Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் முடிந்த பின் இரவு விடுதிகளில் காணப்பட்ட கருணா, அரசாங்கம் வழங்கிய பணத்தை குடித்து அழித்துவிட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
December 7, 2018
Karuna.png?zoom=1.2100000262260437&resiz

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் வெளிநாடொன்றில் உயிருடன் உள்ளார் என கருணா அம்மான் என்ற, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளமை முழு பொய் என முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

வெடிகுண்டை வெடிக்கவைத்து பொட்டு அம்மான் யுத்தத்தின் இறுதி தருணங்களில் தற்கொலை செய்துகொண்டார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் காணப்பட்டனர் அவர்களில் 70 பேர் வரை அவருடனேயே கொல்லப்பட்டனர். இவர்களில் ஐவருடன் இணைந்து தப்பிச்செல்வதற்கு பிரபாகரன் திட்டமிட்டார் எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

 

அவர்களில் பொட்டு அம்மானும் ஒருவர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா பொட்டுஅம்மான் துப்பாக்கிசூட்டில் காயமடைந்தார். அதன் பின்னர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார் என கேபி கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில்  பொட்டு அம்மான் நோர்வேயிற்கு தப்பிச்சென்றுவிட்டார் என தெரிவிக்கப்படுவது பொய்யான தகவல், என குறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா பொட்டுஅம்மானின் உடல மீட்கப்பட்டதாக கேபி உறுதிப்படுத்தியதாகவும்  கூட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்றவேளை கருணா அம்மான் எனப்படுபவர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார். எனினும் பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்ற தகவல்களை அவர் படையினரிற்கு வழங்கவில்லை எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் கருணா இரவுவிடுதிகளில் காணப்பட்டார் அவ்வாறான நபர் தற்போது அரசியல் நெருக்கடியின் போது கருத்துக்களை வெளியிடுகின்றார் எனவும், அவ்வேளை அரசாங்கம் புலனாய்வு அமைப்புகள் ஊடாக கருணாவிற்கு வழங்கிய பணத்தை, அவர் அதனை குடித்து அழித்துவிட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/105890/

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

யுத்தம் இடம்பெற்றவேளை கருணா அம்மான் எனப்படுபவர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு பாதுகாக்கப்பட்டார். எனினும் பிரபாகரன் எங்கிருக்கின்றார் என்ற தகவல்களை அவர் படையினரிற்கு வழங்கவில்லை எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் கருணா இரவுவிடுதிகளில் காணப்பட்டார் அவ்வாறான நபர் தற்போது அரசியல் நெருக்கடியின் போது கருத்துக்களை வெளியிடுகின்றார் எனவும், அவ்வேளை அரசாங்கம் புலனாய்வு அமைப்புகள் ஊடாக கருணாவிற்கு வழங்கிய பணத்தை, அவர் அதனை குடித்து அழித்துவிட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இனி என்ன செருப்பு பழசானால் எறிய வேண்டியது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை முடிந்தவுடன்..... மொக்குத்தனமா சண்டித்தனம் பண்ணி, 2 வருடம் உள்ள இருந்தவர் சொல்லுறார்.... அம்மான் பத்தி.

அம்மான் குடிச்சது எல்லாம் ஊரான் காசில ...

தென் லண்டணில்  அம்மானின் சொத்து பத்து, தேட்டம்  எல்லாம் அந்த மாதிரி.

அது மட்டுமல்ல அம்மான், றால் பண்ணை வைத்து ஏற்றுமதி யால வேற உழைக்கிறார்...
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இனி என்ன செருப்பு பழசானால் எறிய வேண்டியது தானே.

அதனை, திரும்ப தைத்து.... பாவிக்கும்  யோசனையில்.... கருணா இருந்திருக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி,  கடந்த ஆறு கிழமையின் பிரதமர், இன்று சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் என...
ஏகப் பட்ட...  "ரியூப்  பல்ப் புகழை"  தின்று காட்டிய... மகிந்த  ராஜ பக்ஸவின்  சக வாசம், கெட்ட  கருணாவை, மேலும்  கெடுத்து... வவுணதீவு கொலை மட்டும்... செய்ய வைத்தது... மகா சோகம்.

முன்னாள்... போராளிகளே...   உங்களுக்கு,  இனி அரசியல் வேண்டாம்.
உங்களுக்கு... குறி, வைக்க... கன  எலும்பு நக்கிகள்... இந்த உலகத்தில் இன்னும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இவ்வளவு... அவலத்திற்கு பின்பும்,  இவர்களின்  மனச் சாட்சி  அற்ற செயலைப் பார்க்க....
மிக மன வருத்தமாக  உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எந்த பணத்தில குடிச்சாலும், கும்மாளம் அடிச்சாலும் இருப்பதுவும், உழைப்பதுவும் அவர்களுக்காக. அவர்கள் வீட்டில் குடியிருப்பதால் அவர்ககள் சொல்வதுதான் அங்கீகரிக்கப்படும். நாளைக்கு கருணாவுக்கு என்ன நடக்கப்பாேகிறது என்பதை இன்றே காேடிட்டு காட்டி விட்டது சிங்களம்.  இது புரியும் நிலையில் கருணா இல்லை. வினைவிதைத்தவன் தினையை எதிர்பார்க்க முடியாது, பந்தி முடிந்தால் இலைசேரவேண்டிய இடம் தெரியாமல் பெருமை பேசக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவுக்கு... குடிக்கிற, பழக்கமும் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

கருணாவுக்கு... குடிக்கிற, பழக்கமும் உண்டா?

விலகிய பிறகு கற்றுக்கொண்டார்  என நினைக்கிறன் எதற்கும் ரதி அக்காவிடம்கேட்டால் தெரியும் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

கருணாவுக்கு... குடிக்கிற, பழக்கமும் உண்டா?

என்ன இப்படி கேக்கிறீங்க 2009 க்கு பின் வந்த கருணாவின் படங்கள் மது மாது இரண்டும் இல்லாத படங்கள் குறைவு.

இப்போ ஆள் கொஞ்சம் முதலீடுகள் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
பெரியதொரு நட்சத்திர விடுதி கட்டி நல்ல வருமானம் வருவதாக சொல்கிறார்கள்.எதுக்கும் தனிக்காட்டு ராஜாவை ஒருக்கா அனுப்பி பார்ப்போமா?

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விலகிய பிறகு கற்றுக்கொண்டார்  என நினைக்கிறன் எதற்கும் ரதி அக்காவிடம்கேட்டால் தெரியும் :unsure:

ரதிக்கு பழைய அம்மானைத் தான் தெரியும்.

புதிய கருணாவைத் தெரிய வாய்ப்பில்லை.

On 12/7/2018 at 8:12 PM, பிழம்பு said:

யுத்தம் முடிவடைந்த பின்னர் கருணா இரவுவிடுதிகளில் காணப்பட்டார் அவ்வாறான நபர் தற்போது அரசியல் நெருக்கடியின் போது கருத்துக்களை வெளியிடுகின்றார் எனவும், அவ்வேளை அரசாங்கம் புலனாய்வு அமைப்புகள் ஊடாக கருணாவிற்கு வழங்கிய பணத்தை, அவர் அதனை குடித்து அழித்துவிட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிங்கள-பௌத்த அரசு கருணாவுக்கு வழங்கியது மது, பணம் மட்டுமல்ல சிங்கள மாதுக்களையும் தான் என்று இன்னும் கொஞ்சம் கூட உண்மைகளையும் கொலைக்கள மார்ஷல் சரட்பொன்சேகா தெரிவித்திருக்கலாம்.

 

லக்ஷ்மன் கதிர்காமரையும் இப்படித் தானே சிங்கள-பௌத்த அரசு பணம், மது, மாதுகளை தாராளமாக கொடுத்து  மடக்கி வைத்திருந்து இறுதியில் அவரை கொலையும் செய்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2018 at 3:31 AM, தமிழ் சிறி said:

கருணாவுக்கு... குடிக்கிற, பழக்கமும் உண்டா?

என்னாது குடிக்கிற பழக்கம் இருக்கோ....? 
அண்ணர் முழுப்போத்தலை அசால்ட்டா விழுங்குவார் ....கலதாரி , magaritta Blue கேட்டால் கதை கதையா சொல்லும்.
 

 

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விலகிய பிறகு கற்றுக்கொண்டார்  என நினைக்கிறன் எதற்கும் ரதி அக்காவிடம்கேட்டால் தெரியும் :unsure:

அக்கா இந்தப்பக்கம் வரமாட்டா ....அண்ணன் தேவையில்லாத வேலை பார்த்து இப்போ ஜட்டியுடன் நிக்கைக்குள்ளை 
தங்கச்சிக்கு வெட்கமாக இருக்காதா என்ன  

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2018 at 10:01 PM, தமிழ் சிறி said:

கருணாவுக்கு... குடிக்கிற, பழக்கமும் உண்டா?

 

இதை தாங்கள் வாசிக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2018 at 8:12 PM, பிழம்பு said:

அவ்வேளை அரசாங்கம் புலனாய்வு அமைப்புகள் ஊடாக கருணாவிற்கு வழங்கிய பணத்தை, அவர் அதனை குடித்து அழித்துவிட்டார்

அப்போ .. இனி சாப்பாடு மட்டும்தான் தருவார்களா ? 🤔

memees.php?w=240&img=dmFkaXZlbHUvdmFkaXZ

பேட்டா எங்கம்மா தராங்க .. பொங்கலும் புளியோதரையும் போட்டு  கழிச்சு புடறாங்க ..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/8/2018 at 2:48 PM, தனிக்காட்டு ராஜா said:

விலகிய பிறகு கற்றுக்கொண்டார்  என நினைக்கிறன் எதற்கும் ரதி அக்காவிடம்கேட்டால் தெரியும் :unsure:

விடுதலைப்புலிகளின்  இறுதிக்காலங்களில் அமசடக்காக குடியும் குட்டியுமாக கொம்மான் இருந்தவராம்.......இதாலைதன்  பொட்டர் கடைக்கண்ணாலை கொம்மானை கண்காணிக்க வந்தது எண்டும் கனவிதமாய் கதைக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகளின்  இறுதிக்காலங்களில் அமசடக்காக குடியும் குட்டியுமாக கொம்மான் இருந்தவராம்.......இதாலைதன்  பொட்டர் கடைக்கண்ணாலை கொம்மானை கண்காணிக்க வந்தது எண்டும் கனவிதமாய் கதைக்கினம்.

பல பேர் கதைப்பினும் உன்மையாருக்குமே தெரியாது பாருங்க :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎9‎/‎2018 at 8:35 AM, அக்னியஷ்த்ரா said:


 

 

அக்கா இந்தப்பக்கம் வரமாட்டா ....அண்ணன் தேவையில்லாத வேலை பார்த்து இப்போ ஜட்டியுடன் நிக்கைக்குள்ளை 
தங்கச்சிக்கு வெட்கமாக இருக்காதா என்ன  

அவர் எங்கே ஜட்டியுடன் நிற்கிறார்?....அவர் இப்பவும்  அமைப்பில்  இருக்கிறாரா?, அவர் குடித்தால் உங்களுக்கென்ன?, யார் கூட படுத்தால் உங்களுக்கு என்ன?...அது அவரது சொந்த விருப்பம் 😠

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

அவர் எங்கே ஜட்டியுடன் நிற்கிறார்?....அவர் இப்பவும்  அமைப்பில்  இருக்கிறாரா?, அவர் குடித்தால் உங்களுக்கென்ன?, யார் கூட படுத்தால் உங்களுக்கு என்ன?...அது அவரது சொந்த விருப்பம் 😠

 

அவர் சொந்த விடயாமாக யார்கூடவும் படுக்கட்டும் .அது எங்களுக்கு அவசியமில்லை ...எசமான் பாசம் தலைக்கேறி கிழக்குத்  தமிழர்களை கொலை செய்யத்தொடங்கி இருப்பது தான் பிரச்சினை.  😠

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அக்னியஷ்த்ரா said:

அவர் சொந்த விடயாமாக யார்கூடவும் படுக்கட்டும் .அது எங்களுக்கு அவசியமில்லை ...எசமான் பாசம் தலைக்கேறி கிழக்குத்  தமிழர்களை கொலை செய்யத்தொடங்கி இருப்பது தான் பிரச்சினை.  😠

கருணா கொலைகாரர் தான். ஆனால், இந்தக் கொலைகளை செய்யும் அளவிற்கு அரசியல் சாணக்கியம் இல்லாதவர் இல்லை
 

நித்தியானந்தாக்களுக்கும் ஒரு ரசிகை பட்டாளம் இருப்பது போல கருணாவுக்கும் ஒரு ரசிகை பட்டாளம் இருப்பது ஆச்சரியமல்ல!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

கருணா கொலைகாரர் தான். ஆனால், இந்தக் கொலைகளை செய்யும் அளவிற்கு அரசியல் சாணக்கியம் இல்லாதவர் இல்லை
 

நான் அப்பவே சொல்லலை!!!!!!! :cool: :cool: :cool: :cool: :cool:

உலகம் பிரண்டாலும்   சாணக்கியம் சாதுர்யம் எண்டு சொல்லி வக்காளத்து வாங்க ஒராள் வருமெண்டு...... அது வந்து பாருங்கோ கொண்ட கோலத்தை குருவாலையும் மாத்தேலாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, போல் said:

நித்தியானந்தாக்களுக்கும் ஒரு ரசிகை பட்டாளம் இருப்பது போல கருணாவுக்கும் ஒரு ரசிகை பட்டாளம் இருப்பது ஆச்சரியமல்ல!

பிரெமானந்தாவின் சீடர் எமக்கு வழி காட்டுவார்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

கருணா கொலைகாரர் தான். ஆனால், இந்தக் கொலைகளை செய்யும் அளவிற்கு அரசியல் சாணக்கியம் இல்லாதவர் இல்லை
 

எப்புடி ...நோர்வேயில் பொட்டம்மானை எழுப்பிய அரசியல் சாணக்கியம் போலவா ....?
அவருக்கு சாணக்கியம் இருக்கோ சாணம் இருக்கோ எசமான் சொன்னால் செய்தாகவேண்டும். கொலை செய்ததாக சரணடைந்தது ஒருவர் 
ஆனால் C.C.Tv இல் பதிவாகியது இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒருவர் எப்படி இரு மோட்டர்சைக்கிள்களை ஒரேதடவையில் ஓடுவது 
ஒருவேளை ஒரு சைக்கிளில் இருந்து அடுத்த சைக்கிள்களுக்கு தாவி தாவி ஓடியிருப்பாரோ ..?
இங்கே இருக்கும் விரல் சூப்பும் பாப்பாவிற்கும் தெரியும் யார் உரிமையாளர் என்று ....திரும்ப சொல்கிறேன்  "இங்கே இருக்கும்"

18 minutes ago, Jude said:

பிரெமானந்தாவின் சீடர் எமக்கு வழி காட்டுவார்

டொனால்ட் டிறம்பின் குரு ஒருகாலத்தில் வழி காட்டியது போலவோ .....?😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2018 at 6:48 PM, ரதி said:

அவர் எங்கே ஜட்டியுடன் நிற்கிறார்?....அவர் இப்பவும்  அமைப்பில்  இருக்கிறாரா?, அவர் குடித்தால் உங்களுக்கென்ன?, யார் கூட படுத்தால் உங்களுக்கு என்ன?...அது அவரது சொந்த விருப்பம் 😠

 

இந்த கருத்தை எழுதிய உங்களை விட லைக் போட்டவரின் மனநிலை எப்படி இருக்கும்? 

ஓர் அரசியல் கட்சியின் தலைவர், கிழக்கின் விடிவெள்ளி (என்று ரீல் விடுபவர்) ஒழுக்கமானவராக இருக்க வேண்டாமா? யார் கூட படுத்தால் என்ன என்று மிகவும் கீழ்த்தரமாக எழுதுகிறீர்களே! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இந்த கருத்தை எழுதிய உங்களை விட லைக் போட்டவரின் மனநிலை எப்படி இருக்கும்? 

ஓர் அரசியல் கட்சியின் தலைவர், கிழக்கின் விடிவெள்ளி (என்று ரீல் விடுபவர்) ஒழுக்கமானவராக இருக்க வேண்டாமா? யார் கூட படுத்தால் என்ன என்று மிகவும் கீழ்த்தரமாக எழுதுகிறீர்களே! 

அண்ணாவுக்கு எழுத தங்கச்சிக்கு சூடாகி எழுதிட்டா  மன்னிச்சுக்கோங்க:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, அக்னியஷ்த்ரா said:

எப்புடி ...நோர்வேயில் பொட்டம்மானை எழுப்பிய அரசியல் சாணக்கியம் போலவா ....?
அவருக்கு சாணக்கியம் இருக்கோ சாணம் இருக்கோ எசமான் சொன்னால் செய்தாகவேண்டும். கொலை செய்ததாக சரணடைந்தது ஒருவர் 
ஆனால் C.C.Tv இல் பதிவாகியது இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒருவர் எப்படி இரு மோட்டர்சைக்கிள்களை ஒரேதடவையில் ஓடுவது 
ஒருவேளை ஒரு சைக்கிளில் இருந்து அடுத்த சைக்கிள்களுக்கு தாவி தாவி ஓடியிருப்பாரோ ..?
இங்கே இருக்கும் விரல் சூப்பும் பாப்பாவிற்கும் தெரியும் யார் உரிமையாளர் என்று ....திரும்ப சொல்கிறேன்  "இங்கே இருக்கும்"

டொனால்ட் டிறம்பின் குரு ஒருகாலத்தில் வழி காட்டியது போலவோ .....?😂😂😂

அவர், இந்த கொலைகளுக்கு பிறகு பொட்டரை எழுப்பி இருந்தால் இந்த கொலைகளை அவர் செய்ததாய் எடுத்துக் கொள்ளலாம்.. பொட்ட்ரைப் பற்றி அவர் கதைத்த பிறகு இந்தக் கொலைகள் நடந்திருப்பதால் ஏன் அவர் மீது பழி போடுவதற்காக யாரும் செய்து இருக்க கூடாது.

13 hours ago, MEERA said:

இந்த கருத்தை எழுதிய உங்களை விட லைக் போட்டவரின் மனநிலை எப்படி இருக்கும்? 

ஓர் அரசியல் கட்சியின் தலைவர், கிழக்கின் விடிவெள்ளி (என்று ரீல் விடுபவர்) ஒழுக்கமானவராக இருக்க வேண்டாமா? யார் கூட படுத்தால் என்ன என்று மிகவும் கீழ்த்தரமாக எழுதுகிறீர்களே! 

உண்மை தான் மீரா...முதலாவது வரியை மட்டும் எழுதி போட்டு நிப்பாட்டி இருக்க வேண்டும் 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

அவர், இந்த கொலைகளுக்கு பிறகு பொட்டரை எழுப்பி இருந்தால் இந்த கொலைகளை அவர் செய்ததாய் எடுத்துக் கொள்ளலாம்.. பொட்ட்ரைப் பற்றி அவர் கதைத்த பிறகு இந்தக் கொலைகள் நடந்திருப்பதால் ஏன் அவர் மீது பழி போடுவதற்காக யாரும் செய்து இருக்க கூடாது.

மற்றவர்களுடன் படுப்பதை பற்றி எழுதத்தெரிந்த உங்களுக்கு,  எதை எப்போது கதைத்தார் ....? எப்படிக்கதைத்தார் என்பது தெரியாமல் அரைகுறை 
அறிவுடன் தான் கருதெழுதுகிறீர்கள் என்பது தெளிவாகி விட்டது . 
கீழுள்ள இணைப்பை நன்றாக வாசியுங்கள் ,பிறகு வந்து உங்கடை கொண்ணனோட விண்ணாணங்களை எடுத்து விடலாம்.
இங்கே கருதெழுதுபவர்கள் எல்லாம் மாங்கா மடையர்கள் என்று நினைக்காதீங்கோ என்ன 😠😠😠
https://www.srilankamirror.com/news/11791-karuna-claims-pottu-amman-still-alive  

Edited by அக்னியஷ்த்ரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.