் மூதாதையர்களை மறவாமல், அவர்கள் நினைவாக, குரங்குகள்போல் செயல்படுபவர்களுக்கு, இந்தப் விருதை வழங்கி வருகிறார்கள் என எண்ணுகிறேன்.  

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

விருதுகள் எதற்காக வழங்குவது என்பதில் மேற்குலகமும் தள்ளாடுகிறது. விரைவில் மகிந்தவுக்கும் கொடுத்து விடுவார்கள் போல உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, nunavilan said:

விருதுகள் எதற்காக வழங்குவது என்பதில் மேற்குலகமும் தள்ளாடுகிறது. விரைவில் மகிந்தவுக்கும் கொடுத்து விடுவார்கள் போல உள்ளது.

"நாட்டை விட்டு வெளியேறியவர்" விருது குமாரசாமிக்கு வழங்கப்படுகின்றது.
பண்ணியில் பண்ணிப்பாருமன்.

விரà¯à®¤à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

"நாட்டை விட்டு வெளியேறியவர்" விருது குமாரசாமிக்கு வழங்கப்படுகின்றது.
பண்ணியில் பண்ணிப்பாருமன்.

விரà¯à®¤à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

?இந்தப் புளுகு எல்லாம் இங்க மட்டும் தான் சரி வரும் தாத்தா..??

நவாலி தேவாலய படுகொலைகளுக்காகவும் சந்திரிக்காவால் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கிய பல்வேறு அன்பளிப்புகளுக்காகவும் பிரெஞ்சு அரசு இந்த விருதை சந்திரக்காவுக்கு வழங்கியுள்ளது என்று வரலாறு சொல்லும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.