Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்

sumanthiran-2.jpg

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 வது நினைவு தினம் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய கடமையினை செய்ததாகவும் இந்த நாட்டினை பாதுகாத்த பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது என இன்று பலர் கூறுகின்றனர்.

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது.

அதனால் அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியவேண்டிய ஒரு தேவையிருந்தது. நாங்கள் இன்றும் நிதானமாக நடந்துகொள்வதற்கு தேவையிருக்கின்றது. இந்த அரசியல் சூழ்ச்சி இன்னும் இருக்கின்றது.அது எப்பவும் செயற்படமுடியும்.அது ஜனாதிபதியின் நடத்தைகளிலேயே தெரிகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ அலைவதில் தெரிகின்றது.இது கடந்துபோன விடயம் என்று நாங்கள் இருக்கமுடியாது. மிகவும் அவதானமாக சிந்தித்து நடக்கவேண்டிய காலம் இன்னும் இருக்கின்றது.

தென்னலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான மதிப்பு வானுயர வளர்ந்திருக்கின்றது. இது அரசியலமைப்பு தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் கொண்டு செல்கின்றபோது எங்கள் மீதுள்ள மதிப்பு புதிய அரசியலமைப்பினை அவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்யும்.” என கூறினார்.

 

http://athavannews.com/மஹிந்தவின்-கைகளுக்குள்-ம/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தென்னலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான மதிப்பு வானுயர வளர்ந்திருக்கின்றது. இது அரசியலமைப்பு தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் கொண்டு செல்கின்றபோது எங்கள் மீதுள்ள மதிப்பு புதிய அரசியலமைப்பினை அவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்யும்.” என கூறினார். 

16.jpg

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பின்கதவால் உள்நுழைந்து வடகிழக்கு தமிழ் மக்களின் கிடைக்க வேண்டிய உரிமைகளை தன் சுய நலத்துக்கு வித்து கூறு போட்ட சுமத்திரன் அரசியலில் இருந்து விலகினாலே தமிழ் மக்களுக்கு விமோசனம் .

  • கருத்துக்கள உறவுகள்
Jaya Palan
Just now · 
 

 

மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்
.
ரணிலுக்காக நாட்டை மீட்பது பற்றி சதா பேசுகிறீண்ங்க. ஏன் ரணில் அரசிடமிருந்து நம்ம தமிழ் கைதிகளை மீட்பது பற்றிப் பேச விரும்புகிறீங்க இல்லை? கைதிகளைக் கைவிடும்  இந்த கபட மவுனத்தை எப்போ கைவிடப்போகிறீங்க?

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கிருபன் said:

மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்

கூத்தணி கும்பலும்  கூத்தமைப்பு கோஷ்டியளும் அப்பிடித்தான் வீர முழக்கம் வெடிப்பினம்.அங்காலை ஒரு கோதாரியும் நடக்காது இது அனுபவத்திலை தெரிஞ்ச விசயம் பாருங்கோ......
நாளைக்கு சம்பந்தன் பிரசர் வந்து மண்டையை போட்டாலும்.......தமிழினம் காக்க உயிர் துறந்தார் எண்டு வீர வசனம் பேசக்கூடிய கூட்டங்கள் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

முதலில் பின்கதவால் உள்நுழைந்து வடகிழக்கு தமிழ் மக்களின் கிடைக்க வேண்டிய உரிமைகளை தன் சுய நலத்துக்கு வித்து கூறு போட்ட சுமத்திரன் அரசியலில் இருந்து விலகினாலே தமிழ் மக்களுக்கு விமோசனம் .

  1. சுமேந்திரனால் தானா தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் போனது?
  2. சுமேந்திரன் இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு  உரிமைகள் கிடைத்திருக்குமா?
  3. நீங்கள்  மகிந்தவின் ஆதரவாளர் போல எழுதுகிறீர்களே? அப்படியும் இருக்குமா?
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Jude said:
  1. சுமேந்திரனால் தானா தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் போனது?
  2. சுமேந்திரன் இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு  உரிமைகள் கிடைத்திருக்குமா?
  3. நீங்கள்  மகிந்தவின் ஆதரவாளர் போல எழுதுகிறீர்களே? அப்படியும் இருக்குமா?

முதலில் நீங்கள் இந்த கேள்விகளுக்கு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதை விளங்கபடுத்துங்க ?

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பெருமாள் said:

முதலில் நீங்கள் இந்த கேள்விகளுக்கு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதை விளங்கபடுத்துங்க ?

 

1 hour ago, Jude said:
  1. சுமேந்திரனால் தானா தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் போனது?
  2. சுமேந்திரன் இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு  உரிமைகள் கிடைத்திருக்குமா?
  3. நீங்கள்  மகிந்தவின் ஆதரவாளர் போல எழுதுகிறீர்களே? அப்படியும் இருக்குமா?

 

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல்   போனதற்கு  காரணம்   சுமேந்திரன் அல்ல.

மகிந்த அணியினரும் நீங்களும்    சுமேந்திரனை  அகற்றுவதில் ஒருமைப்படுகிறீர்கள்.   உங்கள் தேவைகள் ஒன்றாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

 

 

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல்   போனதற்கு  காரணம்   சுமேந்திரன் அல்ல.

மகிந்த அணியினரும் நீங்களும்    சுமேந்திரனை  அகற்றுவதில் ஒருமைப்படுகிறீர்கள்.   உங்கள் தேவைகள் ஒன்றாக இருக்கலாம்.

நல்லது பதவியில் இருந்த இவ்வளவு காலத்தில் சுமத்திரனால்  தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன அரசியல்ரீதியாக ?

  • கருத்துக்கள உறவுகள்

தென்நிலங்கையில் உங்கள் மதிப்பு வானுயர வளரலாம் ஆனால் அங்கு ஏணிவைத்தாலும் வாக்குகளைப் புடுங்க முடியாது. அதேநேரம் உங்கள் மதிப்பு வடகிழக்கில் அதள பாதாளம் செல்கிறது. இதிலிருந்து மீட்சிபெறுவது கடினம்தான், இருந்தும் நீங்கள் விக்னேசுவரப் பெருமானுக்கு நூறு சிதறு தேங்காய் அடித்து, கொழுக்கட்டை மோதகம் படைத்து வழிபட்டால் ஒருவேளை நல்ல அருள் கிடைத்து வாக்குகளை மீட்டுத் தங்கவைத்து, விமோசனம் பெறலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 🤚  

  • கருத்துக்கள உறவுகள்
On 12/25/2018 at 10:00 AM, கிருபன் said:

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மகிந்த இப்படி என்றால்
 
ரணில் யானை தின்ற விளாம்பழம் மாதிரி

இரண்டுமே ஒன்று தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, Jude said:

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல்   போனதற்கு  காரணம்   சுமேந்திரன் அல்ல.

மகிந்த அணியினரும் நீங்களும்    சுமேந்திரனை  அகற்றுவதில் ஒருமைப்படுகிறீர்கள்.   உங்கள் தேவைகள் ஒன்றாக இருக்கலாம்.

 நூறுநாள் நல்லாட்சி மைத்திரியும் சுமந்திரன் கொம்பனிக் கதை தெரியுமோ?

அல்லது இன்னொரு கதை சொல்லட்டா?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

 நூறுநாள் நல்லாட்சி மைத்திரியும் சுமந்திரன் கொம்பனிக் கதை தெரியுமோ?

அல்லது இன்னொரு கதை சொல்லட்டா?

  நீங்கள் கதை கட்டுவதில் விண்ணர் என்று தெரியும்  தானே.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/25/2018 at 8:04 PM, பெருமாள் said:

நல்லது பதவியில் இருந்த இவ்வளவு காலத்தில் சுமத்திரனால்  தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன அரசியல்ரீதியாக ?

சுமேந்திரனுக்கு முன்னர் பதவிக்கு  வந்தவர்களால்  கிடைத்த  நன்மைகளையும் ஆயுதப்  போராட்டம் நடத்தியவர்களால்  கிடைத்த நன்மைகளையும் நீஙகள்  முதலில்  பட்டியலிடுங்கள்.

தமிழ் கூத்தமைப்பிலுள்ள, சிறிலங்கா ஐக்கிய தேசிய கட்சியின் "Sleeping Cell" உறுப்பினர் சுமந்திரன் ... ஆயுதப்போராட்டத்தால் சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஈழத்தமிழர்களின் பிரட்சனைகளை, புலிகளின் அழிவிற்கு பின்னர், சிறிது காலத்திலேயே சிறிலங்கா ஆட்சியாளர்களுடன் சேர்ந்து இல்லாதொழித்த பெருமை, குறிப்பாக சுமந்திரனையே சாரும்! 

அகிம்சை அரசியலில் தோற்றுவிட்டோம் என ஆயுத போராட்டத்தை, தம் அரசியல் நலன்களுக்காக இரத்த திலங்களிட்டு ஆரம்பித்தவர்களே, எம் அகிம்சாவாத அரசியல்வாதிகள்!

ஈழத்தமிழினத்துக்கு இன்று ஏதாவது பிரட்சனைகள் உள்ளனவா???

1. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
2. மக்களின் மீள் குடியேற்றம்
3. அரசியல் தீர்வு
4. போர் குற்ற விசாரணை
5. காணி அபகரிப்பு
6. ...
....
அப்படி ஒன்றுமே இல்லை. கடந்த சில காலங்களாக, இந்த தமிழ் அரசியல்வாதிகள் இதனை குறுத்து ஏதாவது வாய் திறந்ததே இல்லை! தமிழர்களின் பிரட்சனைகளுக்கு உச்சநீதிமன்றம் ஏறாத எம் தலைமைகள், இன்று ஜனநாயகம் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் ஏறி சாதனை புரிந்திருக்கிறார்கள். 

கடந்த மூன்று வருடங்களாக ரணிலின் ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியவர்கள், சரி அரசியல் தீர்வுதான் வேண்டாம், எத்தனை தொழிற்சாலைகளை, இக்காலத்தில் வடகிழக்கிற்கு கொண்டு வந்தார்கள்? ...???? 

என்ன இதுவரை காலமும் கீரைக்கடைக்கு எதிர்கடை தேவையில்லை, அது எம்மை பிரிக்கும், ஒற்றுமையை உடைக்கும் ,... என்ற கோசங்களுடன் விருட்சமாகிய கட்சியில், ஊடுருவிய ஒட்டுண்ணீகள் வியாபித்திருக்கும் சூழ்நிலை!

... ஒன்று மட்டும் உண்மை! ... சுமந்திரனை இலங்கை பாராளுமன்ற அரசியலில் இருந்து முழுத்தமிழினதும் எதிர்த்தாலும் ஒதுக்க முடியாது! ... சுமந்திரன் எனும் தனி மனிதன், சிங்கள அரசியலுக்கு குறிப்பிட்ட சில காலங்களுக்குள் செய்த உலகளாவிய சேவையை, சிங்களம் நன்றியுடன் நினைவு கோரும்!

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nellaiyan said:

... ஒன்று மட்டும் உண்மை! ... சுமந்திரனை இலங்கை பாராளுமன்றசியலில் இருந்து முழுத்தமிழினதும் எதிர்த்தாலும் ஒதுக்க முடியாது! ... சுமந்திரன் எனும் தனி மனிதன், சிங்கள அரசியலுக்கு குறிப்பிட்ட சி காலங்களுக்குள் செய்த உகளாவிய சேவையை, சிங்களம் நன்றியுடன் நினைவு கோரும்!

தமிழர்களால் ஒதுக்கினாலும் சிங்களத்துக்கு பிரச்சனையில்லை.இன்னொரு கதிர்காமராக இருப்பார் பாவிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய பேட்டி ஒன்றை கொஞ்ச நேரம் கேட்டேன். அதில் சொல்கிறார். "பொன்சேகா யுத்தத்தை முன் நின்று வழி நடத்தியும்  தமிழ் மக்கள் அவருக்கு வோட் போட்ட தன் காரணம் மகிந்த என்ட  கொடியவடினமிருந்து நாட்டை காப்பதற்காம்"..

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இவருடைய பேட்டி ஒன்றை கொஞ்ச நேரம் கேட்டேன். அதில் சொல்கிறார். "பொன்சேகா யுத்தத்தை முன் நின்று வழி நடத்தியும்  தமிழ் மக்கள் அவருக்கு வோட் போட்ட தன் காரணம் மகிந்த என்ட  கொடியவடினமிருந்து நாட்டை காப்பதற்காம்"..

 

இதெல்லாம் கிடக்கட்டும், எங்க உங்கட அண்ணரை காணவில்லை, புற்றிற்குள் புகுந்து விட்டாரா?

10 hours ago, Nellaiyan said:

தமிழ் கூத்தமைப்பிலுள்ள, சிறிலங்கா ஐக்கிய தேசிய கட்சியின் "Sleeping Cell" உறுப்பினர் சுமந்திரன் ... ஆயுதப்போராட்டத்தால் சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஈழத்தமிழர்களின் பிரட்சனைகளை, புலிகளின் அழிவிற்கு பின்னர், சிறிது காலத்திலேயே சிறிலங்கா ஆட்சியாளர்களுடன் சேர்ந்து இல்லாதொழித்த பெருமை, குறிப்பாக சுமந்திரனையே சாரும்! 

அருமையான கருத்துப் பதிவு!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

இதெல்லாம் கிடக்கட்டும், எங்க உங்கட அண்ணரை காணவில்லை, புற்றிற்குள் புகுந்து விட்டாரா?

அக்காவை கிண்டாதீங்கோ ....பிறகு அருவருப்பாக எழுத தொண்டங்கிடுவா 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

இதெல்லாம் கிடக்கட்டும், எங்க உங்கட அண்ணரை காணவில்லை, புற்றிற்குள் புகுந்து விட்டாரா?

 

7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அக்காவை கிண்டாதீங்கோ ....பிறகு அருவருப்பாக எழுத தொண்டங்கிடுவா 

முஸ்லீம் அரசியல்வாதிகளை, ரணில் பக்கம் வைத்திருந்ததே, அம்மானோட கைங்கரியம். 😜

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

இதெல்லாம் கிடக்கட்டும், எங்க உங்கட அண்ணரை காணவில்லை, புற்றிற்குள் புகுந்து விட்டாரா?

 

எதற்கு என்ட அண்ணனைத் தேடுறீர்கள்...அவர் வர வேண்டிய நேரத்தில் வருவார் 
 

15 hours ago, அக்னியஷ்த்ரா said:

அக்காவை கிண்டாதீங்கோ ....பிறகு அருவருப்பாக எழுத தொண்டங்கிடுவா 

அவ்வளவு அருவருப்பாகவா  எழுதுகிறேன் 😞
 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இங்கிருக்கும் சுமத்திரன் விசுவாசிகள்  பதில் சொல்லனும் தீர்வு இல்லையேல் அரசியலில் இருந்து விலகுவதாக சும் சொன்னவர் எப்ப விலகுவார் என விசுவாசிகள்  கேட்டு சொன்னால் நல்லது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/27/2018 at 2:41 PM, Jude said:

  நீங்கள் கதை கட்டுவதில் விண்ணர் என்று தெரியும்  தானே.

இதென்ன கோதாரியாக்கிடக்கு.......:shocked:

அமீர் கொம்பனி இல்லாட்டி சம்சும் கொம்பனியை விடவே நான் கதை கட்டுறன்?????? 

வாற தைப்பொங்கல் தமிழீழத்திலை..... இது 1977லிலை
வாற தீபாவளிக்கிடையிலை தமிழருக்கு தீர்வு.....இது 2009லிலையிருந்து நாடகத்தொடர்மாதிரி தொடருது....
விண்ணர்மார்....:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.